26/11/2017

தமிழா சிந்தித்து எழு...



சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி..

தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது..

விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது ..

கலையும் பண்பாடும் சீர்குலைந்தது..

ஆரிய வைசிய மகாசன சங்கம்,
நாய்டு மகாசன சங்கம்,
தெலுங்கு மகாசன சங்கம்,
கேரளா மகாசன சபை,
சௌராஷ்டிர அமைப்புகள்,

போன்றன முளைத்துவிட்டன..

ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது திராவிடம்...

தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்தியமும் திராவிடமும் தான்..

நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு..

திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..

இன பற்று கொள்ளத வரை எழ முடியாது, எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..

சினம் கொள்ள மறுத்தால்
நீயும் ஒரு பிணம்...

தமிழர்நாடு தமிழர்களுக்கே...

கியூபாவின் தந்தை பிடல் காஸ்ட்ரோ நினைவு தினம்...


இவரை  638 முறை கொலை செய்ய  முயற்சித்தார்கள், அனைத்திலும் தப்பித்தார். 

26.11. 2016 இயற்க்கை எய்தினார். சிறந்த போராளி..

விதைத்தவன் உறங்கினாலும்,
விதை ஒரு நாளும் உறங்காது..

-  ஃபிடல் காஸ்ட்ரோ...

எல்லாம் இயற்கை வளங்களை சுரண்டி வெளி நாடுகளுக்கு அனுப்பி இந்தியா வை பாலை வனமாக மாற்றும் திட்டமே சாகர்மாலா...


தமிழினத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



நீ எங்கு இருக்கிறாய் என்று
இன்றளவும் யாருக்கும் தெரியாது...

என்ன ஆனாய் என்று யாராலும்
அறுதியிட்டு சொல்ல முடியாது....

ஆனாலும் நீ இருக்கிறாய்...

ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
இதயமாய்..
வீரத்தின் உதயமாய்...

உலகம் வியந்த மாமனிதனே..
சிங்களவன் பயந்த தமிழனே.

அந்நியனை விரட்ட
அனலாய் திகழ்ந்தவனே..

அகிம்சை போதித்த
அண்ணல் வழி செல்லாதவனே..

நீ எங்கு இருந்தாலும்
இருக்கிறது உன் வீரம்
உன் பிறப்பை போற்றும்
என் போன்ற
இளைங்கர்களிடம்
வித்தாக..

நீ என்ன ஆனாலும் இருக்கிறது
உன் தீரம் உன் பெருமை போற்றும்
ஒவ்வொரு தமிழனிடமும்
சுதந்திரத்தின் சொத்தாக....

வரலாற்றில் எழுதப்பட வேண்டிய
ஈழத்து சிங்கமே..

ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நித்தமுமே..

பிராபகரன் என்று உன் பெயர்
சொல்லும் போதெல்லாம்....

வீரம் என்னில் நிறைகிறது
என் கைகள் தமிழன் என்று சொல்லி
உமக்கு சல்யுட் அடிக்கிறது...

மாணவர்கள் எந்த பிரச்சனை என்றாலும் 1098 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து பேசலாம்...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


தனி தமிழ்நாடு கோரிக்கை வைக்காமல்
தமிழ் தேசியம் என்று பேசி..

இந்தியத்தின் அடிமை சிறை நேசிப்பவர்கள்
யாராக இருந்தாலும்..

அவர் எம் இனத்தின்
துரோகியே...

தமிழக அரசால் கோவையில் ஒருவர் மரணம்...


தமிழினமே விழித்தெழு...


சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது..

முதலையை முறியடிப்பது எப்போது?
சேற்றிலிருந்து எழுவது எப்போது?

நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.. இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்..

திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது..

தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்..

வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது.

அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது..

தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்..

கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது..

ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் சமஸ்கிருதமும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன..

இதுதான் திராவிடம் செய்த கோலம்..

தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது..

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர.. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்..

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும்..

தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...

திமுக வும் டூபாக்கூர் வாக்குறுதிகளும்...


தமிழினத் தலைவர் மேதகு வே. "பிரபாகரன்" என தலைப்பிடப்பட்ட நூலிலிருந்து....


தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் (1984) தங்கியிருந்த போது பெசன்ட் நகரில் ஒரு வீட்டில் முதன் முதலாக நேர்காணல் நடத்த காத்திருந்தார் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்....

