20/11/2017

ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?


ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா..

ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க..

இழிவு நிலையை பேசும் போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க..

அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க..

தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே...

அரசு பள்ளி வளாகத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்...


குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி பகுதியில் அரசு மேல்நிலைபள்ளியின் வளாகத்தை ஆக்கிரமித்து பல கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என 30, க்கும் மேற்ப்பட்ட ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு அதனை அகற்ற முன் வராமல் இருந்தனர் இது குறித்து பள்ளி நிர்வாகம் பல முறை மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற வாரம் வந்திருந்த ஆட்சியர் அப்பகுதியை ஆய்வு செய்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மை செய்ய உத்திரவிட்டதன் அடிப்படையில் இன்று வேலூர் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் ஜே.சி.பி.இயந்திரத்தின் மூலம் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சம்பவ இடத்திள் அசம்பாவிதம் ஏற்படாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்...

மனுதர்மம் ( சாதி ) பார்ப்பனர் படைத்ததா?


பிராமணிய கொடுநெரிகளைச் சட்ட வடிவமாக்கிய 'மனு நூல்' அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து பெரியார் எனும் ஈ.வே.ரா முன்னோர்கள் (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்...

மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது..

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த...

ஆவத்தம்பா சூத்திரம்,
போதாயன சூத்திரம்,
நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...

இதில் நகைச்சுவை என்னவென்றால் சாதியை உருவாக்கிய திராவிடனே...

சாதியை ஒழிக்க போராடுவதைப் போல் நடித்து நம்மை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்...

அதை தமிழன் நம்பி ஏமாந்துக் கொண்டிருக்கிறான்...

அமெரிக்க வேலையைத் துறந்து நீரில் கரையும்,எளிதில் மக்கும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளைஞர்...


மண்வளத்தைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எளிதில் மக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த சிபி.

வாகனப் பெருக்கத்தால் ஒருபுறம் காற்று மாசுபட்டு வருகிறதென்றால், மக்காத பாலிதீன் பைகளால் நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது. நீர்நிலைகளில் தேங்கியுள்ள பாலிதீன் பைகளால் வெள்ளப் பேரழிவுகளை சந்தித்த வரலாறும் நமக்கு உள்ளது.

நம் நாடு என்று மட்டும் இல்லை உலகளவில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக, இந்த பாலிதீன் எனும் மக்காத பிளாஸ்டிக் பைகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. காலம் தாழ்த்தி விழித்துக் கொண்டாலும், ஒவ்வொரு நாடும் தங்களது மண்வளத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்திலும் கூட 40 மைக்ரான்ஸ்க்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பைகளுக்கே தடை அமலில் உள்ளது.  ஆனாலும், மக்களிடம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பது பெரும் சவாலாகவே  இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தான், மூன்றே மாதங்களில் மக்கி விடும் வகையிலான பாலிதீன் பைகைகளைத் தயாரித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார் கோவையைச் சேர்ந்த இளைஞர் சிபி.

ரிஜெனோ நிறுவனர் சிபி
மக்காச்சோளக் கழிவு உள்ளிட்ட சில இயற்கையான காய்கறிக் கழிவுகளுடன் பேப்பர் கலந்து இந்தப் பைகள் தயாரிக்கப்படுவதால், இவை மூன்றே மாதங்களில் மக்கி விடும். இதனால் மண்ணிற்கு எந்தப் பாதிப்பும் வராது, என்கிறார் சிபி.

அமெரிக்காவில் நிதி தொடர்பான படிப்பை முடித்த சிபிக்கு, அங்கேயே ஆட்டோ பாத் கம்பெனி ஒன்றில் கை நிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது வேலையை ராஜினாமா செய்த அவர், தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

தனது தொழில் வெறும் பணம் சம்பாதிப்பதாக மட்டும் இல்லாமல், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினார் சிபி. அதன்பலனாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ’ரீஜெனோ’ (Regeno) என்ற நிறுவனத்தை  தொடங்கி, காய்கறி ஸ்டார்ச்களில் இருந்து எளிதில் மக்கும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கத் தொடங்கினார்.

