23/06/2017

பெட்ரோல் டீசலை ஏன் GST வரிக்குள் கொண்டு வரவில்லை மத்திய அரசு ? விலை பாதியாக குறைந்து விடும் என்பதாலா ? லாபம் எல்லாம் அரசிற்கு நஷ்டம் எல்லாம் நாட்டு மக்களுக்கா ? பொதுமக்கள் கேள்வி...


தற்போது மத்திய மாநில அரசை சேர்த்து ஒட்டுமொத்தமாக பெட்ரோல் டீசலுக்கு அந்த வரி இந்த வர என 138 சதவிகிதம் வரி விதிக்கப்படுகின்றது.

பெட்ரோல் டீசலை GST க்குள் கொண்டு வந்தால் அதிகபட்சமாக 28% வரி வித்ததால் கூட பெட்ரோல் விலை பாதியாக குறைந்து விடும்.

இதனால் மத்திய மாநில அரசிற்கு ஆண்டு தோறும் கிடைக்கும் லாபம் கணிசமாக குறைந்து விடும்.

இதனாலேயே மத்திய அரசு பெட்ரோல் டீசலை மட்டும் GST க்குள் கொண்டு வரவில்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசு தரப்பில் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை...

வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..?


வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும்..

வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும்..

ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா..?

அதற்கான விடை தான் இந்த கட்டுரை..

நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை..

அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது..

முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட..

கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன..

காரணம் 1..

ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்..

காரணம் 2..

ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்..

காரணம் 3..

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.

காரணம் 4..

மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது.
ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்..

காரணம் 5..

ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம்.
இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்.
வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள்.
இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்..

காரணம் 6..

சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது.. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில்.
இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்..

காரணம் 7..

மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர். அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை..

எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்...

பாஜக வின் அந்தர் பல்டி யோகா. உலக யோகாசனத்தை முன்னிட்டு அறிமுகம்...


திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்?

                             
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார். “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில்
எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

ஆதாரம் - கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)...

தமிழர்களை சிறிது சிறிதாக கொள்ளும் மறைமுக வழிகளில் இதுவும் ஒன்று...


பெருமாள் மணிக்கு என்னடா ஒரு ஒரு டீவில ஒரு வேஷம்...


இவன்லாம் பேசனும்னு யாரு அளுதா..?

அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் அச்சம் : ஏலியன்ஸ்களால் கடத்தப்படலாம்...


ஏலியன்ஸ் குறித்த தகவலை விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்ட நிலையில் ஏலியன்களால் கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அமெரிக்கர்கள் அதிக அளவில் காப்பீடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வேற்று கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்குள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் நாசா விஞ்ஞானி மரியோ பெரஸ், நாசா மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் 219 கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த கிரகங்களுடன் சேர்த்து, இப்படி கண்டு பிடிக்கப்பட்டுள்ள மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேற்று கிரகவாசிகளால் தாங்கள் ஒரு வேளை கடத்தப்பட்டு விடக்கூடும் என கருதி அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை ஏலியன்ஸ்கள் தாக்குவது போலவும், வேற்று கிரகவாசிகள் அடிமைப்படுத்துவதை போலவும் ஹாலிவுட் படங்கள் வெளியாகி வருகின்றன.

அதே பாதிப்பில் அமெரிக்கவாசிகள், வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என்ற கற்பனையில் கனவு கண்டு காப்பீடு செய்கிறார்களோ என்னவோ?

நம் ஊரில் எலிக்கு பயப்படுவது போல அமெரிக்காவில் ஏலியன்ஸ்க்கு பயப்படுறாங்க போல...

உபி உத்தமன் பாஜக யோகியின் பொற்கால ஆட்சி...


பாலியல் பலாத்கார செய்யப்பட்ட 37 வயது பெண்மணி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார், அவரது புகாரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்ய வேண்டும் என்றால், குற்றம் புரிந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், நீ முதலில் என்னுடன் படுக்கைக்கு வா என்று அழைக்கிறார் காவல்துறை அதிகாரி.

