10/01/2018

மலேசியாவில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி...


என்னுடைய இணையதள  ரசிகர் மன்றத்தின் முதல் உறுப்பினராக நான் ஏன் பெயரைப் பதிவு செய்துள்ளேன். இரண்டாவது உறுப்பினராக என் மனைவி லதாவும், மூன்றாவது என் பெரிய மகள் ஐஸ்வர்யா, அடுத்து சௌந்தர்யா, ஐந்தாவது ரசிகராக எனது மருமகன் தனுஷும் ஆறாவது அனிருத்தும், ஏழாவது ரசிகராக என் அண்ணன் சத்திய நாராயண ராவ், அடுத்தடுத்து அவர் குடும்பத்தாரும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

தமிழக வாக்காளர்களுக்கு மட்டும் தான், தமிழக தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களுக்கு மட்டும் தான்,  இந்த இணையதளமே ஒழிய தமிழகத்துக்கு வெளியில் இருக்கும், ரஜினி ரசிகர்களுக்கோ, மற்ற நாடுகளில் இருப்பவர்களுக்கோ அல்ல... ஆதலால் மலேசிய ரசிகர்கள் இதில் பதிய வேண்டாம். என்று சொன்னார்.

சுமார் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அரங்கில் வெறும் எட்டாயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்கிற நிலையில் இந்த மலேசிய பயணம் வெற்றி அடைந்துள்ளதா, எதிர்பார்த்த நிதி சேர்ந்துள்ளதா ?  என்ற பத்தியறிக்கையாளர்களின் கேள்விக்கு..

நடிக்கற்ற விஷாலை கோபமாக திரும்பிப்பார்த்த ரஜினி, இந்த மலேசிய பயணம் மாபெரும் வெற்றி. நிதி எவ்வளவு வந்துள்ளது என்று எனக்கு தெரியாது. என்று சொல்லி விட்டு திரும்ப நடந்தார் ரஜினி...

குடிநீர் வசதி மற்றும் கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரி மாணவ மாணவிகள் வகுப்பறை புறக்கணிப்பு...


சிதம்பரம் அருகே C.முட்லூர் அரசுகலைகல்லூரி யில் 2000 த்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததை கண்டித்தும்... கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தியும்...

இதனை பராமரிக்க மாணவ மாணவிகளிடம் ஒரு மாணவர்க்கு தலா 30ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுவதை கண்டித்தும்... வகுப்புகளை புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது...

இயற்கையை காப்போம்...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு...


கடந்த 20 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும்
கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு...

உளவியல் உண்மைகள்...


யார் தமிழன்? என்று எவனெல்லாம் கேட்கிறானோ அவனெல்லாம் வந்தேறி...


நீ மட்டும் தான் தமிழனா? என்று கேட்பவன் வந்தேறிமகன்...

எந்த தமிழனுக்கும் தான் ஒரு தமிழனா? என்ற ஐயம் வருவதில்லை..

95% தமிழர்கள் இன அடையாளத்தோடு இருக்கிறார்கள்..

மீதி 5% தமிழர்களை 95% தமிழருடன் குழப்பும் செயலுக்குப் பெயர்தான் வந்தேறித்தனம்..

தமிழ் அடையாளத்தை கேள்விக்குறி ஆக்குவது ஒவ்வொரு தமிழனின் தாயினுடைய கற்பை கேலி செய்வது போல் ஆகும்.

பிறப்புவழித் தமிழனே தமிழன்.

உயிர் நண்பனே ஆனாலும் அப்பன் சொத்தில் பங்கு கிடையாது.பிறகு பிழைக்க வந்த அகதிக்கு எதற்கு பங்கு?

தமிழ் மண்ணைத் தமிழன் தான் ஆளவேண்டும்.

பிழைக்க வந்தவன் பிழைத்துக்கொள். பிறகு உன் நாட்டிற்கு திரும்பி விட வேண்டும்.

இங்கே குடித்தனம் குடியுரிமை எதுவும் கிடையாது.

உண்மையான தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்த தமிழன் வந்தேறித்தனம் செய்யும் அகதிகளை சும்மா விடக்கூடாது...

தமிழக ஊழல் அரசிற்கு செருப்படி...


