28/04/2019

ஆகாச முத்திரை...


ஆகாச முத்திரை என்பது நடு விரலின் நுனியை கட்டை விரலின் நுனியுடன் தொட்டுக் கொண்டிருப்பது.

பலன்கள்...

இதுவும் வாதம் மூலத்துடன் தொடர்புடையது. இம்முத்திரை ஆகாயத்தை அதாவது வெளியை நம் உடலில் உண்டாக்கும்.

இது எழும்புகள் பலமாக உதவும் முத்திரை. எழும்பு தொடர்பான நோய்களுக்கு இது சிறந்தது.

மூட்டுவலி, பற்கள் பலமில்லாமல் இருப்பவர்கள், தாடை பலமில்லாமல் உள்ளவர்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இசிடிராய்டு  (steroid) போன்றவற்றால் உண்டாகும் பின் விளைவுகளை குறைக்க உதவும்.

நடக்கும் போது  இம்முத்திரையை செய்யாமல் இருத்தல் நலம்...

திமுக ஸ்டாலின், டிடிவி, கனவுகளை தவிடு பொடியாக்கிய எடப்பாடி.. 22 தொகுதியில் 4 மட்டுமே போதும்...


https://youtu.be/PZLy06OWW1I

Subscribe The Channel For More News...

2009 வரை திராவிடம் என்றால் என்ன என்ற கேள்வியே எழவில்லையே ஏன் ?


அந்த திராவிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, தமிழரல்லாதவர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் இந்த தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக உயர்ப் பொறுப்புக்களிலும் திட்டமிட்டு நிரப்பி வைக்கப் பட்டுள்ளார்கள் என்பதே எங்களுக்கு 2009க்கு பின்  தான் தெரிய வருகிறது.

இதுவரை இந்த தெலுங்கு கன்னட மழையால் வந்தேறிகளின் ஆட்சியில் தலைமை செயலராக ஒரு தமிழர் கூட இருந்ததில்லை என்பதே இவர்கள் எப்படி தமிழின அழிப்பை மேற்கொண்டுள்ளனர் என்பதையும், தமிழின விரோதப்போக்கை காட்டுகின்றது!

தமிழர் உரிமை, உடைமை, உயிர் சார்ந்த போராட்டங்களுக்கு உதட்டளவில் மட்டுமே குரல் கொடுக்கும் இந்த தமிழரல்லாத திராவிடர்களாலேயே, போராட்டங்களின் வீரியம் குறைகிறது, போராட்டங்களில் இலக்கு திசை மாறிச் செல்கிறது!

தமிழகமே சாராயத்தை எதிர்த்து போராடியது; தெலுங்கர் வைகோபால்சாமி நாய்டு உள்ளே நுழைந்து குட்டையை குழப்பி போராட்டத்தி திசை திருப்பினார்;

இதைத் தான் இந்த தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் இத்தனை வருடங்களாக செய்துக் கொண்டு வருகின்றனர்!

கேரளா மலையாளிகளின் ஆளுமையின் கீழிருக்கும்..

ஆந்திராவும், தெலுங்கானாவும் தெலுங்கர்களின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

கர்நாடகா, கன்னடரின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

ஆனால், தமிழ் நாடு மட்டும் திராவிடருக்குப் பொதுவானது என்றால், எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என்பதை தமிழச் சொந்தங்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது...

பன்னிரண்டு ராசிகளில் மர்ம ஆன்மாக்கள் கொண்ட 5 ராசிகள் எவை தெரியுமா.?


https://youtu.be/VmpBp18bvEw

Subscribe The Channel For More News...

நாம் தமிழர் கட்சியை மீண்டும் உருவாக்கிய இந்த சுபா. முத்துக்குமார் கொலை வழக்கு என்ன ஆச்சு..?



தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துகுமார் வாழ்க்கை குறிப்பு...

தாயார் பார்வதி, தந்தை சுந்தரம் இவர்களின் இரண்டாவது பிள்ளையாக மதுரையில் பிறந்தார். தந்தையின் கட்டிடத்தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு சென்றதால் பழனியிலேயே வளந்தார்.

பள்ளிப்படிப்பு காலம் முதலே ஈழ விடுதலைக்காக பழனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.

ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ. அதே போன்று தமிழ் நாடு விடுதலையும் தேவை என்ற புரிதலுக்கு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலைப்படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாகக் கொண்டார். ஆயுதப் பயிற்சிக்காக தமிழிழத்திற்கு சென்றார். அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி சிங்களப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பல்வேறு வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கேற்றார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பினார்.

தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படையை தலைமையேற்று வழி நடத்தினார். அத்துடன் தமிழிழ விடுதலைக்காக விடுதைலைப்புலிகளுக்கு    தேவையான பொருட்களை அனுப்பி வைத்தார்.

சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளி ரோமியோ மற்றும் அவரது தோழர்களையும் பாதுகாப்பாக ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். அது போலவே உலகே வியக்கும் வண்ணம் வேலூர்  கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் அமைத்து தப்பித்து வந்த 4  பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலிகளையும் பொறுப்பேற்று ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். மணமேல்குடியில் விடுதலைப் புலிகளுக்கு பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலையானர்.

விடுதைலை ஆனவுடன் தலைமறைவு ஆனார். சந்தனக்காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டத்தளம் அமைத்தார். வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனார் பிடித்துக் கொண்டு விடுவிக்க தமிழர்களின் சீவாதாரப் பிரச்சினையான காவிரி நீர், பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் தமிழ்மக்களுக்கு தீர்வு போன்ற கோரிக்கைகளில் முத்துக்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

பிறகு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.  அய்யா பழ.நெடுமாறனுடன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டு சென்றதாக கொளத்தூர்.மணி அவர்களுடன் கூட்டு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகி கன்னட சிறையில் அடைக்கப்பட்டார்.

அத்துடன் கர்நாடகத்தில் 1992-ல் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தாயரித்ததாக கைது செய்யப்பட்ட கன்னடத் தமிழர்களுடன் சிறைப்படுத்தப்பட்டார். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலை பெற்றார்.