தற்போது சந்தையில் உள்ள பாலிதீன் பைகளை விட இவற்றைத் தயாரிக்க செலவு அதிகம் ஆவதாக கூறும் சிபியிடம் தற்போது 15 பேர் வேலை பார்த்து வருகின்றனர். சிறிய அளவில் ஆரம்பித்துள்ள இந்தத் தொழிலை விரைவில் விரிவுப் படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் சிபி. மேலும்,

நாங்கள் தயாரிக்கும் இந்த எளிதில் மக்கும் பாலீதின் பைகள் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. இவற்றை தீயிட்டு எரித்தால் சாம்பலாகும், சுடுநீரில் கரைத்தால் எளிதில் கரைந்து போகும். எதிர்பாராதவிதமாக கால்நடைகள் எங்கள் பைகளைச் சாப்பிட்டாலும், இவை இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் அவற்றிற்கு எந்த உடல்நலப் பாதிப்பும் ஏற்படாது, என்று சிபி நம்பிக்கையுடன்  கூறுகிறார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்தப் பைகள் கூறப்பட்டாலும், தயாரிப்புச் செலவு அதிகமாக இருப்பதால்  இவற்றின் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இவற்றின் விலை நிச்சயம் குறையும் என்கிறது ரீஜெனோ.

கோவை மாநகராட்சியுடன் இணைந்து தங்களது பைகளை மக்களுக்கு ரீஜெனோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தப் பைகள் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கே இதன் அறிமுகம் உள்ளது.

தென்னிந்தியாவில் பெங்களூருவிற்குப் பிறகு இந்தப் பைகளை அறிமுகப் படுத்தும் முதல்நகரம் கோவையே ஆகும்.

விரைவில் ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பித்து, இந்தப் பைகளின் விற்பனையை விரிவுப் படுத்த  திட்டமிட்டுள்ளதாக சிபி தெரிவித்தார்.

அதன் மூலம் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் சில்லறை விலையில் இந்தப் பைகளை குறைந்த விலையில் எளிதாக பெற முடியும் என்கிறார் சமூக அக்கறைக் கொண்ட தொழில் முனைவரான சிபி. இவரின் வலைதளம் Regeno...

தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் சுடவில்லை; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தே எனது கருத்தும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி...


இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம்...


தெரியாதவர்களுக்காக இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன்..

உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள் தான் இலுமினாட்டிகள்..

உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில்..

எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதை விட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம்..

இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்..

எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்த இலுமினாட்டிகள்..

சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம்..

இவர்கள் வரலாறு பல நூற்றாண்டு களைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப் போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள் தான்..

இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?

New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆள வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்..

அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார்கள் என்றே சொல்லலாம்..

இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்வது இக்கட்டுரையைப் புரிந்துகொள்ள உதவும்...

இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள்..

பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை..

3,6,7,9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள்...

சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள்..

அது முழுக்க முழுக்க எண்களின், வான சாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும்..

இவர்கள் தாங்கள் செய்யப் போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல..

பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும்..

அப்படி முன்னரே கண்டு பிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது..

உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள் தானாம்) சம்பவம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லி விட்டார்களாம்..

அது மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ் பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப் போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?

இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ள மாட்டார்கள்..

இது ஒரு இரகசியக் குழு, இரகசியம் தான் இவர்கள் பலம்..

இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை..

உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக் கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள்..

அவற்றை decode செய்து கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல..

இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள்.

அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது.

ஆனால் இது கொஞ்சம் ஓவராகவே ஆகிவிட்டது எனவும் சொல்லலாம், கொசு கடித்தால் கூட அதையும் இல்லுமினாட்டி சதி என்று அலறும் பைத்தியங்களும் இன்று பெருகிவிட்டார்கள்..

மலேசிய விமானம் MH370 தொலைந்த அதே நேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர்..

ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை..

இலுமினாட்டிகள் தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள்..

அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும்.
இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி (Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.

உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை (Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.

மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள்..

இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்...

கொலை செய்து விடுவதாக மிரட்டிய மணல் கொள்ளையன் மீது காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார்...


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பட்டு  கிராமத்தில் மணல் கொள்ளையர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனால் கிராமமே அழியும் சூழ்நிலையில் உள்ளதாகவும் அதன் காரணமாக மணல் கொள்ளையர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்களை லாரி ஏற்றி கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டியன் மீது குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் பட்டு கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் புகார்.

