08/02/2018

பாஜக பிரதமர் மோடியின் மனைவி விபத்தில் சிக்கினார், விபத்தில் ஒருவர் பலி ,மோடியின் மனைவி மருத்துவமனையில் அனுமதி...


குஜராத்திற்கு உறவினர்களுடன் மோடியின் மனைவி சென்றுள்ளார் அப்பொழுது அவர் சென்ற கார்  ராஜஸ்தான் மாநிலம் சித்தூர் நெடுஞ்சாலையில் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் விபத்தில் உயிர் தப்பி காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்...

நாட்டிற்கு தேவை வேலை வாய்ப்புகள்; சொற்பொழிவுகள் அல்ல - பாஜக மோடியின் நாடாளுமன்ற உரைக்கு காங்கிரஸ் சோனியாகாந்தி பதிலடி...


இதெல்லாம் ஓட்டுக்காக திமுக செய்யும் பித்தலாட்டம்...


ஒரு பக்கம் சொகுசு காருக்க வரி கட்டாம ஏமாற்றுவோம் இன்னொருபக்கம் பாரி வள்ளல் மாதிரி வாரி இறைப்போம்...

கழுத்தை அறுத்து விடுவேன் எனக் கூறிய இலங்கை அதிகாரி சஸ்பெண்ட்...


ஒரே நாளில் 72 ரவுடிகளை ஸ்கேட்ச் போட்டு தூக்கிய சென்னை காவல் துறை...


ரவுடிகள் அனைவரும் சென்னை அருகே மலையம்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒன்று கூடுவதாக போலிசிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு திடீர் என சென்ற காவல் துறை அனைவரையும் துப்பாக்கி முணையில் கைது செய்தது...

தடுப்பூசி நல்லது, அதை பற்றி தெரிந்தால் மட்டும் பதிவிடுங்கள்.. மக்களை பயமுறுத்த வேண்டாம் என கூறியவர்களுக்காக இந்த பதிவு..


நாங்கள். மக்கள் பாதுகாப்பிற்காக பதிவிடுகிறோம், நீங்கள் எதற்காக..?

Vaccines research further...

1. Dr. Nancy Banks - http://bit.ly/1Ip0aIm
2. Dr. Russell Blaylock
(Censored)
3. Dr. Shiv Chopra - http://bit.ly/1gdgh1sk
4. Dr. Sherri Tenpenny - http://bit.ly/1MPVbjx
5. Dr. Suzanne Humphries - http://bit.ly/17sKDbf
6. Dr. Larry Palevsky - http://bit.ly/1LLEjf6
7. Dr. Toni Bark - http://bit.ly/1CYM9RB
8.Dr. Andew Wakefield http://bit.ly/1MuyNzo
9. Dr. Meryl Nass - http://bit.ly/1DGzJsc
10. Dr. Raymond Obomsawin - http://bit.ly/1G9ZXYl
11. Dr. Ghislaine Lanctot - http://bit.ly/1MrVeUL
12. Dr. Robert Rowen - http://bit.ly/1SIELeF
13. Dr. David Ayoub - http://bit.ly/1SIELve
14. Dr. Boyd Haley PhD - http://bit.ly/1KsdVby
15. Dr. Rashid Buttar - http://bit.ly/1gWOkL6
16. Dr. Roby Mitchell - http://bit.ly/1gdgEZU
17. Dr. Ken Stoller - http://bit.ly/1MPVqLI
18. Dr. Mayer Eisenstein - http://bit.ly/1LLEqHH
19. Dr. Frank Engley, PhD - http://bit.ly/1OHbLDI
20. Dr. David Davis - http://bit.ly/1gdgJwo
21. Dr Tetyana Obukhanych - http://bit.ly/16Z7k6J
22. Dr. Harold E Buttram - http://bit.ly/1Kru6Df
23. Dr. Kelly Brogan - http://bit.ly/1D31pfQ
24. Dr. RC Tent - http://bit.ly/1MPVwmu
25. Dr. Rebecca Carley - http://bit.ly/K49F4d
26. Dr. Andrew Moulden - http://bit.ly/1fwzKJu
27. Dr. Jack Wolfson - http://bit.ly/1wtPHRA
28. Dr. Michael Elice - http://bit.ly/1KsdpKA
29. Dr. Terry Wahls - http://bit.ly/1gWOBhd
30. Dr. Stephanie Seneff - http://bit.ly/1OtWxAY
31. Dr. Paul Thomas - http://bit.ly/1DpeXPf
32. Many doctors talking at once - http://bit.ly/1MPVHOv
33. Dr. Richard Moskowitz - http://bit.ly/1OtWG7D
34. Dr. Jane Orient - http://bit.ly/1MXX7pb
35. Dr. Richard Deth - http://bit.ly/1GQDL10

