18/07/2017

ஆடி மாதமும் இரகசியமும்...


ஆரிய பிராமணன் போல அயோக்கியத்தனமான கும்பல் வேறு எங்கும் இருக்க முடியாது...

திருமணமானவர்கள்   ஆடி மாதம் பிரிந்து இருக்க வேண்டும், ஆடி மாதத்தில் கல்யாணம் செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லி விட்டு, அவர்கள் மட்டும் மொத்தமாக ஆடி  மாதத்தில் கல்யாணம் நடத்திக்கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் மற்றவர்கள் கல்யாணம் செய்துக் கொள்வதை தடுத்து, கல்யாண மண்டபத்துக்கான 'டிமாண்டை' குறைத்து விட்டு, பிராமணர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை எந்த பிரச்னைகளுமில்லாமல் ஆடி மாதத்தில் நடத்தி முடித்துக் கொள்வார்கள்.

ஆடியில் தங்கள் பிள்ளைகளை சேர விட்டு, அடுத்த சித்திரையில் வெயில் நேரத்தில் குழந்தைகளை எந்த பிரச்சினையுமில்லாமல் பெற்றுக் எடுப்பார்கள்.

ஆனால் நமக்கு மட்டும் ஆடியில் சேராதே, சேர்ந்தால் சித்திரையில் வெயில் நேரத்தில் பிள்ளை  பிறக்கும், வெயில் என்பது கொடும் கிருமிகளின் காலம், கொள்ளை  நோய்களுக்கு நேரம் என்றெல்லாம் பீதி கிளப்பி விடுவார்கள்.

இதன் மூலம் மருத்துவமனைகளில் 'டிமாண்ட்'  குறைந்து அவர்கள் மட்டும் அழகாய் குழந்தைகள் பெற்றுத்திரும்புவார்கள்.  நாம் பிள்ளைப்பெற போனாலோ, அங்கே கூட்டம் கும்மிக்கிடந்து,  படுக்கப்  பாய் கூட இருக்காது.

இப்படி சாஸ்திரத்தின் பேரால், நமக்கு கேடு சொல்லி, அவர்கள் நன்றாக இருந்துக்கொள்வார்கள்.

ஆகவே சாஸ்திரங்கள் நமக்கானவை அல்ல. அது அவர்களுக்கானது. அதை நாம் பின்பற்றத் தேவையில்லை.

ஆகவே ஆடி மாதம் அருமை மாதம். அம்மனுக்கு உகந்த மாதம் அந்த மாதத்தில் கூடி, சித்திரையில் பிள்ளைப்பெற்றால் நம்மை பெற்ற ஆத்தைக்கு , அம்மனுக்கு அதை விட சந்தோஷமில்லை...

ஆரிய பிராமணர்களின் இன்னொரு அயோக்கியத்தனம், சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறித்து கொடுப்பது...


தமிழர்கள் என்றால், திருமண முகூர்த்தம்  காலை 6  மணி, 8  மணி, 10  மணி... . சாந்தி முகூர்த்தம் இரவு 10  மணி, 11 மணி.இரண்டு முகூர்த்தத்துக்கும் இடைவெளி நேரம் 10 மணி நேரத்துக்கும் மேல் .

அவர்களுக்கு என்றால், தாலி முகூர்த்தம் இரவு 11 மணி, 12  மணி... சாந்தி முகூர்த்தம்  காலை 4  மணி, 4 30   மணி. 5  மணி. இடைவெளி நேரம் 2  அலலது 3  மணி நேரம் மட்டுமே.

இதில் அதிக இடைவெளி தமிழர்களின் வீச்சைக் குறைத்து விடும்.  பிரமணர்கள் முழு வீச்சோடு இருப்பார்கள்.

இரண்டாவது, காலை நேரம்தான் உடலுறவு கொள்ள நல்ல நேரம். முன்னிரவு தூக்க நேரம் . அந்த நேரத்தில் உடல் தூக்கத்துக்கு எங்கும். அந்த நேரத்தில் சரியாக இருக்காது. அந்த காலத்தில் உறவு கொண்டு பிறக்கும் குழந்தைகள் மந்தகதியாகவே இருக்கும்.

காலை நேரத்தில் உடல் முழு விழிப்புடன் இருக்கும். களைப்பு நீங்கி சுறுசுறுப்பில்  திளைக்கும். இதை நீங்களே உணரலாம். அதுவுமில்லாமல், காலை 4  மணி என்பது பிரம்மா முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரம். அந்த நேரத்தில் உடலுறவு கொள்வதும், பிள்ளை பேற்றுக்கு விழைவதும்,   அம்சமான குழந்தைகள் பெறுவதற்கு உகந்ததாக இருக்கும்.

ஆகவே இனி தமிழர்கள் முன்னிரவு நேரத்தில் காதல் கொல்வதைத் தவிர்த்து,  காலை நேரத்தில் உடல் இணங்கி சேருங்கள். பிராமணர் நேரக்குறிப்பைத் தவிருங்கள்...

மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்தாலோ துண்டுபிரசுரம் கொடுத்தாலே குண்டர் சட்டத்தை தவறாக பிரயோகிப்பது வாடிக்கையாகி விட்டது...



தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன்,இளமாறன், அருண் போன்றவர்கள் வரிசையில் தற்போது தோழர் வளர்மதி அவர்களை பொய்குற்றசாட்டின் பெயரால் குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருப்பது அதிகாரவர்கத்தின் வரம்புமீறியசெயல் இதை ஜனநாயகத்தில் நம்பிக்யைுள்ளவர்கள் ஒருங்கிணைந்து கண்டிப்போம் தோழர்.வளர்மதி விடுதலைக்காக குரல் கொடுப்போம்.
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த மாணவிக்கு குண்டாஸ்..

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக, சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர்.

இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சேலம் சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் மாணவி வளர்மதி.

இந்நிலையில், வளர்மதி மீது இன்று காலை குண்டாஸ் வழக்கு பாய்ந்துள்ளது.

இதையடுத்து அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்...

உணவு பொருட்களை எழுத்துக்கள் அச்சிடப்பட்ட பேப்பரில் மடித்து கொடுக்க தடை - கேரள அரசு உத்தரவு...


பேப்பரில் அச்சடிப்பட்டுள்ள மையில் உள்ள வேதிப் பொருட்கள் வேர்கடலை சுண்டல் போன்ற உணவு பொருட்களில் கலந்து அதனால் நோய்கள் ஏற்படுகின்றன என புகார்கள் எழுந்தவுடன் கேரள அரசின் உணவு கட்டுப்பாட்டு துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது...

நெல்லையில் 3 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்...


மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகில் மார்வாடி செயின் கோயில் கட்டுகிறானாம்...


பிற்போக்குத்தனமான பாஜக அரசின் அடுத்த புறம்போக்குத்தனம் மத்திய பிரதேசத்தில் ஆரம்பம்...


அரசு மருத்துவமனைகளில்,  நோயாளிகளின் ஜாதகங்களை ஆராய்ந்து மருத்துவர்களுக்கு உதவி புரிய ஜோஸ்யக்காரர்களும் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நோயாளிக்கு  இந்த நோய் ஏன் வந்தது, என்ன பாவம் செய்தார் ? அந்தப் பாவம் முன் ஜென்மத்தில் செய்யப்பட்டதா, இப்பிறப்பில் செய்யப்பட்டதா ? இதற்கு மருத்துவம் அல்லாத பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா ? இல்லை மருத்துவம் தான் செய்ய வேண்டுமா ? இந்த பாவத்துக்கு இவர்  இனியும் வாழ வேண்டுமா, இல்லை கைவிடப்பட வேண்டுமா ? இவருக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் ? சிகிச்சைக்கான நல்ல நேரம் எது ?அறுவை சிகிச்சைக்கான நல்ல நேரம் எது ? அறுவை சிகிச்சை வெற்றி குறித்து நோயாளியின் கிரக நிலைகள் என்ன சொல்லுகின்றன ? மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு பூஜைகள், மந்திரங்கள், யாகங்கள் செய்யப்பட வேண்டுமா ? என்றெல்லாம் இந்த ஜோஸ்யக்காரர்கள் நோயாளிகளுக்கு ஆலோசனை கொடுப்பார்கள் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து இருக்கிறார்.

இதிலிருந்து, மத்திய மோடி அரசு, வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிக்கொண்டு எந்த அளவுக்கு  பிற்போக்குத்தனமான செய்லகளை மக்களிடம் புகுத்தி வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். மோடி  ஒரு பேத்தனமான ஆள் என்பதை இனியேனும் உணருங்கள்...

தீர்க்க தரிசி எரிக்கின் தவறும் மரணமும்...


எரிக் தனது வாழ்வின் உச்சத்தில் இருந்தார்.  அதிகாரமிகுந்த நண்பர்களின் நட்ப்புணர்வுடன் செல்வாக்கு மிகுந்தவராக , 1933 இல் ஹிட்லர் நாஜிக்களின் தலைவரானபோது நாஜி நண்பர்களோடு தனது வலிமை உயர்வதை அறிந்திருந்தார்.

இந்த நம்பிக்கை எரிக்கினை தவறு செய்ய தூண்டியது ,வினாச காலம் விபரீத புத்தி என்பதற்கு ஏற்ப எரிக் தவறான முன்னவரிப்புகள் கொடுத்தார்.

தனது மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்எரிக் தன்னால் ஒரு கட்டிடம் அதுவும் சிறப்பு மிகுந்த கட்டிடம் தீப்பற்றி கொள்வதாகவும் ,கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாளைகளையும் எங்கும் புகை மண்டலமாகவும் ,அதே சமயம் அதன் சாம்பலில் இருந்து அந்த கட்டிடம், புதிய ஒளியுடனும் நம்பிக்கையுடனும் பீனிக்ஸ் பறவை போல எழுவதை காணுவதாகவும் எரிக் கூறுகிறார்.

இந்த கணிப்பு சரியாக 1933 மாதம் 27 தேதி நடேந்தேருகிறது ,ஜெர்மானிய பாராளுமன்ற கட்டிடமாகிய ரிச்ஸ்டாக் நெருப்புக்கு இரையாகிறது. நாஜிக்கள் இதற்க்கு காரணமாக கம்யுனிஸ்ட் மேல் குற்றம் சாட்டுகின்றனர் .இதனால் வெகுண்டெழுந்த மக்கள் ஹிட்லருக்கு வானளாவிய அதிகாரத்தை தரும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க ஒப்புகொள்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தது நாஜி படையினரே.

எரிக்கிர்க்கு இந்த உண்மை தெரியும், இவர்கள் என்பதற்கு மேலாகவும் பல உண்மைகளை எரிக் அறிந்து இருந்தார். இருப்பினும் அவற்றை வெளியிடவில்லை . தனது செயல்களுக்கு பலன் விரைவில் வரும் என்பதை எரிக் அறியவில்லை.

மார்ச் 24 தேதி ஒரு உணவகத்தில் இருந்து வெளிப்படும் எரிக், இரண்டு அடையாளம் தெரியாத மனிதர்களால் அழைத்து செல்ல படுகிறார். பிறகு அவரின் சடலம் மட்டுமே எறிந்த நிலையில் கண்டெடுக்க படுகின்றது .எரிக் மரணம் குறித்து பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது, எரிக்கிர்க்கு பெரும்பாலானான ரகசியங்கள் அறிந்து இருந்தார்.

