21/02/2019

பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா ராஜினாமா...


அதிமுக உடனான கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி ராஜினாமா செய்துள்ளார்.

இது தொண்டர்கள் விரும்பாத கூட்டணி எனவும் அவர் விமர்சித்துள்ளார்...

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு...


இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

இதயத்தை வலுவாக்கும்.

சிறுநீரைப் பெருக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

தாதுவை விருத்தி செய்யும்.

இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்...

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு முதலில் ஆப்பு...


பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே...


ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி
நிற்பீர்கள்...

எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது .

சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர். அது "சிறு இடு " .

மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர். பெரும் + இடு = பெருமிடு.

அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது.

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து, பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது...

நீங்கள் 1,10,19,28 ஆம் தேதிகளில் பிறந்தவரா.? தவறாமல் வீடியோ பாருங்க...


https://youtu.be/Gs1fyilzFyw

Subscribe the channel for more news...

உணர்வு அலைவரிசை...


1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது.உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.

2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.

3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.

4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் , அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.

5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.

6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.

8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால் கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...

துண்டு சீட்டு திமுக ஸ்டாலின் நீ அரசியலுக்கு எல்லாம் சரிபட்டு வரமாட்ட...


கொத்தமல்லித் தழை கட்டுக்குள் பார்த்தீனியம்... உஷார்...


பார்த்தீனியம் பார்க்க அவ்ளோ அழகு. வெண் மொட்டுக்கள் கண் திறந்தது போன்ற பூக்களால் தலை அசைக்கும்.

ஆனால், இந்தப் பார்த்தீனியம் பண்ணும் வேலையோ பயங்கரம். வயல்வெளி, வரப்புகள் என எங்கும் பறந்து விரிந்து வளர்ந்து நிற்கிறது இந்த நச்சு செடி. அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து நிற்கும்.

பார்த்தீனியம் - பார்த்தீனியத்தை ஒழிக்கும் அவசியம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இந்தப் பார்த்தீனியம் எங்கிருந்து வந்தது தெரியுமா? இதுவும் அமெரிக்கா நமக்கு அளித்த பரிசு தான். மெக்சிகோ வளைகுடா பகுதியில் இருந்து கோதுமையோடு நம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட விஷப் பரிசு...

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு...


இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்...


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8 ) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்...

அதிமுக - பாமக -பாஜக கூட்டணி பற்றி டிடிவி தினகரன் பேட்டி...


https://youtu.be/yg9h2NUiEro

Subscribe the channel for more news...

டெலிபதி...


பலர் என்னிடம் டெலிபதி பற்றி அரிய ஆர்வம் உள்ளதாகவும் அதை கற்று கொடுக்கும் படியும் கேட்கின்றனர். 

உங்கள் ஆர்வத்தை மதித்து உங்களுக்கு எளிய முறையில் டெலிபதி கற்று தருகிறேன் தயவு செய்து இதை நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள்.

உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம்.

இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது.

ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம்.

முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.

எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வராவிட்டால் விட்டு விடுங்கள்.

கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.
உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்...

அனைத்து கருத்தியலையும் நேரடியாக எதிர்க்க இங்கு இதுவரை எந்த தலைவனும் வரவில்லை...


இங்கு என்பது தமிழ்நாடு மற்றும் இந்தியா...

நட்பு ரீதி, அரசியல் நாகரீகம் எனக்கூறி மக்களை பிரித்து வைத்து ஏமாற்றுவதற்கு தான் கட்சிகளும், கட்சி தலைவன்களும் போட்டி போட்டு தினந்தோறும் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்...

உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்...

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற...

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்...

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்...

மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுப்பவர்களின் நிலை இதுதான்.... திரு முகிலன் எங்கே...


சூடு சொரனை இல்லாத மானங்கெட்ட திமுக ஸ்டாலின்...


வெட்கம் சூடு சொரனை இல்லையா? - ஸ்டாலின்...

ஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க தமிழகத்திற்கு வந்த போதும்,

திருவாரூரில் இருந்து டிக்கெட் எடுக்காமல் கக்கூஸில் ஒளிந்துக் கொண்டே ரயிலில் வந்த போதும்,

விஞ்ஞான ஊழல் செய்தீர்கள் என சர்க்காரியா கமிஷனால் காரி உமிழப்பட்ட போதும்,

மனைவி, துனைவி, இணைவி என சீயான் மூன்று தாரங்கள கட்டி வாழ்ந்ததுக்கு கொஞ்சம் கூஎ கூச்சமே இல்லாம பதில் சொன்ன போதும்,

முதல் தாரத்தின் முதல் பிள்ளையான முக.முத்துவை எம்.ஜி.ஆருக்கு பிறந்த எம்.ஜி.ஆரோட பிள்ளையென ஊரே சிரித்து நக்கலடித்த போதும்,

ஸ்டாலினை பேராசிரியர் பிள்ளை என முகஜாடையை ஒப்பிட்டு பேசி உலகமே சிரித்த போதும்,

அடுத்தவன் பொண்டாட்டியான ராசாத்தியை தனது வைப்பாட்டியாக மாற்றி ஆட்டைய போட்ட போதும்,

கனிமொழி தனக்கு பிறந்த மகளே இல்லை என நீதிமன்ற படியேறி பதில் சொன்ன போதும்,

தயாளு அம்மாவுக்கு அல்சிமர் நோய் உள்ளது, மனநிலை சரியில்லாமல் பைத்தியமாக உள்ளார் என நீதிமன்றத்தில் ஊழல் வழக்குக்கு பயந்து வாக்குமூலம் கொடுத்த போதும்,

ஊழலால் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்,

அண்ணா ஆரம்பித்த திராவிட இயக்கத்தை குடும்ப உறுப்பினர்களை கொண்டு நிரப்பி சங்கர மடமாக மாற்றிய போதும்,

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் விரல் சூப்பிய போதும்,

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்த வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் ஆ பார்த்துக் கொண்டிருந்த போதும்,

கூட்டணி தயவில்லாமல் இதுவரை தேர்தலையே சந்திக்க திராணி இல்லாத போதும்,

மைனாரிட்டியாக காங் மற்றும் பாமக-வின் ஆதரவு பிச்சையில் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போதும்,

காங்கிரஸ் அண்ணா அறிவாலயத்தின் மேல்தளத்தில் சிபிஐ ரெய்டும், கீழ்தளத்தில் கூட்டணி பேசி மிரட்டி பணிய வைத்த போதும்,

விமர்சனத்தை தாங்க முடியாமல் குடும்ப வாரிசு சண்டை போட்டு தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து மூன்று பேரை கொன்ற போதும்,

அந்த படுபாதக செயலை சில மாதங்களிலேயே மறந்து "கண்கள் பணிந்தது, இதயம் இனைந்தது-னு" அழகிரியோடு உறவாடிய போதும்,

நல்லிரவில் கைதாகும் போது ஐயோ அம்மா கொல்றாங்களே என கதறி அழுத போதும்,

எமர்ஜென்சி காலத்தில் கைதாகி போலிஸ் லத்தியால் வாயின் திசை மாறி கோணவாயாக போன போதும்,

பாத்திமா பாபுவை பலாத்காரம் செய்த போதும்,

கனிமொழியோட கனவரின் பெயரை அவரால் கூட சரியாக கூற முடியாத போதும்,

ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து உலகமே  கேவலமாக பார்த்த போதும்,

ஊழல் வழக்கில் கைதாகி கனிமொழி திகார் சிறையில் கக்கூஸ் கழுவிய போதும்,

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் நீதிமன்ற குற்றவாளி கூண்டுகளில் தற்போது நின்று கொண்டிருக்கும் போதும்,

கடவுளே இல்லைனு சொல்லிட்டு புட்டபர்த்தி சாயிபாபா-விடம் மோதிரம் வாங்கி அணிந்துக் கொண்ட போதும்,

ஊர் தாலியை மேடை போட்டு அறுத்து விட்டு தன் மனைவிமார்களின் தாலியை தங்கத்தில் தொங்கவிட்டு கொண்டிருக்கும் போதும்,

காசி, ராமேஸ்வரம் முதல் தெருகோடி பிள்ளையார் தெரு வரை எந்த கோவிலையும் விடாமல் துர்கா ஸ்டாலின் விழுந்து புரண்டு கும்பிடும் போதும்,

அரசு பணத்தில் இலவசத்தை லஞ்சமாக திணித்து ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்ட போதும்,

காங்கிரசோடு இனி கூட்டணி கிடையாதென கூறிவிட்டு அதனுடன் தற்போது கூட்டணி வைத்திருக்கும் போதும்,

குலத்தொழிலான நாதஸ்வரம் வாசிக்க போ-வென சாதியை சொல்லி திட்டிய வைகோவுடன் தோழமை என கூறி மேடை ஏறிய போதும்,