மீண்டும் தமிழ்தேசிய அரசியலில் களம் புகுந்தார். மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை சீமானுடன் மற்றும் தோழர்களுடன் வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்டியியை தொடங்குவதற்க்கான பணியில் ஈடுபட்டார். அதே வேளையில் வடகாடு கரு.காளிமுத்து-சிவந்தியம்மாள் ஆகியோரின் மகளாகிய-மாதரசியை சாதி மறுப்பு மணம் முடித்தார்.

பிறகு ஈழத்திற்கு இரத்தப் பைகளையும் மருந்துப்பொருட்களையும் அனுப்பி வைத்ததாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒன்றரை மாதம் கழித்து பிணையில் விடுதலை பெற்றார்.

சீமான் மற்றும் தோழர்களுடன் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் மாநில ஒருங்கிணைப்பாளராக சுற்றி சுழன்று பணியாற்றினார்.

சற்றேக்குறைய -  10 ஆண்டுகள் தமிழக விடுதலைக்காக சிறை வாழ்வு.

5  ஆண்டுகள் தலைமறைவு, ஆயுதப் போரட்ட வாழ்வு.
                                     
4  ஆண்டுகள் மக்களுக்காக அரசியல் வாழ்வு...

தீவிரவாதிகள் தாக்கலாம்.. உச்சகட்ட பதற்றத்தில் தமிழக போலீஸ்.. தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலத்தில் அல்ர்ட்...


https://youtu.be/xeMTOnBLumY

Subscribe The Channel For More News...

பழங்குடிகளை இடப்பெயர்வு செய்யக்கூடாது...


பழங்குடிகள் இல்லாமல் காடுகளை பாதுகாக்க முடியாது. ஆங்கிலேய காலனிய காலத்தில், வனத்தின் மீதிருந்த பழங்குடிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. 'சுதந்திர' இந்தியாவிலும் பழங்குடிகளின் வன உரிமை மறுக்கப்படுகிறது.

காடுகளை அழித்து கனிமவளங்களை சுரண்டி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். இவற்றை எதிர்க்கும் பழங்குடிகள் வனத்தில் இருந்து துரத்தப்படுகிறார்கள்.

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள், வன உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் நிலங்களுக்கு பட்டா கோரிய மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறு, இந்தியா முழுவதும் வனப்பகுதியில் வசிக்கும் 1,127,446 பழங்குடிகளின் பட்டா மனுக்கள் மறுக்கப்பட்டுள்ளன.

Wildlife First என்னும் அரசு சாரா அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கில்,  உச்ச நீதிமன்றம் மேற்கூறிய பழங்குடிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு தமிழகத்தில், 7148 குடியிருப்புகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரை வனத்தில் இருந்து வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையின்போது மத்திய அரசு தனது வழக்கறிஞரைக்கூட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

பழங்குடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை வன அழிவிற்கே வழி வகுக்கும் . இதேநேரத்தில், அதிவிரைவு புல்லட் இரயில் திட்டம் போன்ற 'வளர்ச்சி' திட்டங்களுக்கான அனுமதி தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

2014 - 2019 வரை இவ்வாறு நாடு முழுவதும் வனப்பகுதியில்  682 வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது வனங்களை அழித்து கனிமவளங்களை எடுக்கவும், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமானம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இப்படியான அரசு செயல்பாடுகள் தான் சின்னதம்பி போன்ற யானைகள் தம் தாய்நிலத்தை விட்டு வெளியேற காரணமாக அமைகின்றன.

காலநிலை தன்னிலை மாறி வரும் நிலையில் வனங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது.

வனங்களை பாதுகாக்க காடுகள் குறித்த மரபு அறிவுபெற்ற பழங்குடிகளை பாதுகாக்க வேண்டியது அடிப்படையானது.

எனவே தமிழக அரசு மறுக்கப்பட்ட பழங்குடிகளின் மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களை பூர்விக வனப்பகுதியிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான உத்தரவுகளை உச்சநீதிமன்றத்தில் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

-தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை...

உலகமயமாக்கல் என்றால் என்ன.?


அமானுஷ்யம் - பங்கார் கோட்டை, இராஜஸ்தான், இந்தியா...


இந்தியா இராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டை பற்றி அறிந்திருப்பீர்கள்.

இந்தியாவின் முக்கிய பயங்கரமான இடமாக கருதப்படும் இது 1573ல் கட்டப்பட்டது.

ஒரு மந்திரவாதியால் சபிக்கப்பட்ட அங்கு வாழ்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததாகவும்.. அவர்களின் ஆவி காலங்காலமாக அங்கே உலாவி வருவதாகவும் செய்திகள் பரவுகிறன்றன.

இரவு நேரத்தின் அங்கே தங்க யாருக்கும் அனுமதி கிடையாது.

கதறல் சுரங்கம், ஒந்தாரியோ, கனடா எதிர்பாரா மரணம் அடைந்த இளம் பெண்ணிலிருந்து கதை
தொடங்குகிறது.

பழங்காலத்தில் இந்த தென்பகுதி சுரங்கத்திற்கு அருகே ஒரு பண்ணை வீடு இருந்துள்ளது. ஒரு நாள் அப்பண்ணை தீக்கிரையாகிறது. அதில் சிக்கிய பெண் தீயுடன் உதவிக் கோர இறுதியில் இந்த சுரங்கத்தினுள் இறந்துள்ளாள்.

அன்று முதல், இந்த சுரங்கத்தில் இரவு நேரத்தில் தைரியமாக நுழைந்து மரக்குச்சியால் தீயேற்றுபவர்கள் இறவா நிலை அடைவர் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால் அவ்வாறு செய்தவர்கள் கதறி கொண்டே சுரங்கத்திலிருந்து வெளி வந்துள்ளனர்.

மொன்தே கிரிஸ்தோ, ஆஸ்திரிலியா ஆஸ்திரிலியாவின் மிகவும் பயங்கரமான இடம் இது.

இவ்விடம் 1855-1948 வரை கிரவ்லி
குடும்பத்திற்குச் சொந்தமானது. அங்கிருக்கும் போது அக்குடும்பம் பல இறப்புகளைக் கண்டுள்ளது.