மணல் கொள்ளையர்களின் அட்டகாசத்தாலும்,  அதிகாரிகளின் அலட்சியத்தாலும் குடியாத்தம் பாலாற்றங்கறை ஓரம் அமைந்திருக்கும் பட்டு கிராமமே காணாமல் போகும் அளவிற்கு  மணல் கொள்ளை நடந்து வருவதாகவும் இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வருகின்றனர்.

வருவாய்துறையில் புகார் செய்தால் மணல் கொள்ளையில் ஈடுபடும் சமுக விரோதிகள் புகார் செய்தவர்களின் வீடு தேடி வந்து மணல் அள்ளும் லாரியில் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நடந்துவிட்டது என கூறி அபராதம் கட்டிவிட்டு தப்பிசென்று விடுவேன் என முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் பாண்டியன் பகிரங்கமாக மிரட்டுவதாகவும் இதனால் பாதுகாப்பு நலன் கருதியும் கொலை மிரட்டல் விடுத்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்று அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 20, க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்  புகாரை பெற்ற கிராமிய காவல் ஆய்வாளர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்...

தமிழக மீனவர்களே உஷார்...


சென்னை அன்ணாசாலையில் டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழம் வரை பள்ளம் இருந்ததால் பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...


பள்ளத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்...

இலுமினாட்டியும் - இந்தியாவின் 1000, 500 ரூபா நோட்டு தடையும்...


2020 இந்தியா வல்லரசு? பிச்சைகார படத்தின் அரசியல்...

2020  இந்தியா இல்லுமினாட்டிகளின் கையில்?

உலகை பொருளாதாரத்தின் மூலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக வங்கி முதலாளிகள் தான் இந்த இல்லுமினாட்டிகள்...

2020 இந்தியா வல்லரசு..

முக்கியமான 13 குடும்பங்களிடம் தான் 90% உலக பொருளாதாரம் மொத்தமும் இருக்கிறது என்றால்  கொஞ்சம் நம்ப கஷ்டமாக தான் இருக்கும்..

ஆனால் உண்மை அது தான், காரணம் வங்கி முதலாளிகள் இவர்கள். பணத்தை அச்சிட்டு உலகுக்கே கடன் தருபவர்கள்..

இந்த இல்லுமினாடிகள் எதை செய்தாலும் அதை அவர்களின் திரைப்படங்கள், கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக சொல்வது வழக்கம்..

இவர்களின் கைக்கூலிகள் தான் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும்..

இவர்களை பகைத்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக புரூஸ்லீ, மைக்கேல் ஜேக்ஸன், அமேரிக்க முன்னாள் பிரதமர் ஜான் எப் கென்னடி.. என்று பட்டியல் நீளும்.

தமிழ்த் திரைத்துறை இதற்கு விதிவிளக்கல்ல..

தமிழ் படங்களிலும் இந்த இல்லுமினாட்டிகள் அவர்களின் திட்டத்தை அழகாக பதிவு செய்கிறார்கள்..

தமிழகத்தில் வெளியாகிய பிச்சைக்காரன், ஜில் ஜங் ஜக் படங்கள் எல்லாம் இவர்களின் தயாரிப்புகள் தான்..

இதில் பிச்சைக்காரன் படத்தில் லஞ்சத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிச்சுட்டா இந்திய வல்லரசாயிடும் என்று சொல்கிறார்கள்.

யாரும் லஞ்சம் வாங்கி, பணத்த பதுக்கமாட்டார்களாம்.  வேறுவழியின்றி எல்லாரும் பணத்தை வங்கியில போடுவார்களாம்.

பிறகு ஒரு முட்டாய் வாங்கனும்னா கூட பயோமெட்ரிக் கார்ட தேய்ச்சுதான் வாங்க வேண்டும்.

அதை இந்த வங்கிகள் கண்காணிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு தனி மனிதனையும் வங்கியோட நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.. லஞ்சம் ஒழிந்து விடுமாம்..

இந்த வங்கிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருக்கும்..

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதே இவர்களின் உண்மையான நோக்கம்.

இதை நிறைவேத்த Twenty – Twentyல் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஓயாமல்  ஊடகத்தில் பரப்பிக் கொண்டு  இருக்கிறார்கள்..

இதற்க்கு தான் கேஸ் சிலிண்டரின் விலையை ஏத்தி அதை மானியமாக வேணும்மென்றே  வங்கியில போட்டு விடுகிறார்கள்..

