17/10/2017

புரொபசனல் கூரியர்ஸின் திருட்டுத்தனம்...


சேலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர், தீபாவளிக்காக கோவையில் உள்ள தனது உறவினருக்கு ரூ.5000 மதிப்புள்ள புது ஜவுளிகளை ரூ.510 கட்டணம் செலுத்தி புரொபசனல் கூரியர்  பிரிமியம் மூலமாக அனுப்பினார்.

ஆனால், கூரியர் நிர்வாகம் துணிகளை எடுத்து விட்டு 'அல்வா'வை கோவைக்கு அனுப்பிய கொடுமை...

மாநிலங்களை ஆட்டி படைக்கும் மத்திய பாஜக அரசு...


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநிலங்களுக்கு கங்காணி வேலை பார்க்கும் அதிகாரம் தான் இருக்கிறதென்று அன்று தொட்டு இன்றுவரை பலரும் பேசிவருகிறார்கள்.

ஆனால் இதற்கெல்லாம் செவிமடுக்காத மத்திய அரசு மேலும் மேலும் அதிகாரத்தை மத்தியிலேயே குவித்து வருகிறது. அதுபோக தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்போது மாநில அரசையே ஆட்டி படைக்கிறது.

உதாரணமாக : கடந்த வாரம் டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணத்தை மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிற ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் அவரிடம் கலந்தலோசிக்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மாநில ஆளுநரே உயர்த்திருக்கிறார்.

http://www.hindustantimes.com/delhi-news/delhi-metro-fare-hike-gets-mixed-response-from-commuters-kejriwal-s-aap-announces-stir/story-PfNnhtjWL2fWvmKIszaykK.html

டெல்லி மெட்ரோ இரயில் கார்ப்ரேசன் (DMRC) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முறையே 50:50 பங்குகள் கொண்டது. அப்படியிருக்கும் போது மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசே உயர்த்துவதென்பது மாநில அரசுகளை ஒன்றுமில்லாத அரசாக மாற்றும் வேலையே.

இந்தியாவில் தேர்தலில் நின்று வெற்றிபெற்று ஊழலை ஒழிப்பேன் அதை கிழிப்பேன்று சொன்னவர் தன்னால் எங்கள் மாநிலத்திலுள்ள ஒரு போலிஸ் அதிகாரியை கூட மாற்ற உரிமையில்லையே  என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். தற்போது கூட மத்திய அரசு உயர்த்திய கட்டணத்தை குறைக்கச்சொல்லி மாநில அரசே மெட்ரோ நிலையத்திற்குள் தர்ணா போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

பார்க்க படம்
01 http://www.asianage.com/metros/delhi/151017/its-futile-for-aap-to-protest-delhi-metro-fare-hike.html

அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் இனிவாரும் எல்லா காலங்களிலும் சுத்ந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மத்திய அரசு சொல்லும் விதங்களில் தான் மாநில அரசுகள் விழாவை கொண்டாட வேண்டுமென்று உத்தரவு போட்டிருக்கிறது. அதோடு நேற்று மத்திய அரசு மாநிலங்களெல்லாம் 'Ek Bharat Shreshtha Bharat' ஒரே இந்தியா சிறந்த இந்தியா’ என்ற விழாவை நடத்த வெண்டுமென்று உத்தரவு போட்டிருக்கிறது.

பல்வேறு காலச்சாரங்கள் கொண்ட, பல்வேறு மொழி பேசக்கூடிய, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் இந்த கலாச்சாரத்தை தான் நீ பின்பற்ற வேண்டும். இந்த மொழியை தான் நீ பேச வேண்டுமென்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய அரசு மாநிலங்கள் மீது திணித்து வருகிறது. இது தெரிந்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலையில் மாநில அரசுகள் பல்பிடுங்கப்பட்ட பாம்பாக வலம் வருகிறது.

இதே நிலை நீடித்தால் 1947இல் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாடு கூடிய விரைவில் பல்வேறு நாடுகளாக மாறிபோகும் அதை செய்து முடிப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் மோடி அரசு ஓயாமல் வேலை செய்து வருகிறது.

செய்தி - மே17 இயக்கம்

நடிகர் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டிக்கட் விலை 1200 ரூபாய்க்கு பிரிண்ட் போட்டு விற்பனை...


ஏழைகளின் நண்பன் தமிழ் ராக்கர்ஸ் வாழ்க...

நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்...


வேர்..

வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது.

நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும்.

சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம்.

நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை...

முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக் கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.

சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

இலை...

வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல....

இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம்...

நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு.

இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை.

கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

கொட்டை...

நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது.

நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்து கொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்...

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?


ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
             
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர். தமிழர்கள் பெரும்பான்மையர்.

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்.

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..

இப்போது புரிகிறதா திராவிடக் (திமுக)  கட்சிகள் ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை என்று ஓலமிடுவதின் காரணம்...

இப்போது புரிகிறதா தமிழா.. திமுக முதல் கொண்டு அனைத்து திராவிடக் கட்சியும் ஏன் சிறுபான்மை பாதுகாவலராக காட்டிக் கொள்கிறார்கள் என்று... அவர்களை அவர்கள் காத்துக் கொள்ளவே...

இசுலாமியப் பெண்ணுக்காக போரைத் தொடங்கிய புலிகள்...


