24/07/2017

அதிமுக வும் தமிழின அழிப்பும்...


கிழக்கு கடற்கரை சாலையை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது மத்திய அரசு கேட்டது.

மாநில சாலையாகவே இருக்கட்டும் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றவேன்டிய அவசியம் இல்லை எனவும், அதற்கு ஈடாக 10,000 கோடி தருகின்றோம் என சொல்லியும் ஜெ.தரவில்லை.

அப்போதைக்கு நெடுஞ்சாலை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி.பழனிசாமி.

இன்று மாநில நெடுஞ்சாலையை மத்திய அரசிடம் தாரைவார்க்கிறார் முதல்வராக மாறிய எடப்பாடி பழனிசாமி.

இனி கடற்கரையில் அணல்மின் நிலையங்கள் அணிவகுக்கும், கேளிக்கைவிடுதிகள் கட்டப்படும், சொகுசுகப்பல் பயணம், ரயில் என  கொண்டாட்டங்களும்,கொள்ளைகளும் சிறக்கும்.

மீனவர்கள் கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்கள் படையெடுக்கும்.

மண்ணின் மைந்தர்கள் மண்ணைவிட்டு அப்புறபடுத்தபடுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.