10/01/2018

மலேசியாவில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி...


என்னுடைய இணையதள  ரசிகர் மன்றத்தின் முதல் உறுப்பினராக நான் ஏன் பெயரைப் பதிவு செய்துள்ளேன். இரண்டாவது உறுப்பினராக என் மனைவி லதாவும், மூன்றாவது என் பெரிய மகள் ஐஸ்வர்யா, அடுத்து சௌந்தர்யா, ஐந்தாவது ரசிகராக எனது மருமகன் தனுஷும் ஆறாவது அனிருத்தும், ஏழாவது ரசிகராக என் அண்ணன் சத்திய நாராயண ராவ், அடுத்தடுத்து அவர் குடும்பத்தாரும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

தமிழக வாக்காளர்களுக்கு மட்டும் தான், தமிழக தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களுக்கு மட்டும் தான்,  இந்த இணையதளமே ஒழிய தமிழகத்துக்கு வெளியில் இருக்கும், ரஜினி ரசிகர்களுக்கோ, மற்ற நாடுகளில் இருப்பவர்களுக்கோ அல்ல... ஆதலால் மலேசிய ரசிகர்கள் இதில் பதிய வேண்டாம். என்று சொன்னார்.

சுமார் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அரங்கில் வெறும் எட்டாயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்கிற நிலையில் இந்த மலேசிய பயணம் வெற்றி அடைந்துள்ளதா, எதிர்பார்த்த நிதி சேர்ந்துள்ளதா ?  என்ற பத்தியறிக்கையாளர்களின் கேள்விக்கு..

நடிக்கற்ற விஷாலை கோபமாக திரும்பிப்பார்த்த ரஜினி, இந்த மலேசிய பயணம் மாபெரும் வெற்றி. நிதி எவ்வளவு வந்துள்ளது என்று எனக்கு தெரியாது. என்று சொல்லி விட்டு திரும்ப நடந்தார் ரஜினி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.