05/09/2018

வ.உ.சி பிறந்ததினம் இன்று...


இறப்புக்குப் பிறகும் வ.உ.சி. புறக்கணிக்கப்பட்டது பெரும் துயரத்தின் வரலாறு..

தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கி வைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை.

பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான்.

நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்து போகாதா வெள்ளையர் ஆதிக்கம்? என்று கர்ஜனை செய்தார்.

அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் மனத் துணிவைப் பெற்றனர்.

வண்ணார் சமூகத்தினர் ஆங்கிலேய அதிகாரிகளின் துணிகளை வெளுக்க மறுத்தனர். நாவிதர்களோ சவரம் செய்ய மறுத்தனர். தூத்துக்குடியில் வசித்துவந்த வெள்ளையர்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் தங்குவதற்கு அஞ்சி, படகுகளில் சென்று ஏழு மைல் தூரத்தில் நடுக் கடலில் உள்ள முயல் தீவில் போய் உறங்கிவிட்டு அதி காலையில்தான் திரும்பி வருவார்கள். அந்த அளவுக்குப் பொதுமக்களுக்கு எழுச்சியூட்டினார் வ.உ.சி.

வெள்ளையர்களை ‘மூழ்கடித்த’ கப்பல்..

வெள்ளையர்களை விரட்டுவதென்றால் நம்மவர் களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று நினைத்தார் வ.உ.சி. இத்திட்டத்தின் விளைவுதான் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’.

இத்திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. இந்தக் கப்பல் கம்பெனிக்கு ரூ. 2 லட்சம் தேவை என்று பாரதி குறிப்பிட்டிருந்தாலும், வந்துசேர்ந்த நிதி.

ரூ. 200-தான், சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1,000-ஐக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல முயற்சிகளுக்குப் பின்னர், ‘எஸ். எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

அச்சமயத்தில், “நான் ஆரம்பித்த இக்கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல. மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று வ.உ.சி. பேசினார்.

சுப்ரமணிய சிவா இடைமறித்து, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; மூட்டை முடிச்சுகளை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்த நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள் தானே” என்று கர்ஜித்தார்.

சுதேசிக் கப்பலின் வருகையால் அதிர்ந்து போன ஆங்கிலேய அரசு, சுதேசிக் கப்பலுக்கு எதிராகப் பல சதிகளில் ஈடுபட்டது. ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன்’ கம்பெனி பயணக் கட்டணத்தைக்கூடக் குறைத்தது.

ஆனாலும், தேசப்பற்று மிக்க மக்கள் இந்தச் சதியைப் புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-யின் சுதேசிக் கப்பல்களை ஆதரித்தனர்.

வெள்ளையர் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்படச் செய்தார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.

பற்றியெரிந்த திருநெல்வேலி..

தமிழகத்தில் புரட்சி மனப்பான்மையை ஊட்டிய வங்கச் சிங்கம் விபின் சந்திரபாலரின் விடுதலையை 1908 மார்ச் மாதம் 9-ல் வ.உ.சி-யும் சுப்ரமணிய சிவாவும் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்திக் கொண்டாடினார்கள்.

இதனால் வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரைச் சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் கலகம் ஏற்பட்டது.

வெள்ளையர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட வ.உ.சி. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1908-ல் பாளையங்கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார்.

முடக்கிப்போட்ட சிறை..

ஏ.எஃப். பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிதம்பரனார் மனைவி மீனாட்சி அம்மாள், நெல்லையப்பர் மற்றும் நண்பர்கள் மேல் முறையீடு செய்து தண்டனையைக் குறைக்க முற்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இதற்கு மேல் தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்ய வழி இல்லாத போது சிதம்பரனார், ‘‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’’ என்ற வெண்பா பாடலை நெல்லையப்பருக்கு எழுதி அனுப்பினார்.

சிறைத் தண்டனையைப் பயன்படுத்தி, சுதேசிக் கப்பல் கம்பெனியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுச் சீரழிக்கத் தொடங்கியது. வ.உ.சி. சிறை வாழ்வில் பட்ட துன்பங்கள் பற்றிய தகவல்களை ‘துன்பம் சகியான்’ என்ற புனைபெயரில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு முதன்முதலாக அனுப்பி வைத்தார் நெல்லையப்பர்.

விடுதலைக்குப் பின்னரும் துயரம்..

1912-ல் வ.உ.சி. விடுதலை அடைந்து வந்தபோது, அவரை வரவேற்கத் தேசபக்தர்கள் திரண்டு வரவில்லை. சுப்ரமணிய சிவாவும் சுரேந்திரநாத் ஆர்யாவும்தான் வந்திருந்தனர். காலச் சுழற்சி வ.உ.சி-யின் வாழ்வில் மோசமான வறுமையையும் சோகத்தையும் மட்டுமே தந்தது. திலகர் சகாப்தத்துக்குப் பிறகு, தோன்றிய காந்திய சகாப்த மாறுதல்கள் வ.உ.சி-க்கு உவப்பளிக்க வில்லை. சிறுவயல் என்ற கிராமத்தில் ப. ஜீவா நடத்திய ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றார் வ.உ.சி. அங்குள்ள ராட்டைகளைப் பார்த்துவிட்டு, ‘‘இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?’’ என்று ஜீவாவைக் கேட்டார். அவர் “ஆம்!” என்று சொன்னவுடன், ‘‘முட்டாள் தனமான நிறுவனம்! வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே’’ என்று கோபப்பட்டார்.

சிறைத் தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடர இயலாமல் போய்விட்டது. குடும் பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சி-க்கு வியாபாரம் செய்யத் தெரியவில்லை.

இப்படியான இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.

தமிழ்ப் பணி..

பல துயரங்களுக்கிடையே வ.உ.சி-யை மனதளவில் ஆசுவாசப்படுத்தியது தமிழ்ப் பணிதான். மதுரை பிரமானந்த சுவாமிகள் மடத்தில், சோமசுந்தர சுவாமி களிடத்தில் வ.உ.சி. ‘கைவல்ய நவநீதம்’ பயின்றார். ‘சிவஞான போத’த்துக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். சைவதீட்சை பெறாத வ.உ.சி. மெய்கண்டார் அருளிய ‘சிவஞான போத’த்தின் உரையை சைவ சமயத்தினர் மறுத்தனர். வ.உ.சி-யின் அன்புக்குப் பாத்திரமான சகஜானந்தர் வ.உ.சி-யின் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ போன்ற நூல்களை வ.உ.சி. மொழி பெயர்த்துள்ளார். திருக்குறள் - மணக்குடவர் உரையை அவர் பதிப்பித்தார். திருக்குறள் நீதிக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட மெய்யறம், சுயசரிதைப் படைப்பிலக்கியமும் படைத்துள்ளார்.

வ.உ.சி-யின் நீண்ட வாழ்வில், அரசியல்ரீதியாகப் புறக்கணிப்புக்கு உட்பட்டவராகத்தான் காணப்படுகிறார்.

வ.உ.சி-க்குச் சிலை அமைக்க ம.பொ.சி. முற்பட்டபோது, காங்கிரஸ் தன் கட்சி நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்தது.

பல்வேறு போராட்டங்களுக்கு இடையே தான் வ.உ.சி-யின் சிலைவைப்பு விழா நடந்தேறியது.

இறப்புக்குப் பின்னரும் துயர வரலாறு நீண்டாலும் மக்கள் மனதில் கப்பலோட்டிய தமிழராக கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி...

திக எனும் திருட்டு திராவிடத்தின் சாதி ஒழிப்பு இது தான்...


நாயர் என்பது படிச்சி வாங்குன பட்டமா ராம்சாமி...