இதுக்குதான் கட்டாய வங்கிக் கணக்கை இலவசமா செய்து தருகிறார்கள்..

இதுக்கு தான் தெருத் தெருவாக ஊடுருவி மகளிர் சுயஉதவிக்குழு என்கிற  பெயரில் Bio-Metric கார்டை  கையில் தந்து கந்து வட்டி கொடுக்கிறார்கள்..

இவை எல்லாம் இவர்கள் முன்பே திட்டமிட்டு செய்யும் மாய சூழ்ச்சி..

மக்களுக்கான உண்மையான தலைவன் வரும் பொழுது லஞ்சம் தானே ஒழியும்..

இது இன்று பிரதான சிக்கலாக காட்டப்படுவதற்கு பின்னால் இந்த வங்கி முதலாளிகளே உள்ளார்கள்..

இந்த ஜில் ஜங் ஜக் படத்தில் 2020 இந்தியா எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டப்படுகிறது..

1000 ருபாய் 500 ரூபாய்கள் படத்தில் காட்டப்படும் காட்ச்சிகளில் புழக்கத்தில் இல்லை. ( தற்போது தடைச் செய்யப்பட்டு விட்டது)

வேண்டுமென்றே ஆர்.ஜே பாலாஜி நூறு ருபாய் கட்டை தூக்கி போடும் காட்சியை பதிவு செய்துள்ளார்கள்.

இது மறைமுகமாக இந்த இல்லுமினடிகள் நமக்கு சொல்லும் கருத்து..

2020 இந்தியாவில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்படும்..

இந்தியா இந்த உலக வங்கிகளுக்கு நிரந்தர அடிமையாகும்..

நாம் அனைவரும் நிரந்தர கூலிகளாக்கப் படுவோம்..

நல்லா 20-20 கிரிக்கெட் பாருங்க இளைங்கர்களே...

நாம் அனைவரும் சில ஆண்டுகளில் நாசமா போக போறோம்...

ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகள் மூலம் பணம் வசூல், மாவட்ட ஆட்சித்தலைவர் கவனம் செலுத்துவாரா?


அரக்கோணம் பதிவு மாவட்டத்திற்குட்பட்டு ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு  வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு இந்து திருமணப் பதிவுகள், சொத்து விற்பனை பதிவுகள், வீடு, விளை நிலம், மனை சொத்து பரிமாற்றங்கள் உள்ளிட்டவை பதிவு செய்ய வருபவர்களிடம் பத்திர செலவை விடவும் அதிக கமிஷன் தொகை கேட்டு நச்சரிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு...

நாகை to கும்பகோணம் : ஓடிக் கொண்டிருக்கும் போது பஸ் முன்னால் உருண்டு ஓடிய அரசு பஸ் டயர் , ட்ரைவரின் சாதுரியத்தால் உயிர் தப்பிய 40 பயணிகள்...


சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...


தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.

அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.

அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.

மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...

இன்றும் இந்த வந்தேறிகளின் ஆட்சித் தான் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது...

அதிமுகவினருக்கு துணை முதல்வர் மேல அப்படி என்ன கோவமோ...


செட்டிச்சி பாப்பாத்தி...


பாப்பாத்தி என்ற பட்டம் பறையர் பெண்களைத் தான் குறிக்கும் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார்...

அவருக்கு நட்புரீதியான என் பதில்..

தமிழர் மண்ணான பெங்களூரில் சொக்கப் பெருமாள் ஆலயம் தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது..

தமிழ் கல்வெட்டுகள் பல உள்ள இக்கோவிலில் 1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று உள்ளது..

இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம்  பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது..

(சான்று: epigraphica carnatica vol 9,
insc of banglore, no 10&13 )

பார்ப்பனர், பார்ப்பார், பார்ப்பாத்தி, பார்ப்பனத்தி போன்றவை சோழர்கள் காலத்தில்கூட ஒரு சாதியைக் குறிக்கவில்லை.

சங்ககால இலக்கியங்களில் இத்தகைய பெயர்கள் தொழிலைக் குறிக்கவே பயன்பட்டன..

சோழர் காலம் வரை அதுவே நடைமுறை..

அதாவது யார் வேண்டுமானாலும் பார்ப்பனர் ஆகலாம்..

தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலேயே பிராமணீயமும் சாதியமும் நடைமுறைப் படுத்தப்பட்டது...

