18/07/2017

இந்தியா மண்ணழிப்பின் மூலம் தமிழின அழிப்பு செய்கிறது...


110 கோடி மக்களின் அரசினுடைய மொத்த வருமானத்தில் 4ல் ஒரு பங்கு வெறும் 100 பணக்காரர்கள் மூலம் வருகிறது..

அதாவது ஹிந்தியாவின் அரசியல் நாற்காலியின் ஒரு கால் இப்பெரு முதலாளிகள்.

இந்த நூறுபேரில் முக்கியமான பத்துபேர் வைப்பது தான் இங்கே சட்டம்.

அதில் ஹிந்தியாவின் தமிழர் மீதான வெறுப்பும் சேர்ந்து கொள்ள..

அதற்கு திராவிடத்தின் ஆதரவும் கிடைக்க..

தாங்க முடியாத அடக்கு முறைகள் தமிழர் மீது நேரடியாக சுமத்தப்படுகின்றன..

ஈழத்தில் நடப்பதாவது இன அழிப்பு தான்...

அதாவது ஒரு இனத்தை அழித்து அதன் நிலத்தை இன்னொரு இனம் எடுத்துக்கொள்வது..

தமிழகத்தில் நடப்பது மண்ணழிப்பு.

அதாவது மக்களை மண்ணோடு சேர்த்து அழிப்பது..

நாம் அழிந்த பிறகு தமிழகம் யாரும் குடியேற முடியாத அளவு சுடுகாடாகி விடும்.

இது இனவழிப்பு மட்டுமன்றி மாந்த அழிப்பும் ஆகும்.

நாம் வாழும் பூமியின் ஒரு பகுதியை அழிக்கும் மாபெரும் பாதகச்செயலும் ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.