30/09/2018

பரியேறும் பெருமாள்...


பரியேறும் பெருமாள்: எப்போ ணே நாம மேல வருவோம் ?

அவரோட நண்பர் : உங்க அப்பனும் எங்கப்பனும் அவன் காட்டுல உழுகாம இருக்கும் போது..

இந்த கருத்த சமூக ரீதியா பார்க்காம அப்படியே பொதுவாக்குங்க தமிழினத்துக்குள்ள...

நமக்கு தேவையானத நாமளே உற்பத்தி செய்தல் (தற்சார்பு வாழ்க்கை முறை)
எவனும் நம்மை இயக்க முடியாது..

நாம அடிமை பட்டு கிடக்க முக்கியமான காரணம் வணிகம்...

இதற்காத தானே எல்லாம்...

வாழ்வதற்கான தேவைகளை நம்மட்ட இருந்தா எவனோட காலையும் நாம புடிக்க வேண்டிய அவசியம் இல்ல..

அதிகமான உற்பத்திய வேற பொருளை உற்பத்தி செய்வோரிடம் கொடுத்து தேவையை பெற்றுக்கொள்ள வேண்டும்...

நல்ல புரிதல் மட்டுமே போதும்.... பிரிவினை காழ்ப்புணர்ச்சிகள் செத்து போகும்...

ஜீவன் முக்திக்கான ஜாதக அமைப்பு...


இப்பிறவியிலேயே பிறப்பறுக்கும் ஜாதக அமைப்பாக லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கேது இருந்தால் முக்தி என ஜோதிடத்தில் கூறுவர்.

ஆனால், 12ல் கேது இருக்கும் அனைவரும் இப்பிறப்பிலேயே முக்தியடைவர் எனக் கூறமுடியாது.

ஆனால், முக்திக்கான தூரத்தை நெருங்கிவிட்டனர் எனலாம்.

அதாவது, இப்பிறவில் பாவச் செயல் செய்யாமல் புண்ணியத்தை மட்டும் செய்திருந்தால்.. மறுபிறப்பு கிடையாது...

இருப்பினும், எம்மாதிரியான ஜாதக அமைப்பு இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி என்பதைக் காணலாம்..

1. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் தனது சுய சாரமான அஸ்வினி/மகம்/மூலத்தில் இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி.

2. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் அவ்வீட்டு அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி.

3. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் அதிபதியின் சாரத்தில் எங்கிருந்தாலும் இப்பிறவியிலேயே முக்தி (யோகிகள் மற்றும் ஞானிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பைக் காணலாம்).

4. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கர்மக்காரகன் சனியின் சாரமான பூசம்/அனுஷம்/உத்திரட்டாதியில் அல்லது காலனுக்கு 12ம் அதிபதி குருவின் சாரமான புனர்பூசம்/விசாகம்/பூரட்டாதியில் இருந்தால் இப்பிறவியில் முக்தி.

5. லக்கினத்தின் மோட்சாதிபதி ஞானக்காரன் கேது அல்லது கர்மக்காரகன் சனியின் சாரத்தில் இருக்க இப்பிறவியிலேயே முக்தி.

6. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் குரு அல்லது சனியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி.

7. கால புருஷனுக்கு தர்ம/கர்மாதிபதிகளான குருவும் சனியும் லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே முக்தி.

8. ராசியிலும் நவாம்சத்திலும் கேது லக்கினத்திற்கு 12ம் வீட்டில் இருந்து வர்கோத்தமமாக இப்பிறப்பிலேயே முக்தி.

9. சனியும் சந்திரனும் சேர்ந்து லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே ஜீவ முக்தியாம்.

இதுபோல இன்னும் பல...

இப்பிறப்பில் பிறருக்கு தீங்கு செய்திருந்தால் அடுத்த பிறவி நிச்சயம்.. அடுத்த பிறப்பு மிக கடுமையான சோதனையாக அமையும்...

குறிப்பு:  மேற்கண்ட ஜாதக அமைப்பை லக்கினத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டுமே, தவிர ராசிக்கு பார்க்க கூடாது. ஏனெனில், ராசியான உடல் இறப்புக்கு மட்டுமான விசயம். அதனால், ஜீவன் முக்திக்கு லக்கினத்தை வைத்துதான் கணக்கிட வேண்டும்...

சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது - எடப்பாடி...


ஆமா நிமிரவேயில்ல...

காவல் நிலையத்தில் அந்தரத்தில் பறந்த எலுமிச்சை...


புதையல் எடுப்பதாக கூறிய மந்திரவாதி காவல் நிலையத்தில் எலுமிச்சை பழத்தை அந்தரத்தில் பறக்க வைத்ததால் போலீசார் அதிர்ச்சி...

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...


தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?

இது உண்மைதான் நம்புங்கள்..

ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.

உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டு பிடித்து விட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள்.

தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை.

இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.

அதுமட்டுமா?

ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.

இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை. பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும்.

எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை...

பாஜக வின் திருட்டு அரசியல்...


தமிழ்நாடு...


தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடையும் போது தமிழ்நாடு என்பது மெட்ராஸ் மாகாணமாக இருந்தது.

இப்போதைய கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளும் அடங்கிய விரிந்த நிர்வாகப் பகுதியாக மெட்ராஸ் மாகாணம் இருந்தது.

1956 -ல் இந்திய பாராளுமன்றம் மாநில மறுசீரமைப்பு சட்டம் ஒன்றை இயற்றியது.

அதன்படி மெட்ராஸ் உள்பட 14 மாநிலங்களும், அந்தமான் நிகோபார், டெல்லி உள்பட 6 மத்திய ஆட்சி பகுதிகளும் உருவாக்கப்பட்டன.

மாநில மறுசீரமைப்பு பரிந்துரை மீது 1956 மார்ச்சில் சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது.

அப்போது மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் க.பெ.சங்கரலிங்கனார்.

1956 செப்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமானது.

நவம்பர் முதல் தேதியில் இருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டன.

கூடலூர் பகுதி நீலகிரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இவ்வாறு தமிழ்பேசும் மாநிலமாக 1956 நவம்பர் முதல் தேதி புதிய மெட்ராஸ் மாநிலம் பிறந்தது.

பழைய மெட்ராஸ் மாகாணத்தில் தெற்கு கானரா, மலபார், நீலகிரி கோயமத்தூர், மதுரை திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு, மெட்ராஸ், சித்தூர், கடப்பா, அனந்தபூர், பெல்லாரி, கர்னூல், நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் என்று 26 மாவட்டங்கள் இருந்தன.

இவற்றில் தமிழ் பேசும் பகுதி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு புதிய மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது.

அதில் மெட்ராஸ், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என்ற 13 மாவட்டங்கள் இருந்தன.

1967 ஜூலை 18 - ந்தேதி மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1969 ஜனவரி 14 -ந்தேதி தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அனைத்து ஆவணங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது...

கன்னட கமல் கலாட்டா...


தமிழினம் விடுதலை பெற தமிழர்களுக்குள் மட்டுமே வணிகம் செய்து தமிழர்களை உயர்த்துவோம்...


பொருளாதார வலிமையடையாத எந்த ஒரு இனமும் ஒருபோதும் விடுதலை அடையாது..

தமிழினத்தின் அடிமை நிலையை உயர்த்த தமிழர்களுக்குள்ளேயே வணிகம் செய்ய வேண்டும் ..

மலையாளிகளாலும் மார்வாடிகளாலும் அவர்களுக்குள் வணிகம் செய்ய முடியும் போது தமிழர்களால் முடியாதா என்ன..

உதாரணமாக நாம் அனைவரும் தமிழர் கடைசியில் உள்ள சொந்தங்கள் அவரவர் செய்யும் சுயதொழில்களை இங்கு பதிவிடலாம்.. அதை பிற சொந்தங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்..

அலைபேசி கடை யாரேனும் வைத்திருந்தாலும் கூறுங்கள்..

உங்கள் வங்கி விவரங்களையும் பதிவிடுங்கள்.. தேவைப்படும் தோழர்கள் பயனடைவர்..

இங்கு  ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு...

10-ம் வகுப்பு மாணவனுடன் காதல், உல்லாசம் புரிந்த 40 வயது டீச்சர்...


கேரளாவைச் சேர்ந்த 40 வயது ஆசிரியை தன்னிடம் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் காதல் கொண்டு சென்னைக்கு வந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த அவர்களை கேரளா போலீசார் அழைத்து சென்றனர்...