மக்கள் நல கூட்டணி என கடந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஆப்படித்த திருமா மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கைகுலுக்கும் போதும்,

சாதிகட்சி சாதிகட்சி என கூறிவிட்டு பாமகவுடன் பல்லை இளித்துக் கொண்டு கூட்டணி வைத்த போதும்,

பழம் நழுவி பாலில் விழுமா என விஜயகாந்துக்காக கடந்த தேர்தலில் இளவு காத்த கிளியாக காத்திருந்த போதும்,

பாமக தயவிலாவது வெற்றி பெற்று விடலாமென நேற்று வரை கூட்டணிக்காக காத்திருந்த போதும்,

சாதி ஒழிப்பு பேசிவிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து சாதி சங்க மாநாட்டு மேடைகளிலும் ஏறி பேசிய போதும்,

அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளோடும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ஒரே கட்சி என்ற பெருமையுடன் சுத்திக் கொண்டிருக்கும் போதும்,

அன்புமணி முதல் நேற்று அரசியலுக்கு கமல் வரை எவரையும் விடாமல் காப்பி அடித்து காலத்தை தள்ளும் போதும்,

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தி அஜித்திடம் மேடையிலேயே செருப்படி பட்டு அவமானபட்ட போதும்,

நயன்தாராவை ஒருதலையாக காதலித்து மகன் உதயநிதி விஷம் அருந்தி தற்கொலை செய்ய துனிந்த போதும்,

நாற்பது நாடாளுமன்ற தொகுதியிலும் தோல்வியை சந்தித்து அவமானபட்ட போதும்,

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்ட கட்சியாக இருந்து எதிர் கட்சியாக கூட தகுதியில்லாமல் விஜயகாந்திடம் எதிர்கட்சி தலைவர் பதவியை இழந்த போதும்,

ஆர்.கே.நகர் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு டெபாசிட் இழந்து கேவலபட்ட போதும்,

ஒரு பழமொழியை கூட சரியாக சொல்ல தெரியாமல் மைக்கில் உளறிகொட்டி அசிங்கப்படும் போதும்,

துண்டுசீட்டு பார்த்து படிக்க கூட துப்பில்லாமல் தடுமாறும் போதும்,

ஈழ தமிழர்கள் லட்ச கணக்கில் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் கூட்டணியில் பதவியில் ஒட்டிக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்த போதும்,

பிரபாகரனின் தாய்க்கு காங்கிரசை பகைத்து கொள்ள நேரிடுமென சிகிச்சை தரமுடியாமல் திருப்பி அணுப்பிய போதும்,

காலை உணவு உண்டுவிட்டு மாலை உணவிற்கு இடையிலான இரண்டு மணிநேரம் ஏசி சகிதம் படுத்திருந்ததை உண்ணாவிரத போராட்டம் என கூறிய போதும்,

இடுப்புகிள்ளி திமுக, ஓசி பிரியாணி திமுக, ஓசி பஜ்ஜி திமுக, ஈனபெருஞ்சுவர் என்பன போன்று பல விதங்களில் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி அவமான பட்ட போதும்,

திமுக ரவுடிகள் செய்த அட்டுழியங்களுக்காக கடைகடையாக ஏறி மண்ணிப்பு பிச்சை கேட்டுக் கொண்டிருந்த போதும்,

உலக அரசியல் வரலாற்றிலேயே இருநூறு ரூபாய்க்கு பதிவு போடும் இணைய வேலைக்கு ஆள் அமர்த்திய போதும்,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் பத்தாண்டுகள் தண்டனை பெற்ற போதும்,

நாற்பதாண்டுகளாக முதல்வர் கனவில் இன்னும் கோலம் போட்டுக் கொண்டே இருக்கும் போதும்,

ஒவ்வொரு தேர்தலிலும் அடுத்த தேர்தலில் உயிரோடு இருப்பேனோ செத்திடுவேனோ என அழுது பரிதாப பிச்சையால் கலைஞர் வெற்றி பெற்ற போதும்,

எடப்பாடி ஆட்சியை கூட கலைக்க முடியாத அளவுக்கு ரொம்ப வீக்கான எதிர்கட்சி தலைவனாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதும்,

அப்பனோட சொந்த தொகுதியிலேயே இடைதேர்தலில் நிற்க திராணி இல்லாமல் தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்த போதும்,

கலைஞர் இறந்த போது எடப்பாடியாரின் காலில் விழுந்து புரண்டு மெரினாவில் இடம் கேட்டும் கிடைக்காமல் கதறிய போதும்,

மேற்கண்ட நிகழ்வுகள் நடந்தேறிய போதெல்லாம் ஸ்டாலினாகிய உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாகவோ, மானகேடாகவோ இல்லையா? சூடு சொரனையே வரலையா?

