26/11/2017

மாவீரன் தமிழினத் தலைவன் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


இதோ உதடுகள் உன் பெயரை
உச்சரிக்கும் மறுகணமே
விரல்களுக்கு நடுவே
விருக்கெனப் புகுந்து விடுகிறது
வீரம்!

பிரபாகரன் என்ற
இப்பெயருக்குத் தானே
பீரங்கிகளும் பின்வாங்கின.

பிரபாகரன் என்ற இப்பெயர்
கேட்டால் தானே இப்பிரபஞ்சமே
பிரமித்து நிற்கிறது.

வேங்கை உன் வேகம் கண்டு
சிறுநீர் கழித்த படியல்லவா
சிதறி ஓடின
சிங்களத்து சிறு நரிகள்.

புரட்சி என்ற சொல்லுக்குப்
புது இரத்தம் பாய்ச்சிய நீ
புலித்தலைவன் மட்டுமல்ல.
எமைப் பொறுத்தவரை
இப்புவித் தலைவனும் கூட..

கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை
நீ கட்டியெழுப்பிய
படைகளிடமிருந்து தான்
கற்றுக்கொள்ள வேண்டும்.

உன் ஆயுதம் சினுங்கியவரையில்
தன ஆணவம் அடங்கியல்லவா
கிடந்தது சிங்கள ராணுவம்.

புரட்சியாளன் உன் புகழ் பாடுவதில்
புல்லரித்துப் போகிறது என் புதிய பேனா.

தலைவா உன் பிறந்தநாளே
தரணியில் எமக்குச் சிறந்த நாள்.

தமிழீழம் ஒன்றே உனக்கு
நாம் தர நினைக்கும் தகுந்த பரிசு.

அடுத்துவரும் உன் பிறந்தநாளில்
அதையுனக்குப் பரிசளிக்க முயற்சிக்கிறோம்.

தடுப்பவரின் தலைகொய்து
பருந்துகளுக்குப் பகிர்ந்தளிப்போம்.

எங்கள் இதயத்தில் வாழும்
இணையில்லாத் தலைவனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.