மெரீனா போராட்ட இளைஞர்கள்...


தற்போது எல்லாம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு கூட்டங்களின் அலறல் சத்தத்தை அதிகமாக கேட்க முடிகிறது...


ஏனெனில் தமிழர்களை இனி ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது... அவர்கள் இனம் ரீதியாக சிந்தித்து செயல்பட தொடங்கி விட்டனர் என்ற அலறல் சத்தம் மிக அதிகமாக கேட்க முடிகிறது...

ஆந்திராவில் உள்ள தமிழர்களுக்கு எந்த உரிமையும் தெலுங்கர்கள் தர மாட்டார்களாம்... ஆனால் தமிழன் மட்டும் இங்கு அனைத்து உரிமையை கொடுக்கனுமாம்...

கேட்டால் இங்கயே பிறந்து வளர்ந்தார்களாம்...

இதையே தானே அங்கு பிறந்து வளர்ந்த தமிழர்கள் கேட்கிறார்கள்...

திராவிடம்.. இந்தியம்.. கம்யூனிசம்.. தலித்தியம்.. மதம்.. போன்ற ஏமாற்று அரசியல் ரீதிரியாக இனி தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது...

எப்படி பக்கத்து வீட்டில் பல காலமாக வாழுவதால்.. அந்த வீட்டின் உரிமையாளனை உங்க தந்தையாக மாற்றிக் கொண்டு வீட்டின் உரிமையை கேட்பது போல் உள்ளது...

இது எப்படிப்பட்ட கேவலம்.. சிந்தியுங்கள்...

தமிழர்களை சாதியர்களாக பிரித்து ஆள நினக்கும் திராவிட-ஆரிய நரிகளுக்கு செருப்படி தந்த சுவரொட்டி..


தமிழர்களாக இணைந்தால் சாதிய உணர்வுகள் செத்து வீழும்...

தமிழர்களும்... பருவக் காற்றும்..


தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர். டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்.

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?

அரசு போக்குவரத்து துறையை.. தனியார் மயமாக மாற்றவே.. அனைத்துமே திட்டமிட்டு நடக்கிறது...


கோவை மாணவர்கள் நடத்திய ரேக்ளா ரேஸ்...


அப்போது தெரியவில்லை கிளம்பும் போது அப்படியோர் அதிர்ச்சி காத்திருக்கிறது என்று. அதை ஓட்டிக் கொண்டு வந்தவர்களை ஓரங்கட்டி பேசினேன்.

என்னப்பா ஃபோட்டோ புடிச்சு கேஸ் போடப்போறியா? அந்த கேமராவக் கொண்டுவா..  என்று கோபமாக வந்தவர்கள், பந்தயம் நடத்தும் கிளப்காரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேசத் தொடங்கினர்.

உங்கள் எல்லாருக்கும் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று தெரியும். ஆனால் ரேக்ளா பந்தயம் பற்றி உங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. நாட்டு மாடுகள் மற்றும் பசுக்களை காப்பதில் இந்த ரேக்ளா பந்தயத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதை, இந்தப் பந்தயம் தடை செய்யப்பட்ட பிறகுதான் தெரிந்துகொண்டோம். அதுவரை நாங்கள் உண்டு, எங்கள் மாடுகள் உண்டு என்றிருந்தோம். என்றவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டோம்.

11AA என்று எழுதிக்கொள்ளுங்கள் என்றார். அது அவருடைய வண்டியின் பந்தய எண்.

ரேக்ளா பந்தயம் என்பது மாட்டு வண்டி ரேஸ்தான். ஆனால், அதை அவ்வளவுதான் என்று எளிதாக விட்டுவிடமுடியாது. ஏனெனில் ஜல்லிக்கட்டுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விளையாட்டு இந்த ரேக்ளா பந்தயம்.