36. Dr. Lucija Tomljenovic - http://bit.ly/1eqiPr5
37. Dr Chris Shaw - http://bit.ly/1IlGiBp
38. Dr. Susan McCreadie - http://bit.ly/1CqqN83
39. Dr. Mary Ann Block - http://bit.ly/1OHcyUX
40. Dr. David Brownstein - http://bit.ly/1EaHl9A
41. Dr. Jayne Donegan - http://bit.ly/1wOk4Zz
42. Dr. Troy Ross - http://bit.ly/1IlGlNH
43. Dr. Philip Incao - http://bit.ly/1ghE7sS
44. Dr. Joseph Mercola - http://bit.ly/18dE38I
45. Dr. Jeff Bradstreet - http://bit.ly/1MaX0cC
46. Dr. Robert Mendelson - http://bit.ly/1JpAEQr
47. Dr. Garth Nicolson - http://bit.ly/1OQVJsF
48. Dr. Marc Girard - http://bit.ly/1iw0smT
49. Dr. Charles Richet - http://bit.ly/1G5GG7j
50. Dr. Zac Bush - http://bit.ly/1LS19OZ
51. Dr. Lawrence Wilson - http://bit.ly/1kcdirf
52. Dr. James Howenstine - http://bit.ly/1iNyFOy
53. Dr Burton A. Waisbren, Sr., M.D. - http://bit.ly/1Nj8LRe
54. Dr. Sam Eggertsen - http://bit.ly/1Mww9XV
55. Dr. Bonnie Dunbar - http://bit.ly/1N5DXNi
56. Dr. Judy Mikovits - http://bit.ly/1QIzmHU
57. Dr. John Bergan - http://bit.ly/1KYv1yY
58. Dr. Rima E. Laibow - bit.ly/1RmW73C
59. Dr. Lee Hieb - http://bit.ly/1VElDUv
60. Dr. Daniel Kalb - http://bit.ly/22FPmxv
61. Dr. Rachel Ross - http://bit.ly/1r7Doik
62. Dr. Kathryn H Hale - http://bit.ly/2erDoW9

VACCINE INGREDIENTS:  Notice that these ingredients include toxic metals (aluminum salts), bizarre animal cells from humans, monkeys, cows, pigs and chickens, ingredients derived from GMOs, the radioactive element barium, artificial coloring chemicals, excitotoxins such as glutamate, chemical cleansing agents (Triton X-100), dangerous bacterial strains (E.coli), toxic chemicals such as glutaraldehyde, thimerosal (mercury) and much more.
No one can refute any of this because it’s admitted by the CDC itself. <<< Do you honestly believe these ingredients would not cause health problems?

காய்ச்சல் குணமாக...


தமிழினம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சரித்திரம்...


சுமார் 1900 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அடிமைகளாக வாழ்ந்து, உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டு, மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, நண்பர்களால் ஏமாற்றப்பட்டு, பலம் பொருந்திய நாடுகளினால் அழிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் எப்படி மீண்டும் தங்களைக் கட்டியெழுப்பிக்கொண்டு, தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்கின்ற சரித்திரங்கள் உண்மையிலேயே ஒவ்வொரு  தமிழனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உண்மைகள்.

ஒரு தேசத்தினது அல்லது இனத்தினது விடுதலை என்பது சில வருடப் போராட்டத்தையோ அல்லது சில சம்பவங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல.

ஒரு தேசத்தின் விடுதலை என்பது பல தசாப்தங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம்.