மாணவி சோபியா சிறையிலடைப்பு : பாஜக தமிழிசையின் அதிகார வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன்...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்...

முனைவர் பட்ட ஆய்வை கனடாவில் முடித்துவிட்டு, சொந்த ஊர் தூத்துக்குடிக்கு திரும்பிய மாணவி சோபியா சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த வானூர்தியில் பயணம் செய்திருக்கிறார். அதே வானூர்தியில் பயணம் செய்த பா.ச.க. தலைவர் தமிழிசை சௌந்தரராசன் அவர்களைப் பார்த்ததும், மனம் கொதித்து “பாசிச பா.ச.க. ஆட்சி ஒழிக!” என்று முழக்கமிட்டிருக்கிறார்.

இதற்காக வானூர்தியிலிருந்து இறங்கி கீழே வந்தவுடன் வரவேற்பறையில் அம்மாணவியிடம் சண்டைக்குப் போயிருக்கிறார் தமிழிசை! அந்தக் காட்சி காணொலியாக ஓடிக் கொண்டுள்ளது. காவல்துறையினரும் மற்றவர்களும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், தடுத்தும் தமிழிசை அவர்கள், நிற்காமல் மேலும் மேலும் அந்த மாணவியை நோக்கி வலிந்து செல்கிறார். ஆனால், மற்றவர்கள் அவரை தடுத்து விட்டார்கள். அப்போது, அவர் காவல்துறையினரிடம் தன்னை தாக்க வந்ததாகவும், தன் உயிருக்கே ஆபத்து என்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் புகார் கொடுக்கிறார். இந்த மாணவிக்குப் பின்னால் ஏதோ ஒரு “தீவிரவாத” அமைப்பு இருக்கிறது என்றும் ஆதாரமில்லாமல் கூறுகிறார்.

இந்தப் பொய்ப் புகாரை ஏற்று காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு – 290 (பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்யும் வகையில் பேசுதல்), 505 (1)(b) – காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் 75 (1)(c) (மாநகரக் காவல் சட்டம்) – அரசதிகாரியின் கேள்விக்கு விடை கூறாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சோபியாவை சிறையில் அடைத்துள்ளார்கள். இவற்றில் 505 - பிணை மறுப்புப் பிரிவாகும்.

அதேவேளை, அம்மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை இழிவுபடுத்திப் பேசி  அவமானப்படுத்தியதுடன் தாக்க முயன்ற பா.ச.க.வினர் மீது, அம்மாணவியின் தந்தை காவல்துறையிடம் கொடுத்த புகாரை பதிவு செய்யாதது கண்டனத்திற்குரியது.

விமானத்தில் பயணம் செய்யும்போது, ஓர் அரசியல் தலைவருக்கு எதிராக முழக்கம் போட வேண்டியதில்லை என்பது சரிதான்! ஆனால், தூத்துக்குடியில் 13 உயிர்கள் பலியாவதற்குக் காரணமான பா.ச.க. ஆட்சி, அதன் மாநிலத் தலைவர் தமிழிசை என்ற முறையில், அந்த மண்ணின் மகளுக்கு அடக்க முடியாத சீற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

பா.ச.க.வின் பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளின் உச்சமாக மனித உரிமை இயக்கங்களின் தலைவர்களாக விளங்கும் மக்கள் செல்வாக்கு பெற்ற பாவலர் வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்த கொடுமை – உலகெங்கும் வாழும் மனித உரிமை ஆர்வலர்களின் நெஞ்சத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்துள்ளது.

இச்சூழ்நிலையில், அம்மாணவி தமிழிசையைப் பார்த்தவுடன் பொங்கியெழுந்த ஆவேசத்தில் முழக்கமிட்டிருக்கலாம். காந்தியத்தில் நம்பிக்கையும், அரசியலில் பக்குவமும் தமிழிசைக்கு இருந்திருந்தால், வானூர்தியை விட்டு இறங்கியவுடன் அப்பெண்ணை அன்பாக அருகே அழைத்து, “என்னம்மா உனக்குக் கோபம்?” என்று கேட்டு, அம்மாணவியை ஆற்றுப் படுத்துவதற்கு முயன்றிருக்கலாம்.

இரண்டாவதாக பா.ச.க.வின் எதேச்சாதிகார நடவடிக்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பின் அடையாளம் என்று இதைப் புரிந்து கொண்டு, தன் கட்சியின் தலைமைக்கு இதை எடுத்துரைத்து, தன் கட்சி தற்சோதனை செய்து கொள்ள கேட்டுக் கொண்டிருக்கலாம்!

அந்த அறவழியை விடுத்து, அதிகார வெறியோடு அந்த இளம்பெண் மீது பாய்வதும், அவர் மீது பொய் வழக்குப் போட வைப்பதும் நாகரிகச் சமூகம் செரித்துக் கொள்ள முடியாத செயலாகும்!

கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொய்ப் புகாரை பதிவு செய்து, அப்பெண்ணை சிறையில் அடைக்க காவல்துறைக்கு ஆணையிட்ட மேலதிகாரி யார், அரசியல் தலைவர் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்கள் மீது தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழிசை சௌந்தரராசன் அவர்களுடைய அதிகார ஆணவத்தையும், பழிவாங்கும் சினத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

நீதிமன்றம் என்பது கார்பரேட்களுக்கானது...


ஸ்ரீ தேவி உடலை கொண்டுவர அக்கறை காட்டிய அரசு சாமானியன் உடல்மீது காட்டுமா ?


சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழந்த கணவர் - இரண்டு மாதமாக உடலை மீட்கப் போராடும் குடும்பம்...

சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்கக் கோரி இரண்டு குழந்தைகளோடு தனியாகப் போராடி வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பெண்.

சிவகங்கை வள்ளிசந்திர நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவரின் மனைவி செல்வராணி இவர்களுக்கு சுபாஷினி (15) மற்றும் கார்த்திகை செல்வி  (13) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகரத்தினம் கடந்த 2 வருடத்துக்கு முன்னர் சவுதி அரேபியாவில் உள்ள நக்மோர் என்ற இடத்தில் டிரைவர் வேலைக்குச் சென்றார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் 17-ம் தேதி விபத்தில் நாகரத்தினம் இறந்து விட்டார். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பப் பணம் கட்ட வேண்டும் என்ற கூறிவிட்டார்கள். வறுமையான நிலையில் வாழும் செல்வராணி, தன் கணவரின் உடலை ஊருக்குக் கொண்டுவர உதவிடும்படி ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அவர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுக்கொடுத்தார். மேலும், சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில் நாதனிடமும் தன் கணவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர உதவிடும்படி கோரிக்கை மனு கொடுத்தார்...

திராவிடர்கள் விதைத்த புரட்சி விச களைகளில் இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியுமோ...


கர்மயோகம் அருள் விளக்கங்கள்...


கர்ம யோகம் என்பது கடமை அறம் என்பதாகும். தனக்கும் சமுதாயத்திற்கும் எந்த துன்பமும் விளைவிக்காமல், நன்மையே தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழ்வது கர்ம யோகம்.

கர்மம் என்றால் செயல். செயல் என்பது கடமையை குறிக்கின்றது. கடமை என்பது நன்றி உணர்வு.

தொப்புள்கொடி (பிறப்பு) அறுப்பது முதல் அரைஞான் கயிறு (இறப்பு) அறுப்பது வரை மனிதனானவன் பிறருடைய உதவியால் வாழ்ந்து வருகிறான்.

அவனது வாழ்வில் அவன் சாதித்ததாக நினைக்கும் அனைத்தும், அவன் பெற்றது அனைத்தும் சமுதாயத்தால் அவனுக்கு அளிக்கப் பட்டவைகளே.

