20/11/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 16...


உண்மைகள் உறங்குவதில்லை என்கிற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்க தரிசனம் 16-ம் பகுதியாகும்.

இந்த 16-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் முதலாவதாக காண இருப்பது என்னவெனில் இந்தியா - சீனா உறவுக்குள் பெரும் இடைவெளி தற்போது ஏற்பட உள்ளதாகவும், வரும் மாதத்தில் ஒரு சிறிய அளவில் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும், அச்சமயத்தில் சீனா தன் கோபத்தை திபெத் மீது காட்டும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேச மக்களிடையே தற்போது ஒரு இனம் புரியாத பதற்றமும், நடுக்கமும், உயிர் பயமும் ஏற்படும் என்றும், அது இயற்கை சார்ந்த பேரிடுகளாக இருக்கும் என்றும், வடதேசம் முழுவதும் இயற்கையின் கோர தாண்டவத்தை மக்கள் வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை காண்பார்கள் என்று 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

வங்களாவிரிகுடாவில் ஒரு மாபெரும் புயல் தோன்றி நாட்டு மக்களை அச்சுறுத்த இருப்பதாகவும், அது வரும் அக்டோபர் 2017-ல் இருக்கும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியை இங்கே பதிவு செய்கிறது.

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தின் உண்மைகள் இனி மக்கள் மன்றங்களுக்கு வெளிச்சத்திற்கு வர உள்ளதாகவும், அதன் விடிவெள்ளியாக வரும் டிசம்பர் மாதம் அமைய உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

மத்திய அரசில் ஒரு குழப்பமான சூழ்நிலை வரும் மாதத்தில் திடீரென்று ஏற்பட உள்ளதாகவும், இது ஒரு திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாக அமைய உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் இங்கு அரசியல் சார்ந்த ஒரு முக்கிய நிகழ்வை மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றது.


மூன்று அணிகளை கொண்ட தமிழக அரசியல் களத்தில் பல தீர்க்க முடியாத சிக்கல்கள் உருவாகும் என்றும், அச்சமயத்தில் நடிகர் ஒருவரின் பிரவேசம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும், அந்த நடிகரின் தனிப்பட்ட பெரும்பான்மையே அதற்கு வித்தாக அமையும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

மாநிலம் தழுவிய மாணவர் போராட்டம் ஒன்று ஒரு மாநிலத்தின் தலைநகரில் நடக்க உள்ளதாகவும், அதனை திட்டமிட்டபடி மாணவர் அமைப்புகள் நடத்த இருப்பதாகவும், இதன் பின்னணியில் மக்கள் மன்ற அமைப்புகளும், சில நடிகர்களும் இருப்பார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி இங்கே சுட்டிக் காட்டுகின்றது.

தென் பொதிகை மலை என்கிற அடைமொழிக் கொண்ட ஒரு மலையிலிருந்து ஒரு சாது இந்த உலகிற்கு ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இணையதளம் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியிடுவார் என்றும், அச்சமயத்தில் பல்லவ ராஜ்யத்தை சேர்ந்த ஒரு அரசனின் கல்வெட்டு ஒன்று தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் என்றும், அந்த சாது கூறிய விஷயமும், அந்த கல்வெட்டு செய்தியும் ஒன்றாக இருக்கும் என்ற செய்திக்குறிப்பை 16-ம் தீர்க்க தரிசனம் இங்கே மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றது.

தமிழக கோவில்களில் உளவாரப் பணிகளில் ஈடுபடும் சிவபக்தர்களுக்கு ஒரு இறை சார்ந்த அற்புத நிகழ்வை காணும் பாக்கியத்தை பெற உள்ளனர் என்றும், அது தென்தமிழகத்தின் சிவாலாயம் ஒன்றில் தற்போது நடக்க இருப்பதாகவும், “திருவலஞ்சுழி“ என்ற அடைமொழிக் கொண்ட திருத்தலத்தில் இந்த அற்புதம் தற்போது நடைபெற உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கே பதிவுச் செய்கிறது.