கிரவ்லியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி மேல்தளத்திற்குச் சென்று தாழிட்டு கொண்டதாகவும் அவரின் அடுத்த 23 வருடங்களுக்கு வீட்டை விட்டு
வெளியேறவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒரு தடவை மட்டுமே வெளியில்
வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் அந்த வீட்டிலேயே இறந்து விட்டதாகவும் அவரின் ஆவி இன்று வரை அங்கேயே உலாவி வருவதாகவும் அறியப்படுகிறது.

ஆவி சம்பந்தப்பட்ட காணொளிகள் இங்கே படமாக்கப்பட்ட போது விநோத வெளிச்சங்கள் தென்பட்டதாகவும் பெண்ணின் குரல் கேட்டதாகவும் அறியப்படுகிறது.

லாவாங் சேவு, இந்தோனேசியா டச்சு கிழக்கு இந்தியா ரயில்வே கம்பெனியால் 1917ல் கட்டப்பட்ட
கட்டிடம் இது.

லாவாங் சேவு என்றால்.. ஆயிரம் கதவுகள் என்று அர்த்தம்.

இரண்டாம் உலக போரின் போது இவ்விடம் ஜப்பானியர்களால் சிறையாக பயன்படுத்தப்பட்டு ஆட்கள் சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் பொந்தியானாக் எனும் இறந்த கர்ப்பிணி பெண்ணின் ஆவி சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.

அதோடு இங்கே தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் டச்சு பெண்ணின் ஆவியும் சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.

ஒரு படப்பிடிப்பின் போது அவரின் ஆவி படமாக்கப்பட்டுள்ளது.

பொம்மைகளின் தீவு, மெக்ஸிகோ மர்மமான முறையில் இறந்த ஏழைப் பெண்ணுக்காக அர்பணிக்கப்பட்டது இத்தீவு.

இத்தீவிற்கு அருகில் உள்ள கால்வாயில் அந்த பெண் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

டோன் ஜூலியன் சந்தன் அந்த பெண்ணின் ஆவியால் தாக்கப்பட்டார். ஆவியை மகிழ்ச்சிப்படுத்த பழைய பொம்மைகளை வாங்கி வந்து தீவில்
தொங்கவிட்டுள்ளார். தன் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணின் ஆவி வாழ்விற்குப் பின் தன்னோடு வந்து விடுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டில் அந்த பெண் இறந்த அதே இடத்தில் அவரும் இறந்து கிடந்தார்.

அங்கே செல்லும் சுற்றுப்பயணிகள் அங்கே உள்ள பொம்மைகளின் கண்கள் தங்களைத் தொடர்வதாகவும் சிரிக்கும் குரல் கேட்பதாகவும் கூறியுள்ளனர்...

மக்களிடம் கொள்ளையடிக்க சத்தமே இல்லாமல் அமலுக்கு வந்த திமுக உருவாக்கிய ஆணை...


https://youtu.be/zu1VhMAUkOc

Subscribe The Channel For More News...

புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி...


பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

இது குறித்த அதன் அறிக்கையில் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த புதிய ரூபாய் தாள் மஞ்சள் பச்சை நிறங்களில் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது...

மக்களை கொன்று வனங்களை கொள்ளையடிக்க பாஜக மோடியின் சதிகள்...


நர்சுகள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது- உறவினர்கள் போராட்டம்...


திருவள்ளூரை அடுத்த பிச்சிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்தை சேர்ந்த சினேகாவுக்கும் (வயது19) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் சினேகா கர்ப்பம் அடைந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக பட்டரை பெருமந்தூரை அடுத்த ராமஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கிருந்து பட்டரை பெரும்மந்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு 7 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பட்டரை பெரும்மந்தூரில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அங்கு டாக்டர் பணியில் இல்லை. இதனால் நர்சுகளே சினேகாவுக்கு பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

சிறிதுநேரத்தில் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை எந்தவித அசைவும் இன்றி இருந்தது. இதேபோல் சினேகாவுக்கும் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் உடனடியாக சினேகாவையும், குழந்தையையும் 108 ஆம்புலன்சு மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சினேகாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் அவருக்கு கர்ப்பப் பையை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இதுபற்றி அறிந்ததும் சினேகாவின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் தான் இந்தநிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை இயக்குனர் கிருஷ்ணராஜ். டி.எஸ்.பி. கங்காதரன், இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மருத்துவ குழுவினர் சினேகாவின் கர்ப்பப்பையை அகற்றினர். எனினும் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சினேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

சினேகா பட்டரை பெருமந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு பணியில் இருக்கவேண்டிய டாக்டர் வேப்பம்பட்டில் தனியாக நடத்தும் தனது கிளினிக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் சரியாக பணியில் இருந்திருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். சினேகாவுக்கும் இந்தநிலை ஏற்பட்டு இருக்காது என்று பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டரை பெருமந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சி தெரியுமா.? வெளியான பரபரப்பு தகவல்...


https://youtu.be/IYLRwTD2Iq8

Subscribe The Channel For More News...

உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்...

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற...

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்...

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்...

ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய ஆன்மீக பாடல்...


https://youtu.be/z6R4lMzVJNI

Subscribe The Channel For More News...

செர்னோபில் அணுஉலை விபத்து நடந்து 33ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்...


வல்லாதிக்கநாடு ரஷ்யாவால் கூட அந்த அணு உலை விபத்தில் இருந்து மக்களை மீட்க முடியவில்லை. மீட்க பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் இன்னும் கதிர்வீச்சின் பாதிப்பால் ஒன்னும் செய்யமுடியாமல் அப்படியே உள்ளது.

வாலியால் எண்ணெய் அள்ளிய உங்களை நினைத்து தான் பயமாக உள்ளது.

குறிப்பு: செர்னோபில் அணுவுலையில் என்ன திட்டத்தில் செயல்படுகிறதோ அது போன்று தான் கூடங்குளம் அணுஉலை செயல்படுகிறது...

குழந்தைகளை கேன்சர் நோயிலிருந்து காப்பாற்றுவோம்...