இந்த பெண்மணி சம்மதிக்காத்தால் இந்த வழக்கையே ஒரு முடிவிக்கு கொண்டு வந்திருக்கிறார் அந்த அதிகாரி.

முதல்வர் யோகியின் திறமையான ஆட்சியை பாராட்டுவோம் நண்பர்களே, ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்த இந்த மாணிக்கத்தின் ஒளி இந்தியா முழுவதும் பரவட்டும் நண்பர்களே.. தோழர்களே..

உலகிலேயே இந்தியாவில் தான் பெண் தெய்வங்கள் அதிகம் என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

எழுத்தாளர்- முத்துகிருஷ்ணன்..

பாரதமாதவுக்கு உயிர் இருந்தால் அதையும் கற்ழிப்பார்கள் காம வெறியர்கள்...

அதிமுக வும் தமிழின அழிப்பும்...


அதிமுக வும் தமிழின துரோகமும்...


இரவு  7 மணி - பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க ஈ.பி.எஸ் டெல்லி பயணம்..

இரவு  8 மணி -  பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க ஓ.பி.எஸ் டெல்லி பயணம்...

அதானி குழுமத்தின் 500கோடி ஊழலும் பாஜக மோடி அரசின் சட்ட திருத்தமும்...


கார்ப்ரேட்களால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட பாஜகவின் மோடி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது ராஜவிசுவாசத்தை காட்டுவார்.

அப்படி சமீபத்தில் அதானி குழுமம் செய்த 500கோடி ஊழலிருந்து அந்நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக நாட்டின் சட்டத்தையே மாற்றியமைத்திருக்கிறது பாஜக வின் மோடி அரசு.

குஜராத்தில் அதானி குழுமமும் அரசும் சேர்ந்து அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் எனும் பெயரில் Adani Port and Special Economic Zone (APSEZ) 6456 ஏக்கரில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவி வருகிறது.

இந்த நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து அதானி குழுமம் இறக்குமதி செய்து வருகிறது.

அப்படி இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு வரி கட்ட வேண்டும்.

இதனால் அதானி குழுமம் குறைவான அளவான நிலக்கரியை மட்டுமே இறக்குமதி செய்வதாக காட்டி அதிகளவு நிலக்கரியை இறக்குமதி செய்து வந்திருக்கிறது.

இதனால் அரசுக்கு 500கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்று Directorate of Revenue Intelligence (DRI) கண்டுப்பிடித்து இதற்கான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் ஆட்சி பொறுப்புக்கு வந்த மோடி. நாட்டிலேயே மிகப்பெரிய மின்நிலையத்தை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டி நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருபவர்கள் மின்சாரம் தயாரிக்க தேவையான பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவர்கள் வரி கட்டத் தேவையில்லையென்று ஏற்கனவே இருந்த சட்டத்தில் ஒரு திருத்தத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் அதானி குழுமம் செய்த வரி ஏய்ப்பு இப்போது சட்டப்படி சரியானதாகி இந்த வழக்கிலிருந்து அதானி குழுமம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த அதானி குழுமம் நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலே மின்சாரத்தை தருகிறதா? என்றால் இல்லையென்பது தான் ஏதார்த்தம்.

இதற்கு உதாரணம் மிக அதிக விலையில் மின்சாரத்தை அதானி குழுமம் விற்கிறது என்பதற்காக 2014லிருந்து இதன் சலுகைகளை ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு வழக்கு குஜராதில் நிலுவையில் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு தனியார் முதலாளிகாக அதுவும் பிரதமர் தேர்தலின்போது மோடி பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹெலிகாப்டர்கள் எல்லாம் அதானி கொடுத்தார் என்பதற்காக ஏற்கனவே யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் போய் நவாப் ஷெரிபுடன் அதானிக்காக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்புறம் ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணமாக போனபோது அதானியையும் கூட்டிக்கொண்டு போய் ஆஸ்திரேலியாவிலுள்ள நிலக்கரி சுரங்கத்தை அதானி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கிக்கொடுத்ததென்று எல்லாம் செய்த மோடி இறுதியாக இந்திய சட்டத்தையே அதானிக்காக மாற்றி எழுதுகிறார்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை சேர்ந்த அருண்ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை அவர்கள் இதுகுறித்து பேசவில்லை என்பதிலிருந்தே இவர்கள் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