இதை மனித மனம் உணர்ந்து தன்னால் இயன்ற அளவு, தன்னுடைய அறிவைக் கொண்டும் பொருளைக் கொண்டும், உடலைக் கொண்டும் சமுதாயத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்து இன்புறுவது கடமை ஆகும். இதுவும் ஒருவகையில் தொண்டு ஆகும்.

யோகம் என்றால் அறவாழ்வு. அறவாழ்வு என்பது விளைவறிந்த விழிப்பு நிலையில் தனது எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்தி சமுதாயத்திற்கும், தனக்கும் ஒத்தும் உதவியும் வாழக்கூடிய வாழ்வு ஆகும்.

இறைநீதி ஆனது நமது செயல்களுக்கு ஏற்ற விளைவாக இன்பத்தையோ துன்பத்தையோ அளிக்கிறது என்பதை உணர்ந்து நன்மைகளை மட்டுமே ஆற்றி இன்பத்தை மட்டுமே பெற்று வாழ்வது விளைவறிந்த விழிப்பு நிலை ஆகும்.

நம்மை வாழவைக்கின்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பி செலுத்துவதே கர்ம யோகம் எனும் கடமை அறம் ஆகும்...

ஒரு நிறுவனம் எப்படி மக்களுக்காக முழுவதுமாக செயல்படும்...?


அது எப்போதுமே வணிகர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொள்ளும்...

இந்தியாவின் பிரபலமான இலுமினாட்டி கையாள்கள் / ஃபிரீ மேசன்கள் (India's famous freemasons / illuminati agents...


இந்த பதிவில் இந்தியாவின் பிரபலமான ஃபிரீ மேசன்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன.

நீங்களே படியுங்கள் அந்த கொடுமையை...

NEWS LETTER FREEMEN

Sr. No 2/4Originally published on April 1st, 2007

Dear Brethren,
After my last News Letter, many brethren have written to me to know more about well known Free masons from India. They are:-

PRESIDENTS OF INDIA :

1.President Dr. Rajendra Prasad – Freedom fighter and the first President of Independent India.

2.President Dr. S. Radhakrishnan – First  Vice President and the second President of Independent India.

3.President Fakhruddin Ali Ahmed.

KINGS / PATRIARCHES OF INDIA :

1.Maharaja Ganga Singh of Bikaner.
2.Maharaja Duleep Singh of Punjab.
3.Maharaja Randheer Singh of Punjab.
4.Maharaja Digvijay Singhji of Nawanagar.
5.Maharaja Mahinder Bhupinder Singh of Patiala.
6.Maharaja Yadvinder Singh of Patiala.
7.Maharaja Sir Bhawani Singh of Jhalawar.
8.Maharaja N.N. Bhup of Coochbehar.
9.Maharaja J.N. Bhup of Coochbehar.
10.Maharaja R.J. Bhup of Coochbehar.
11.Maharaja Viziaram Raj – Maharaja of Vizianagaram.
12.Maharaja Chhatarsinghji of Rajpipla.
13.Maharaja Mayurdhwaj Jaladhip of Dhrangadhara.
14.Thakursaheb Daulatsinhji – Prince of Limdi.
15.Sir Gangadharrrao Patwardhan – Prince of Miraj.
16.Shrimant Shankarrao Patwardhan – Ruler of Jamkhandi.
17.Balasaheb Pant – Aundh Pratinidhi of Chhatrapati Shahu Maharaj.
18.Pantbahadur Raghunathrao Shankarrao – Chief of Bhor.
19.H.H. Maj. General Sir Syed Reza Ali Khan – The Nawab of Rampur.
20.H.H. Maj. General Sir Syed Ahmed Ali Khan – The Nawab of Rampur, The First Grand Master of the Grand Lodge of India, when it was formed in November 1961.
21.H.H. Sahebzada Abu Samad Khan – Royal family of Rampur
22.H.H. Ibrahim Khan – Nawab of Sachin.
23.H.H. Mirza Husain Yawar Khan – Nawab of Cambay.
24.Sheikh Abdul Khaliq, heir apparent of Magrol.
25.Maharajkumar Mohammad Amir Hyder Khan of Mahmudabad.
26.Khan Mohammed Tolay - Nawabzada of Palanpur.
27.Syed Hussam Bilgrami – Nawabzada Utmullah Bahadur of Hyderabad State.
28.Nawab Jung Nawab Hyder, Hyderabad State.
29.Nawab Sir Amin Jung Jung Bahadur, Hyderabad State.
30. Chintamanrao Patwardhan – Chief of Sangli (Royal family of Miraj). (1921-1980)
31.Sampatrao Gaikwad, Sorbga of Baroda State.
32.Shrimant Bhau Ramrao Venkatrao of Ramdurg State.
33.Diwan Suryashankar Mehta of Bhuj.
34.Maharaja Jaya Chamaraja Wadeyar of Mysore
35.Srikanta Datta Narasimharaja Wadiyar
36.His Holiness Sir Sultan Mohamed Shah, Aga Khan
37.The Nawab Of Pataudi Mansur Ali Khan
38.Lt.Gen.H.H.Maharaja Jivaji Rao Scindia ,Maharaja of Scindia
39.Mr Madhav Rao Scindia , Maharaja of Scindia
40.Maharaja of Bobbili
41.Maharaja Amrinder Singh of Patiala, Punjab & former Chief Minister of Punjab.
42.Maharajkumar Mohammad Amir Hyder Khan
43.Nawabzada Khan Mohammed Tolay
44.Nawabzada Syed Hussam Bilgrami
45.Nawab Jung Nawab Hyder
46.Nawab Sir Amin Jung Jung Bahadur
47.Sampatrao Gaikwad
48.Shrimant Bhau Ramrao Venkatrao
49.Sir C.P. Ramaswamy Iyer – Divan of Travancore.
50.H. H. Marthanda Varma of State of Travancore..

GOVERNERS :

1.Dr C Gopalachari 1st Governor General Of India
2.Dr. P.V. Cherian – Governor of Maharashtra.
3.Immunidin Nawab of Laharu Governer of Hiachal Pradesh & Haryana

INDUSTRIALSTS OF INDIA :

1.Sir Dorabji Jamshedji Tata – Barrister, Industrialist.
2.J.R.D. Tata – Doyen of Indian Industry and Chairman of the House of Tatas, India’s leading Industrial House. JRD was a French Mason.
3.Goculdas Narottam Morarjee – Owner of the Morarjee Goculdas Spinning Mills.
4.Ebrahim Currimbhoy – Mill Owner.
5.Ramesh Mafatlal – Mafatlal Industries
6.Dr Gaur Hari Singhania – Singhania Industries
7.Sitaram Jaipuria-
8.Rai Bahadur Kundan Lal – Dalmia Industries
9.Dwarkadas Narainji – Merchant Prince.
10.Purshottamdas Thakurdas – Textile merchant and mill owner.
11.T.G. Khaitan – Mill Owner.
12.Dharamsey Morarjee – Mill Owner.
13.Narsingir Pratapgir – Mill Owner.
14.Mohammadbhoy Currimbhoy Ebrahim – Businessman, Merchant Prince.
15.Sir Purushotamdas Thakurdas. Industrialist - Cotton magnate of Mumbai
16.Ebrahim Rahimtulla Currimbhoy – Merchant.
17.S.V. Sista – a leading name in the Indian advertising scene.
18.Ayaz Peerbhoy - a leading name in the Indian advertising scene.
19.G. L. Raheja. Well known Builder
20.Jamshed NUSSERWANJI GUZDER Mr. Guzder, is a prominent figure in the businessman and industrialist of Mumbai.
21.Cav.Dr.G.K Devarajulu. Industrialist. textile industry
22.Ardaseer Cursetjee Wadia was the first Indian to be elected a fellow of  the Royal Society; he was the first to introduce lighting by gas in  Bombay. The picture of the First day Cover issued by the Post and telegraphs department depicts the gas lamps installed by him in one of the streets in Bombay. he was the first to build an ocean going steam vessel in India.
23.V N Sharma, Industralist Vaidyanath Ayurvedic.
24.Rai Saheb Devi Dass Mehra. Railway Contractor