ஆற்றுநீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டையும் போக்கும்...


மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.
இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும்Vநோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும்.

மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக் கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக
மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.

இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.

இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த
ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்....

அதாவது பழைய சோறு... அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்… இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்ததும் HOW to MAKE PALAYA SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
பழையதை பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…

சரி...பழைய சோற்றை எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்
சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்..

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….

ஆகா… இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்..

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்... உடல் நலத்தை
பேணுவோம்...

7 குண்டலினி சக்கரா விழிப்படையச் செய்யும் தியான காணொளி...


 https://youtu.be/zduvjx47utg

Subscribe The Channel For More Videos...

பேரருளை உணர்த்தாத குருவருள் பாழ்...


அன்பே சிவம் என யாரும் அறிகிலர் என சித்தர் பாடிய பாட்டின் படி, அன்பை பற்றி சதா பேசிக் கொண்டே இருக்கும் மனித வர்க்கம் அதன் உண்மை தன்மையை உணராது இருக்கிறது..

அது முக்தியில் மட்டுமே தோற்றத்திற்கு வரும்.. விளக்கம் கிடைக்கும்... அந்த மூன்று இணைக்கக் கூடிய ஒளி நிலை பெறவே முதலில் முனைய வேண்டும்... அந்த மூன்று கிடைத்த ஒளி நிலையில் மட்டுமே மரணமற்ற நீங்காத பேரன்பு கிடைக்கும்.. முதலில் பேராற்றல் மிகுந்த பேரருளின் தோன்றா நிலையின் தொடர்பு..

அப்படி அப்படி பெற்ற ஆற்றலை உருவ சக்தியாக மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு ஊடகமான குருவருளின் தொடர்பு.. அது இரண்டாம் நிலை..

பின் குருவின் தொடர்புடன் உருவ பொருள்களுடன் உலகத்தோடு தர்மமாக வாழுதல்.. இது மூன்றாம் நிலையான திருவருள்..

பேரருள் குருவருள் திருவருள் இந்த மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் பூரணமாக பெற்று இயங்குகிற அந்த தருணம் தான் முக்தி அடைந்த நிலை என்பர்..

அந்த நிலை தான் நிகழ் கால தொடர்பாகிய அன்பு என்பர்..

அந்த நிலையில் வற்றாத சக்தியை பிரபஞ்சமாகிய தோன்றா நிலையில் பெற்று பெற்று, அதனை சத்திய பொருளாக குருவின் துணையால் உருவமாக மாற்றி உலக சார்புகளோடு, சத்திய வாழ்க்கை தர்ம வாழ்க்கை, கருணையோடு வாழும் தகுதி பெறுகிறோம்.

முக்தி ஆனது தோன்றா நிலையாகிய பேரருளையும், அந்த பேரருளை வேண்டிய வண்ணம் பொருளாக மாற்றும் ஒரு ஊடகமான குருவருளையும், அதனால் உண்டான சத்திய நிலையில் ஏற்படும் உலக பந்தங்களில் பயன் தூய்ப்பு என்ற அனுபவநிலையும் ஒன்று சேர்ந்த நிலையில், இணைந்த நிலையில், இருக்கும் தன்மையாகும்..

அதாவது மூன்றும் பூரணமான செயல் நிலைதான் முக்தி என்பது..

இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டோ நீங்கிய நிலையில் குறைவு பட்டவர்களாக உள்ளோம்..

பேரருளும் குருவருளும் குறைவு பட்ட காரணத்தால், தொடர்பு மையமாகிய உலகியலில் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்...

தோன்றா நிலையாகிய பேரண்டமும் பேரறியும் அதன் பேராற்றலும் உணர்த்த வேண்டிய மதங்கள், இடையில் உள்ள குருவருளை மற்றுமே பற்றிக்கொண்டு, முயன்று முயன்று மூல ஆதார சக்தியை பற்ற முடியாமல், விதிக்கப் பட்ட சக்தியையும் செலவு செய்து தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன..

சூரிய வெளிச்சத்தை முறைபடுத்தி குவித்து ஒரு குவி ஆடி ( lense ) தன் கீழ் உள்ள பஞ்சை எரிய வைக்கிறது.. இதில் சூரிய வெளிச்சம் பிரபஞ்ச ஆற்றல் என்ற பேரருள் என்றால், குவி ஆடி குருவருள் ஆகும்..

பஞ்சு என்பது உலக சம்பந்த பட்ட சார்புகளான திருவருள் ஆகும்.. இந்த மூன்றும் சேர்ந்த பூரணமாக பெற்ற நிலையே முக்தி என்பதாகும்..

இன்று நிழலிலே குவி ஆடி வைத்துக் கொண்டு பஞ்சை எரிக்க, படாதபாடு அனைவரும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..

எல்லா மதங்களும் யோக பயிற்சிகளும் இன்று மூல ஆதாரத்தை விட்டு விட்டு வெறும் வழிபாட்டிலும், வெற்று பயிற்சியிலும் ஈடுபட்டு, இருக்கும் விதிக்கப் பட்ட ஆற்றலையும் இழந்து இழந்து நாசமாகி போய் கொண்டு இருக்கிறது.. எல்லாமே சூரிய ஒளி படாத குவி ஆடிகளாக இருக்கின்றன..

ஆனால் சில அற்புதங்கள் மதங்களில் நடக்கின்றனவே என்று வாதாடலாம்.. அற்புதங்கள் நடந்தபின், அதன் பின் வந்த நிலையை யாரும் வெளிப் படுத்துவது இல்லை..

அற்புதங்கள் நடந்த ஆனந்தத்தில் பின்னால் தொடர்ந்து வரும் அவல நிலையை மறைக்கப் பட்டு விட்டது..

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல் நடந்த அற்புதங்கள் பின், ஏற்படும் அவலங்களை சொல்லாமலே போய் விட்டனர்..

அற்புதங்கள் நடந்த போது பெருமை பட்ட போது, அந்த பெருமையே தனக்கு ஏற்பட்ட அவல நிலையை சொல்ல தடையாக இருந்தது..