சூப்பர்மேன் வருவாரென எதிர்பார்த்திருந்த அனிதா சற்று உயரம் குறைவாக வந்தமர்ந்த தலைவரைப் பார்த்து இயக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்த அனிதா, ஜன்னலுக்கு வெளியே தலைவரைத் தேடி தன் பார்வையை ஓட்டினார்.

புரிந்து கொண்ட தலைவர்.. சற்று மௌனத்திற்கு பிறகு 'நான் தான் பிரபாகரன்' என்றவரின் மென்மையான குரலைக் கேட்டதும் அனிதா வியந்தாராம்.

அவரது நேர்காணலில்..

எதிர்காலத்தையும் எதிரிகளையும் நிகழ்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலும், அவருடைய ஒரே இலக்கு தமிழீழத்தை தவிர வேறில்லை என்பதும், அவர் எவ்வளவு கூர்மையாக உன்னிப்பாக நிகழ்வுகளை விடயங்களை உற்று நோக்குகிறார் என்பதும் புரிந்தது.

மேலும் தலைவர் சொன்ன விடயம், (இந்த விடயத்தை அனிதா பிரதாப் வெளியிடவில்லையாம்) என்றாவது ஒரு நாள் நாங்கள் இந்தியாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம்.

(அதாவது இந்திய அமைதிப்படையுடன் பின்னாளில் ஏற்படப்போகும் போரினை முன்கூட்டியே கணித்திருக்கிறார்).

இதைக் கேட்ட அனிதா அதிர்ச்சியடைந்து
இந்தியா உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோறூட்டும் கைகளையே கடிப்பீர்களா? என வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த தலைவர், தமிழீழம் அமைவதை இலங்கையை விட இந்தியா விரும்பாது. ஏனென்றால் இந்தியாவில் ஐந்துகோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றாராம்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்...


வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவக் குணங்கள்...


முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்...

ஊழல் புகாரில் ஓபிஎஸ் - இபிஎஸ்.. கைதாவார்கள் மலேசியா பத்திரிகைக்கு தெரியுது...


மனமும் கர்மாவும்...


உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அது தான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்ய தான் செய்தார்கள்.

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு : முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்ப படாதீர்கள்...

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் தேசப்பற்று...


விடுதலை வேளிவியில் தமிழகம் என்ற புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரையும் விடுதலைப்போராட்ட வீரராக ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் தெரியுமா?

1935மார்ச் 10-ம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டதனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியை கீழே தருகிறோம்..

காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை என்று ப.ஜீவானந்தம் தமது ’ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் கூறுகிறார்.

மேலும் 12-04-1936ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக்கட்சி அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானம் என்ன தெரியுமா? இதோ..

சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்ய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. (அறிவு -1936 மே இதழ்).

ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருந்த போது தான் இந்த தீர்மானம் போடப்பட்டது. ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுந்தப் பொய்யாகும்.

மேலும் ஒரு ஆதாரத்தைப் பார்ப்போம்.

கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்..

பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

இந்தியாவை விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக் கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது திராவிடஸ் தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார்.

பிராமணர்கள் தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம் தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஓழிப்பதற்காகவே வெள்ளைக்காரர்கள், இருக்க வேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தார்கள்.

அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும் போது நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். என்னய்யா யோக்கிதை இது, நீ பாகிஸ்தான் கொடுத்தது போல, திராவிடஸ் தான் கொடுத்துவிட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும் என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரே பேசியிருக்கிறார். (நூல்: நான் பார்த்த அரசியல்).

ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகும்.

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்..

பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் நீடித்தது. இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும் விட்டுவிட்டுப் போகாதீர்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது (குமுதம்: 03-02-2000).

உடனே இதற்கு சின்னக்குத்தூசி பதில் கூறுகிறார்..

வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்ட போது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.

சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே – எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும். (குமுதம்-03-02-2000).

இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?

துக்ளக் ஆசிரியர் சோ சொல்வது தான் உண்மை.

ஆதாரம் இதோ..

27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு : 1948 (நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு).

இந்த ஆதாரம் சின்னக்குத்தூசிக்கு போதும் அல்லவா, மேலும் ஓர் ஆதாரம்..

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமி நாயக்கரே ஒத்துக் கொள்கிறார்.

ஈ.வே. ராமசாமிநாயக்கர் கூறுகிறார்..

நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. (தமிழர் தலைவர் பக். 14).