மேலும் எரிக்கின் கொலைக்கு பின் ஜெர்மனியில் இது போன்ற வானவியல் கோள்கள் முன்னரிவித்தளுக்கு தடை செய்யப்பட்டது.

அசாத்திய திறன்களை கொண்ட எரிக் கூட நடப்பின் காரணமாக தனது உயிரை இழந்ததும் அவரின் உயர்வும் தாழ்வும் வரலாற்றில் ஒரு பாடமாகவே இருக்கும்...

சசிகலா சிறை குறித்து புகார் கூறிய பெண் போலிஸ் அதிகாரி இடமாற்றம்...


உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்...


பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரிய வந்திருக்கிறது. இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக்கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது. ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக்கூடுமா?

வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குணநலன்களைப்பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம். இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்.

1970-ல் “கிளாரியா சில்வியா” என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன. தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார். ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை “A change of heart“ என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது. எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வதுபோன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன. மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.

உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்...

திருவாரூர் மாவட்டம் தான் மிகவும் பாதுகாக்க வேண்டிய இடம்... இந்த ஊர் MLA ஆளே காணோம்...


இந்தியா மண்ணழிப்பின் மூலம் தமிழின அழிப்பு செய்கிறது...


110 கோடி மக்களின் அரசினுடைய மொத்த வருமானத்தில் 4ல் ஒரு பங்கு வெறும் 100 பணக்காரர்கள் மூலம் வருகிறது..

அதாவது ஹிந்தியாவின் அரசியல் நாற்காலியின் ஒரு கால் இப்பெரு முதலாளிகள்.

இந்த நூறுபேரில் முக்கியமான பத்துபேர் வைப்பது தான் இங்கே சட்டம்.

அதில் ஹிந்தியாவின் தமிழர் மீதான வெறுப்பும் சேர்ந்து கொள்ள..

அதற்கு திராவிடத்தின் ஆதரவும் கிடைக்க..

தாங்க முடியாத அடக்கு முறைகள் தமிழர் மீது நேரடியாக சுமத்தப்படுகின்றன..

ஈழத்தில் நடப்பதாவது இன அழிப்பு தான்...

அதாவது ஒரு இனத்தை அழித்து அதன் நிலத்தை இன்னொரு இனம் எடுத்துக்கொள்வது..

தமிழகத்தில் நடப்பது மண்ணழிப்பு.

அதாவது மக்களை மண்ணோடு சேர்த்து அழிப்பது..

நாம் அழிந்த பிறகு தமிழகம் யாரும் குடியேற முடியாத அளவு சுடுகாடாகி விடும்.

இது இனவழிப்பு மட்டுமன்றி மாந்த அழிப்பும் ஆகும்.

நாம் வாழும் பூமியின் ஒரு பகுதியை அழிக்கும் மாபெரும் பாதகச்செயலும் ஆகும்...

ஆமை புகுந்த வீடு உருப்படாது...


வழக்கம் போல சொல்பிழைகளால், அர்த்தம் மாறிய பழமொழிதான் இது.

பழமொழிகளுக்கு இப்படி நேர்ந்ததன் காரணம் அதன் பழமை (தொன்மை) தான். பாடல்களாக இருப்பின் கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதி வைத்து காத்தார்கள்.

பழமொழிகள் என்பது வட்டார வழக்கு போன்றது. பேசிப் பேசிக் கொண்டு வந்த மொழிகள். யாரும் எழுதி வைத்து காக்கவில்லை, அவசியமும் இல்லை, காரணம் இது பேச்சு வழக்குதான். இந்த பழமொழியில் வரும் எழுத்துகள் திரிந்து பொருள் மாறியது இப்படித்தான்.

புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் காளான். இருட்டிலும் ஈரப்பதத்திலும் காளான் தோன்றும்.

அந்தக் காலத்தில் எல்லாம் பலகை வீடுகள்தாள் என்பதை அறிவோம். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்குப் பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள்.

எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணிப்பார்கள். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இப்படித்தான் இந்த பழமொழி கூறுகிறது.

சரியான பழமொழி இது தான்.

ஆம்பி பூத்த வீடு உருப்படாது. 'ஆம்பி' என்றால் காளான்.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த...

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணிய வைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ?

அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? ஆம் தோழர்களே..

அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்?

ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர்.

அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே.

ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது...

நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்...


வேர் : வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை : முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.

சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

இலை : வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம் : நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை.

கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

கொட்டை  : நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்...

ஈழம் அழிய வைகோ நாயூடு செய்த தவறுகள் 4...


முடிவுரை:

ஒருவேளை, 2006ம் ஆண்டிலிருந்து தி.மு.க. கூட்டணியில் வைகோ நீடித்திருந்து, ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசும் ஆளும்தி.மு.க. அரசும் எதையும் செய்யவில்லை என்று 2009ம் ஆண்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி இருந்தால், அவரது பின்னால் வேறு கட்சிகளும் அணிவகுத்திருக்கும். ஏன், ம.தி.மு.க. அணியில் பா.ம.க. விடுதலைச்சிறுத்தை, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்திருக்கும். அந்த வைகோவை இன்று யாருமே வீழ்த்தி இருக்க முடியாது.!

சில விளக்கங்கள்:

இந்தப் பதிவை கண்ட வாசகர்கள் கடுமையான கண்டனத்தையும், அதே வேளையில் மிகுந்த பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள், திட்டுக்கள் இரண்டையுமே தமிழ் லீடர் சமமாகவே எடுத்துக் கொள்ளும்.

இது ஒரு விவாதம். வைகோ மீது பணம் வாங்கினார் என்று குற்றச்சாட்டு எழுப்பவில்லை. அரசியலில் மோசடி செய்தார் என்று எழுதவில்லை. அவர் எடுத்த முடிவின் காரணமாக இதெல்லாம் நடந்திருக்கிறது என்பதைத்தான் இந்தப் பதிவு சொல்கிறது.