சித்தர்களை தவிர எந்த மதவாதிகளுக்கும் எந்த அற்புதமும் நடக்கவே இல்லை..

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கு நூறாக மிகை படுத்தப் பட்ட அந்த அற்புதங்கள் பொய்யாகவே இருக்கும்..

முக்தி என்ற ஞான நிலையில் மட்டுமே அவைகளின் உண்மை தோற்றம் புலப்படும்..

தோன்றா நிலையில் உள்ள பேரருளின் துணை இல்லாமல் சத்தியமாக எந்த அற்புதமும் நடக்காது.. அந்த மூலாதார சக்தியின் துணையின்றி எந்த அற்புதமும் நடக்கவே நடக்காது..

மூலசக்தியின் துணையின்றி எல்லை கடந்து பலப்படுத்தப் பட்ட குருவருள் நாசத்தையே உருவாக்கும்.. பெருகி வரும் கோவில்களும் மசூதிகளும் சர்ச்களும், பேரருளுக்கு எதிரானவை.. பேரருளை பெற மிகப் பெரும் தடையாக உள்ளன..

அவைகள் எல்லாம் நிழலில் பயன் படுத்தப் படும் குவி ஆடிகள்.. எந்த கனலையும் எழுப்ப தகுதி அற்றவை.. மாறாக இருக்கின்ற கனலையும் கிரகித்து மனிதனை சக்கையாக செய்து விடும்.. இன்றைய குருமார்களும் அப்படியே இருக்கின்றார்கள்.. அதனால் தான் நிலைதடுமாறிய நிலையில் மனிதன் எண்ண செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்...

இந்த தோன்றாநிலையை உணர்த்தாத எதுவும் பலன் அளிக்காது..

மூலக்கனலோடு தொடர்பு அற்ற எதுவும் வெறும் சடப் பொருளே..

தோன்றும் நிலையில் உள்ள தொடர்பு, தோன்றா நிலையை உணர தடையாக இருப்பதால், தோன்றும் நிலையில் உள்ள குருவருள் மறைந்திருந்து ஒருவனுக்கு தோன்றாநிலையை உணர்த்த வேண்டும்.. அப்படி எதுவும் இன்றைய சூழ்நிலையில் நடப்பது இல்லை...

தானே கடவுள் என பிரகடனப் படுத்தி மனித குலத்திற்கு நாசமே விளைவிக்கின்றனர்..

தோன்றா நிலையில் பெறப்பட்ட மூல சக்தியால் மட்டுமே முக்தியின் விளைவாக ஒருவர் அன்பு உடையவராய் ஆகி திருவருளான உலக சார்புகளுக்கு, அதாவது உலக உயிர் இனங்களுக்கு நன்மை செய்ய முடியும்..

மற்றபடி மற்றவர்கள் அன்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கலாமே தவிர அன்பாய் இருக்க முடியாது..

ஆகவே இன்றைய மனிதக் குலத்திற்கு தோன்றா நிலைக்கு அழைத்து சென்று பேராற்றல் என்ற மூலக் கனலை பெற வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளதால், தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் பயிற்சியே தலை சிறந்த பயிற்சி என்பது சத்தியமான உண்மை..

தோன்றா நிலையில் இருக்கும் மூலதார மூலக்கனலுக்கு அழைத்து செல்லாமல், தோன்றும் நிலையில் உள்ள பொய்யான மூலாதாரத்தினை காட்டி காட்டி பயிலும் இன்றைய முறையற்ற வாசி பயிற்சி நாசம் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

தோன்றா நிலை என்பது எண்ண ஆதிக்கங்கள் இல்லாத கனல் பொருந்திய சுத்த மனம் ஆகும்..

அம்மனம் ஒன்றே தோன்றா நிலையில் அகப்படும் கனலை ஈர்த்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையது..

எண்ண ஆதிக்கங்களால் ஆளப் படும் அசுத்த மனம் இருக்கின்ற ஆற்றலை எண்ணங்களில் விரையம் செய்து கொண்டிருக்கும்....

தோன்றா நிலையில் மட்டுமே இறைவனும், இறை ஆற்றலும், இருப்பதால் தோன்றா நிலையில் இருக்கும் அந்த தருணம் மட்டுமே இறைவன் வழிபாடு பயன் உள்ளதாக இருக்கும்..

மற்றபடி எண்ண ஆதிக்கங்களான வேண்டுதல்களை முன் வைத்து சிலைகளுக்கு முன் செய்யும் எந்த பிரார்தனையும் தகுந்த பலனை தராது..

எண்ணியவாறு எண்ணிய வண்ணம் எதுவும் உடனே நடைபெற தோன்றா நிலையில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும்...

தோன்றா நிலையில் முன் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படும்.. காரணம் அங்கே மட்டுமே பேரண்ட பேராற்றலின் கனல் என்ற கடவுளின் கருணை சுலபமாக அகப்படும்...

ஆகவே முக்தியின் முன் நின்ற நிலையான பேரருளின் ஆசியை பெற வாசியோகத்தில் தோன்றா நிலை அனுபவப் பட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறது..

தோன்றா நிலையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அந்த தருணம் முதல் மனிதனுக்கு வாழ்வு உயர நல்ல தருணம் தொடங்கி விட்டது என்பது சத்தியமான உண்மை...

ஆகவே தான் பேரருள் பொருந்திய தோன்றா நிலையை முன்வைத்து விளக்கத் தவறிய எந்த ஒரு மதமும் யோகமும் மன்னிக்க முடியாத ஒழுங்கின்மையை செய்கிறது என சொல்லப் படுகிறது..

எல்லாமே ஒழுங்கின்மையாக உள்ள நிலையில் சுவாச ஒழுங்கு என்ற மிக அற்புத மிக மிக சாதாரணமான பயிற்சியை, செய்ய மனித குலத்திற்கு மிக மிக கடினமாக உள்ளது...

கதறி துடிக்கும் அதிமுக எம்.எல்.ஏ க்கள்... வசமாக சிக்கிய வீடியோ ஆதாரம்...


https://youtu.be/H4y0piNyMdQ

Subscribe The Channel For More News...