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக் கொள்கிற போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகுமல்லவா.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதாவது சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியிருக்கிறாரா?

இல்லை..

சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?

இல்லை..

சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?

இல்லை..

இல்லை. இல்லை. இல்லவே இல்லை..

பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் இந்த திருட்டு திராவிடர்கள்...

ஓடும் பஸ்சில் வாலிபரை கொலை செய்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்...


டில்லி லஜ்பத் நகரில், 20 வயது வாலிபர், நேற்று பஸ்சில் பயணம் செய்தார். ஒரு பஸ் நிறுத்தத்தில், 13 - 16 வயதுடைய ஆறு சிறுவர்கள், பள்ளி சீருடையில், அந்த பஸ்சில் ஏறினர். சிறிது நேரத்தில், தன் மொபைல் போன் காணாமல் போனதை அறிந்த வாலிபர், பள்ளி சிறுவர்களை சந்தேகித்து, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, சிறுவர்களில் ஒருவன், வாலிபரின் கழுத்தில் கத்தியால் கிழித்து விட்டு, பஸ்சிலிருந்து குதித்து தப்பியோடினான். அவனுடன் வந்த மற்ற சிறுவர்களும் தப்பினர். படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...


மண்டை மேல இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துட்டார் பலிசா நாய்டு, சாதி வெறியன், தமிழின அழிப்பின் ஆணிவேர், பெரியார் என்று பொய்யாக அழைக்கப்பட்ட கன்னட தெலுங்கன் ஈ.வே.ராமசாமி..

ஆதி தீராவிடர்கள் (மறையர்கள்) தமிழ் அரசர்கள், மூவேந்தர் காலத்தில் தான் மிக கேவலமாக நடத்தப்பட்டனர் என்கிறார்,

சரி தமிழ் அரசர்களின் ஆட்சிக் காலம் எதுவரை இருந்தது?

சோழர்கள் கி.பி 1100 வரையே, அதற்க்குப்பின் தெலுங்கர்கள்  ஆண்டனர் (தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களை அழித்து), இடையில் சிற்றரசர்களாக பாண்டியர்கள் சிறிது காலம் ஆண்டனர்.

பின் முகமதியர் ஆட்சிக் காலம், இவர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்ற, கி.பி.1336 ல் விசயநகர வடுக தெலுங்கு அரசு உள்நுழைந்தது (வீர நாயக்கர் இன வரலாறு) இது கிட்டத்தட்ட கி.பி 1746 வரை நீடித்தது, அதற்க்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.

பின் 1920 ல் இருந்து இன்று வரை தீராவிடர்கள் (தெலுங்கு வந்தேறி, மலையாள வந்தேறி, கன்னட வந்தேறி) ஆட்சி (இதில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்).

இப்போது ராமசாமியார் (தமிழின அழிப்பின் ஆணிவேர்) தமிழ் அரசர்கள் தான் மறையர்களை மிக கேவலமாக நடத்தினர் என்கின்றார்.

சுமார் அவர் காலத்துக்குக்கு 1000 வருடங்களுக்கு முந்தைய மூவேந்தர்களின் வரலாற்றை பேசியவர், இந்த தெலுங்கு, வடுக விசயநகர அரசைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?

இவர்களுடைய ஆட்சி நல்லாட்சியாக இருந்திருந்தால் மூவேந்தர் காலத்தில் அடிமைகளாக இருந்த (பலிசா நாய்டு பொய்யாக கூறுவதைப் போல)..

மறையர்கள் இக்காலத்தில் விடுதலை அடைந்திருக்கலாமே? எழுச்சி அடைந்திருக்கலாமே?

இன்று இவர் இதைப் பற்றி பேச வேண்டிய நிலை வந்திருக்காதே? ஏன் நிகழவில்லை?

மழை விடாது பெய்த காரணத்தால் தெலுங்கு, கன்னட, மலையாள பிராமணர்களுக்கு உணவளிக்க முடியாது போனது..

அதைக்கண்டு வேதனையடைந்து தன் அரண்மணையின் ஒருப்பகுதியை இடித்து அதிலுள்ள தூண்கள் மற்றும், இதர மரங்களை வைத்து சமைத்து உணவளித்தது இந்த விசயநகர அரசு காலக்கட்டத்தில் தானே?

ராச ராச சோழன் காலத்தில் கோயில்களில் தமிழில் தானே பூசை செய்யப்பட்டது?