அவர் ஈழ விடுதலையில் காட்டிய உறுதி என்றுமே மறுக்க முடியாது. மறைக்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மீது காட்டும் அதே பாசமும் நேசமும், ஈழத்தமிழர்கள் மீதும், இந்திய மக்கள் மீதும் அவர் வைத்திருக்கிறார் என்பதும் மறுப்பதிற்கில்லை.

காரணம், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அங்கேயும் இங்கேயும் ஓடியாடிக் கொண்டிருந்த நேரம்.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. நீடிக்குமா நீடிக்காதா என்ற விவாதம், அதாவது தனது கட்சிக்கு இத்தேர்தலில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் எழுந்த நிலையில், ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு, அணு உலை வெடித்துவிட்டது.
அந்த நேரத்தில் வைகோவிடம் இருந்து ஓர் அறிக்கை.
கல்பாக்கத்தில் இருக்கும் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஓர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.

எந்தச் சூழ்நிலையிலும் அவர் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நேசித்தார் என்ற போது மெய் சிலிர்க்கிறது.

அதே வேளையில், ஐந்தாண்டு காலமாக ‘குடும்ப ஆதிக்கமா…. இல்லை தமிழ்நாட்டின் ஜனநாயகமா…
நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்’ என்று முழக்கமிட்ட வைகோ ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பதுதான் ம.தி.மு.க.வினரின் மனதில் எழுந்த வேதனை.

2006 தி.மு.க. கூட்டணியில் அவர் நீடித்திருந்தால் என்ற அடிப்படையில் தான் இந்த கருத்து ஓர் விவாதமாக, கட்டுரையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காரணம், உலகத்தில் எது நடந்தாலும் குறிப்பாக தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்துவிட்டால், அது தன்னால்தான் நடந்தது என்று அறிவித்து மகிழ்ந்துக் கொள்ளும் அளவுக்கு மனம்(!) படைத்தவர்தான் கருணாநிதி.

அப்படிப்பட்டவருடன் கூட்டணியில் இருந்து கொண்டு, ஈழத்தமிழர்களின் போரை நிறுத்த வேண்டும் என்று வைகோ தனியாக புறப்பட்டிருந்தால், அவருக்கும் பேரும் புகழும் கிடைத்துவிடும் என்று அஞ்சி, கருணாநிதியும் வைகோவின் இழுத்த இடத்துக்கு வந்து, காங்கிரஸை எதிர்த்து இருப்பார் என்பதுதான் இக்கட்டுரையின் மையக் கருத்து.

நன்றி:http://tamilleader.in/vivada/76-2011-03-28-13-40-06.html

2016ல் மீண்டும் திமுக வுடன் கை கோர்கிறார் தன்மானச் சிங்கம்...

ஈழம் அழிய வைகோ நாயூடு செய்த தவறுகள் 3...


மத்திய அமைச்சரவையில் பதவியேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

ஏன்? எதற்கு என்ற விளக்கம் அளிக்கவேயில்லை.

நான்கு எம்.பி.க்கள் பெற்றிருந்தும், ம.தி.மு.க.வுக்கு பல அழைப்புகள் வந்தும் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றார் வைகோ.

அமைச்சரவையில் பங்கேற்க, வெளியிலிருந்து ஆதரவு…
நாங்கள் கூட்டணியில் பங்கேற்கப் போவதில்லை என்று கூச்சல் கேட்ட நேரத்தில்…
வைகோ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரே?

அரசியலில் இப்படி ஒரு பண்பாளரா…
இத்தனை துணிச்சல் ஒரு அரசியல் தலைவருக்கு வருமா? என்று தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவே தன்னை பாராட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அதில் இருந்தது.

ஆனால், கட்சி?
இவரை நம்பி நாயாய் பேயாய் செருப்பு கூட இல்லாமல் கட்சிக்கு உழைத்தவன் கதியை எண்ணிப்பார்த்தாரா?

அதற்காக, அமைச்சரவையில் சேர்ந்து ஊழல் செய்ய வேண்டி சொல்லவில்லை. மத்தியில் ஒரு அமைச்சர் இருந்தால், தன்னால் கட்சி வளருமே! கட்சிக்காரனுக்கு நாலு காண்ட்ராக்ட் கிடைக்குமே?
சரி. போகட்டும். வைகோவையே இந்த வையகமே பாராட்டடும். நாமும் பாராட்டுவோம்.

தி.மு.க.வில் இருந்துக் கொண்டே இருந்தார். கலைஞரை மேடை தோறும் பாராட்டினார்.
என்ன நடந்தது 2006ம் ஆண்டு.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு!

வைகோவை சிறையிலிருந்து மீட்டு வந்த தி.மு.க.வில் அவர் இருந்தாரா? அங்கிருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்.
தி.மு.க.வில் அவருக்கு 21 தொகுதிகள் தர, இவர் 23 கேட்க, அங்கே இருந்தால்தானே தருவதற்கு?
வெளியேறினார்.

அ.தி.மு.க.வில் 35 தொதிகளை வாங்கிக்கொண்டு, சிறையில் போட்ட ஜெயலலிதாவை சிரித்துக் கொண்டே கும்பிட்டார்.

“என்னை கட்சியில் வைத்துக் கொண்டே, ம.தி.மு.க.வை அழிக்க முற்பட்டார் கருணாநிதி” என்று குற்றஞ்சாட்டினார்.

ஆனால் கட்சியினரும் நெருங்கிய பத்திரிகையாளர்களும் வைகோவிடம் கடுமையாக விவாதம் செய்தனர்.