இந்தியப் படை வெளியேறுகின்ற காலத்தில் மோதல் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில்..

இரு புலிகளை உச்சிவெயிலில் தார்ச்சாலையில் மண்டிபோட வைத்து அதில் ஒருவர் குப்பி கடித்து இறந்த போதும் பொறுமைகாத்த புலிகள்..

ஒரு தமிழ் இசுலாமியப் பெண்ணை சிங்களக் காவல்த்துறை துன்புறுத்தியதற்காக உடனடியாகப் போரைத் தொடங்கினர் தலைவர் பிரபாகரன்...

தமிழர் எழுச்சி வடிவம் நூலிலிருந்து...

இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?


தமிழ்: தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. முக்கியமானவை மட்டும் தருகிறேன்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறநானூறு 58.

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல் - புறநானூறு 50.

தமிழ் வையைத் தண்ணம் புனல் - பரிபாடல் 6.

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளார் - பரிபாடல் 9.

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4.

தமிழர் :

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19.
(இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்).

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35.
(தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்).

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8.
(தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்).

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை.

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24.

தமிழர்நாடு :

தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது..

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த.- அகநானூறு 31.

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து - தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்.

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் - பரிபாடல் 9.

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன் - புறநானூறு 51.
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத் தான் அது சொந்தம் என்பானாம்).

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக் - பதிற்றுப்பத்து 63.
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து).

தமிழகப்படுத்த இமிழிசை முரசின் - அகநானூறு 227.
(தமிழகம் எனும் சொல்).

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை).

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு - சிலப்பதிகாரம், வேனில் காதை (வரம்பு அதாவது எல்லை).

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு - சிலப்பதிகாரம், நாடுகாண் காதை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய - சிலப்பதிகாரம், காட்சிக் காதை.

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை.

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை.

(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி).

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது...

ரெய்க்கி மருத்துவம்...


ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது...

எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.

ரெய்க்கி : சில சுவையான செய்திகள்..

திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.

ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர்.

கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர்.

இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.

ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.

ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசைதான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.

ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.

கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.

ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...

வெந்தயத்தின் மருத்துவக் குணம்...


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று விஜயகாந்த் நேரில் பார்வையிட்டார்...


டெங்கு காய்ச்சல் பேரைச் சொல்லி மத்திய அரசிடம் ரூ 256 கோடி தமிழக அரசு கேட்டிருப்பது கொள்ளை அடிக்கவே என அவர் பேட்டி அளித்துள்ளார்...

அரசு சம்மந்தமான சந்திப்பில் இந்த பரட்டையை எப்படி உள்ளே விட்டானுங்க.? இது ரகசிய காப்பு உறுதிமொழிக்கு எதிரானது இல்லையா?


ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசு செயலகம் கேட்டு பக்கத்தில் கூட விடவில்லை இந்த பரட்டையை... ஆனால் இப்போது கண்டதெல்லாம் உள்ள வருது...

பிராணாயாமம்...


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது.

மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது.

இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன.

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும்.

உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றைக் கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்.

மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்.

இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது.

நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...

எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும் - ரிபப்ளிக் டிவி ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார் கடிதம்...


விசுவாசம் என்றால் என்னவென்று தெரியுமா? என ஸ்வேதா கோதாரியை பார்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார் அணு உலை எதிர்ப்பு போராளி எஸ்.பி உதயகுமார்.

ரிபப்ளிக் சேனலின் மூத்த ஊடகவியலாளரான ஸ்வேதா கோதாரி கடந்த புதனன்று பணி விலகினார். அர்னாப் கோஸ்வாமி தன்னை காங்கிரஸின் உளவாளி என சந்தேகிப்பதால் பணியிடத்தில் தான் சந்திக்கும் அவமானங்கள் காரணமாக பணி விலகுவதாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஸ்வேதா த்ரிபாதி தான் எஸ்.பி.உதயகுமாரின் வீட்டிற்கு சென்று, வெளிநாட்டு மாணவி போல நடித்து ஒரு ‘ஸ்டிங் ஆப்ரேஷனை’ செய்தது. அந்த செய்திக் குறிப்பை வைத்து ரிபப்ளிக் தொலைக்காட்சி பல தினங்களுக்கு உதயகுமாரையும், அவர் குடும்பத்தினரையும் துன்புறுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஸ்வேதா கோதாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் எஸ்.பி. உதயகுமார். ரிபப்ளிக் சேனல் உங்களை சந்தேகப்படுவது வேதனையளிக்கிறது என்கிறீர்களே, நீங்கள் எனக்கும் என் குடும்பத்திற்கு செய்த நம்பிக்கை துரோகம் மறந்து விட்டதா எனும் தொனியில் இருக்கும் அந்த கடிதத்தில் சில பகுதிகள் :

அர்னாப் கோஸ்வாமி நீங்கள் ஒரு உளவாளியாக இருப்பீர்கள் என சந்தேகிப்பது வருத்தமளிப்பதாக சொல்கிறீர்கள். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மடிவான் என்றொரு பழமொழி இருக்கிறது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும் (அர்னாப் கோஸ்வாமி), உங்கள் டிவி சேனலும் ஏதேச்சதிகார அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேர்மையான எங்களை அவமானப்படுத்தினீர்கள்? ஸ்பை கேமராக்கள் எல்லாம் வைத்து எங்கள் பொருளாதார நிலைமையையும் தெரிய நீங்கள் முயற்சி செய்தீர்கள் அல்லவா?

