03/07/2017

நடிகர் சங்க பெயர் தமிழ் நாடு நடிகர் சங்கம் என்று மாறாதிருப்பது ஏன்?


இப்போது இருக்கும் பிலிம் சேம்பர் இடத்தை இனாமாக கொடுத்தவர் சேலம் மார்டன் தியேட்டர் உரிமையாளர் சுந்தரம் முதலியார் என்ற தமிழர் ஆவார்...

அதன் இன்றைய நில மதிப்பு சில நூறு கோடி அவர் அந்த இடத்தை வாங்கி கொடுக்கும் முன்பு சென்னை சினிமா என்ற பெயரில் ஒரு அமைப்பு இருந்தது.

வாங்கி கொடுத்தவர் இது தமிழ் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லவில்லை.

அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிக்கார்களும் கூடி செயல்படும் இடமாக பிறமொழியினர் பயன்படுத்திக் கொண்டனர்.

பின் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைத்தனர். அந்த நேரம் தமிழ் நாடு என்ற பெயரில்தான் இது இருக்க வேண்டுமென நம் தமிழர்களும் குரல் கொடுக்க தவறிவிட்டனர் மற்றுமொரு செய்தி நாற்பது ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று நடிகர் சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

அதன் பிறகு ஆந்திர நடிகர்கள் அவர்களுக்கு ஒரு சங்கத்தையும், மலையாளிகள் கன்னடர் என அவரவர்களுக்கு ஒரு சங்கத்தை அவர்களது மாநிலத்திலேயே உருவாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழ் நாடு நடிகர் சங்கம், தமிழ் நாடு திரைப்பட வர்த்தக சபை என்று பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல் கோரிக்கையாக முன் வைத்து பாரதிராஜா போன்றவர்கள் ஆதரவுடன் இயக்குனர் பலாச்சந்தரை தலைவராக்கியுள்ளனர்.

தலைவர் பதவிக்கு வந்த கன்னட பார்ப்பனர் பாலச்சந்தர் தென்னிந்திய என்றே இருந்துவிட்டு போகட்டுமென விட்டுவிட்டார்.

அதனைத்தொடர்ந்து தென்னிந்திய என்ற பெயர் பலகையை தூக்கி எறிந்து அக் கட்டிட வளாகத்தில் போராட்டம் நடத்தினார் பாரதிராஜா..

ஆனால் இன்றுரை வந்தேறி கும்பல் பெயர் மாற்றவிடாமல் பல பிரச்சனைகளை உருவாக்கி விட்டு குளிர் காய்ந்துக் கொண்டுள்ளனர்...

தமிழா விழித்தெழு...


இந்திய திராவிட ஊழல்வாதிகளுக்கு இவை எல்லாம் தெரியாது...


சர்வதேச தீவிரவாதி காங்கிரஸ் ராஜிவ் காந்தி...


வைகோ நாயூடுவின் 2014 மலரும் நினைவுகள்...


தமிழர் வரலாறு - 7...


இராவணனும் இராமாணமும்...

இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை.

ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.

அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான்.

வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த தமிழர்க்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் தமிழராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.

எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம்.

எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேசுவரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூசிப்பது சிவ தூசனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.

இராவணன் ஆட்சி

கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும்.

சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.

அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர்.

குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசாச்சி செய்து வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.

இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணம் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.

இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.

யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான்.

இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.

இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீசணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.

இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீசண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய தமிழர் நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு தமிழர்களாகிய நமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும்.

எமது மக்கள் விபீசணனைப் போன்று "கோடாரி காம்புகளாக மாறக்கூடாது". எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், "வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும்" மாற வேண்டும்.

எப்பொழுது இந்நிலை எ
நம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழகத்தை அமைத்து சுதந்திர புருசர்களாக வாழ்வோம். வீபீசணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம்.

சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விசயனின் விசயத்துடன் ஆரம்பிக்கின்றது...

தமிழர் வரலாறு - 6...


இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி...

சுகேசனின் ஆட்சி...

சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித்து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.

குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான்.

இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி, காட்டுக்கு சென்றான்.

மாலியவான் ஆட்சி...

தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன.

இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.

இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான்.

இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.

சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் முன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர்.

சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேசி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.

குபேரன் ஆட்சி...

குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும்.

பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்...

தமிழர் வரலாறு - 5...


தமிழ் கூறும் நல்லுலகம்...

மனித இனம் முதன் முதலாக தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அறியக்கிடக்கின்றது. இந்தக் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அவர்களிடமிருந்தே எனைய இனத்தவர்கள் சீர்திருத்ததைக் கற்றுக் கொண்டனர் என்றும் கூறுவர்.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அவற்றில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. அவையாவன.

வீடு கட்டுதல், கோயில் கட்டுதல், சிற்ப வேலை செய்தல், குளம் வெட்டுதல், நூல் நூற்றல், சிலை செய்தல், குடைசெய்தல், கோயில் த்தேர், போர்த்தேர், வாயுத்தேர்;, அக்கினித்தேர், ஆகாயவிமானம், கப்பல், முதலியன செய்தல், ஆகாயமார்க்கமாகச் செல்லுதல், பாடசாலை, வைத்தியசாலை தமிழ்ச்சங்கம் முதலியன அமைத்தல், இலக்கியம், இலக்கணம், வானசாத்திரம், நீதி சாத்திரம், தொலைவிலுணர்தல், கடவுள் வணக்கம், தவம், கற்பு, விரதம், வியாபாரம், பஞ்சாயம், நீதிமன்றம், குடியாரசாட்சி, தெரிவுச்சீட்டு, கணிதம், சோதிடம், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஒரு மனிதன் போல் தேகம் எடுத்தல், ஆகாய யுத்தம், கடல் யுத்தம் முதவியவற்றை நன்றாக அறிந்திருதார்கள்.

தமிழ் மொழியில் மிகவும் சிறந்த இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் கணித நூல்களும், தமிழ் வேதங்களும் தமிழ் சரித்திர நூல்களும் இன்னும் பல சிறந்த நூல்களும் ஆரம்பத்திலேயே இருந்தன.

பாண்டிநாடு சோழநாடு, சேரநாடு முதலிய தமிழ் நாடுகளில் உள்ள தமிழர் முற்காலத்தில் இலங்கையில் பிறந்து வாழ்ந்தபடியால் இலங்கை அந்த நாடுகளின் தமிழருக்குச் சொந்தம். இலங்கை மலைவளமுடைய நாடாக இருந்தமையால் போதிய மழை பொழிந்து பல ஆறுகள் பாய்கின்ற ஆற்று வளமுடையதாக விளங்கியமையால் செழிப்பான தேசமாக விளங்கியது. பெருமளவு நெல் விளைவிக்கப்பட்டது.

அத்துடன் பொன், முத்து இரத்தினம், சங்கு ஆகியவையும் அதிகம் காணப்பட்டன. இவ்வாறு சிறப்பாக விளங்கிய இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் செல்வந்தராயிருந்தனர். இதனால் ஏனைய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கையில்; வசிக்க மிகவிரும்பினார்கள்.

இடவசதியற்ற பொழுதெல்லாம் அவர்கள் இலங்கையில் வந்து குடியேறிக் கொண்டே வந்தார்கள். இலங்கைத் தமிழர் பாண்டியநாடு முதலிய மற்றைய தமிழ் நாடுகளின் தமிழரோடும் அதிபூர்வ காலந்தொடங்கி இன்றுவரைக்கும் ஆலயதரிசனம், தீர்த்தமாடுதல், கல்வி பிறப்பு இறப்புச் சம்பந்தமான கொண்டாட்டங்கள், திருவிழா, கல்யாணம் மற்றுவிவாகம் முகலிய வைபவங்களைக் கொண்டாடிக் கொண்டும், போக்குவரவு பண்ணிக் கொண்டும் வருகிறார்கள்.

