05/11/2017

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்; வட தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது...


வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

நெல்லை கந்து வட்டி தீக்குளிப்பு, கார்டூன் போட்ட பாலா அவதூறாக கார்டூன் போட்ட புகாரில் கைது...


டிசம்பர் 31... மீண்டும் சுனாமி.. இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்: அதிர்ச்சி தகவல்...


டிசம்பர் 31க்குள் மீண்டும் சுனாமி பேரலைகல் உருவாகி தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படும் என கேரளாவை சேர்ந்த பாபு கலயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போதே இவர் இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது இந்த ஆண்டும் சுனாமி ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, இந்திய பெருங்கடலில் ஏற்படும் அதிபயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழுந்து இந்தியாவில் தமிழக, கேரள கடலோர மாவட்டங்கள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகள் அழிவை சந்திக்கும் என கூறியுள்ளார்.

இவர் கூறுவதற்கு ஏற்றார் போல், இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல், இந்திய பெரு‌ங்கட‌லி‌ல் ‌நிலநடு‌க்க‌ம் ஏற்ப‌ட்டு‌ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

திமுக வும் திருட்டு அரசியலும்...



சென்னை வாசிகள் போன வெள்ளம் வந்த போது அதிமுக சரியாக செயல்படவில்லை என்று திமுகவை அதிக தொகுதியில்  வெற்றி பெற வைத்தீர்கள், ஆனால் இன்றோ முதியவர் ஸ்டாலின் துபாயில்.....

உடலுக்கு ஊட்டம் தரும் ஆளி விதை...



நாம் அன்றாட உணவுகளில் காய், கனி, இலை, பருப்பு, விதை போன்றவைகளை பயன்படுத்தி வருகிறோம். நாம் உணவுகளாக பயன்படுத்தும் விதை வகைகளில் குறிப்பிடத்தக்கது, ஆளி விதை! ஆளி, கடுகு குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை செடி. 60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.

ஆளி செடியின் விதையை ‘ஆளிவிதை’ என்று அழைக்கிறோம். இந்த விதை, கடுகு போன்று சுவைதரும். இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. இதன் தளிர் இலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது. சித்த மருத்துவ பாடல், இது உடலைத் தேற்றும் தன்மை கொண்டதாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும் என்றும் குறிப்பிடுகிறது.

மேலும் ஆண்மைத்தன்மையை அதிகரிக்கவைக்கும் ‘காமம் பெருக்கி’ என்றும் எடுத்துச் சொல்கிறது. ஆளி விதையில் கால்சியம், இரும்பு, போலிக்அமிலம், வைட்டமின் சி, கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் வாதத்தையும், கபத்தையும் சமன்படுத்தி, பித்தத்தை சரியான முறையில் இயங்கவைக்கிறது. இது சீரற்ற மாதவிடாயை சீர்செய்யும் சக்தியையும் பெற்றிருக்கிறது.

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் தினமும் 5 கிராம் ஆளிவிதையை நீரில் ஊற வைத்து, மென்று சுடுநீர் அருந்திவந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். ஆளிவிதையை அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் தினமும் ஒரு வேளை மேற்கண்டவாறு சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும். அதன் மூலம் மாதவிடாய் கோளாறு உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகள் பெண்களுக்கு நீங்கும்.

ஆளி விதைக்கு தாய்ப் பாலை பெருக்கும் சக்தியும் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி விதையை பொடி செய்து பாலில் கலந்து பருகிவரலாம்.

ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பலப்படும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

ஒரு தேக்கரண்டி பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். வயிற்றுப்போக்கு சீர்படும். உடைந்த எலும்புகளை விரைவாக கூடவைக்கும் சக்தியும் ஆளிவிதைக்கு உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ஆளி விதை உணவுகளை கொடுக்கும் பழக்கம், பல்வேறு நாட்டு பழங்குடி மக்களிடம் உள்ளது.

ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவைகளோடு ஆளிவிதை பொடியை கலந்து சூரணம் தயாரிக்கலாம். இதனை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை சீர் செய்திட முடியும்.

அடிபட்டதால் உண்டாகும் வீக்கம், வலி மற்றும் சருமத்தில் உண்டாகும் அரிப்பிற்கு ஆளிவிதை பொடியை எலுமிச்சம் பழ சாற்றில் அரைத்து பூசலாம். ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். ஆளி விதைக்கு உடல் எடையை குறைக்கும் சக்தியும் இருக்கிறது.

பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு எலும்புகள் உறுதியாக ஆளிவிதை பொடியை பாலில் கலந்து பருககொடுக்க வேண்டும். ஆளிவிதை பல்வேறு சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது...

நீதிமன்றம் மக்களுக்கானது என்றால் இந்த தீர்ப்பை சொல்லட்டும்...


உலகத் தமிழினமே ஒன்றுபடுவோம்...


உலகத்தில் மொத்தம் 195 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....

அதில் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது...

ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....

வரும் காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்...

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர்தேசம் அமைய போராடு....

இப்போது நாம் தமிழர்தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்வோம்.....

உலகம் முழுவதும் உள்ள தமிழினமே அனைவரும் ஒன்றுபடுவோம்....

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்...

தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களுக்கு பதிலாக இனிவரும் காலங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயக்கப்படும்: பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...


மாநகராட்சி ஊழியர்கள் செய்யாத வேலையை தன் கையால் செய்த வேப்பேரி ஆய்வாளர் திரு.வீரகுமார் மற்றும் காவலர்கள்...