நீதிமன்றம் இதை தடை செஞ்சவுடன், காளை வளர்க்க முடியாதவன்லாம் அடிமாட்டுக்கு வித்தான். ஆசை ஆசையா வளர்த்த காளைய கறிக்கடைக்குக் கூட்டிப்போறத பார்த்தா சாகத்தோணும். பல பேரு பல்லக்கடிச்சிட்டு , தனக்கு இல்லைனாலும் மாட்டுக்கு மூனு வேளையும் பருத்திப் புண்ணாக்குன்னு போட்டு வளர்த்தான். இப்ப இந்தா நிக்குது பாருங்க, இது ரேக்ளா ரேஸ்ல 5வது பரிசு வாங்கிச்சு. இந்த வருஷமும் தடை இருந்திருந்தா நானும் மாட்டை வித்துட்டுதான் போயிருக்கணும்” என்று சொல்லிவிட்டு மாட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார் 11AA.

கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது நாட்டு மாடுகள் கண்காட்சியும், ரேக்ளா பந்தயமும். இந்த ரேக்ளா பந்தயத்தின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. பொதுவாக காளைகளை வளர்ப்போர் பொங்கல் திருநாளன்று தங்களது காளைகளை ஊருக்கே காட்சிப்படுத்துவர். ஒரு குடும்பத்தின் கம்பீரம் என்பது அவர்கள் வளர்க்கும் காளைகளின் கம்பீரத்தை பொருத்தே கணிக்கப்படும். அப்படி இருக்கும்போது, தங்களுடைய காளைகளை கவுரவப்படுத்தும் விதமாக ஒரு பந்தயம் நடத்தி, அதில் தங்கள் காளைகளின் வீரத்தை வெளிப்படுத்தும் வழக்கமும், அம்மாடுகளுக்கு நன்றி சொல்லும்விதமாக மாட்டுப்  பொங்களன்று அந்த விளையாட்டுகளை நடத்துவதும் தமிழர்களின் வழக்கமாக இருந்துவந்துள்ளது. இது ஒரு விளையாட்டு என்பதைத்தாண்டி காளைகளை கவுரவப்படுத்தும் விழாவாகவே கடைபிடித்து வரப்பட்டது. விலங்குகளை காட்சிபடுத்துதல் சட்டத்தின் கீழ் காளைகளை கொண்டு வந்ததை சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதைப்போலவே, நாட்டு மாடுகள் சம்பந்தப்பட்ட மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற அனைத்து விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டன. அதிலும் ஜல்லிக்கட்டைப் போலவே ரேக்ளா பந்தயங்களிலும் மாடுகளுக்குச் சாராயம் கொடுக்கப்படுகிறது, தார் முள் மற்றும் கரன்ட்டு பெட்டி வைத்து குத்தி துன்புறுத்துகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை முறை படுத்தி மாடுகள் சோதிக்கப்பட்டு, தார் முள், கரன்ட் பெட்டி ஆகியன தடை செய்து ஒரு நெறிமுறைக்குள் கொண்டுவரப்பட்டது இந்த ரேக்ளா பந்தயம்.

ரேக்ளா : தற்போது ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கிய நிலையில், ரேக்ளா பந்தயத்துக்கு இன்னும் சிக்கல் நீடிக்கிறது என்றும் தொடர்ந்து ஸ்டே ஆர்டர் வாங்கி வழக்கு நடத்துவதே வேலையாக இருக்கிறது என்றும் வேதனைப்படுகிறார், ரேக்ளா பந்தயங்களுக்குக் குரல் கொடுத்துவரும் வக்கீல் செந்தில்குமார்.

அரசாங்கம் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அழிக்கிறது. மாடுகளை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவர்கள்தாம்  மாடுகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை இயற்றி வருகின்றனர். நீங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பாரம்பர்ய விளையாட்டுகளை அழித்துக்கொண்டே வந்தால், அழிவது நாட்டுமாடுகள் மட்டுமல்ல. நம் பாரம்பர்யமும் ஆரோக்கியமும்தாம். 

நாங்கள் உங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்கள் மாடுகளை வளர்க்க பணம் கேட்கவில்லை. எங்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுங்கள். உங்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் போதும். எங்கள் மாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம், என்றார்.