சீனப்பயணியின் தமிழ்க் கல்வெட்டு தென்னிலங்கையில்...


கி.பி. 1409 ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தென்னிலங்கையில் காலி (Galle)யில் எஸ்.எச்.தொம்லின் என்பவரால் 1911ல் கண்டெடுக்கப்பட்டது.

இது செங் ஹெ (Zheng He) எனும் சீன கடலோடி சீனம், தமிழ், பாரசீகம் என மூன்று மொழிகளில் காணப்படுகிறது.

சிங்களத்தில் இல்லை.

சிவனொளிபாதமலை மீது இருக்கும் அல்லா,
தமிழர் கடவுளான தேனாவரை நாயனார்,
மற்றும் புத்தர் கோவில்களுக்கு கொடுத்த கொடை பற்றி கூறுகிறது.

அதாவது புத்தமதம் பற்றி இருக்கிறதே தவிர சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.

செங் ஹே எனும் சீனக் கடற்படைத் தளபதி மற்றும் நாடுகாண் பயணி ஒரு இசுலாமியர் ஆவார்.

இவர் சிவனொளிபாத மலையின் (Adam's peak) அல்லா என்று குறிப்பிடுவது இறைவன் எனும் பொருளில் இருக்கலாம்.

ஏனென்றால் 1766ல் தான் முதன்முதலாக சிவனொளிபாதமலை பௌத்தர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.
அதுவரை அது சைவர்களின் புனிதத்தலமே.

தேனாவரை நாயனார் கோயில் தென்னிலங்கையின் தொண்டீஸ்வரம் (donra) ஆகும்.

இது போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டுவிட்டது.

இது இருந்த தேவேந்திரமுனை (தேவிநுவர)யில் பெருமாள் கோவில் ஒன்று சிங்களவர்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் வைணவ பற்றாளரான நாயக்கர் வம்சாவழி சிங்களவராக இருக்கலாம்.

தென்னிலங்கையில் தற்போதைய தலைநகரம் கொழும்பு அருகே  கோட்டை கட்டி ஆண்ட அழகேஸ்வரன் என்ற மன்னன் அழகேஸ்வரன்.

இக்கோட்டை ஸ்ரீ ஜயவர்த்தன கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

அழகேஸ்வரன் என்ன காரணத்தாலோ செங் ஹே வருகையை எதிர்த்துள்ளான்.

செங் ஹே படையுடன் அவன் நாட்டில் இறங்கி போர் செய்து தோற்கடித்து கைது செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு விடுவித்துவிட்டனர் என்றாலும் அழகேஸ்வரனின் கோட்டை அரசு (kotte kingdom) சிங்களவர் கைக்குப் போனது.

பிறகு இந்த கோட்டை அரசின் காலமே சிங்கள மொழியின் பொற்காலம் எனுமளவு சிங்களம் வளர்ச்சியடைந்தது.

அதாவது 1400களில் சிங்களவர்கள் மொழியாலும் நாகரீகத்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர் எனலாம்.

600 ஆண்டுகள் முன்பு வரை கூட தென்முனை வரை தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். ஆண்டுள்ளனர்.

இதற்கு அசைக்க முடியாத சான்று செங் ஹே அவர்களின் காலி மும்மொழி கல்வெட்டு ஆகும்...

இலங்கை கல்முனை பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு...


உயிர் எங்கே உள்ளது?


குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும்.

இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம்.

குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது.

உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே செல்கிறது.

உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே...

இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அங்கே வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது என யாருக்காவது தெரியுமா என்றால் அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே...

இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின் நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது எனவும்...

அந்தத் தீப வடிவே உயிரின் வடு எனக் கூறப்படுகிறது.

இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம் எனத் தெளிவாகக் கூறுகிறார்.

தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்...

வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின் அளவைப் பற்றி மட்டும் கூறாமலா விட்டிருப்பார்கள்.

ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால், அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின் அளவாகுமாம்...

தமிழக அரசை பதற வைத்த உளவுத்துறை ரிப்போர்ட்...


 https://youtu.be/-AB6PeroqS8

Subscribe The Channel For More News...

நீண்ட ஒரு கல்லறையா சீனப் பெருஞ்சுவர்?


சந்தேகமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் ஒரு உலக அதிசயம் தான்.ஒவ்வொரு வருடமும் இதை பார்ப்பதற்கென்றே 40 லட்சம் பயணிகள் வருகிறார்கள்.

சீனாவின் கிழக்கு மேற்காக 9000 கிலோ மீட்டர் நீள்கிறது.

இவை தவிர சீனப் பெருஞ்சுவருக்கு வேறு ஒரு முகமும் உண்டு.அது அந்த சுவரில் புதையுண்டு இருக்கும் ரகசியங்கள்.

கி.மு.2014ல் கின்(qin) சக்கரவர்த்தி சீனாவை இணைத்தபோது இந்தச் சுவரை எழுப்ப உத்தரவிட்டார்.அந்தப் பகுதியின் பண்டைய இனத்தவர்கள் தனது எல்லைக்கள் ஆக்கிரமிப்பதைத் தொடரக் கூடாது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

சீனப் பெருஞ்சுவர் எப்படி காலத்தையும் தாண்டியும் நிற்கிறது?

இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் உலகத்தையே திகைக்க வைக்கும் ஒருவித அரிசிக் கஞ்சியை எலுமிச்சை கலவையில் கலந்துதான் சுவரின் கற்களை இணைத்துள்ளனர்.

முழுச் சுவரும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டது அல்ல. அடுத்தடுத்து வந்த சாம்ராஜ்ய மன்னர்கள் ஆளாளுக்கு கொஞ்சமாக சுவரை நீட்டித்தனர்.

சுவரை எழுப்புகையில் 10லட்சம் பேர் இறந்தனர்.(இதன் காரணமாகவே உலகின் நீளமான சுடுகாடு என்றும் சீனப் பெருஞ்சுவர் அழைக்கப்படுகிறது)

நிலவிலிருந்து பார்த்தால் உலகில் சீனப் பெருஞ்சுவர் தெரியும் என்பது பரவலாகப் பரவியுள்ள தவறான நம்பிக்கை.