பின் வந்த வடுக தெலுங்கு அரசு அம்முறையை மாற்றி கோயில்களில் சமசுகிருத தெலுங்கு பேரிரைச்சலை உண்டாக்கியதே?

புலவர்க்கெல்லாம் புலவரான கிருட்டிண தேவராயராயர் சமசுகிருத, தெலுங்கு நூல்களை இயற்றி மகிழ்ந்தாரே?

கிருட்டிண தேவராயரின் அமைச்சர் தெனாலி ராமன் தெலுங்கு பிராமணர் தானே?

அரண்மணைகளிலும், செல்வந்தர் வீடுகளிலும் மலம் அள்ளுவதற்க்கென்றே வரும் போது ஒருச் சாதியினரை கொண்டு வந்தனரே?


தேவதாசி முறையை கொண்டு வந்ததும் இவர்கள் தானே? (ஆதாரம் 1113ல் கர்நாடக அலஹனப் பள்ளியில் உள்ள கல்வெட்டு -மருதம் நூல்).

மூவேந்தர் காலத்தில் மறையர்கள் இழிவாக இருந்திருந்தால் அவர்கள் தானே மலம் அள்ளியிருக்க வேண்டும்?

அவ்வாறு இருந்ததால்? அப்படி இருந்திருந்தால் இந்த வடுக தெலுங்கு அரசின் காலக்கட்டத்தில் புதிதாக ஒரு சாதியினரை கொண்டுவர அவசியம் இல்லையே?

பின் முகமதியர் காலத்தில் சிறிது இழிவு நிலை மாறியது என்றுள்ளார்,

(துலுக்கர்களின் ஆட்சி கொடுமையை எதிர்த்து விசய நகரை உருவாக்கின்றது வெற்றி கொள்கின்றது, மேற்கும் தெற்கும் தங்கள் இனத்தை பரப்புகின்றது.).

இது வீர நாயக்கர் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது, ஆதி தீராவிடர்கள் இழிவுநிலை துலுக்கர்களால் நீங்கும் போது..

அதை விசயநகர அரசு தடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று போராட வேண்டிய நிலை உண்டாகுமா?

அப்புறம் கிறித்துவ அரசர்கள், கும்பினிப் படை செய்த அட்டூழியத்தை மறைக்க முயலுகிறாரோ?

இன்னும் பத்தாண்டுகள் அவகாசம் கொடுத்தால் அனைவரையும் கருப்பு ஆங்கிலேயராக மாற்றி விடுவேன் என்றது இவர்கள் தானே?

கால்டுவெல் முதன் முதலில் திருநெல்வேலியில் தானே கால் வைத்தார்?

அங்கு தானே சாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆடியது? பலரும் கிறித்துவத்துக்கு மாறியது இங்கு தானே?

சரி அங்கு அதற்க்கு முன் ஆண்டது யாரு? வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று பொய்யாக அழைக்கப்பட்ட தெலுங்கு வந்தேறி கொள்ளைக்காரன்  கெட்டி பொம்முலு தானே?

அப்புறம் முருகனை சுப்பிரமணியனாக மாற்றியது, தை ஒன்றை சித்திரை ஒன்றாக மாற்றியது, சாதியக்கொடுமை, தீண்டாமை கொடுமை, இரட்டை குவளை என பல அட்டூழியங்களை அரங்கேற்றிய தெலுங்கன் திருமலை நாயக்கர் போன்றோரை, நம்ம பலிசா நாய்டு, சாதி வெறியன் ராமசாமி நாயக்கருக்கு தெரியாமல் போனது ஏனோ? தெலுங்கு இனப்பாசமோ?

1000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை பேசத்தெரிந்த ராமசாமி நாயக்கருக்கு, அதற்க்கு பிந்தைய வரலாறு தெரியாமல் போனது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் உள்ளது..

இன்னும் தகவல் உள்ளது கை வலிப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்...

நியூட்டனின் F = MA என்ற விதியை தெளிவாக போதிக்கும் திருமூலர்...


அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகர வுகார மிரண்டு மறியல்
அகார உகார மிலிங்கம் தாமே.
- (திருமந்திரம்: 1753)

பொருள்:

அகரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும், உகரம் சத்தி என்றும் அறிந்தால், அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.

அறிவியல்:

நியூட்டனின் F(Force) = M(Mass) * A(Acceleration) போதிப்பது யாதெனில் திடப்பொருளுடன் சக்தி சேரும் போது அங்குதான் இயக்கம் ஏற்படுகிறது என்பதாம்.