அவரைக் கடந்ததும் இளைஞர்களின் மறைவில் ஒரு பெரிய காளை கம்பீரமாக நடந்து வந்தது. 20களில் இருக்கும் அந்த இளைஞர்களின் பிடியில் ஒரு சிங்கத்தை வீழ்த்தும் கம்பீரத்துடன் நின்ற காளையைக் கண்டால் வியப்பை தவிர வேறு வார்த்தை வரவில்லை.
இந்தப் பொடியன்கள் வளர்த்த காளையா என்று ஆச்சர்யமாக இருந்தது. நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கோவையை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் நண்பர்கள் எனத் தெரிந்தது.

இந்தத் தடை குறித்து விசாரித்தபோது, சும்மா போராட்டம் மட்டும் செஞ்சுட்டு எவனோ மாட்டை பாத்துக்குவான்னு விடக் கூடாது. அதை காப்பாத்தறதுல நமக்கும் பங்கு இருக்கு. அதான், நாங்க நண்பர்களா சேர்ந்து ஒரு ஜோடி நாட்டுக் காளைகளை வாங்கி வளர்த்துட்டுருக்கோம். ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு என்னவேணாலும் பேசுவாங்க, சட்டம் போடுவாங்க. வந்து நம்ம மாட்ட தொடச் சொல்லுங்க பார்ப்போம். தடை சொல்லுறவங்க இந்த மாட்டை தொட்டுட்டா தடையை ஏத்துக்குறோம். இனியும் பார்த்துட்டே இருந்த நமக்கு அடுத்த ஜெனரேஷன் மாடுகளை போட்டோலதான் பாத்துட்டு இருக்கும் ப்ரோ..” என்றனர்.

சிலிர்த்துவிட்டது. ஒரு யுகம் களத்தில் இறங்கிவிட்டது. இதற்கும் தடை என்று தீர்ப்பு வந்தால், தயாராகிக் கொள்ளுங்கள். பொங்கலில் இனியொரு போராட்டத்திற்கு...

விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநராக சேர்ந்த மளிகை கடைக்காரர் ஓட்டிச் சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்தது...


நுரையீரல் சளி நீங்க...


இரயில் தண்டவாளத்தில் இணைப்பு கழன்றது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்ப்பு...


வேலூர் மாவட்டம் காட்பாடி முதல் ஜோலார்பேட்டை வரை செல்லும் ரயில் மார்க்கத்தில் குடியாத்தம் அடுத்த காவனூர் பகுதியில் இரயில் தண்டவாளத்தின் இணைப்பு கழன்றதால் அந்த வழிதடத்தில் செல்லும் இரயில்கள் நிறுத்தப்பட்டு பழுது சரி செய்த பின்னர் பின்னர் காலதாமதமாக சென்றன.

காவனூர் இரயில் நிலையத்தில் இருந்து பணியாளர்கள் இன்று காலை வழக்கமான  தண்டவாள ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது காவனூர் இரயில் நிலையத்திற்க்கு சற்று தூரத்தில் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் தண்டவாளத்தின் இணைப்பு கழன்று இருப்பதை கண்டு விரைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில்.  அந்த மார்க்கத்தில் இரயில்கள் நிறுத்தப்பட்டு, காட்பாடியில் இருந்து அதிகாரிகள் விரைந்து வந்து பழுதான தண்டவாள இணைப்பை  தற்காலிகமாக சரி செய்தனர்.

அதன் பின் நிறுத்தப்பட்டிருந்த இரயில்கள் சுமார் இரண்டு மணிநேரம்  கால தாமதமாக  மிகவும்  நிதானமாக  சென்றன.  சரக்கு இரயில்கள் மற்றும்  சென்னை  பெங்களூர் விரைவு  இரயில்  மற்றும் இரண்டு  அடுக்கு  விரைவு  இரயிலும்  இதில்  அடக்கம்...

வர்த்தக துறைமுகம் வரக் கூடாது என போராடுபவர்களுக்கு பின்னால் தேசவிரோத கும்பல் - தமிழின விரோதி பொறி உருண்டை எனும் பொன் ராதாகிருஷ்ணன்...


மனதுக்கு ஏது மருந்து ?


ஒரு துயரத்தை தாங்க முடியாமல் சமாளிக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு துயரம் இடி போல் விழும்போது என்ன செய்ய முடியும்...

மனப்பாரத்தை துலாபாரத்தில் நிறுத்தி  இரண்டையும் எடை போடுவோம் பாருங்கள்...