அவர்களுக்கு வைகோ தந்த பதில்:

”ஸ்டாலினுக்கு என்னை கார் கதவை திறக்கச் சொல்கிறீர்களா” என்றார பத்திரிகையாளர்களிடம்.
“கட்சியை எப்படியாவது அழித்துவிட்டு, என்னையும் நிர்கதியாக்கப் பார்க்கிறார்” என்றார் கட்சியினரிடம்.
சரி?

தேர்தலில் ம.தி.மு.க. ஜெயித்தது ஆறு தொகுதிகள்.

அ.தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம்தேதி வரை அமைதியாகவே இருந்தார்.
இங்கேதான் தலைப்புக்காக நாம் சிலவற்றை சொல்ல வேண்டியிருக்கிறது.

2009ம் ஆண்டு ஈழத்தில் இறுதிக்கட்ட போரை ராஜபக்‌ஷே நடத்திக் கொண்டிருந்தார். அந்த போருக்கு உறுதுணையாக இருந்தார் சோனியா காந்தி. அதாவது அந்த போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது மத்திய அரசு.

மத்திய அரசை ஈழத்தமிழர்களுக்காக, எதிர்க்க வேண்டிய கருணாநிதி, பாதுகாத்தார். பாதுகாத்தார் என்று சொல்வதைவிட, மத்திய அரசை எதிர்த்துப் பேசியவர்களையும் சிறையில் தள்ளும் அளவுக்கு கருணாநிதி துணிந்துவிட்டார்.

கருணாநிதிக்கு எப்படி இப்படி துணிச்சல். அதுவும் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து போராடுவதற்கு கூட அனுமதி கொடுக்க முடியாத அளவுக்கு கருணாநிதிக்கு என்ன மன அழுத்தம்.

காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?

ஒரே ஒரு காரணம்.
தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.
ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்.
இதெல்லாம் நடக்குமா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம். அதற்கு தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்திருக்க வேண்டும். அதற்கு தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு ம.தி.மு.க.வும் இருந்திருக்க வேண்டும். அப்படி ம.தி.மு.க. அக்கூட்டணியில் நீடித்திருந்தால், தி.மு.க. நிச்சயம் அத்தேர்தலில் 118 தொதிகளில் வென்றிருக்கும். ம.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் குறைந்தது 15 தொகுதிகளில் வென்றிருக்கும்.

தி.மு.க. மெஜாரிட்டியாக ஆட்சியில் அமர்ந்திருக்குமானால், அதே கூட்டணியில் ம.தி.மு.க. இருந்திருந்தால், காங்கிரஸை நெருக்கடி கொடுத்திருக்க முடியுமா… முடியாதா?

ஈழத்தமிழர்களுக்கு இத்தனை நெருக்கடி சூழ்ந்திருந்த வேளையில் கூட்டணியில் இருந்து கொண்டே, கருணாநிதிக்கு வைகோ நெருக்கடி கொடுத்திருக்க முடியும். அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், வைகோயின் தொடர் நெருக்கடிக்கு வளைந்து கொடுத்திருக்க மாட்டாரா கருணாநிதி?

அப்படியும் ஈழத் தமிழர்களுக்காக, இலங்கையில் அப்பாவி மக்கள் மீது நடத்தும் போரை நிறுத்தச் சொல்லி நிச்சயம் கருணாநிதி முழக்கமிட்டிருப்பார். அவருடன் வைகோ இருந்திருந்தால். வைகோ மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணிக்கு ஈழத்தமிழர்களுக்காக திருமாவளவனும் நெருக்கடி கொடுத்திருப்பார்.

இவர்கள் இருவரும் நெருக்கடி கொடுக்கும் போது, எந்தக் கூட்டணியில் அவர் இருந்திருந்தாலும் டாக்டர் ராமதாஸூம் கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்திருப்பார்கள்.
அல்லது வைகோ, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரை தன்வசமாக்கிக் கொள்ள கருணாநிதியே, அவர்களுக்கு ஏதாவது வரலாற்றில் பெயர் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி, களத்தில் குதித்திருக்கலாம்.
இச்சூழ்நிலையில், இலங்கைக்கு தானாகவே நெருக்கடி ஏற்பட்டிருக்குமா இல்லையா என்று சொல்லுங்கள்.

வைகோ நெருக்கடி கொடுத்தும், மெஜாரிட்டி இருந்தும் கருணாநிதி செவிமடுக்காமல் போயிருந்தால்… என்று சிலர் சொல்வது எப்படி அனுமானமாக இருக்குமோ அதைத்தான், வைகோ தி.மு.க. கூட்டணியில் நீடித்திருந்தால்…
இலங்கையில் இறுதிப் போர் நடந்திருக்காது.

மூன்று லட்சம் மக்கள் செத்திருக்கமாட்டார்கள் என்று தமிழ் லீடர் இணைய தளமும் அடித்து சொல்கிறது.

வைகோவால், ஈழத் தமிழர்களின் நலன் அழிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு, எதிர் வாதம் இருந்தால் தமிழ் லீடருக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயம் பதிவு செய்யப்படும்.

முடிவரைக்கு முன்பாக,
வைகோவின் தாரக மந்திரங்கள்
பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, லட்சியத்தில் உறுதி.

இதுவரை வைகோவின் செயல்பாடுகளை பார்த்தால் அரசியலில் நேர்மையும் இல்லை. லட்சியத்தில் உறுதியும் இல்லை. பொதுவாழ்வில் தூய்மை அவரிடத்தில் உண்டு என்றாலும், நாட்டில் 60 முதல் 70 சதவிகித மக்களிடம் தூய்மை இருக்கிறது. அந்த மக்கள் தொகையில் அவரும் ஒருவராக இருப்பதில் தவறில்லை.
ஆனால், கட்சித் தலைவர் என்னும் போது...