நாட்டின் வளங்களை முதலாளிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்கும் பாஜகவின் மோடி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தான் நாடு முழுக்க தேசபக்தர்களாக வலம் வருகிறார்களென்றால் இதைவிட அசிங்கம் வேறெதாவது இருக்க முடியுமா?

பதிவு - Kondal samy

http://en.southlive.in/business/2016/11/22/when-scores-die-in-streets-without-cash-sbi-gives-dollar1-billion-for-adanis-australia-project

http://in.reuters.com/article/tata-power-adani-power-court-idINKBN17D0MF

http://www.epw.in/journal/2017/24/web-exclusives/modi-governments-%E2%82%B9500-crore-bonanza-adani-group-company.html

நியூஸ் 7 அடுத்து விஜய்ய வச்சு ஒரு பத்து நாள் ஓட்டுங்க. யப்பா யார்ரா நீங்கள்லாம் எப்படா எவன்டா தீனி போடுவான் கொஞ்சநாள் பொழப்போட்டலாம்னு அழையிறது. கேட்டா... மீடியா. த்தூ.....


ஹிட்லர் தப்பிக்க எப்படி உதவினார் ?


ஆதாரம் :

https://www.theguardian.com/world/2004/sep/25/usa.secondworldwar

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீரா குமார் அறிவிப்பு...


இவர் பாராளுமன்றத்தில் சபாநாயகராக 2009 ஆம் ஆண்டு முதல்  2014 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்...

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5 போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது...


6 GB Ram மற்றும் 8 GB Ram என இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ளது...

திராவிடலு பகுதி - 8...


1900களில் பிராமண ஆதிக்கத்தையும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஆதிக்கசாதியர் பிராமணருடன் போட்டியிட்டதையும்,  திராவிடப் பரப்புரை முடுக்கிவிடப்பட்டதையும் பார்த்தோம்.

முதலாம் உலகப்போர் 1914 தொடங்கி 1918 ல் முடிந்த பிறகு ஆங்கிலேய அரசின் பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் வீறிட்டெழுந்தது.

அப்போது நாடுமுழுவதும் காங்கிரசை விட செல்வாக்காக இருந்தது 'அன்னிபெசண்ட்' அம்மையாரின் 'அகில இந்திய ஹோம்ரூல் லீக்'.

இதன் சென்னைக்கிளை தமிழ் பிராமணர் கட்டுப்பாட்டில் இருந்தது
(உண்மையாகவே விடுதலையை நோக்கமாகக் கொண்ட தமிழ் பிராமணர்).

இந்நேரத்தில் இந்திய சட்டசபை உறுப்பினர் 19 பேர் கையொப்பமிட்ட கூட்டறிக்கை ' பூரண சுயாட்சி'  கோரியது.

ஏதேது ஆங்கிலேயர் சுயாட்சி வழங்கினால் அது ஹோம்ரூல் மூலமாக தமிழ்ப்பிராமணருக்குப் போய்விடுமோ என்று வேற்றுமொழி ஆதிக்க சாதியினர் பதற்றமடைந்தனர்.

இந்நிலையில்தான் அவர்கள் தமக்கென்று ஒரு கட்சியை தொடங்குவது என்று தீர்மானித்தனர்.

இவ்வாறு அவர்கள் தோற்றுவித்த முதல் திராவிடக் கட்சியான 'நீதிக்கட்சியின்' முகத்திரையை சற்று  விலக்கிப் பார்ப்போம்.