ஈ வே ரா சாலையில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்ல முடியாமல் இருந்தை பார்த்த காவல் ஆய்வாளர் திரு.வீரகுமார் சிறிதும் தயக்கமில்லாமல் களத்தில் இறங்கி கையுறை கூட அணியாமல் கால்வாய் அடைப்பை சரி செய்துள்ளார். இது சாலையில் செல்வோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது...

கோயமுத்தூர் காந்திரபுர மேம்பாலம் ஒன்றிற்கும் உதவாத கண்துடைப்பு செலவே...


மனமும் நோயும்...


ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரிசெய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.

அதேபோல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

நீங்கள் உறங்கும்போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவு தான்.

வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது.

உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர்.

ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள் தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள். வாழ்க வளமுடன்...

தமிழக ஊழல் அரசே பதில் சொல்லு...


இந்தியமா? திராவிடமா?


தமிழகத்தில் இரண்டு பொய்த் தேசிய மாயைகள் கட்டியமைக்கப் பட்டுள்ளன..

ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும்,

இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.

உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா?

இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும்.

முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குடும்பம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.

இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?

இந்திய தேசியம் என்பது வடநாட்டு பிராமண, மார்வாடி, சிந்தி இனத்தவர்களின் சுரண்டலுக்காகவும்,

திராவிட இனக் கோட்பாடு என்பது தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் சுரண்டலுக்காகவும், தமிழர்  மண் பறிப்பிற்காகவும், கட்டியமைக்கப் பட்டுள்ளது.

இதில் சுரண்டலை விட மண்பறிப்பானது மிகக் கேடானது.

இன்று இந்திய தேசியத்தை விட திராவிட இனக் கோட்பாடு என்பது மிக மிகக் கேடு விளைவிப்பது ஆகும்.

தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் நம்மைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மண்பறிப்பு வேலையில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் கேட்டை உணராத அல்லது உணர்ந்தும் தம் சொந்த நலனுக்காக, திராவிட கோட்பாட்டை ஒரு சில தமிழ் தேசியத் தலைவர்கள் ஆதரிப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய அழிவைத் தருவதாகும்.

இவ்விரண்டு அமைப்பிலும் தமிழர்கள் இல்லையா? என்றால் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் நலனுக்காக பால் கொடுத்த தாயின் மார்பையே அறுத்து விற்கும் கருங்காலிகளாகவே இருக்கிறார்கள்.

இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழனின் மண்ணைப் பறித்து, அவன் குருதியை உறிஞ்சுகிறது. இதற்காக இல்லாத போலி ஆரிய திராவிடப் போரை உண்டாக்கித் தமிழரை இரண்டுபடுத்தியுள்ளது.

வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ, இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ, மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை.

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை.

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.

இந்தியம் நம் புரத்தே இருந்து தாக்குகின்ற எதிரி என்றால் திராவிடம் நம் அகத்தே இருந்து நம்மை அழிக்கும் புற்று நோயாகும்.

இன்று இந்தியா என்பது மாயை என்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் திராவிடமாயை என்பதில்தான் (மக்கள் அல்ல) தலைவர்கள் தடுமாறுகின்றனர். இவர்கள் அறியாமையில் தடுமாறுகின்றனரா? அல்லது செஞ்சோற்றுக்கடனா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? திராவிடத் தலைவர்களின் கயமைத்தனம் தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய வடுவுடன் நீண்டு கிடக்கிறது.

நீதிக்கட்சியினரின் ஆந்திராவிற்கு ஆதரவான கயமைத்தனம், ஈ.வே.ராவின் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான இரண்டகம் நிறைந்த துடுக்குத்தனமான கீழ்த்தரமான செயல்கள், அண்ணாவின் ஏமாற்று, கருணாநிதியின் இரண்டகம், மா.கோ.ராவின் மலையாளப்பற்று, வை.கோ, வீரமணி, கிருட்டிண சாமி, இராசேந்திரன், இராமகிருட்டிணரின் தெலுங்குப்பற்று என்று திராவிட இயக்கங்களின் இரண்டக வரலாறு இன்றளவும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.

ஈ.வே.ரா பார்ப்பான் எதிரி என்று சொல்லிக் கொண்டே இராசாசியுடன் கூடிக் குலாவினார். அவரின் ஆலோசனைப்படி நடந்தார்.

அண்ணா டி.வி.ஸ். அய்யங்காரின் நன்கொடையைப் பெற்று அவருக்குத் துணையாக இருந்தார்.

கருணாநிதியோ சாவி, குகன், ராம் போன்றவர்களுடன் தொழிலிலும், குடும்பத்திலும் நட்பு கொண்டுள்ளார். தன் பேரன் தயானநிதிக்கு பாப்பாத்தியை தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மா.கோ.ரா வடுக பிராமணப் பெண்ணையே தனது பிறங்கடையாக்கினார்.

புரட்சி புழுதியோ சங்கரமடத்தில் ஆசி பெற்று வடநாட்டுப் பிராமணருக்கு பாதக்கழுவல் நடத்துகிறார்.

திராவிட மடத்து பூசாரி வீரமணியோ செயலிலாதாவின் காலைக்கழுவிக் குடிப்பதே தனது கடமை என்று அல்லும் பகலும் அம்மையாரின் காலில் தவம் கிடந்தவர்.

