24/07/2017

பாமக மருத்துவர் அன்புமணி கூறும் கசப்பான உண்மை...


இலுமினாட்டி இரகசியம்...


இரு சிங்கங்கள் காலைத் தூக்கிக்கொண்டு நிற்கும் அந்த இடைவெளிக்குள் இருக்கும் எந்தவொரு பொருளாயினும் அதற்கு "சால்" என்று பெயர்.

இந்த "சால்" -க்கு பல அர்த்தங்கள் உண்டு.

அதை அசோகச் சக்கரம்ன்னு சொல்லுவானுங்க, நீரில் மிதக்கும் தாமரையின் மேலுள்ள பெண்ணின் தீட்டு இரத்தம் என்றும் சொல்லுவானுங்க, முருகன் என்றும் சொல்லுவானுங்க, கேடயம் என்றும் சொல்லுவானுங்க ஆனா எல்லாமே ஒன்னுதான்.

இதைத்தான் சிலம்பில்...

"உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏற்றுவர்"...

என்பார்கள். இதில் வரும் "உரைசால்" என்பதுதான் மிக முக்கியமானது.

வணிகர்கள் பயணம் செய்வதற்காகவே போடப்பட்டதுதான் "சாலை". இதுவும் "சால்" என்ற சொல்லில் இருந்தே வரும்.

நகரத்தார்களின் கோட்டையாகக் கருதப்படும் நார்த்தாமலை (நகரத்தார் மலை) மற்றும் சித்தண்ண வாயிலில் இன்று வரை வசித்து வரும் ஜைன மதத்தின் புதுகிளையான மதத்தைக் கடைபிடித்து வருபவர்களுக்கு "சாலையார்" என்று பெயர். இதுவும் அதுவே. இது அப்படியே போய்கிட்டே இருக்கும்...

ஓபிஎஸ்-க்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணறு விற்பனை செய்யப்பட்டது...


கிணற்றை மக்களுக்கு இலவசமாக தருவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில் தனிநபருக்கு விற்பனை...

குமரிக்கண்டம் உண்மையா - 6..?


3 முக்கிய தலைப்புகளில் குமரிக்கண்டத் தொடர்பு பற்றி விவாதிப்போம்...

I. கடல்கோள் அ ஊழிவெள்ளம்.
II. கடலில் மூழ்கிப்போன நிலங்கள்.
III. தமிழுக்கும் மூழ்கிப்போன கண்டத்துக்குமுள்ள தொடர்புகள்.


கடல்கோள் அ ஊழிவெள்ளம் என்பது, ஏறக்குறைய தொல் நாகரீகங்கள் எல்லாமே சொல்லி இருக்கக்கூடிய, பரம்பரை பரம்பரையா மக்கள் மூலம் நினைவு கூறப்பட்ட பெரும் துன்பகரமான நிகழ்வு. உலகின்  பல நாடுகளில், இலக்கியங்களில் சொல்லப்படும் அந்தப்பேரழிவு எங்கெங்கே பதிவு செய்யப்பட்டது என்ற தேடலோடு தொடங்குவோம்.


I. கடல்கோள் அ ஊழிவெள்ளம்..

1. கிறித்தவ விவிலிய தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளதன்படி, ஏதேன் தோட்டத்தைவிட்டு மனிதன் வெளியேற்றப்பட்டு சில தலைமுறைகள் கடந்த பின்பு மனிதன் பாவ வழிகளில் வீழ்ந்து கடவுளை விட்டு தூரப்போனான். கடவுள் உலகை அழிக்க எண்ணி வெள்ளமொன்றை அனுப்ப எண்ணினார். நோவா நீதிமானாக இருந்தபடியால் அவரையும் அவர் குடும்பத்தையும் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடிவு செய்தார். கடவுள் பேழையொன்றை செய்யச்சொல்லி அவர் குடும்பத்தையும்,  விலங்குகள் மற்றும் பறவைகளில் ஒரு சோடியையும் காப்பாற்றினார். நோவாவின் 600வது அகவையில், வெள்ள நிகழ்வு. (தொடக்கநூல்: 7 ஆம் அதிகாரம்)இதே கதைதான் கிட்டத்தட்ட குர்-ஆன் லும்


2. பபிலோனிய வரலாறில்  கில்காமேசு  (Gilgamesh) என்பவர் நிலைவாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம்  (Utnapishtim)  என்ற கடவுளை வழிபடும் போது கடவுள் உலகை ஒரு வெள்ளம் மூலமாக அழிக்க போவதாக அறிவித்து அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும்,அவரது மந்தைகளும் தப்புவதற்காக பெரிய கப்பல் ஒன்றை செய்யச் சொன்னார். வெள்ளத்தின் பின்னர் கடவுள் கில்காமேசுக்கு நிலையான வாழ்வை கொடுத்தார்.


3. சுமேரியரின் வரலற்றின் படி, சார்ரூபாக் நகர சியுசூத்ரா (Zisudra) அரசன், என்கி கடவுளால் எச்சரிக்கப்பட்டு,  பெரிய கப்பலைச் செய்யக் கட்டளையிடப்பட்டு காப்பாற்றப்படுகிறார்.


4. அக்காத் வரலாற்றில் என்லில் (Enlil) கடவுள் அத்ரசிசுவிவை காப்பாற்றுகிறார்.

5. எகிப்திய வரலாற்றில் காப்பாற்றப்பட்டவர் டோத் (Toth)


6. கிரேக்க வரலாற்றில் 3 கடல்கோள் பற்றிய குறிப்புகள்: ஓசிஜெஸ் (Ogyges), தேகாலியன் (Deucalion), டார்டனுஸ் (Dardanus).

7. ஆப்ரிக்க இனங்களில் Kwaya, Mbuti, Maasai, Mandin, மற்றும் Yoruba  இன மக்களிடம் கடல்கோள் பெருங்கதைகள் உண்டு.


8. சீனாவில் காப்பாற்றப்பட்டவர் டும் (Dum).

9. மெக்சிகோவில் (Aztec) காப்பாற்றப்பட்டவர்கள் கோக்ஸ் கோக்ஸ் (Coxcox) என்பவரும் அவரது மனைவியும்.


