17/04/2021

சோம்பேறிகளை தீவிரமாக தாக்கும் கொரோனா 🙄

 


வாழும் போதும் இறந்த பின்னரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரே நபர் விவேக் சார்...

ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...


அமானுஷ்யம் : மர்மமும் டுமாஸ் கடற்கரையும்...

 


குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரத்தில்  அமைந்துள்ள கடற்கரையின் பெயர் தான் டுமாஸ் (dumas). டுமாஸ் என்னும் கிராமபுரம் ஒட்டி அமைந்துள்ளது.

டுமாஸ் கடற்கரையின் மணல் கருப்பு நிறமாகவும் சிறிது சாம்பல் நிறமாகவும் காணப்படுகிறது. இதுவே இதன் திகில் கதைகளுக்கு ஆரம்பம்.

அங்கு பல மக்கள் காணாமல் போனதாகவும், சில இரவுகளில் விசித்திரமான விஷயங்கள் நடைபெருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னோர் காலங்களில் அங்கு இடுகாடு (சுடுகாடு)  இருந்துள்ளது அதன் காரணமாகவே அங்கு கருப்பு நிற மணல் காணப்டுகிறது.

அங்கு இருக்கும் மக்கள்,இங்கு கடற்கரையில் மக்கள் காணாமல் போவதுபோல் ஏதும் நிகழ்வது இல்லை என்று மறுக்கிறார்கள்.

இந்தியாவில் அதிக திகிழ்வவூட்டும் இடங்கள் பட்டியலில் முதல் பத்தில் இன்றும் இடம் பிடிக்கிறது.

அதற்கு காரணம் அங்கு நிகழும் கருப்பு நிற மணல் மற்றும் இரவில் சூழும் திகில் இருட்டு தான்.

சுற்றுலா பயணிகள் அங்கு புகைப்படம் எடுக்கும் போது அதில் எதோ மர்மமான உருவங்கள் தென்படுவதாக கூறுகின்றனர்.

அதற்கு காரணம் அங்கு அதிகளவில் காணப்படும் தூசு மற்றும் சாம்பலே என்றும் சிலர் கருதுகின்றனர்.

இன்றும் இரவில் அங்கு யாரும் செல்வதில்லை...

ஆசிரியர் Vs மாணவன்...

மாணவன் : கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்திய தலைநகரமா மாத்திரு.

ஆசிரியர் : ஏன்டா அப்படி வேண்டுறே?

மாணவன் : ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன் அதான் ?

ஆசிரியர் : எனக்கு வேலையே வேண்டாம் டா 😳 ?

மாணவன் : யாருகிட்ட 😁😁😁

கலியுக தேவதாஸ்...

 


உன் முகம் பார்த்து 

என் காதலை உன்னிடம் 

சொன்ன போது...


நீயும் சொல்லிருக்கலாம்...

உன்னை பிடிகவில்லைஎன்று...


மெளனமாக சம்மதம் 

சொல்லிவிட்டு...


இன்று எங்கோ 

பார்த்தபடி...


என்னை பிடிக்கவில்லை 

என்கிறாயடி...


பெண்ணே...

நான் கட்டிய என் காதல் 

கோட்டை நொறுங்கியதடி...


எப்படியெல்லாம் 

வாழ வேண்டும்...


மனகோட்டை 

கட்டினேன்...


என் மன கோட்டையும் 

மண்ணோடு மண்ணாய் போனதடி...


நினைத்த இந்த 

வாழ்கையை...


வாழ்ந்து பார்க்க 

ஆசை கொண்டேன்...


இன்று வாழ்க்கையையே 

வெருக்கிறேனடி...


உன்னாலும் நீ தந்த 

காயத்தாலும்.....

இதை இந்து காவலன், ஏழை தாயின் மகன் பாஜக மோடி மீது சத்தியமாக இது நான் சொல்லவில்லை 😆

 


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம வாகனங்கள் நடமாட்டம் - பொன்முடி...

 


இவனுங்கள இப்படிதான் பதட்டத்துலயே வச்சிருக்கனும்... 😀

தெலுங்கு நாயக்கர்களின் அற்பத்தனம்...

 


கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில், கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில், முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை ஒரு நாயக்கர் சிற்பம்.

எந்த நாயக்க மன்னன் எனத் தெரியவில்லை.

கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம்.

சராசரி உயரமுள்ள அரசன் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன.

இங்கு சிலையின் உயரமும் குறைவே.

சிலையை சுற்றி சிவகணங்கள் வணங்கியபடி அமர்ந்திருக்கின்றன. ஆனால், மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது.

இங்கேயிருந்த சிவன் சிலையைப் பெயர்த்து அந்த இடத்தில் நாயக்க மன்னனில் சிலையை நிறுவியிருக்கிறார்கள்.