சரி இவ்வளவு அசிங்கமாகவும் வாழ்ந்துவிட்டு நீயெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனைய பத்தி பேச கொஞ்சம் கூட கூச்சமாவே இல்லையா?

சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க...

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?


விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.

இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்...

சருமத்திற்கு வெண்ணெய் பழம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?


அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது வெண்ணெய் பழம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த பழத்தில் சு(ஸ்)டெரோலின் என்னும் புரதம் அதிக அளவில் உள்ளது. இந்த சு(ஸ்)டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு வெண்ணெய் பழத்தில் அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்...

ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ்சுடன் கூட்டணி வைக்கும் திமுக...


இந்த திமுக விற்கு ஆதரவளிக்கும்.. விசிக, மதிமுக எல்லாம் எந்த நிபந்தனையில் ஆதரிக்கிறார்கள்..?

எல்லாம் ஊழல் செய்து பிழைக்க மத்திய அமைச்சர் பதவிக்காக மட்டும் தானே...

மானங்கெட்ட பயலுங்க...

ஈழமும் தமிழகமும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகத்தின் உயரம் தமிழினமே...


இதை பலர் புரிந்ததனால் சேர தடுக்கின்றார்கள், பிரிக்கின்றார்கள், சேர்ந்தவர்களையும் சேருபவர்களையும் தடுக்கின்றார்கள்...

முன்பு ஒன்றாய் இருந்த தமிழினம் வருங்காலத்தில் ஒன்றுபட்டே தீரும்.

புலிக்கூட்டம் புலியோடுதான் சேரும் என்பதில் சந்தேகமில்லை.

அன்று தமிழகமும் புலிக்கொடி கொண்டு தான் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இனி வரும் காலமும் உருவாக்கும் வரலாறும் அதையே சொல்லும்...

உலகிலுள்ள விசித்திரமான சுடுகாடுகள்...


https://youtu.be/sknHPBc-8zg

Subscribe the channel for more news...

திமுக தெலுங்கர் கருணாநிதி செய்த முக்கியமான தமிழின துரோகங்களில் இதுவும் ஒன்று...


ஈழப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன மானத்தோடும், தன்மானத்தோடும், சமூக அக்கறையோடும் வீதிக்கு வந்து போராடிய வழக்கறிஞர் பெருமக்களை ஓட ஓட அடித்து, சனநாயகத்தின் தூண்களில் ஒன்றை மற்றொரு தூணை கொண்டே ஏவிவிட்டு அடக்கநினைத்த கயவன் கருணாநிதியின் வெறியாட்ட தினம் இன்று -  19/02/2009...

காபியின் ஆபத்துக்கள்...


பல சமயங்களில் கன்று போட்ட உடன் மாடு நன்றாக இருக்கும்...


கன்று போட்டு நான்கு ஐந்து நாட்கள் கழித்து மாடு படுத்துவிட்டால் எழுந்து நிற்க முடியாமல் படுத்தே இருக்கும்.

இடுப்பு பகுதி உணர்ச்சி குறைவாக இருக்கும். பால் காய்ச்சல் எனக்கருதி கால்சியம் குளுகோஸ் மருந்துகள் போட்டாலும் மாடு எழுந்து நிறகாது. ஆனால் தீவனம் தின்னும்.

இதற்கு காரணம் மாடு கன்று ஈனும் போது வழக்கத்தை விட இடுப்பு எலும்பு (hip joint) விரிவடைந்து விடுவதே.

கன்றின் எடை 25 கிலோவிற்கு மேல் இருக்கும் மாடுகளில் இந்த குறைபாடு இருக்கும்.

மேலும் சத்து குறைபாடு; இடுப்பு பகுதி நரம்பு மற்றும் இரத்தக்குழாய் கசங்குதல் மற்றும் சவ்வு பிரச்சினை அனைத்தும் இருக்கும். 

இதற்கு நான் படத்தில் காட்டியபடி மாட்டை தூக்கி நிறுத்தி கட்டி அப்படியே 3__5 நாட்களுக்கு விடவேண்டும்.