படிப்படியாக உயர்ந்த எடப்பாடி...


பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்.

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் கட்சிகளும் ஊடகங்களும் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

இனி இதைப் பற்றிய ஆராய்ச்சியிலும் நாம் தான் ஆராய வேண்டும் போல...

இரத்த அழுத்தம்...


இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது.

உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக் குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது.

இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்...

டெல்லி பேரரசிற்கு முன்னால் நாங்கள் சாதாரண துரும்பு , அம்மா வீட்டில் ரைடு நடத்தி தொண்டர்களை எங்கள் பக்கம் வரவைத்துள்ளார்கள் - திவாகரன் பேட்டி...


உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்...


முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள்.

அதைப் போல ராஜயோகத்தில்,  யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள்.

நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.

அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி.

குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு.

குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார்.

மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி,
வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.

குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர்.

பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு.

அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம்.

அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள்.

இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான்.

கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.

இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர்களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.

மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்தி தான் சித்தி எனப்படும்.

மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை, அக்கினி குண்டலினி என்பர்.

அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள்.

அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள்.

முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும்,

மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி
மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில்
உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.

யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.

அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போது தான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள்.

இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது.

அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.

முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம்.

ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை.

ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது.

விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம்.

இவையெல்லாம் கூடுமானால் மெல்ல
மெல்லத் திறக்கும்...

வருமான வரி சோதனை நடத்தி போயஸ் தோட்ட இல்லத்திற்கு களங்கம் ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை...


நெஞ்செரிச்சல் பிரச்சினையா?



நார்சத்து உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்...

சிலர் நெஞ்செரிச்சல் அல்லது எதுக்களிப்பு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். வயிற்றுப் பகுதி அமிலங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஜீரணக் கோளாறு உண்டாகிறது. இது மாதிரி நிலையில் அமிலங்களுடன் உணவுக்குழாய் நெருங்கி வரும் போது எதுக்களிப்பு சிக்கல் உண்டாகிறது. அதன்பிறகு எது சாப்பிட்டாலும் மேலே வருவது போலவும், கூடவே நெஞ்செரிச்சலும் இருக்கும். இது மாதிரி நிலையில் நார்சத்து நன்றாக கைகொடுக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். (ஏற்கனவே பெருங்குடல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரழிவு ஆகியவற்றை தடுப்பதில் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.) கூடவே கொழுப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்த போது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருந்தது. உடல் பருமனும் எதுக்களிப்பை தூண்டி விடும் மற்றொரு சிக்கலான காரணி தான். இந்நிலையில் உணவில் இடம்பெறும் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைத்து, நார்ச்சத்தை அதிகப்படுத்தும் பட்சத்தில் எதுக்களிப்பு அறிகுறிகள் கணிசமாக குறைவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் நார்சத்து அதிகமாக காணப்படுகிறது.

எதுக்களிப்பு பிரச்சினையை கண்டு கொள்ளாமல் சும்மா இருந்தால், அல்சர், உணவுக் குழாய் பாதையில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படும். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் உணவுக்குழாய் பாதையில் புற்றுநோய் வரும் ஆபத்தும் உள்ளது. ஆகையால் நெஞ்செரிச்சல் வியாதிக்காரர்கள் உணவில் கொழுப்பை குறைத்து, நார்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்...

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்...


ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 16...


உண்மைகள் உறங்குவதில்லை என்கிற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்க தரிசனம் 16-ம் பகுதியாகும்.

இந்த 16-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் முதலாவதாக காண இருப்பது என்னவெனில் இந்தியா - சீனா உறவுக்குள் பெரும் இடைவெளி தற்போது ஏற்பட உள்ளதாகவும், வரும் மாதத்தில் ஒரு சிறிய அளவில் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும், அச்சமயத்தில் சீனா தன் கோபத்தை திபெத் மீது காட்டும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேச மக்களிடையே தற்போது ஒரு இனம் புரியாத பதற்றமும், நடுக்கமும், உயிர் பயமும் ஏற்படும் என்றும், அது இயற்கை சார்ந்த பேரிடுகளாக இருக்கும் என்றும், வடதேசம் முழுவதும் இயற்கையின் கோர தாண்டவத்தை மக்கள் வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை காண்பார்கள் என்று 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

வங்களாவிரிகுடாவில் ஒரு மாபெரும் புயல் தோன்றி நாட்டு மக்களை அச்சுறுத்த இருப்பதாகவும், அது வரும் அக்டோபர் 2017-ல் இருக்கும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியை இங்கே பதிவு செய்கிறது.