இப்படித் திராவிடத் தலைவர்களும், அவர்களது அடிவருடிகளும் பிராமணருடன் கூடிக் குலாவலாம், கேட்டால் அது ஆரிய திராவிடப் போர் உத்தியாம்!

என்னடா உங்கள் போர் உத்தி?

ஆனால் தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் தமிழ்ப் பார்ப்பனர்களுடன் பேசினாலோ அல்லது பழகினாலோ அவர்கள் இரண்டர்களாம்!

தமிழனைப் பழித்தவன்,
தமிழ் மொழியைப் பழித்தவன்,
கன்னடரான பெரியார் தமிழருக்குத் தந்தையாம்!

தமிழனை சிங்களவனுக்கு பிடித்து கொடுத்தவன், தமிழரின் நிலத்தை சிங்களவனுக்கு தாரைவார்த்த (கச்சத்தீவு) தெலுங்கரான கருணாநிதி உலகத் தமிழினத்தின் தலைவராம்!

தமிழரைச் சுரண்டி தமிழ் மண்ணில் மலையாளிகளை வளர்த்து விட்டவரான மா.கோ.ரா புரட்சித் தலைவராம்.

தமிழரின் போர்வாள் தெலுங்கன் வை.கோ.வாம்.

இந்த இழிவான நிலை உலகத்தில் எந்த இனத்திற்காவது ஏற்பட்டிருக்கிறதா?

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்.

விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்.

மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்.

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்.

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்.

சிந்திப்போம் தமிழர்களே..

தமிழால் ஒன்றுபடுவோம்.. தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..
தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அக நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..
புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!

தமிழின் பெருமைகள்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 51...


மனதை ஒருமுனைப்படுத்துங்கள்...

நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந்து அந்த எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பார்த்தோம். அடுத்த கட்டமாக அந்தக் கருவிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்த முடிவது தான் உங்கள் எஜமானத்துவத்திற்கு அத்தாட்சி என்பதை உணருங்கள்.

உடலை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியம். அது பழுதடைந்து விட்டால் மனதில் உடலைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் பலமாக எழ வாய்ப்பு குறைவு. உதாரணத்திற்கு கடுமையான தலைவலியோ, பல்வலியோ, வேறு பெரிய உபாதைகளோ இருக்கும் போது வேறு எதைப் பற்றியாவது சீரியசாக எண்ணி செயல்பட முடிகிறதா என்று பாருங்கள். அந்த உபாதைகள் சரியாகும் வரை அது முடியாது. எனவே உடல் பாதிக்கப்படும் போது மனமும் நாம் நினைத்தபடி இயங்க மறுக்கிறது என்பதால் இரண்டுமே நமக்கு எண்ணியபடி பயன்படாமல் போகின்றன. எனவே உடலை நமக்கு இடைஞ்சல் தராத அளவுக்காவது நல்லபடி வைத்துக் கொள்வது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு மிக முக்கியம்.

அடுத்ததாக மனம். சூரிய ஒளியை லென்ஸ் மூலமாக காகிதத்தின் ஒரு புள்ளியில் குவிக்கும் போது அந்தக் காகிதம் பற்றி எரிவதை பெரும்போலோர் சிறு வயதில் செய்து பார்த்திருப்போம். மனம் என்னும் கருவி சக்தி வாய்ந்ததாக மாறுவது நாம் விரும்பும் விதத்தில் அதை ஒருமுனைப்படுத்தும் போது. மனம் அதற்குப் பிடித்த செயலில் ஒருமுனைப்படுவது பெரிய விஷயமல்ல. பிடித்த சினிமா பார்க்கும் போது, நாவல் படிக்கும் போது, இசையைக் கேட்கும் போது எல்லாம் மனம் தானாக ஒருமுனைப்படும். பிடித்த அந்தக் காரியம் முடிந்த பிறகு தான் மனம் வேறு விஷயத்திற்கு நகரும். அப்படி பிடித்த விஷயத்தில் தானாக ஒருமைப்பட முடிந்த மனத்தை நம் கட்டளைப்படி நாம் சொன்ன விஷயத்தில் ஒருமைப்படுத்த முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோர் பெற வேண்டிய அடுத்த பயிற்சி.

ஏதாவது ஒரு சாதாரண பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தினம் பார்க்கக்கூடிய பொருளாக இருக்கட்டும். உதாரணத்திற்கு பென்சிலை எடுத்துக் கொள்வோம். இனி அடுத்த சில நிமிடங்களுக்கு பென்சிலைத் தவிர நீங்கள் வேறு எதையும் நினைக்காமல் பென்சிலைப் பற்றியே சிந்தியுங்கள். உங்கள் முழுக்கவனமும் அதிலேயே இருக்கட்டும். சில வினாடிகளுக்கு மேல் அதில் கவனத்தைக் குவிப்பது ஆரம்பத்தில் முடியாத செயல். மனம் பென்சிலில் கவனம் வைக்க என்ன இருக்கிறது என்று சொல்லி சுவாரசியமான மற்றவற்றிற்குச் செல்ல அலைபாயும். ஆனால் மனதை திரும்பவும் பென்சிலிற்கே கொண்டு வாருங்கள். அதன் உருவம், நிறம், அளவு, உபயோகங்கள், என்று மனம் பென்சிலை சார்ந்த, பென்சிலை மையமாகக் கொண்ட விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள். சில வினாடிகளில் மனம் இதைப் பற்றி முழுவதும் நான் சிந்தித்து முடித்து விட்டாயிற்று. இனி சிந்திக்க வேறொன்றும் இல்லை என்று சொல்லும். ஆனாலும் விடாமல் பென்சிலுக்கு மனதைக் கொண்டு வாருங்கள். உங்கள் முழுக் கவனமும் பென்சிலைப் பற்றியதாக, பென்சிலிலிலேயே இருக்கட்டும். ஓரளவு மனம் ஒருமுனைப்பட ஆரம்பித்த பின் பயிற்சி நேரத்தை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டே வாருங்கள். புதிது புதிதாக பென்சிலைப் பற்றிய அதிக விவரங்களை அறிய ஆரம்பிப்பீர்கள்.