இக்கட்சியை தொடங்கிய இருவரில் முதலில் டாக்டர்.டி.எம்.நாயர் பற்றி அறிவோமாக.

மலையாளியான இவர் முதலில் காங்கிரசில் இருந்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழ்ப்பிராமண வாக்காளர் நிறைந்த திருவல்லிக்கேணித் தொகுதியில் நான்குமுறை வெற்றிபெற்றவர்.

பிறகு ஒருமுறை தொல்வியைத் தழுவினார்.

தமிழ்ப்பிராமணர் மீது வந்ததே கோபம், உடனே தமிழரல்லாத இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தார். அப்போது சென்னை மாநில கவர்னராக இருந்த 'வெல்லிங்டன் பிரபுவை' சந்தித்தார்;

தமிழரல்லாத இயக்கத்தை  பிராமணரல்லாத இயக்கம் என்கிற பெயருடன் தொடங்குவாயாக என்று கவர்னர் ஆசி வழங்கினார்.

இவரை சகமலையாள ஆதிக்க வர்க்கத்தினர் தூண்டினர்.

இரண்டாமவர் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராயர். இவர் தனிப்பட்ட முறையில் பண்பான மனிதராகவே பலருக்கும் தோன்றியவர்.

இவர் நீதிக்கட்சியான 'ஜஸ்டிஸ் கட்சி'யைத் தோற்றுவித்து அதன் தலைவராக தனது கட்சியின் கொள்கைப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த முதல் அறிக்கையே தமது கட்சிக்கு வித்தூன்றிய சர்.அலெக்சாண்டர் கார்ட்யூவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு,
இந்தியர்கள் ஒரேடியாக ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் கோரக்கூடாதென்று கூறியது.

அதேபோல 19 டெல்லி சட்டசபை உறுப்பினர் ஒப்பமிட்டு சுயாட்சி கோரியதையும் வன்மையாகக் கண்டித்தது.

தவிர நாட்டில் வாழும் பல்வேறு மக்களுக்கு இடையே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக்கூடியவர் ஆங்கிலேயரே என்று கொஞ்சமும் ஒளிவு மறைவின்றி அப்பட்டமான தமது ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியது.

ஆங்கிலேய ஆளுகையில் ஒட்டுமொத்த நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும்போதே தமது நலனில் மட்டும் அக்கறை கொண்ட புண்ணியவான்களின் பாசறைதான் திராவிடக் கூடாரம் என்பதை இதைவிடத் தெளிவாக கூற வேண்டியதில்லை.

திராவிடவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயரை எதிர்த்ததே கிடையாது.

எப்படி எதிர்ப்பர்? ஆங்கில வல்லாதிக்கத்தின் நீட்சி தானே திராவிட ஆதிக்கம்.

அப்படி இருந்தும் இந்தக் கட்சி 1936வரை ஆட்சியும் செலுத்தி தமிழர் எவரையும் ஆளவிடாமல் தாழ்த்தப்பட்டவரையும் மேலே வரவிடாமல் சாதனை மேல் சாதனை புரிந்ததை பார்க்கத்தானே போகிறோம்.

- தொடரும்...

உலக அரசியலை யார் நடத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்... உள்ளூர் அரசியலை விட்டு விடுங்கள்...


ஜனாதிபதி தேர்தலில் சசிகலா கூறும் நபருக்கே வாக்களிப்பேன் - கருணாஸ்...


விஞ்ஞான தமிழ் மெஞ்ஞானம்...


21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்...

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

- திருமந்திரம்-2008

விஞ்ஞான நோக்கம் - ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி என்ற சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான்=> குவார்க்=> க்ளுவான்=>!!!???) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள்(Higgs boson)” எது என்ற சோதனை நடந்துவருகின்றது.