உங்களுடைய சமூக வலைதள பக்கங்களை எல்லாம் மேனஜர் வேவு பார்த்ததாக சொல்கிறீர்களே? நீங்கள் என் வீட்டிற்குள் வந்து உங்களை உபசரித்த குடும்பத்தின் ( முதிய பெற்றோர், மனைவி, மகன்) பேச்சுவார்த்தைகளை எல்லாம் ஒரு உளவாளியாக இருந்து ரெக்கார்டு செய்தீர்களே? உங்கள் விசுவாசத்தை சந்தேகப்படுகிறார்களா? உங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘விசுவாசம்’ பற்றிய கவிதை தான் கவர் ஃபோட்டோவாக இருக்கிறதா? தமாஷாக இருக்கிறதே. உங்களுக்கு அப்படி ஒரு வார்த்தை இருப்பது தெரியுமா?

இவ்வாறு ஸ்வேதா கோதாரிக்கு எழுதியிருக்கும் பதில் கடிதத்தில் அவர்  ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’ எனும் பெயரில் செய்த நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி விமர்சித்திருக்கிறார் உதயகுமார்...

மகிழ்ச்சி.. வரவேற்க்கதக்கது...


கடவுள் உண்டா இல்லையா?


பேய் உண்டா இல்லையா?
மறுபிறவி உண்டா இல்லையா?
விதி என்பது எது?
தலையெழுத்து நம் தலையில் எங்கு உள்ளது?
நிம்மதி எங்கு உள்ளது?
மகிழ்ச்சியின் திறவுகோல் எது?
வாழ்க்கை எங்கு தொடங்குகிறது?
வாழ்க்கை எங்கு முடிகிறது?
நிலையான பொருள் எது?
அறிவு என்பது யாது?
பொருள் மட்டும் தான் வாழ்க்கையா?
நம்மால் நிகழ்காலத்தில் மட்டும் ஏன் வாழ முடியவில்லை?
மழலையின் மொழி எது?
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?

இப்படிப் பல புதிர்களுக்கான பதிலை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு மாணவனிடம் கேட்டேன்..

உனக்குப் புதிரான ஒன்று சொல் என்று..
அவன் சொன்னான்..

ஐயா தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் தான் புதிரானது என்றான்.

நான் சொன்னேன் நீ படிக்காமல் இருக்கும வரை அப்படித்தான் இருக்கும் என்று..

எனக்கும் நீண்ட காலமாகவே ஒரு புதிருக்கான பதில் தெரியவில்லை..

தமிங்கிலம் பேசும் இன்றைய மக்களுக்கு தாய்மொழி எது? என்பது தான் எனக்குப் புரியவில்லை?

எல்லாம் புரிந்துவிட்டால் நாம் ஒவ்வொருவருமே கடவுளாகிப் போவோமே..

அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாத ஒவ்வொரு மணித்துளிகளுமே எதிர்பார்ப்பு நிறைந்தது தான்..

இந்த எதிர்பார்ப்பில், கிடைக்கும் அனுபவத்தில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பது என் அனுபவம்...

அரசு டாக்டர்கள் யாரும் இதுபோன்று இனி செய்யக் கூடாது...


உலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்...


வடக்கு பாக்கிஸ்தானில் உள்ள புன்சா என்ற இளம்பெண்கள் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்வதோடு ஆரோக்கியமாக வாழ்வதும் இவர்கள் தான்.

கரக்கோரம் என்ற மலைபகுதியில் வாழும் இவர்கள் உலகில் அதிக ஆரோக்கியம் ஆனவர்கள். இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு கொடிய நோயும் வந்ததில்லையாம்.

70 வயது வரை இவர்கள் முகத்தில் முதுமையான தோற்றம் வராமல் இருப்பதோடு, 80 வயதில் கூட இவர்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்றனர்.

இங்கு வாழும் பெண்களிடம் உலக அழகியும் தோற்றுப் போவார். காண்போரை கண்கொட்டாமல் பார்க்கவைக்கும் அழகானவர்கள் இந்த பெண்கள்...

தினமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை கொள்கையை கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது...


போலி உரம் தயாரித்து விற்பனை செய்யும் உரக்கடை, விவசாயிகள் அதிர்ச்சி...


தூத்துக்குடி மாவட்டம் , விலாத்திகுளம் தாலுகா, நாகலாபுரத்தில் உள்ள பொன்ராம் ஏஜென்சி  யில் களிமண் மற்றும் ஆலை சாம்பல் கழிவு கலந்த கலவையை உரம் என விற்பனை செய்யும் தகவலையடுத்து, இக்கடையை தமிழக விவசாயிகள் சங்க தலைவர் O.A. நாராயணசாமி அவர்கள் விவசாய நண்பர்களுடன் சென்று கையும் களவுமாகப் பிடித்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 34...


மந்திர தியானம்...

அடுத்ததாக இன்னொரு எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம்.

மந்திரம் என்றால் அது இந்து மத தியானம் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றலாம். ஆனால் இது சர்வ மதத்தினரும், மதங்களைச் சாராதவர்களும், நாத்திகர்களும் கூட பின்பற்றக் கூடிய வகையில் அமைந்த தியானம் என்பதே உண்மை.