அப்போது தெரியும் நம் இதயத்தின் பலம் என்ன என்று...

ஒரு துயரத்தில் இருக்கும் போது துடிக்கும் நாம்... இரு துயரத்தை  கையாளும் போது நீதிபதி ஆகிறோம்....

அப்போது ஒரு உண்மை... புத்தனாக ஞானம் பிறக்கும்.

இதுவும் கடந்து போகும்....

உயிரும் ஒரு நாள் உடலை கடந்து போகும் என்ற உண்மை உணர்வோம்...

பிரச்சினைகளை உருவாக்குவதும் நாமே....

பிரச்சினைகளை களை  எடுப்பதும் நாமே....

ஆகவே தேவையற்றதை நீக்குவோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் ,
எல்லாமே தேவையற்றது என்ற உண்மை புரியும்.

நாம் யோசிக்க மறுப்பதால்தான், எல்லாமே தேவையானதாகிறது...

மாற்றங்களை நோக்கிய நமது பயணம், தோல் சுருங்கும் வரை தொடர்கிறது....

இதயம் சுருங்கி விரியும் வரை நிகழ்கிறது....

இடையே வரும் இடியும் ,மின்னலும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது...

எதையும் தாங்கும் இதயம் நம்முடன் இருப்பதை உணர்வோம்...

தியேட்டர் தேசபக்திக்கு குட்பாய்.. திரையரங்கில் தேசியகீதம் கட்டாயமில்லை மத்திய அரசு...


திரையரங்கில் தேசிய கீதம் பாட கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திரையங்கில் தேசிய கீதத்தை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொது மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில்: திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை அளித்து முடிவு செய்யும் வரை திரையரங்கில் தேசிய கீதம் பாட கட்டாயம் இல்லை' என பதிலளித்துள்ளது...

விடுதலைப் புலிகள் - அண்ணன் பிரிகேடியர் பால்ராஜ்...


தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்...


உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு.

நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில்.

இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் இந்திய துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம்...

ஆமாம் சோழர்கள், பாண்டியர், சேரர்  முதல் தமிழ் ஈழ விடுதலைப்  புலிகள் வரைதான்.

அன்று நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று நாணயம் உலகின் வலிமையான ராணுவம் என அனைத்தும் நம்மிடம் இருந்த காலத்தில் எவனும் நம்மை கனவிலும் சீண்ட நினைத்ததில்லை, அப்படியே அவர்கள் சீன்டினாலும் அவர்களை நாம் சும்மா விட்டதில்லை.

நம்முடன் அனைத்தும் இருந்தபோது நாம் சுதந்திரமாக உலாவினோம், இந்தியப் பெருங்கடல், சேது சமுத்திரம், வங்கக் கடல் என அனைத்தும் நாம் தான் ராஜா, நம்மை ஏன் என்று கேட்க எவனும் இல்லை. அப்படியே கேட்டாலும் அவன் உயிர் அவனுக்கில்லை. அப்படி இருந்த நம் தமிழ் இனம் இன்று எப்படி எல்லாமோ ஆகி விட்டது.

நம் வரலாற்றில் நிறைய உதாரணங்களை நாம் கூறலாம், தமிழ் வணிகர்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தியதற்க்கு தென் கிழக்கு ஆசியாவையே அதிர வைத்தான் நம் ராஜ ராஜன், தமிழைப் பழிப்பின் தாய் தடுப்பினும் மிதிப்பேன் என்று வட இந்தியாவையும் வெற்றி கொண்டான் அந்த தமிழ்ப்புலி.

பருவ  மழை பொய்த்த சமயத்தில் ஒரு முறை கர்நாடக மன்னன் காவிரியைத் தடுத்து விட்டான், தமிழக வயல்கள் காயும் நிலைமை சோழன் எப்படியோ கேட்டுப் பார்த்தான், பேசிப் பார்த்தான் அவன் மசியவில்லை. உடனே இவன் படையை கிளப்பிக் கொண்டு காவிரி மேல் இருந்த அணையை உடைத்துவிட்டு, அவன் தேசத்தையே நிர்மூலமாக்கிவிட்டு வந்தான் ராஜ ராஜனின் பேரன்.