செயல்படும் முறை - லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில்(வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று பிறகு வெளிப்படும் துகள்களில் அணுவின் அடிப்படத் துகள்களையே (ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்=>) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள்துகள்(Higgs boson) ஏதுனும் வெளிப்படுகின்றாதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மெய்ஞ்ஞான நோக்கம்...

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

-திருமந்திரம்-2008

விளக்கம் -

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்)
ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒருதுண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதுலும் கைகூடும்.

மேற்கண்ட இருநிகழ்வுகளிலும் நோக்கமும், செய்முறியும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர. ஏனெனில் நாம் இதை தற்பொழுது மதிப்பெண்களுக்காக படிக்கவில்லை.

ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்..

க(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்த்தியர். ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீககருத்துக்களை (உண்மையில் ஆன்மீகம் என்பது வேறு, கடவுள் என்பது வேறு, மதம் என்பது வேறு, மதபோதகர் என்பது வேறு,) பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிருப்பித்து எழுதினார என்றால் கோட்ப்பாட்டு இயற்பியலில்(Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதிஉயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. எ.கா அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொளகை(Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை(General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார்.

திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமள்ளாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை.

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்...

அண்ட, பிண்ட விசாரம்...


அண்டத்திற்குள் பிண்டம்...
பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே...

அணை கட்ட மணல் கொடுப்போம் ... சிலை வடிக்க மலையை கொடுப்போம்...


இந்தியாவில் சொரணையற்ற இனம் என்றால் அது தமிழினம் தான்..

வேற யாருமில்லை பாஜக அறிவித்துள்ள தலித் ஜனாதிபதி வேட்பாளர் தான்...


ஆனா இதுல 'கோலி' சமூக தலைவர்னு போட்ருக்கு... அதாவது முத்தரையர் சமூகம் மாதிரி...

மதம் மாறலாம் ஜாதி கூடவா மாற முடியும்...

ஒரே குழப்பமா இருக்குல .. பக்தாஸ் ஆன்சர் ப்ளீஸ்..

அணு உலை போராட்டமும், கள்ள நிதி குற்றச்சாட்டும்...


அரசின் எந்த ஒரு கொள்கை முடிவுகளையும்  நியாயமான காரணங்களை முன்வைத்து எதிர்த்தாலும், அதிகார வர்க்கத்தின் எந்த ஒரு குறையை  சுட்டிக்காட்டினாலும் சுட்டிக்காண்பிக்கும் நபர்களின் யோக்கியதை, அருகதை என்னவென்று இன்ஸ்டன்ட் ஆக, சுரண்டி பார்ப்பது இயல்பு.  அவ்வாறு பார்க்கும்போது குறை கூறியவர் தகுதியற்றவர் என்றால் அடுத்த வினாடியே  அதை அலட்சியப்படுத்தி செல்வதும் இயல்பு.

கூடங்குளம் அணு உலை போராட்டத்தை மிக முக்கிய  தளத்திற்கு எடுத்து சென்ற S P Udayakumaran  குழுவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடக்கம் முதலே வைக்கப்பட்டன. காங்கிரஸ் அரசாங்கத்தில் தொடங்கி பாஜக அரசாங்கம் வந்த பின்னரும் அதே குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

அதே சமயம்  அணு சக்தி எதிர்ப்பில் உதயகுமரன் குழுவினரும்  அதே உறுதியோடு நிற்கிறார்கள். போராட்ட குழுவினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது எழுந்தாலும்கூட பொது கொள்கையில் அவர்கள் ஒத்த கருத்தும் செயல்பாடும் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

இன்று வரை உதயகுமாரனையோ, அவரது குழுவினரையோ  அவ்வளவு எளிதாக  அலட்சியப்படுத்திவிட்டு செல்ல முடியவில்லை. ஆட்சியாளர்களால் கூட அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை முன்வைக்க முடியவில்லை.

இத்தகைய நிலையில் ஊடகங்கள் என்பவை உண்மை  நிலை என்ன என்பதை வெளிக்கொண்டுவர எண்ணினால் அது  போற்றுதலுக்கு உரியது.