அதுவும், அரசியல்... தேர்தலை சந்திக்கும் அரசியல் என்றால் அக்கட்சித்தலைவர் எடுக்கும் முடிவுகள் குறைந்தப்பட்சம் கட்சியை காப்பாற்ற வேண்டமா?

அரசியல் என்றால் போராட்டங்கள், தழும்புகள், தோல்விகள், வருத்தங்கள், வேதனைகள், அழுகை, தனிமை இவற்றுடன் சில மகிழ்ச்சியும் இருத்தல் அவசியமாகிறது.

அந்த மகிழ்ச்சி வைகோவுக்கு கிடைத்திருக்கிறதா? அவரே அவரது நெஞ்சில் கை வைத்து சொல்லட்டம்!

ஒரு மனிதன் வாழ்க்கையில் போராடலாம். ஆனால், போரட்டமே வாழ்க்கை என்றால், அது சாதனையா வேதனையா?

அர்சியலில் எப்போதுமே, தவறான முடிவு எடுப்பவர் வைகோ, சொந்தக் கட்சிக்கே சூனியம் வைத்துக் கொண்டவர் வைகோ என்று அக்கட்சியினரால் பேசுவது அவரது காதுக்கும் கேட்டிருக்கும்.

நல்ல பேச்சாளர்...
நல்ல பண்பாளர்...
நல்ல மனிதர்....
ஆனால், நாட்டில் நல்ல தலைவராக அவரால் வரமுடியவில்லையே...

ஈழம் அழிய வைகோ நாயூடு செய்த தவறுகள் 2...


1994ம் ஆண்டு தோன்றிய ம.தி.மு.க.வில் இந்த நாள் வரை மறுமலர்ச்சி ஏற்பட்டதா என்றால்?... வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் அனைவருமே அதற்கு பதில் சொல்வதைவிட மெளனம்தான் சாதிக்க முடியும்.

கட்சியில் தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் மட்டுமில்லை. பல கட்சிகளில் இருந்து இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ஓட்டமெடுத்தார்கள் வைகோவை நோக்கி. இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத இடத்தில், வைகோ மட்டுமே இருப்பார். எதிர்கால முதல்வர் இவர்தான். கலைஞருக்கு பிறகு தி.மு.க.வே அவரிடம்தான் போய்விடும்… இப்படி எத்தனையோ பேச்சுக்கள். அத்தனையும் இன்றளவிலும் பேச்சு பேச்சாகவே இருக்கிறது என்பதுதான் வேதனை.

ம.தி.மு.க. தொடங்கியதும் முதல் கூட்டம் சென்னை ராயபுரத்தில், தி.மு.க.வை தோற்றுவித்து அண்ணா பேசிய இடம். ராயபுரம் சுழல்மெத்தை.

முதல் கோஷம் “பொதுவாழ்வில் தூய்மை... அரசியலில் நேர்மை… லட்சியத்தில் உறுதி”.

இந்தக் கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கி, மறுநாள் விடிய விடிய நடந்து, அதிகாலை 4.45 மணிக்கு முடிந்தது.

அன்று மேடை ஏறிய வைகோவின் எழுச்சி மிக்க குரலை கேட்டதைவிட, அவரது அழுகுரல்தான் அதிகம் பேசப்பட்டது. அவரது கண்களில் வழிந்த நீர், மேடையில் வீற்றிருந்தவர்களின் விழிகளில் ஓடிய நீர், கூட்டத்தை கேட்க வந்தவர்கள் வடித்த நீர் என, ம.தி.மு.க. ஓர் கண்ணீர் மேடையாகவே ஆகியது.

கட்சித் தொடங்கி, இரண்டு வருடங்கள் எந்த மேடையாக இருந்தாலும், வைகோ அதை கண்ணீரால் நனைத்துவிடுவார். கட்சித்தலைவன் ஒரு நாள் அழலாம். ஏதாவது முக்கியமான கட்டத்தில் கண் ஓரம் ஈரம் அரும்பும். இதுதான் தலைவன்களிடம் மக்கள் பார்த்தது. ஆனால், அழுது அழுது பேசி, இன்னமும் வைகோ அழுதுக் கொண்டுதான் இருக்கிறார்.

அவர் பேசும் போது ஏதாவது விசேஷம் இருக்கும்!
அவர் கோபம் காட்டினால்,
அதில் ஓர் அர்த்தம் இருக்கும்!
அவர் அழுததால், கண்ணீர் ஓடியதை தவிர ஒரு பலனையும் அவரும் காணவில்லை. கட்சிக்காரனும் பலன் அடையவில்லை!

கட்சி ஆரம்பித்து, ஒரு வருடத்திற்குள் நடைப்பயணம் தொடங்கினார். அதுவும் யாரை எதிர்த்து தெரியுமா?

அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து.

ஜெயலலிதா தலைமையிலான அராஜக ஆட்சியை தூக்கியெறிவேன் என்று கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் அது மிகப்பெரிய ஊர்வலமாக வந்து, கடற்கரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்திக் காண்பித்தார். உண்மையிலேயே அது கின்னஸ் சாதனையாகவும் இருக்கலாம்.

கிட்டத்தட்ட 13 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுப்படான ஊர்வலம் சென்னையில் நடந்தது.
தி.மு.க. ஆடிப்போனது. வைகோவுக்கு இத்தனை கூட்டமா? என்று வாய்ப்பிளந்தது பத்திரிகைகள்.

1996ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு, ம.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1998ம் ஆண்டு யாரை கடுமையாக எதிர்த்தாரோ, அந்த அம்மையார் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தார்.

1999ம் ஆண்டு, மக்களவைக்கு மீண்டும் தேர்தல் வந்தது. இம்முறை யார் இவரை கழுத்தை பிடித்து பிடரியில் அடித்து அனுப்பினார்களோ அதே தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். கேட்டால், தான் ஏற்கனவே பா.ஜ.வுடன் கூட்டணி வைத்திருந்தேன். அக்கூட்டணியில் தி.மு.க.தான் வந்து சேர்ந்துவிட்டது என்பார் வைகோ.