பாண்டியநாடு முதலிய தமிழ்த் தேசங்களின் தமிழர்கள் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், நகுலேஸ்வரம், கதிர்காமம் முன்னேசுவரம் முதலிய சைவாலயங்களைத் தரிசிப்பதற்கும் தீர்த்தமாடுவதற்கும் விவாகத்திற்கும் இலங்கைக்குப் போக்குவரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.

சுரரை ஆண்ட அரசன் சுரேந்திரன். அசுரரை ஆண்ட அரசன் அசுரேந்திரன். இதனால் சயம்பனுக்கு அசுரேந்திரன் என்னும் வேறொரு பெரும் இடப்பட்டது. தமிழரசனாகிய இச்சயம்பன் இலங்கையை முப்பத்து மூன்று வருடங்களாக ஆண்டிருந்தான். சயம்பனுக்குப் பின்பு அவனுடைய மருமகனாகிய யாளிமுகன் என்னும் தமிழன் அரசனாகி பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து இறந்தான்.

இவனுக்கு பின்பு பல தமிழரசர்கள் நெடுங்காலமாக இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை கலியாணி முதலிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்கின.

யாளிமுகனுக்குப்பின் ஏதி என்னும் தமிழரசன் முருகபுரத்தைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை முழுவதையும் ஆண்டான். முருகபுரம் என்னும் நகரில் முருகன் என்னும் தமிழ்ச்சேனாததிபதியின் வீரர்களில் ஒருவனாகிய விசயன் என்பவன் மாணிக்கங்கையில் முருகேசுவரம் என்னும் முருகனாலயத்தைக் கட்டுவித்தான். முருகேசுரத்துக்கு, கதிர்காமம், கதிர்வேலன்மலை, கார்த்திகேயபுரம், ஏமகூடம், மாணிக்கநகர். கந்தவேள்கோயில் என்னும் மறுபெயர்களும் உண்டு.

பயை என்னும் தமிழரசகுமாரத்தியை ஏதி விவாகஞ் செய்து வித்துக்கேசன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவன் இருபத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான். வித்துகேசன் சிவனோளிபாதத்தைத் தலைநகராக்கி, நாகதீவு முழுவதையும் ஆண்டான். முருகன் என்னும் சேனைத்தலைவன் காங்கேசன்துறையில் ஒரு சிவன்கோவிலைக் கட்டுவித்தான்.

வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான்.

ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை இவன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும்; நிலங்களையும், கொடுத்தான். மாந்தை நகருக்கு அருகில் உள்ள பாலாவியாற்றங்கரையில் திருக்கேதீசுவரம் மாயவன் ஆற்றுக்குச் சமீபத்தில் முனீசுவரம், காங்கேசனுக்கு அண்மையில் நகுலேசுவரம் ஆகிய சிவாலயங்கள் கட்டப்பட்டன...

தமிழர் வரலாறு - 4...


இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விசயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.

தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரிந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது தமிழராகிய நம் கடனாகும்.

பரதன் என்னும் தமிழ் அரசன்

குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான்.

இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்பட்லாயிற்று.

இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நிய நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்; கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.

அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.

உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற தமிழர்கள் பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.

உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அநிநியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களோயாவர்.

அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர்;.

'இட்டார் பெரியோர்,
இடாதார் இழிகுலத்தோர்"

என்னும் ஒளவை வாசகஙகளும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரினவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயற்கரயன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது...

தமிழர் வரலாறு - 3...


இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். தமிழ் மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.

இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விசயன் ஆவான்.விசயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர்  இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும்  தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.

சிங்கபாகுவின் மைந்தனாகிய விசயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விசயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விசயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான்.

அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வந்து நமது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.

வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விசயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள்

அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விசயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விசயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.

குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணம் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர்.

இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விசயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.

இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர்.

இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...

தமிழர் வரலாறு - 2...


இந்த மனுசக்கரவர்த்திக்கு 'சமன்" என்னும் புத்திரனும் 'ஈழம்" என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர்.

மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன.

ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.

எனினும் ஈழமண்டலமாகிய இலங்கையில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது.

இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது;. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது......மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

விசயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விசயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.......

சிங்கள இனத்தின் தோற்றம்

வட இந்தியாவில் "லாலா" என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று.

சிங்கத்தில் இருந்து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் தமிழ் இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் தமிழினததை் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர்.

இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர். இந்த ஆசியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.

இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவர்கள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடு்த்து அவர்களது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள்...

தமிழர் வரலாறு - 1...


அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு அகத்தியர் இலங்கை" எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது.. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர்.

அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.

அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர்.மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஓக்கல், தான் என்னும் ழும்பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தம்தம்க்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர்.

அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.. அதைதியும் நிலவியது. உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.

பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.

இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு.

ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந் நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்...

தியாகராச செட்டியின் கல்லறை ஆக்கிரமிக்கப்பட்டு கோவிலாக்கப் பட்டுள்ளதாம்...


அட என்னனு கேட்டா ?

அவங்க வழக்கப்படி புதைச்சிட்டு லிங்கம் நட்டி வைப்பாங்கலாம்..

எவனோ ஒருத்தன் அதை சிவ லிங்கம் நினைச்சி கோவில் கட்டிட்டான்.

இன்னும் எங்கலாம் இப்படி நடந்திருக்கோ...

பாஜக மோடியும் டிஜிட்டல் இந்தியாவும்...


சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது...





மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.

மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

கல்வியோடு மருத்துவமும் கற்றுக்கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

ஒட்டுமொத்த தமிழ்நாடும் தமிழர்களின் போராட்ட களம் தான்...


இலுமினாட்டி சம்பந்தமாக நாம் சொல்லவரும் அனைத்து விடயங்களும் ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியாது...


ஏன் என்றால் இவர்கள் ஒரு மறைவான கூட்டம்..

இவர்களைப் பற்றி தகவல் தருபவர்கள் இலுமினாடிகளாக இருக்கின்றனர்.

இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டு பிடிக்காது எம்மைத் திசை திருப்பவே இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம்..

இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள்.

90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள். இவர்களில் இலுமினாட்டிகளின் ஆதரவாளர்களும், எதிரிகளும் அடங்குவர்.

அடுத்த தரப்பினர் நடுநிலையோடு தகவலைத் தருபவர்கள். இவர்களின் தகவல்களும் 100% உண்மை அல்ல. ஆனால் தவறுதலாக ஆய்வின் அடிப்படையில் பிழை விடுபவர்கள்.

இந்த மூன்றையும் வைத்து ஓரளவு உண்மையைக் கண்டு பிடிப்பதே நாம் செய்த வேலை ஆகும். இதனால்தான் நான் சொல்லும் சில விடயங்கள் தேடியும் கிடைக்கப் பெறாது.

அதாவது 3 தரப்பாரும் ஒரே விடயத்தைச் சொன்னால் ஓரளவு அது உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.

இத்தகவல்கள் அனைத்தையும் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களோடு உரசி உரசி பெறப்படும் முடிவுகள் தான் எம்மால் இங்கு சொல்லப்பட இருக்கிறது.

நீங்களும் தேடித் பார்ப்பதன் மூலம் நாம் பிழையான முடிவுகளை சொல்லும்போது அதை திருத்த உதவியாக இருக்கும். இப்போது விடயத்துக்கு வருவோம்.

இவர்களின் கொள்கை - (Luciferianism) கடவுள் மனிதனின் எதிரி. சைத்தான் (லூசிபர்) தான் மனிதனின் நண்பன்.

அதாவது மனிதனைப் படைத்து விட்டுக் கடவுள் அந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று சொன்னது மனிதனோடு உள்ள பொறாமையினால் ஆகும்.

சாகா வரம் அல்லது கடவுள் தன்மை அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று அக்கனியைச் சாப்பிட்டால் மனிதனுக்குக் கிடைத்துவிடும் என்ற பொறாமைதான் கடவுளுக்கு இருந்துள்ளது.

ஆனால் சைத்தான் எப்படியாவது மனிதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியதால்தான் அவ் உண்மையை ஆதாமுக்குச் சொன்னான்.