10. இந்தியாவில் சதபாத பிரமாணம்  (Shatapatha Brahmana) கி.மு. 300, மற்றும் மச்ச புராணம் (Matsya Purana) கி.பி. 250 களில் மனு என்பவர் வெள்ளம் பற்றி எச்சரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்கிறது. இந்த மனு என்பவர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கிறது. சத்யவிரதன் என்ற மன்னன் பெயரும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு பெயர்களும் குறிப்பது ஒரே நபரைத்தான் என்றும் தெரிவிக்கிறது.


“தமிழர் சரித்திரம்”(1940) என்னும் நூலில் மனு என்பவன் சத்தியவிரதன் என்னும் திராவிட வேந்தன் எனவும் பாண்டிய நாட்டை ஆண்ட ஒரு தமிழ் மன்னன் எனவும்.


கடல்கோளுக்கு முன்பு இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை வடமலை என்று புராணங்களிலும் இலக்கியங்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த வடமலையில் தான் மனுவின் பேழை இருந்ததென  சதபத பிராமணம் என்ற வடமொழிநூல் கூறுகிறது.


வடமலை எனக் குறிப்பிடப்படும் குற்றால பொதிகை மலையில் தான் மனு தவம் செய்தான். அப்போது வைகை ஆற்றில் இருந்து ஒரு தெய்வீகமீன் வடிவம் தோன்றியதாகவும் மச்சபுராணம் கூறுகிறது. வைகை ஆற்றின் கரையில் தான் மனு தவம் செய்தான் என அக்கினிபுராணம் கூறுகிறது.


மனுவானவன் பாலாற்றின் கரையில் தவம் செய்தான் என்று மகாபாரதத்தின் வனபர்வம் கூறுகிறது.


“மனு தமிழ் உலகத்தில் தோன்றியவராதலாலும், சூரிய குமாரனனான அம் மனு மலையாள மலையில் தவஞ்செய்தமையாலும், சத்திய விரதன் என்னும் அவர் கிருத மாலை என்னும் வையை ஆற்றில் பலியிட்டமையாலும்,   பாண்டிய அரசரின் இலட்சினையாக்கப்பட்ட தெய்வீக மீன், பாண்டியரின் தலைநகராக வந்த மதுரையிலே தமிழ் சாதியனரின் முன்னோராகிய மனுவின் முன் தோன்றினமையாலும், மனுவும் அவர் வழி வந்தோரும் தமிழரேயாவர்.”


இப்படி ஏறக்குறைய 500 தொன்மங்கள், பாரம்பரியக் கதைகள் உலகெங்கும் உள்ள தொல் நாகரிக நினைவு கூறல்கள் உள்ளதாக புவிபரிணாமவியலாளர் ராபர்ட் சூக் (Robert Schoch) கூறுகிறார்.  

தொடர்ந்து தேடுவோம்...

அதிமுக.. பாஜக வுக்கு மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது...


பாஜக மோடியும் திருட்டு தேர்தல் வெற்றியும்...


செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி -1...


தமிழ்... இது வெறும் மொழி மட்டும் அல்ல... எங்கள் இனத்தின் தொன்மையையும் பெருமையையும் இளமையையும் இனிமையாக உலகிற்கு அறிவித்துக் கொண்டு இருக்கும் ஒருக் கலைக்களஞ்சியம்...

எங்கள் இனத்தின் அடையாளம்..

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல.

தமிழ், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழரசி என்றெல்லாம் தங்களின் உயிருக்கும் மேலான குழந்தைகளுக்கு தங்களின் மொழியின் பெயரையே வைத்து தமிழர்கள் அழகுப் பார்த்தது போல் உலகில் வேறு எந்த இனம் அழகுப் பார்த்து இருக்கின்றது?.

உலகில் வேறு எந்த மொழி இந்தப் பெருமையை அடைந்து இருக்கின்றது?. நான் அறிந்த வரையில் தமிழுக்கு மட்டுமே இந்தப் பெருமை உள்ளது.

ஆனால், தங்களது குழந்தைகளுக்கு தமிழையே பெயராக வைத்து மகிழ்ந்த தமிழினம் இன்று தங்களுக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் நிலை தமிழகத்திலேயே இருக்கின்றது.

வந்தோரை வாழ வைத்த தமிழகம் இன்று வந்தோரை நம்பி வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு அவநிலையில் இருக்கின்றது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் உலக மக்கள் அனைவரையும் சரி...உலக சமயங்கள் அனைத்தையும் சரி இரு கை விரித்து அரவணைத்துக் கொண்ட மொழி இன்று மழுங்கடிக்கப்பட்டுக் கிடக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றன.

ஆனால் எவ்வாறு 'ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையோ' அதே போல் தமிழின் செல்வங்கள் அவற்றின் தனித்துவத்தோடே இன்றும் நிலையாய், நம்மால் மீட்கப்படுவதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தான் தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கு சில கடமைகள் கூடுதலாக வந்து சேருகின்றன.

ஒன்று... தமிழை அறிவது... தமிழின் மூலம் தமிழினத்தை அறிவது..

இரண்டு... அறிந்ததை அறியாதவர்களிடத்து சேர்ப்பது... சேர்த்து, தமிழினத்தின் அறியாமையை நீக்குவது..

இந்தக் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது. இந்தப் பதிவினை என்னுடையக் கடமையாய் நான் தமிழினைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ளவும், நான் அறிந்துக் கொண்டதை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ளவுமே ஆரம்பிக்கின்றேன்.

என்னுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சி.

ஆந்திராவினில் நான் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் அலுவலுகத்தில் ஒரு நாள் திடீரென்று யானையைப் பற்றியத் தலைப்பில் ஒரு விவாதம் ஆரம்பம் ஆனது.

அப்போது குசராத்தினைச் சேர்ந்த எனது தோழி ஒருவர், குசராத்தி மொழியினில் ஆண் யானைக்கு 'காத்தி' (haathi) என்றும் பெண் யானைக்கு 'காத்தன்' (haathan) என்றும் தனித்தனி பெயர்கள் இருக்கின்றன என்றும் வேறு எந்த மொழியிலாவது அவ்வாறு தனிப் பெயர்கள் இருக்கின்றனவா என்று வினவினார்.

அணியில் உள்ள வேறு மொழியினர் எவரும் பதிலினைக் கூறவில்லை... நானும் தான்..