அக்கூட்டணியில் இருந்த வைகோ, தி.மு.க.வுக்கும் சேர்த்துதான் பிரசாரம் செய்தார். எப்படி அவரால் முடிந்தது?

தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றியதால், பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள். அந்த தீக்குளிப்புக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று வைகோவிடம் கேட்டால், என்ன பதில் என்பதல்ல முக்கியம்.

அரசியல். அதுவும் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால், சுயமரியாதைக்கெல்லாம் அர்த்தம் தெரிந்திருந்தாலும் தெரியாமல் இருத்தல் நலம். அப்போது வைகோவுக்கு எது நலம் என்பது தெரிந்திருந்தது.
அங்கே சுயமரியாதை சிந்தனைக்கு இடம் அளித்தாரா வைகோ. அதைவிட சுயமரியாதையோடு(!) தி.மு.க.வை பாராட்டிப் பேசினார் வைகோ. தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று மேடைக்கு மேடை ,முழங்கினார் வைகோ.

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து பா.ஜ. கூட்டணி அரசிலும் ம.தி.மு.க. பங்கேற்றது.

அடுத்து, 2001ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வந்தது.

#இங்கே இருந்துதான், அரசியலில் அவர் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார் என்பதை வாசகர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டும்.

அதாவது தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் முறித்துக் கொண்டு வெளியேறியது. அதுவும் தனித்துப்போட்டி. ஒரு இடம் கூட வெற்றிப் பெற முடியவில்லை.
சரி. இருக்கவே இருக்கிறது. விடுதலைப் புலிகளை வைத்து மீண்டும் அரசியல் செய்யத்தொடங்கினார்.

புலிகளை ஆதரித்துப் பேசியதால், வைகோவை வேலூர் சிறையில் அடைத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இது நடந்தது 2002ம் ஆண்டு.

புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ, தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தப் போது, அவரை தமிழக அரசு, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சென்னை விமான நிலையத்தில் அவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிய போது, “பாசிச ஜெயலலிதா அரசை மக்கள் சக்தியைக் கொண்டு தூக்கியெறியும் வரையில் ஓயமாட்டான் இந்த வைகோ” என்ற குரல் ம.தி.மு.க.காரனின் காதில் மட்டுமின்றி, அனைத்து பத்திரிகையாளன் காதிலும் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, சிறையில் இருப்பேனே தவிர, ஜாமீன் கேட்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தார்.
ஒரு நாளா..
இரண்டு நாளா…
ஒரு மாதமா…
இரண்டு மாதமா…
19 மாதங்கள், அதாவது 577 நாட்கள் சிறையில்  இருந்தபடியே கட்சியை நடத்திய பெருமை உலக அரசியல் வரலாற்றில் வேறு எந்தத் தலைவனுக்கு கிடையாது.

திராவிட கட்சிகளில் தலைவர்களாக இருந்தவரில், அதிக நாள் சிறை தண்டனை பெற்றவர் என்ற பெருமை வைகோவைத் தவிர வேற யாருக்கும் கிடையாது. கிடைக்காது.

வேலூர் சிறையில் இருந்த அவரை, மீட்க கையெழுத்து இயக்கம் நடந்தது. அதில் முதல் கையெழுத்துப் போட்டவர் மாஜி தலைவர் கலைஞர் கருணாநிதி.

வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றித் திரிந்தார்.
40க்கு 40 அடிதத்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி. ஆனாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சிக்கு ரொம்பவே ஆடியது காங்கிரஸ். கூட்டணி கட்சிகள் கேட்ட துறைகள் எல்லாம் கிடைத்தன.
வைகோ என்ன செய்தார்?

ஈழம் அழிய வைகோ நாயூடு செய்த தவறுகள் 1...


யார் இவர்?

1944ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மே மாதம் 22ம் தேதி பிறந்தவர் வை.கோபால்சாமி.
பள்ளிப்படிப்பில் எட்டு வயது முதல் கல்லூரி படிப்பு வரை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டவர்களில் இவரே முதல் பரிசுக்குச் சொந்தக்காரர்.
பேச்சுப் போட்டி மட்டுமா, வாலிபால் விளையாட்டு வீரர்.

தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்.

உலக வரலாறுகளை மடை திறந்த ஆறாய் ஓடும்.

1965ம் ஆண்டு, சென்னை போலீஸார் நடத்திய கட்டுரைப்போட்டியில், மாநிலக் கல்லூரி மாணவரான கோபால்சாமிக்கே முதல் பரிசு.
1969ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சிறந்த பேச்சாளர் விருது வாங்கியவர்.

தி.மு.க.வில் மாணவர் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர்.

மேடையில் ஏறினால், எந்த குறிப்புகளையும் பார்க்காமல் மணிக்கணக்கில், கேட்பர்களின் மனம் ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய பேச்சாளர்.

1971-77 வரை குருவிக்குளம் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்.
1977ல் மிசா கைதி.
1977-79 நெல்லை-குமரி மாவட்ட தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்.
மூன்று முறை மாநிலங்களவை எம்.பி.
இரண்டு முறை மக்களவை எம்.பி.
30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
தி.மு.க.வின் போர்வாள் என்று கலைஞரின்  வர்ணனைக்குள்ளானவர்.

தி.மு.க.வின் மேடை பேச்சாளர்களில், 1980 முதல் தி.மு.க.வில் அதிகம் ஈர்க்கப்பட்டவர் வை.கோபால்சாமி.
தி.மு.க..வில் வைகோவின் வளர்ச்சி என்பது செயற்கையானது அல்ல. அவரது வளர்ச்சி என்பது திட்டமிடாத ஓர் வளர்ச்சி. கலைஞரின் அன்புக்கு பாத்திரமானத்தால், அக்கட்சியில் அவருக்கு எல்லாம் சாத்தியமாகியது.

