18/07/2021

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : போக்குவரத்து துறை...


போக்குவரத்து துறை:

1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.

2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.

4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்பட வேண்டும்..

வாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாக்க வேண்டும்..

5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புனும் செல்லும் வகைச் செய்து  கண்காணிப்போடு  விபத்தை தடுக்கப்பட வேண்டும்..

6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும்...

1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:

 1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து புன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.

 2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.

3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி

இவைதவிர...

2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து :

சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-கோடியக்கரை-மணமேல்குடி-தொண்டி-இராமேஸ்வரம்-கீழக்கரை-தூத்துக்குடி-திருச்செந்தூர்-உவரி-கன்னியாகுமரி-குளச்சல்.

என அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:

1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.

 2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.

3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்க வேண்டும்..

சென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்க வேண்டும்...

என் கண்ணீரும் இரத்தம் வடிக்கிறது டீ...

 



முகம் காட்டும் கண்ணாடியிலும்
உனை பார்க்கிறேன்..

எனை தொலைத்து 
நானும் உனை தேடுகிறேன்...

அறிவுக்கு தெரியும் நீ எனை
பார்க்க மாட்டாய் என்று..

பாவம் என் இதயம்
விடை தெரிந்த கேள்விக்கு 
விடை தேட சொல்கிறது 
என் கண்களை...

அழகாக நடிக்கின்றன என் கண்களும்
உனை கண்டு விட்டேன் என்று
இரத்த கண்ணீர் விட்டபடி .....

எச்சரிக்கை மக்களே...

 


ஊடகங்கள் தன் மாமா வேலையை தொடங்கியது...

 


யோவ் எடப்பாடி வெள்ளரிக்காய் தான் இருக்கு வேணுமா..? 😝😂😅

 


ஹிப்னாடிசம் எனும் மனோவசியம்...

 


நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடுதான் பிறப்பெடுத்துள்ளோம்.

எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.

கடவுளின் மறுவடிவம் தான் நாம்.

அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.

நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.

ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.

உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன்மூலம் சரி செய்யலாம்...

கணவன் Vs மனைவி...

 




புருசன் மொபைல நோண்டிக்கிட்டும் பொண்டாட்டி சீரியல் பாத்துக்கிட்டும் வீட்ல வெட்டியா பொழுபோக்கிட்டு இருக்காங்க..

திடீர்னு மனைவிக்கு பளீர்னு ஒரு ஐடியா..

ஏங்க எனக்கு போரடிக்குது அந்த மொபைல கொஞ்சம் கீழ வைங்க.....

ஏண்டி எனக்கும் போரடிக்கணுமா....

அதில்லீங்க.. போரடிக்காம இருக்கறதுக்கு நாம ஒரு கேம் வெளயாடலாமா?

ஹைய்யா...நான் ரெடி....என்னா கேமு சொல்லு.....

இந்தா, இந்த பேப்பர்ல நான் எனக்குப் புடிச்ச அஞ்சு ஆம்பளைங்க பேர எழுதுறேன். நீங்க உங்களுக்குப் புடிச்ச அஞ்சு பொம்பளைங்க பேர இன்னோரு பேப்பர்ல எழுதுங்க...

சரி....

இந்தாங்க என்னோட லிஸ்டு.... உங்களோடத காட்டுங்க...

மனைவி லிஸ்ட்..

1. ரஜினிகாந்த் 
2. கமல்ஹாசன் 
3. அஜீத் 
4. விஜய் 
5. சூர்யா    

புருசனோட லிஸ்ட்...

1. மல்லிகா (கொழுந்தியாள்)
2. கமலா (பக்கத்து வீட்டுக்காரி)
3. ஷாலினி (பொண்டாட்டியோட பிரெண்டு)
4. லீனா (பையனோட க்ளாஸ் டீச்சர்)
5. லலிதா (பழைய காலேஜ்மேட்)
நீதி...
பெண்கள் கனவில் வாழ்கிறார்கள். ஆண்கள் யதார்த்த உலகில் இருக்கிறார்கள்.
அடுத்த ஒரு வாரத்துக்கு புருசனுக்கு ஓட்டல்ல சாப்பாடு, திண்ணைல பாய்😂

ஊழல் மன்னன் அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...