அரசாங்கமும், அரசாங்கத்தின் ஆதரவாளர்களும்  உதயகுமாரனுக்கு எதிராக முன்வைத்த ஒரு குற்றச்சாட்டின் உறுதி தன்மையை ஆவணப்படுத்த ஸ்டிங் ஆபரேஷன் நடத்தப்படுகிறது என்றால், கூடங்குளம் அணு உலை மற்றும்  அணு சக்திக்கு எதிராக உதயகுமாரன் மற்றும் குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி உண்மை நிலையை கொண்டு வந்தால் அது ஒரு நியாயமான ஊடகமாக மதிக்கப்படும்.

இந்த சர்ச்சை மட்டுமல்ல எல்லா சர்ச்சைகளுக்கு இது பொருந்தும் என்றாலும் கூட அணு உலை என்கிற மிகப்பெரிய எளிதானவர்க்கு புரிந்திடாத ஒரு சர்ச்சை தொடர்பாக இதை செய்யலாம்.

கூடங்குளம் அணு உலை போராட்டம் உச்ச கட்டத்தை தொட்ட  காலகட்டத்தில்  புதிய தலைமுறை தொலைக்காட்சி இரண்டு தரப்பு செய்திகளையும் வெளியிட்டது. உதயகுமாரன் தரப்பு மட்டுமல்ல, அணுஉலை நிர்வாகம் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

கல்பாக்கம் அணு உலைக்கு நேரில் சென்று, அணு உலை பாதுகாப்பானது, மீன்களுக்கு எதிரானது அல்ல என்ற அவர்கள் தரப்பு வாதத்தையும், மும்பை சென்று அணு உலை கண்காட்சி ஒன்றை செய்தியாக்கி வணிகம் தரப்பு நிலைப்பாட்டையும் முன்வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அன்று, இந்த விவகாரத்தை சமூக, அறிவியல், வணிகம், பாதுகாப்பு, நாட்டு நலன் என்ற அனைத்து கோணங்களிலும் அணுகியே செய்திகளை வெளியிட்டது.

அதே சமயம், கூடங்குளம் மற்றும் அதை சுற்றி இருந்த மக்களின் குறிப்பாக பெண்கள், சிறுவர், சிறுமிகள் ஆகியோர் அணு உலை தொடர்பான கேள்விகளை முவைத்தது மட்டுமல்லாமல், அதற்காக முன்னின்று தொடர்ந்து போராடியதை களத்தில்  பல நாட்கள் இருந்து பார்த்த வகையில் அங்கே பெண்களே அந்த போராட்டத்தின் நாயகிகளாக இருந்தனர்.

தொடர் போராட்டம் எப்படி என்றால், மீனவர்கள் அதிகாலை கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்துவிட்டு மதியம் அதை விற்று  ஒரு பத்து சதவீத பணத்தை  போராட்டத்திற்கு செலவிற்கு  கொடுத்து விடுவார்கள்.

அந்த ஊரில் ஐந்து கடைகள் இருக்கிறது என்றால், காலை முதல் மதியம் வரை இரண்டு கடைகள் திறந்து இருக்கும், திறக்காத மூன்று கடைக்காரர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். மதியத்திற்கு மேல் இவர்கள் சென்று கடை திறப்பார்கள், காலை கடை திறந்தவர்கள் மதியம் போராட்டத்திற்கு வந்து விடுவார்கள்.

கூடங்குளத்தில் மாரியாத்தா கோவில் எதுவும் கடலோரத்தில் இல்லை, சர்ச் ஒன்றுதான் உள்ளது. அந்த சர்ச்சின் போதகர்கள் அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு இடம் கொடுத்து உதவினார்கள். மாரியாத்தா கோவில் இருந்து இருந்தால் அந்த கோவில் மைதானம் கூட போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

உதய குமாரனுக்கு கூடங்குளம் சொந்த ஊர் அல்ல, சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லையோ, நாகர்கோவிலோதான் அவரது சொந்த ஊர்.