தமிழக வரலாற்றில் தெய்வீக நிகழ்வுகளும், அழிவுச் சம்பவங்களும் 50 %   +  50 % என்ற அளவில் இனி நடக்க இருப்பதாகவும், மக்கள் மனதில் பக்தி எனும் வேர் இனி ஆழமாக ஊன்றக்கூடிய பல்வேறு சம்பவங்கள் இனி உடனே நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


சித்தர்களில் ஒருவர், வரும்முன் சம்பவங்களை தனது ஞான நூலான “காலக்கண்ணாடி“ என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள 18 தொகுப்புகளில் 3 மூன்று தொகுப்புகளில் இறைவனின் “உண்மைத் தூதுவன்“ யார்? என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளார் என்றும், இது உண்மையான கூற்றாக அமையும்படி தமிழகத்தின் “ஒரு மாவட்டத்தில்“ ஒரு சிறப்புச் செய்தியை ஒரு ஆன்மீக அமைப்பு உடனே செய்தி ஊடகங்களில் வெளியிட உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் அரிய ஒரு முக்கியச் செய்தியை இங்கே பதிவு செய்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் பல கொடூரச் செயல்கள் அரங்கேறிட இருப்பதாகவும், இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இந்த நாட்டின் மீது உடனே நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

சங்கம் வளர்த்த மதுரையில் பல வினோத சப்தங்களை மக்கள் இரவு நேரங்களில் வானத்திலிருந்து கேட்க உள்ளார்கள் என்றும், அச்சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் உள்ள 37-ம் தீர்க்க தரிசனம் மற்றும் 47ம் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிட்டுள்ள சில குறிப்புகள் உடனே நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் இங்கே நமக்கு சில விஷயங்களை நினைவூட்டுகின்றது.

பசிபிக் பெருங்கடலில் ஒரு மாபெரும் புவி அதிர்வினால் சுனாமி அலைகள் உருவாகி உலகின் 2 பகுதிகளில் மக்களை  பழி கொள்ளும் மகா சோகச் சம்பவங்கள் நடக்க இருப்பதாகவும் அது ஒரு பௌர்ணமி அன்று நடைபெறும் என்றும், இந்திய நேரப்படி விடியற்காலை 3.45க்கு இச்சம்பவம் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


3-ம் உலகப் போருக்கான ஆயத்தங்களும், போர் ஒத்திகைகளும்  நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளதாகவும், அதனை அமைதிப்படுத்தும் நிகழ்வுகளை ஐ.நா மேற்க்கொள்ளும் என்றும், இருப்பினும் சிறிதளவு பாதிப்புகளை மாபெரும் இரு நாடுகள் சந்திக்க உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய போர்க்குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இறைமகன் இயேசுவின் வருகைக்கான ஒரு முக்கிய செய்திக்குறிப்பை இந்திய தேசத்தின் வடமாநிலத்தில் உள்ள ஒரு மசூதியிலிருந்து ஒரு முஸ்லீம் அமைப்பினர் வெளியிட்டு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்த உள்ளனர் என்றும், இது உடனே நடக்க கூடிய ஒரு நிகழ்வு என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஆன்மீகக் குடியிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பை அந்த குடிலின் நிர்வாகத்தினர் அறிவிக்க உள்ளனர் என்றும், அந்த அறிவிப்பை தொடர்ந்து சதுரகிரியில் உள்ள ஒரு ஆன்மீக அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை செய்தி ஊடகங்களில் வெளியிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் அந்த மயிலாடுதுறையில் உள்ள ஆன்மீகக் குடிலில் சித்தர் ஒருவரின் தெய்வீக அற்புத நிகழ்வு ஒன்று மக்கள் மத்தியில் அரங்கேற்றம் ஆகி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், அதன்பின் அந்த அமைப்பு தமிழகத்தின் ஒரு பகுதியை தேடி வருவார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

கன்னியாகுமரியில் அகத்திய முனிவரின் அற்புத நிகழ்வு ஒன்று வரும் மாதத்தில் ஒரு மாநாட்டில் நிகழ இருப்பதாகவும், அந்த மாநாட்டில் இறைவன் வருகைக்கான ஒரு முக்கிய செய்திக் குறிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

வரும் சூரிய கிரகணத்திற்கு பின் இந்த பூமியில் பல திடுக்கிடும் மாற்றங்களும், நிகழ்வுகளும் நடக்க உள்ளதாகவும், உலக வரலாற்றில் அதன்பின் மிகப்பெரிய தொடர் நிகழ்வுகள் ஒரே மாதிரியானவைகளாக நடக்க இருப்பதாகவும், அந்த நிகழ்வு ஆன்மீக அமைப்பை நிர்வகிக்கும் தலைமை நிர்வாகிகளுக்கு போதாத காலமாக இருக்கப் போவதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத நிகழ்வு ஒன்று வடமாநிலத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு விஷ்ணு ஆலயத்தில் நடக்க உள்ளதாகவும், அந்த அதிசய நிகழ்வு நடந்தபின் அந்த ஆலயம் பெரும் மழைநீரால் முழுமையாக அழிக்கப் பெறும் என்றும், அன்றிலிருந்து தென்தமிழகம், வடதமிழகம், வடமாநிலத்தின் தென்பகுதி, கிழக்கு பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கால் பல அழிவுச் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், இது “கல்கி பகவானின்“ நியாயத்தீர்ப்புகள் துவங்கிவிட்டதற்கான முக்கிய அறிகுறிகள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவுச் செய்கிறது.