நல்ல சத்தான ராகி கஞ்சி, தட்டு , இவற்றுடன் கால்சியம் வைட்டமின் திரவ டானிக் தரலாம்.

கூடவே நாயுருவி; அகத்தி மற்றும் முருங்கை இலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். 

மேல்பூச்சாக நான் கூறும் சிகிச்சையை செய்யுங்கள்... மாடு கண்டிப்பாக கசாப்புக்கு போகாது...

பிரண்டை இரண்டு கிலோ ; கருவேலன் மரப்பட்டை அரை கிலோ எடுத்து நன்றாக உரலில் கூழ்பதத்தில் இடித்து எடுத்துக் கொண்டு இத்துடன் அரைகிலோ ராகிமாவு ; சலித்த புற்று மண் அல்லது களிமண் அரைகிலோ இவற்றை ஐந்து லிட்டர் தண்ணீரில் கலந்து சட்டியில் வைத்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கிண்டி கொதி நிலை வந்ததும் இறக்கி வைத்து இளம் சூட்டில் ஐந்து கோழி முட்டை வெள்ளை கருவை  ஊற்றி கலந்து இந்த மருந்து கலவையை ஆறிய பின் எடுத்து மாட்டின் இடுப்பு பகுதி கால் சப்பை மற்றும் முன் கால் சப்பைகளில் மொத்தமாக பூச வேண்டும்.

இதுபோல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட வேண்டும். எனது பத்தாண்டு அனுபவ ஆராய்ச்சி மருந்து இது.

கிடையாக கிடந்த மாடு கூட எழுந்து நடக்கும்.

கூட முருங்கை இலை அகத்தி உள்ளே கொடுங்கள். கண்டிப்பாக மாடு நடக்கும். இழந்த பால் திரும்பும்.

முடிந்தவரை ஷேர் செய்யுங்கள். என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு படித்த விவசாயம் செய்வோர் ஆதரவு தாருங்கள். கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்...

அன்பு சக்தியும் ஆரோக்கியமும்...


1. உங்கள் நம்பிக்கைகள் மற்றும் வலிமையான உணர்வுகள் மூல உங்கள் உடலுக்கு நீங்கள் தொடர்ந்து சதை கொடுக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் திரும்ப பெறுகிறீர்கள்.

2. நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் ஒட்டுமொத்த உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுக்களையும் உறுப்புகளையும் நிரப்புகிறது.

3. நீங்கள் ஒரு ராஜ்யத்தை ஆள்பவர். உங்களைக் கேள்வி கேட்காமல் உங்களுக்கு பணிவிடை செய்யும் மிக நம்பிக்கையான சேவகர்கள் உங்கள் உயிரனுக்கள் தான்.

4. நீங்கள் உணர்வுபூர்வமாக எதை சிந்தித்தாலும் அது உங்கள் ராஜ்யத்தின் விதியாக மாறும். உங்கள் உடலின் விதியாக மாறும்.

5. உங்களுக்கு விருப்பமில்லாதவ
ற்றை பற்றி எதிர்மறையான சிந்தனைகளையும் , உணர்வுகளையும் நீங்கள் வெளிப்படுத்தும்போது , உங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தின் ஆற்றல் குறைகிறது.

6. ஒரு நல்ல இதமான நாள் , புதிய வீடு , நண்பர்கள் , அல்லது பதவி உயர்வு ஆகிய எதைக் குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியான நல்ல உணர்வைக் கொண்டிருக்கும்போது , உங்கள் உடல் முழு ஆற்றலுடனான ஆரோக்கியத்தைப் பெறுகிறது.

7. அனைத்தையும் பன்மடங்கில் பெருக்குவது நன்றியுனர்வு தான்.

8. எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நன்றி கூறுங்கள்.

9. உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து இதயபூர்வமாக “ நன்றி” என்று கூறுங்கள். உங்கள் உடலில் உங்களுக்கு பிடிக்கதவற்றைப்
பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

10. உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகாமான நேரம் அன்பை வெளிபடுத்டுவது தான்.

11. நீங்கள் நோயுற்றிருந்தால் , உங்கள் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் அதைச் சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்கு முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.மாறாக ஆரோக்கியத்திற்கு அன்பை வெளிப்படுத்தி , அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

12. கச்சிதமான எடை, கச்சிதமான உடல் , கச்சிதமான ஆரோக்கியத்தைக் கொண்ட ஊர் உறுப்பு ஆகியவை குறித்து அன்பை வெளிப்படுத்தி , அவற்றை பெற்றிருப்பது போல் கற்பனை செய்யுங்கள். நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றியுடன் இருங்கள்.