எனவே மனிதனுக்கு நலம் நாடுபவன் சைத்தானே.

நோக்கம், இலக்கு - உலகத்தின் ஆட்சியை தஜ்ஜாலின் கையில் கொடுத்தல்.

அதாவது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட லுசிபெரியனிசத்தை மீண்டும் வெற்றி கொள்ளச் செய்தல்.

செயல் திட்டம்- மறைக்கப்பட்டுள்ள இதைத்தான் விரிவாகப் பேச உள்ளோம்...

பர்மா தமிழர்களின் பரிதாப நிலை...


2008 ல் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.

1,00,000 தமிழர்கள் வீடிழந்தனர்.

நர்கீஸ் புயலில். மியான்மர் (பர்மா) அரசாங்கம் மருந்துக்கு கூட  தமிழர்களுக்கு உதவவில்லை.

இந்த கொடுமை தாய்நிலத் தமிழர்களுக்கு கூட தெரியாது.

தமிழருக்கான அரசு இல்லாது போனாலும்
தமிழர்மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகம் கூட இல்லாததே இதற்குக் காரணம்.

2012 க்குப் பிறகு இணையப் புரட்சியால் முகநூல் ஓரளவு தமிழின ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது.

இது எத்தனை காலத்திற்கோ தெரியவில்லை.

நாடில்லாத இனம் நாதியற்று சாகும்.

தகவல்:
து.ரவிக்குமார்,
சட்டமன்ற உறுப்பினர்,
காட்டுமன்னார்கோயில்,
பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
(27-05-08 அன்று முதலமைச்சருக்கு எழுதிய மடல்)...

கதிராமங்கலம்...


பதற்றம் , மரண பீதி , மயான அமைதி , காவல்துறை அராஜகம், கழுத்தறுப்பு வேலைகள், ஆள்காட்டி வேலைகள், அடாவடி , அடிதடி , அடக்குமுறை - இப்படி பல்வேறு வடிவங்களில் அரச பயங்கரவாதத்தை ஒட்டு மொத்தமாய் அரங்கேற்றி அதை பரிசோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறது பாசிச மத்திய மாநில அரசுகள் .

ஊருக்குள் நுழையுமுன்பே 5 கிமீ அருகில் கஞ்சனூரில் தோழர் மனோகரன் அவர்களை  சந்தித்துவிட்டு கதிராமங்கலம் ஊருக்கு வெளியே உள்ள சிலரிடம் தகவல்களை சேகரித்துக்கொண்டு யாருக்கும் அய்யம் ஏற்படாத படிக்கு ஒரு மஞ்சள் பையுடன் உள்ளே ஐ பேட் வைத்து கொண்டு ஊருக்குள் நுழைந்தோம்.

எங்கு பார்த்தாலும் காவல்துறை வாகனங்கள் ஊரை சுற்றியும் எல்லா வீதிகளிலும் .. அதை தவிர சீருடை இல்லாத காவலர்கள் உளவு பார்த்த வண்ணம் திரிந்தனர்.

உள்ளே போன போது மதியம் 3 மணி இருக்கும் . மயான அமைதியில் கிராமம் ..ஆட்களை யாரும் வெளியில் காணவில்லை .. 4 மணிக்குப்பிறகே ஒரு சிலராக வெளி வந்தனர் . பெண்களும் ஆண்களுமாய் வந்தனர் . தண்ணீர் கேட்பதுபோல் பேச்சு கொடுத்தோம் மஞ்சப்பையுடன் நின்றதால் போலிசார் யாரும் சந்தேகிக்கவில்லை .இளைஞர்கள் பயந்தவாறே பேச தொடங்கினர்.

மின்சாரம் முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது தொலைக்காட்சி கேபிள் சர்வீசுகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

உங்களபாத்தாலும் பயமாவே இருக்கு நிங்க போலிஸ் ஆள்போல தெரிகிறதே , பத்திரிகையாளரா ? எந்த சேனல் என்று துளைத்தவாறே கேள்விகேட்டு பிறகு எங்கள் விளக்கங்களை நம்பி பதிலளித்தனர். எல்லா தகவல்களையும் சேகரிச்சுகிறாங்க ஆனா ஒரு சேனல்காரன் கூட உண்மைய சொல்லமாட்டிறான் அய்யோக்கியப்பயல்கள்  என்று ஊடகங்களை காறி துப்பினார் ஒரு இளைஞர்.