POLITICAL LEADERS :

1.W.C. Bannerjee - A founder member of the Indian National Congress.
2.Pandit Motilal Nehru – Freedom fighter and father of Pandit Jawaharlal Nehru, the first Prime Minister of India.
3.Dr. B.G. Kher - First Chief Minister (then called the Hon. Prime Minister) of Bombay State after Independence.
4.Dr. Badruddin Tyabji – President, Indian National Congress, Madras, 1887. Judge of the Bombay High Court, 1895. Presided over the Mahomedan Educational Conference, Bombay 1903 and pleaded for women education and abolition of purda. Was associated with Aligarh College. Died August 11, 1909
5.Sir Sayyad Ahmad Khan Dahlavi – President of the BombayLegislative Assembly.
6.Sardar Sir R.J. Vakil – Minister, Governor’s Council of Bombay.
7.DADABHAI NAOROJI:- Appointed Dewan of Baroda, 1874. Nominated to  Bombay Legislative Council 1885. President,  Indian National Congress,  Calcutta 1886. Lahore,1892 and, Calcutta 1906. Elected to Parliament from Central Finsbury 1892. Published his great book, "Poverty and  Un-British Rule in India". Died 1917
8.Sir. Rash Behari Ghosh Member, Bengal Legislative Council 1889. Member of the Imperial Legislative Council 1891 and 1893. President of the Faculty of Law, Calcutta University 1893-1895. Member of the Congress delegation to England 1917. Presided over the joint session  of  Indian Congress Committee and the Council of the  Muslims League at Calcutta 1917.
9.Sir. Phirozeshah Mehta :- Founder President of the Bombay  Presidency Association. Associated with the Congress from its very inception.  Member, Bombay Legislative Council,  1886. President Indian National Congress, Calcutta 1890. Elected to the Imperial Legislative Council 1893. Knighted 1902.  Vice-Chancellor of the Bombay University. In 1911, started the Central Bank of India. Founded the Bombay Chronicle in 1913.

LEGAL LUMINAIRES OF INDIA :

1.Justice D.P. Madon
2.Justice Prakash Narain.
3.Justice P.N.Khanna
4.Justice G Ramanujam
5.Justice S.S.Ali
6.Justice R Bhattacharya
7.Justice V Ramaswamy
8.Justice S Natarajan
9.Chief Justice A.B.Saharya
10.Justice S Padmanabhan
11Justice V Ratnam
12Justice B.S.Sinha
13Chief Justice Devinder Gupta
14Justice U Sinha
15Justice A. R. Lakshmanan (S.C.)
16Justice S Jagadeesan
17Justice K Veeraswami
18Justice T Ramprasad Rao
19Justice N. S. Ramaswamy
20Justice R N Mittal
21Chief Justice D S Sinha
22Justice S K Mahajan
23Justice D D Sood
24Bhulabhai Desai – Advocate.
25Sir Justice N.G. Chandavarkar
26P.M. Kanga – Solicitor.
27Justice J.B. Kanga
28Justice D.D. Davar
29Sir Chimanlal Setalvad
30.Justice Dr. Badruddin Tyabji

RELIGOUS PERSONALITIES OF INDIA :

1.Swami Vivekananda - Philosopher and theologian known all  over the world.
2.Keshub Chunder Sen(1838-1884) a Bengali intellectual and a noted religious reformer. Keshub Chunder Sen was a leading light of the  Brahmo Samaj for several decades. Later, he established a  syncretic school of spiritualism, called the Nabo Bidhan or 'New Dispensation', which he intended to amalgamate the best principles of Christianity and of the western spiritual tradition with Hinduism.

SOCIAL REFORMERS and PHILANTHROPISTS :

1.Sir Jamsetjee Jeejeebhoy – Philanthropist and social  reformer.
2.Dadabhoy Nowroji Tata-First Indian to be elected to the British house of Commons in the 19th century.
3.D.L. Vaidya – Solicitor, Philanthropist and social reformer.

MEDICAL PRACTITIONERS :

1.Sir Bhalchandra K. Pradhan –Medical Practitioner, after whom Sir Bhalchandra Road, Dadar, Mumbai is named.
2.Dr. Sir Tehmuiji Nariman – Medical Practitioner.
3.Dr. R.N. Cooper – Medical practitioner after whom the Dr. R.N. Cooper Muncipal General Hospital is named.
4.Dr. D.R. Bhandarkar – Indologist after whom the Bhandarkar Institute of Indology, Pune is named.
5.Dr. Shantilal J. Mehta, the doyen of the medical profession in India who translated Seth Lokoomal Chanrai's vision into reality. Founder Jaslok Hospital.

ENTERTAINERS / ARTISTS :

1.Tagore, Gaganendranath (1867-1938) painter and art connoisseur
2.Parikshit Sahni – Well known film actor and son of actor Balraj Sahaney.
3.David Abraham – yesteryear Character actor in hindi film.
4.Ashok Kumar Ganguly.

EDUCATIONISTS :

1.M.R. Jayakar – Bar-at law, Vice Chancellor of Poona University.

2.Prof M S Thacker.

3.Sir Reginald Spence founder of Barnes School, Nashik.

4.Hardeep Sikand.

5.Sir Syed Ahmed Khan Bahadur. 1817 –1898, commonly known as Sir Syed, was an educator who pioneered modern education for the Muslim community in India by founding the Muhammedan Anglo-Oriental College,which later developed into the Aligarh Muslim University.

SERVICEMEN :

1.C.A.Ramakrishnan, I.C.S.

2.Romesh Chandra Dutt started of his administrative career in the year 1871, as an Assistant Magistrate, Alipore. Later on he worked as Relief Officer in Meherpur, Nadia and in Dakhin Shahbazpur, Bakerganj. He was  the District Magistrate of Bankura, Balasore, Bakerganj, Pabna, Mymensingh, Burdwan, Midnapur etc. He was the Division  Commissioner of Orissa, the highest position reached by any Indian ever.

 3.Lt. Gen. Kalwant SinghGOC-in-C, Western Commond.
4.M.P. Kapadia – Assistant Commissioner of Income Tax.
5.D.R. Pradhan – Chief Secretary, Govt. of Maharashtra.
6.R.K. Saiyad – Director of Postal Services.
7.Sorab M. Bharucha – District Collector of Thane District.

and many others Brotherly yours

Thanks : KAPS

http://lovkap.blogspot.in/2010/12/famous-freemasons-from-india.html

பாசிச பாஜக ஆட்சி ஒழிக...


தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்......


சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம், தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதரவற்ற சிறுவனை காவல் உதவி ஆணையர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டை, சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி பரிமளா (33). இவர்களது ஒரே மகன் கார்த்திக் (15). இவர் மயிலாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கோவிந்தராஜன் ஏற்கெனவே, காலமாகி விட்டார். தாயின் அரவணைப்பில் கார்த்திக் இருந்தார். வேறு உறவினர்கள் இல்லை.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு 11 மணிக்கு முன் விரோதம் காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (18), பரிமளாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதனால் தாயை இழந்து கார்த்திக் ஆதரவற்று போனார்.