எவ்வளவு சிந்தித்தும் என்னுடைய சிந்தனைக்கு ஆண் யானை, பெண் யானை என்ற பெயர்களைத் தவிர வேறப் பெயர்கள் நினைவிற்கு வரவில்லை.

ஆனால் ஒரு நம்பிக்கை இருந்தது...

மற்ற இந்திய மொழிகளில் இருக்கும் ஒரு விசயம் எங்கள் தமிழில் இல்லாது இருக்காது...நிச்சயம் எங்களுடைய தமிழ் மொழியில் யானைகளுக்கு வேறுப் பெயர்கள் இருக்கும்...

அந்த நம்பிக்கையுடன் இணையத்தளங்களில் தேடும் பொழுது சற்று மலைத்து தான் போனேன். யானையைக் குறிக்க தமிழில் நாம் இதுவரை அறிந்த பெயர்களே மொத்தம் 170க்கும் மேல்.

களிறு, வேழம்,பிடி(பெண் யானை), வாரணம், அதவை என்று அந்தப் பெயர் பட்டியல் நீண்டுக் கொண்டே போகின்றது.

யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்து இருக்கின்றோம் தமிழர்களாகிய நாம்.

"என்னயா... ஒரு யானைக்கு இத்தனை பேரு... இத போயி பெருசா சொல்ல வந்திட்டியே..." என்று சிலர் எண்ணலாம்.

பெயர்கள் சாதாரணமானவை அல்ல... பெயர்கள்-அடையாளங்கள்!!!

பயனும் தேவையும் இருக்கும் பொருட்களுக்குத் தான் தேவையைப் பொறுத்து மக்கள் பெயர் இட்டு வழங்குவர். பயனில்லாப் பொருட்களுக்கு மக்கள் பலப் பெயர்கள் இட வேண்டிய தேவை இருக்காது. நாம் நமக்கு அறியாத ஒரு நபரைப் பற்றிக் கண்டுகொள்ள மாட்டோம் ஆனால் நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களின் குணத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்றார்ப் போல் பலப் பெயர்களை உரிமையுடன் இட்டு வழங்குவோம்... அதே போல் தான் இதுவும்.

தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் இந்தப் பெயர்களை பார்த்தாலே நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

உலகின் மற்ற உயிரினங்களையும் மதித்து அதன் குணங்களை அறிந்து அவற்றினோடும் இயற்கையுடனும் ஒரு சேர வாழ்ந்த நாம், உலகம் தழைக்க பல்வேறு கருத்துக்களை காலத்தை வென்ற செம்மொழியாம் தமிழ் மொழியில் பதித்து வைத்து இருக்கின்றோம்.

இன்று நம் மொழியும் இனமும் தழைக்க அந்தக் கருத்துக்களை நாம் பரப்ப வேண்டி இருக்கின்றது. அதற்கு முதலில் நாம் அந்தக் கருத்துக்களை அறிய வேண்டியிருக்கின்றது.

வாருங்கள்... தமிழ் படைத்த அந்த மாபெரும் உலகினுள் பயணிப்போம்...

மரபணு மாற்றுப் பருத்தி : அனுமதி அளித்தவரே வருத்தம்...


மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்ததற்காக வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்டது. கடும் எதிர்ப்பையும் மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பல விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். இதையடுத்து பல விவசாயிகள் தற்கொலை செய்து உயிரையும் இழந்தனர்.

அதுகுறித்து டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். நூல் அறிமுக விழா ஒன்றில் பங்கேற்று அவர் பேசும்போது, "1990களில் நான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்தேன். தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அதற்காக வருந்துகிறேன். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கு நான் பொறுப்பேற்கிறேன். பெரும்பாலான ஐரோப்பிய, ஜப்பான் போன்ற நாடுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில்லை" என்றார்.

டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் 1961ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். தற்போது இந்திய மரபணு பொறியியல் மதிப்பீட்டு ஆய்வுக் கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், சுப்ரமணியனின் பேச்சு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில், அதற்கு அனுமதி கொடுத்தவரே விவசாயிகளின் மரணத்திற்குப் பொறுப்பேற்று வருத்தம் கூறியிருப்பதை தற்போதைய மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

http://www.newindianexpress.com/business/2017/jul/21/ex-cabinet-secretary-subramanian-regrets-introducing-gm-cotton-in-india-1631816.html

தக்காளி, கத்திரிக்காய், இப்போது கடுகு... மரபணு மாற்றம் நமக்குத் தரப்போவது என்ன?


ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியால் பருத்தி விவசாயம் கேள்விக்குறியானது. மரபணு கத்திரிக்காய் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை நமக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தது. அந்த வரிசையில் புதிதாக முளைத்திருக்கிறது மரபணு கடுகு..!

`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.’ இது, கடுகில் உள்ள காரத்தன்மைக்காக சொல்லப்பட்ட பழமொழி அல்ல. கடுகில் உள்ள மருத்துவக் குணங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு இதில் மருத்துவ குணங்கள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகம். இது, கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. செரிமான சக்தியை மேம்படுத்தும் சக்தி கொண்டது... இப்படி கடுகு தரும் ஆரோக்கியப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடுகில் சினிகிரின் (Sinigrin), மைரோசின் (Myrosin), ஈகோசெனோக் (Eicosenoic), ஓலீக் (Oleic) , பால்மிடிக் (Palmitic) போன்ற மனித உடலுக்குத் தேவையான அமிலங்கள் நிறைந்துள்ளன. தாது உப்புக்களான கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் ஆகியவையும் உள்ளன. மேலும் இதில் பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ஃபோலேட்ஸ், நியாசின், தயாமின், ரிபோஃபிளேவின், பைரிடாக்ஸின், பான்டோ தெனிக் ஆகியவையும் உள்ளன.

தென்னிந்தியக் குடும்பங்களின் உணவுகளில் கடுகு தவிர்க்க முடியாத ஒன்று. இது நேரடியாகவும், கடுகு எண்ணெயாகவும் சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது இயற்கையாக விளையும் நாட்டு கடுகுக்குப் பதிலாக, செயற்கையான முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விற்பனைக்கு வர இருக்கிறது.