கவனிக்கும் திறனின் முக்கியத்துவத்துவம் அறிய ஒரு நிகழ்வைச் சொல்லலாம். தாவரம், விலங்கு முதலான உயிரின ஆராய்ச்சியாளரான லூயி அகாசிஸ் (Louis Agassiz) என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் அந்தத் துறையில் தலைசிறந்து விளங்கியவர். அவரிடம் கற்ற மாணவர்கள் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதிலும், நுண்ணிய அறிவிலும் வல்லவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரிடம் கற்க ஒரு புதிய மாணவன் வந்தான்.

அகாசிஸ் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன். இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான். ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான். மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள், பக்கவாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான். சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து அகாசிஸைத் தேடினான். அவரைக் காணவில்லை.

மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான். அதையும் குறித்துக் கொண்டான். பல மணி நேரம் கழித்து வந்த அகாசிஸிடம் தன் குறிப்புகளைக் காட்டினான். அகாசிஸ் திருப்தியடையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார். மாணவனுக்கு ஒரே ஏமாற்றம். இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான். அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த அகாசிஸிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார். மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித்தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான்.

அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான். ”நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்”.

பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் இரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். “நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன். சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும். ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.” இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள்.

மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒருமுனைப்படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள். இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல. உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும். மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும்.

எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும்.

அடுத்ததாக மிக முக்கியமான வேறொரு பயிற்சியைப் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....

காஞ்சிபுரம் மதுராந்தகம் ஏரி நிரம்பியது, சுற்றியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...


ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2... உண்மைகள் உறங்குவதில்லை -:பகுதி 2...


உண்மைகள் உறங்குவதில்லை என்கிற தீர்க்க தரிசனத்தின் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்க தரிசன குறிப்புகள் யாவும் தீர்க்க தரிசனத்தின் 2-ம் பகுதி ஆகும். அதாவது இரண்டாம் தீர்க்க தரிசனமாகும்.


மலேசியா நாட்டின் கடற்கரை ஓரமாக இடம் பெற்றுள்ள ஒரு தமிழரின் வணிக வளாகம் மிகப்பெரிய விபத்துக்குள்ளாகும். இது தமிழர்களுக்கு எதிரான ஒரு நாச வேலை ஆகும். இந்த விபத்தில் பலர் இறக்க நேரிடும். இந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன் மலேசிய அரசுக்கு ஒரு தீவிரவாத அமைப்பு மிகப்பெரிய எச்சரிக்கையை விடும். அந்த சமயத்தில் சீன அரசு இந்திய எல்லையிலும், நேபாளத்தின் எல்லையிலும் ஒரு மிகப்பெரிய அரசியல் சார்ந்த சம்பவத்தை நிறைவேற்றும். இதனால் இந்திய எல்லையில் ஒரு பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும். இந்த சம்பவத்தை சீன அரசு ஒரு மதக்குருவிற்கு எதிராக மேற்கொண்ட சம்பவமாக தன்னை காட்டிக் கொள்ளும் என இரண்டாம் தீர்க்க தரிசனம் இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


மனித ஜென்மங்கள் என்பவை ஆத்மாவின் பிறவி என அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு உண்மையாகும். அந்த வகையில் தமிழக அரசியலில் ஒரு துயரச்சம்பவம் நடந்திருந்தாலும், தற்போது புதியதாக நடக்கவிருக்கும் ஒரு சம்பவம் உலகத்தையே திரும்பி பார்க்கும்படி இருக்கும் என்றும், இந்திய அரசியல் வரலாற்றில் “ஒரு உண்மையான“ இறைசம்பவம் ஒரு ஆத்மாவின் ஏக்கத்திற்காக நடந்தது என மக்கள் யாவரும் நினைக்கும்படி அமைய உள்ளதாகவும் இதுவே “உண்மைகள் உறங்குவதில்லை“  அவை ஒருநாள் விழிப்படையும் என உணர்த்துவதாக இந்த தீர்க்க தரிசனம் அமைய உள்ளதாக குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழக அரசியல் நிலவரங்களை மக்கள் இனி உற்றுக் கவனிப்பார்கள் என்றும், இச்சமயத்தில் இயற்கையின் கோரத் தாண்டவங்கள் வரும் 2017 மே மாதம் பிறகு  தேதியிலிருந்து நடக்க உள்ளதாகவும் இது அனைவரையும் அச்சம் அடையும்படி செய்யும் என்றும் இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு முக்கிய குறிப்பை தருகின்றது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள 32-வது தீர்க்க தரிசனம் தற்போது வரும் மழைக் காலத்தில் துவங்கி பல பிரிவுகளாக நடந்து முடியும் என்றும், ஒரு அரசியல் பிரமுகரின் மரணம் அரசியல் அமைப்புகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், தலைமை அரசியல் அமைப்பில் சில மாற்றங்கள் திடீரென்று நடக்கும் என்று தீர்க்க தரிசனத்தின் 2-ம் பகுதி ஒரு குறிப்பை தருகின்றது.


