17/04/2021

கலியுக தேவதாஸ்...

 


உன் முகம் பார்த்து 

என் காதலை உன்னிடம் 

சொன்ன போது...


நீயும் சொல்லிருக்கலாம்...

உன்னை பிடிகவில்லைஎன்று...


மெளனமாக சம்மதம் 

சொல்லிவிட்டு...


இன்று எங்கோ 

பார்த்தபடி...


என்னை பிடிக்கவில்லை 

என்கிறாயடி...


பெண்ணே...

நான் கட்டிய என் காதல் 

கோட்டை நொறுங்கியதடி...


எப்படியெல்லாம் 

வாழ வேண்டும்...


மனகோட்டை 

கட்டினேன்...


என் மன கோட்டையும் 

மண்ணோடு மண்ணாய் போனதடி...


நினைத்த இந்த 

வாழ்கையை...


வாழ்ந்து பார்க்க 

ஆசை கொண்டேன்...


இன்று வாழ்க்கையையே 

வெருக்கிறேனடி...


உன்னாலும் நீ தந்த 

காயத்தாலும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.