இன்று அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராக இருந்த இளைஞர்களை பயமுறுத்தி பல கேஸ் போட்டு ஒழிச்சிடுவோம் உன் எதிர்காலமே பாழாயிடும் என மிரட்டியுள்ளனர் .ஒரு தெருவுக்குள் ஆட்கள் சேர்ந்தாலே வேனில் ஏற்ற தயாராய் நின்றது ஒவ்வொரு தெருவிலும் காவல் வாகனங்கள் .
 நான்கு பேர் சேர்ந்து வந்தால் 144 சட்டத்தை சொல்லி பெண்களை மிரட்டுவது , ஆண்களையும் இளஞர்களையும் கைது செய்து வேனில் ஏற்றுவது என காவல்துறையின் அராஜகம் தொடர்ந்தது.

சில இளைஞர்களிடத்தில் பேச்சுக்கொடுத்ததில் நீண்ட சந்தேகத்திற்கு பிறகே வாய்திறக்க ஆரம்பித்தனர்
நேற்று காலை முதலே எண்ணெய் கசிவு ஏற்பட்டதை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்துவிட்ட பிறகே இதை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் திரள ஆரம்பித்தனர். எண்ணெயை உறிஞ்ச வந்த வாகனக்கள் தடுக்கப்பட்டன . ஆட்சியர் மதுரை போய் உள்ளதாகவும் நாளை வருவார் எனவும் மக்களுக்கு தகவல் தரப்பட்டது . ஆனால் நேற்று மாலை கலவரம் நடந்த பின் வந்து சேர்ந்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் .மக்களை விரட்டிவிட்டு யாரையும் சந்திக்காமலேயே திரும்பியிருக்கிறார்.

முன்னதாக காவல் துறையினர் பொது மக்களை பொறுமையாகவே கையாண்டிருக்கிறார்கள் தாங்கள் மக்களுக்கு பாதுகாப்பளிக்கவே வந்திருப்பதாக சொல்லி அதை நம்பி மக்கள் அளித்த உணவையே உண்டிருக்கிறார்கள். நம்பிக்கை துரோகிகள் .. மாலைவரை மாவட்ட ஆட்சியர் வராமல் அடைப்பை சரி செய்ய அனுமதிக்காத மக்கள் மீது திட்டமிட்டே கொலைவெறித்தாக்குதல்களை தொடுத்திருக்கிறார்கள் நன்றி கெட்ட காவல்துறையினர் . ஒரு கட்டத்துக்குமேல் மேலிட உத்தரவை பெற்றுக்கொண்டு அதை காவல்துறையினர் பற்றவைத்து விட்டு கலவரத்தை உண்டாக்கி அடக்குமுறையை ஏவி உள்ளனர். தீப்பெட்டி இல்லாமலே தீயை பற்றவைத்துள்ளது காவல் துறை.

ஒரு மூதாட்டிக்கு கால் மூட்டு உடைந்துள்ளது,குழந்தைகளுடன் வந்த தாய்மார்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். "எவ்ளொ திமிரும் தெனாவெட்டும் இருந்தா பொம்பளைங்கல்லாம் போராட வருவாங்க " என போலிசார் பெண்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள் . ஒரு குழந்தைக்கு நெற்றியிலும் கண்களின் அருகேயும் கடும் காயங்கள் .  குழந்தைகள் எனவும் பாராமல் ஒன்றரை வயது குழந்தை தாக்கப்பட்டு இப்போது கும்பகோணத்தில் ஐ சி யூ வில் . சில இளைஞர்களை தாறுமாறாக அடித்து துன்புறுத்தியுள்ளனர் , காவல்துறையினரின் சதிபற்றி ஒன்றுமறியாத இளைஞர்கள் அந்த கசிவு ஏற்பட்ட நிலங்களில் காவலுக்கு நின்றிருக்க காவல்துறை ஆயுதங்களோடு தாக்கி விரட்டியடித்தபோதும் பெண்கள் அசராமல் எதிர்த்து நின்றதாலேயே ஆண்களும் காப்பாற்றப்பட்டனர் பெண்கள் இல்லையெனில் இன்னும் தாக்குதல் மூர்க்கத்தனமாய் இருந்திருக்கும்.