மந்திரம் என்பது சக்தி வாய்ந்த சொல் அல்லது சொற்றொடர். இந்த மந்திரங்களின் சக்தியை இந்தியர்களும் திபெத்தியர்களும் பண்டைய காலத்திலேயே நன்றாக அறிந்திருந்தார்கள்.

ஓம் என்கிற ஓங்காரத்தில் இருந்தே அனைத்தும் தோன்றின என்கின்றது இந்து மதம். ஓம் மந்திரமும் காயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள்.

ஆதியில் வசனம் இருந்தது. அந்த வசனமே தெய்வத்துடையதாக இருந்தது. அந்த வசனமே தெய்வமாக இருந்தது என்று பைபிள் கூறுகிறது. (In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. New Testament, John1:1-2)
அரபுக்கதைகளிலும் சில மந்திரச் சொற்கள் அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறுவதை நாம் படித்திருக்கிறோம். ஆக உலகமெங்கும் மந்திரங்களை சக்தி வாய்ந்தவை என பலரும் பல காலமாக அங்கீகரித்திருப்பதை நாம் உணரலாம்.

இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறது.

ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்திலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு மந்திரம் தியானத்திற்காகத் தரப்படுகிறது. தியானத்தின் போது அந்த மந்திரச்சொல்லில் முழுக்கவனத்தையும் வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மந்திர தியானம் மதங்களைக் கடந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு சுவையான உதாரணத்தைச் சொல்லலாம்.

ஜான் மெய்ன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க ஐரிஷ் பாதிரியார் இரண்டாம் உலகப் போரின் போது அரசுப்பணியில் மலாயாவிற்கு அனுப்பப்பட்டார். அப்போது கோலாலம்பூரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்த ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியை சந்தித்த போது ஆன்மிக விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி தியானங்கள் பற்றி விவரித்தது ஜான் மெய்னை மிகவும் கவரவே தங்கள் மதத்திற்கேற்ப தியானம் செய்ய முடியுமா என்று அவர் ஸ்வாமியைக் கேட்டார்.

தியானம் மதங்களைக் கடந்தது என்று சொன்ன ஸ்வாமி ஜான் மெய்னுக்கு ஒரு கிறிஸ்துவ புனித வார்த்தையை உபதேசம் செய்து அந்த மந்திரத்தின் மீது தினமும் இருமுறை தியானம் செய்யச் சொன்னார். அந்த மந்திர தியான முறையையும் ஸ்வாமி அவருக்குச் சொல்லித்தந்தார். அவர் சொல்லித் தந்தபடியே தியானத்தை செய்த ஜான் மெயின் வாரா வாரம் ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியின் ஆசிரமத்திகே வந்து அந்தத் தியானத்தை ஸ்வாமியுடன் சேர்ந்து செய்தார். அதனால் சிறப்பான ஆன்மிக அனுபவத்தைப் பெற்றதால் ஜான் மெயினின் ஆன்மிக வாழ்க்கையின் அங்கமாக அந்த தியானம் மாறியது.

இங்கிலாந்து திரும்பிய பின்னர் அந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் அவரது தலைமை பாதிரியாரிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார். இந்த தியான முறை கிறிஸ்துவ சம்பிரதாயத்திற்கு எதிர்மாறானது என்று தலைமை பாதிரியார் தடுத்தார். சிறிது காலம் அந்த தியான முறையை நிறுத்திக் கொண்ட ஜான் மெய்ன் ஏதோ இழந்தது போல் உணர்ந்தார். பின் கிறிஸ்துவ நூல்களை ஆழமாகப் படித்த போது மிகப் பழைய காலத்தில் இது போன்ற தியான முறை கிறிஸ்துவர்களிடமும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார்.

பலரிடமிருந்து வந்த கடும் விமரிசனங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தான் கடைப்பிடித்து வந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் தனது தியானத்திற்கு ’கிறிஸ்துவ தியானம்’ என்று பெயரிட்டு பரப்பினார்.

1982ல் அவர் மறைந்தாலும் கிறிஸ்துவ தியானம் பல நாடுகளில் பிரபலமாகி பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்படி மந்திர தியானம் உலகில் பல வடிவங்களில், பல மதத்தினரால், பல பெயர்களில் இக்காலத்தில் பின்பற்றப்படுகிறது.

மந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மந்திர தியானத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் மந்திரம் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக அந்த மந்திரம் சுருக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக அது ஓரிரு வார்த்தைகளாக மட்டும் இருப்பது நல்லது. (காயத்ரி மந்திரம் மிக உயர்ந்த மந்திரமானாலும் அது ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் நீண்டு இருப்பதால் இது போன்ற மந்திர தியானங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).

நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மந்திரம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு மிக உயர்ந்ததாகவோ, சக்தி வாய்ந்ததாகத் தோன்றுவதாகவோ இருக்க வேண்டும். அப்போது தான் மந்திர தியானத்தில் நீங்கள் பெறும் பலன் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (அந்த மந்திரத்தின் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்தில் பங்கு பெறும் அமெரிக்க, ஐரோப்பிய நபர்களுக்கு மந்திரமாக தரப்படுபவை பெரும்பாலும் வேதங்களில் இருக்கும் சம்ஸ்கிருத சொற்கள் தான். அது புனித சொல், சக்தி வாய்ந்த மந்திரம் என்பது மட்டும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது).