மழை, மழை வெள்ளம், கரைபுரண்டு ஓடும் நீர், கடல் கொந்தளிப்பு, பெரிய சூறாவளி காற்று, இயற்கையின் கோர தாண்டவம் என தமிழகம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள 3 மாநிலங்கள் வெகுவாக பாதிக்கும் என்றும், அணை ஒன்றின் கரை ஓரம் உடையும் அபாயம் ஏற்படும் என்றும், ஆகஸ்டு மாதம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு என இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என்ற கூற்றின்படி வரலாற்றில் நடந்த சம்பவத்தை போன்று இனி பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் இடம் பெயர்ந்து வாழும் ஒரு கொடிய சூழ்நிலை தற்போது ஏற்படும் என்றும், இதற்கு இந்திய நாடு எவ்விதத்திலும் பொறுப்பு ஆகாது என்றும், இது மற்றொரு நாட்டின் சதியாக இருக்கும் என்ற உண்மை, இச்சம்பவம் நடக்கும் சில மாதங்களில் உலக நாடுகளுக்கு தெரியவரும் என்ற உண்மையை இந்த தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகிறது.


ஆன்மீகத்தில் ஒரு சிறந்த பழுத்த ஞானியாக திகழ்ந்த விவேகானந்தரின் நினைவுச்சின்னம் உள்ள அந்த பகுதியில் மாபெரும் இயற்கை சீற்றம் தற்பொழுது நடக்க உள்ளதாகவும், இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் இச்சம்பவம் அதனைவிட கொடுமையாக இருக்கும் என்றும், இந்த சம்பவத்தினை அடுத்து அப்பகுதியின் ஒரு தீவு கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும் என்றும், அதே சமயத்தில் ஒரு சிறிய நிலப்பரப்பு கடலுக்கு தென் பகுதியில் தோன்றும் என்றும், இது தமிழர்களின் வாழ்க்கை தரத்தினை அரிய உதவும் ஒரு அரிச்சுவடியாக இருக்கும் என்றும், சிவாலயம் ஒன்றின் சிதலடைந்த பகுதிகள் அப்பகுதியில் கண்டெடுப்பார்கள் என்று இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதிகள் தெரிவிக்கின்றன.


போகர் என்ற சித்தரின் பிரவேசம் தென்தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ளதாகவும், “கவிஞன்“ என்ற அடைமொழியை தாங்கிய ஒரு இளைஞன் போகர் பற்றிய சில குறிப்புகளை இணையதளத்தில் வெளியிடுவான் என்றும், அந்த குறிப்புகளை மறுத்து நாகப்பட்டினத்திலிருந்து ஒரு இந்து ஆன்மீக அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும், அச்சமயத்தில் “சதுரகிரி மலையில்“ ஒரு “ஒளிபிழம்பு“ தோன்றி பல்லாயிரம் மக்களுக்கு காட்சி தந்து மறையும் என்றும், அதே வேளையில் பழனி மலையில் இரண்டாம் ஜாமத்தில் போகரின் ஜீவ சமாதியிலிருந்து ஒரு உருவம் எழுந்து பறந்து போகும் அதிசய நிகழ்வை பலரும் கண்டு வியப்படைவதோடு மட்டுமின்றி, அந்த உருவத்தை தமது செல்போன்களில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுவார்கள் என்றும், “இந்த உருவம்“ போகரின் வருகைக்கான ஒரு நிகழ்வாக மக்கள் கருதும்படி அமையும் என இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு உண்மை நிகழ்வை இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


சேலத்தில் அமைந்துள்ள ஒரு மலையில் இடம் பெற்றுள்ள முருகனின் கோவிலில் ஒரு அதிசய சம்பவம் நடக்கும் என்றும், அதே சமயத்தில் தஞ்சையில் ஒரு பூமி சம்பந்தப்பட்ட திரட்டு ஒன்று கண்டறிவார்கள் என்றும், அந்த திரட்டில் யுக மாற்றங்களின் சரியான குறிப்புகள் அங்கு இடம் பெற்றிருக்கும் என்றும், இந்த சம்பவத்திற்கு பிறகு சேலத்தில் ஒரு தெய்வீக சங்கல்பம் நடக்கும் நிகழ்வை உலக மக்கள் அறிந்து வியப்பார்கள் என்றும், இதுவே சித்தர்களின் ராஜ்யம் இப்பூமியில் நடைபெற உள்ளதற்காக முன் அறிகுறியாக அமையப் போகிறது என்று “ உண்மைகள் உறங்குவதில்லை “ என்ற தீர்க்க தரிசனத்தின் 2ம் பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தை சார்ந்த ஆன்மீகப் பெரியோர்கள் ஒரு புனிதரின் (இறைதூதுவர்) வருகையைப் பற்றி அதிகமாக பேசுவார்கள் என்றும், அது இக்காலக்கட்டமே என்று இரண்டாம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இறை தூதுவர் என்பவர் பிறக்க போவதில்லை என்றும், அவர் ஏற்கனவே பிறந்தவராக இருப்பார் என்ற ஒரு முக்கிய குறிப்பை இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இறை தூதுவர் பற்றி ஒரு அரிய குறிப்பை தருகிறது.