ஆலப்புழா மாவட்டத்தில்  டெரானா தம்பி என்பவர் அதே பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியயையாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும  15 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார்.
பள்ளி ஆசிரியை யாருக்கும் தெரியாமல்
மாணவனுடன் கடந்த 23-ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள சென்னை பார்க் லாட்ஜில் வந்து தங்கி உள்ளார். இதனிடையே  சிறுவனை காணவில்லை என அவர்களது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கேரள போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.


ஆசிரியை மாணவனுடன் சூளைமேட்டில் தங்கியிருப்பதாக செல்போன் சிக்னல் காண்பித்துள்ளது. இதையடுத்து சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியோடு தேடினர். கேரள போலீசார் களைப்பாக இருந்ததால் அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஒய்வெடுக்க சென்றுள்ளனர். அப்போது கேரள போலீசார் இருவரது படத்தையும் காண்பித்து விடுதியில் விசாரிக்க, இருவரும் தாய் - மகன் எனக் கூறி விடுதியில் கடந்த 4 நாட்களாக தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆசிரியை, மாணவனையும் மீட்டு கேரளாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பள்ளி ஆசிரியைக்கு 40 வயது என்றும் அவர், கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார எனவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்...

அமானுஷ்யம் : பாங்கார்ஹ் கோட்டை – ராஜஸ்தான்...


ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது பாங்கார்ஹ் நகரம். இங்குள்ள கோட்டைக்குள் சூரியன் மறைந்தபின் சென்றவர்கள் யாரும் என்னவாயிற்று என்றே தெரியாமல் காணாமல் போவதாக செய்திகள் உலாவுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியன் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் சூரியன் மறைந்த பின்னரும், சூரியன் உதிக்கும் முன்னரும் யாரும் உள்ளே போகக்கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பும் கோட்டையை விட்டு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் அலுவலகமும் ஆவிக்கதைகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாகவே இருக்கிறது...

ராஜீவ்காந்தி கொலைக்கு பின்னாலுள்ள இரகசியங்கள்...


இசுரேலின் மொசாத் மற்றும்  அமேரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் சுப்பிரமணிய சாமியும் தான் பின்னால் ஒழிந்திருக்கும் முக்கிய குற்றவாளிகள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் தமிழன்...

https://youtu.be/ALr-OB2I8RY

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை...


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை திட்டம்...


சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி...


அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.

சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.

செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.

செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்...

பாஜக - ஸ்டெர்லைட் கூட்டணி உண்மைகள்...


பிங்க் நிறத்தின் தாக்கம்...


மிகவும் முரட்டுத்தனமாக முரண்டு பிடிப்பவர்களை அகிம்சைவாதிகளாக மாற்ற வேண்டுமா?

அவர்களை அடித்து உதைத்து, சித்ரவதை செய்து மாற்ற முடியுமா? அல்லது தியானம் பயன்படுமா?

என்று கேட்டால்... இதில் எதுவும் பயன்படாது...

அவர் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ்.

வாஷிங்டன் ஜெயில்களில் பல அடாவடி பார்டிகள் அறையில் பிங்க் பூசிய பொது அவர்கள் சில மாதங்களிலேயே அகிம்சை வாதிகளாக மாறி விட்டார்கள்.

பொதுவாக பிங்க் நிறம் மென்மை மற்றும் பெண்மையை குறிக்கும்.

இயல்பாகவே பெரும்பாலான ஆண்களுக்கு பிங்க் பிடிப்பதில்லை. கோபத்தில் கொந்தளிக்கும் போது ஒருவரால் முழுதாக கோபத்தைக் காட்ட முடியாது..

ஏனெனில் இதயதசைகள் வேகமாக செயல்படாது..

பிங்க் நிறம் ஒருவருடைய ஆற்றலை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். இதனால் கோபம் குறைந்து சாந்தமாக மாறி விடுவார்கள்..

சாதாரண நிலையில் ஒருவர் இருந்தால் பிங்க் நிறம் லேசான சோம்பலை ஏற்படுத்தும்.

நிறக்குருடு பாதிப்பு கொண்டவர்களும் பிங்க் நிறத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்கிறார் ஸ்காஸ்..

ஹவாய் பல்கலைக்கழகத்தில் வெளியில் இருந்து விளையாட வரும் விளையாட்டு வீரர்களின் தங்கும் அறைகள் பிங்க் அல்லாத வேறு நிறத்தில் இருக்க வேண்டும் என்ற விதியே இருக்கிறது.

காரணம் எதிரணி பிளேயர்களின் அறைகள் பிங்க் நிறத்தில் இருக்க அவர்கள் சோம்பேறிகளாகி பல ஆண்டுகள் தொற்றுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான பாரிஸ் ஹில்டன் ஒரு பிங்க் பைத்தியம்..

ஒருகோடி ரூபாய் பென்ட்லி காரை விலைக்கு வாங்கி அதை அப்படியே பிங்க் நிறத்துக்கு மாற்றிவிட்டார்.

எந்த விழாவாக இருந்தாலும் பிங்க் நிறத்தில்தான் ஆடை அணிந்து வருவார்.

நான் அமெரிக்க அதிபரானால், வெள்ளை மாளிகையை பிங்க் மாளிகையாக மாற்றி விடுவேன்' என்று தைரியமாக சொல்லும் அளவுக்கு பிங்க் பைத்தியமாக ஹில்டன் இருந்தார்...

புழல் சிறையில் அதிரடி ரெய்டு...


சென்னை புழல்  சிறையில் நேற்று மாலை காவலர்கள் நடத்திய திடீர் ரெய்டில் 28 டி.வி. செட்கள், 200 கிலோ பாசுமதி அாிசி, 28 ரேடியோ உள்பட பல பொருட்கள் சிக்கியதாக தகவல் வெளியானது...

இந்தியாவின் உளவு நிறுவனங்கள்..


இந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன.

ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாக ஐ.பி. என்று அழைக்கிறார்கள்.

மற்றொன்று 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்'. இதனை சுருக்கமாக 'ரா' என்று அழைக்கிறார்கள்.

உல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை.

இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான்.

உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை.

இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது..

இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு பணியை சமாளிப்பதே இதன் வேலையாக இருக்கிறது.

உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு அமைப்புகளுமே உதவின.

பாகிஸ்தானில் இருந்து நேரடியாக தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முடியாது என்பதால் பாதுகாப்பு குறைவாக உள்ள நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளை அனுப்பி பயிற்சி அளித்து வைக்கிறது. என்பதை உலகுக்கு முதலில் அறிவித்ததும் 'ரா'தான்.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த 'ரா' அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது.

தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு 'ரா' வின் உளவு வேலைகளே காரணம்.

தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை.

நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். அப்படி என்று அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.. பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம்...

சர்வதேச சிலை கடத்தல் உண்மைகள்...


தமிழ் நாட்டு கோயில்களில் சிலைகளை திருடிய ரன்வீர் சிங் என்ற வட இந்தியனுடன் TVS சுந்தரம் ஐய்யங்காரின் கொள்ளு பேத்தி அனிதாரத்தினம்...

திராவிடம் - சிங்களம் இரண்டுமே தெலுங்கர்களின் பதுங்கு குழியே...


கண்டி நாயக்கரும் கண்டி சிங்களவரும்...

ஆண்டு 1814.

கொலைஞர்கள் உறுவிய வாளுடன் நின்றிருந்தனர்.

குமாரிஹாமி என்ற சிங்களப் பெண் மார்பில் பால் குடிக்கும் குழந்தையுடன் இழுத்துவரப்பட்டாள்.

கூடவே அவள் பெற்ற மூன்று சிறுவர்களும்.

கண்டியின் ராணிமாளிகை முன்னால் நாத தேவாலயம் மற்றறும் விஷ்ணு தேவாலயம் இரண்டிற்கும் மத்தியில் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

மக்கள் அங்கே குழுமிவிட்டனர்.

கண்டியின் கடைசி (தெலுங்கு நாயக்க) மன்னனான கண்ணுச்சாமி நாயுடு (விக்கிரம ராஜ சிம்மன்) உத்தரவு நிறைவேற்றப்பட்டது.

முதலில் மூத்தமகன் பதினோரு வயது பாலகன் லொக்குபண்டாவை இழுத்து வந்து தலையை வெட்டினர்.

பிறகு இரண்டாவது மகன் ஒன்பது வயது சிறுவன் தானே முன்வந்து நின்றான். அவன் தலையையும் வெட்டப்பட்டது.

