26/11/2017

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் தேசப்பற்று...


விடுதலை வேளிவியில் தமிழகம் என்ற புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரையும் விடுதலைப்போராட்ட வீரராக ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் தெரியுமா?

1935மார்ச் 10-ம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டதனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியை கீழே தருகிறோம்..

காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை என்று ப.ஜீவானந்தம் தமது ’ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் கூறுகிறார்.

மேலும் 12-04-1936ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக்கட்சி அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானம் என்ன தெரியுமா? இதோ..

சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்ய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. (அறிவு -1936 மே இதழ்).

ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருந்த போது தான் இந்த தீர்மானம் போடப்பட்டது. ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுந்தப் பொய்யாகும்.

மேலும் ஒரு ஆதாரத்தைப் பார்ப்போம்.

கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்..

பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

இந்தியாவை விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக் கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது திராவிடஸ் தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார்.

பிராமணர்கள் தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம் தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஓழிப்பதற்காகவே வெள்ளைக்காரர்கள், இருக்க வேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தார்கள்.

அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும் போது நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். என்னய்யா யோக்கிதை இது, நீ பாகிஸ்தான் கொடுத்தது போல, திராவிடஸ் தான் கொடுத்துவிட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும் என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரே பேசியிருக்கிறார். (நூல்: நான் பார்த்த அரசியல்).

ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகும்.

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்..

பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் நீடித்தது. இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும் விட்டுவிட்டுப் போகாதீர்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது (குமுதம்: 03-02-2000).

உடனே இதற்கு சின்னக்குத்தூசி பதில் கூறுகிறார்..

வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்ட போது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.

சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே – எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும். (குமுதம்-03-02-2000).

இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?

துக்ளக் ஆசிரியர் சோ சொல்வது தான் உண்மை.

ஆதாரம் இதோ..

27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு : 1948 (நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு).

இந்த ஆதாரம் சின்னக்குத்தூசிக்கு போதும் அல்லவா, மேலும் ஓர் ஆதாரம்..

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமி நாயக்கரே ஒத்துக் கொள்கிறார்.

ஈ.வே. ராமசாமிநாயக்கர் கூறுகிறார்..

நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. (தமிழர் தலைவர் பக். 14).

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக் கொள்கிற போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகுமல்லவா.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதாவது சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியிருக்கிறாரா?

இல்லை..

சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?

இல்லை..

சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?

இல்லை..

இல்லை. இல்லை. இல்லவே இல்லை..

பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் இந்த திருட்டு திராவிடர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.