“ஸ்ரீகல்கி பகவான்“ அவதரிக்கும் பகுதி ஒரு பள்ளதாக்கு என்று பல ஆன்மீக அமைப்புகள் பல விடயங்கள் வாயிலாக குறிப்பிட்டு இருந்தாலும் அது அந்த இடம் இல்லை என இந்த இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி குறிப்பிடுகிறது.

அதாவது இறை அவதாரம் இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நடக்க உள்ளபோது அது தமிழகத்தின் மலை சார்ந்த ஒரு இடமாக இருக்கும் என்றும், மலைகள் சூழ்ந்த தரைப்பகுதியை அக்கால மக்கள் “பள்ளதாக்கு“ என்றே கூறுவார்கள் என்றும், அந்த பள்ளதாக்கு போன்ற பகுதியை கொண்ட தமிழகத்தின் ஒரு பகுதியிலே அவர் அவதரித்து வாழ்வார் என்று ஒரு குறிப்பை “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு பல அரிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

இனி உலக வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை தமிழகத்தின் பக்கமே இருக்கும் என்று தீர்க்க தரிசனங்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

மழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு...


ஆதார் அட்டையும் அக்கபோரும்...


நல்லா கேட்டுக்குங்க,

முதல்ல ஆதார் அட்டையும் வாக்காளர் அட்டையும் தாசிதார் ஆபிஸ் குடுத்து லிங்கபண்ணுங்க.

அப்புறம்?

வாக்காளர் அட்டையையும் ரேசன் அட்டையையும் சிவில் சப்ளை அலுவககத்தில் கொடுத்து லிங்க பண்ணுங்க.

அப்புறம்?

ரேசன் அட்டையையும் பான் கார்டையும் இன்காம் டாக்ஸ் ஆபிசில் கொடுத்தி லிங்க பண்ணுங்க.

சரி அப்புறம்?

ஆதார்கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல கொடுத்து லிங்க பண்ணுங்க.

ம்ம்ம் அப்புறம்?

பாஸ்புக்கையும்,கேஸ்புக்கையும் கேஸ் ஆபிஸ்கொடுத்து லிங்க பண்ணுங்க.

ஓஓஒ அப்புறம்?

பான்கார்டு , ரேசன்கார்டு, கேஸ்கார்டு, ஆதார்கார்டு, வோட்டர் ஐடி, பேங்க் பாஸ்புக்கு, கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு எல்லா கார்டையும் பாஸ்போர்ட் ஆபிஸ்சில் கொடுத்து லிங்க பண்ணுங்க.

ஐயையோ  அப்புறம்?

இதைஎல்லாம் லிங்க பண்ணி கலெக்டர் ஆபிசில் லெட்டர் கொடுத்தால் அவுங்க ரசீது  கொடுப்பாங்க, அதை எடுத்துகிட்டு வந்து மாநகராட்சி ஆபிசில் கொடுத்தால் அவர்கள் ஒரு கார்டு கொடுப்பார்கள்.

ஆஆ சூப்பர் இன்னோரு கார்டா?அப்புறம்?

அந்த கார்டை எடுத்துகொண்டு பல்லவன் சாலையில் உள்ள நம்ம” பாடிகார்டு” முனிஸ்வரன் கோவிலில்  டெய்லி காமிச்சால் ஒரு உண்டகட்டி சோறும் மசால்வடையும் தருவாங்க. அதை சாப்பிட்டால் எல்லா கார்டையும் நம்ம  பாடிகார்டு முனிஸ்வ்ரன் பார்த்துபார்......

அவ்வள்வு தான்...

திருட்டு திராவிடத்தின் 60 ஆண்டு சாதனை...


இதிலிருந்து நமக்கு புரிவது...

அன்றிலிருந்து, இன்று வரை சென்னையில் வெள்ளம் வந்து கொண்டேதான் இருக்கின்றது, அதற்க்கு நிரந்தர தீர்வை எந்த அரசும் செய்யவில்லை....

ஸ்டாலின் பேரனும் சென்னை வெள்ளத்தை பார்வையிடுவார்.....

தொடரும்......

தமிழகத்தில் அழிவது அமெரிக்காவில் வளர்கிறது...


இந்த காலத்திற்கு ஆங்கிலம் மட்டுமே போதும் என்று  பெரும்பான்மையான தமிழர்கள் கருதி, தமிழை ஒதுக்கி வைத்து, தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பை அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே  அழித்து கொண்டிருக்கிறார்கள்..

அதனால் தமிழகத்தில் தமிழ் மொழி அழியுது. அதே நேரத்தில் ஆங்கில  மற்றும் ஹிந்தி மொழி பயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது.

ஆனால் தமிழகத்தில் அழியும் தமிழ் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இதை நான் சொல்லவில்லை அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நிறுவனமான என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது

Jun 30 2015, 9:10 am ET Tamil Language SchoolsOn the Rise in United States தமிழகத்தில் ஆங்கில  மற்றும் ஹிந்தி மொழிபயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது.

தமிழகத்தில்  ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? 

அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தமிழ் மீதான ஒரு வகையான  அறுவருப்பு தமிழர்கள் மனதில் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது.

அதனால்தான் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மம்மி டாடி என்று  சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறோம்.

ஆனால் அதே நேரத்தில் புலம் பெயர்ந்து ஆங்கிலம் பேச கூடிய நாடுகளில் வசிக்கும் மக்கள் தாய்மொழியின் அருமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர்

அது மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக அதிகம் இங்குள்ள குழந்தைகள் ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழக்த்தில் இருந்து வரும் ஆங்கிலம் அதிகம் தெரியாத தாத்தா பாட்டிகளிடையே பேசுவது கடினமாக உள்ளது.