அதாவது ஒரு கல் ஒரு இடத்தில் அசையாதிருந்தால் அது வெறும் திடப்பொருள்தான் அந்த கல்லை ஒருவன் உருட்டி செல்கிறான் எனில் அங்கு உந்து சத்தி (Acceleration) ஏற்பட்டு கல்லானது இயக்கத்திற்கு உள்ளாகிறது.
இங்கே கல்லானது இயங்கும் திடப்பொருளாக உருமாறுகிறது.

இதைத்தான் திருமூலர் M(Mass) ஐ சிவமாகவும், A(Acceleration) சத்தியாகவும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சத்திதான் உயிர் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு பொருளின் இயக்கித்திற்கு தேவை சத்தி மட்டுமே..

சிவசத்தியின் கூட்டு சேர்கையே உயிரோட்டத்தின் அச்சானி...

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்...



கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான்..

கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது. கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு...

பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு 50 கிராம். கீரை வகைகள் சிறு பிள்ளைகளுக்கு வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டிரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகள் மாசுபடுகிறது.

எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தலாம். நன்கு கழுவி சுத்தம் செய்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வராது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கரோட்டீன் சத்து வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்...

சீனர்களின் கடவுள் ஒரு தமிழன் போதி தர்மன்...


வரலாற்றின் அதிரடி.. ஆனால், தமிழர்களின் இன்றைய நிலை..?

பிறப்பு : கிபி 475

தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்..

தோன்றல் : பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes) மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes).

பிறந்த ஊர் : காஞ்சிபுரம் தமிழ் பாரம்பரிய கல்வியான தற்காப்பு கலை, மற்றும் மருத்துவத்தை சிறுவயதிலே கற்றுதேர்ந்தார்.

பயணம் : 17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம்.. புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்.

வாழ்க்கை வரலாறு : சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார்.

ஆதாரம் : சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு.

வாழ்க்கை சாதனை : சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு ).

வாழ்ந்த வருடங்கள் : 75 (கிபி 550 )
இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது…

தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


எனக்கு என்றால் அது மகிழ்ச்சி..
அண்ணைக்கு என்றால் அது பாசம்..
அய்யனுக்கு என்றால் அது அன்பு..
மனைவிக்கு என்றால் அது பிரியம்..
பிள்ளைக்கு என்றால் அது சுகம்..
தலைவனுக்கு என்றால் அது பெருமை..

ஐந்துகரனை சிலையில் கண்டோம்..
பிரபாகரனை சிலோனில் கண்டோம்..

பணத்திற்காக பாடுபடும் பூமியில்..
தன் இனத்திற்காக பாடுபட்ட சாமி நீ..

நீரின்றி அமையாது இவ்வையகம்..
தலைவா - நீ இன்றி அமையாது தமிழ்தாயகம்..

நீ இல்லை எனும் சொல்லை
தாங்கும் இதயம் தமிழர்வசம் இல்லை..

தமிழுக்கு வான் எல்லை..
தமிழர்க்கு நீ எல்லை..
இனத்திற்கு ஒரு முல்லை..
என்றும் எங்கள் வேலுப்பிள்ளை...

மாவீரன் தமிழினத் தலைவன் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


இதோ உதடுகள் உன் பெயரை
உச்சரிக்கும் மறுகணமே
விரல்களுக்கு நடுவே
விருக்கெனப் புகுந்து விடுகிறது
வீரம்!

பிரபாகரன் என்ற
இப்பெயருக்குத் தானே
பீரங்கிகளும் பின்வாங்கின.

பிரபாகரன் என்ற இப்பெயர்
கேட்டால் தானே இப்பிரபஞ்சமே
பிரமித்து நிற்கிறது.

வேங்கை உன் வேகம் கண்டு
சிறுநீர் கழித்த படியல்லவா
சிதறி ஓடின
சிங்களத்து சிறு நரிகள்.

புரட்சி என்ற சொல்லுக்குப்
புது இரத்தம் பாய்ச்சிய நீ
புலித்தலைவன் மட்டுமல்ல.
எமைப் பொறுத்தவரை
இப்புவித் தலைவனும் கூட..

கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை
நீ கட்டியெழுப்பிய
படைகளிடமிருந்து தான்
கற்றுக்கொள்ள வேண்டும்.