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தின் உண்மைகள் இனி மக்கள் மன்றங்களுக்கு வெளிச்சத்திற்கு வர உள்ளதாகவும், அதன் விடிவெள்ளியாக வரும் டிசம்பர் மாதம் அமைய உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

மத்திய அரசில் ஒரு குழப்பமான சூழ்நிலை வரும் மாதத்தில் திடீரென்று ஏற்பட உள்ளதாகவும், இது ஒரு திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாக அமைய உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் இங்கு அரசியல் சார்ந்த ஒரு முக்கிய நிகழ்வை மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றது.


மூன்று அணிகளை கொண்ட தமிழக அரசியல் களத்தில் பல தீர்க்க முடியாத சிக்கல்கள் உருவாகும் என்றும், அச்சமயத்தில் நடிகர் ஒருவரின் பிரவேசம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும், அந்த நடிகரின் தனிப்பட்ட பெரும்பான்மையே அதற்கு வித்தாக அமையும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

மாநிலம் தழுவிய மாணவர் போராட்டம் ஒன்று ஒரு மாநிலத்தின் தலைநகரில் நடக்க உள்ளதாகவும், அதனை திட்டமிட்டபடி மாணவர் அமைப்புகள் நடத்த இருப்பதாகவும், இதன் பின்னணியில் மக்கள் மன்ற அமைப்புகளும், சில நடிகர்களும் இருப்பார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி இங்கே சுட்டிக் காட்டுகின்றது.

தென் பொதிகை மலை என்கிற அடைமொழிக் கொண்ட ஒரு மலையிலிருந்து ஒரு சாது இந்த உலகிற்கு ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இணையதளம் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியிடுவார் என்றும், அச்சமயத்தில் பல்லவ ராஜ்யத்தை சேர்ந்த ஒரு அரசனின் கல்வெட்டு ஒன்று தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் என்றும், அந்த சாது கூறிய விஷயமும், அந்த கல்வெட்டு செய்தியும் ஒன்றாக இருக்கும் என்ற செய்திக்குறிப்பை 16-ம் தீர்க்க தரிசனம் இங்கே மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றது.

தமிழக கோவில்களில் உளவாரப் பணிகளில் ஈடுபடும் சிவபக்தர்களுக்கு ஒரு இறை சார்ந்த அற்புத நிகழ்வை காணும் பாக்கியத்தை பெற உள்ளனர் என்றும், அது தென்தமிழகத்தின் சிவாலாயம் ஒன்றில் தற்போது நடக்க இருப்பதாகவும், “திருவலஞ்சுழி“ என்ற அடைமொழிக் கொண்ட திருத்தலத்தில் இந்த அற்புதம் தற்போது நடைபெற உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கே பதிவுச் செய்கிறது.

தமிழக வரலாற்றில் தெய்வீக நிகழ்வுகளும், அழிவுச் சம்பவங்களும் 50 %   +  50 % என்ற அளவில் இனி நடக்க இருப்பதாகவும், மக்கள் மனதில் பக்தி எனும் வேர் இனி ஆழமாக ஊன்றக்கூடிய பல்வேறு சம்பவங்கள் இனி உடனே நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


சித்தர்களில் ஒருவர், வரும்முன் சம்பவங்களை தனது ஞான நூலான “காலக்கண்ணாடி“ என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள 18 தொகுப்புகளில் 3 மூன்று தொகுப்புகளில் இறைவனின் “உண்மைத் தூதுவன்“ யார்? என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளார் என்றும், இது உண்மையான கூற்றாக அமையும்படி தமிழகத்தின் “ஒரு மாவட்டத்தில்“ ஒரு சிறப்புச் செய்தியை ஒரு ஆன்மீக அமைப்பு உடனே செய்தி ஊடகங்களில் வெளியிட உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் அரிய ஒரு முக்கியச் செய்தியை இங்கே பதிவு செய்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் பல கொடூரச் செயல்கள் அரங்கேறிட இருப்பதாகவும், இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இந்த நாட்டின் மீது உடனே நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

சங்கம் வளர்த்த மதுரையில் பல வினோத சப்தங்களை மக்கள் இரவு நேரங்களில் வானத்திலிருந்து கேட்க உள்ளார்கள் என்றும், அச்சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் உள்ள 37-ம் தீர்க்க தரிசனம் மற்றும் 47ம் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிட்டுள்ள சில குறிப்புகள் உடனே நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் இங்கே நமக்கு சில விஷயங்களை நினைவூட்டுகின்றது.

