17/10/2017

அரியானாவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்...


மாட்டிறைச்சி கடத்தியதாக ஊனமுற்ற இஸ்லாமிய இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உயிருடன் கொலுத்த முயன்ற ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள்..

வயிற்றுப் பிழைப்புக்காக ஒருவரிடம் ஆட்டோ ரிக்ஷா வாடகைக்கு எடுத்து ஓட்டி குடும்பத்தின் பசியை போக்குவதற்காக ஊனமுற்ற நிலையில்  அரியானாவின் ஃபரீதாபாத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார் ஆசாத் என்ற இளைஞன்.

மாட்டிறைச்சி கடத்துகிறாயா ? என்று ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி ஒருவன் அவரிடம் கேட்க அதற்கு அவர் மறுக்க, இதற்கிடையில் போன் மூலம் அவன் ஐந்து ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளை அழைத்து அந்த ஊனமுற்ற இளைஞனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அதில் நிலைகுலைந்து அவர் மயக்கமுற்று கீழே சரிந்ததும் ஈவிறக்கமற்ற பாவிகள் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைக்கும்போது ஒரு போலீஸ்காரர் தடுத்து அவரைக் காப்பாற்றி உள்ளார்.

அந்த இடத்தில் ஒரு போலீஸ் காரர் வந்து தடுக்கவில்லை என்றால் உயிருடன் எரிக்கப்பட்டிருப்பார்.

மனித உயிருக்கு மோடியின் ஆட்சியில் பாதுகாப்பின்மை தொடருகிறது. நேற்று பஞ்சாபில் நடந்த இடைதேர்தலில் மோடியின் பாஜக மண்ணை கவ்வியது போல் இனி வரக் கூடிய அனைத்து தேர்தலிலும் வரலாறு காணாத அளவுக்கு மண்ணை கவ்வினால் தான் காவி பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.