உன் ஆயுதம் சினுங்கியவரையில்
தன ஆணவம் அடங்கியல்லவா
கிடந்தது சிங்கள ராணுவம்.

புரட்சியாளன் உன் புகழ் பாடுவதில்
புல்லரித்துப் போகிறது என் புதிய பேனா.

தலைவா உன் பிறந்தநாளே
தரணியில் எமக்குச் சிறந்த நாள்.

தமிழீழம் ஒன்றே உனக்கு
நாம் தர நினைக்கும் தகுந்த பரிசு.

அடுத்துவரும் உன் பிறந்தநாளில்
அதையுனக்குப் பரிசளிக்க முயற்சிக்கிறோம்.

தடுப்பவரின் தலைகொய்து
பருந்துகளுக்குப் பகிர்ந்தளிப்போம்.

எங்கள் இதயத்தில் வாழும்
இணையில்லாத் தலைவனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

தமிழினத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களை பற்றி தெரியாதவன் தமிழனே இல்லை....


என் தலைவனின் தனி பெருமையை , தனி திறமையை என் ஈழ தமிழகமே சொல்லும் என் தமிழகழும் சொல்லும்....

தன்னை பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு தான் குடிப் போகும் புது இல்லத்திற்கு அன்னையர் இல்லம் என்று பெயர் வைக்கும் மூடர்கள் வாழும், கோமாளிகள் வாழும் இந்த தமிழ் நாட்டில் பிறந்ததற்காக பெருமை கொள்ளவில்லை...

நான் தமிழ் பேசுகிறேன் நான் தமிழ் நாட்டில் வாழ்கிறேன் அதனால் பெருமைப்பட்டு கொள்ளவில்லை....

மாறாக என் தலைவன் ஒரு தமிழன் அந்த தமிழன் ஒரு ஈழ தமிழன் திரு.பிரபாகரன் பிறந்த இந்த தமிழ் வம்சத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன் என்பதால் தான் நெஞ்சு தட்டி தோள் தூக்கி பெருமை கொள்கிறேன்....

மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டு பிடிப்பு...


சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு...

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி..

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்..

ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்..

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன?

சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார்.
அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார்.

புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர்.

அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார்.

சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார்.

இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல்.

நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் மயிலின் கழுத்துப் பகுதி என்று இருந்ததைப் பார்த்தார்கள்.

உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது.

பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்.

இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டு பிடித்தாகிவிட்டது..

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது.

அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்!

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்க முண்டு..

வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள்.

ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும்.

ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது.

அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார்.

தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம்.

எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்..

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா?

தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ் தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.

இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை.

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்...

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் சிந்தனை துளி...


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால்
ஒரு சாதாரண மனிதப் பிறவியும்
சரித்திரத்தைப் படைக்க முடியும்..

நாம் துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது...

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை...


நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க.

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்.
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை.

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு.

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது.
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது.
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்.

நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது.

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்.
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க..

நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன..
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

1981-ஆம் ஆண்டில் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை...

உலகத் தமிழர்களின் புரட்சித் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.. 2006 ல் நடந்த உண்மை பதிவேடு இது....


2000 ம் ஆண்டு ஆனையிறவு கூட்டு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் வீழ்ந்தபின் இலங்கை தீவில் இரண்டு இராணுவக் கட்டமைப்பு உண்டு என உலகமே ஒத்துக் கொண்ட காலப்பகுதி ..

ஒன்று இலங்கை இராணுவம் , மற்றையது தமிழீழ இராணுவம்... அதுவும் இனிமேலும் தொடர்ந்து போர் நடந்தால் .. அது இலங்கை இராணுவத்துக்கு தான் பேரிழப்பு என்ற ஒரு நிலைமை ... இப்படி இருக்கும் போது தான் இலங்கை அரசு அரசியல் பேச்சுவார்த்தைக்கு அடிபணிந்தது....

அதை தொடர்ந்து எமது தேசியத்தை காணுவதற்கு என்றும் , அரசியல் நல்நோக்கம் என்றும் பல குள்ளநரி கூட்டங்கள் வன்னி நிலப்பகுதிக்குள் படை எடுத்த காலமது .... எரிக் சோல்கைம் என்றும், யஹூசி அஹாசி என்றும் ,ஏன் இன்னும் எத்தனை எத்தனையோ உலக அரசியல் தலைவர்களும் , இப்படி பெரிய பெரிய வித்துவானுகள் எல்லோரும் கிளிநொச்சி வந்து எம் தலைமையோடு கை லாகு கொடுத்த காலமது....