இதைத் தொடர்ந்து அயனாவரம் காவல் சரக உதவி ஆணையரான எம்.பாலமுருகன் தற்போது சிறுவன் கார்த்திக்கை அரவணைத்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் பாலமுருகன் கூறியதாவது: கடந்த 31-ம் தேதி பரிமளா கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை நடந்தது எனது காவல் சரகத்துக்கு உட்பட்டது.

எனவே, நான் நேரடியாக சென்றேன். கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்து விட்டீர்களா என தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டேன்.

அவர், "கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளார்.

அவரை காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளோம்" என்று கூறி சிறுவன் கார்த்திக்கை காட்டினர்.

அவரது தாய் கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்து விட்டீர்களா என மீண்டும் ஆய்வாளரிடம் கேட்டேன். இல்லை என்று பதில் வந்தது.

எப்படியும் மகனிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுவன் கார்த்திக்கிடம் அவனது தாய் கொல்லப்பட்ட செய்தியை தெரிவித்தேன்.

இதைக் கேட்ட சிறுவன் நிலை குலைந்தான்.

அவனுக்கு கதறி அழவோ, சத்தம் போட்டு கூச்சலிடும் வயதோ இல்லை.
ஆனால், தான் ஆதரவற்ற நிலையில் இருந்த நிலையை விவரிக்க முடியாத நிலையில் ஒரு வகையான சோகத்தோடு அப்படியே அமர்ந்தான்.

பின்னர், அவனை சமாதானம் செய்தேன். நீ கவலைப்படாதே.

உன் அம்மா இருந்து செய்வதைவிட அதிகமாக செய்வோம் என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன்.

அன்று இரவு தூக்கமே வரவில்லை. மனம் தத்தளித்தது.

யாருமே இல்லை என்றால் சிறுவன் என்ன செய்வான்.

எதிர்காலத்தில் பழிக்குப் பழியாக கொலைகாரனாகி விடக் கூடாது. அவனை எப்படியாவது ஆதரிக்க வேண்டும் என்று எண்ணினேன்.
அன்று இரவோடு இரவாக என் மனைவி கலா ராணியுடன் இதுகுறித்து விவாதித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

ஏற்கெனவே, 2 குழந்தை உள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை நமக்கு சுமை அல்ல என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்த நாள் காலையிலேயே சிறுவன் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம், கார்த்திக்கின் முழு பாதுகாவலன் இனி நான்தான் என்றும் அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் நானே செய்வேன் எனவும் எழுதி கொடுத்துவிட்டு, எனது செல்போன் எண்களையும் கொடுத்தேன்.

மேலும், அன்றே கார்த்திக்கை எனது வீட்டுக்கு அழைத்து உணவளித்தேன். எனது மகனுக்குள்ள உடைகளை அவனுக்கு அளித்தேன்.
தற்போது கார்த்திக்கும் எனது இன்னொரு மகன்தான்.

அவன் எனக்கு சுமை அல்ல சுகம்தான்.
சிறுவனுக்கு உறவினர்கள் யாரும் உள்ளனரா என்பதை ஆய்வு செய்தபின், எதிர்காலத்தில் சட்டப்படி அவனை மகனாக தத்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
காவல் உதவி ஆணையர் பாலமுருகனை யும் அவரது குடும்பத்தினரையும் பலர் பாராட்டினர்.

அவரது பெருந்தன்மை சக காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...

நீட் தேர்வும் சர்வதேச சதியும்...


இதுதான் சனநாயகம் என்ற பணநாயகத்தின் உண்மை முகம்...


அடையாளம் கொண்டு அதிகார வர்க்கத்தை ஒருபோதும் எதிர்க்காதீரகள், அது உங்களை அழித்து விடும் இல்லை விலைக்கு வாங்கிவிடும்..

அடையாளமற்ற மனிதர்களாக ஒருமித்த கருத்துக்களால் ஒன்றிணையுங்கள், அதன் வலிமை ஆகச்சிறந்தது...

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்..


இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்...

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்...

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள்.

இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்.

நான்கு கப் மூன்றாக குறையும்.

சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....

சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

ஹைட்ரோகார்பன் சதிகள்...


பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


கனடா நாட்டில் கணிதம் பயின்று, முனைவர் பட்டத்துடன் தூத்துக்குடி, திரும்பிய சோபியா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று நடத்திய போராட்டத்தில் 13பேர் சுட்டு கொல்லப்பட்டதை ஒட்டிய விவாதத்தில் பாஜக ஒழிக என்ற தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்காக தமிழிசை தலைமை செயலாளரோடு தொடர்பு கொண்டு கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பது பாஜக ஆட்சியா? தமிழிசையின் ஆட்சியா?

மன்னிப்பு கேட்டால் கைது இல்லை என்ற போதிலும் இது எனது உணர்வு என்று திரும்ப பெற மாட்டேன் உறுதியை நிலை நாட்டிய சோபியாவை வாழ்த்துகிறேன்.

இவ்வாறான இன்றைய தலைமுறையால் தான் ஜனநாயகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது...

தமிழர்களின் உண்மையான வழிபாடு : சிறுதெய்வ வழிபாடு... குலதெய்வ வழிபாடு...


சிறுதெய்வ வழிபாடு தமிழர்களின் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது..

தங்களின் மூதாதயர்களை நினைவில் நிறுத்த இந்த வழிபாடு செய்யப்படுகிறது..

மாசி பெரியண்ணன் : பெரியசாமி ஒரு கிராம காவல் தெய்வம். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணனை அழைக்கின்றனர்.

சோழிய வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகிய சமூகங்களின் குலதெய்வமாக மாசி பெரியண்ணன் வணங்கப்படுகிறார்.

கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசி குன்றில் இவரது கோவில் அமைந்துள்ளது. இவர் காசியிலிருந்து வந்த சிவரூபமாக எல்லோரும் வணங்குகின்றனர். மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சுடலை மாடன் : சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம்..

சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.

கோனார், தேவர், பறையர், நாடார் ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குலத் தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார்.

சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.

கறுப்புசாமி : கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம்.

கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு.

கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

மதுரை வீரன் : மதுரை வீரன் ஒரு கிராம காவல் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் சில கிராமங்களில் இருந்து வருகிறது.

மதுரை வீரன் வழிபாடு ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

அய்யனார் : அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம்.

பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது.

குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

இசக்கி அம்மன் : இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம்.

இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி , சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன்.

உண்மையில் தமிழர்கள் தன்மானதோடும், வீரத்தோடும், பண்பாடோடும் இயற்கையையும், தங்கள் குலத்தை காத்தவர்களையும் தெய்வமாய் வழிபட்டு வந்திருந்தினர்.

இன்னும் பல தெய்வங்கள் உள்ளன...

நம் வழிபாடு இயற்கையை சார்ந்ததே...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்...


தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்...


ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை...

அவநம்பிக்கை
அவசரம்
அமைதியின்மை

அவநம்பிக்கை...

அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது. இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப் பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. மேலும் இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பர்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரம்மாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்பிற்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).

அவசரம்...

அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை...

மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனதை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மனசக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்...

பாஜக வின் சட்டமும் நீதித்துறையும்...


மத்தியப்பிரதேச பாஜக எம்எல்ஏ மகன் மாதவராவ் சிந்தியா மகனை நீ வெளியே வாடா சுட்டு கொள்கிறேன் என நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளான்...

இவனை இந்த சட்டம் தண்டிக்குமா?

இதுக்கு என்ன சொல்றீங்க சங்கிகளே ..

தமிழினமே விழித்துக்கொள்...


இந்து என்று சொல்லிக் கொண்டு கோவிலுக்கு செல்வதை நிறுத்துங்கள்...

இதன் மூலம் இந்துத்வா வீழ்ச்சி அடையும்...