திருப்பதி காளகஸ்தியை மக்கள நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றும், இனி அங்கு பல திடுக்கிடும் கோரச் சம்பவங்கள் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


தமிழகத்தில் உள்ள ஒரு ஆன்மீக குடிலை நோக்கி உலக மக்கள் ஓடி வருவார்கள் என்றும், அந்த அமைப்பே இறைவனின் வருகையை ஆணித்தரமாக வெளியிடுவார்கள் என்றும், இயேசு, புத்தன் இருவரின் வருகையையும் முழுமையாக வெளியிடுவார்கள் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு செய்திக் குறிப்பை இங்கே வெளியிடுகிறது.

ஈரோடு, உதகை, தாம்பரம், அரியலூர், கரூர், சேலம், அயோத்தி, விஷாகப்பட்டணம், ஐதராபாத், மங்களுர் போன்ற இடங்களில் வினோதச் சம்பவங்கள் ஒரே மாதிரியாக நடக்க இருப்பதாகவும், இது விஞ்ஞானத்திற்கு புரியாத ஒரு புதிராக இருக்கும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே தருகின்றது.

தமிழகத்தில் இனி பூமி அதிர்வை பல நேரங்களில் மக்கள் காண்பார்கள் என்றும், இதன் நடுக்கம் பல அதிர்வு நிலைகளில் இருக்கும் என்றும், ஒரு ஞாயிறு அன்று ஏற்படும் நில அதிர்வே பெரிய அளவில் இருக்கும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

சேலம் கோட்டை மாரியின் அற்புதங்களை இனி சேலத்து மக்கள் காண உள்ளார்கள் என்றும், இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று சேலத்தில் பல இடங்களில் பள்ளங்கள் தோன்றி மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் பல நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

இமயத்தின் உயரம் சரியும் நிகழ்வு வரும் 2018ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் அதே சமயத்தில் தென் தமிழகத்தின் கடல் மட்டம் ஒன்றில் நிலப்பரப்பு சிறிது, சிறிதாக வெளிவரும் அதிசய நிகழ்வும் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

உலகத்தில் இனி அதிசயங்கள் நடக்கும் நாடாக இந்திய தேசமும், இறை அதிசயங்கள் நிகழும் மாநிலமாக தமிழகமும், இறைவனின் மகா அற்புதம் நிகழும் மாவட்டமாக சேலமும் அமைய உள்ளதாக 16-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

சென்னையின் கடல்பரப்பு அதிகமாகும் சமயத்தில் தமிழகத்தில் செயல்பாடுகள் வேறு ஒரு மாவட்டத்திற்கு மாற்றப்படும் சூழல் 2018-ம் ஆண்டிலிருந்து திட்டமிடும் என்றும், அது உண்மையிலேயே நடக்க்கூடிய ஒரு நிகழ்வாக நிச்சயம் அமையும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இணையதளங்கள் முடங்கும் கறுப்பு தின நாள் வர உள்ளதாகவும், 8 விமானங்கள் அப்பொழுது உலகில் விபத்துக்குள்ளாகும் என்றும், 2 சேட்டிலைட்டுகள் செயல் இழக்கும் பெரும் சம்பவங்களும் வரும் மாதத்தில் ஒரு சில நாட்களில் நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் இங்கே ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி குறிப்பிடுகிறது.


வான்மணடல பால்வெளியில் ஒரு அரிய காட்சியை  NASA என்ற அமைப்பு பதிவுச் செய்து மக்களுக்கு வெளிப்படுத்த இருப்பதாகவும், அன்று முதல் மக்கள் மனதில் பல கேள்விகள் எழுந்து விடை தெரியாமல் தத்தளிக்கும் நிகழ்வுகள் பல நடக்க இருப்பதாக 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இங்கே வெளியிடப்படும் ஒவ்வொரு தீர்க்க தரிசனக் குறிப்புகள் ஏற்கனவே எழுதப்பட்ட எந்த ஒரு நூலிருந்து தொகுத்து வழங்கப்பட்டவைகள் அல்ல, இவைகள் யாவும் இக்காலக் கட்டத்தில் எமக்கு இறைவனால் அறிவுறுத்தப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்புகளே ஆகும், இவைகளை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் உங்களையே சாரும். நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வாருங்கள், இனி உங்களுக்கு உண்மைகள் உறங்காமல் அதிவிரைவாக நடந்து வருவதைக் காணலாம். அதுவரை உங்களைப் போல நானும் காத்து இருப்பேன்..

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.