இஸ்ரேலியர்களுடைய அந்த விடுதலையின் பயணம் பல நூற்றாண்டுகளைக் கொண்டது.

நம்மைப் போல் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைக் கண்டுதான் அவர்களுக்கான விடிவு தற்பொழுது அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

இன்று உலகின் போக்கையும், உலக ஒழுங்கையும் மாற்றிவிடக் கூடியதான வல்லமையை இஸ்ரேல் என்கின்ற சிறிய நாடு பெற்றிருக்கின்றது என்றால்,

அதன் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேலியர்களுக்கு இருந்த நம்பிக்கை, வைராக்கியம், கடின உழைப்பு, இழப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் பலம், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீரம், ஒற்றுமை - என்று பல விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்...

இஸ்ரேல் என்கின்ற தேசம் எப்படி உருவானது?

பாபிலோனியர்களாலும், எகிப்தியராலும், ரோமர்களாலும், பிரித்தானியராலும், பேர்சியர்களாலும், கிரேக்கர்களாலும் இன்னும் பல இனக் குழுமங்களினாலும்; அடிமைகளாக்கப்பட்டு பலநூறு ஆண்டுகள் நாடற்றவர்களாக, அகதிகளாக, வேண்டப்படாதவர்களாக வாழ்ந்து வந்த யூதர்களால் எவ்வாறு தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது?

அகதிகளாக அவர்கள் சிதறி வாழ்ந்த தேசங்களில், அடிமைகளாக அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த தேசங்களில் எப்படி அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது?

தங்களுக்கென்று ஒரு நாடு அமையவேண்டும் என்ற நம்பிக்கையிலும் வைராக்கியத்திலும் எப்படி யூதர்களால் நீண்டகாலம் வாழ முடிந்தது?

இந்த விடயங்களைத்தான் இந்த கட்டுரைத் தொடரில் நாம் விரிவாக ஆராயப் போகின்றோம்..

இஸ்ரேல் தேசத்திடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள், படிப்பினைகள் என்று ஏராளம் இருக்கின்றன..

அவற்றைத்தான் இந்த தொடரில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று  துவண்டு போயுள்ள பல தமிழர்களின் உள்ளங்களுக்கு, இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கம் தொடர்பான அறிவு என்பது நிச்சயம் ஒரு பெரிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

நாங்கள் வீழவில்லை என்பதையும், நாங்கள் வீழமாட்டோம் என்பதையும், நாங்கள் தோற்கவில்லை என்பதையும், எழுந்து நிற்க எங்களாலும் முடியும் என்பதையும் தமிழர்கள் ஒவ்வொரு கணமும் உளமாற உணர வேண்டும்..

இன்று மிகவும் நொந்துபோன நிலையில் இருக்கின்ற தமிழரை நம்பி வந்த நாடுகள் கைவிட்டுவிட்டதாக நாம் கவலை அடைகின்றோம் அல்லவா?

இந்தியாவிலும், நெதர்லாந்திலும், பிரான்சிலும், மலேசியாவிலும், கனடாவிலும் அங்காங்கு  தமிழர் ஓரிருவர் கைது செய்யப்பட்டால் அல்லது நாடு கடத்தப்பட்டால் உடனடியாகவே நாம் துவண்டு போய்விடுகிறோம் அல்லவா?

இஸ்ரேலிய மக்களுடைய சரித்திரத்தை ஆராய்கின்ற பொழுது அவர்களை வஞ்சிக்காத தேசங்களே உலகில் இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு அவர்கள் உலகின் பல நாடுகளினாலும் வஞ்சிக்கப்பட்டார்கள். ஓட ஓட விரட்டப்பட்டார்கள்.

கி.பி. 1200ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்த யூதர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேறும்படி அந்த அரசாட்சி உத்தரவிட்டது.

கி.பி. 1306ம் ஆண்டு பிரான்ஸில் வாழ்ந்து வந்த யூதர்களை அந்த அரசு நாடு கடத்தியிருந்தது.