மரபணு மாற்றம் என்றால் என்ன ?

ஒரு விதையின் அடிப்படை பண்புகள் எதையும் மாற்றாமல், அதனுடைய மூலக்கூறுகளில் தங்களுக்குத் தேவையான சில மாற்றங்களைச் செய்து, அதனுடைய வீரியத்தை அதிகரிக்கச் செய்வதே மரபணு மாற்றம்.

உதாரணமாக, தக்காளியில் எப்படி மரபணு மாற்றம் செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்போம். கடுங்குளிரில் தக்காளிகள் சீக்கிரம் அழுகிவிடும். அவற்றால் குளிரைத் தாங்க முடியவில்லை என்றால், ஆர்டிக் குளிரைத் தாங்கக்கூடிய ஒரு மீனின் மரபணுவை எடுத்து தக்காளிக்குள் வைத்தால், தக்காளி கெட்டுப் போகாமல் பல நாள்கள் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். இதன் பின்னால் இருப்பது வணிக நோக்கம் மட்டுமே அன்றி வேறொன்றும் இல்லை. நாட்டுத் தக்காளிக்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளிக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. நம்மால் கண்டுபிடிக்கவும் முடியாது. ஆனால், அதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்..

``மரபணு மாற்றம் என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்?’’ என்று மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்...

"நம் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் மரபணுக்களை இது பாதிக்கும் என்கிற அச்சம் உலக அளவில் உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும்போது, நோய்களை எதிர்க்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது என்ற கருத்தும் இருக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் வேதிப்பொருள்களிலும் மாற்றம் செய்யப்படும். இந்த வேதிப்பொருள்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்த கடுகு மற்ற உணவுப்பொருளுடன் இணையும்போது என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும் என்பதும் ஆய்வுசெய்யப்படவில்லை. அதாவது, நம் காய்கறிகளுடன், வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் கடுகு கலக்கும்போது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்படவில்லை.

நாட்டு கடுகில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் என்ன மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதும் தெரியப்படுத்தப்படவில்லை. இதை தெளிவுபடுத்தப்படவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

நாட்டு கடுகுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு கலக்கும்போது நாடு முழுவதும் மரபணு மாற்றப்பட்ட கடுகுகளே அதிகமாக இருக்கும். புதிய நோய்களை உருவாக்கும் என்று அச்சப்படக்கூடிய ஒரு பொருளை, மிக வேகமாக விற்பனைக்கு கொண்டுவர முயற்சிப்பது தவறான ஒரு செயல்.

இதை அனுமதித்தால், அடுத்தடுத்து ஒவ்வொரு பயிராக மரபணு மாற்றத்துக்கு அனுமதிக்கப்படும். இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் உரிமைகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து, அவர்களிடம் இருந்து பெறவைப்பதற்கான முயற்சிதான் இது. இதன் பின்னால் மிகப்பெரிய வணிகம்தான் இருக்கிறது. மக்களின் நலனையும் ஜனநாயகத்தையும் பொருட்படுத்தாத ஒரு செயல் இது’’ என்கிறார் மருத்துவர் சிவராமன்.

நாட்டு கடுகுப் பயணம்:

இந்த நிலையில் 'கடுகுப் பயணம்' என்னும் பெயரில் 1,000 கிலோ நாட்டுக் கடுகு விதைகளுடன், தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ள சூழலியல் செயற்பாட்டாளர் ம.செந்தமிழனிடம் இது பற்றிப் பேசினோம்... ``மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் தீமைகளைப் பற்றி நாம் எந்த ஆய்வுகளை முன்வைத்தாலும் ஆளும் தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனால், அந்த மாதிரியான முயற்சிகளை கைவிட்டுவிட்டு நம் தற்சார்பை பெருக்குவதற்கான முயற்சியை கையிலெடுத்திருக்கிறோம்.

நம் நாட்டுக் கடுகு விதைகளை அதிகமாக இழந்துவிட்டோம். முன்பெல்லாம் வீடுகளிலேயே கடுகுகள் பயிரிடப்பட்டன. அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மானாவாரியாக ஊடுபயிராக கடுகு பயிரிடப்பட்டது. ஆனால், விவசாயிகள் எப்போது ஒரு பயிர்சாகுபடிக்குச் சென்றார்களோ அப்போதே கடுகு போன்ற ஊடுபயிர்கள் பயிரிடப்படுவதை கைவிட்டுவிட்டனர். இதனால் கடுகு கடையில் வாங்கக்கூடியாக ஒரு பொருளாக மாறிவிட்டது.

எனவே, மீண்டும் ஊடுபயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்தவேண்டும். இதற்காகவே, தமிழகம் முழுவதும் இயற்கை விவசாய ஆர்வலர்களைச் சந்தித்து, நாட்டு கடுகு விதைகளை அவர்களுக்கு கொடுத்து, பயிர்செய்யச் சொல்லப்போகிறோம். இதன் மூலம் நாட்டுக் கடுகின் உற்பத்தியைப் பெருக்கலாம்.

விதை என்பது, நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடையது, உழவர்களுடன் தொடர்புடையது. இவை, தனியார் கம்பெனிகளின் கைகளுக்குச் செல்லாமல் காக்கப்பட வேண்டும் . மரபணு மாற்றப்பட்ட கடுகு நம் இல்லங்களுக்கு வருவதற்கு முன்னர் நாட்டுக் கடுகு விதைகளை நம் நிலங்களில் பெருக்க வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கம்’’ உறுதியான குரலில் சொல்கிறார் செந்தமிழன்.

உணவுப்பொருள்களில் கலப்படம் ஏற்படாமல் தடுக்கவேண்டியது நம்மை ஆளும் அரசின் கடமை. அது சாத்தியம் இல்லாத சூழலில், மாடித் தோட்டங்கள் மூலமாக நமக்குத் தேவையானவற்றை நாமே பயிரிட்டுக்கொள்வதும் நம்மால் முடியும். அதுவும் முடியவில்லையா..? விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று நமக்குத் தேவையான பொருள்களை வாங்கிப் பயன்படுத்தலாம். அதுதான் நம் ஆரோக்கியம் காக்கும்.

நன்றி

இரா.செந்தில் குமார் விகடன்...

அதிமுக வும் தமிழின அழிப்பும்...