சீனப் பெருஞ்சுவரை எழுப்ப பல உழைப்பாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் ஒரு நந்தவனமும் இருந்தது. அந்த நந்தவனத்தின் உரிமையாளரின் மகள் மெங் ஜியாங் என்பவர். அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் இளைஞன் பான் குயிலியாங் என்பவன்.

காதல் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால்  அதில் நேர்ந்தது ஒரு சோகமான திருப்பம்.
சீனப் பெருஞ்சுவரை எழுப்புவதற்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான் அந்த இளைஞன்.

அவன் வருவான் என்று காத்திருந்தாள் காதல் மனைவி.கணவன் வருவதாக தெரியவில்லை பொறுமையிழந்த அந்த இளம் மனைவி சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி நடக்கும் இடைத்தை அடைந்தாள்.

ஆனால் அங்கு எவ்வளவு தேடிப் பார்த்தும் அவள் கணவன் கிடைக்கவில்லை.

அப்போது சில கட்டுமான கலைஞர்கள் அவரை அணுகினார்கள். யாரைத் தோடுகிறாயா பெண்ணே என்று கேட்டார்கள்.என் கணவன் பான் குயிலியாகைத் தேடுகிறேன் என்றால்.

சுற்றுமுற்றும் பாார்த்தபடி ரகசியமான குரலில் உன் கணவன் இறந்து விட்டான்.

இரவு, பகல் என்று தொடர்ந்து அவனை வேலை வாங்கியதில் இதயம் வெடித்தே இறந்து விட்டான் என்றார்கள்.

மெங் ஜியாங் கதறினாள்.

வெகு நேரம் அழுதபின் என் கணவரின் உடல் எங்கே என்று கேட்டாள்.

அவன் உடலை இந்த பெருஞ்சுவருக்கு நடுவே புதைத்து கட்டிவிட்டார்கள் என்றபடி மெல்ல நகர்ந்தனர்.

இதுபோன்ற துயர சம்பவங்களை நேரில் பார்த்து பார்த்து அவர்கள் மனம் இறுகியிருந்தது.

இளம் மனைவி நாள் கணக்கில் அழுது தீர்த்தாள். பெருஞ்சுவரை ஆங்காங்கே ரகசியமாக தோண்டிப் பார்த்தாள். ஆங்காங்கே பல உடல் எலும்புகள் தெரிந்தன.

தன் கைகளை சுவரில் மோதினாள் அந்த ரத்தம் சற்று தள்ளியிருந்த ஒரு குறிப்பிட்ட எலும்பின் மீது பட்டது அதுவே தன் கணவணின் எலும்பு என்பதை உணர்ந்து கொண்டாள்.

இந்த நிகழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ் பெற்றது.

இனி சீனப் பெருஞ்சுவர் குறித்துக் கேள்விப்படும் போதெல்லாம் வியப்போடு கொஞ்சம் வேதனையும் எழும் அல்லவா?

3வது கண் திறக்கும் இரகசிய தியான காணொளி.. 30 நாட்கள் 2முறை தியான காணொளியை கேளுங்கள்...


https://youtu.be/OM1O7tyeUis

Subscribe The Channel For More Videos...

குழந்தைத் திருமணம் என்பது தெலுங்கின திராவிடர் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணின் வயதையும்,
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

பாம்பாட்டி சித்தரின் வாழ்க்கை வரலாறு...


https://youtu.be/tE8BhB-hHg0

Subscribe The Channel For More News...

ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று...


இதை கோவில் தூண்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லா கோவில் தூண்களிலும் இருக்கும்.

(தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை)...

யானையை விட பெரிய உருவம், சிங்கத்தைப் போன்ற முகமும் உடலும்,
அதோடு துதிக்கையும் தந்தமும் இருக்கும் அதிசய விலங்கு யாளி.
இந்த யாளி யானையைக் கொன்ற குறிப்புகள் இலக்கியங்களில் வருகின்றன.

ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்

ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த,
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் (தந்தம்) பறித்து,
குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.

- மதுரை இளங்கெளசிகனார் (அகநானூறு 381: 1-4)..

மூரித்தாள் ஆளி யானைத் தலை
நிலம் புரள வேண்டுகோடு
உண்டதே போன்று

யானையின் தலை நிலத்தில் புரள (அதைக் கீழே தள்ளி) அதன் தந்தத்தைப் பறித்து யாளி உண்ணும்.

-(சீவகசிந்தாமணி 2554 :1-2)...

மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.

யானையை வேட்டையாட எண்ணிய ஆளி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது.
நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது.
பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன்.
ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான்.
ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம்.

- பெருஞ்சித்திரனார் (புறநானூறு 207 : 8)...

வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

– நக்கண்ணையார், (அகநானூறு 252 : 1-4)...

இரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட கண்டவேலா

இரத்த சேற்றில் தேர்ப்படை, குதிரைப்படை, யாளிப்படை மூன்றையும் ஒழித்து கடல்சூழ்ந்த சூரமலையை தூளாக்கிய வேலன்..

- (திருப்புகழ் 477)...

கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி

யானையைக் கொன்று அதன் உடுத்திய கயிலை மலை (அதாவது கைலாசமலையின்) யாளி என்று சிவனைக் கூறுகிறது.

-(திருப்புகழ் 577)..

இதே போல யானையையே விழுங்கும் மாசுணம் (அல்லது அசுணமா) என்ற பாம்பு (அல்லது விலங்கு) பற்றியும் குறிப்புகள் உள்ளன.

அனகோன்டா என்ற சொல்லானது 'யானைகொன்றான்' என்ற (ஈழத்)தமிழ்ச் சொல்லை ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டது.

(ஆனகொன்டான் என்றே உச்சரிப்பர்)

சான்று...

Ophidia Taprobanica or the Snakes of Ceylon, Wall, Frank (1921).

The deriviation of "Anaconda", Ferguson, Donald (1897)...

இறுதி எச்சரிக்கை.. சென்னையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...


https://youtu.be/YVX3bcK4T_c

Subscribe The Channel For More News...

ஆன்மா...


