18/07/2021

என் கண்ணீரும் இரத்தம் வடிக்கிறது டீ...

 



முகம் காட்டும் கண்ணாடியிலும்
உனை பார்க்கிறேன்..

எனை தொலைத்து 
நானும் உனை தேடுகிறேன்...

அறிவுக்கு தெரியும் நீ எனை
பார்க்க மாட்டாய் என்று..

பாவம் என் இதயம்
விடை தெரிந்த கேள்விக்கு 
விடை தேட சொல்கிறது 
என் கண்களை...

அழகாக நடிக்கின்றன என் கண்களும்
உனை கண்டு விட்டேன் என்று
இரத்த கண்ணீர் விட்டபடி .....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.