கலவரம் முடிந்த பின் 6 பெண்கள் உட்பட ஊராரை கைது செய்து இரவு 10.30 வரை காவல் நிலையத்தில் அடைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

கலவரக்காட்சிகளை பதிவு செய்த சில ஊடக நண்பர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் , சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகத்துக்கே நெல் குவித்து படியளந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியான கதிராமங்கலத்தின் இன்றைய நிலை ஒரு வாய் நீருக்கு வழியில்லை என்னும் பரிதாபமே . ஒரு வருடம் தொடர்ந்து மழை பெய்யாவிடினும் முப்போகம் விளையும் வளம் கொண்ட மண் கதிராமங்கலம்.

என்னிடத்திலே நேரிடையாக கைப்பம்பை அடித்தே காண்பித்தார்கள் .இதுவரை பஞ்சம் என்பதே வந்ததில்லை .இங்கே பாருங்கள் இந்த ஓ என் ஜி சி பிளாண்ட் தொடங்கிய இரண்டு மாதங்களாக தண்ணீரே வரவில்லை   என்றார் அந்த 60 வயது முதியவர் . எப்போதுமே 20 அடியிலிருந்து 30 அடிக்குள் தண்ணீர் தாராளமாக வரும் இப்போது 60 அடி போனால்தான் நீரே கிடைக்கும் அந்த நீரும் காவி நிறத்தில் தான் வருகிறது என்கிறார் . "அவ்ளோதாங்க கதிராமங்கலம் மொத்தமா போச்சு " என்ற அவரின் புலம்பல் மனதை என்னவோ செய்தது.

ஏற்கனவே குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்து இருவர் பாதிக்கப்பட்ட உண்மையை ஊடகங்களும் அரசும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைமுகமாய் இழப்பீடு தொகை அளித்து அவர்களை வாயடைக்க செய்துள்ளனர்.

கசிவு என்றுதான் கூறினார்கள் ஆனால் அங்கே துருப்பிடித்த குழாய்கள் வெப்பம் தாளாமல் உடைந்திருந்தன. இரண்டு சொட்டு எண்ணெயை எடுத்து கொளுத்திப் பார்த்ததில், பத்து நிமிடம் பற்றி எரிந்தது . ஆக அங்கே நிலத்தில் குளம்போல் நிறைந்திருந்த எண்ணெய் எரிந்தால் என்ன ஆவது என நினைக்கவே நடுங்குகிறது

இன்று அவர்களும் உண்மையை கூறிவிட்டதில் ஓ என் ஜி  சி அம்பலப்பட்டுபோனது .மொத்தம் 8 கிணறுகளை தோண்ட திட்டமிட்டுள்ள ஓ என் ஜி சி நிறுவனத்தின் உண்மை ரகசியம் வெளிப்பட்டதில் ஆத்திரமடைந்த மக்களை தாக்க இரண்டு மாதம் முன்பு லட்சக்கணக்கில் போலிசாரை கண்டு அஞ்சியது மக்கள் கூட்டம் என்பது உண்மையே.

கைது செய்யப்பட்டுள்ள கதிராமங்கலம் போராளிகளான..பேராசிரியர் செயராமன் , தர்மராஜன், க.விடுதலைச் சுடர், செந்தில்.முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஸ்.. ஆகியோர் மீது பத்து பிரிவுகளின் கீழ்கொலை முயற்சி ,பொது அமைதியை கெடுத்தல் , பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்..
என்பன போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை..
147-148-294(B)-314-323-324-336-383-436(3)-506(2) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து திருச்சி நடுவண் சிறைக்கு அனுப்புகிறார்கள்.. நேற்று இரவு முதல்காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரியும் கைதான போராளிகள் உண்ணாநிலையை மேற்கொண்டு வருகின்றார்கள்..