மூன்றாவது மகன் டிங்கிரி மெனிக்கே.

அக்குழந்தை தாயை இறுகப் பற்றிக்கொண்டு கதறி அழுது கொண்டிருந்தது.அதையும் இழுத்துவந்து தலையை வெட்டினார்கள்.

மார்பில் இறுக்கமாக அணைத்துக் கொண்டு இந்த குழந்தையையாவது விடும்படி கேட்டாள் அந்த தாய்.

வடுக மன்னன் மனம் இரங்கவில்லை. பறித்து வந்து அதன் தலையையும் வெட்டினர்.

வெறியடங்காத மன்னன் தலைகளை எடுத்து உரலில் போட்டு இடிக்கச் சொன்னான்.

தெருவில் உருண்டுசென்று கிடந்த தலைகள் எடுத்துவரப்பட்டு உரலில் போட்டு இடித்து சிதைக்கப்பட்டன.

கூடியிருந்த மக்கள் மூச்சுவிட மறந்திருந்தனர். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சிலைகளாகினர்.

அடுத்து என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.

"ராஜதுரோகத்திற்கு இதுதான் தண்டனை" என்று கூறினான் கண்ணுச்சாமி.

குமாரிஹாமியும் மேலும் இருபெண்களும் கைகால்கள் கட்டப்பட்டு வண்டியில் தூக்கிப்போடப்பட்டனர்.

கணமான கல்வைத்து கட்டப்பட்டு நுவரவாவியில் மூன்று பெண்களும் வீசப்பட்டதை மக்கள் கண்டார்கள்.

இந்த கண்ணுச்சாமி என்ற தெலுங்கனுக்குதான் தமிழகத்தில் தெலுங்கினத் தலைவன் கருணாநிதி மணிமண்டபம் கட்டியுள்ளான்...

ஏன் இந்த கொடூரமான கொலைகள் நடந்தன என்றறிய வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம்.

தமிழகத்தில் தெலுங்கு ஆட்சி வந்த பிறகு தெலுங்கு நாயக்க மன்னர்கள், கண்டி சிங்கள மன்னருக்கு தமது பெண்களை மணமுடித்துக் கொடுத்து வந்தனர்.

பெண்களுடன் சில உறவினர்களும் கண்டி சென்று தங்கினர்.

நாளடைவில் அவர்கள் மந்திரி சபையிலும் படையிலும் பதவிகள் பெற்றனர்.

இதன்மூலம் கண்டி அரசில் தெலுங்கர் ஆதிக்கம் தலைதூக்கியது.

சிங்களவருக்கும் தெலுங்கருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.

கண்டி தெலுங்கர்கள் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியை பேசினாலும் சிங்களவர் அவர்களைத் தங்கள் இனமாக எண்ணவில்லை.

சிங்களம் பேசும் தெலுங்கர், "சிங்கள இனவெறி" என்ற முகமூடியை அணிந்துகொண்டு தமிழர்கள் மீது இனப்படு கொலையை ஏவும்வரை சிங்களவர்கள் அவர்களிடம் ஏமாறவில்லை.

மேலும் கண்டி தெலுங்கர் தமிழகத் தெலுங்கருடன் தொடர்பினைத் தொடர்ந்து பேணிவந்தனர்.

குறிப்பாக மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்களுடன் தொடர்ச்சியாக கொடுக்கல் வாங்கல் இருந்தது.

திருமலை நாயக்கரின் உறவினர் நரேனப்பநாயக்கர் சிங்கள மன்னனுக்கு பெண் கொடுக்கும்போதே தன் மகன்களுடன் கண்டிக்கு வந்து அங்கேயே தங்கி இருந்தார்.

1708 ல் ஆண்வாரிசு இல்லாத கண்டி மன்னன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மைத்துனனை அரசனாக்கினான்.

இவனே சிங்களக் கலப்பில்லாத முழு தெலுங்கன்.

விஜயபாலன் என்ற இயற்பெயரை மறைத்து சிறீ விஜயராஜ சிம்மன் என்ற சிங்களப் பெயரை சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான்.

சிங்கள அமைச்சர்கள் மன்னனின் வைப்பாட்டிக்குப் பிறந்த உனம்பு பண்டாரவுக்கு முடிசூட்ட வலியுறுத்தினர். இது நடக்கவில்லை.

சிங்களவரைச் சரிகட்ட தமிழர் மட்டுமே வணங்கிவந்த சிவனொளிபாத மலையை பௌத்தருக்கும் சொந்தம் என அறிவித்து சிங்களவருக்குத் திறந்து விட்டான்.

நில நிர்வாக அதிகாரங்கள் நரேந்திரசிம்மன் என்ற தெலுங்கனுக்கு வழங்கப்பட்டது.சிங்கள பிரதானிகள் இவருக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

இந்த நேரத்தில் மேற்கு இலங்கையை டச்சுக்காரர்கள் பிடித்திருந்தனர்.

இவனுக்கு அடுத்து அவனது சகோதரன் கீர்த்தி சிறீராஜ சிம்மன் அரியணை ஏறினான்.

இவனும் தமிழகத்தில் பிறந்த தெலுங்கனே..

தமிழக நடுகாட்டுச்சாமியார் என்ற வடுகரின் மகளை 1749 ல் திருமணம் செய்தான்.

நடுகாட்டு சாமி குடும்பமும் கண்டிக்கு வந்து தங்கியது.

கண்டியின் ஒரு பகுதியே தெலுங்கு மயமானது.

இந்த கீர்த்தி ராஜசிம்மனைக் கொல்ல சிங்கள மந்திரிகள் திட்டம் தீட்டினர்.

இது அரசனுக்குத் தெரிந்துவிட்டது.

மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகிய சிங்கள மந்திரிகள் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.

இவர்களுடன் சதியில் ஈடுபட்ட புத்த மதகுருவும் சங்கராஜா என்பவரும் தலைவெட்டிக்கொல்லப்பட்டனர்  பிறகு அரியணை ஏறிய இரண்டாம் ராஜசிம்மன் என்பவனால்.

கண்டியில் தெலுங்கு ஆதிக்கம் உச்சநிலையை அடைந்தது.

1764 டச்சு படையெடுப்பு வானென்
என்பவன் தலைமையில் நடந்தது.
மன்னன் ஓடிப்போய் தலைமறைவு ஆனான்.

கண்டியை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.

ஆனால் மழை பெருமளவில் பெய்து வெள்ளம் ஏற்பட்டது.

டச்சுக்காரர்களுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தது.

1766 டச்சுக்காரர்கள் மன்னனுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பின்வாங்கினர்.

கீர்த்தி ராஜசிம்மன் மீண்டும் அரியணை ஏறினான்.

இவனுக்குப்பின் இவனது சகோதரன் ராஜாதி ராஜசிம்மன் என்ற தமிழகத்தில் பிறந்த தெலுங்கன் அரியணை ஏறினான்.

1795 திருகோணமலை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.

கண்டியுடன் சமாதானமாக இருக்க தூது அனுப்பினர்.

இது சிங்கள அமைச்சரான பிலிமத்தலாவை மூலம் நடந்தது.

மன்னனுக்கு அடுத்த செல்வாக்கு பெறலானார் பிலிமத்தலாவை என்னும் இந்த சிங்களர்.

கண்டி மன்னன் மரணமடைந்தான்.

இதுவரை காத்திருந்த சிங்களர்கள் காய்நகர்த்தினர்..

அரியணைக்கு வரவேண்டிய மூத்தவரான முத்துசாமி என்ற தெலுங்கரை கொலை செய்ய முயற்சித்தனர்.

பயந்துபோன முத்துசாமி ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தான்.

தெலுங்கு மந்திரிகள் ஆவேசம் கொண்டனர்.

இதைச் சரிகட்ட மன்னனின் எட்டு வாரிசுகளில் கடைசியானவனும் வயதில் இளையவனுமான கண்ணுச்சாமியை அரியணையில் பெயருக்கு உட்காரவைத்துவிட்டு மூடிசூடா மன்னராக விளங்கினான் பிலிமத்தலாவை.

தனக்கு மைத்துன முறைகொண்ட எகலப்பொல என்ற சிங்கள இளைஞனை முக்கிய பொறுப்பில் நியமித்தான்.

முன்னாள் அரசியை சிறையிலிட்டான்.

மன்னனின் தெலுங்கு  உறவினர் பலரையும் சிறையிலடைத்தான்.