கி.பி. 1355ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் டோலியோ நகரில் வாழ்ந்துவந்த 12,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கி.பி. 1346ம் ஆண்டு முதல் 1360 ஆண்டு வரையிலான காலப்பகுகளில் கங்கேரியில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1390ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் வசித்துவந்த யூதர்கள் கட்டாயமாக கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த 180,000 யூதர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

1495ம் ஆண்டு லிதுவேனியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1502ம் ஆண்டு லிதுவேனியாவின் ரோட்ஸ் என்ற நகரில் வாழ்ந்துவந்த பல யூதர்கள் மதம் மாற்றப்பட்டார்கள், அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள் அல்லது அங்கிருந்து துரத்தப்பட்டார்கள்.

1541ம் ஆண்டு நேப்பிள்ஸில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1648ம் ஆண்டு முதல் 1656 ம் ஆண்டுவரை போலந்து நாட்டில் இருந்த யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1717 முதல் 1747 வரையிலான காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தும் யூதர்கள் அதன் ஆட்சியால் வெளியேற்றப்பட்டார்கள்.

1940களில் ஜேர்மனி, ஒஸ்ரியா, ஒல்லாந்து, கங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த சுமார் 60 இலட்சம் யூதர்கள் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதுபோன்ற பல கொடுமைகள், இனப்படுகொலைகள், அழிவுகள், இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை என்பனவற்றைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி விடுதலை பெற முடிந்தது?

எப்படி அவர்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தது?

இந்த விடயங்கள் பற்றிய அறிவை நாம் கொண்டிருப்பது, விடுதலை வேண்டிய ஒரு இனத்தின் பயணத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்றே நான் நினைக்கின்றேன்...

ஹோலிப் பண்டிகையும் ஏமாற்று வேலையும்...


தமிழரின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆட்டைப் போட்டு மாற்றியது தான் வந்தேறிகளின் கலாச்சாரம்...

தமிழர்கள் தன் முறைப் பெண்கள் மேல் மஞ்சத்தண்ணி ஊற்றி விளையாடும் மாரியம்மன் கோவில் பண்டிகையை தான் டா நீங்கள் மாற்றி ஹோலிப் பண்டிகை என்று கொண்டாடுகின்றீர்கள்...

மானங்கெட்ட வந்தேறி நாய்களா...
உங்களுக்கு ஏதுடா நாடு மொழி கலாச்சாரம் பண்பாடு?

500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு.. 700 டாஸ்மாக் கடையை புதிதாக திறக்க அதிமுக அரசு திட்டம்...


மூலிகை நீர் குறிப்புக்கள்...


சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன.

உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்...

ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ.. என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்...

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்...

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்...

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்...

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்...

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது.

எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்...

இன்னும் இந்த மக்கள் எத்தனை காலம் ஏமாற போகிறார்கள்...


எண்ணங்கள்...


அடிப்படையில் ஒருவனை உணர்ந்த கொள்ள எண்ணங்கள் தான் மூலம் அதை  கவனித்தால் போதுமானது..

எப்படி கவனிப்பது ஒவ்வொரு எண்ணங்களையும் சாதாரணமாக  கவனித்து கொண்டு அதன் இயல்பு நமக்கு உள்ளே  பொருந்துகின்றதா- இல்லையா, (உடல் ரசாயன மாற்றம் இல்லாத நிலை உள்ளதா) என்பதை பார்த்ததால் போதுமானது..

எண்ணத்தை நல்ல எண்ணம் தீய எண்ணம் என்று பார்க்கும் வரை குற்ற உணர்வும் - அடக்கு முறைகளும் தான் வளரும் அங்கு தெளிவு பிறக்காது..

அந்த தெளிவில் எண்ணத்தின் மூலம் இருக்கும் பற்றுகள் கொண்ட அடர்த்தி குறைந்து எண்ணங்கள் லேசாக மாறுவதும் அதன் பின் எண்ணங்கள் கரைந்த நிலைக்கு செல்ல முடியும்..

இந்த எண்ணங்கள் கரைந்த நிலையில் வெற்றிடம் இயல்பாக உணர முடியும்..

இந்த தன்மை வரும் பொழுது அங்கு எண்ணம் எழும் அலைத்தன்மை வெகு அழகாக கவனிக்க முடியும். அது இயல்பாக மலரும் பூவை போல நமக்கு உள்ளே இருந்து உணர்வின் வெளிப்பாட்டில் நடைமுறை வாழ்க்கையில் வளம் வருகிறது..