ஒட்டும்மொத்த தமிழகமும் மத்திய அரசை  நோக்கி திரளாவிடில் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாகும் நாள் வெகு அருகில் அதன் முதல் எடுத்து காட்டு கதிராமங்கலம்.

இறுதியாய் ஓட்டு அரசியல் கட்சிகள் வந்தால் செருப்படி தருவது உறுதி என்றார்கள் பொதுமக்கள் அணைக்கரை திருப்பனந்தாள் தாண்டி கதிராமங்கலம் அடைந்து பின் சென்ற வழியே திரும்பாமல் பந்தநல்லூர் வழியே அணைக்கரை அடைந்து ஊர் வந்து சேர்ந்தோம். பத்திரமாக..

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா...

பாஜக மோடியின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


இந்தியாவை மோடி எனும் பிணம் தான் ஆளுகிறது போல...


பாஜக மோடி காப்ரேட்டுக்கு செய்யும் மாமா வேலை...


GST வரியால் குடிநீர் கேன் விலை 10 ரூபாய் உயர்வு...


குடிநீர் கேனுக்கு 18 சதவிகித GST வரி விதிக்கப்பட்டுள்ளதால், அதன் விலையை கேன் உரிமையாளர்கள் 10 ரூபாய் உயர்த்தியுள்ளனர்...

ரூ 40-45 க்கு விற்பனை செய்யப்படுகின்றது...

பாஜக வின் பொன் மொழி...


மீண்டும் தொடங்குவோம் புதிய புரட்சியை...


உலகை உலுக்கும் கண்டுபிடிப்பு: மரணத்தை தள்ளிப்போடும் மருந்து… மரண விளிம்பில் உள்ளவரை மீண்டும் உயிர்பிக்கும்...


மனித வாழ்வில் ஜனனம், மரணம் என்பது நியதி அது நிலைப்பு அடைந்தால் தான் உயிர்சமநிலை பெறும். மரணத்தை தாண்டிய வாழ்வு என்பது மனித சக்திக்கும் அப்பாற்பட்ட விடயம் என்று கூறப்பட்டது.

அதையும் இன்றைய மருத்துவ முறைகள் முறியடித்து வருகின்றன. இருதய மாற்று அறுவை சிகிச்சையில் தொடங்கி, தலை மாற்று அறுவை சிகிச்சை வரை பட்டியல் நீள்கிறது.

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது?

என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது.

மரணம் விளிம்பில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது.

சோல்பிடிம்( Zolpidem) என்ற ஒருவகை மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

இது குறித்த சிக்கலான ஆய்வு தொடர்ந்து வருகின்றது. இப்போதைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்க கூடிய மருந்தை கண்டுபிடித்து உள்ளனர்.

இன்னும் பல கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றால் பல சிக்கலான ஆய்வை மேற்கொண்ட பிறகு தான் கூற முடியும் என்று தெரிவித்துள்ளனர்...

புலியை கண்டு பூனை சூடு போட்ட கதை தான் மோடி மஸ்தானின் கதை...


ஆனால் மக்கள் தான் பாவம்... இன்னும் ரெண்டு வருடம் என்னென்ன அட்டூழியங்கள் செய்யப் போறானுங்களா...

கடைசியாக பாஜக தனது கடைசி ஆயுதமாக தமிழை எடுத்துள்ளது....


எமது தமிழன்னைக்கு அன்பு காட்டவும் தெரியும்....

எதிரி தாமரை வடிவமானாலும் பொசுக்கவும் தெரியும்....

கவனம் காவிகளே....

பாஜக மோடியும் மானம் சூடு சொரனையும்...


வசதி படைத்தவர்கள் தான் உணவகங்களில் சாப்பிடுகிறார்கள் - மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்...


வசதி படைத்தவர்கள் மட்டும் தான் ஹோட்டல்களில் சாப்பிட வேண்டும் என்று சொல்லவருகிறீர்களா?