1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு.

வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்.

ஈழத்திலிருந்து வந்ததும், கலைஞர் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு கலைஞருக்கும் வைகோவுக்கும் சில மனக்கசப்புகள் வளர்ந்துக் கொண்டே இருந்தன.

அந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் காட்டு தர்பார் போல ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடியது. அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க.வில் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு பொதுக்கூட்டங்கள் நடந்தன. பல மேடைகளில் வைகோவின் குரல் ஒலித்தது.

தி.மு.க.வில் வைகோவின் இமேஜ் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் வைகோவை தி.மு.க.வின் போர்வாள் என்று வர்ணிக்கத் தொடங்கினார் கலைஞர். நிலைமை இப்படி இருக்க, கலைஞரின் மனசாட்சி(?) என்று தி.மு.க.வினர் பின்னாளில் புளங்காகிதம் அடைந்த முரசொலி மாறன், வைகோவை ஓரம்கட்டும்படி மாமாவிடம் புகார் வாசிக்கிறார்.
காரணம், டெல்லியில் முரசொலி மாறனைவிட வைகோவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது. இந்த காரணத்தை மாமா ஏற்றுக் கொள்வாரோ இல்லையோ என்று நினைத்து, இரண்டாவதாக, கட்சியில் ஸ்டாலினை வாரிசாக கொண்டு வரும் வேளையில் வைகோவுக்கு அபரிதமான வளர்ச்சியும் செல்வாக்கும் இருப்பது நல்லதில்லை என்று சொல்கிறார் மாறன்.

குடும்பத்திற்காக அன்று முதல் பலி கொடுக்கப்பட்டவர் தான் வைகோ.

திட்டமிட்டு, அவரை கட்சி ஒதுக்குகிறது. அவரை யாரும் மேடைகளில் பேச அழைக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவுகள். இது கட்சியினருக்கு அரசல் புரசலாக தெரிய, கட்சியின் ஒரு சாரார் வைகோவை ஆதரிக்க முற்படுகின்றனர்.
இந்த ஆதரவுக் கூட்டத்தில் முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன்.

அவர் கலைஞர் கருணாநிதியை தாக்கி, ‘கருவின் குற்றம்’ என்று  எழுதிய கவிதை, தினகரன் நாளிதழில் வெளியானது. இதற்கு மறுப்புக் கவிதை எழுதி, அதே நாளிதழில் வெளியிடச் செய்தார் கருணாநிதி. அதை எழுதிய கவிஞர், அன்றைய செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஆறுமுகம்.
கருணாநிதிக்காக, மறுப்புக் கவிதை எழுதும் அளவுக்கு மதுராந்தகம் ஆறுமுகத்துக்கு ஆற்றல் இருந்திருந்தால், அவர் எப்படி வைகோவின் ம.தி.மு.க.வுக்கு வந்தார் என்பதுதான் கேள்வி.

கடைசியில், எல்லாம் வைகோவின் தூண்டுதல் காரணமாக இந்த கலகங்கள் நடப்பதாக கலைஞர் அறிவித்தார். அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.

என்னடா இது. வெளியே போ என்றால், போகாமல் இங்கேயே இருக்கிறானே என்று நினைத்த கருணாநிதி. தனக்கு எதிராக கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரையே, ஒரு கணக்காக அனுப்பி வைத்தவர்தானே கருணாநிதி.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்று எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்.
வைகோ போர்வாள் ஆயிற்றே! அவரை எப்படி வெளியே அனுப்பலாம் என்று சிந்தித்த போதுதான், அவருக்கு மத்திய உளவுத்துறையிலிருந்து மர்மமான கடிதம் வந்தது.

அது மத்திய உளவுத்துறை அனுப்பிய கடிதம்தானா என்று இன்றளவும் சந்தேகம் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மூலம் என்னை வைகோ கொலை செய்ய திட்டமிட்டதாக டெல்லியிலிருந்து உளவுத்துறை தனக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஓர் அறிக்கை வெளியிட்டார் கலைஞர்.

இது கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சதி? என்றார் வைகோ.

வைகோ உடனே வெளியேறினாரா? இல்லை, ‘நாங்கள்தான் உண்மையான தி.மு.க. எங்களுக்குத்தான் அறிவாலயம் சொந்தம்’ என்று முழக்கமிட்டார்.

காரணம், அவருக்கு தி.மு.க.வில் இருந்து கிடைத்த உச்சப்பட்ட ஆதரவு. 30 மாவட்டச் செயலாளர்களில் கிட்டத்தட்ட 12 பேர் பகிரங்க ஆதரவு கொடுத்தார்கள். அன்றைய பொருளாளர் சாதிக்பாட்சா, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் மறைமுகமாக வைகோவை ஆதரித்தார்கள்.

அதுமட்டுமா, வைகோ என்ற நபருக்கு ஒரு நாளிதழே களத்தில் இறங்கியது. அது அன்றைய கே.பி.கந்தசாமி நடத்திய ‘தினகரன்’ நாளிதழ்தான். தி.மு.க.வை கைப்பற்ற முயற்சித்தார். கடைசியில், அம்முயற்சி பலனளிக்காமல் போனதால், ம.தி.மு.க. உருவானது.

அதுவும் நள்ளிரவில் சுடுகாட்டில். காரணம், வைகோ நீக்கியதை கண்டித்து பத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்களில் ஒருவரது சவ ஊர்வலம் முடிந்த பின்னர், அதே சுடுகாட்டில் சூளூரைத்தார் வைகோ.
அங்கே மலர்ந்ததுதான் மறுமலர்ச்சி தி.மு.க...