மந்திர தியானத்திற்குப் பொதுவாக பலரும் பயன்படுத்தும் சில மந்திரங்களையும், மந்திர தியானம் செய்யும் முறையையும் அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.....

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்...



கன்னட ஈவேரா-வை தமிழ்த் தேசியத் தந்தை என்று சிலர் திரிக்கின்றனர்.

தமிழ்நாடு தமிழருக்கே என்று அவர்தான் முதலில் கூறினாராம்.

ஈவேரா என்பவர் திராவிட நாடு, தனித்தமிழ் நாடு என்று மாற்றி மாற்றி பேசி கடைசிரை குழப்பியவராவார், அவர் எப்படி தமிழ்த் தேசியத்தின் தந்தை ஆவார்?

ஆனால், 1881லேயே தாழ்த்தப்பட்ட மக்களை பஞ்சமர் அல்லது தலித் என்று குறிப்பிடாமல் 'ஆதித் தமிழர்' என்று குறிப்பிட வலியுறுத்தியவர் அயோத்திதாசர்..

1885லிருந்து 'ஜான் ரத்தினம்' என்பவருடைய 'திராவிடப் பாண்டியன்' என்ற இதழில் அயோத்திதாசர் உதவியாசிராக பணிபுரியலானார்..

ஆனால், 1907ல் அவர் தனி இதழ் தொடங்கிய போது அதற்கு திராவிடப் பெயரை வைக்காது 'ஒரு பைசாத் தமிழன்' என்றே பெயர் சூட்டி தமிழிய சிந்தனைகளோடு வெளியிட்டுவந்தார்..

பிறகு 1908ல் அதன் பெயரைத் 'தமிழன்' என்று மாற்றினார்..

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத, மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தாழ்த்தப்பட்டோர் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளுடன் வெளிவந்தது தமிழன் இதழ்..

மலேசியா, சிங்கப்பூர் வரையிலும் கூட அவ்விதழ் பரவியது..

(1942ல் 'தமிழ் ராஜ்ய கட்சி'  என்ற கட்சியைத் தொடங்கி தமிழருக்குத் தனி ராஜ்யம் தேவை என்று முழங்கிய சி.பா.ஆதித்தனாரும் 1942ல்  'தமிழன்' என்ற வார இதழைத் தொடங்கினார்...)

மொழியின் மூலம் சாதியை பின்னுக்குத் தள்ளலாம் என்பதை  "ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிறுத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர், வன்னியரும் ஆதி தமிழரென்பர், நாடாரும் ஆதி தமிழரென்பர், வேளாளரும் ஆதி தமிழரென்பர்" என்கிறார்...

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியம், திராவிடம் போன்ற 'தமிழர் மீதான வேற்றின ஏகாதிபத்திய' கருத்துகள் தமிழர் மத்தியில் விதைக்கப்பட்டபோது, முதன் முதலாக 'தமிழ்நாடு தமிழருக்கே' (தமிழ்தேசம் சுதேசிகளுக்கே) என்று கூறியவரும் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார்..

30-10-1912 அன்று தமிழன் இதழில் 'விடுதலை அளித்தால் இம்மண்ணின் மைந்தரான (சுதேசிகளான) தமிழருக்கே வழங்க வேண்டும்' என்றார்..

தமிழ்மொழியில் பிறந்து தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கே சுதந்திரம் வழங்கவேண்டும் என்கிறார்..

மேலும் கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும்..

நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர்.. குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக்கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும் என
ஆங்கிலேயரிடம் விடுதலை பெறுவதற்கு 35ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்..

(இதே காலகட்டத்தில் 1922ல் அருணாசலம்'தனி ஈழம்' என்கிற கருத்தியலை உருவாக்குகிறார்)..

ஈவேரா பொதுவாழ்க்கைக்கு வரும் முன்னரே 'தமிழர் ஒரு தேசிய இனம்' என்று சிந்தித்த அயோத்தி தாசரே 'தனித் தமிழர் நாடு'  என்ற கருத்தியலின் தந்தை ஆவார்...

பழைய சோறு….


முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்..

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள்: ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்..

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்..

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது..

பழைய சாதத்தின் மகத்துவம் சில..

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது..

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது..

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்..

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது..

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து விட்டதோடு, உடல் எடையும் குறைந்தது. என்கிறார்..

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

பழைய சாதத்தை எப்படி செய்வது..

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி தான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்..

மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்துக் குடிக்க ‘ஜில்’லென்று இருக்கும்..

(மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு...

அறிவார்ந்த தமிழர்களே...


1. ஈழத்தில் இனப் படுகொலையை நடத்தியது யார் ?
2. ஏன் நடத்தினார்கள்?
3. இதுவரை நாம் செய்தது என்ன?
4.  இனி என்ன செய்யப் போகிறோம்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய, மறைக்கப்பட்ட நம் தமிழர் வரலாறை நாம் சற்றே திரும்பிப் பாப்போம்.......

பாகம்-1 :

ஆதி மனிதன் பிறந்த இடம் குமரிக்கண்டம்.

முதல் மனித நாகரீகம் தோன்றிய இடமும் குமரிக்கண்டம்.