பசிபிக் பெருங்கடலில் ஒரு மாபெரும் புவி அதிர்வினால் சுனாமி அலைகள் உருவாகி உலகின் 2 பகுதிகளில் மக்களை  பழி கொள்ளும் மகா சோகச் சம்பவங்கள் நடக்க இருப்பதாகவும் அது ஒரு பௌர்ணமி அன்று நடைபெறும் என்றும், இந்திய நேரப்படி விடியற்காலை 3.45க்கு இச்சம்பவம் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


3-ம் உலகப் போருக்கான ஆயத்தங்களும், போர் ஒத்திகைகளும்  நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளதாகவும், அதனை அமைதிப்படுத்தும் நிகழ்வுகளை ஐ.நா மேற்க்கொள்ளும் என்றும், இருப்பினும் சிறிதளவு பாதிப்புகளை மாபெரும் இரு நாடுகள் சந்திக்க உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய போர்க்குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இறைமகன் இயேசுவின் வருகைக்கான ஒரு முக்கிய செய்திக்குறிப்பை இந்திய தேசத்தின் வடமாநிலத்தில் உள்ள ஒரு மசூதியிலிருந்து ஒரு முஸ்லீம் அமைப்பினர் வெளியிட்டு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்த உள்ளனர் என்றும், இது உடனே நடக்க கூடிய ஒரு நிகழ்வு என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஆன்மீகக் குடியிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பை அந்த குடிலின் நிர்வாகத்தினர் அறிவிக்க உள்ளனர் என்றும், அந்த அறிவிப்பை தொடர்ந்து சதுரகிரியில் உள்ள ஒரு ஆன்மீக அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை செய்தி ஊடகங்களில் வெளியிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் அந்த மயிலாடுதுறையில் உள்ள ஆன்மீகக் குடிலில் சித்தர் ஒருவரின் தெய்வீக அற்புத நிகழ்வு ஒன்று மக்கள் மத்தியில் அரங்கேற்றம் ஆகி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், அதன்பின் அந்த அமைப்பு தமிழகத்தின் ஒரு பகுதியை தேடி வருவார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

கன்னியாகுமரியில் அகத்திய முனிவரின் அற்புத நிகழ்வு ஒன்று வரும் மாதத்தில் ஒரு மாநாட்டில் நிகழ இருப்பதாகவும், அந்த மாநாட்டில் இறைவன் வருகைக்கான ஒரு முக்கிய செய்திக் குறிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

வரும் சூரிய கிரகணத்திற்கு பின் இந்த பூமியில் பல திடுக்கிடும் மாற்றங்களும், நிகழ்வுகளும் நடக்க உள்ளதாகவும், உலக வரலாற்றில் அதன்பின் மிகப்பெரிய தொடர் நிகழ்வுகள் ஒரே மாதிரியானவைகளாக நடக்க இருப்பதாகவும், அந்த நிகழ்வு ஆன்மீக அமைப்பை நிர்வகிக்கும் தலைமை நிர்வாகிகளுக்கு போதாத காலமாக இருக்கப் போவதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத நிகழ்வு ஒன்று வடமாநிலத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு விஷ்ணு ஆலயத்தில் நடக்க உள்ளதாகவும், அந்த அதிசய நிகழ்வு நடந்தபின் அந்த ஆலயம் பெரும் மழைநீரால் முழுமையாக அழிக்கப் பெறும் என்றும், அன்றிலிருந்து தென்தமிழகம், வடதமிழகம், வடமாநிலத்தின் தென்பகுதி, கிழக்கு பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கால் பல அழிவுச் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், இது “கல்கி பகவானின்“ நியாயத்தீர்ப்புகள் துவங்கிவிட்டதற்கான முக்கிய அறிகுறிகள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவுச் செய்கிறது.

திருப்பதி காளகஸ்தியை மக்கள நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றும், இனி அங்கு பல திடுக்கிடும் கோரச் சம்பவங்கள் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


தமிழகத்தில் உள்ள ஒரு ஆன்மீக குடிலை நோக்கி உலக மக்கள் ஓடி வருவார்கள் என்றும், அந்த அமைப்பே இறைவனின் வருகையை ஆணித்தரமாக வெளியிடுவார்கள் என்றும், இயேசு, புத்தன் இருவரின் வருகையையும் முழுமையாக வெளியிடுவார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு செய்திக் குறிப்பை இங்கே வெளியிடுகிறது.

ஈரோடு, உதகை, தாம்பரம், அரியலூர், கரூர், சேலம், அயோத்தி, விஷாகப்பட்டணம், ஐதராபாத், மங்களுர் போன்ற இடங்களில் வினோதச் சம்பவங்கள் ஒரே மாதிரியாக நடக்க இருப்பதாகவும், இது விஞ்ஞானத்திற்கு புரியாத ஒரு புதிராக இருக்கும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே தருகின்றது.

தமிழகத்தில் இனி பூமி அதிர்வை பல நேரங்களில் மக்கள் காண்பார்கள் என்றும், இதன் நடுக்கம் பல அதிர்வு நிலைகளில் இருக்கும் என்றும், ஒரு ஞாயிறு அன்று ஏற்படும் நில அதிர்வே பெரிய அளவில் இருக்கும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

சேலம் கோட்டை மாரியின் அற்புதங்களை இனி சேலத்து மக்கள் காண உள்ளார்கள் என்றும், இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று சேலத்தில் பல இடங்களில் பள்ளங்கள் தோன்றி மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் பல நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

இமயத்தின் உயரம் சரியும் நிகழ்வு வரும் 2018ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் அதே சமயத்தில் தென் தமிழகத்தின் கடல் மட்டம் ஒன்றில் நிலப்பரப்பு சிறிது, சிறிதாக வெளிவரும் அதிசய நிகழ்வும் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

உலகத்தில் இனி அதிசயங்கள் நடக்கும் நாடாக இந்திய தேசமும், இறை அதிசயங்கள் நிகழும் மாநிலமாக தமிழகமும், இறைவனின் மகா அற்புதம் நிகழும் மாவட்டமாக சேலமும் அமைய உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

சென்னையின் கடல்பரப்பு அதிகமாகும் சமயத்தில் தமிழகத்தில் செயல்பாடுகள் வேறு ஒரு மாவட்டத்திற்கு மாற்றப்படும் சூழல் 2018-ம் ஆண்டிலிருந்து திட்டமிடும் என்றும், அது உண்மையிலேயே நடக்க்கூடிய ஒரு நிகழ்வாக நிச்சயம் அமையும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இணையதளங்கள் முடங்கும் கறுப்பு தின நாள் வர உள்ளதாகவும், 8 விமானங்கள் அப்பொழுது உலகில் விபத்துக்குள்ளாகும் என்றும், 2 சேட்டிலைட்டுகள் செயல் இழக்கும் பெரும் சம்பவங்களும் வரும் மாதத்தில் ஒரு சில நாட்களில் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் இங்கே ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி குறிப்பிடுகிறது.


வான்மணடல பால்வெளியில் ஒரு அரிய காட்சியை  NASA என்ற அமைப்பு பதிவுச் செய்து மக்களுக்கு வெளிப்படுத்த இருப்பதாகவும், அன்று முதல் மக்கள் மனதில் பல கேள்விகள் எழுந்து விடை தெரியாமல் தத்தளிக்கும் நிகழ்வுகள் பல நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இங்கே வெளியிடப்படும் ஒவ்வொரு தீர்க்க தரிசனக் குறிப்புகள் ஏற்கனவே எழுதப்பட்ட எந்த ஒரு நூலிருந்து தொகுத்து வழங்கப்பட்டவைகள் அல்ல, இவைகள் யாவும் இக்காலக் கட்டத்தில் எமக்கு இறைவனால் அறிவுறுத்தப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்புகளே ஆகும், இவைகளை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் உங்களையே சாரும். நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வாருங்கள், இனி உங்களுக்கு உண்மைகள் உறங்காமல் அதிவிரைவாக நடந்து வருவதைக் காணலாம். அதுவரை உங்களைப் போல நானும் காத்து இருப்பேன்..

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...