கம்பளை நாயக்கர் என்ற செல்வாக்கு மிக்க தெலுங்கரையும் சிறையிலடைத்தான்.

அரவாளை என்பவரைக் கொலை செய்தான்.

பல மன்னர் குடும்ப உறவினர்கள் ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தனர்.

கண்டியில் மீண்டும் சிங்கள ஆதிக்கம் கை ஓங்கியது.

ஆங்கிலேயர் பிரட்ரிக் நோர்த் என்பவன் தலைமையில் கண்டிமீது  படையெடுத்தனர்.

இந்த முறையும் மன்னன் ஓடி ஒளிந்தான். கண்டி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.

தங்களிடம் தஞ்சமடைந்திருந்த முத்துசாமியை மன்னன் ஆக்கினர்.

டச்சுக்காரர்களைப் போல மக்கள் ஆங்கிலேயரையும் வெறுத்தனர்.

இந்த முறை மழை பெய்ததோடு நில்லாமல் காட்டு மலேரியா பரவியது.

இந்தநிலையை பயன்படுத்திக் கொண்டு பிலிமாத்தலாவை சிங்கள மக்களின் ஆதரவுடன் படையைத் திரட்டி ஆங்கிலேயரைத் தோற்கடித்தான்.

கண்டியை மீண்டும் கைப்பற்றினான்.

தெலுங்கன் முத்துசாமியை தலையை வெட்டிக் கொன்றான்.
இது நடந்தது 1803..

விக்கிரம ராஜசிங்கன் (கண்ணுசாமி) மீண்டும் அரியணை ஏற்றப்பட்டான்.

பிலிமத்தலாவை தெலுங்கர் வழியிலேயே சென்று தலைமையைக் கைப்பற்ற நினைத்தான். தன் மகளை மன்னனுக்கு மணமுடித்து வைத்தான்.

பிறகு மன்னனைக் கொல்ல சதி செய்தான்.

மூன்றுமுறை முயற்சி செய்தும் மருமகனை கொலை செய்யும் திட்டம் வெற்றிபெறவில்லை.

இதை அறிந்த கண்ணுச்சாமி பிலிமத்தலாவையை தலையை வெட்டிக் கொன்றான்.

கொதித்துப்போயிருந்த சிங்களவரைச் சரிகட்ட பிலிமத்தலாவை அரசு பதவியில் நியமித்த அவனது மைத்துனனான எகலபொல அவனது இடத்தில் நியமிக்கப்பட்டான்.

எகலபொல மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்தான்.

மன்னனை மதிக்காமல் மன்னனைப் போலவே நடந்து கொண்டான். அவனது அதிகாரமே எங்கும் கொடிகட்டிப்பறந்தது.

சிங்கள மந்திரி பிரதானிகள் இன்னொரு பிலிமத்தலாவையாக எண்ணி இவனுக்கு ஆதரவு தந்தனர்.

கண்ணுச்சாமிக்கும் எகலபொலவுக்கும் மோதல் அதிகரித்தது.

எகலபொல ஆங்கிலேயர் உதவியுடன் மன்னனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.

இதையறிந்த மன்னன் எகலபொல குடும்பத்தை சிறையடைத்தான்.
ஆங்கிலேயருடன் படை திரட்டிக்கொண்டு கண்டி நோக்கி முன்னேறினான் எகலபொல.

தமிழக தெலுங்கு மன்னர்களும் வலு இழந்துவிட்ட காலம். இருந்தாலும் அவர்கள் 300 போர் வீரர்களையும் சில உதவிகளையும் அனுப்பினர்.

அப்போதுதான் எகலபொல குடும்பத்தைக் கொலை கொடூரமாகக் கொலை செய்தான் கண்ணுசாமி.

இதனால் இம்முறை மக்கள் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.

கண்ணுச்சாமி வழக்கம்போல ஓடிப்போய் தலைமறைவானான்.

ஒரு குகையில் தன் மூன்று மனைவிகளுடன் மறைந்திருந்தான்.

ஆங்கிலேயருடன் எகலபொல படையில் இருந்த சிங்கள படைவீரர்கள் அவனைக் கண்டுபிடித்து அடித்து துவைத்தனர்.

ஆங்கிலேயர் வந்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.

தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டனர். இல்லை மது வேண்டும் என்றான்.

மது கொடுத்து பல்லக்கில் மரியாதையுடன் அழைத்துச் சென்று தமிழக சிறையில் அடைத்தனர்.

அவனை அழைத்துச் செல்லப்பட்ட கப்பலில் மன்னனுடன் ஏறத்தாழ முப்பது மனைவிகளும் மாமியாரும் உறவினருமாக பெரிய கூட்டம் ஏற்றப்பட்டது. இது நடந்தது 1815.

எகலபொல தன்னை ஆங்கிலேயர் அரசனாக்குவர் என்று எதிர்பார்த்தான். ஆனால் அது நடக்கவில்லை. ஆங்கிலேயர் தமது நேரடி ஆட்சியை அங்கே ஏற்படுத்தினர்.

17 ஆண்டுகள் சிறையில் முழு குடும்பத்துடனும் தாராளமான மதுவுடனும் இராஜவாழ்க்கை வாழ்ந்தான் கண்ணுச்சாமி. சிறையில் அவனுக்கு குழந்தைகளும் பிறந்தன. அளவுக்கதிமாக மது குடித்ததாலேயே இறந்தும் போனான்.

கண்டி நாயக்கர் கதையில் தெலுங்கருக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்த சிங்களர் இருக்கின்றனர். ஆனால் சிங்களுக்கு ஆதரவான ஒரு தெலுங்கர் கூட இல்லை.
சிங்களரை விடவும் இனப்பற்று உள்ளவராக தெலுங்கர்கள் இருக்கின்றனர்.

கண்ணுசாமியின்  வீர(?)வரலாறு மறக்காமல் இருக்கத்தான் இலங்கையின் கடைசித் தமிழ் (?) மன்னன் என்று தெட்சிணாமூர்த்தி (கருணாநிதி) தமிழகத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளான்.

இதன் மூலம் இவன் சிங்களருக்குச் செய்த கொடுமைகள் தமிழர் தலையில் வந்து விழுந்தன.

கண்டியில் குடியேறிய தெலுங்கு குடும்ப வாரிசுகளே இன்று இலங்கையில் அரசு செய்யும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும்.

பண்டாரநாயக, சேனநாயக, ராஜபக்ச ஆகிய குடும்பங்கள் சிங்களம் பேசும் தெலுங்கரே.

300 ஆண்டுகள் முன்பு இலங்கைக்கு வந்த இந்த வந்தேறிகள், 2500 ஆண்டுகள் முன்பு குடிவந்த சிங்களவருக்குள் மறைந்து கொண்டு "இனவெறி" முகமூடியை அணிந்து கொண்டு இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்துவருகின்றனர்..

தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரில் இன அழிப்பு செய்வதும் இவர்கள் தான்..


சிங்களவரை சிங்களவரே அதிகம் ஆண்டதில்லை.. இந்த உண்மை சிங்களவர்களுக்கு தெரியுமா, என்று தெரியவில்லை...

1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )

2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )

3). சோன் கொத்தளாவள (சிங்களவர் )

4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் )

5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் )

7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )

8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு )

9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் )

10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு )

11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )

13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )

14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு )

14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய் )

15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர் )

அடுத்து………

மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் )

சிங்களவனும் - திராவிடனும் ஒண்ணு
இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


திராவிட தெலுங்கு நாயக்கர்களின் அற்பத்தனம்...


கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில், கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில், முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை ஒரு நாயக்கர் சிற்பம்.

எந்த நாயக்க மன்னன் எனத் தெரியவில்லை.

கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம்.

சராசரி உயரமுள்ள அரசன் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன.

இங்கு சிலையின் உயரமும் குறைவே.

சிலையை சுற்றி சிவகணங்கள் வணங்கியபடி அமர்ந்திருக்கின்றன. ஆனால், மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது.

இங்கேயிருந்த சிவன் சிலையைப் பெயர்த்து அந்த இடத்தில் நாயக்க மன்னனில் சிலையை நிறுவியிருக்கிறார்கள்.

வெட்கம் கெட்ட அற்பத்தனத்தின் அளவுகடந்த நிலை இது.

தெலுங்கு நாயக்கர்களுக்கு சோழர்கள் அளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளைச் செய்ய திறமையில்லை என்பதற்காக இப்படியா கீழ்த்தனமாக செய்வது?

இந்த இழிவான நாயக்க "சிலை திணிப்பு" தஞ்சை பெரியகோவில் உட்பட அனைத்து பெரிய கோயில்களிலும் உள்ளது.

முதலில் தமிழ் கலைகளை 'திராவிட கலைகள்' என்று திரிப்பதை தடுக்க வேண்டும்.

இதுபற்றி முறையான ஆய்வு நடத்தி திணிக்கப்பட்ட நாயக்கர்கால சிலைகளை பெயர்த்து வெளியேற்ற வேண்டும்..

இதுபற்றி எழுதிய எயில்நாடன் படங்களையும் இணைத்திருந்தார்.
அவர் எழுதிய அப்பதிவில் ( கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை ) தற்போது படங்கள் நீக்கப்பட்டுவிட்டன...

முன்னால் கஞ்சா வியாபாரி ஈஷா ஆக்கிரமித்தது 109 ஏக்கர்... பாஜக அடிமை அதிமுக நடவடிக்கை எடுக்குமா.?


யாருடா மகாத்மா.. கொய்யால உங்க காந்தி துரோகி டா...


ஒரு தேசத்தின் உண்மையான சரித்திரத்தை மறைப்பதற்கு எவருக்குமே உரிமையில்லை.

ஆனால் நடந்த உண்மையான சரித்திரத்தைவிட மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, உரைக்கப்பட்ட சரித்திரம்தான் இன்று எம்மிடையே அதிகமாக உள்ளது.

நடந்த சரித்திரத்தை மறைக்கின்ற வழமைதான் இன்றுவரை சரித்திரமாகத் தொடர்கின்றது.

கத்தியின்றி, இரத்தமின்றிக் கிடைக்கப்பெற்ற சுதந்திரம் என்று இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து இப்போதும் பலர் கூறி வந்தாலும், ‘அது திரிக்கப்பட்ட வரலாறு என்பதனை எதிர்காலம் கூறுமோ’ என்ற எண்ணமும் இப்போது வலுப்பட்டு வருகின்றது...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸில் இருந்து எத்தனையோ ஆயிரம் புரட்சிவீரர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போர் புரிந்தார்கள். உண்மையில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் அடித்தளத்தை இப்புரட்சி வீரர்களின் போராட்டம் தான் ஆடவைத்தது.

1857ம் ஆண்டு நடைபெற்ற, ‘சிப்பாய்க்கலகம்’ என்று ஆங்கில அரசு பெயரிட்டழைத்த கலகம், உண்மையில் ஆயுதம் தாங்கிய சுதந்திரப் போராட்டம் தான்.!

சரியாக 74 ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 25ந்திகதி – மகாத்மா காந்தி, கராச்சி நகருக்குச் செல்கின்றார். இலட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம் அலைபுரண்டு ஓடுகின்றது.

எதற்கு? காந்தியாரை வரவேற்கவா? இல்லை! கூட்டத்திலிருந்து இவ்வாறு தான் குரல்கள் எழும்புகின்றன. தலைவர்களே! திரும்பிச் செல்லுங்கள்!: காந்தி-ஏர்வின் (Erwin) ஒப்பந்தத்தை தூக்கி எறியுங்கள். பகத்சிங்கை கொன்ற பேர்வழி எங்கே? என்றெல்லாம் மக்கள் கதறுகின்றார்கள்.

அன்று மாலையில் நடந்த பெருங்கூட்டத்தில், ‘காந்தி எங்களுக்கு எதற்கு? அவர் ஒழியட்டும்’ என்று மக்கள்-அதிலும் குறிப்பாக இளைஞர்கள்-குரல் எழுப்புகின்றார்கள். ஏன்? என்ன காரணம்?

காரணம் என்னவென்றால், இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான், அதாவது 1931ம்ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதியன்றுதான், இந்திய சுதந்திரப் போராட்டவீரன் பகத்சிங் அவர்களை அவரது இரண்டு போராளி நண்பர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோருடன் ஆங்கில அரசு தூக்கிலிட்டுக் கொன்றிருந்தது.

இந்தியச் சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங்கின் முழுமையான தியாக வரலாறு மறைக்கப்பட்டு வந்துள்ளமை குறித்தும் பரவலாக வெளிவந்திராத சம்பவங்கள் குறித்தும் ஆதாரபூர்வமாகத் தர்க்கிப்பதுவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

வெகுசனப் பிரச்சாரச் சாதனங்களை முழுமையாகத் தங்கள் கைகளில் வைத்திருந்த மேல்த்தட்டு இந்திய அரசியல்வாதிகள், பகத்சிங் போன்ற போராளிகளின் பங்களிப்புக்களை இயலுமானவரை மூடிமறைத்தே வந்துள்ளார்கள் என்பதற்கு இப்போது ஆவணச் சான்றுகளுடன் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இவை எல்லாவற்றையும்விட, ‘பகத்சிங் அவர்களின் தூக்குத்தண்டனையை எப்போது நிறைவேற்றவேண்டும்’ என்று ஆங்கில அரசிற்கு ஆலோசனை அளித்தவரே, மகாத்மா காந்திதான்என்ற விபரமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை குறித்துப் பின்னர் கவனிப்போம்.

1907ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ந்திகதியன்று பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகருக்கு அருகிலுள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் பகத்சிங் பிறந்தார். அவர் 12 வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் ஆங்கிலேய ஜெனரலான டயர் என்பவன் நடாத்திய படுகொலைகள் சம்பவம் பகத்சிங் மனத்தில் விடுதலை வேட்கையை ஊட்டியது. பல புரட்சி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதற்குரிய பணிகளில் பகத்சிங் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘இந்திய சமதர்மக் குடியரசு இராணுவம்’ (H.S.R.A.) என்ற அமைப்பு ஒன்று 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பின் மத்தியகுழு உறுப்பினராக
பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அமைப்பின் முதல் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளில் பகத்சிங் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். ஒன்று, பொலிஸ் அதிகாரி சான்டர்ஸ் என்பவரைக் கொல்வது, மற்றது சட்டசபையில் குண்டு வீசுவது.

1928ம் ஆண்டு டிசம்பர் 17ந்திகதி பொலிஸ் அதிகாரி சான்டர்ஸ் சுடப்பட்ட சம்பவத்தின் பின்னர் பகத்சிங்கின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பமாயிற்று. நான்கு மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் கட்சியின் முடிவுப்படி 8-4-1929 அன்று சட்டசபையில் குண்டுவீசும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதில் படுதுணிகரமான, அதேவேளை வித்தியாசமான, முடிவொன்றை பகத்சிங் எடுத்தார். அதனை எமது நேயர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடுவதைக் காட்டிலும் தாங்களே கைதாகச் சம்மதித்து, பிறகு நீதிமன்றங்களைத் தமது கொள்கை பரப்பும் மேடைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் - என்று பகத்சிங் முன்வைத்த கருத்தை ர்.ளு.சு.யு ன் மத்தியகுழு ஏற்றுக்கொண்டது.

பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத் என்பவரும் திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் மாதம் 8ம் திகதியன்று சட்டசபையில் குண்டுகளை வீசிவிட்டு, ‘இ;ன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் இந்த முழக்கம் அன்றுதான் முதல்முறையாகக் கேட்டது. பின்னர் கையிலிருந்த துப்பாக்கியால் மேல்நோக்கிச் சுட்டுவிட்டு, ர்.ளு.சு.யு யின் துண்டறிக்கைகளை வீசி எறிந்தார்கள். பிறகு தாங்களாகவே முன்வந்து கைதாகினார்கள்.

இன்று பகத்சிங்கைப் புகழ்ந்து எழுதுகின்ற ஆனந்தவிகடன் பத்திரிகை அன்று பகத்சிங்கின் இந்த நடவடிக்கை குறித்து என்ன எழுதியது தெரியுமா?

நேயர்களே, 1929ம் ஆண்டு (அப்போது மாத இதழாக வெளிவந்த ஆனந்த விகடனின்) மே மாத இதழில், பகத்சிங்கின் செய்கையைக் கண்டித்தும், கேலி செய்தும் வெளியான அக்கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.

“இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச்சிகாமணிகள்’ என்ற பட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகாரவர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம். . . இந்திய குடியரசின் சேனாதிபதி என்பதாகக் கையொப்பமிட்டு, சிரிப்பதற்கு விடயம் தந்ததின் பொருட்டு விகடன் மிகவும் நன்றி செலுத்துகின்றான்.
(ஆனந்தவிகடன்-1929 மே இதழ்)
ஆனால் பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத் அவர்களும் கொடுத்த வாக்குமூலத்தைக் கேளுங்கள் நேயர்களே..

“நாங்கள் வெடிகுண்டு எறிந்தோம். எந்தத் தனிநபரையும் நோக்கி நாங்கள் வெடிகுண்டு போடவில்லை. சட்டசபை பயனற்றது என்று கருதி அதன்மீது போட்டோம். சட்டசபை இருந்து என்ன பயன்? மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாடுகள் அசட்டை செய்யப்படுகின்றன. சட்டசபையினால் யாதொரு நன்மையும் கிடையாது. ஏழைமக்கள் படும்துயர் சொல்லி முடியாது. இங்கிலாந்தைக் கனவிலிருந்து தட்டி எழுப்ப வேண்டுமென்றால் வெடிகுண்டு போடவேண்டியதுதான். . . கொலை செய்யவேண்டும் என்று
எண்ணியிருந்தால் அவ்விதமே செய்திருப்போம். அநீதியாக உள்ள தற்கால சமூகவாழ்வையும், அரசியலையும் போக்குவதே புரட்சியாகும. ஒரு மனிதனின் நலத்தை, மற்றொருவன் பறிப்பதும் ஒரு தேசத்தின் நலத்தை மற்றொரு தேசம் பறிப்பதும் ஒழிய வேண்டும்.. . . நாங்கள் எச்சரிக்கை செய்துள்ளோம். இந்த எச்சரிக்கை மதிக்கப்படாமல் போனால், தேசத்தில் பெரிய புரட்சி தோன்றும். அக்காலத்தை, நாம் எதிர்பார்க்கின்றோம். புரட்சி என்ற பலிபீடத்தில் எங்களது இளமையை நாங்கள் அர்ப்பணிக்கின்றோம். எத்தகைய கஷ்ட நஷ்டம் நேரினும் சரி, அதனை அனுபவிக்க நாங்கள்
தயார்.

‘புரட்சி ஓங்குக, புரட்சி ஓங்குக’

எவ்வளவு தெளிவாக, தீர்க்கமான, வீரமான வாக்குமூலம்.

இந்த வீரமிகு செயலைத்தான் ஆனந்தவிகடன் பத்திரிகை கிண்டல் செய்து எழுதியது.

இந்த வழக்கின் விசாரணை 1929ம் ஆண்டு ஜீலை மாதம் 10ம் திகதி தொடங்கிற்று. பகத்சிங் உட்ட இந்த வழக்கில் எதிரிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொகை 32. ஆங்கில அரசுக்கு ஆதரவாக
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களின் தொகை 607. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவதற்கென்று ஒரு வழக்கறிஞர் கூட இல்லை. ஆங்கில அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல வந்தவர்களை அரச தரப்பு குறுக்கு விசாரணை செய்யாமல் அவர்களதுசாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

1930ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி தீர்ப்புக் கூறப்பட்டது.

பகத்சிங், சுகதேவர், ராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

ஏழுபேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையும், இன்னும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன.

7-10-1930 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் படி பகத்சிங் முதலான மூவருக்கும் 17-10-1930 அன்றே தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், ஆங்கிலேய அரசோ இவர்களை 23-3-1931 அன்று தான்(5 மாதங்கள் கழித்து ப-ர்) தூக்கிலிட்டது.

இவ்வளவு காலமும் தண்டனையை நிறைவேற்றாமல் ஆங்கில அரசு இழுத்தடித்ததற்குக் காரணம், வெளிப்படையானதுதான்.

பகத்சிங் முதலானவர்களைத் தூக்கிலிட்டால், இந்தியா முழுவதும் எழுந்து நின்று ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கலவரங்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் அன்று அவர்களுக்கு இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் அந்த அச்சம் அகன்றதற்கு காரணம் யார்? அதை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? என்பதற்கு இன்று ஆவணங்கள் சாட்சி சொல்கின்றன.

இதன் பின்னணியைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் வலுவோடு நடந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் அப்போராட்டத்தை நிறுத்துவதற்காக
பல முயற்சிகளை ஆங்கில அரசு மேற்கொண்டு வந்தது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆங்கில அரசுக்குமிடையே ஒரு சமரச உடன்பாடு உருவானது. அது காந்தி-எர்வின் உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்காரர்களே குரல் எழுப்பினார்கள்.

காரணம், இந்த உடன்பாடு புரட்சிகரத் தோழர்களுக்கும் இயக்கங்களுக்கும் எதிரான பல செய்திகளைத் தன்னுள் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் கை ஓங்கியதும், புரட்சிகர நடவடிக்கைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டதும் இந்த உடன்பாட்டிற்குப் பின்புதான்.

இந்த காந்தி-எர்வின் உடன்பாடு காங்கிரசின் பல தலைவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. இந்த உடன்பாட்டில் மற்ற அனைவரையும் விட காந்திதான் அதிக ஆர்வம் காட்டினார் என்று காந்தியின் சீடரான பட்டாபி சீதாராமையா (வுhந ர்ளைவழசல ழக ஐனெயைn யேவழையெட ஊழபெசநளள)  என்ற நூலின் முதலாவது பாகம்-பக்கம் 437ல்-எழுதியுள்ளார். “இந்த உடன்பாட்டில் உள்ள நிலச்சீர்திருத்தக் கொள்கை குறித்து வல்லபாய் பட்டேலுக்குத் திருப்தியில்லை என்றும், சட்டம் பற்றிய பகுதியில், ஜவகர்லால் நேருவுக்குத் திருப்தியில்லை என்றும், சிறைக்கைதிகளின் விடுதலை பற்றிய பகுதியில் யாருக்குமே திருப்தியில்லை!” என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாருக்குமே திருப்தி தராத அந்தப்பகுதி காந்தி-எர்வின் உடன்படிக்கையின் (ii)ம் பகுதியாகும்.

அப்பகுதி வருமாறு:

“ Soldiers and police convicted of offences involving disobedience of orders. (in the very few cases that have occurred) will not come within the scope of amnesty.”

அதாவது காங்கிரசால் நடாத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற மிகச் சில பொலிசார் மீதும், ராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை, இந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தாது என்பதே இப்பகுதி உணர்த்தும் பொருளாகும்.

இந்த ஒப்பந்தம் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 5ந்திகதி கையெழுத்திடப்பட்ட பின்பு 28ம் திகதியளவில் கராச்சியில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற இருந்தது. இந்த இடைவெளியில் திரைமறைவில் நடைபெற்ற விடயங்களை இப்போது பார்ப்போம்.

1929ம் ஆண்டு ஏப்பிரல் 8ம் திகதியன்று சட்டசபை வெடிகுண்டுச் சம்பவம் நடைபெற்றபோது பகத்சிங் மக்களிடையே புகழ்பெற்றவராக இல்லை. ஆனால் 1931ம் ஆண்டுக்குள் பகத்சிங்கின் புகழ் உச்சநிலையை அடைந்தது. இந்தியா முழுவதும் பாமர மக்களிடையே கூட பகத்சிங் பற்றிய வீரக்கதைகள் பேசப்பட்டன. அந்த நேரத்தில் காந்தியின் புகழ் அளவிற்கு பகத்சிங் இணையாக புகழ் பெற்றிருந்தார் என்று காங்கிரஸ்கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்று ஆசிரியரான பட்டாபி சீதாராமையா,

The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம், 456வது
பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில் பகத்சிங்கின் புகழைக் கண்டு ஆங்கில அரசாங்கமே கலங்கி நின்றது. பகத்சிங்கின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்தவேளையில்தான் காந்தி -எர்வின் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது. காந்தி-எர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டாலும் ‘பகத்சிங்கின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தாலேயன்றி, மார்ச் மாத இறுதியில் கராச்சியில் கூடவிருக்கும் காங்கிரஸ் மாநாடு ஒப்பந்தத்தை ஏற்காமல் போகும் வாய்ப்புகள் தென்படுகின்றன’ என்று இரகசியப் புலனாய்வுத் துறை, எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் என்பவருக்கு குறிப்பு அனுப்பியது.
ஆதாரம்; NAI –File No. Home/Poll/4/21/1931 (P.27(I)

இந்தச்சூழலை நன்கு விளக்கி எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் 15-3-1931 அன்று காந்திக்கு ஒரு கடிதத்தை எழுதுகின்றார். பகத்சிங்கை, கராச்சி காங்கிரசுக்கு முன்பாகவே தூக்கில் போட்டு விடுவது குறித்து அக்கடிதத்தில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. ஆதாரம்: ஐடீசுனு (IBRD (Page 28))

இங்குதான் இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, இந்தத் தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என்றுதான் மகாத்மா காந்தி ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ள விடயம், அரசாங்க கோப்பில் உள்ளது. – The Tribune, 09-04-1931.

பட்டாபி சீதாராமையாவும் இதனை ஒப்புக் கொள்ளுகின்றார். கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கூட்டம் முடியும்வரை பகத்சிங் முதலானோரது தூக்குத்தண்டனையை ஒத்திப்போடுவதற்கு ஆங்கிலேய அரசு தயாராக இருந்த போதிலும், காந்தியாரோ அந்த இளைஞர்களை காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரேயே தூக்கிலிடுவதுதான் நல்லது என்று உறுதியாக கூறிவிட்டதாகவும் சீதாராமையா எழுதியுள்ளார். அந்த வரிகளை அப்படியே தருகின்றோம்.:

"Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”

அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து எமர்சன் 20-03-1931 அன்று காந்திக்கு எழுதிய கடிதத்தில், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி. . . என்று தொடங்குகின்றார்.

அக்கடிதத்தில், அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அக்கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் பெரும் உணர்ச்சியைத் தூண்டக்கூடும் என்பதனால், அதனை எப்படி ஒதுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்குக் காந்தி உடனடியாகப் பதில் அளிக்கின்றார்.

அதன் தமிழாக்கம் வருமாறு: திகதி மார்ச் 20, 1931..

என் அருமை எமர்சன்,

சற்று நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்துக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்ட அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னால் இயன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன், என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகின்றேன். . . என்று மேலும் எழுதி, எம்.கே. காந்தி என்று கையொப்பம் இட்டுள்ளார்.

இதேவேளை, பகத்சிங்கின் தந்தையான கிஷன்சிங், தாளாத பாசத்தின் காரணமாக ஆங்கிலேய அரசிற்கு கருணைமனு ஒன்றைக் கொடுத்து, பகத்சிங்கை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தார்.

இதனைக் கேள்வியுற்ற பகத்சிங் மிகவும் கோபமடைந்தார். அவர் தனது தந்தைக்கு எழுதிய நீண்ட, கடுமையான பதில் கடிதம் அவருடைய தியாகத்தையும், துணிவையும் காட்டுகின்றது. அக்கடிதத்தில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு எழுதுகின்றார்.

“நான் எனது முதுகில் குத்தப்பட்டதாக உணருகின்றேன். இதே காரியத்தை வேறு யாரேனும் செய்திருந்தால் அது துரோகத்திற்குச் சற்றும் குறைவானதல்ல என்றே கருதியிருப்பேன். ஆனால் உங்களைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான பலவீனம் என்றே சொல்லுகின்றேன்.”

23-3-1931 அன்று இரவு 7-33 மணிக்குச் சாவைச் சந்தித்த கடைசி நிமிடம்வரை பகத்சிங்கும் அவரது தோழர்களும் உற்சாகமாகவே இருந்தார்கள். இறுதி நேரத்திலும் பகத்சிங், மங்கிய வெளிச்சத்தில், மங்காத ஆர்வத்துடன் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். அது தடை செய்யப்பட்ட ஒரு சிவப்புப் புத்தகம்.- லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்.”

அந்த இறுதிநேரம் வந்தது. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்து கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் பக்கம் திரும்பி பகத்சிங் கேட்கின்றார்., “இன்னும் இரண்டு பக்கங்கள் தான் பாக்கி இருக்கின்றன. படித்துக்கொள்ளட்டுமா?’

பிரமித்து நிற்கிறார்கள் காவலர்கள். எப்படிப்பட்ட மனிதன் இவர்? லெனினின் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, தூக்குமேடையை நோக்கி நடந்து செல்கின்றார் பகத்சிங்.

மாஜிஸ்ரேட், சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், போன்ற உத்தியோகத்தர்கள் முன்புறமுள்ள பெரிய வாயில்வழியாக வராமல் விசேட விசாரணைக்கோட்டுக்குப் போகும் வழியாக உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பகத்சிங்,‘நீங்கள் பாக்கியசாலிகள்! இந்திய மண்ணின் வீரர்கள், தங்கள் நாட்டின் விடுதலைக்காக புன்னகையோடு சாவைத்தழுவும் காட்சியை நேரில் பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு
கிடைத்திருக்கிறது’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

தூக்குமேடையில் பகத்சிங் நடுவில் நின்றார். ராஜகுரு அவருக்கு வலது பக்கத்திலும், சுகதேவ் அவருக்கு இடது பக்கத்திலும் நின்றார்கள். சுருக்குக் கயிறு அவர்கள் மீது மாட்டப்பட்டபோது அவர்கள் அதை முத்தமிட்டார்கள். மூவரும் ஒருவரையொருவர் கடைசித் தடவையாக தழுவிக் கொண்டு தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். பேசத் தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள் தூக்குப்பலகை தட்டி விடப்பட்டது. பகத்சிங் ஒரு கணத்தில் உயிர் இழந்தார். அவரைவிட மெலிந்திருந்த மற்ற இருவரும் மரணமடைய மேலும் இரண்டொரு விநாடிகளாயின.

இத்தகைய உயரிய விடுதலை வீரனுக்கும், அவனது தோழர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்

அன்புக்குரிய நேயர்களே..

இந்தக் கட்டுரையில் தரப்பட்ட கருத்துக்கள் பல ஆய்வு நூல்களிலிருந்தும், உண்மையான ஆவணங்களிலிருந்தும் சம்பந்தப் பட்டவர்களின் கடிதங்களிலிருந்தும் பெறப்பட்டவையாகும். கிட்டத்தட்ட 24 தமிழ் நூல்களும், 22 ஆங்கில நூல்களும், 130 அடிக்குறிப்புக்களும் அடித்தளமாக அமைந்தன. முழுமையாகத் தொகுத்து அளிப்பதற்கு ‘பகத்சிங்கும் இந்திய அரசியலும்’ என்ற நூலும் 1931ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘வீரத்தியாகி சர்தார் பகத்சிங்’ என்ற நூலும் பேருதவி புரிந்தன. பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியற் தலைவர்கள், ஆங்கில அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் போன்றவர்களின் குறிப்புக்களும், கடிதங்களும் எமக்குப் பல விடயங்களைப் புரிய வைக்க உதவின.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்...

சபாிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி- உச்ச நீதிமன்றம்...


சபாிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது...

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்..


லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது.

மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது.

இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

(காந்தி இர்வின் ஒப்பந்தம்)

இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்’ எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது.

ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது.

அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர்.

அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை.

காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை..

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?” என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது” எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்.

“முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்…

இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே.

காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.” ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர்.

கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன.

ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். “பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர்.

மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்” என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். “மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305)

மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும்.

1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.

- காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு என்ற நூலின் ஒரு பகுதி.

கீழைக்காற்று வெளியீட்டகம்,

10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15

பாஜக டூபாக்கூர் அமித்ஷாவின் டூபாக்கூர் வேலைகள்...


காந்தியும் பகத்சிங்கும் - மறைக்கப்பட்ட உண்மைகள்...


காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்...

ஆனால்...

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக் கொள்ளவில்லை.. இதையே காந்தியும் விரும்பினார்.

சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் .

அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர்.அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன்  சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இந்தியம் அப்போது இழந்தது...

காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும்  எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால்  காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள்.

இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொண்டார் .

அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்து விடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.

ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரை கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள்..

அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு.

ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட  வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக  தூக்கிலிட்டனர்.

பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும்
ஒரு மடங்கு வேகம் காட்டினர்..

லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை..

அதனால் காவலர்கள் அழைத்த போது, ''நான் இங்கே ஒரு போராளியுடன்  உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுக்கிறார்.

வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம்  தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை.

ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததால், நான் ஒரு  போராளியுடன் உரையாடிக் கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ''இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார்.

இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்...

அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜூ கலாட்டா...


பரங்கி மலையும் எவரஸ்ட் மலையும்...


பரங்கி மலையில் ஆரம்பம்...

சென்னையில் இருக்கும் பரங்கிமலைக்கு (தூய தமிழில் 'புனித தோமையர் மலை', ஆங்கிலத்தில் 'செயின்ட் தாமஸ் மவுன்ட்') ஒரு சரித்திரப்புகழ் உண்டு.

134 படிக்கட்டுகளை கொண்ட இந்த மலையில், இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் நினைவாக ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

500 வருடங்களுக்கு மேலாக வழிப்படுதலமாக விளங்குகிறது.

200 வருடங்களுக்கு முன்பு ஆர்மீனிய வணிகர் ஒருவர் தனது சொந்தச் செலவில் இந்த மலைக்கு படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தார்.

இதற்கு இன்னொரு பெருமையும் உண்டு..

உலகில் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று கண்டு பிடிக்கப்பட்ட இந்திய 'சர்வே' பணிகள் இங்கிருந்து தான் தொடங்கின.

தி கிரேட் இந்தியன் ஆர்க் என்று அழைக்கப்படுகிற நில அளவை வேலையை கர்னல் வில்லியம் லாம்டன் என்பவர் 1802ல் இங்கிருந்து தான் தொடங்கினார்.

ஆங்கிலேயர்கள் தங்களது வணிக நோக்கத்துக்காக இந்தியாவை அளக்க முற்பட்டார்கள்.


இந்தியாவின் பரப்பளவு, கடல் மட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஊரும் எவ்வளவு உயரமானது என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.

இதற்காகவே ராபர்ட் கிளைவ், மேஜர் ஜேம்ஸ்ரென்னல் ஆகியோர் தலைமையில் இந்தியாவில் நிலத்தை சர்வே செய்யத் தொடங்கினார்கள்.

அப்போதுதான் "சர்வே ஆப் இந்தியா" தொடங்கப்பட்டது. அன்று கம்ப்யூட்டரோ, நவீன சாதனங்களோ கிடையாது. சர்வே வேலையும் சுலபமானது அல்ல. எல்லா குறிப்புகளும் அளவைகளும் காகிதத்தில் பதிவுசெய்யப்பட்ட வேண்டும்.

அப்போது சர்வே பணிக்காக தியோலைட் என்ற கருவி ஒன்று இருந்தது.

இதை இந்தியாவில் முதன்முதலில் பயன்படுத்தியவர் லாம்டன்தான்.

இதன் எடை 500 கிலோ.

இதைக் கொண்டுதான் பரங்கிமலையில் இருந்து தனது சர்வே பணியைத் தொடங்கினார்.

லாம்ப்டன் தனது சர்வே பணியைத் தொடங்கிய அடையாளமாக பரங்கிமலை மீது ஒரு சர்வே கல்லை நட்டு வைத்திருக்கிறார்கள்.

தேவாலயத்தின் கிழக்கு பகுதியில் இந்திய சர்வே துறையால் லாம்டனக்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

அகன்ற பாரதத்தின் நிலத்தை சர்வே செய்யும் பனியின் தொடக்கம் இந்த பரங்கிமலைதான்.

இந்த அளவை வேலை 40 வருடங்களுக்கு மேலாக நடந்தது. அதற்குள் லாம்டன் இறந்து விட்டார்.

அதன்பின் தாமஸ் எவரஸ்ட் என்பவர் பணியை தொடர்ந்தார். அவர்தான். இமயமலை இருக்கும் சிகரம்தான் உலகிலேயே உயரமாது என்று உலகுக்கு முதன்முதலாக தெரியப்படுத்தினார்.

அதற்கு முன்பு வரை ஆண்டிஸ் மலைச் சிகரம்தான் உலகிலேயே உயரமானதாக கருதப்பட்டது.

தாமஸ் எவரஸ்ட் இந்த சிகரத்தை கண்டு பிடித்தால் தான் அவரது பெயரையே அந்த சிகரத்துக்கு வைத்து விட்டார்கள்...

விசிக திருமா கொள்கை கலாட்டா...


காணாமல் போன சிட்டுக் குருவிகள்...


நடுத்தர வயதை கடந்தவர்கள் சிறுவயதில் பார்த்து பரவசப்பட்ட ஒரு பறவையினம் தான் சிட்டுக் குருவி.

மார்ச் 20 சிட்டுக் குருவிகள் தினம்.

சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவே இப்படி ஒரு தினத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் சிட்டுக் குருவியை வீட்டுக்குருவி என்கிறார்கள்.

பிரிட்டனில் உள்ள 'ராயல் பறவைகள் பாதுகாப்பு சங்கம்' உலக அளவில் அழிந்துவரும் 39 பறவைகள் பட்டியலில் சிட்டுக் குருவியையும் சேர்த்து உள்ளது.

இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் சிட்டுக்குருவி எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் குறைந்து உள்ளது.

குருவிகளை காப்பாற்றுங்கள் என்ற இயக்கம் பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

வீட்டுக்குருவி இங்கிலாந்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று.

குருவிகள் மாயமாகி விடுவதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.

தானியங்கள் பயிரிடும் முறையில் ஏற்பட்ட மாற்றம், பூச்சி கொல்லி மருந்துகளின் உபயோகம் போன்றவை குருவிகளுக்கான உணவை குறைத்து விட்டன.

வீடு கட்டும் முறையும் ஒரு காரணம்.
முன்பெல்லாம் விசாலமான வீடுகளை கட்டினோம். வீட்டில் குருவிகள் கூடு கட்டுவதற்கும் இடம் இருந்தது.

இன்று நாமோ குருவிக்கூடு போல் சிறிய வீட்டில்தான் வாழ்கிறோம்.

பிறகு எப்படி குருவிக்கு இடம் இருக்கும்?

இதுமட்டுமல்ல குருவிகள் அழிவுக்கு ஈயமில்லாத பெட்ரோல், செல்போன் உபயோகமும் முக்கிய காரணம்.

வாகனங்களுக்கு பயன்படுத்தும் 'அன்லீடட்' பெட்ரோலில் உள்ள 'பென்சீன்' மற்றும் 'மினரல் பெர்ஷியா பியூடைல் ஈதர்' என்ற வேதிப்பொருள், பறவைகளுக்கு உணவாகக்கூடிய முக்கியமான பூச்சிகளை கொன்று விடுகிறது.

இதனால் பறவை இனங்கள் உணவு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன.

இதேபோல் செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் குருவிகளின் இதயத்துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சின்ன சிட்டுக்குருவி அழிந்து வருவதற்கு நாம் இத்தனை கவலைப்பட வேண்டுமா?

வேண்டும். சிட்டுக்குருவிகள் நம் வாழ்வுக்கு ஆதாரமானவை.

காடுகளில் வாழும் பறவைகள், விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் நகர்புற வாசிகளான நமக்கும் நாம் வாழும் சுற்றுச்சூழலின் தரத்தை அறிந்து கொள்ளும் அளவுகோல் சமூக பறவையான சிட்டுக் குருவிகளே.

இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்திலும், பூமிக்கு அடியில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலும் வாழும் தகுதி கொண்டவை சிட்டுக் குருவிகள்.

நாம் சுவாசிக்கும் அதே காற்றைத்தான் சுவாசிக்கின்றன.

எங்கும் பறந்து திரியும் இந்த பறவைகளுக்கு அழிவு என்பது சுற்றுச்சூழலின் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான எச்சரிக்கை மணி...

வைகோ நாயூடு வின்.. இந்த கன்னட ஈ.வே. ராம்சாமி முரட்டு பக்தை பாருங்கோ...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


வியக்க வைக்கும் ஒன்பது வகை வெளிப்பாடுகள்...

நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.

அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது. உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை...

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.

5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி. உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.
ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

சரி. இந்த ஆழ்மன சக்திகள் எப்படி, எப்போது சாத்தியமாகின்றன என்பதைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....

ஹைக்கோர்டாவது மயிறாவது...


கர்மக்காரகன் சனியின் மகிமை...


ஒருவர் ஜாதகத்தில் கர்மக்காரன் என்றழைக்கப்படும் சனி உச்சமாக இருந்தால் அவர்களின் சஞ்சீத கர்மா இப்பிறவியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

அது என்ன மாதிரியான கர்மவினை என்றறிய சனி இருக்கும் பாவாதிபதியின் காரகத்துவம் மற்றும் அப்பாவாதிபத்தியத்தைப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.

ஏனெனில், அப்பாவாதிபத்தியம் சார்ந்த கர்மவினைதான் இப்பிறவியின் பிராதன பிராப்த கர்மாவாகும். உதாரணமாக, ஒருவருக்கு சனி 7ல் உச்சமாக இருந்தால் வரும் கணவன் / மனைவிக்கு உற்ற துணையாக இருந்து சேவை செய்வதே இப்பிறப்பின் பிராப்தமாகும..