உங்கள் முன்னோர்களை வீட்டிலே வணங்குங்கள்...
இயற்கையை வணங்குங்கள்...
காவல் தெய்வங்களை வணங்குங்கள்...
குலதெய்வங்களை வணங்குங்கள்...

இவையே தமிழர் வழிபாடு...

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


இங்கு மனிதனை தாண்டி பெரிய சக்திகள் எதுவும் இல்லை... மனித அறிவுக்கு அப்பாற்ப்பட்டு எதுவும் இல்லை, விஞ்ஞானத்தால் விடைகாண முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை, என்றெல்லாம் நாம் மார்தட்டிக் கொண்டிருக்கும் வேளையில்...

நம்மால் என்றுமே கண்டுபிடிக்க முடியாத சில மர்மங்களை தனக்குள் வைத்துக்கொண்டு உள்ளது.

அதில் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள் போன்ற ஆஸ்கெட் இன மக்களின் ஜியோமேட்டரி..

மனித முகம் மற்றும் ஊர்வன கடவுள் அமைப்புகள் இவை கனடாவில் உள்ள சில இடங்களில் சின்ன சின்ன குன்றுகள் மலைகள் மீதும் இந்த உருவ அமைப்புகள் உள்ளன.

ஆஸ்கெட் இன மக்கள் Aztec 1325 A.D. - 1519 A.D. ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மேலும் இந்த மலைகளில் இவர்களின் ஊர்வன கடவுள் அமைப்பு உள்ளது. இது அவர்களின் கடவுள் தங்களை விண்ணிலிருந்து காண்பதற்க்காக உருவாக்கி இருக்கலாம் என தோன்றுகிறது.

மேலும் ஆஸ்டெக் இன மக்கள் ஆதிவாசிகள். மாயன்களை போன்று  அவர்களுக்கு இந்த அளவுக்கு ஜியோமேட்டரி அறிவு இருக்க வாய்ப்பே இல்லை இது ஊர்வன வேற்றுக்கிரக வாசிகளால் தான் உருவாக்கி இருக்க முடியும். அவர்களிடம் அப்படி ஒரு தொழில் நுட்பம் இருந்திருக்கலாம்.

லேசர் கருவி போன்ற எதையோக் கொண்டு அந்த பகுதியில் உள்ள குன்றுகளில் இந்த அமைப்புகளை செதிக்கியிருக்க வேண்டும்.

அவர்கள் பூமியில் தன்னை வழிபாடும் மக்களின் வடிவங்களை அடையாளத்துக்காக உருவாக்கி
இருக்கலாம் என்றும் தோன்றுகிறது...

மீண்டும் இந்தியளவில் செருப்படி வாங்கும் பாஜக...


பாஜக_ஒழிக

பாசிச_ஆட்சி_ஒழிக

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு...


ஆரோக்கியமான உடல் நலத்திற்கு சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை.

கீரை: கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்க வேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள்.

அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறு சிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

பால் மற்றும் பால் பொருட்கள்: இதே போல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும் பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப் போக்கு நோய்கள் குறையும்.

மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணைய் ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.

தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணைய் குளிர்த் தன்மை உடையது.

தண்ணீர்: நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது.

குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது.

அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது.

எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும்.

பயறு வகைகள்: பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.

பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும்.

பெருங்காயம் தேக வாயுவை குறைத்து வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் விற்பனை திட்டம்...


சிங்கள இனவாதமும்... தமிழர் வரலாற்று திருட்டும்...


கி. பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் கி. பி.  4ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் பாழி மொழியில் புத்த சமயக்குரவர்கள் இயற்றிய ‘மகாவம்சம்’, ‘தீபவம்சம்’ எனும் இரண்டு நூல்களைத் தழுவியே சிங்கள மொழியின் வரலாறும் சிங்கள வடுகரின் வரலாறும் இட்டுக்கட்டி எழுதப்பட்டன. 

அந் நூல்கள், சிங்கள வடுகர்களை ‘வந்தேறிகள்’ (Settlers) என்றே குறிப்பிடுகின்றன.1

“According to Mahavamsa and Dipavamsa, written by Buddhist monks of the Anuradhapura Maha Viharaya in Sri Lanka, around the 3-5th century, an ancient treatise written in Pali, the Sinhalese are descendants of the settlers who came to the island in 543 BCE from Sinhapura in India, led by Prince Vijaya.” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_people)1

சிங்கள மொழி நான்கு காலக்கட்டங்களின் ஊடே வளர்ந்ததாம்.  பின்வருவனதான் அந் நான்கு காலக்கட்டங்கள்:

1. ‘சிங்களப் பாதகம்’ (Sinhalese Prakrit) - கி. மு. 3/2ஆம் நூற்றாண்டுமுதல் கி. பி. 3ஆம்  நூற்றாண்டுவரை;
2. முந்தைச் சிங்களம்    - கி. பி. 3ஆம் நூற்றாண்டுமுதல் கி. பி. 7ஆம் நூற்றாண்டுவரை;
3. இடைக்காலச் சிங்களம்   - கி. பி. 7ஆம் நூற்றாண்டுமுதல் கி. பி. 12ஆம் நூற்றாண்டுவரை;
4. இக்காலச் சிங்களம்    - கி. பி. 12ஆம் நூற்றாண்டுமுதல் இன்றுவரை.

இவற்றில், மிக முந்தைய ‘சிங்களப் பாகதக்’ கல்வெட்டு கி. மு. 3/2ஆம் நூற்றாண்டிற்குரியதாம்.2 

“Sinhalese Prakrit (until 3rd century CE)
“Proto-Sinhalese (3rd – 7th century CE)
“Medieval Sinhalese (7th – 12th century CE) “Modern Sinhalese (12th century – present)” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_language)2

கூறப்படும் ‘அசோகன் பிரமி’ எழுத்தமைதியிலான கல்வெட்டுதான் சிங்கள வடுகர்கள் கூறும் ‘சிங்களப் பாகதக்’ கல்வெட்டு போலும்.  ஆயினும், கி. பி. 9ஆம் நூற்றாண்டில்தான் சிங்கள மொழியில் முதன்முதலில் இலக்கியம் தோன்றியதாகச் சிங்களர்களே கூறுவது, அதற்கு நேர்மாறானது.3

“The oldest Sinhalese Prakrit inscriptions found are from the third to second century BCE following the arrival of Buddhism in Sri Lanka,[12][13] the oldest extant literary works date from the ninth century.” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_language)3

கூறப்படும் ‘அசோகன் பிரமி’ எனும் ‘தமிழி’ எழுத்தைக் காட்டிச் சிங்கள மொழிக்குக் கி. மு. 600ஆம் ஆண்டளவிலேயே தனி வரிவடிவம் இருந்ததாகச் சிங்கள வடுகர்கள் கதைவிடுகின்றனர்.  கி. பி. 6ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ‘தக்கிணத் தூபத்தில்’ (Dakkhina Stupa) தமிழ் வட்டெழுத்தில் சிங்களத்தில் எழுதியுள்ளதை வைத்து, அவ் வட்டெழுத்தும்கூடச் சிங்கள எழுத்துத்தானென அவர்கள் பொய்யுரைக்கின்றனர்.4

(https://sirimunasiha.wordpress.com/2012/01/02/the-script-of-sri-lanka/)4

ஆனால், பொலனறுவையை கி. பி. 1153 முதல் 1186 வரையில் ஆண்ட முதலாம் பராக்கிரம்பாகுவின் ஆட்சிக்காலத்தில்தான் சிங்கள மொழிக்குத் தனித்த வரிவடிவம் இருந்ததென்பதைப் ‘படவியக் கல்வெட்டு’ (Padaviya Inscription) காட்டுகிறது.  அந்தக் கல்வெட்டிலிருக்கும் சமற்கிருதப் பகுதியும் சிங்கள வரிவடிவத்தில்தான் உள்ளது.  அக்காலத்தில் சமற்கிருதத்திற்குத் தனி வரிவடிவம் இலங்கையிலும் இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.5