மனிதனானவன் பேசிய முதல் மொழி தமிழ்.

இன்றைய தமிழகத்தையும், இலங்கையையும், அதற்கும் தெற்கே மூழ்கிப்போன பெரும் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்.

அந்தக் குமரிக்கண்டத்தில் காலம் காலமாய் வாழ்ந்து வந்தவர்கள் தமிழ்க்குடிகளே ஆவர்.

49 நாடுகள் கொண்ட ஒரு மாபெரும் பேரரசை பாண்டிய அரசர்கள் கட்டி ஆண்டு வந்தனர்.

இயற்கைச் சீற்றத்தின் காரணமாக குமரிக்கண்டம் அழிவைச் சந்திக்க நேரிட்டதால் அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள், நாவாய்களின் மூலமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.

சென்ற இடங்களில் எல்லாம் மிகப் பெரிய அரசுகளையும், நாகரீகங்களையும் உருவாக்கினர்.

எகிப்து, சுமேரிய, சிந்து சமவெளி நாகரீகங்களையும் உருவாக்கியவர்கள் தமிழர்களே ஆவர்.

மாபெரும் வெள்ளம், அதன் விளைவுகள், மக்கள் நாவாய்களின் மூலமாகத் தப்பித்து வந்தது பற்றி உலகின் பழம்பெரும் நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் பேசிவந்ததே குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றாகும்.

ஆழிப் பேரலையின் காரணமாக இன்றைய இலங்கையானது, தாய்த் தமிழகத்திடம் இருந்து பிரிந்து போய், ஒரு தனித் தீவானது.

குமரிக்கண்டத்தில் இருந்த நாற்பத்தொன்பது நாடுகளில் ஏழாவது நாடாக இன்றைய இலங்கையின் நிலப்பரப்பு  இருந்தது.

ஏழு நாடு என்ற வார்த்தைதான் பின்னாட்களில் மருவிப்போய் ஈழ நாடு என மாறியிருக்கிறது.

இலங்கை, ஈழம் ஆகிய இரு சொற்களின் வேர்ச்சொல் ஏழு என்பதாகும்.

ஈழம், இலங்கை ஆகிய சொற்கள் ஒரே தீவைக் குறிக்கும் இரு வேறு சொற்களாகும்.

சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களும், தமிழி எழுத்துக்களும் ஒன்றாகப்   பொறிக்கப்பட்ட ஒரு உலோகப் பட்டை  ஈழத்தில் ஆகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த எழுத்துக்கள்  ‘தீவுக்கோ’  ” என்று பொருள்  தருகின்றன.

தீவுக்கோ என்றால் ஈழத்தீவை ஆளும் அரசன் என்று பொருள்.

ஈழத்தீவு முழுவதற்கும் ஒரே அரசன் தான் இருந்துள்ளான்.

அவன் தமிழ் பேசிய அரசன் ஆவான்.

அதனால் தான் ஈழ அரசனைக் குறிக்கும் சொல் தமிழில் உள்ளது..

ஈழ மண்ணின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்று மேலும்  நிரூபிக்கும் வண்ணமாக யாழ்ப்பாண நகரிலும், மட்டக்களப்பு பகுதிகளிலும், சுமார் 2600 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக்கள் கொண்ட மட்கலங்களை தொல்லியல் துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்கள் கொண்ட பாறை ஓவியங்கள் தமிழக மாவட்டமான விழுப்புரத்திலும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆசியாவிலேயே மிகவும் பழமையான நாகரீகம் என்று சொல்லப் பட்டது  சிந்து சமவெளி நாகரீகம் ஆகும்.

அந்த நாகரீகத்தின் சம காலத்திலேயே தமிழன் அதனோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்பதற்கு தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் கிட்டியுள்ள ஆகழ்வாராய்ச்சி முடிவுகளே சான்றாகும்.

மிகவும் தொன்மையான குடிகளான தமிழர்களால் நாகரீகத்தின் உச்சத்தை அடைய முடிந்தது.

கலை, இலக்கியம், இசை, மொழி, அறிவியல்  என அனைத்திலும் வளர்ந்த சமூகமாய் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.

தமிழர்களின் வழிகாட்டிகள் சித்தர்கள் ஆவார்கள்.

தமிழரின் ஆதி மெய்யியல் இன்று வெவ்வேறு பெயர்களில் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறது.

அதற்குக் காரணம் குமரிக் கண்டத்திலிருந்து சென்ற தமிழர்களே ஆவார்கள்...

சந்திர வழிபாட்டின் நுட்பம்...


வழிபடுதல் என்றால் எதாவது ஒன்றைப் பின்பற்றுதல் என்று பொருள்..

அது ஒரு கொள்கையாகவோ அல்லது ஒழுக்க நெறியாகவோ கூட இருக்கலாம்..

நமது பூமியில் இருந்து பார்த்தால் நம் கண்களுக்குத் தெரியும் சூரியனையும் சந்திரனையும் கூட நாம் பின்பற்றலாம் ( வழிபடலாம் ).

அவ்வாறு சந்திரனைப் பின்பற்றும் பழங்குடிகள் இன்னும் இம்மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள்..

இம்மக்களின் நாள்காட்டியும் சந்திரனை மையப்படுத்தியே இருக்கும்..