அந்த போராட்டத்தின் மிக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான  Mugilan Swamiyathal கூடங்குளத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஈரோட்டை சேர்ந்தவர்.

இப்படி அணு சக்திக்கு எதிரான பல்வேறு செயற்பாட்டாளர்கள் அந்த ஊர் மக்களின் போராட்டத்தை வழி நடத்தினார்கள் என்பதை நேரில் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டின் பிரச்னைகளை பற்றிய  விழிப்புணர்வு பெற்ற கிராமங்களாகவே அவற்றை  உணர முடிந்தது.

அணு உலைகளை வழங்கும் நாடு ரஷ்யா; உதய குமாரன் சிறிது காலம் அமெரிக்காவில் இருந்தார். எனவே அமெரிக்காவின் மூளைப்படியே அவர் ரஷ்யாவை எதிர்க்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனால், அணு சக்தி பன்னாட்டு வணிகம் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும், அணு சக்தி வணிகத்தில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒருவர் உலை விற்றால், இன்னொருவர் எரிபொருள் விற்பார். ஆக, இவர்களுக்கு இடையே போட்டி எல்லாம் கிடையாது ஒரு பெருத்த  வணிகப் புரிதல் இருக்கும்.

எனவே, பணம் வாங்கிய வெளிநாட்டு ஏஜென்ட், சர்ச்சும் , கிறிஸ்தவர்களும் தான் பின்னணி என்பதெல்லாம் வலுவான குற்றச்சாட்டுகள் அல்ல. கள நிலவரம் பற்றி தெரியாதவர் முன்வைக்கும் வாதங்கள்.

அங்கே அனைத்து சாதியினரும் மதத்தினரும் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் இன்றுவரை அணு உலை நிர்வாகமோ, அரசோ பதில் அளிக்கவே முடியவில்லை, அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியவே இல்லை. இதுவே எதார்த்தம்.

யாரிடமோ, உள் நோக்கத்தோடு  பணம் வாங்கிக்கொண்டுதான் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்பது உண்மையானால் அதை நிரூபிக்க வேண்டியது மிக முக்கிய கடமை.

மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த  முடியாத நிலையை அந்த மக்களின் வெற்றியாயாக  நான் பார்க்கவில்லை, ஆண்ட, ஆளும்  அரசுகளின் தோல்வியாகவே  நான் பார்க்கிறேன்...

வைரம் பற்றிய நாம் அறியா சில தகவல்.....


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வச்(ஜ்)ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 அளவு (டிகிரி) சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கரிபொருள் (carbon) மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 பத்து லட்சம் (million) ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. வைரம் ஏன் இவ்வளவு பிரகாசிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை முழுமையான உள்பிரதிபலிப்பு (Internal Reflection TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர்.

அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் பிரகாசிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது. வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர்.

ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது. ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம்.

அதாவது 5 காரட் 1 கிராம் எடை. சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ? ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட். நீலமான யா(ஜா)கர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் யாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு நீலமான யாகர் (Blue Jager) என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை. வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 பார எடை அலகு (ton 35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது. இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது. பெல்சி(ஜி)யம் வெட்டு என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்சியம் நாட்டை சேர்ந்த லோடெவிச் (ஜ்)க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக பிரகாசிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்சியம் கட்டிங். வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது.

இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை (Hardness) என்கிறோம். வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ? வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பழுப்பு நிற (brown), சாம்பல் நிறம் உடைய(gray) பச்சை, செம்மஞ்சள் நிறமான (orange), இளஞ்சிவப்பு (pink), நீலம், வெளிர்பச்சை, ஊதா வர்ணம் (violet) வர்ணங்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது. இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் இலண்டன் கோபரம் (Tower of London) என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு விழா (Golden Jubilee) தான் மிகப்பெரியது இதன் எடை 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது...

கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல்...


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது...

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது..

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது..

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது..

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...