கிழக்கு கடற்கரை சாலையை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது மத்திய அரசு கேட்டது.

மாநில சாலையாகவே இருக்கட்டும் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றவேன்டிய அவசியம் இல்லை எனவும், அதற்கு ஈடாக 10,000 கோடி தருகின்றோம் என சொல்லியும் ஜெ.தரவில்லை.

அப்போதைக்கு நெடுஞ்சாலை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி.பழனிசாமி.

இன்று மாநில நெடுஞ்சாலையை மத்திய அரசிடம் தாரைவார்க்கிறார் முதல்வராக மாறிய எடப்பாடி பழனிசாமி.

இனி கடற்கரையில் அணல்மின் நிலையங்கள் அணிவகுக்கும், கேளிக்கைவிடுதிகள் கட்டப்படும், சொகுசுகப்பல் பயணம், ரயில் என  கொண்டாட்டங்களும்,கொள்ளைகளும் சிறக்கும்.

மீனவர்கள் கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்கள் படையெடுக்கும்.

மண்ணின் மைந்தர்கள் மண்ணைவிட்டு அப்புறபடுத்தபடுவார்கள்...

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடப்போகும் பாஜக வுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...


சசிகுமார் கொலையும் - கோவை கலவரமும்...


கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோவைக் காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில் அறிந்திருப்போம்.

தமது தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூக ஆதாயங்களுக்காக இந்து முன்னணி என்ற மதவெறி பொறுக்கி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்த கலவரம். சசிக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் வசூல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடிய ஒரு ரவுடி. அதே போல விநாயகர் சிலைகள் வைப்பது அதற்கான மிரட்டல் வசூல்களை ஒழுங்குபடுத்துவது என்பது போன்ற ‘தொழில்களை’யும் செய்து வந்தவர். சசிக்குமார் அவருடைய வீட்டினருகே கொல்லப்பட்ட பின்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனே அங்கே இந்துமதவெறிக் கும்பல் அணிதிரட்டப்படுகிறது.

முதலில் சசிகுமார் மரணத்தை உறுதி செய்த மருத்துவமனை மீது கல் வீசி தாக்குகிறார்கள். பின்னர் பிணம் அரசு மருத்துவமனை உடற் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்து முன்னணியின் பொதுச்செயலாளரான காடேஸ்வரா சுப்பிரமணியன் எனும் நபர் செப்டம்பர் 23 தமிழகம் தழுவிய பந்த் என அறிவிக்கிறார். கொலைகாரர்களை காவல்துறை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் என தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். அங்கேயே நூற்றுக்கணக்கானோர் திரள்கின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து திரட்டப்பட்டு குவிக்கப்படுகின்றனர். கொன்றது முஸ்லீம்கள் தான் என்ற தகவல் எந்த ஆதாரமுமின்றி பரப்பப்படுகிறது. அந்த வதந்தியை வைத்து கும்பல் சேர்க்கப் படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மதப்பதட்டம் உருவாவதற்கான அனைத்து சூழல்களும் இருக்கையில் உடற்கூறாய்வை உடனடியாக முடித்து சவத்தை உடனே அடக்கம் செய்ய வைக்க வேண்டியதுதான் காவல்துறை செய்ய வேண்டிய நடவடிக்கை. ஆனால், மறுநாள் காலை அணிதிரட்டல் முழுமையாக நடக்கும்வரை செயற்கையாக பந்த்தை அமலாக்கும் வரை உடற்கூறாய்வை தாமதப்படுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறை எப்படி துவக்கம் முதல் இறுதி வரை கலவரத்தை திட்டமிட்டபடி திறம்பட நடத்த தமது நடவடிக்கைகள் மூலம் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதற்கு இது முதல் உதாரணம்.
மறுநாள் காலை வழக்கம் போல கடைகளை திறந்தவர்களிடம் வண்டிகளில் கும்பல் கும்பலாக பகுதிகளுக்கு சென்று இன்று பந்த் திறக்கக் கூடாது என மிரட்டியிருக்கிறார்கள். மீறி பேசியவர்களின் கடைகளை உடைத்திருக்கிறார்கள். ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தி கண்ணாடியை உடைத்து செயற்கையான பதட்டத்தை அந்த பகுதியில் உருவாக்கி கடையடைப்பை சுமத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மூன்று மாவட்டங்களிலும், அதிலும் குறிப்பாக கோவையிலும் திருப்பூரிலும் முழு வீச்சில் அமலாகியிருக்கிறது.

திருப்பூரில் கல் வீச்சால் பதறி இறங்கிய ஒரு பெண்மணியின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரணமடைந்திருக்கிறார். ஏராளமான அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். ஆக, முந்தைய நாள் முன்னிரவில் நடந்த சம்பவம் அறியாமல் தனது இயல்பு வாழ்க்கையை துவங்கிய இரு மாவட்டங்களையும் காலை 9 மணிக்குள் முடக்கி முற்பகல் திட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்கள். இந்த முற்பகல் திட்டத்தின் மொத்தக் காட்சியிலும் போலீசு ஒரே ஒரு சீனில் கூட வராதது தற்செயல் அல்ல. ஒரு இடத்தில் கூட வந்து பந்த்தை தடுக்கும் நடவடிக்கையில் போலீசு ஈடுபடவில்லை.

மதிய வாக்கில் உடற்கூறாய்வு முடிவடையும் போதே கிட்டத்தட்ட கோவையின் பிரதான பகுதிகள் துவங்கி மொத்த மாவட்டத்தின் இயக்கமும் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அப்போது வரை காவல்துறை வைத்திருக்கும் எந்த சிறப்புப் படையும் மருத்துவமனைக்கு வரவில்லை. கொடி அணிவகுப்பு போன்ற முன்னேற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. “இன்னும் எதுவும் நடக்கவில்லையே” என காவல்துறை காத்திருந்தது போலவே அப்பட்டமாக தெரிந்தது.