திங்கள் என்ற சொல் சந்திரனையும் குறிக்கும், மாதத்தையும் குறிக்கும்..

சந்திரன் பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவை பண்டைய தமிழர்கள் ஒரு மாதமாகக் கருதினர்..

அதனால் தான் மாதத்துக்கு திங்கள் என்ற பெயரும் உள்ளது..

மூன்றாம் பிறை தோன்றியதைக் கண்டபின் மாதப் பிறப்பை சந்திர வழிபாட்டினர் உறுதிசெய்வர்..

பிறை, பிறப்பு என்ற சொற்கள் ஒரே பொருள் கொண்டவை..

மூன்று நாட்கள் வானில் சந்திரன் தெரியாது..

அதாவது சந்திரன் இறந்து விட்டதாக அக்கால மக்கள் கருதினர்..

மூன்று நாட்கள் கழித்து சந்திரன் மேற்கு வானில் பிறக்கிறான்..

அதனால் அதன் பெயரை மூன்றாம் பிறை என்று வைத்தனர் பண்டைய தமிழர்..

தூய தமிழ்ப் பெயர்களில்  அழைக்கப்படுவதை வைத்து பண்டைய தமிழர்கள் சந்திர வழிபாட்டினர் என்று நாம் உறுதியாகக் கூறலாம்..

சந்திர வழிபாட்டாளர்களுக்கு மேற்கு திசை மிக முக்கியமானது..

காரணம் மாதப் பிறப்பையும் ஆண்டுப் பிறப்பையும் தீர்மானிக்கும் பிறை தோன்றுவது மேற்கு திசையேயாகும்..

சந்திரனைப் பின்பற்றும் பழங்குடிகளைச் சேர்ந்த ஆண்கள் தங்களின் ஆண்குறியின் முன்தோலை நீக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்..

எ.கா. அரபு இன மக்கள், ஆப்ரிக்கப் பழங்குடியான மசாய் இன மக்கள் போன்றோர்..

சந்திர வழிபாட்டில் மிக முக்கியமான சடங்காகக் கருதப்படுவது  சுன்னத் நிகழ்வாகும்..

சந்திர வழிபாட்டாளர்கள் சிறந்த போர் வீரர்கள் ஆவர்..

மேலே சொல்லப்பட்ட இன மக்களான அரேபியரும், மசாய் இனத்தவரும் போர்க்கலைகளில் சிறந்தவர்களாவர்..

சந்திர வழிபாட்டுக்கும், கொற்றவை வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது..

போரில் வெற்றியடைய கொற்றவையை வணங்குவது நம் வழக்கம்..

அக்கொற்றவைக்கு உயிர்பலி கொடுத்த பின்னர் போருக்குச் செல்வது நம் வழக்கம்..

சந்திர வழிபாட்டினர் ஒரு படி மேலே போய் தங்கள் ஆண் குறியின் முன்தோலை சிறுவயதிலேயே நீக்கிக் கொள்கின்றனர்..

பிற்காலத்தில் வந்த  மதவாதிகள் பிறை தோன்றும் மேற்கு திசையை பார்த்து விடாதவாறு  ஒரு பெரிய நந்தியை குறுக்கே நிறுவினர்..

கடந்த நூற்றாண்டில் பொது மக்களுக்கு சிவன் கோவில்களைத் திறந்துவிட பார்ப்பனர்கள் முடிவு செய்ததும், இந்த நுட்பம் பொது மக்களுக்குத் தெரிந்து விடாத வண்ணம் சிவலிங்கத்தை யாரும் நேருக்கு நேர் பார்த்து விடாதவாறு ஒரு காரியத்தைச் செய்தனர்..

அதாவது கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் மக்கள் லிங்கத்தை பக்கவாட்டில் இருந்து மட்டுமே பார்க்கும்படி இரும்புக் கம்பிகளாலான தடுப்புகளை செயற்கையாக அமைத்தார்கள்.

வைணவப் பெருமாள் கோவில்களில் இத்தடுப்புகள் இருக்காது..

திருவரங்கத்திலும், திருமலையிலும் பெருமாளை நேருக்கு நேர் பார்க்க முடியும்.

ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் லிங்கத்தை நேருக்கு நேர் பார்க்கவே முடியாது.. அதாவது மேற்கு திசையை நோக்கி நாம் வணங்கி விடாதவாறு செய்துள்ளனர்..

பொது மக்களுக்கு சந்திர வழிபாட்டின் நுட்பம் தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவே சிவலிங்கத்தைப் பற்றி நம்பவே முடியாத புராணக் கதைகளை பார்ப்பனன் எழுதியுள்ளான்.

தமிழ் இனத்தின் எதிரியை வீழ்த்தும் நுட்பம் சந்திர வழிபாட்டில் தான்  உள்ளது.

வாழ்க தமிழ்...

பெருங்காயம்...


பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறு மணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு..

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது. உணவை செரிப்பிக்கிறது, சுவையை அதிகப்படுத்துகிறது..

இது கூர்மை யானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும் கபத்தையும் கண்டிக்கிறது.. பித்தத்தை உயர்த்துகிறது..

இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்..

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி, உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது..

இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது.

இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது.

சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது.

இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது..

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது..

பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது..

இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது..

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சை யாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்..

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தை கட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்..

எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்...