தாத்தா பாட்டியை விரும்பாத குழந்தைகளே இல்லை. அதனால் இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் தாங்கள் கற்றுதருவதைவிட ஏதாவது தமிழ் கற்றுக் கொடுக்கும் இடங்களில் படித்தால் மிக எளிதாக குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

இதனால்தான் என்னவோ  ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அநேக தமிழ் சங்கங்களும் அல்லது அங்குள்ள கோவில்களிலும் தமிழ் கற்று கொடுக்கப்படுகின்றன.

இப்படி கற்றுக் கொடுக்கும் குழுக்களில் 1998 ல் ஆரம்பிக்கபட்ட கலிபோர்னியா தமிழ் அகடமி  மிக சிறந்த இடத்தை பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த பள்ளிகளில் தமிழ்  பேசமட்டுமல்ல எழுத படிக்கவும் கற்று தருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இசை நடனம் நாடகம் போன்ற தமிழ் பண்பாட்டை போதிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து நடத்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது..

California Tamil Academy was founded in 1998 in the Bay Area, and now has six branches, 40 affiliated schools http://www.catamilacademy.org/branches.html in 13 other states and two other countries, 5,500 students, and 700 volunteers including teachers and parents. California Tamil Academy provides academic and technical support to help those who want to start independent Tamil schools. Some public schools give students high school credit for studying Tamil at language schools.

இந்த நிலமை நீடித்தால் வருங்காலத்தில் தமிழகத்தில் வளரும் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள அமெரிக்கா நோக்கி வந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை..

அது போல அமெரிக்கா குழந்தைகள் தண்ணி அடிக்க கற்றுக் கொள்ள தமிழகத்திற்கு தான் வர வேண்டி இருக்கும்... எப்படி ஒரு மாற்றம்...

முடி அடர்த்தியா வளரணுமா?


வீட்டிலேயே இருக்கு அருமையான மருந்து..

இவ்வுலகில் தலைமுடி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதவர்களே இருக்க முடியாது.

ஆனால், இன்றைய அவசரமான காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மிகுந்தளவில் மாசடைந்துள்ளது.

இதனால் ஸ்கால்ப்பில் அழுக்குகளின் தேக்கத்தால் தலைமுடி உதிர்வதை சந்தித்து, முடியின் அடர்த்தியை இழந்து இளம்வயதிலேயே வழுக்கை வந்துவிடுகிறது.

இதைத் தடுக்க பல ஹேர் லோசன்களை உபயோகப்படுத்தியும் பயனில்லாமல் மனமுடைந்து போயிருப்போம்.

ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு போடும் ஹேர் மாஸ்க்குகளில் உள்ள சத்துக்கள் தலைச்சருமத்திற்கு கிடைக்கிறதா என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.

இயற்கை பொருட்கள் கொண்டு வீட்டிலேயே ஹேர் லோசன்கள் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்..

ஆரஞ்சு/எலுமிச்சை - 1
வாழைப்பழம் - 1
பால் -2 லிட்டர்
அலுமினியத்தாள்

செய்முறை..

எழுமிச்சை/ ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து கொண்டு வாழைப்பழம் மற்றும் பாலை அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு, அரைத்து வைத்திருப்பதை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக 3 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, தலையில் அலுமினியத் தாளை சுற்றி குறைந்தது 30 நிமிடம் ஊற விட வேண்டும்.

30 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசி குளிக்க வேண்டும்.

இவ்வாறு வாரம் 2 தடவை செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்...

தமிழனும் இந்தியனும்...


தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை கேரள அரசு அதிரடி...


விபத்தில் சிக்குபவர்கள் உயிர் காக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அலைகழித்ததால் உயிர் இழந்தார்.

இதுபோல கேரளாவில் விபத்தில் சிக்கிய மேலும் சிலர் உடனடி சிகிச்சை கிடைக்காததால் உயிர் இழந்த சம்பவங்களும் நடந்தது.

இந்த சம்பவங்கள் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரை காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர், ஏழையா, பணக்காரரா? என்று பார்க்காமல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

முதலில் அதற்குரிய கட்டணத்தை அரசு செலுத்தும். அதன் பிறகு அந்த பணம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விபத்தில் சிக்குபவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது அதற்கும் பணம் வசூலிக்கக்கூடாது என்றும் பினராயி விஜயன் கூறினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விபத்தில் சிக்குபவர்கள் உடனடி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண குடிமகன் என்றாலும் பெரிய பணக்காரர் என்றாலும் எல்லோருடைய உயிரும் விலை மதிக்க முடியாததுதான். பணம் இல்லை என்பதற்காக இனி யாரும் உயிர் இழக்கக்கூடாது என்பதற்காக கேரள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பவர்களின் உடலை பணத்தை கட்டினால்தான் உறவினர்களிடம் ஒப்படைப்போம் என்று கூறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக உயிரை காக்க கேரள அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்...

பாஜக கலாட்டா...


திராவிட புரட்சி இது தான்...


அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....

அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...

ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாய மணம் முடித்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்றுக் கொள்ளவும் இல்லை ஏன் மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..

திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...

பாஜக மோடியும் டிஜிட்டல் இந்தியா விற்பனையும்...