இந்த அடிப்படை தான் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆழ்ந்த கவனிப்பில் நிகழும் ஒன்று..

கவனித்தல் என்பது உணராதவர். உணர்ந்து கொண்டிருப்பவர். உணர்ந்தவர் என  எல்லோருக்கும் பொதுவான நிகழ்வு- ஏன் ஞானியே ஆயினும் இதே நிலை தான் என்ற அடிப்படை தெளிவுக்கு வரும் வரை எண்ணம் என்பதில் குழப்பமே தீராது..

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டே இருக்க வேண்டியது தான்..

ஒவ்வொரு குணத்திற்கு மூலம் எண்ணமே - அதற்கு மேலே உள்ளவாறு கவனித்தால் இயல்பாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் உணர்வின் அடிப்படையில்..

ஆன்மீகம் ஆன்மீக விவாதங்கள் இயல்பாக மலர வைக்கும் தன்மையாக இருக்க வேண்டும் - மாறாக குற்ற உணர்வையும் - நல்லவன்- கெட்டவன் - நல்லது - கெட்டது - அவனை அடிமை படுத்தி மேலே எழுந்து கொள்ள முடியாத சுமைகளை திணிக்க கூடாது..

உணர்வின் ஆழத்தில் பயணிக்கும் போதே இந்த தன்மை கூட புரிந்து கொள்ள முடியும்..

விழிப்புணர்வுக்கும் ஆரம்ப நிலைக்கும் பெரிய இடைவெளி உருவாக்கும் நிலை மனம் தான் - எண்ணத்தை சீரமைப்பது விழிப்புநிலையில் தான் நிகழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்..

மனதின் அடிப்படையில் இயங்கும் எண்ணத்தை கரைத்து மனம் என்ற அடிப்படையை கடந்து வெற்றிடத்தை பார்ப்பதே ஆன்மீகம்..

பெரிய மலையை தூக்கும் வேலை இல்லை.. ஒரு  இயல்பான கொண்டாட்டத்தில் தன்னை  உணர்ந்து கொள்வது அவ்வளவே..

தியானம் அதற்கு மூலம்...

இங்கு திறமை படைத்த குழந்தை என்பது நடனம், பாட்டு, தேர்வு படிப்பு என்று வரையறைக்க படுகிறது...


தனிமனித திறமை என்றைக்கும் உன்னை பொருளாதார ரீதியாக வளர்க்குமே தவிர, சமூகத்தில் எந்த மாற்றத்தையும் வளர்க்காது...

உபியில் ஒரு பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் அதிகரிப்பு, ஒரே ஊசியை பயன்படுத்தி வைத்தியம் பார்த்த டாக்டர் மீது வழக்கு பதிவு...


உபி மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் 566 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 21 பேருக்கு ஹெச்ஐவி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் 40 க்கும் மேற்பட்டவர்கள் ஹெச்ஐவி யால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விசாரனை நடத்தியதில் அந்த பகுதியில் உள்ள ஒரு மருத்தவர் குறைந்த கட்டணத்தில் ஒரே ஊசியை பலருக்கு போட்டு மருந்து மாத்திரை கொடுத்ததால் வந்ததாக கூறப்பட்டுள்ளது.

அவர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் போலி மருத்துவர் எனக் கூறப்படுகின்றது.

எனினும் மற்றவர்களுக்கு எப்படி ஹெச்ஐவி பரவியது என்பது ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது...

அமெரிக்காவில் வாழ்பவர் அமெரிக்கர்களா?


அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் கனவுதேசம், வல்லரசு நாடு என்ற மாயை உள்ளது.

ஆனால் உண்மையில் அமெரிக்கா என்பது பல கொடூரங்களை உள்ளடக்கிய நாடு.

உண்மையில் இன்று அந்நாட்டில் நன்றாக வாழ்பவரும் ஆள்பவரும் அமெரிக்கர் அல்ல.

