05/02/2018

கோவையில் தனியார் பேருந்துகளின் அராஜகம்...


கோவை காந்திபுரத்தில் இருந்து மலுமிச்சம்பட்டி செல்லும் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளின் அராஜகம் அதிகமாகிவிட்டது. குறிப்பாக அம்சவாகினி என்கிற தனியார் பேருந்து  வழித்தடம் (12 D)இன்று மதியம் 4 மணிக்கு மலுமிச்சம்பட்டியிலிருந்து காந்திபுரத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை தனியார் பேருந்து ஓட்டுநர் இடைமறித்து மோதவிட்டு  இடித்து சைடு மிரரை உடைத்து பிரச்சினை செய்துள்ளார்கள்

ஓரு தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை இடிக்கும் அளவிற்கு தைரியம் யார் கொடுத்தது? அரசு பேருந்தை இடித்தால் யாரும் கேட்க முடியாது என்ற தைரியமா...

பாஜக நாயே... நீங்க இந்தியானு சொல்லிட்டு வாழுறதே.. தமிழன் போட்ட பிச்சையில் தான்டா எச்சக்கல...


இது என்ன தெர்மாகோல் கூட்டமா ? அதிமுக அரசை கலாய்த்த பாமக நிறுவனர் ராமதாஸ்...


2018-19 மத்திய பாஜக பட்ஜெட் : வெளிநாடுகளில் இந்தியா வாங்கி கடனிற்கு வட்டி கட்ட 5.76 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது...


பட்ஜெட்டில் அதிக அளவு நிதி ஒதுகப்பட்டதில் முதல் இடத்தில் இது உள்ளது குறிப்பிடதக்கது. 2 வது இடம் பாதுகாப்பு துறை...

கிரில் சிக்கன் சாப்பிடுவதை தவிர்ப்போம்...


கன்னட ஈ.வே.ரா வும் திராவிட பொய் மூட்டை கதைகளும்...


கேரளாவின் வைக்கம் வரை சென்று போராடிய ஈ.வே.ரா. இந்த நம்பூதிரிப் பிராமணனின் அரசுக்கு எதிராக தனது பகுத்தறிவு தடியை சுழற்றியது உண்டா? இல்லையே? ஏன்?

1957ல் இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சியில் இருந்த ஈ.எம்.எசு நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த இரண்டாவது காரியம், ஆபாச கற்பனை புனைவுக் கதையாக்கக் கொண்டு கேரள மக்களால் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரள அரசின் தேசியப் பண்டிகையாக அறிவித்து , கேரளாவில் உள்ள கிறித்துவர், இசுலாமியர் உட்பட அனைவரையும் கொண்டாடும் படி அரசு சட்டத்தின் மூலம் அறிவித்தார்..

அதனை கேராளவில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டு இன்று வரை மலையாளக் கிறிசுத்தவர், மலையாள இசுலாமியர் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு கம்யூனிசுடானவர் தனது அரசின் சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத்த்தின் பண்டிகையை எல்லா மதத்தவரும் கொண்டாடும் படி செய்து தன்னை ஒரு மனுவாதி என்பதைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் காட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது...

அதிமுக அரசின் ஊழல் சாதனை...


அன்னூர் அருகே கணுவக்கரையில் வீட்டு வேலை செய்ய வந்த வட மாநில கட்டிட தொழிலாளர்கள் வீட்டு உரிமையாளரின் மனைவியை கொன்று நகை பணம் கொள்ளை...


கணவனுக்கும் மின்சாரம்  கொடுத்து கொலை செய்ய முயற்சி...

இந்த கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக தனிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கொலைகாரர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

பாஜக மற்றும் கமலின் இந்துத்துவா அரசியல் சதுரங்கம்...


பப்பாளி பழத்தை வெறுக்காதீங்க.. இதயத்திற்கு நல்லது...


நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது.

சரி, இப்போது பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் என்னென்ன நன்மை உடலுக்கு கிடைக்கின்றது என்று பார்ப்போமா...

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.

பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.

பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.

பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.

ஆகவே பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டாவது சாப்பிடுங்க...

இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை. சைவம் ஒன்றே உண்டு...


சைவம் 5000  ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்து மதம் வெறும் 200 ஆண்டுகள் தான்..

தமிழர் எவரும் இந்துக்கள் இல்லை.
தமிழர் அனைவரும் சைவ மதத்தினரே...

- மதுரை ஆதீனம்...

குறிப்பு : தமிழர்கள்.. இந்துவோ.. கிருஸ்துவோ.. இஸ்லாமியரோ அல்ல... அனைத்தும் தமிழர்களை ஏமாற்றி பிழைக்க திணிக்கப்பட்டதே...

குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை...


உண்மையில் இராவணன் ஆண்ட இலங்கை தற்போதைய இலங்கைத் தீவு கிடையாது. இதைக் கம்பரே கூறுகிறார்.

இராமாயணத்தில் சீதையைத் தேடி அனுமன் தென்திசையில் செல்கிறான்.
அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்த பொதிகை மலையில் பொருநை (தாமிரபரணி) ஆறு ஓடுவதையும்
அதற்கடுத்து மயேந்திரமலை (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தற்போதைய மகேந்திரகிரி) இருப்பது குறிப்பிடப்படுகிறது.

கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்தில் இது வருகிறது..

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் "திருமுனிவன் தமிழ்ச்சங்கம்..."
"பொருநையெனும் திருநதிபின்..."
"மயேந்திரமா நெடுவரையும்..."

அங்கேயிருந்து நூறு ஓசனை (யோசனை) தொலைவில் நடுக்கடலில் இலங்கை இருக்கிறது என்றும் வருகிறது.

இது கிட்கிந்தா காண்டம்,
சம்பாதிப் படலத்தில்,
"ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை..."
என்றும்,

கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில்
"ஓசனை ஒன்று நூறும்...."
என்றும் வருகிறது.

யோசனை என்றால் எவ்வளவு?

பொறிஞர் கொடுமுடி சண்முகத்தின் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற புத்தகத்தில் பழந்தமிழ் அளவீடுகளுக்கான தற்போதைய அளவுகள் தரப்பட்டுள்ளன. அவை...

1 விரல் = 3.48958 cm
6 விரல் = 1 சாண் = 21cm
2 சாண் = 1 முழம் = 42 cm
2 முழம் = 1 கோல் = 84 cm
4 கோல் = 1 தண்டம் = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1.675Km
4 கூப்பீடு = 1 காதம் = 6.7 Km
4 காதம் = 1 யோசனை = 26.82 Km

எனில் 100 யோசனை என்பது 2682 கி.மீ. தொலைவு ஆகும்.

அதாவது கிட்டத்தட்ட காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி (2750 கி.மீ, வான்வழி) இருக்கும் தூரம் ஆகும்...

எங்கள் முன்னோர்கள் தான் எங்கள் தெய்வங்கள், அதில் என் தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் அடங்குவர், அவர்களுக்கு பூணுலை அணிவிக்க நீங்கள் யார்..?


இனி ஒவ்வொரு பூணலும் அவிழ்க்கப்படும்.. நாங்கள் தான் கடவுளின் வழிவந்தவர்கள் என கூறும் உங்களின் அதிகாரமும், பொய் முகமூடியும் அனைத்தும் அழிக்கப்படும்...

ஓபிஎஸ் தமிழகத்தின் மானத்தை காத்த போது...


மர செக்கு எண்ணையின் மகத்துவம்...


மர செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்...

நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய்..

ரசாயன கலப்பு உரங்கள் இல்லாமல் இயற்கையான உரங்கள் மூலமாக விளைந்த மூலப்பொருள்கள் கொண்டு செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும். நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.

இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.

இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக நல்ல எண்ணெய் என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை Queen of Oil  என்று அழைக்கிறர்கள்.

தேங்காய் எண்ணெய்..

இன்று நாம் அணைத்து விதமான சமையல் விருந்துகளுக்கும் ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறோம், அனால் இன்றளவும் கேரளா மக்கள் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலுக்கு பயன்படுதிகின்றனர்.