முந்தைய அனுபவங்களிலிருந்து இன்று என்ன நடத்த முனைகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.
பிணத்தை ஊர்வலமாக கொண்டு போகப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததும், அதற்கு 18 கிலோமீட்டர் சுற்றி துடியலூர் மின் மயானம் செல்ல காவல்துறை அனுமதி கொடுத்ததும் இவர்களது எண்ணத்தை தெளிவாகவே காட்டியது. பிணம் பிணவறையை விட்டு வெளியே வரும் முன்னரே காவிக் கும்பல் அருகிலிருக்கும் இஸ்லாமியர் பகுதியான கோட்டைமேட்டுக்கு சென்று கடைகளை அடைக்க சொல்லி மிரட்ட அவர்கள் மறுக்க பதட்டம் கூடிய நிலையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்த காவல்துறை இந்து முன்னணி கும்பலைத் தடுக்கக் கூட முனையவில்லை. 1997-ல், இதே கோவையில் இதே உக்கடத்தில் அருந்ததிய இந்துக்களும் இஸ்லாமியர்களும் மோதிக்கொண்டிருக்கும் போதும் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வரலாறு.

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியின் வழியாகவே பிணத்தை கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறார்கள். கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட சுமார் 1500 பேருடன் பிணத்தை முன்னெடுத்துக் கொண்டு பைக் பேரணியாக கிளம்பினார்கள். காவிகளுக்கு வந்த வழிகாட்டுதல், “முடிந்த வரை தாமதப்படுத்தி கொண்டு போக வேண்டும்; போகும் வழியில் எந்த கடை திறந்திருந்தாலும் அடிக்க வேண்டும்; பள்ளி வாசல் மீதும் சர்ச் மீதும் கண்டிப்பாக தாக்குதல் நடத்த வேண்டும்; அங்கு முன்னால் நிற்கும் ஆட்களை அடித்தாலும் தப்பில்லை; இஸ்லாமியர் கடைகளை கண்டிப்பாக அடிக்க வேண்டும்; இறுதி இலக்கான துடியலூரை துவம்சம் செய்ய வேண்டும்” என்பதே. இது ஒரு காவியின் வாக்குமூலம். இதை காவல் துறையின் ஆதரவோடு செய்யப்போகிறோம் என்பது அவர்களுக்குள் கூடுதலாக ஒரு துளி உற்சாகம் தந்திருக்கும். அதுவும் கமிஷனர் முன்னாலேயே என்பது இன்னும் போதை ஏற்றும் விசயமல்லவா…! “போலீஸ்காரன் பக்கத்துல கெடந்த கல்லையே தூக்கி அடிச்சன்டா.. அவன் ஒண்ணுமே சொல்லல டா…..!” இதுவும் ஒரு காவி சொன்னதே.

துடியலூர் வரும் வரை நூற்றுக்கணக்கான கடைகளை, ஏராளமான இஸ்லாமிய அடையாளங்கள் தொனித்த வாகனங்களை அடித்து நொறுக்கி குப்புற கவிழ்த்துப் போட்டு, கண்ணில் பட்ட பள்ளி வாசல்கள் அனைத்தின் மீதும் கல் எறிந்தபடியே வந்த காவிக் கும்பல், துடியலூரில் கிட்டத்தட்ட 20 கடைகளை சூறையாடி 6 கடைகளுக்கு தீ வைத்தனர். ஒரு காவலரின் மண்டையை பிளந்த பின்னர் தான் காவல்துறை இங்கு தடியடிப் பிரயோகம் செய்து துரத்த, பதிலுக்கு துடியலூர் காவல்துறை ஆய்வாளரின் ஜீப்பை நடு ரோட்டில் போட்டு எரித்தனர்.

ஒரு முழு நாளையும் திட்டமிட்டு பயன்படுத்தி காவல்துறையின் சீரிய பங்களிப்போடு ஒரு கலவரத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்தப் பிணம் அரசு மருத்துவமனையில் இருக்கையிலேயே இந்த இந்து முன்னணி கும்பலை பற்றி ஓரளவு அறிந்த கோவை மக்கள் பலர் காலையிலேயே கலவர நெடியை உணர்ந்து விட்டார்கள்.

அறிவிப்பில்லாமல் கலவரங்கள் அமலுக்கு வருவதில்லை. ஆனால், காவல்துறை இதை அணுகிய விதம் என்பது மிக மிக ஆபத்தான போக்கிற்கான அறிகுறி. கொலை, கொள்ளையில் அப்பட்டமாக ஈடுபடும் இந்த காவல்துறைதான் இதே கொள்ளை கலவர கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்றால் இங்கு சொல்லிக் கொள்ளும் ஜனநாயகம் நரகலை விட அசிங்கமாக நாறுகிறது என்று பொருள்.

கலவரம் முடிந்து இந்து முன்னணி, திருப்பூரில் இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு போலீஸ் கைது பண்ணிக்கொண்டிருக்கிறது.

கோவையில் நூறு வார்டில் கவுன்சிலர் கேண்டிடேட்டாக நிற்கவிருந்தவர்கள் எத்தனை பேர் கைதாகியிருக்கிறார்கள் என்றால் மிகக் குறைவு. மொத்தத்தில் அணிகளை தன்னுடைய வழக்கமான சூழ்ச்சியினால் சிக்க வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்துமத வெறியர்கள்.

தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்றுவேன் என்று பகிரங்கமா பேட்டி கொடுத்து தூண்டி விட்டு கடைகளை பள்ளிவாசலை உடைக்க சொன்னவன் அங்கே செயற்குழு கூட்டத்தில் பகிரங்கமாக ‘எழுச்சியுரை’ ஆற்றிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே போலீசும், ஐ.பி.எஸ்சும், ஏட்டையாக்களும் மிக்சர், காபியுடன் சகஜமாக இருக்கின்றனர். இதற்கு முந்தைய கலவரங்களில் எந்த இந்து கைதானானோ அதே காலாட்படை இந்துக்கள் மட்டும்தான், செல்போன் திருடுனவன் பிரியாணி திருடுனவன என்று கைது செய்யப்படுகிறார்கள்.

ஊடகங்களும் இதை பெரிய செய்தியா 400 பேர் கைது என்று போடுகிறார்கள். ஆனால் முக்கியமான ரவுடிப்பட்டாளங்கள், தளபதிகள் ஒருவர் கூட காவல் துறையால் கைது செய்யப்படவில்லை.தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் போலிசின் அணுகுமுறையை அம்பலப்படுத்தாமல் ஆதரித்தே செய்திகளை வெளியிட்டன.
அச்சு ஊடகங்களும் இந்து முன்னணி களத்தில் செய்த வன்முறையை மென்மையாக எழுத்தில் மாற்ற கடும் பிரயத்தனப்பட்டனர். துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்திருக்கிறது துடியலூரில் அது மறைக்கப்பட்டிருக்கிறது.