கொலம்பஸ் எனும் கொடூரன் அமெரிக்காவை கண்டு பிடிக்கும் வரையே உண்மையான அமெரிக்க மக்கள் அங்கு சுதந்திரமாக வாழ்ந்தனர்.

இந்தியாவை கண்டு பிடிக்க எண்ணி திசைமாறி அமெரிக்காவை கண்டு பிடித்தான் கொலம்பஸ்.

ஆனாலும் அதனை இந்தியா என்றே நம்பிய அவன் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்ககளை இந்தியர்கள் என்றே அழைத்தான் (தமிழில் செவ்விந்தியர்கள்).

பின்னர் அவன் மூலமாக உள்நுழைந்த பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள் (யூத இனத்தவரும்) நாட்டை ஆக்கிரமிக்க துவங்கினர்.

பூர்வீக அமெரிக்க மக்களை அடிமைகளாக நடத்தினர்.

பழங்குடியினரான பூர்வீக மக்களும் அவர்களை எதிர்க்கவில்லை.

வெள்ளைக்காரன் எங்கு சென்றாலும் வினையுடன்தான் செல்வான் என்பதற்கேற்ப பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடனே பல புது நோய்களையும் கொண்டு வந்தனர்.

இதனால் ஆரோக்கியமாக இருந்த பல பூர்வீக அமெரிக்க மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.

ஒருகட்டத்திற்கு மேல் இவர்களின் அடக்கு முறையை தாங்க முடியாத அம்மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

இது American revolution War என அழைக்கப்படுகிறது.

இதன் பின் பலமுறை பூர்வீக மக்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக போராடினர்.

இதில் பல்லாயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

1776ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்காவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

ஆட்சி செய்தவனும் பிரிட்டிஷ் யூதன் வாழ்பவனும் ஆங்கிலேயன், இதில் என்ன சுதந்திரம் என்பது வினோதமே.

ஆனாலும் பூர்வீக அமெரிக்கர்கள் அடிமைகளாகவே இருந்தனர்.

பல புரட்சிகளுக்கு பிறகு 1838ல் பூர்வீக மக்களை வந்தேறி வெள்ளையர்கள் மிஸ்ஸிசிப்பி நதியின் மேற்கு கரையோரம் நோக்கி விரட்டியடித்தனர்.

உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட அம்மக்கள் குடிபெயர்ந்தனர்.

அதில் பல்லாயிரம் மக்கள் குளிரிலும் நோய்வாய்ப்பட்டும் இறந்தனர்.

இச்சம்பவம் Trails of Tears என அழைக்கப்படுகிறது.

இப்போதும் அந்நாட்டில் வாழும் பூர்வீக மக்களின் வம்சாவளியினர் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்றே பட்டியல் வகுப்பினராக உள்ளளனர்.

பலர் இன்னும் அரசால் அங்கீகரிக்கப்படாமல் உள்ளனர்.

பூர்வீக மக்களை அழித்துவிட்டு வந்தேறிகளால் ஆளப்படும் நாட்டை எப்படி வல்லரசு என ஏற்றுக் கொள்ள முடியும்...

கல்வி என்றால் இதுதானா...


அனுமாருக்கு நிகரான நவீன ESP மனிதர்...


டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)...

1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்..

சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்…

கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தான்.

ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் எனது நண்பன் எட்வின் இறந்து விட்டான் என தோன்றுகிறது எனக் கூறினான்…

இதை அத்தை நம்பவில்லை. அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரிய வந்தது..

அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.

ஒரு முறை பல ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக் கொண்டிருந்தார்.

அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்…

இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட.. கடுப்பாகிப்போன ஹியூம்… ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு… தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சரியாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.

பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக் கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்..

பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்..

இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக் கொண்டிருந்தார்கள்.

இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.

இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.

ஹியூமை விட அதிகபடியான ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே...

பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்..

மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகளும் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.

வாணில் இருந்து சில (9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார்..

அதே வேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது..

எனவே ஹனுமார் ஒரு ESP மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகழ் எய்தி இருக்க கூடும்...

இசுரேல் அற்புதமான நாடு என கூறுபவர்களுக்கு...


மலர் மருத்துவம்...