திராவிடத்தை வீழ்த்துவோம்...


100 வருட திராவிட இயக்கம்
60 வருட திராவிட ஆளும் கட்சி எதிர்கட்சி, மூன்றாம் கட்சி என்று முழு ஆட்சி அதிகாரத்தில் இன்றும் இருந்து கொண்டு....

எத்தனை பிராமணர்களை திராவிடம் அழித்தது ?

எத்தனை தமிழர்களை அழித்தது?

1. 3 லட்ச்சம் தமிழர்கள் இனப் படுகொலை, 1000 தமிழ் மீனவர்கள் படுகொலை..

2. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஸ்டிரா, பர்மா, மலேசியாவில் தமிழர்களுக்கு அடி உதை..

3. தேவிகுளம், பீர்மேடு, காலகஸ்தி, திருப்பதி, சித்தூர், கோளார், வெங்களூர்.. ஆயிரக்கணக்கான தமிழர் நிலம் திராவிடர்களின் அபகறிப்பு..

4. கோடிக் கணக்கான தமிழர் நீர்நிலவளத்தை ஊழல், திருட்டு திராவிடர்களால் கொள்ளை, காவேரி, முல்லை, கிருஸ்ணா, கூடங்குளம், கச்சதீவு, மீத்தேன், பாறை எரிவாயுவு என்று நூற்றுகணக்கான ஆபத்து ?

தமிழர்களே சிந்தியுங்கள்....

திராவிடத்தையும், ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும் காப்போம் என்பது தெலுங்கு கன்னட மலையாளி ஆட்சியை காப்பதற்க்கா ?

அல்லது தமிழர் ஆட்சி அதிகார வளர்ச்சியை அழிப்பதற்க்கா ?

திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...


இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் கன்னட ஈ.வெ.ராவினால் செய்யப்பட்டதாம்..

உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.

இப்படித் தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.

அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.

மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.

வழைமை போல் திராவிடக் கட்டுக்கதையே இது...

இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.

அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி..

என்னவொரு கட்டுக் கதையப்பா..

ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?

தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்!

திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு..

தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...

திமுக வும் திருட்டு அரசியலும்...


இந்து தீவிரவாதம் என்று எப்படி சொல்லலாம் கமலை சுட்டுக்கொல்ல வேண்டும் - இந்து மகா சபை...


இதைத் தான்டா தீவிரவாதம்னு கமல் சொன்னாரு....

உடனே நிரூபிச்சிட்டீங்களேடா....

சென்னை மெரினா கடற்கரை...




நெல்லை TVS டயர் கம்பெனியில் டெங்கு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அங்கு டெங்கு கொசு உற்பத்தி ஆகும்படி டயர்கள் இருந்ததால், 5 லட்சம் அபராதம் விதித்தார்...


எல்லாம் மாயை...


இவர்களை பற்றி ஏன் நம் ஊடகம், அரசியல் கட்சிகள் பேசுவதில்லை...


நாம் பேசுவோம்... நீதியின் குரல் நீதியின் தலைமைக்கு எட்டட்டும்...

அதிமுக. கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்...


அ.தி.மு.க. கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–
நாங்கள் இருவரும் கட்சி விதிப்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டோம். தற்போது அ.தி.மு.க.வுக்கு விரோதமான செயல்பாடுகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 12.9.2017 அன்று அ.தி.மு.க. (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் நடத்திய பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, எங்களை பதவியில் இருந்து நீக்கியது உள்பட 12 தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளராக செம்மலை ஆகியோர் கட்சி உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் தொடர தடை விதிக்க வேண்டும்.

துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் சீனிவாசன் மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி, அபிராமபுரம் இந்தியன் வங்கி, கதீட்ரல் ரோடு பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில், வங்கி கணக்குகளை கையாள தடை விதிக்க வேண்டும். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மதுசூதனன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரது கட்டுப்பாட்டில் கட்சி ஆவணங்கள் வங்கி கணக்குகள், இதர வரவு–செலவு ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. இந்த ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் கட்சியின் 3 வங்கி கணக்குகளை கையாள தடை விதிக்க வேண்டும். வரவு–செலவு மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கட்சியின் 3 வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற 10–ந் தேதிக்குள் அ.தி.மு.க. தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்...

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும் - நம்மாழ்வார்...


நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா?


இந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும்..

அதன் பின் மயானமாகத் தோன்றும்..

அப்படி தோன்றவில்லை என்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்...

கடவுள் சிலை இல்லாத இடத்தை எப்படி கோவிலாக கருத முடியாதோ..

அது போலத் தான் பெண்கள் இல்லாத இடத்தையும் வீடாக கருத முடியாது...

தேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா.. மக்கள் கலை இலக்கிய கழகம் புதிய பாடல்...


அதிமுக தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி...


இந்த மூன்று பேருமே கெட்டவர்கள் தான்...

என்றாலும், இதில் அறவே புறக்கணிப்பட வேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.

மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றி கெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.

ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.

பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

அதன் பிறகு முடிவை மாற்றிக் கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.

அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இணைந்தவர்.

அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.

(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்).

இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.

மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.

(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள் தான்).

ஆனால், தினகரன் ஓரளவு வளைந்து கொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர், நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.

சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர். (சசிகலாவும் இதைப் போன்றவர் தான்).

அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.

இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.

மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்து போவதே முதல் விருப்பம்.

தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்து விட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டு விட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.

தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்...