(https://sirimunasiha.wordpress.com/2012/01/02/the-script-of-sri-lanka/)5

பாழி மொழியில் ஓதப்பட்டுவந்த புத்த மறைகளான ‘திப்பிடங்கள்’, கி. பி. முதல் நூற்றாண்டு வரையில் வாய்வழியில் ஓதப்பட்டுவந்த ‘எழுதாக்கிளவி’களாயிருந்தன.  ஏனெனில், பாழி மொழிக்கு அதுவரை சொந்த எழுத்து வடிவமே இல்லை.6 

“The Pali Canon, having previously been preserved as an oral tradition, was first committed to writing in Sri Lanka around 30 BCE.” (https://en.wikipedia.org/wiki/Buddhism_in_Sri_Lanka)
“Aluvihare Rock Temple was the historic location where the Pāli Canon was first written down completely in text on ola (palm) leaves.” (https://en.wikipedia.org/wiki/Aluvihare_Rock_Temple)6

புத்தப் பிடகங்கள் குலைந்தும் குறைந்தும் மறைந்தும் வருவதைக் கண்ணுற்ற புத்த சமயத் துறவிகள், அனுராதபுரத்தில் கூடி அப் பிடங்களை வருங்காலத் தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென முடிவு செய்தனர்.  அதைச் செய்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான் ஒதுக்குப்புறமாயிருந்த மாத்தளையிலிருந்த ஆலுவிகார மலைக்கோவில்.  தமிழ்நாட்டிலிருந்து வந்த படையெடுப்புகளிலிருந்து புத்த சமய மறைகளைப் பாதுக்காக்கும் நோக்கில்தான் மாத்தளை விகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  500 புத்த சமயத் துறவிகளை அழைத்துவந்து, அவரவர்க்குத் தெரிந்த பிடகங்களை ஓதச்செய்து, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றைத் தமிழ்முறையில் பனை ஓலைகளில் எழுத்தாணியைக் கொண்டு [தமிழ் வரிவடிவத்தில்] திப்பிடகங்களை எழுதிவைத்தனர்.  அவ்வாறு எழுதிவைத்த காலம் கி. மு. 30ஆம் ஆண்டு என்று சொல்லப்படுகிறது.7

“The monks who left to India and to the hilly areas of Sri Lanka, during the difficult period, returned to Anuradhapura, and decided to transcribe the Tripiṭaka (philosophical doctrines of Buddhism) for the preservation and for the use of future generations. The monks selected Aluvihare Rock temple in Matale as the most suitable and secured place to carry out this important event. This transcription was carried out due to the fear that the doctrine would be lost during the upheaval caused by repeated South Indian invasions.[5] It is said that 500 scholarly monks congregated at Aluvihare Rock temple to perform the difficult task of first reciting the doctrines and agreeing on an acceptable version before transcription. The entire transcription was done in books made of ola leaves, locally known as puskola poth. These books were made up from thick strips created from the leaves of either the palmyra or talipot palm and the doctrines were written down in Pali language. A metal stylus was used to inscribe the characters on the ola leaves.” (https://en.wikipedia.org/wiki/Aluvihare_Rock_Temple)7

கி. பி. 5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ‘புத்தகோசர்’ எனும் புத்த சமயக்குரவர் திப்பிடகங்களுக்கு உரை எழுதினார்.
கி. பி. 4ஆம் நூற்றாண்டில் பாழி மொழியில் எழுதப்பட்ட ‘மகாவம்சம்,’ கி. பி. 13ஆம் ஆண்டில் ‘தம்மகீத்தி’ என்பவரால் இயற்றப்பட்ட ‘சூலவம்சம்’ ஆகிய நூல்கள் சிங்களரின் வரலாற்றைக் கூறுகின்றன.8

“Early recorded history of the Sinhalese is chronicled in two documents, the Mahavamsa, written in Pāli around the 4th century CE, and the much later Culavamsa (probably penned in the 13th century CE by the Buddhist monk Dhammakitti).” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_people)8

வடஇந்தியாவிலிருக்கும் ‘சுப்பாகரகம்’ எனும் இடத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இளவரசன் விசயன், பிழைப்பு தேடி 700 பேருடன் கடல்வழியாகப் பயணித்து ஈழத்திலிருக்கும் மன்னாரில் வந்திறங்கினான்.  அப் பகுதியை ஆண்டுவந்த ‘குயினி’ எனும் தமிழ் (இயக்கர்) அரசியை மணந்து, பின்னர் அவளையே கொன்றுவிட்டு தம்மபண்ணி அரசை நிறுவினான்.  அவனுக்குப்பின் நாட்டை யார் ஆள்வது என்பதில் குழப்பம் தோன்றியது.  அதனால், தம் தாயகமான ‘சிம்மபுரத்’திலிருந்த தன் தம்பி ‘சுமித்தன்’ என்பானை உடனே வருமாறு விசயன் ஓலை விடுத்தான்.  அந்த ஓலை சுமித்தனுக்குக் கிடைப்பதற்கு முன்பே விசயன் இறந்துவிட்டான்.  சிங்களப் புத்த சமயநூல்கள் இவ்வாறெல்லாம் கூறுகின்றன.9

“Prince Vijaya and his 700 followers left Suppāraka,[21] landed on the island at a site believed[by whom?] to be in the district of Chilaw, near modern-day Mannar, and founded the Kingdom of Tambapanni.[22][23] It is recorded the Vijaya made his landing on the day of Buddha's death.[24] Vijaya claimed Tambapanni his capital and soon the whole island come under this name. Tambapanni was originally inhabited and governed by Yakkhas, having their capital at Sirīsavatthu and their queen Kuveni.[25] According to the Samyutta Commentary, Tambapanni was one hundred leagues in extent.
“After landing in Tambapanni Vijaya met Kuveni the queen of the Yakkhas, who was disguised as a beautiful woman but was really a 'yakkini' (devil) named Sesapathi.[26]
“At the end of his reign, Vijaya, having trouble choosing a successor, sent a letter to the city of his ancestors, Sinhapura, in order to invite his brother Sumitta to take over the throne.[27] However, Vijaya had died before the letter had reached its destination, so the elected minister of the people[28] Upatissa, the Chief government minister or prime minister and leading chief among the Sinhalesebecame regent and acted as regent for a year. After his coronation, which was held in the Kingdom of Tambapanni, he left it, building another one, bearing his own name.” (https://en.wikipedia.org/wiki/Sinhalese_people)9

உண்மை இவ்வாறிருக்க,

“சுமார் 400 ஆண்டு காலம் எழுத்துவடிவம் இல்லாமல் மனப்பாடம் செய்யப்பட்ட அந்த சூத்திரங்களை இலங்கையில் பரப்பியபோது தமிழி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி, மாத்தளை எனும் ஊரில் கி. மு. 80 ஆம் ஆண்டு முதன்முதலாக எழுத்துவடிவத்தில் எழுதினர்”

என்று முகநூலில் பதிவிட்ட இராயபுரம் ந. சத்யா என்பவரின் பதிவை மருத்துவர் மதிவாணன் பகிர்ந்தார். 

அதைக் கண்டு,

“கி. மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே ஸ்ரீலங்காவில் ஆயிரக்கணக்கான சாக்கிய சிங்கள எழுத்து கல்வெட்டுக்கள் இருக்கும்போது, கி. மு. 80இல் தமிழ்நாட்டிற்கு வந்து சாக்கிய தமிழ் எழுத்துக்களை கற்றுக் கொண்டு போனார்கள் என்று சொல்வது வரலாறா!  கோனார் தமிழ் உரை கதையா?”