உடல்நலக் கோளாறு என்பது மனதின் வெளிப்பாடே. மனதைச் சுகமான நிலையில் வைத்திருப்பதால், உடலும் சுகமடைகிறது என்பதே இதன் அடிப்படைத் தத்துவம்.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு இந்த மருத்துவம் உதவுகிறது.

ஒருவருடைய உடல் பகுதி பகுதியாக வலிக்கிறது என்றால், உடல் இறுக்கமடைந்து விட்டதாகக் கொள்ளலாம். அப்படிப்பட்டவருடைய மனநிலையும் அதுபோலவே இருக்கும்.

இவருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது. சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார். இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.

இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதே நேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.

பிரச்சினைகளுக்கு உதவி...

முதுகு வலி உள்ளவர்களுக்குப் பணம் அல்லது உறவு குறித்த கவலையோ, பயமோ இருக்கலாம். இதைப் போக்க கார்ஸ், மிமுலாஸ் என்கிற மருந்துகள் உதவும். இதனால் முதுகு வலி குறையும்.

டீ, காபி, வெற்றிலைப் பாக்கு, மது, சிகரெட் பழக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் மலர் மருந்துகள் உண்டு.

பரு, தோல் பிரச்சினை, தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகளுக்கும் மலர் மருந்து உண்டு.

இந்தச் சிகிச்சையைத் தருவதற்கும் கற்றுக் கொள்வதற்கும், அனுபவமும், தீவிர ஆர்வமும், உள்ளார்ந்த பார்வையும் அவசியம். அப்படிப்பட்ட ஒருவரிடம் சிகிச்சை பெறும் போது மலர் மருத்துவம் தரும் பலன்களை உணரலாம்.

அகத்திப்பூ:   பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும்சூட்டையும் நீக்கும்.

முருங்கைப் பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வை அதிகமாக்கும்.

செந்தாழம் பூ: தலைவலி தீரும். கபம்,ஜலதோஷம், க்ஷயம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்த்திப் பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

வாகைப்பூ:  கசப்பு சுவையுடைய இப்பூவினால் சுட்டால்  உண்டாகும் நோயை  நீக்கும்.

இலுப்பைப்பூ:  நல்ல சுவையுடைய  இப்பூவினால் பாம்பின் விஷம் நீக்கும், வாத நோய்  குணமாகும்.

புளியம் பூ:  மலையை சார்ந்த காட்டில் முளைக்கும்  இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.                       

மாதுளம் பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி,  இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும். உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.           

வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்குநோய்கள், ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்                    .

பனம் பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம் பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ: சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை  குணமாகும். விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும்,

குருக்கத்திப்பூ: கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம்,  புண் பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்

மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும்.உடலுக்கு சூட்டை அளிக்கும். அதிகப் பால் சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால் சுரப்பு குறையும்.

பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்து விரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்

மந்தார்ப்பூ:  உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம் பூ: இதனை முகர வாந்தி நிற்கும். உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ:  கரப்பான், சொறி, சிறங்கு, பால்வினை நோய் ஆகியவை நீங்கும். ஆனால் பித்த மயக்கம் ஏற்படும்.             

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும். வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு, ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்.

செண்பகப்பூ: வாத, பித்த நோய்,  எலும்பு காய்ச்சல்,  பால்வினை நோய், விந்து விரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

இந்தப் பூவை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி,  நீங்கும். தலைமுடி நன்றாக வளரவும், கருமை நிறத்தினை தரும்.

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும்.

காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி, பால்வினை நோய் குணமாகும்...

மறதி மக்கள் தேசிய வியாதி...


விஷமாக மாறிவரும் இட்லி தோசை மாவு. உஷார் மக்களே...


 கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதினால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள். அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்.

அனால் இதன் விளைவு, சாதாரண இட்லி தோசைக்கான மாவை அரைப்பதற்கு கூட நேரம் இல்லை. கடைகளில் விற்கப்படும் மாவில் கலக்கப்படும் உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. அனால் உண்மையில் மாவு சுகாதாரமாக தான் தயாரிக்கப்படுகிறதா?