உடலை விட்டு வெளியேறும் ஆன்மா...

மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன.

அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள்.

மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது.

தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும்.

தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்...

முக்கியச் செய்தி : இலங்கையை தொடர்ந்து சென்னையிலும் திடீர் பதற்றம்... பீதியில் மக்கள்...


https://youtu.be/6DrzwJ0H51I

Subscribe The Channel For More News...

மரமும் மனிதனும்...


இந்தியாவின் மிகப் பழமையான மரம்...

ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது.

பழங்களே பிரதானம்...

Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் பெயர் கொண்ட நாவல் மரம் இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்தில் அதிகமாக வளரும் மரங்களில் ஒன்று. ஜனவரி முதல் ஏப்ரல்வரை பூக்களையும், மார்ச் முதல் செப்டம்பர்வரை பழங்களையும் தாங்கியிருக்கும்.

இயல்பாக வளர்வது மட்டுமின்றி மக்களால் வளர்க்கப்பட்டுவரும் மரங்களில் இது முக்கியமானது. மரத்தின் முக்கியமானபாகங்கள் அதன் பழங்களே. தமிழகத்தில் வளரும் மரங்களின் பழங்கள் சற்றுச் சிறியவை, வட இந்திய மரங்களின் பழங்கள் பெரியவை; மிகுந்த சுவையுடையவை.

பழங்கள் அதிகமாக இருப்பதால் வடஇந்தியாவில் கிளிகளுக்குச் சிறந்த புகலிடமாக இந்த மரம் திகழ்கிறது. பழங்கள் நிறைய உண்டாக்கப்பட்டால் அந்தக் காலகட்டம் உளுந்து, எள் போன்ற பயிர்களுக்குச் சிறந்த காலமாக அமையும் என்றும், இந்த மரம் மிகவும் செழிப்பாக வளரும் இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் என்றும், அந்த மண்ணில் தங்கத் தாதுகள் மிகுந்திருக்கும் என்றும் பிரஹத்சம்ஹிதா குறிப்பிடுகிறது.

சுரபாலரின் விருக்ஷாயுர்வேதத்தின் 232-வது பாடலில் இதன் பழத்துடன் “பவளம், வெட்டி வேர் சேர்த்து அரைத்த விழுதை மாமரத்தின் வேர்ப்பகுதியில் பூசி, நீர் கலந்து தெளித்தால், மாமரம் மணம் நிறைந்த மலர்களை உருவாக்கித் தேனீக்களை ஈர்த்து நல்ல சுவையுள்ள மாம்பழங்களை உண்டாக்கும்” என்கிறது

இந்தியாவின் மரம்...

‘ஜம்பூத்வீபே’ என்ற வடமொழி மந்திரத்தின்படி பண்டைய ‘இந்தியத் தீவில்’ நாவல் மரங்கள் (ஜம்பு மரங்கள்) நிறைந்து காணப்பட்டதால், இந்தியாவே இந்த தாவரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ‘நாவலந்தீவு’ என்ற பெயரும் உண்டு.

ஒரு புராணக் கதையின்படி மேகக் கடவுளான வருணன் நாவல் மரமாக மாறினார். இதன் காரணமாகவே, ஐம்பூதங்களில் நீருக்கான தலமாகத் திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தலமரமாக நாவல் (வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை – திருஞான சம்பந்தர்) மரம் திகழ்கிறது. மற்றொரு சிவன் கோவிலான திருநாவலூரிலும் நாவல் மரம் தலமரமாக உள்ளது.

வடநாட்டில் பழத்தின் நிறம் கருதி இது கிருஷ்ணருக்கும், மகாராஷ்டிரப் பகுதியில் விநாயகருக்கும், தமிழகத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் உரித்தானதாக இந்த மரம் கருதப்படுகிறது. அவ்வையார் ‘முருகனிடம் சுட்ட பழம், வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டது, நாவல் பழத்தைத்தான் என்று கருதப்படுகிறது. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும்கூட நாவல் மரம் ஒரு புனிதத் தாவரம். புத்தக் கபிலவஸ்தா இந்த மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். பதிமூன்றாவது சமணத் தீர்த்தங்கரரான விமலநாதர், நாவல் மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி..

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை

விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.

நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.

ஆக்சிஜன் அமுதசுரபி...

சங்க இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது..

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம் இருந்ததாகத் தெரிய வருகிறது.

எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தாவரத்துக்கு நல்ல உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில், பற்றாக்குறையைத் தடுக்க மேற்கூறப்பட்ட முயற்சி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்..

பெருசங்கர்.. ஈரோடு  மாவட்டம்...

காய்ச்சல் முதல் தலைவலி வரை அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் ஒரே மருந்து தும்பைப்பூ...


https://youtu.be/mJBNLFde590

Subscribe The Channel For More News...

மக்களை உணர்ச்சியை தூண்டி முட்டாள் ஆக்கும் பிரிவினைவாதிகளை மக்கள் இனம் கண்டு செருப்பால் அடியுங்கள்...


பிய்ந்த காலணியோடு ஓடினேன் - கோமதிமாரிமுத்து..

அப்புடின்னு மீடியாவுல போடுறான்..

எம்மூட்டு பிள்ளைக்கு ஷூ வாங்கி கொடுக்க வக்கில்ல இதுக்கு பேரு டிஜிட்டல் இந்தியாவா?ன்னு ஒரு குரூப் சோசியல் மீடியாவுல கம்பு சுத்துது...

உண்மை என்னன்னு தேடுனா..

பல சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்றதால்.. ஸ்போட்ஸ் கோட்டாவில் வருமானவரி அலுவலகத்தில் வேலை கொடுத்துள்ளது மத்திய அரசு.

பெங்களூரு அரசு குடியிருப்புல வீடும் குடுத்துருக்காங்களாம்.

வாரம் 1 நாள் தான் வேலை , 5 நாள் பெங்களூரு தடகள அகாடமியில் பயிற்சி.

ஆதாரம் : https://www.thebetterindia.com/180056/gomathi-marimuthu-gold-india-asian-athletics-championships-tamil-nadu/