 


திமுக ஸ்டாலினின் ஏமாற்று வேலைகள்...

 


காமராசரை அடித்துப்போட்ட ஜஸ்டிஸ் கட்சி, அதிஸ்டவசமாக உயிர்தப்பிய நிகழ்வு...

 


ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிற போது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள்,  ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள்.

மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள்.

வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.

‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.

மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.

விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்' தெரிவிக்கிறது.

(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

இதேபோல ம.பொ.சி எழுதிய 'எனது போராட்டம்' நூலிலும் தன்னை ஜஸ்டிஸ் கட்சி வீடு புகுந்து தாக்கி கொல்ல முயன்றதை 'கொலை முயற்சி' எனும் தலைப்பில் எழுதியுள்ளார்...

உனக்காக காத்திருக்க விரும்பவில்லை...

 




உன்னால் உருவான உலகம்
உனக்காக ஏங்குதடி இன்று...

உன் துளி கண்ணீரில் என்
சோகங்களை எல்லாம் ஆற்றிவிடுவாய்...

நீ தந்த நினைவுகள்
என் மரணம்வரை தொடருமடி...

மழலையை கொஞ்சும்போது
நீ என்னை கொஞ்சும்...

அம்முக்குட்டி மீண்டும் மீண்டும்
நான் அதையே சொல்கிறேன்...

மழலையும் புன்னகையில்
என் கன்னம் கிள்ளுதடி உன்னைபோலவே...

உன் பார்வை படாத
தொலைவில் நான் இன்று...

உன் வலிகள்
மட்டும் என்னுள்ளே...

வானவில் வண்ணம்
கொண்ட வாழ்க்கைக்கு...

நீ கொடுத்தது வின்னைப்போன்று
நிரந்தர வலிதான்...

உனக்காக மீண்டும் நான்
காத்திருக்க விரும்பவில்லை...

தொடர்கிறது என்
பயணமும் எதோ...

என் இறுதி ஊர்வலத்தை எண்ணி...

மின்சார கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய திருட்டு திமுக ஸ்டாலின்...

 


பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு 😂

 


மூளை வளர்ச்சிக்கு பலாப்பழம்...

 


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.

இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளது.

பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன.

மருத்துவ பயன்கள் :

பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி மூலம் ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் பலாப்பழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயினைத் தடுக்க சிறந்த மருந்தாக உள்ளது.

பலாப்பழத்தில் உள்ள சத்துகள் தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வினைத் தள்ளிப் போடுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்துடன் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும் ஆற்றல் கொண்டுள்ளது.

பலாப்பழத்துடன் சிறிது நாட்டு சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் வல்லமையை பெற்றுள்ளது.

பலாப்பழத்தில் விட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு ஏற்றதாக உள்ளது.

பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றை பலாப்பழம் குணப்படுத்துகிறது.

பலாப்பழம் உடல் சூட்டை தனிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆஸ்த்துமா, தைராய்டு, அல்சர் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழச் சாற்றை கலந்துக் குடித்தால் விரைவில் குணமாகும்...

கணவன் Vs மனைவி...

 


கணவனுக்காக மனைவி ஆசையாக சமைத்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அவன் வருவதாய் தெரியவில்லை.. 

நள்ளிரவில் ரொம்ப லேட்டாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். 

மனைவி: கோபத்துடன்... ஏன் இவ்ளோ லேட்...

கணவன்: பைக் ரிப்பேர் ஆயிருச்சு செல்லம் என்று கூறி கூல் செய்தான் மனைவியை.

மனைவி: ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன். நீங்க வரலையா அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது

கணவன்: அப்பாடா...! கவலைப்படாதே... வேறு நாய் வாங்கிக்கலாம் என்றான் நிதானமாக...

மனைவி: 😳😳😳?

அதிமுக வை வச்சு செய்யும் பாஜக அண்ணாமலை...

 


நித்தியானந்தா கலாட்டா...