அதனால் தான் அவர்களுடைய தலை முடி கரு கருவென்று நீளமாக உள்ளது, ஆனால் அவர்களை விட வும் நமது முடி கருமையாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் மக்கள் தலைசாயத்தை உபயோகிகிறார்கள் இன்றைய தமிழ் நாட்டு மக்கள்.

ஆனால் நாமோ சமையலுக்கு  நல்ல மனத்தையும் , சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் தேங்காய் எண்ணையை விடுத்து கண்ட கண்ட எண்ணைகளை நாடி செல்கிறோம். ஆனால் நமது மக்கள் அதிலும் ஒரு இரசாயன கலப்படத்தைச் செய்கின்றனனர்.அது தான்  சல்பர்.  (அதன் படம் இதில் இணைக்கப்பட்டுள்ளது).

அது ஏன் கலக்குகிறார்கள்- எண்ணெய் விரைவில் கெடாமல் இருக்கவும். வெண்மை நிறமாக இருக்கவும், சரி அது நல்லது தானே என்று சொல்லுகிறார்கள் சிலர்.

ஆனால் அதனால்  வரும் தீமையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் போது தலை முடி அதிகம் உதிர்கிறது. மேலும்  கெட்டு போன தேங்காயும்  சேர்க்கபப்டுவதால்  வயிற்று உபாதைகளும் உண்டாகிறது.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் கொழுப்பு சத்து இல்லாத ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி  தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கி விடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக.பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும் எப்படி அனுமதி அளிக்கின்றன...?

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால் மட்டும் தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்..

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்...

உடல் எடை குறைய...


மதுரை மீனட்சி அம்மன் கோவில் சிலை சிற்பத்தில் switch box தொங்கவிடும் காட்சி...


ஆங்கிலேயர்கள் ஆட்சிபீடத்தில் இருக்கும் போதுகூட அழகு பார்த்த மீனாட்சி அம்மன் கோயில்.. அறநிலையத் துறையிடம் மாட்டித் தொங்குது.....

இந்தியா தமிழினத்தை அழிக்கிறது. விழித்துக்கொள் தமிழா...


தியானம் என்பது ஒரு பரிசோதனை...


கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..?

பரவாயில்லை.. தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.....?

பரவாயில்லை.. தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா......?

நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.

ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு  என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.

சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது.

நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்.? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும்.

அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம். எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன. எண்ணங்கள் மறைந்ததும், திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.

ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன. எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள். அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது.

இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும். ஆனால் நீங்கள் அழிய முடியாது. அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின், அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை. அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே இருக்கிறது.

அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.

அன்றே சந்தேகம் மறைகிறது.

ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது.

நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போது தான் விசுவாசம் உருவாகிறது.

நிரம்பித் ததும்புகிறது. அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.

அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.

அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றுகூட நான் கூறுவதில்லை.

தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்...

நாளை நாம் சுவாசிப்பதும் நஞ்சாகி விடும்...


மஞ்சள் இருக்க அஞ்சல் ஏன்?


மஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.

அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள்.

இதன் அறிவியல் பெயர், 'கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள 'கர்க்குமின்’ (Curcumin)  என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.

மஞ்சளின் மருத்துவக் குணங்கள்பற்றி சித்த மருத்துவர் வீரபாபு விளக்கமாகப் பேசினார்.

'கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன.

கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம்.

கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது.

விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது. 

காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.

வீக்கத்தைக் குறைக்கும். காயங்களை ஆற்றும்.

புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளிப் பிரச்னையும் சரியாகும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.

குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி - கடுப்பு ஏற்படும்.

மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்; வலி குறையும்.

தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.

சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.

சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.

மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவில் அரைத்துப் பருக்களின் மீது தடவிவந்தால், சில நாட்களிலேயே பருக்கள் மறைந்துவிடும்.

அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.

மஞ்சள் பூசினால் முடி உதிருமா?

பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள்.

ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது ஹார்மோன்களால் ஏற்படுவது.
பிறகு ஏன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள்?

மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருள். சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

எனவே தான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

அதற்குப் பதிலாக மஞ்சள் சேர்க்கப்பட்ட அழகு க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். காசு அதிகம் கொடுத்து ரசாயனங்களுடன் சேர்க்கப்பட்ட மஞ்சளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் மஞ்சளைப் பயன்படுத்தியே அழகைப் பெறலாமே...

ஓகக் கலை (யோகா) தமிழர்களின் கலை...


தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்... தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை அறிவோம்...

ஓகம் (யோகம்).
ஓகக் (யோக) கலை.
ஓக இருக்கை (யோகாசனம்).

5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழகத்தில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை ஓகக் (யோக) கலை ஆகும். அதில் ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

ஓகம் என்ற சொல் தமிழ்ச் சொல் ஆகும்.

ஓகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.

“யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாகக் கையகப்படுத்திக்கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக்கொண்டது. ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த “ஓகக்கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. யோகா, யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற இந்தக்கலை, நமது தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரச் சொத்து என்று நிறுவுகிறார் அசித்தர்

“யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாக கையகப்படுத்திக் கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக் கொண்டது.

ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

ஓக வழிபாடு...

உலகு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே ஓகம் எனும் சொல்லாகும். ஒன்றித்தல் – ஒன்றுதல், ஒருக்குதல் எனபதுதான் அதன் கருத்து மூலம்.

உகு > ஒகு > ஒக்கு.
ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல். ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.

உகு > ஒகு > ஓகு > ஓகம் = பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம்.

ஓகம் எனும் கருத்தைச் சற்றும் மாறாமல் கொண்டுள்ளதைக் காண்க. இந்த ஓகு > யோகு எனவும் சொல்லப்படும். வடவர் நூள்களில் இந்த செந்தமிழ்ச் சொல்லை யோகம் > யோகா எனத் திரித்துக் கூறுவர்.

ஓகப்பயிற்சியை இருந்து செய்யும் இருப்பு நிலைகள் உள்ளன. அவற்றை இருக்கை, ஆதனம் (அ) ஆசனம் என்பர். ஆசனங்களைக் கொண்டமையும் பயிற்சி என்பதால் அதனை ஓகாசனம் (யோகாசனம்) என்பர். அது எட்டுவகைப் பயில்வுமுறைகளைக் கொண்டது. ஆகையால், எட்டங்க ஓகம் எனப்பெறும். அது வடநூல் புணர்ச்சியில் அஷ்டாங்க யோகம் எனப்படும்.

இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர். தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர்.

அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம். மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர் சில தமிழ் ஆசான்கள்.

தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர். ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர்.

இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம். இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்...

தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்...

1. ஞாயிறு வணக்கம் – சூரிய நமசுகாரம் – SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் – SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை – அர்த்த சந்திராசனம் – CRESCENT POSTURE
4. மலையிருக்கை – மேரு ஆசனம் – MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை – தாடாசனம் – MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் – PLANTS
6. தாமரை இருக்கை – பத்மாசனம் – LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை – உத்தித பத்மாசனம் – RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை – பத்த பத்மாசனம் – LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை – பச்சிமோத்தாசனம் – BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை – டோலாசனம் – TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / – பாத அசுதாசனம் – HAND AND FOOT POSTURE
விலங்கு – CREATURES
நீர் உயிரிகள் – AQUATICS
12. தவளை இருக்கை – பெக்காசனம் – FROG POSTURE
13. மீன் இருக்கை – மச்சாசனம் – FISH POSTURE
14. சுறவம் இருக்கை – மகராசனம் – SHARK POSTURE
15. முதலை இருக்கை – மக்கராசனம் – CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை – வக்ராசனம் – SEA SHELL POSTURE
17. ஆமை இருக்கை – கூர்மாசனம் – TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் – HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன – REPTILES
19. தேள் இருக்கை – விருச்சிக ஆசனம் – SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை – புசங்காசனம் – SERPENT POSTURE
நடப்பன – VERTEBRATE
21. ஆமுகவாய் இருக்கை – கோமுகாசனம் – COW FACE POSTURE
22. ஆவினிருக்கை – கோவாசனம் – COW POSTURE
23. பூனை இருக்கை – பில்லியாசனம் – CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை – உசர்ட்டாசனம் – CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை – அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை – வியாகராசனம் – TIGER POSTURE
27. அரிமா இருக்கை – சிம்மாசனம் – LION POSTURE
28. மிடுக்கான குதிரை இருக்கை – கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29. முயல் இருக்கை – சசாங்காசனம் – RABBIT POSTURE
30. நரி இருக்கை – மார்சரி ஆசனம் – FOX POSTURE
பறப்பன – AVES & INSECTS
31. வெட்டுக்கிளி இருக்கை – சலபாசனம் – GRASSHOPPER (LOCUST) POSTURE
32. அரை வெட்டுக்கிளி இருக்கை – அர்த்தசலபாசனம் – SEMI GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை – மயூராசனம் – PEACOCK POSTURE
34. புறாவிருக்கை – கப்போட்டாசனம் – DOVE POSTURE
35. பறக்கும் புறாவிருக்கை – உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை – பக்காசனம் – CRANE POSTURE
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை – ஏகபாத பக்காசனம் – SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன் இருக்கை – கருடாசனம் – EAGLE POSTURE
39. சேவல் இருக்கை – குக்குடாசனம் – COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை – கடுடா மயூராசனம் – STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை – அம்சாசனம் – DUCK POSTURE
நடனம் – DANCE
42. நடன இருக்கை – நடனாசனம் – POSTURE OF NATARASA
43. களிக்கூத்து – ஆனந்த தாண்டவம் – PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை – நடராச ஆசனம் – KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை – வீர அனுமான் ஆசனம் – BRAVE STEP POSTURE
1முத்திரை – GESTURE
46. ஓக முத்திரை – யோகமுத்ரா – OGAM GESTURE
47. பெரு முத்திரை – மகாமுத்ரா – GREAT GESTURE
48. படையல் முத்திரை – அஞ்சலி முத்ரா – HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை – அசுவினி முத்ரா – HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை – சண்முக முத்ரா – HEXAGON GESTURE
கருவிகள் – TOOLS
51. நாற்காலி இருக்கை – உட்கட்டாசனம் – CHAIR POSTURE
52. அரசரிருக்கை – பூரண உட்கட்டாசனம் – THRONE POSTURE
53. சக்கரவிருக்கை – சக்ராசனம் – WHEEL POSTURE
54. அரைசக்கரவிருக்கை – அர்த்தகடி சக்கராசனம் – SEMI WHEEL POSTURE
55. வில்லிருக்கை – தனுராசனம் – BOW POSTURE
56. காதருகுவில்லிருக்கை – ஆகர்ண தனுராசனம் – EXTENDED BOW POSTURE
57. படகிருக்கை / நாவாய் இருக்கை – நவாசனம் – BOAT POSTURE
58. முக்கோணவிருக்கை – திரிகோனாசனம் – TRIANGLE POSTURE
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை – பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை – அலாசனம் – PLOUGH POSTURE
தொழில் – ACTIVITIES
61. வழிபாட்டிருக்கை – சசாங்காசனம் – WORSHIP POSTURE
62. வீரவிருக்கை – வீராசனம் – BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை – வீரபத்ராசனம் – GLABELLA VIEW POSTURE
64. அம்மி அரைக்கும் இருக்கை – உபவிசுட்டகோணாசனம் – GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை – பத்ராசனம் – SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை – சாரதாசனம் – CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / – சானுசீராசனம் – HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடல் உறுப்புகள் – ORGANS OF HUMAN BODY
68. இணை காலடி இருக்கை – சமபாதாசனம் – PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை – நின்ற பாதாசனம் – SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை – கோணாசனம் – ANGLED POSTURE
71. விலாப்பக்க கோண இருக்கை – பார்சுவ கோணாசனம் – RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை – வச்சிராசனம் – FIRM KNEELING POSTURE
73. மழலை இருக்கை – பாலாசனம் – CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை – சுப்த வச்சிராசனம் – SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை – உட்கட்டாசனம் – PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் – OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று அமர் இருக்கை – அர்த்தமத்ச்யேந்தராசனம் – CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை – பத்தகோணாசனம் – LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி இருக்கை – உத்தான பாதாசனம் – RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் – யோக நித்ரா – OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை – விபரீதகரணி – HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை – சர்வாங்காசனம் – SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை – பர்வதாசனம் – SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை – பீடாசனம் – STAGE POSTURE
85. பகுதலை இருக்கை – அர்த்த சிரசாசனம் – SEMI INVERTTED
86. தலை இருக்கை – சிரசாசனம் – INVERTTED POSTURE
தூய்மை – CLEANSING
87. வளிகழித்தலிருக்கை – பவன முக்தாசனம் – WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை – உட்டியானபந்தம் – FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை – நௌலி – BOWEL CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம் – பிராணாயாமம் – ORDER OF BREATH
91. தலை தூய்மை – கபாலபாதி – CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு – பசுதிரிகா – BELLOW BREATH
93. சீழ்க்கை – சீத்காரி – WHISTLING
94. நீர்த் தூய்மை – சலநேதி – WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை – சீத்தளி – COOL WHISTLE
96. மூலக்கட்டு – மூலபந்தம் – ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை – நாடி சுத்தி – CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி – பிராமரி – HONEY BEE HISSING
99. கண் தூய்மை – திராடகா – EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் – சதந்தா – INHALING THROUGH CLEANCHED TEETH
101. உள் மூச்சு – அனுலோமம் – INHALING
102. வெளி மூச்சு – விலோமம் – EXHALING
103. தொண்டை ஒலி – உச்சயி – HISSING OF PHARYNX
நிறைவு நிலை – PACIFICATION
104. இயல்பிருக்கை – சுகாசனம் – AT EASE POSTURE
105. அமைதி இருக்கை – சவாசனம், – LYING RELAX POSTURE...

அரசு கேபிள் டிவிக்கு செட்டாப் பாக்ஸ் இலவசம்...


அண்ணாதுரை தெலுங்கன் ஏமாற்றுக்காரன் என்று சொன்னால் நம்பாத குருடர்களே...












இதோ அண்ணாதுரையின் உண்மையான முழு வரலாறு...

இனி தினகரன் வந்தா செருப்படி தான் 20 ரூவா நோட்ட கொடுத்து ஏமாத்திட்டாங்க 50 ஆயிரம் வரும் ன்னு நம்பி போட்டேன் புலம்பும் ஆர்கே நகர் பெண்கள்...


உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக.. நமது பாரம்பரிய ரகசியம்...


உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்...

கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.

சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.

சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது..

அமாவாசையன்று கருவானால் கருப்பு நிறமாகவும், ஆறு விரல் உள்ளதாகவும் குழந்தை பிறக்கும்.

தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.

அமாவாசை கழித்து பிரதமையில் கரு உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்.

அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.

முழு நிலவுவில் உடலுறவு கொண்டு கருவானால் முடமாகவும், தண்டியாகவும் குழந்தை பிறக்கும். யானை வடிவில் இருக்கும்.

முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.

புணர்ச்சியின் போது பேசக்கூடாது. பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.

பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.

உடலுறவு கொள்ளும் பொழுது வேறு பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.

பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த உடலுறவும் கூடாது.

வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால், மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.

ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள் உடலுறவு கொண்ட போது கருவானால் குழந்தை திருடனாகப் பிறக்கும்.

நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை வறுமையில் வாடும்.

ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும்.

ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.

ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை பேசும், ஈகை, இரக்கம், நற்குணம் உடைய குழந்தை பிறக்கும்.

எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை தரித்திரத்தில் வாழும்.

ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால் செல்வம், வளம் நிறைந்து குபேரனாக வாழும் குழந்தை பிறக்கும்.

பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம் மிகுந்து கெட்ட பழக்கம், அவ மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.

பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்...