என்று கருத்துரைப்பது வரலாற்று மெய்ம்மைகளுக்குப் பொருந்தவில்லை.   அஃது என்ன ‘சாக்கியத்’ தமிழ்; ‘சாக்கியச்’ சிங்களம்?  சிங்களத்தை ஏத்தி, தமிழைத் தாழ்த்துவது ஏனோ?  அதுவும் தமிழரில் மூத்தகுடியைச் சேர்ந்த ஒருவர் சொந்த தாய்மொழியைத் தாழ்த்துவது சரியாமோ?  மத உணர்வும் சாதி உணர்வும் தமிழுக்கு எதிராகத் தமிழரையே திருப்பிவிடும் கோலத்தையே இது காட்டுகிறது.

- ஆய்வறிஞர் குணா (12.7.2017)...

தமிழகத்தில் வேகமாக விவசாயத்தை அழிக்கும் பாஜக - அதிமுக...


நீங்கள் ஏன் பாமக வை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு என் பதில்.?


பாமக தற்போதைய உலக அரசியலை கணித்து ஆரிய திராவிட தலித்திய கம்யூனிச அரசியலை புரிந்து புறந்தள்ளி தமிழர் கட்சியாக தனித்து செயல்படுவதாலும்..

மேடை பேச்சில் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல்.. எவ்வழியில் மக்களுக்கு நல்லது பெற்று தர முடியுமோ அவ்வழிகளிலும் (சட்ட ரீதியாக) செயல்படுவதாலும்.. 

தமிழர் கட்சிகளில் அனைவரும் அறிந்த வளர்ந்த கட்சி என்பதாலும்..

ஐ.நா வில் உறுப்பினர் என்பதாலும் ஆதரிக்க வேண்டிய கடமை உள்ளது..

திராவிடத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வளர்ந்த தமிழர் கட்சியை எதிர்த்து அழித்து விட்டு எந்த தமிழ்தேசியம் படைப்பது?

சட்டம் யாருக்கானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்..


காதல் vs காமம்...


இங்கு பலர் அன்பு, பாசம், காதல் மற்றும் காமம் எல்லாம் ஒன்று என்று சொல்லிகிறார்கள். அது தவறு...

அன்பு...

மனிதன் மிருகம் மீதும்
மரங்கள் மீதும்
பறவைகள் மீதும்
அறிமுகம்  இல்லா மனிதர்கள் மீதும் வைப்பது தான் அன்பு.

இதில் எந்த ஒரு எதிர்பார்ப்புகள்  இல்லாமல் இருக்கும்.

பாசம்...

அம்மா அப்பா குழந்தைகள் மீதும்
மனிதன் தான் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீதும்
நண்பர்கள் மீதும்
உறவினர்கள் மீதும்
வைப்பது பாசம் ஆகும்.

இங்கு அனைவரும் நமக்கு தெரிந்தவர்கள் பிடித்தவர்கலாக இருப்பார்கள்.

காதல்...

காதலன் காதலி மீதும்
காதலி காதலன் மீதும்
கணவன் மனைவி மீதும் 
மனைவி கணவன் மீதும்
வைப்பது தான் காதல்.
இது ஒரு உயர்த்த செயல்.

ஆண் அல்லது பெண் தனது மனதை ஒருத்தன் அல்லது ஒருத்தியிடம் மட்டுமே முழுமையாக கொடுத்து இருப்பார்கள்.

காமம்...

இதில் தான் பலரும் குழப்பி கொள்கிறார்கள்..

மனிதன் ஒரு பட நடிகை மீது வைப்பது
பெண் ஒரு நடிகன் மீது வைப்பது தான் காமம்.

ஒருவனின் தோற்றம் கொண்டு காம உணர்வுகலின் ஆசைகள்.

ஒரு தப்பான  படத்தில் நடிக்கும் பெண்ணை பலருக்கும் பிடிக்கும் ஆனால் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்வார்களா மாட்டார்கள்.

அவர்களுக்கு அவளிடம்  இருந்து காமம் மட்டுமே  வேணும் காதல் அல்ல.

படத்தில் நடிப்பவர்கள் பணத்திற்காகவும் காமத்திற்காக நடிப்பார்கள் அங்கு காதலை பார்க்க முடியாது.

பொய்யான பாடல்கள் மற்றும் உருவங்கள் காதலில் வராது.

ஒரு பெண் தனது உயிரையும் ஒருவனுக்காக கொடுக்க நினைக்கிறாள் என்றால் மட்டுமே அவன்மீது தீராத காதல் வைத்து இருக்கிறாள் என்று அர்த்தம்.

உண்மை காதல் கிடைத்தவன் வாழ்வு சொர்கம்..

காமம் ஒரு கலை...

காமம் மற்றும் காதல் கலந்த வாழ்வே  கணவன் மனைவி இடையில் இருக்க வேண்டிய ஒன்று.

மனிதன் தனது வாழ்கைமுறை யை விலங்குகள் இடத்தில் இருந்தே கற்று கொண்டான்.

அதன் வாழ்கை பொறுத்து அதற்கு மரியாதையும் அளித்தான்...

திமுக வின் ஒசி சோறு உபிக்கள்...


கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது ஏன்?


ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதாவது இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நாம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது . அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் அங்கே பொட்டு வைபோம்.

இது எல்லோரும் கடைபிடிக்கும் சம்ப்பரதாய முறை , ஆனால் திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறககு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அது தான் நடு நெற்றி வகுடு.

இந்த இடத்தில தினமும் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரபிகள் தூண்டபடுகிறது.

பெண்களுக்கு நெற்றி வகுடுவில் தினமும் தொடுவதால் அவர்களுக்கு அடி வயற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டபடுகிறது. அதே போல் கர்ப்பபையும் வலு பெறுகிறது .

திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வமும் கர்ப்பபை வலு பெறவேண்டும் என்பதற்காக தான் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைதுள்ளனர்.

மேலும் சீமந்தம் , ஐந்து அல்லது எழாவது மாதம் வளைகாப்பு வைத்து செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள், இதனால் கர்பப்பை வலுபெறுகிறது. கர்பப்பை வலுபெற்றால் குறை பிரசவம் உண்டாகாது . நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.

ஆனால் கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்ட படாமல் இருபதற்காக கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடுவில் உள்ள பொட்டை வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றனர்.

ஆனால் பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல் பொட்டே வைக்க கூடாது என்று மாற்றி விட்டனர்.

ஆனால் இருபுருவ மத்தியில் உள்ள பொட்டு ஆண் பெண் எல்லோரும் எல்லா நாளும் வைக்கலாம்...

பாஜக - அதிமுக வின் அரசு பயங்கிரவாதம்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


மனிதன் புதியனவைகளை கண்டால் பயப்படுகிறான் என்ற இந்த கூற்றை பலர் மறுத்தாலும்… உண்மை இது தான்…

வேற்றுக்கிரகவாசிகளும் இல்லை; பறக்கும்தட்டுகளும் இல்லை;
அவை எல்லாமே கட்டுக்கதைகள் என சத்தியம் செய்து மறுக்கும் மனிதர்கள் இந்த ஆதிவாசிகளின் மனநிலையிலேயே இருப்பதாக நினைக்கிறேன்.

அதாவது இங்கு பிரச்னை என்னவென்றால், "வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா அல்லது இல்லையா  என்பதைவிடவும், அதுபோன்ற மனிதர்கள் ஒருவேளை இருப்பார்களேயானால், பூமிக்கு அவர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற கவலை தான் அதிகம்...