கலகம் தீர்த்து வைப்பது நிச்சயம் என்று நோர்வே திடமாக நின்ற காலமதுவும் கூட....

இந்த உலக நாடுகளை எதிர்த்து இனிமேல் இலங்கை இராணுவம் போர் செய்ய முடியாது என்றொரு சூழ்நிலை.. மாவிலாறு என்று ஒரு ஊர் இருப்பது யாருக்கும் தெரியாததும் கூட .. வழமைபோல ஒரு பெரிய உலக அரசியல் புள்ளி ஒருவர் எமது தேசிய தலைவரை காணுவதற்கு எமது அரசியல் தலைநகர் கிளிநொச்சி வருகிறார் ..

எமது தேசிய தலைவரையும் சந்திக்கிறார் , அரசியல் பேச்சுகளும் சில பேசுகிறார் மீண்டும் வந்த வழியே போய் விடுகிறார்.... எம் தேசிய தலைவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த தளபதிகள், போராளிகள் அனைவரினதும் முகத்தில் ஒரு சந்தோசம் எதற்கு தெரியுமா .. அதை அவர்களே தலைவரிடம் சொல்கிறார்கள்..

"அண்ணே எம்மை யார் யாரோ பெரிய ஆட்கள் எல்லோரும் வந்து பார்கிறார்கள் இத்தோடு நாம் பட்ட துன்பங்களுக்கு விடிவு கிடைத்து விடும், எம் மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்கும் காலம் வந்துவிட்டது தானே " என்று கேள்வியாகவும் கேட்டு இருக்கிறார்கள்...

எம் தலைவர் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் பதில் அளித்தார்.. எப்படி தெரியுமா..?

இல்லை அப்படி மட்டும் நினைக்காதீங்கோ.. இனிமேல் தான் எமது இயக்கமும், எமது மக்களும் இதுவரை காலமும் படாத பின்னடைவையும், இழப்புகளையும் சந்திக்க போகிறோம் தயாராக இருங்கள் என்று கூறி இருக்கிறார்..

இதை கேட்ட தளபதிகளுக்கும், போராளிகளுக்கும் மிகவும் குழப்பமாக எம் தலைவரின் முகத்தை பார்த்து இருக்கிறார்கள்.. பதிலுக்கு எமது தலைவர் மெல்லியதாக சிரித்து விட்டு அங்கிருந்து போய் விட்டார்..

அன்றைய எமது தலைவரின் தீர்கதரிசனத்துக்கு 2009 ல் பதில் கிடைத்தது அனைவருக்கும் ...

பின்னடவை கணிக்க தெரிந்த அவருக்கு அதை எப்படி....? சீர் செய்ய வேண்டும் என்பது தெரியமலா போய் இருக்கும்... அதைவிட இன்னும் சில விடயங்கள் அவர் கூறி இருந்தார் என்பதும் உண்மை....

ஆனால் அதை இங்கு எழுத்து வரிகளால் எழுதி எதிரிக்கு ஏன் எங்கள் தகவல்களை கொடுப்பான் என்று நினைக்கிறோம்....

நாம் முன்பு கூறியது போல இந்த உலகமே எதிர்பாராத திருப்பு முனையோடு எம் தலைவர் பிரகாசிக்கும் போது அது என்னவென்று எல்லோருமே புரிந்து கொள்வார்கள்..

ஏன் என்றால் எந்த இனமுமே பெறமுடியாத ஒரு வீரமிகு , ஆற்றல்மிகு தீர்கதரிசனமிகு, இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தலைவரை நாம் பெற்றுள்ளோம்...

அவரின் காலத்தில் நாம் ஈழம் காண்பது உறுதி.. அதனோடு தனி தமிழகமும் பிறப்பதும் உறுதி...

அதுவரை எமது தலைமை எம்மிடம் தந்த பாரிய பொறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் செவ்வனே, சீராக செய்து முடிப்போமாக ...

நன்றி - தகவல் தந்த சகோதரர்க்கு..

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை துளி...



நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்..

அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம்..

இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்...

இந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள், உலக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது...

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு. வே. பிரபாகரன் சிந்தனை துளி...


எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது..

நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்...