பெரியநாயக்கன்பாளையம் சித்ராக்கா என்ற பெண்மணி அடுத்த கவுன்சிலர் ஆகி ஓட்டுப் பொறுக்கும் ஆசையோடு பி.ஜே.பி-யில் வலம் வரும் ஒருவர். இவர் தலைமையில் நடந்த அட்டூழியங்கள் பலவும் மறைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியர் ஒருவரின் செல்போன் கடையில் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் சிக்கி வெளிவந்து இந்து முன்னணியின் நாற்றம் வாட்ஸ்-அப்பில் மணக்கிறது. இதை இந்து முன்னணி போர்வையில் சமூக விரோத கும்பல் என தலைப்பிட்டு நியாயப்படுத்துகிறது தமிழ் இந்து. இந்து முன்னணியே சமூக விரோத கும்பல் தானே?

மாநில அரசின் பங்களிப்பு, கண்ணசைவு இல்லாமல் ஒரு மாநகராட்சியை, தொழில் நகரை இப்படி முடக்க முடியாது. காவி கொள்ளிக் கட்டைகள் திருப்பூரில் அடுத்த அடிக்கு ஆயத்தமாகிறார்கள். திட்டமிட்டு கலவரத்தை தூண்டி, இஸ்லாமியர்களை எதிர்நிலைக்குத் தள்ளி, அவர்களையும் அமைப்பாக – இந்து எதிர் அமைப்பாக மாற வேண்டிய சூழலை, மதப்பதட்ட சூழலை – கலவர நிலையை உருவாக்கும் இந்து முன்னணி, அதற்கு துணை நிற்கும் காவல் துறை இரண்டும் தான் முதன்மை குற்றவாளிகள்,

இக்கலவரத்தில். கைதான 378 வீர இந்துக்களில் எத்தனை பேர் பார்ப்பன இந்து? எத்தனை பேர் கவுண்ட இந்து? எத்தனை பேர் அருந்ததிய, இதர தாழ்த்தப்பட்ட இந்து? – எனக் கணக்கிட்டால் இந்த கும்பலின் உண்மை முகம் தெரியும்.

1997 கலவரத்தில் கெம்பட்டி காலனி குனியமுத்தூர் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அருந்ததிய சமூகத்தை சேர்ந்த கணிசமான மக்களை காலாட்படையாக பயன்படுத்தி கலவரத்தை நடத்தினர். இம்முறை கொஞ்சம் நகர்ந்து சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் என்று வந்து விட்டார்கள். ஆனால், எங்கு வந்தாலும் கேஸ் வாங்க ஒரு சாதி அதற்கு வெறியேத்த ஒரு சாதி திட்டம் போட்டு இயக்குவது ஒரு சாதி. இப்படி இது சாதியை பாதுகாக்கும் சாதி முன்னணி! பார்ப்பன – ‘மேல்’ சாதி இந்துக்கள் இயக்கங்களின் தலைமையில் வழிநடத்த, பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச் சாதி இந்துக்கள் வட்டார அளவில் தலைமை வகிக்க – அணிதிரட்ட, பிற்பட்டுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் களத்தில் தாக்குதலை நடத்துகிறார்கள். ஆக பார்ப்பனியத்தின் வருண தருமம் கோவை ஆர்.எஸ்.எஸ் கலவரத்திலும் அச்சு அசலாக அப்படியே செயல்படுகிறது.

இந்த தாக்குதலில் விநாயகர் ஊர்வலத்திற்கு காசு கொடுத்த இந்து வியாபாரிகளும் கூட தாக்கப்பட்டிருக்கிறார்கள். இனி கோவை வர்த்தகர்கள் அனைவரும் இந்த சூறையாடலுக்கு பயந்து மாமுல் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.

இது ஒரு துவக்கம் தான். வளர்ச்சி கோஷமிட்டு ஆட்சியை பிடித்த மோடி கும்பலின் சுயரூபம் இதுதான். குஜராத் மாடல் என்பது இதுதான். குஜராத்தில் இன்னும் பா.ஜ.க கும்பல் செல்வாக்கு செலுத்தும் பகுதிகளில் நடைபெறுவதும் இதுதான். இந்த அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய பார்ப்பனிய கும்பல் நம் தமிழகத்தை நெருங்கி வந்துவிட்டது. கோவையின் தலைக்கு மேல் எந்நேரமும் மதவெறிக்கத்தி தொங்கி கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

கருத்துத் தளத்திலும் நடைமுறைக் களத்திலும் பார்ப்பனி இந்துமதவெறி பாசிசத்தை முறியடிக்க வேண்டியது நம் கடமை...

ஜூலை 23 வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத நாள்...


திருநெல்வேலி மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அரச வன்கொடுமைக்கு பலியான 17 போராளிளின் நினைவு தினம்..

1998 ஆம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் முன்னெடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர்.

இதனை அறிந்த அதிகாரத்தை  கொண்டிருந்த காட்டுமிராண்டி காவல் துறை அப்பாவிமக்களை கண்மூடி தனமாக தாக்கி பேரணியை கலைத்தனர்,  தடியடியில் உயிரை பாதுகாத்துகொள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கினார்கள் இதனை அறிந்த காவல்துறை அங்கு சென்று அவர்களை வெளியேரவிடாமல் தடுத்தது,  அதில் கைகுழந்தையுடன் இருந்த பெண்மணி தான் இறந்தாலும் தன் பிள்ளை பிழைக்க வேண்டும் என்று தனது கைகுழந்தையை கரையை நோக்கி வீச அதை கண்ட காவல் துறை அந்த பச்சிளம் குழந்தையையும் விடாமல் குழந்தையை ஆற்றிலே தூக்கி வீசி தனது சாதி திமிரை காட்டியது.