13. உங்களுக்கு வயது ஏறிக்கொண்டே போகும் போது உங்கள் உடல் சீர்குலையும் என்று நீங்கள் நம்பினால் , நீங்கள் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள். அப்போது ஈர்பபுவிதி அப்படிப்பட்ட சூழல்களை உங்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.

14. இளமையாக உணருங்கள். உங்கள் வயதைப்பற்றி உணர்வதை நிறுத்துங்கள்.

15. நீங்கள் கொண்டிருக்கும் அன்பு மற்றும் நன்றியுணர்வின் மூலமாக நீங்கள் விரும்பும் எதுவாகவும் உங்கள் உடல் மாறும்.

அனைத்து அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் பின்னால் அன்பு என்னும் மாபெரும் சக்தி உள்ளது..
படியுங்கள்.. உள்வாங்குங்கள்.. உணருங்கள்...

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

தாயத்து - யார் முட்டாள்?


சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. 

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு.

ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில்  பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில  வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...     

இனியாவது விழிப்போம்.

நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...

நீங்கள் நீருக்கும் வரிசையாக காத்திருக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை காடுகளை வளர்த்து தற்சார்பை நோக்கி திரும்புங்கள்...


குறிஞ்சாக்குளம் காந்தாரி...


மகாபாரதத்தில் வரும் காந்தாரி
காந்தாரா (Ghandhara) நாட்டைச் சேர்ந்தவள்.

இது காஸ்மீரை ஒட்டிய இன்றைய பாகிஸ்தானின் வடபகுதி.

இன்றைய ஆப்கானிஸ்தானின் கந்தஹார் (kandahar).

இதன் பழைய பெயர் இஸ்கந்தரியா (iskandariya).

ஈரான் நாட்டின் தென்பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி குறிஞ்ச் (kurinch) என்ற ஊரும் உள்ளது...

Shiny Hair Remedy / பளபளக்கும் கூந்தலை பெறுவது எப்படி.?


https://youtu.be/x_oTuv06eUs

Subscribe the channel for more tips...

தமிழர்நாட்டில் மரவீடுகள்...


தமிழர்நாட்டில் வீடுகட்ட இன்று நாம் பயன்படுத்தும் மணல், இரும்பு, சுண்ணாம்பு போன்ற புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்தாமல் மரங்களை வைத்து வீடுகட்டவேண்டும்.

இரும்பு போல உறுதியான மர வகைகளும், தீயில் எரியாத மர வகைகளும்..

ஆச்சா போன்ற நீரில் மூழ்கும் மர வகைகளும் கூட உண்டு.

நாம் அனைத்து கட்டுமானங்களையும் பயன்பாட்டுப் பொருட்களையும் முடிந்த வரை மரத்தாலேயே செய்யவேண்டும்.

அதாவது பொம்மை, நாற்காலி, பாத்திரங்கள், கட்டில், அலமாரி, சிலைகள், அழகுப் பொருட்கள், செருப்பு, மின்னணு சாதனங்களின் உடல்பகுதி, வாகனங்களின் உடல் பகுதி, வேலி, வீடு, கூரை, தூண், பாலம், சாலை ஓர தடுப்புகள் போன்ற அனைத்தையும் மரத்தாலேயே செய்ய முயற்சிக்க வேண்டும்.

மரப்பொடியையும் மீண்டும் பசையில் குழப்பி அழுத்தி மீண்டும் பலைகை ஆக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும்.

அதற்கு முதலில் வனப்பகுதிகளைப் பாதுகாத்து அதனைப் பெருக்கி பிறகு அதன் எல்லையை விரிவாக்கி நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அடர்த்தியான காடுகளை உருவாக்க வேண்டும்.

(இது எல்லைப்பகுதியில் செய்யப்பட வேண்டும்).

பிறகும் நாம் நாடே காடாகும் அளவு சமூகக் காடுகளை வளர்க்கவும் வேண்டும்.

வானில் இருந்து பார்க்கும் போது பச்சையாக மட்டுமே தெரியுமளவு மரங்களை வளர்க்கவேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக செல்லும் போது வெட்ட ஆரம்பிக்க வேண்டும்.

அதுவரை மிகவும் குறைவாகவே மரம் வெட்டுதல் நடக்க வேண்டும்...