தமிழிற்கும், தமிழனுக்கும்  மதிப்பளிக்க வில்லை என்று இமயம் வரை சென்று வெற்றிக் கோடி நாட்டினான் தமிழ் ஆண்ட சேர மன்னன.

இவர்கள் உடலில் ஓடியதும் தமிழ் இரத்தம் தான், நம் உடலில் ஓடுவதும் அதே இரத்தம் தான். என்ன கொஞ்சம் சூடு, சொரணை எல்லாம் காலப்போக்கில் கரைத்து விட்டோம்.

தண்ணீர், உணவு, உரிமை என அனைத்திற்கும் நாம் மற்றவனையே எதிர்பார்க்கும் நிலை ஆகிவிட்டது.

நாம் வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்த காலம் போய், நாம் இன்று பலரிடம் தஞ்சம் புகும் காலமாகி விட்டது. வருத்தம் தான்.

தற்ச்செயலாக மொரிசியஸ் நாட்டு நாணயங்களை பார்க்க நேரிட்டது, அதில் உள்ள அனைத்தும் தமிழ். தமிழிற்கு அவ்வளவு முக்கியத்துவம், எண்களும் தமிழ். எழுத்தும் தமிழ்.

எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எங்களைத் தெரியும்.

௦,௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯ நம்மில் பலர் இதனை காலம் கடந்தே அறிந்துள்ளோம். இப்படி தமிழ் எழுத்தில் என்னுருக்கள் உண்டா என்று கேட்போம்.

காலத்தின் கொடுமை...

மொரிசியசின் எந்த நோட்டுகளை எடுத்தாலும் அதில் தமிழ் இன்றி இருக்காது.

அங்கு தமிழிற்கு அவ்வளவு மதிப்பு. நாம் இங்கு ஒவ்வொன்றிக்கும் ஹிந்திக்காரனிடம் கை எந்துகிறோம், புலம் பெயர் தமிழ் உறவுகளோ நம் தமிழிற்கு மிகச் சிறந்த அருமையான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாராட்டத் தக்கது.

பிறந்த ஆறு மாத குழந்தைக்கு A,B,C,D கற்றுக் கொடுக்கும் தேசமாகிவிட்டது நம் தமிழ் என்பது தான் பெரும் வருத்தமாக உள்ளது...

அனைத்துமே திட்டமிட்டு நடக்கிறது...


தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன தமிழரின் அலங்கு நாய்...


தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்.

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..

சோழர்களின் படைகளில் இவைகள் காவல், மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….

தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…

நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்…

தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…

நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது.

உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப்படம் அலங்கு நாய்தான் என்பது உறுதியாகிறது.

கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு..

வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார். தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசுதான்.

இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்.

ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.

தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்.

இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு, இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.

அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.

இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை. ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது. அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை. இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு. செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...

சளியைத் தூரத்தும் வெற்றிலை...


ஜப்பானின் பிரபல உணவகத்தின் உரிமையாளர் ஒருவர் நீல நிற டூனா என்ற மீனை ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார்...


ஜப்பானில் சர்வதேச உணவகமான சுஷி என்ற உணவகத்தின் உரிமையாளர் ஓண்டியரா நீல நிற டூனா என்ற மீனை 36.45 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.2.04 கோடியாகும்.

இந்த நீல நிற டூனா மீன் பசிபிக் கடலில்தான் கிடைக்கும். இது சுமார் 405 கிலோ எடை கொண்டது. மிகப்பெரிய தொகை கொடுத்து இந்த மீனை வாங்கிய உணவகத்தின் உரிமையாளரைப் பற்றிய செய்திகள் ஜப்பானிய சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த மீனுக்கு மக்கள் போட்டிபோட்டு வருகின்றனர். ஜப்பானின் மிகவும் பிரபலமான மீன் மார்க்கெட்டில்தான் இது கிடைக்கும். அங்கு இதைவிட அதிக விலையிலும் மீன்களும் விற்கப்படுகிறது. ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மீனை பார்க்காமல் செல்ல மாட்டார்கள்...

தண்ணீர்...


ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.

1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும்.

ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்...