வெட்கம் கெட்ட அற்பத்தனத்தின் அளவுகடந்த நிலை இது.

தெலுங்கு நாயக்கர்களுக்கு சோழர்கள் அளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளைச் செய்ய திறமையில்லை என்பதற்காக இப்படியா கீழ்த்தனமாக செய்வது?

இந்த இழிவான நாயக்க "சிலை திணிப்பு" தஞ்சை பெரியகோவில் உட்பட அனைத்து பெரிய கோயில்களிலும் உள்ளது.

முதலில் தமிழ் கலைகளை 'திராவிட கலைகள்' என்று திரிப்பதை தடுக்க வேண்டும்.

இதுபற்றி முறையான ஆய்வு நடத்தி திணிக்கப்பட்ட நாயக்கர்கால சிலைகளை பெயர்த்து வெளியேற்ற வேண்டும்..

இதுபற்றி எழுதிய எயில்நாடன் படங்களையும் இணைத்திருந்தார்.

அவர் எழுதிய அப்பதிவில் (கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை) தற்போது படங்கள் நீக்கப்பட்டுவிட்டன...

மனம் விட்டு சிரியுங்க.. வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்...



நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு SISTER...

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். 

நான் உண்மையிலேயே 'ஸ்வீட்' தான் குடுத்தேன்..

இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...

நீதிமன்றத்தின் ஏமாற்று வேலைகள்...

 


பிராடு பாஜக மோடியின் குஜராத் மாநிலத்தின் உண்மையான நிலை...

 


பிங்க் நிறத்தின் தாக்கம்...

 


மிகவும் முரட்டுத்தனமாக முரண்டு பிடிப்பவர்களை அகிம்சைவாதிகளாக மாற்ற வேண்டுமா?

அவர்களை அடித்து உதைத்து, சித்ரவதை செய்து மாற்ற முடியுமா? அல்லது தியானம் பயன்படுமா?

என்று கேட்டால்... இதில் எதுவும் பயன்படாது...

அவர் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ்.

வாஷிங்டன் ஜெயில்களில் பல அடாவடி பார்டிகள் அறையில் பிங்க் பூசிய பொது அவர்கள் சில மாதங்களிலேயே அகிம்சை வாதிகளாக மாறி விட்டார்கள்.

பொதுவாக பிங்க் நிறம் மென்மை மற்றும் பெண்மையை குறிக்கும்.

இயல்பாகவே பெரும்பாலான ஆண்களுக்கு பிங்க் பிடிப்பதில்லை. கோபத்தில் கொந்தளிக்கும் போது ஒருவரால் முழுதாக கோபத்தைக் காட்ட முடியாது..

ஏனெனில் இதயதசைகள் வேகமாக செயல்படாது..

பிங்க் நிறம் ஒருவருடைய ஆற்றலை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். இதனால் கோபம் குறைந்து சாந்தமாக மாறி விடுவார்கள்..

சாதாரண நிலையில் ஒருவர் இருந்தால் பிங்க் நிறம் லேசான சோம்பலை ஏற்படுத்தும்.

நிறக்குருடு பாதிப்பு கொண்டவர்களும் பிங்க் நிறத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்கிறார் ஸ்காஸ்..

ஹவாய் பல்கலைக்கழகத்தில் வெளியில் இருந்து விளையாட வரும் விளையாட்டு வீரர்களின் தங்கும் அறைகள் பிங்க் அல்லாத வேறு நிறத்தில் இருக்க வேண்டும் என்ற விதியே இருக்கிறது.

காரணம் எதிரணி பிளேயர்களின் அறைகள் பிங்க் நிறத்தில் இருக்க அவர்கள் சோம்பேறிகளாகி பல ஆண்டுகள் தொற்றுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான பாரிஸ் ஹில்டன் ஒரு பிங்க் பைத்தியம்..

ஒருகோடி ரூபாய் பென்ட்லி காரை விலைக்கு வாங்கி அதை அப்படியே பிங்க் நிறத்துக்கு மாற்றிவிட்டார்.

எந்த விழாவாக இருந்தாலும் பிங்க் நிறத்தில்தான் ஆடை அணிந்து வருவார்.

நான் அமெரிக்க அதிபரானால், வெள்ளை மாளிகையை பிங்க் மாளிகையாக மாற்றி விடுவேன்' என்று தைரியமாக சொல்லும் அளவுக்கு பிங்க் பைத்தியமாக ஹில்டன் இருந்தார்...

நம்ம வண்டியும் தான் இருக்குதே 😞

 


மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு- ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு...

 


மனம் என்றால் என்ன்.?



மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.

ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.

இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.

ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.

இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.

ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.

மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.

ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.

இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.

ஆகவே தான் மனிதப் பிறவியில் அதே நிலையில் இருப்பதால் தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...

பிராடு பாஜக மோடியும்... PM care கொள்ளையும்...

 


விபச்சார ஊடகமும்.. தடுப்பூசி நாடகமும்...

 


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?



ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்vஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை. (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...

ஏதோ என்னால முடிஞ்ச ஒரு கவிதை...

 


உன் கன்னங்களோ கனரா வங்கி.

கண்களோ கரூர் வைஸ்யா.

பற்களோ பஞ்சாப் நேசனல்.

இடுப்போ இந்தியன் ஓவர்சீஸ்.

நகங்களோ நபார்டு வங்கி. 

இதழ்கள் இந்தியன் வங்கி.

மெல்லிடையோ மெர்க்கண்டைல் வங்கி.

முத்து சிரிப்போ முத்ரா வங்கி.

அவள் பார்வையோ பாரத வங்கி.

அவள் தேகமோ தேனா வங்கி.

மொத்தத்தில் சில்லரைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த ரிசர்வ் வங்கி நீ.....

சில்லரைக்காக வரிசையில் நிக்கும் போது, இப்படி கவிதையெல்லாம் எழுத தோணுது...

எதையும் விளையாட்டா எடுத்துக்குவோம்..

வாழ்க்கை ஸ்மூத்தா போகும்...

நல்ல தீர்ப்புக்கள் விரைவில் வர வேண்டும்...

 


கொரோனா தடுப்பூசி இரகசியம்...

 


சென்னை மாநகராட்சி கட்டடத்தின் மீது இருந்த தமிழ் வாழ்க பெயர் பலகை அகற்றம்...

ஏன்? யார் சொல்லி யார் செய்தது? இந்த அதிமுக  கொத்தடிமைகள் கூட்டம் தாங்கள் சனாதன பிராமணிய RSS மனுதர்ம பாசிச பா ஜ க  வினர் கொத்தடிமைகள் கூட்டம் என்பதை நிரூபித்தார்கள்... 

சனாதன மனுதர்ம பிராமணியம் எப்படி தமிழை, தமிழக மொழி, தமிழக மக்கள் கல்வி, வேலைவாய்புகள், வாழ்வாதரத்தை அழித்து வருகிறது... கத்தியின்றி, இரத்தமின்றி, அடிமைகள், அதிகார வர்க்கத்தினர் மூலமாக எப்படி அழிக்கிறது என்பதை கண் கூடாக பாருங்கள்,  பூணூல் போடாத இந்து மக்களே... 

ஏதோ திசை திருப்பும் வேலை நடக்கிறது.

வன்மையான கண்டனங்கள்...

பாஜக மோடி அரசின் சாதனையை பாராட்டிய சியட் டயர் நிறுவனர் சிஇஓ 😁

 


நீட் தேர்வுக்கு செருப்படி கொடுத்த சுந்தர் பிச்சை...

 


தினமும் சாக்லெட் சாப்பிடுங்க...

 


ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாக்லெட் தின்றால், அது அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயனை தருகிறது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாக்லெட்டை தினமும் தின்றால், அவர்களுக்கு மாரடைப்பு, பக்க வாதம் ஆகியநோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

சாக்லெட்டுகளில் குறிப்பாக கறுப்பு சாக்லெட்டுக்களில் பிளவானோல்ஸ் என்ற ரசாயன பொருள் உள்ளது.

அது ரத்த குழாய்களில் ரத்தம் தாராளமாக ஓட உதவுகிறது.

ரத்த அழுத்தநோயும் 5 சதவீத அளவுக்கு குறைகிறது...

பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளைப் போக்க சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்...



பல பெண்களுக்கு பாதங்கள் வறண்டு போவது, பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுவது ஆகிய பிரச்சனைகள் உள்ளன. இது அவர்களின் கவனக்குறைவைக் காட்டும் அடையாளமாகும். நாம் நமது கைகளையும் கால்களையும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள தேவையானவற்றைச் செய்கிறோம், ஆனால் நமது பாதங்களின் தேவைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமது பாதங்கள் பல்வேறு வகையான பரப்புகளைத் தொடுகின்றன, தொட்டுக் கடக்கின்றன, பல்வேறு வானிலைகளை எதிர்கொள்கின்றன, ஆகவே அவற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஸ்பா செல்வதும் அழகு நிலையங்களுக்குச் சென்று பாதப் பராமரிப்பு செய்துகொள்ளவும் அதிக செலவாகும், பலருக்கு அதற்கெல்லாம் நேரமும் கிடைப்பது கடினமாக இருக்கலாம். பாதங்களின் வெடிப்புகளைப் போக்கவும், பாதங்களை மென்மையாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

காய்கறி எண்ணெய் மாஸ்க் (Vegetable oil mask)..