இந்த அரச வன்கொடுமையில் பலியான 17 பேரும் பட்டியல் வகுப்பை சார்ந்தவர்கள் என்பது  குறிப்பிட தக்கது, மேலும் இந்த கோர அடக்குமுறை சம்பவம் 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்தது அப்போது திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் அவா்களை அனுப்பி ஆய்வு செய்து கலவரம் என்று கூறி ஆற்றில் மூழ்கிதான் இறந்தனா் என தனது சமூக நீதியை நிலைநாட்டியது அயோக்கிய மக்கள் விரோத கருணாநிதி அரசு.

அரச வன்கொடுமைக்கு பலியான போராளிகளிகளின் நினைவு தினம் இன்று...

ஏழு பொருத்தமும் அம்சமா இருக்கு...


அதிமுக விளக்கு தான் பிடிச்சிட்டு இருக்கு...


கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் , சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


ஜெயராமன் அவர்களின் தந்தை மரணமடைந்ததை தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது...

குமரிக்கண்டம் உண்மையா - 5..?


தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில் 18 மீட்டர் கடல் நீர் குறைந்தால் போதும் கிடைக்கும் நிலப்பரப்பைப் பாருங்கள். வாடகை சைக்கிளில் இலங்கை சென்று விடலாம். 20 கி. மீ. தூரம் தானே.மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 21 தீவுகள் இருக்கின்றன. இவை பழைய தமிழகம் கடலில்   மூழ்கியது போக மீதமுள்ள பகுதிகள்.


மேலும் தனுஷ்கோடியிலிருந்து ஈழ தலைமன்னாருக்கு தரைவழித்தொடர்பே இருப்பதைக்காணலாம். இதை ராமர் பாலம், ஆடம்ஸ் பிரிட்ஜ் என எப்படி சொன்னாலும் அது இணைந்திருந்த தமிழ்-ஈழ நாட்டின் நிகழ்கால சாட்சியம்.


கீழ்க்காணும் அந்த மண் திட்டுப்பாலத்தின் நீளம் 30 கி. மீட்டர். காண்க:

சேது கால்வாய் என்று வெட்ட நினைப்பது இந்த மண் திட்டைத்தான். கப்பல் செல்ல வழி ஏற்படுத்த நினைக்கிறார்கள்.


1. உண்மையில் கால்வாய் வெட்டப்பட்டாலும் அவ்வழியே பெரிய கப்பல் செல்ல வழியில்லை.

2. வெட்ட வெட்ட கடல் திரும்பத்திரும்ப மண்ணை கொண்டுவரும். மண் அகற்றுபவர்களுக்கு நல்ல வருமானம். திரும்பத் திரும்ப சாலை போடும் வகையில் அரைகொறை சாலை போடுவாங்கள்ளே அது மாதிரிதான்.

3. கப்பல் நிறுவனம் வைத்திருப்பவர் தி.மு.க. T.N. பாலு. காசு கொட்டும் தொழிலைக் கைப்பற்ற நினைக்கிறார்கள், அவ்வளவு தான்.


8) தனுஷ்கோடி..

1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுஷ்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது. இந்தியப்பெருங்கடலில் 12,000 வருடங்களுக்கு முன் நிலப்பரப்பு மூழ்கியதை நம்பாதவர்கள் 50 வருடங்களுக்கு முன் மூழ்கிய தனுஷ்கோடியையாவது நம்புங்க.

தனுஷ்கோடியின் இன்றைய நிலை.
இதே தனுஷ்கோடி 1964 க்கு முன்னாடி எப்படி இருந்தது தெரியுமா ? தனுஷ்கோடி ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்ற ஒரு துறைமுக நகரம். தென்னந்தோப்புகளோடு இருந்த ஒரு ஊர். படத்தைப் பார்த்தாவது நம்புங்க.
அந்த போட் மெயில் 1964 கடும்புயலில் பயணிகளோடு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டது.


9)  கடலாய்வுகள்..

இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை

1. 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது.

2. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கடலாய்வு செய்தது.


3. இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது.

அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன  மத்திய மாநில அரசுகளால்.

சிறிதளவே செய்யப்பட்ட கடலாய்வு பூம்பூகார் நகரத்தின் பழைமையை கி. மு. 9,500 என்று சொல்லும் போது, குமரிக் கண்டத்தில் கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும்.


இத்தோடு முடிவதில்லை நமது தேடல். ஏன் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதி மட்டும் தான் கடலில் மூழ்கியதா? இல்லையே. அந்த மூழ்கிய உலகின் பிற நாட்டு பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்புகள் ஆச்சரியமானவை.

அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்...

தமிழினமே தயாராக இரு...


தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது.

மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது...

தமிழர்களின் அறிவை என்வென்று சொல்வது? பிறக்க போகும் குழந்தையை ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொன்னவர்கள் நம் தமிழர்கள்...


பிறக்கப்போவது ஆணா பெண்ணா?

ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்...

எப்படி? நீங்களும் சோதித்துப் பாருங்கள்..

குறுக்கு வட்ட கட்டங்களில் தாயின் வயது கொடுக்கப்பட்டுள்ளது. நெடுக்குள்ள கட்டங்களில் குழந்தை உண்டான (கருத்தரித்த) மாதங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, "X" என்பது ஆண் குழந்தையையும், "O" என்பது பெண் குழந்தையையும் குறிப்பிடுகிறது.

உதாரணமாக 27 வயது தாய் ஜனவரி மாதம் கருத்தரிக்கிறாள் என்றால் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்.

இந்த அட்டவணையின் பலனுக்கு 99% உத்தரவாதம் என்கிறார்கள்.

இந்த அட்டவணையின் ஒரிஜினல் சைனாவின் ராஜ குடும்பத்து நினைவு சின்ன ஸ்தூபியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது பீஜிங்கில் உள்ள விஞ்ஞான கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை  கண்டுப்பிடித்து நம் தமிழன்...

தமிழர்கள் புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?


நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன.

நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே, வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்...

திமுக வும் டூபாக்கூர் மது ஒழிப்பும்...







உலகில் உள்ள அனைத்து எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கிய முதல் எழுத்தைக் கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி...


உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம் என்று இவற்றில் ஏதோ ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.

ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா வடிவங்களையும் ( படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம்) உள்ளடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது.

நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" என்பதில் உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும் இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாகும்.

தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது...