31/01/2018

சாகர் மாலா திட்டத்திற்காக அமெரிக்கா செயற்கையாக சீற்றங்களை உருவாக்கி மீனவர்களை கொன்று வருகிறது...


விழித்துக்கொள் தமிழ் இனம.. சூழ்ச்சியால் விழ்ந்துவிடாதே...

இனி கோவையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம்...



மாநகராட்சி நிர்வாகம் அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதாவது, நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது வாகன போக்குவரத்தை காட்டிலும் தங்களது பைக், கார் போன்ற தங்களது சொந்த வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

நகரில் பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் செலுத்தும் வாகன நிறுத்தம், இலவச வாகன நிறுத்தம் ஆகியவை உள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளில் கட்டண வாகனங்கள் நிறுத்தும் இடம் தேர்வு செய்யப்பட்டு குத்தகைதாரர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.

இங்கு வாகனங்கள் நிறுத்த குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தொகை பைக், கார் போன்ற வாகனங்களுக்கு ஏற்ப நிர்ணயித்ததை விட அதிகம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்த இலவச பார்க்கிங் வசதி உள்ளது.

பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிறுத்தி வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

சாலையோரம் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளனர்.

மாநகராட்சியின் இந்த முடிவு சமூகஆர்வலர்கள், பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தி வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதாலேயே, சாலையோரம் இலவச வாகனங்கள் நிறுத்தும் இடத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இதற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய 28 இடங்களில் குறிப்பிட்ட மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தனி அடையாளம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இங்கு நியமிக்கப்படும் ஊழியர்கள் மூலம் வாகனம் நிறுத்த குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட உள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் ‘‘ஆன் ரோடு பார்க்கிங்’’ என்ற கட்டணம் செலுத்தும் சாலையோர வாகனம் நிறுத்தும்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் கைவிட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ..

ஒரு இனத்தின் அடையாளத்தை தன் அடையாளமாக மாற்றுவது எவ்வளவு பெரிய கேவலம்...


திராவிடத்தின் வரையறை தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழர் என்றால் அந்த மாநிலங்கள் ஏன்.. திராவிடத்தை ஏற்கவில்லை..? என கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதிலளிக்க வில்லை..

காரணம் அந்தந்த மாநிலங்கள் அவர்களுடைய மண் மற்றும் மொழி சார்ந்த அரசியலை ஏற்றுக் கொண்டன.. ஆனால் தமிழ்..?

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?


நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல...

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்...

மேலும் படியுங்கள்...

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை.

காரணம் பசு வறட்டியில் உள்ளது.

நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்.

அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர்.

இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும்.

ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே.

இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது.

சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர்.

ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது...

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...

அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்...

பாஜக பினாமி அதிமுக அரசின் மக்களுக்கு வைத்துள்ள அடுத்த ஆப்பு...


ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?


நாம் கற்பனை செய்யும் அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும்.

பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...

திராவிடத்தின் 60 ஆண்டு சாதனைகள்...


ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?


நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப் பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்...

ஆரியம் vs திராவிடம் பங்காளி கலாட்டா...


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக் கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை.

நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது...

பாஜக வும் ஏமாற்று வேலைகளும்...


போக்குவரத்து காவலர்ளுக்கு சென்னை காவல்துறை உத்தரவு...


விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் துரத்தி பிடிக்கக் கூடாது.

காவலர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்தி லைசன்ஸ் இருக்கா இன்சுரன்ஸ் இருக்கா என வாகன ஓட்டிகளை தண்ணிச்சையாக தணிக்கை செய்யக் கூடாது.

விதிகளை மீறும் பட்சத்தில் B டைரி வழக்கு பதிந்து காவல் நிலையத்தில் சமர்பிக்க வேண்டும்...

தடியடி நடத்துறது என்ன பெரிய வீரமா.. திருப்பி அடிச்சா ஒருத்தவன் தாங்க மாட்டிங்க.. உன் குடும்பத்துகாகவும் தான்டா போராடுறோம் முட்டா போலிஸ்...


பஸ் கட்டண உயர்வு , ஒரே வாரத்தில் சென்னை புறநகர் ரயிலில் கூடுதலாக 2 கோடி வருமானம் - தெற்கு ரயில்வே துறை தகவல்...


ஜன 20-26 ஆகிய நாட்களில் கூடுதலாக 7.95 லட்சம் பயணிகள் சென்னை புறநகர் ரயிலில் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதிலிருந்து ஒரு வாரத்தில் கிட்ட தட்ட 8 லட்சம் பயணிகளை அரசு போக்குவரத்து கழகம் இழந்துள்ளது தெரியவந்துள்ளது...

பெட்ரோல் விலை உயர்வு : அமைச்சர்களுடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து மத்திய அரசின் புதிய இந்தியாவை நக்கலடித்த புதுவை முதல்வர் நாராயண சாமி...


இது போன்ற சீரியல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்...


17-01-18 அன்று வெளியான தெய்வமகள் சீரியலில் தண்ணீரில் ஊசி மூலம் விஷம் கலப்பது போன்று காட்சி அமைத்துள்ளனர்.

ஏற்கனவே சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் நடக்கையில் இது போன்று புது புது உத்திகளை இவர்களே கற்றுதருவது கண்டிக்க தக்கது.

கில்லி படத்தை போன்று எத்தனை இடங்களில் மிளகாய் பொடி உபயோகித்து குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.

சினிமாவை விட சீரியல்கள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு உறவுகளை சீரழித்து வருகிறது.

இந்த நிலையில் இது போன்று வக்கிர எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதை போன்று சீரியல் எடுப்பதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஒபிஎஸ் இபிஎஸ் ஆட்சி கவிழும் - முன்னால் அமைச்சரும் டிடிவி ஆதரவாளருமான செந்தில் பாலாஜி...


தமிழ் இந்தியாவின் தேசிய மொழி...


ஒரு சீனர் கடையில் அந்த அந்த நாட்டு தேசிய கொடியுடன் அந்த நாட்டு தேசிய மொழியில் வரவேற்பு (welcome) என்று எழுதப்பட்டிதருந்தது..

அதில் இந்திய நாட்டு கொடியும் இருந்தது  இந்தியாவின் தேசிய மொழியாக  எழுதப்பட்டது  என் செம்மொழியான தமிழ்...

வாழ்க தமிழ்...

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள்...


எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டு பிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள்.

இலங்கை: கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 3ம் நூற்றாண்டு கால கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டு பிடிக்கப்பட்டன.

தட்டையான தட்டத்தின் கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட செருமன் ஆராட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா: கி.மு. 2ம் நூற்றாண்டு பானையில் வாயில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.பி. 3ம் நூற்றாண்டு கால நான்கு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் கேரளாவிலுள்ள குகையிலும் மலையிலும் காணப்பட்டன. அதில் ஒன்று ‘சேரன்’ என்ற சொல்லுடன் காணப்பட்டது.

தமிழ்நாடு: ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு.

கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ துரத்திலுள்ள பொருந்தலில் கண்டு பிடிக்கப்பட்டன.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் “மு-ன-க-ர” எனவும் “மு-ஹ-க-டி” எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது.

ஐந்தாம் ‘வீரர்’ கல் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் போர்ப்பனக் கோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டன...

நாம் எளிதாக நினைக்கும் விஷயமெல்லாம் அதன் பின்புலத்தில் எப்பொழுதும் மிகப்பெரும் கார்பரேட் சதி உள்ளது...


சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்...


சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது.

இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு பெயர்களும் உண்டு.

நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

இரத்த குழாய் அடைப்பு நீங்கும்...

அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்..

சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.

நெறிகட்டிகள் குணமாகும்...

சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.

நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.

சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்...

போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

நீண்ட நாள் கப நோய்களுக்கு சங்குப்பூ  பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வந்தால் எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

சங்குப்பூ வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீரக நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.

மேலும் இந்த கொடியின் இலைகள் ஞாபக சக்தியை வளர்க்கும் சக்தி கொண்டது. நரம்பு சம்பந்தமான குறைகளையும் போக்கும்...

இதன் இலைச்சாறு வயிறு உப்புசத்தை போக்கும்.. தொண்டை புண்ணை ஆற்றும்...

தமிழக காவல்துறை என்றால் சும்மா வா...


மண்ணுக்கும் உழவருக்கும் நண்பன் மண்ணுளிப் புழு - ஒரு அதிர்ச்சித் தகவல்...


பாம்பென்றால் படையே நடுங்கும் என்பர். பாம்பை மனிதர்கள் இன்றுவரை ஒரு காலனாய் தான் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழர்களாகிய நமது முன்னோர்கள் நாகர்கள் என்றும் அரவர்கள் என்றும் அழைக்கப்பட்டது நாகங்களை கையாளும் வித்தையை நன்கு உணர்ந்ததால் என்பதே வரலாறு நமக்கு உரைக்கும் செய்தி. சரி ஏன் இந்த விளக்கங்கள். நேரடியாக செய்திக்கு செல்வோம்.

பாம்புகள் என்றால் ஏன் படையே நடுங்கும் என்றால் பாம்பு கடித்து நஞ்சு பரவத்துவங்கிவிட்டால் அதன் பிறகு அதில் இருந்து உயிரை மீட்பது என்பது சிரமமான காரியமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பல வகையான பாம்புகள் பூமியில் உள்ளன. அவற்றில் பல கொடிய நஞ்சுடையது. பல நஞ்சற்றது. இப்போது நாம் பார்க்க இருப்பது மண்ணுளி பாம்பு, இல்லை இல்லை மண்ணுளி புழு.

ஆம். மண்ணுளி என்பது பாம்பின் இனமே கிடையாது. அது புழுவின் இனம். சற்று பெரிய அளவில் வளரக்கூடிய புழு இனம். பிறகு ஏன் துவக்கத்தில் பாம்பை பற்றி இவ்ளோ பெரிய கதை அளந்தீர்கள் என்று நீங்க கேட்பது தெரிகிறது.

இதோ விடை... சில வருடங்களுக்கு முன்னர் மண்ணுளி பாம்பை கடத்துகிறார்கள். மண்ணுளி பாம்பு ஏதோ கேன்சர் நோய்க்கு மருந்தாக பயன்படுகிரதாம் என்றவாறு பல செய்திகளை நாம் பதித்தும் கேட்டும் இருப்போம். அதுவும் உண்மை இல்லை. அது நம்மை ஏமாற்ற செய்த சூழ்ச்சியே.

என்ன சூழ்ச்சி?

மண்ணுளி புழு என்பது வேளாண்மையின் நண்பன். மண் புழு எப்படி மண்ணில் புரத சத்து உற்பத்தியாக வழி செய்கிறதோ அதை விட பல மடங்கு வீரியமான இயற்கையான உரத்தை மண்ணிற்கும் வழங்கும். இந்த புழு அதிக கூச்ச சுபாவம் கொண்டது.

மேலும் இந்த புழுக்கள் மணற்பரப்பு உள்ள இதங்களில் தான் அதிகம் வசிக்கும். இவைகள் மூச்சு விடுவதன் மூலம் மண்ணில் காற்று கடத்தப்படும் திறனும், ஆக்சிஜனும், நைட்ராஜெனும் அதிகமாகிறது. ஆகவே வேளாண்மையில் அதிகமான விளைச்சலை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்படியான நன்மைகளைக் கொண்டிருக்கும் காரணிகளாலே தான் இந்த புழுவை உலக சந்தை குறிவைத்தது. இப்படியான உயிரனங்கள் இருப்பதால் தான் உழவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்யமுடிகிறது. அதனால் அவர்கள் நமது செயற்கை உரத்தையும், பூச்சிமருந்தையும் வாங்காமால் இருகிறார்கள் என்று உணர்ந்த நிறுவனங்கள் தான் இந்த புழுவை பாம்பென்றார்கள், இந்த பாம்பை மருந்தேன்றார்கள், அதற்கு லட்சக்கணக்கில் விலை வைத்தார்கள், நம்மையே அதை கடத்தவும் வைத்தார்கள், இன்று அப்படியான ஒரு புழு இனத்தையே இல்லாமல் செய்து விட்டார்கள்.

சிந்தித்து பாருங்கள் ஒரு புழுவிற்கு லட்சக்கணக்கில் விலை வைக்கிறார்கள் என்றால் அதன் திறன் என்னவாக இருக்கும். அவைகளின் நமது வேளாண்மைக்கு எந்த அளவில் பயன்பட்டிருக்கும் என்று. தொடர்ந்து இந்த வியாபார அரசியலால் நாம் முட்டாளாக்கப்பட்டு வருகிறோம்...

28% தமிழர்கள் வாழும் தமிழர்களின் பூர்வீக மண்ணில் தமிழில் பேசவே தடையாம், இதை அங்குள்ள தமிழர் இனவாதம் என்று சொல்லக் கூட முடியாது...


இங்க சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் என சகல பதவிகளையும் வேற்று இன மக்கள் திராவிடப் போர்வையில் வகித்து வருகின்றனர். ‘தமிழர் தான் தமிழர் நாட்டை ஆள வேண்டும்’ என்றால் நம் மண்ணிலேயே அவர்கள் நம்மை இனவாதிகள் என்பார்கள்..

ஒரு கன்னட கிழவன் தமிழர் நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழர் நாட்டை ஆளுவேன் என்பானாம்.

மானத் தமிழர் நாட்டை மாற்றான் என்னடா ஆள்வது? என போர் கொடி தூக்க வேண்டிய தருணம் இது...

இருசக்கர வாகன ஓட்டிகளை ஆபாசமாக திட்டி நடுரோட்டில் மிருகத்தனமாக தாக்கும் காவல்துறை போர்வையிலுள்ள மக்கள் விரோதிகள்...


வேலூர் பஸ் கட்டண உயர்வு போராட்டம் , கலைந்து செல்லாததால் மாணவிகளை லத்தியுடன் விரட்டி விரட்டி துரத்திய காவல்துறை எனும் மக்கள் விரோதிகள்...


30/01/2018

காண கிடைக்காத அபூர்வ புகைப்படம்...


இன்னைக்கு பல ஷோக்களில் வாவ், ஓ, சூப்பர்னு பாராட்டுற தீர செயல்களை எல்லாம்  தமிழன்  அப்பவே செய்து காட்டி விட்டான்  என்பதற்கு சான்று...

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் காந்தி படுகொலை...


தீவிரவாத இயக்கத்தின் பெயர்: ஆர்எஸ்எஸ்..

தீவிரவாத இயக்கத்தின் அரசியல் பிரிவின் பெயர் : பாரதிய ஜனதா கட்சி..

இந்தியாவில் 4 முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தின் பெயர்: ஆர்எஸ்எஸ்...

சாகர் மாலா.. நம் நாட்டின் இறுதிக்கட்ட கொள்ளை...


பாஜக என்பது கார்பரேட் (இலுமினாட்டி) களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு கட்சி...


இந்த கார்பரேட் பாஜக தன் முதலாளிகளுக்காக வேலை செய்வார்களா.? அல்லது மக்களுக்காக வேலை செய்வார்களா..?

தொடரும் வன்முறை, கண்டு கொள்ளுமா தமிழக அரசு...


காரைக்குடி மண்டலம், மதுரை கிளை சார்ந்த பேருந்து திருவாரூர் லெட்சுமணன் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த போது பயணியிடம் டிக்கேட் கேட்ட நடத்துனர் ரவிச்சந்திரன் முற்படுகையில் பயணியுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.

அதை கண்டு  முருகன் ஓட்டுநர் பயணியை சமாதானம் செய்து கொண்டு இருக்கும் போது பயணி ஓட்டுநர் முருகனை மூர்க்கத்தனமாக தாக்கியதில் அவரது வலது காலில்  முறிவு ஏற்ப்பட்டுள்ளது...

தொடரும் இதுபோன்ற வன்முறைகளை கண்டு நடவடிக்கைகள் எடுக்குமா..

ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்குமா.. இந்த  அரசு......

பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் சத்து நிறைந்தவை...


திருடர்களுக்கு அட்வைஸ்...


ஹலோ திருடாஸ்.. கம்பம் கனரா வங்கிக்குப் போங்க. இங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க...

கம்பம்: வீட்டில் நகைகள் இல்லை என்றும் நகைகள் அனைத்தும் குறிப்பிட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் வித்தியாசமான முறையில் தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் அசந்தா கோவணத்தையே உருவிவிடும் இந்த காலத்தில் பளபளப்பாக ஒரு வீடு பூட்டியிருந்தால் விட்டு விடுவார்களா என்ன. கரெக்டா நோட்டம் போட்டு வீட்டையே காலி செய்து வாங்களே. இதனாலேயே வீட்டை பூட்டி விட்டு எங்கு போனாலும் பொழுது சாய்வதற்குள் வந்துவிடுவார்கள்.

இல்லாவிட்டால் உறவினர்களிடம் சாவியை கொடுத்து வீட்டில் படுக்க சொல்லி விடுவார்கள். இன்னும் சிலரோ காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு பூட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கு ஒருத்தர் என்ன செய்துள்ளார் தெரியுமா.

திருடர்கள் கவனத்துக்கு என்று ஒரு பலகையில் எழுதியுள்ளார்கள். அதில் இந்த வீட்டில் உள்ள நகைகளெல்லாம் கம்பம் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் நகை திருட வருபவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர் என்று குறிப்பிட்டுள்ளனர்...

கோவையில் பட்டதாரிகள் உருவாக்கிய புதிய டாக்ஸி சேவை...


கோவையைச் சேர்ந்த 6 பட்டதாரிகள் OLA மற்றும் UBER டாக்ஸி நிறுவங்களுக்கு போட்டியாக, புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர்.

கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 6 பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து, “MyDriverz” என்னும் புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர். இந்த டாக்ஸி சேவையை OLA மற்றும் UBER ஆகியவை நிறுவனகளுக்கு கடுமையான போட்டியை விளங்க வாய்ப்பு உண்டு.

சமீபத்தில், தனியார் டாக்ஸி நிறுவனத்தின் டாக்ஸி டிரைவர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள், நியாயமான கட்டணத்தில், மக்களுக்கு சிறந்த சேவை வழங்க “MyDriverz” தொடங்க இந்த இளம் பட்டதாரிகளை தூண்டியது.

“OLA” மற்றும் “UBER” டாக்ஸி சேவை நிறுவங்கள்,வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். எனவே,கமிஷன் வாங்காத டாக்சி சேவை ஆப்பை உருவாக்க முடிவு செய்தோம். டாக்ஸி ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு சவாரிக்கும், எந்த கமிஷனும் வசூலிக்கப்படமாட்டாது.

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும்.மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள், அந்த குறிப்பிட்ட தொகையை மட்டும் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டும். தற்போது ஆட்டோ ரிக்க்ஷாவின் ஓட்டுநர்கள், ஒவ்வொரு மாதத்திற்கு 700 ரூபாயும், டாக்ஸி ஓட்டுனர்கள் 1,000 ரூபாயும் செலுத்தவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டைகள், மற்றும் Zero Balance Bank Account இருக்கும்.

“MyDriverz” டாக்ஸி சேவையில் நிலையான கட்டணம் இருக்கும்.கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது. மேலும்,ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்ஸிகளுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து நாங்கள் ஓட்டுனர்களுடன் கலந்துரையாடிய பிறகு முடிவெடுக்கப்பட்ட கட்டணங்கள் இருக்கும் என்று நிர்வாக இயக்குனர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த பட்டத்தாரிகள் “Lakshmi People Service” என்ற நிறுவனத்தை தொடங்கி பள்ளி மேலாண்மை பயன்பாடு மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மென்பொருளை ரூ15,000க்கு பள்ளிகளுக்கு விற்பனை செய்தார்கள். தற்போது,இந்த மென்பொருள் சேலம் நகரிலுள்ள சுமார் 120 பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

இதை தானடா அப்பவே சொன்னோம்.. கார்ப்பரேட்ட விட்டுட்டு மக்கள்ட கையவச்ச எப்படி வரும்...


பல்லாவரம் 11 வார்டு மலை மகள் தெருவில் நித்தியானந்தா கும்பலால் பறிக்க பட்ட மக்களின் அடிப்படை உரிமை...


கடந்த 15 நாட்களாக சாக்கடை கழிவு கூட வெளியேறாமல் தவிக்கும் அப்பகுதி மக்கள்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த மக்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் காரணம் ஏனோ ?

படத்தில் வரும் அத்திப்பட்டி போல திகழ்கிறது இந்த இடம்.

காவி கபோதிகளுக்கு விலை போன அரசாங்க அதிகாரிகளால் நிகழ்த்த பட்ட கொடுமை இது.

அந்த பகுதியில் இருக்கும் தமிழ் தேசிய உறவுகள் இந்த மக்களுக்கு உதவுங்கள்...

உருவாக்குங்கள்...


நீங்கள் ஒரு உலகம் புகழும் கலைஞரா ஆகிறீர்களா? என்பது முக்கியமான விடயமல்ல. ஆனால் எதையாவது உருவாக்குங்கள் – ஒரு அழகிய பாடல், சிறிதளவு இசை, ஒரு நடனம், ஒரு சித்திரம், ஒரு தோட்டம்.

ரோஜாக்கள் பூக்கும் பொழுது, அத்தனை மலர்களுக்கிடையில் வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது.

ஒரு அழகான ஓவியம் – வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த ஓவியம் முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இதற்கு முன் யாருமே செய்ததில்லை, யாருமே இதை மீண்டும் செய்யப் போவதில்லை. அதை செய்ய உங்களால் மட்டுமே முடியும்.

நீங்கள் என்ன செய்தாலும் அதில் உங்கள் தனித்தன்மை வெளிப்படுத்துங்கள்.

உங்களை பற்றி உயிர் வாழ்தல் பெருமை அடையட்டும். வாழ்க்கை சலிப்புட்டுவதாக உணராது; அது ஒரு நறுமணம் ஆகும்.
உங்கள் வாழ்க்கையை வெறுமனே சாதாரணமாக வாழுங்கள். ஒவ்வொரு அனுபவத்திற்குப் பின்னாலும் ஒரு கேள்விக்குறியைப் போடாதீர்கள். மனிதர்கள் உங்களைப் பைத்தியம் என்று நினைக்கலாம். ஆனால் நீங்கள் பைத்தியம் என்றால் இந்த உயிர் வாழ்தல் மொத்தமுமே பைத்தியமாக இருக்கவேண்டும். என்ன செய்வது? இது நமது சக்திக்கு அப்பாற்பட்டது.

தினமும் காலையில் ஏன் சூரியன் உதிக்கிறது? ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. ஒரே ஒரு நாள் கூட அது மேற்கிலிருந்து உதிப்பது இல்லை -- ஒரு மாற்றத்திற்காகவேனும் " நான் கிழக்கிலிருந்து உதிப்பதில் சலிப்படைந்து விட்டேன்" என்பதுமில்லை. விஷயங்கள் வெகு சாதாரணமாக எளிதாகச் சென்றுகொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமே தொந்தரவில் இருக்கிறான்.

நீங்கள்கூட ஒரு ரோஜாப் புதரைப் போல வாழத் தொடங்கும்போது, சூரியனைப் போல உதித்துக் கொண்டு, ஒரு வெண் மேகத்தைப்போல மிதந்து கொண்டு வாழும்போது, அந்த மர்மமான, அற்புதமான, உயிர்வாழ்தலின் உண்மையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.

வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி வதனமும் மட்டுமல்ல, ஒரு உருவாக்கும் நபருக்கு, ஒரு தியானம் செய்யும் நபருக்கு, மரணம் கூட உயர்வானதாக மாற்றமடையும்...

கரூர் நகராட்சி தாந்தோனி ஒன்றியம் மூலக்காட்டானூர் பேருந்து நிருத்தம்...


இதில் விளம்பரம் செய்ய எந்த நகராட்சி ஆணையர் அனுமதி வழங்கினார்கள்?

கசப்பான உண்மை... உண்மையை உணரட்டும் சுதந்திரமாக வாழ்வது யாரென...


நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிடுவோம் - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை, நீதிமன்ற வளாகத்தில் நித்தியானந்தா சீடர் கைது...


தொடர்ந்து நித்தியானந்தா மீது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது என உயர் நீதிமன்றம் கண்டனம்.

பதில் மனு தாக்கால் செய்யாததால் மதுரை ஆதின வழக்கில் உயர் நீதிமன்றம்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து கொண்டு நீதிபதி கூறுவதை நித்தியானந்தா தலைமைக்கு sms அனுப்பி கொண்டிருந்த சீடர் கைது...

தடுப்பூசிகளுக்கு குழந்தைகளின் நோய் தடுக்கும் திறன் இருக்கும் என்பதை விட, தீங்கு அதிகம் விளைவிக்கும் என்பதற்கு அதிகம் சான்றுகள் உள்ளன.. இதனையும் இவர் தான் கூறியுள்ளார்...


பெட்ரோல்.. டீசல் இது இல்லாமல் உன்னால் வாழ முடியுமா...


நம் நாட்டு மக்களின் தற்சார்பு வாழ்வியல் எந்த நிலையில் உள்ளது என்பதை பற்றி அறிய போர் வர தேவையில்லை.

ஒரு 20 நாட்களுக்கு பெட்ரோல்,டீசல் பங்க் மூடப்பட்டால் போதும் தெரிந்து விடும்.

நாம் எந்த அளவு அதை மையமாக கொண்டு நகரத்தப்பட்டுள்ளோம் (நகரத்தை நோக்கி) என்பதை எண்ணி பார்க்க:

தினமும் வேலைக்கு சென்றால் (நாள், வார, மாத சம்பளம் வாங்குபவர்கள்) தான் அடுத்த வேளை உணவு என்பவர்கள் வாழ்க்கை..?

காய்கறி,கனி வகைகள்,உணவு பொருட்கள் முக்கியமான ஒன்று குடி தண்ணீர் இவை எல்லாம் பேருந்து, சரக்குந்து,கனரக வாகனங்கள் கணமே இல்லாத வாகனங்கள் என எதுவும் நகராமல் நமக்கு கிடைக்காது...

அவசர தேவையான மருந்து பொருட்கள், உயிர் காக்கும் சிகிச்சையும் நமக்கு கிடைக்காது (நமக்கு மூலிகை வைத்தியம், கைவைத்தியம்னு எதுவுமே தெரியாதுல என்ன செய்ய நாம தான் வயசான பாட்டி, தாத்தா வை முதியோர் இல்லத்துல விட்டுவிட்டோம் ).

அதற்கு மாற்றுமூலம் எவ்வளவு வந்தாலும் அதை வெளிக்கொணர விட மாட்டார்கள்.

வரும்காலங்களில் இன்னும் நாம் நகர்த்தப்படுவோம்! எனில் அவன் கச்சா எண்ணெயை கொடுக்க எதை கேட்டாலும் (எதை கேட்டாலும்) நாம் கொடுக்க  வேண்டிய நிலையில் இருப்போம்...

சரி இந்த கொடுமையை புலம்பலாம் என பார்த்தால் அப்பா,அம்மா , சொந்தம் என உறவுக்காரன் ஒரு பய கூட பக்கத்தில் இல்லை~ ஏனெனில் நாம் நகரத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளோம். நகரம் பெட்ரோல்,டீசல் இதை மட்டும் நம்பி இருக்கிறது.

சோறு , குடி தண்ணீர்,மருத்துவம், அவசரமாக உறவுகளை பார்க்க என ஒட்டு மொத்த வாழ்வியல் கச்சா எண்ணையை நம்பியே உள்ளது. அவை அவன் கட்டுப்பாட்டில் எனில் அவன் நிர்ணயிப்பது தான் விலை..

தீர்வை நீயே சிந்தி தோழா...

சிட்லபாக்கம் மக்கள் தங்கள் ஏரியை சுற்றி இருக்கும் பாதையில் விளக்கு ஏரியாததால் அங்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல வாரங்களாக புகார் கொடுத்து வந்துள்ளனர்...


விளக்கை சரி செய்யாததால், இன்று பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் புகாரை நூதனமான முறையில் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

ஏரியில் குப்பைக் கிடங்கும் அகற்றப்படாமல், சாக்கடைக்கு கழிவும் நிறுத்தப்படாமல் ஏற்கனவே சில புகார்கள் நிலுவையில் உள்ளது. 

ஆக்கிரமிப்புகள் சில அகற்றப்பட்டுவிட்ட நிலையில் , ஏரியை மக்கள் பொழுதுபோக்க பயன்பெறும் வகையில் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை.

பஞ்சாயத்து செயல்படுமா?

போர் வந்தால் போராடப் போவது தமிழர் தான்.. எந்த வந்தேறிகளும் இரத்தம் சிந்த வரமாட்டார்கள்...


ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?


ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா...

ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே...

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?

அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே...

திராவிடமும் ஆரியமும் ஒன்றே...


வாய்புண் மருத்துவம்...


கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாவது மட்டுமில்லாமல் பல தொந்தரவுகளும் சேர்ந்தே தொற்றிக் கொள்கிறது...

பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படுவதும் இந்த கோடையில் தான்.

வாய்ப்புண் பல காரணங்களால் வருகிறது அவை ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது.

இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது.

வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

உங்களுக்கு வாய்ப்புண் இருந்தல் நீங்களும் நீங்களும் இவைகளை உபயோகித்துக் கொள்ளுங்கள்...

மஞ்சள்...

எந்த வகை நோய்களுக்கும் சரி அழகிற்கும் சரி முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் தான். அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.

நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.

புதினா இலை...

புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.

வெந்தைய இலை...

வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

துளசி இலை...

ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ...

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

வாய்ப்புண் இருப்பின் விரைவில் குணப்படுத்த விரும்பினால் பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்...

போலியோ சொட்டு மருந்தினால் தான் போலியோ என்ற நோய் அற்றுவிட்டது எனும் கூற்றை பொய் என்று அதனை கண்டு பிடித்தவரே கூறியிருக்கிறார்...


வளிமண்டலத்தை (ozone) பற்றி 2000 வருடங்களுக்கு முன்பே உணர்ந்த தமிழ் முன்னோர்கள்...


Ozone என்பது இன்றைய அறிவியலின் கூற்றின்படி சூரிய கதிர்களின் நேரடி தாக்குதலை மட்டுப்படுத்தி பூமியில் வாழும் உயிரனங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் ஒரு மண்டலம் ஆகும்.

பூமியில் இருந்து ஆறு பகுதிகாளாக பிரிகிறது ஆகாயம் நோக்கிய நீளம் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

பூமியில் இருந்து ஒன்றின் மேல் ஒன்றாக தொட்ரகிறது இந்த ஆறு பகுதிகளும்.

அவை ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ரோஸ்பியர், மீசசோஸ்பியர், தெர்மொஸ்பியர்,  எக்ஸ்சோஸ்பியர், நத்திங்கனஸ் என்பதாகும். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வளிமண்டலத்தைப் பற்றியும், ஆகாயத்திற்கும்  பூமிக்குமான இடையில் உள்ள பகுதிகளையும் தெளிவாக விளக்குகிறது நமது முன்னோர்கள் படைத்த இலக்கியங்கள்.

“இருமுந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலை இயஆகாயமும்.” (புறநா – 20).

இந்த பாடலில் பூமிக்கு மேல் மூன்று பகுதிகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் சூழ்ந்த மண்டிலமும் வளிதரு திசையும் வறிதுநிலை காயமும்.” (புறநா -30).

இந்த பாடலில் பூமிக்கு மேல் ஐந்து பகுதிகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

“மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்.” (புறநா -365).

இப்பாடலில் உள்ள  “நீத்தம்” என்பது எதுவும் இல்லாதது என்று குறிப்பிடுகிறது. ஆக “நீத்தம்” என்பது இன்றைய அறிவியல் கூறும் நத்திங்கனஸ் என்பதே ஆகும்.  பூமிக்கு மேல் உள்ள இரண்டாவது பகுதியில் தான் சூரியக்கதிரில் இருந்து பூமியை காக்கும் வளிமண்டலம் அமைந்துள்ளது.

இந்த ozone சூரிய கதிரின் வெப்பத்தை தாங்கி அதனை மட்டுப்படுத்தி அதன் நேரடி தாக்கத்தில் இருந்து நம்மை காக்கிறது.

இந்த செய்தி நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். தமிழனின் அறிவியில் வின்னியல் புவியியல் அறிவு நம்மை மட்டுமல்ல உலகத்தவர்களையும், இன்றைய நவீன அறிவியலாளர்களையும் சற்றே மூர்ச்சை அடையத்தான் செய்யும்...

29/01/2018

ஆசிரியரை கொன்ற மாணவர்கள்...


என்ன சமூகமடா இது?

நாகப்பட்டிணம் மாவட்டம்  வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஊராட்சி வெள்ளப்பள்ளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவகுமார் என்பவரை ஐந்து மாணவர்கள் சேர்ந்து குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். இரண்டு மாணவர்கள் போலீஸில் சிக்கினர்...

மருத்துவ வியாபாரம்... விழித்துக்கொள் தமிழா...


காவேரி டெல்டா அழிவு சாகர் மாலாவின் ஓர் அங்கம்.. விழிப்புடன் இருப்போம்...


மரு வை போக்கும் மருத்துவம்...


மரு (Skin Tag) உதிர...

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்...

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்...

எப்போது வரை சாதியானது தமிழ் அடையாளமாக இருக்கும்?


தமிழர்களுக்கு என்று முறையான நாடோ அரசோ இல்லை.

இருந்திருந்தால் ஆவணங்களில் 'இனம்' என்பது சேர்க்கப்பட்டு யார் எந்த இனம் என்பதற்கான சான்று இருந்திருந்திருக்கும்.

ஆனால் இன்று நம்மிடம் இனத்தின் உட்பிரிவுக்கான சான்று ஆவணம் மட்டுமே உள்ளது.

ஆக இன்று யாரெல்லாம் தமிழர் என்று அடையாளம் காண சாதி சான்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழர் தாய்நிலம் தமிழரின் (இராணுவக்) கட்டுப்பாட்டில் வந்தபிறகு
இனம் எது என்பதற்கான சான்று வழங்கப்படும் வரை தமிழர் சாதி அடையாளத்தை மறைக்காமல் இருப்பது அவசியமாகிறது.

நமக்கான அரசு அமைந்ததும் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு இனத்தை மட்டும் ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.

மற்ற இனங்களுக்கு இனத்தின் மொத்த வரலாறே நீளமாக இல்லாத போது
தமிழரின் சாதி வரலாறு பிற இனங்களின் வரலாறை விட நீளமாயிருக்கிறது.

இது தமிழர்களின் சாதியப்பெருமைக்கு வழிவகுத்து பிரிவினை உண்டாக்கி
வந்தேறிகள் அரசியல் செய்ய வழி ஏற்பட்டுவிட்டது.

அதாவது நமது சாதி பிரச்சனைக்கு காரணம் நமது பழமையே ஆகும்.

அதனால் சாதி அடையாளத்தை விட பழமையான இன அடையாளம் புறக்கணிக்கப்பட்டு போதிய ஆய்வுகள் இல்லாமல் இன அடையாளம் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

50,000 ஆண்டுகள் பழமையான நமது இனம் அதன் பழமையை நிறுவ முடியாமல்...

சில நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான சாதி வரலாற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக முதலில் சாதி அடையாளத்தை ஏற்றுக் கொண்டு..  சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும்.

பிறகு சாதிகள் அனைத்தும் இணைந்து தமிழர்நாடு அமைக்க போராட வேண்டும்.

பிறகு இன அடையாளத்தை உறுதி செய்து சான்றளித்து விட்டு சாதிய அடையாளத்தை விட்டுவிட வேண்டும்.
இதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.

வருங்காலத்தில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிடும்.தமிழினம் மொத்ததமும் ஒரு தமிழ்ச் சாதியாக மாறித்தான் தீர வேண்டும்..

முப்படை கொண்ட தமிழர் அரசு அமைந்த பிறகு...

இன்று சாதிய வரலாற்றை எவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோமோ
அதே அளவு தீவிரத்துடன் இன வரலாறை ஆய்வு செய்ய வேண்டும்.

சுருக்கமாக...

தமிழர் நாடு தமிழரின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வரும் வரை சாதி அடையாளமே தமிழ் அடையாளம்...