காய்கறி எண்ணெய்கள் எளிதில் கிடைக்கின்றன, இவை பாதங்களின் வெடிப்புகளைச் சரிசெய்ய மிகவும் உதவக்கூடியவை. பாதங்களுக்கு ஈரப்பதத்தை அளிக்க, வழக்கமான மாய்ஸ்டுரைஸர்களுக்குப் பதிலாக, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அவை இன்னும் சிறப்பாக வேலை செய்யும். இவற்றைப் பயன்படுத்தும் முறை எளிதானது - இவற்றில் நீங்கள் விரும்பும் எண்ணெயை பாதத்தில் ஊற்றித் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரவு படுக்கச் செல்லும் முன்பு இதனைச் செய்யுங்கள். இதை ஒரு சில வாரங்கள் செய்தால் வியத்தகு பலன்களைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். இதனைப் பயன்படுத்தும் முன்பு பாதங்களைக் கழுவி நன்றாக சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கிளிசரின் மாஸ்க் (Glycerine mask)..

கிளிசரின் மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கும். அத்துடன் பன்னீரைச் சேர்த்துக்கொண்டால், பாதங்களில் வெடிப்புகளை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த பலன் கிடைக்கும். கிளிசரின் சருமத்தை மென்மையாக்குகிறது, பன்னீர் பாதத்தின் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் அதற்குத் தேவையான வைட்டமின்களையும் அளிக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன்பு, பன்னீரையும் கிளிசரினையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, கலந்து பாதங்களின் வெடிப்புகளின் மீது தேய்த்து பாதம் முழுதும் மசாஜ் செய்து கொண்டு தூங்கச் செல்லுங்கள்.

எலுமிச்சைச் சாறு (Lemon juice)

எலுமிச்சை சாறு இறந்த செல்களை அகற்ற மிகவும் உதவக்கூடியது, மேலும் இதில் அமிலத் தன்மை இருப்பதால் அது வெடிப்பு உண்டாகிய பாதங்களில் இருந்து உலர்ந்த சருமத்தை அகற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்தாள், களைப்படைந்த பாதங்கள் விரைவில் புத்துணர்வு பெறும். மேலும், ஒரு ஸ்கரப்பரைப் பயன்படுத்தித் தேய்ப்பதன் மூலம் பாதங்களின் சருமத்தில் இருந்து இறந்த செல்களை அகற்றலாம். இதில் பன்னீரையும் சேர்த்துக்கொள்ளலாம். அது வெடிப்புகளை குணப்படுத்த இன்னும் உதவியாக இருக்கும். எலுமிச்சைச் சாற்றுடன், கிளிசரின், பன்னீர் ஆகியவற்றையும் சேர்த்தும் வெடிப்புகளில் பூசலாம்.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil)..

தேங்காய் எண்ணெயை கிட்டத்தட்ட அனைத்துக்கும் பயன்படுத்தலாம். வெடிப்புண்டான பாதங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதைப் பயன்படுத்தலாம். தூங்கச் செல்லும் முன்பு, பாதங்களில் சிறிது தேங்காய் எண்ணெயைப் பூசிக்கொண்டால் போதும். தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்டுரைசராகச் செயல்படுகிறது, அது பாத வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் சருமத்தின் பல அடுக்குகளையும் ஊடுருவிச் சென்று ஒட்டுமொத்த சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் வித்தியாசத்தை கண்கூடாகக் காண்பீர்கள்.

இவை உங்கள் பாதங்களை மென்மையாக்கி வெடிப்புகளை சில நாட்களில் சரிசெய்யக் கூடியவை. பயன்படுத்திப் பலன் பெறுங்கள்...

இந்தியாவின் படிக்காத மேதை...

 


ஒரு வெட்டிப்பயலுக்கு 100 ரூபாய் கிடைத்தது.. 

5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றான். 

வயிறு புடைக்க சாப்பிட்டான்.. 

3000 ரூபாய் பில் வந்தது. 

நேரே மேனேஜரிடம் சென்றான். 

பணம் இல்லை என்றான். 

மேனேஜர் அவனை போலீசில் ஒப்படைத்தார். 

அவன் போலிஸ்க்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்து வெளியே வந்துவிட்டான். 

இது தான் இந்தியாவில் MBA படிக்காத financial management என்பது...

எவ்வளவு திமிர் இருந்திருந்தால் யார் ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களை கைப்பற்றுவேன் என்று சொல்வான்?

 


நம்ப முடியாத உண்மைகள்...

 


மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)...

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.

மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

பிராடு பாஜக வும்.. டூபாக்கூர் அதிமுக வும்...