விக்ஸ்சுக்கும், வயிற்றின் தொப்பைக்கும் என்ன சம்பந்தம்?


தெரிந்தால் விடவே மாட்டீங்க...

பொதுவாக சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் விக்ஸ்.

இந்த பொருள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க மட்டுமின்றி, பலவாறும் பயன்படுகிறது.

ஆனால் விக்ஸைக் கொண்டு தற்போது பலரும் கஷ்டப்பட்டு வரும் ஓர் பிரச்சனையான தொப்பையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

இதுவரை தொப்பையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள்.

ஆனால் விக்ஸ் கொண்டு தொப்பையைக் குறைக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இங்கு அது குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விக்ஸ்..

சளி, மூக்கடைப்பு போன்றவற்றின் போது பயன்படுத்தப்படும் விக்ஸைக் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்க முடியும்.

விக்ஸை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்யும் போது, அதனால் அவ்விடத்தில் கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும். தழும்புகள் இருக்காது..

விக்ஸைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் கொழுப்பு செல்கள் அழிக்கப்பட்டு, விரைவடைந்த சருமம் சுருங்கும் போது ஏற்படும் தழும்புகள் நீக்கப்படுவதோடு, சருமமும் அழகாக இருக்கும்.

விக்ஸை தனியாக பயன்படுத்தக்கூடாது
விக்ஸை தனியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, அத்துடன் கொழுப்புச் செல்களை வேகமாக எரிக்க பயன்படும் சில பொருட்களான கற்பூரம், பேக்கிங் சோடா, ஆல்கஹால் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தினால், இதன் செயல்முறை இன்னும் வேகமாக்கப்படும்.

தொப்பைக் கரைக்கும் க்ரீம்..

தேவையான பொருட்கள்: விக்ஸ், கற்பூரம், பேக்கிங் சோடா, ஆல்கஹால்.

செய்முறை:

முதலில் ஒரு பிளாஷ்டிக் டப்பாவில் கற்பூரத்தைப் பொடி செய்து சேர்த்து, அத்துடன் பேக்கிங் சோடா, விக்ஸ் மற்றும் ஆல்கஹால் சேர்த்து நன்கு க்ரீம் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

மாலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் முன், இந்த க்ரீம்மை வயிறு போன்ற கொழுப்பைக் கரைக்க நினைக்கும் பகுதிகளில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஒரு பிளாஷ்டிக் கவர் கொண்டு அப்பகுதியை சுற்றிக் கொண்டு 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

இல்லாவிட்டால், இரவில் படுக்கும் முன் இவ்வாறு வயிற்றில் தடவி பிளாஷ்டிக் கவர் கொண்டு சுற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்..

குறிப்பு..

இச்செயல்முறையை பின்பற்றும் போது சமச்சீரான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்...

ஜெயலலிதாவை மறந்து, தங்களை முன்னிலைப்படுத்தும் ஓ.பிஎஸ், ஈ.பி.எஸ்...


இவர்கள் கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை காக்க.. தமிழகத்தை விற்று.. தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும்.. இந்த துரோகிகளை ஆதரிக்கும்... அதிமுகவினரே.. இது சரியா?

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் பதில் அளிக்க தயாரா..?


அரியானாவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்...


மாட்டிறைச்சி கடத்தியதாக ஊனமுற்ற இஸ்லாமிய இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உயிருடன் கொலுத்த முயன்ற ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள்..

வயிற்றுப் பிழைப்புக்காக ஒருவரிடம் ஆட்டோ ரிக்ஷா வாடகைக்கு எடுத்து ஓட்டி குடும்பத்தின் பசியை போக்குவதற்காக ஊனமுற்ற நிலையில்  அரியானாவின் ஃபரீதாபாத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார் ஆசாத் என்ற இளைஞன்.

மாட்டிறைச்சி கடத்துகிறாயா ? என்று ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி ஒருவன் அவரிடம் கேட்க அதற்கு அவர் மறுக்க, இதற்கிடையில் போன் மூலம் அவன் ஐந்து ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளை அழைத்து அந்த ஊனமுற்ற இளைஞனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அதில் நிலைகுலைந்து அவர் மயக்கமுற்று கீழே சரிந்ததும் ஈவிறக்கமற்ற பாவிகள் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைக்கும்போது ஒரு போலீஸ்காரர் தடுத்து அவரைக் காப்பாற்றி உள்ளார்.

அந்த இடத்தில் ஒரு போலீஸ் காரர் வந்து தடுக்கவில்லை என்றால் உயிருடன் எரிக்கப்பட்டிருப்பார்.

மனித உயிருக்கு மோடியின் ஆட்சியில் பாதுகாப்பின்மை தொடருகிறது. நேற்று பஞ்சாபில் நடந்த இடைதேர்தலில் மோடியின் பாஜக மண்ணை கவ்வியது போல் இனி வரக் கூடிய அனைத்து தேர்தலிலும் வரலாறு காணாத அளவுக்கு மண்ணை கவ்வினால் தான் காவி பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்கும்...

இலுமினாட்டி ஆய்வாளர் பாரிசாலன் கூறும் உண்மை - யூதர்களே பிராமணர்கள்...


டெல்லியில் அவமானப்படுத்தப்படும் நமது தமிழக விவசாயிகள்.. எந்த மீடியாவிலும் இது வரவில்லை..