26/11/2017

தமிழினத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



நீ எங்கு இருக்கிறாய் என்று
இன்றளவும் யாருக்கும் தெரியாது...

என்ன ஆனாய் என்று யாராலும்
அறுதியிட்டு சொல்ல முடியாது....

ஆனாலும் நீ இருக்கிறாய்...

ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
இதயமாய்..
வீரத்தின் உதயமாய்...

உலகம் வியந்த மாமனிதனே..
சிங்களவன் பயந்த தமிழனே.

அந்நியனை விரட்ட
அனலாய் திகழ்ந்தவனே..

அகிம்சை போதித்த
அண்ணல் வழி செல்லாதவனே..

நீ எங்கு இருந்தாலும்
இருக்கிறது உன் வீரம்
உன் பிறப்பை போற்றும்
என் போன்ற
இளைங்கர்களிடம்
வித்தாக..

நீ என்ன ஆனாலும் இருக்கிறது
உன் தீரம் உன் பெருமை போற்றும்
ஒவ்வொரு தமிழனிடமும்
சுதந்திரத்தின் சொத்தாக....

வரலாற்றில் எழுதப்பட வேண்டிய
ஈழத்து சிங்கமே..

ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நித்தமுமே..

பிராபகரன் என்று உன் பெயர்
சொல்லும் போதெல்லாம்....

வீரம் என்னில் நிறைகிறது
என் கைகள் தமிழன் என்று சொல்லி
உமக்கு சல்யுட் அடிக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.