மாவை வெள்ளை நிறமாக காட்ட அதில் பிளீச்சிங் பவுடர் கலப்பதில் இருந்து, அதில் புளிப்பு வாசனை வராமல் இருக்க பலவித கெமிக்கல்கள் கலக்கப்படுவதோடு அதில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம் போன்றவையும் கலக்கப்படுகின்றன என அவ்வவ்போது குற்றசாட்டுகள் எழுதவண்ணமே உள்ளன.

அதே போல் மாவை அரைக்க பயன்படுத்தும் தண்ணீர் சுத்தனமானதா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி தான். சுத்தமான தண்ணீரை கொண்டு மாவரைக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கே பல நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் கூட மாவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை. அப்படியானால் இவர்களுக்கு மட்டும் சுத்தமான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறியே.

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவை உட்கொள்வதால், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலருக்கும் தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் வாங்கும் மாவின் தரம் குறித்து அறிவது மிகவும் முக்கியம்.

அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதும் நோய்வாய்ப்பட்டு போவதும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது.

ஆகையால் முடிந்தவரை பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து. மிளகாய் தூளில் இருந்து மாவு வரை அனைத்தையும் நாமாக அரைத்துக் கொள்வதே சிறந்தது...

தினம் ஓர் முட்டை சாப்பிடுங்கள்...


நாங்கள் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை.. மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்...


உச்ச நீதிமன்றத்தில் நாடு முழுவதும் உள்ள திடக் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்த வழக்குகள் நடைபெற்று வருகின்றது.

இது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் 845 பக்க அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்று நடைபெற்றது.

மத்திய அரசு தாக்கல் செய்த 845 பக்க அபிடவிட்டில் வழக்கிற்கு சம்பந்தமான போதிய தகவல் இல்லை என்பதால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம்.. உங்களிடம் உள்ள குப்பைகளை எங்களிடம் கொட்டுகின்றீர்களா ? நாங்கள் ஒன்னும் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை, நீங்கள் என்ன நினைத்து கொண்டீர்கள் அதிக அளவு பக்கங்கள் கொண்ட அறிக்கைகளை கொடுத்த எங்களை இம்ரஸ் செய்ய பார்க்கின்றீர்களா நாங்கள் இப்ரஸ் ஆகவில்லை இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக் கூறி மத்திய அரசின் அபிடவிட் ஐ ஏற்க மறுத்து தெளிவான விபரங்களுடன் மீண்டும் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


பழநி-கொடைக்கானல் : 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு...


பழநி - கொடைக்கானல் சாலையில் கோம்பைபட்டி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், பழநி - கொடைக்கானல் சாலையில் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் கோம்பைக்காடு பகுதி உள்ளது. இங்கு பளியர் குடியிருப்பு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னி முத்து, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பழங்குடி பளியர் இனத்தவர் வரைந்த பழங்கால பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நவீன தொல்லியல் ஆய்வு நெறிமுறைகள் மற்றும் வழி காட்டுதலின் படி இந்த ஓவியங்ள் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை என வரையறுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறியதாவது...

இந்த ஓவியங்கள் பளியர் குடியிருப்பு மேல் புறம் உள்ள குகை போன்ற அமைப்புடைய பாறைகளில் வரையப்பட்டுள்ளன. ரத்த சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், தற்போது மங்கி செங்காவி நிறமாக உள்ளன. இவை அழியும் நிலையில் உள்ளன. சில ஓவியங் கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

ஒரு ஓவியத்தில் ஒரு விலங்கின் மேல் 2 மனிதர்கள் அமர்ந்திருப்பது போல் வரையப்பட்டுள்ளது. மற்றொரு ஓவியத்தில் ஒரு மனிதனின் தோள் மீது மற்றொரு மனிதன் ஏறி நிற்பது போல் வரையப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மனிதன் தனது வலது கையில் கோடாரியை ஏந்தியிருப்பது போன்றும், அந்த மனிதனின் காலடியில் மற்றொரு மனிதன் வீழ்ந்து கிடப்பது போன்றும் வரையப்பட்டுள்ளன. அடுத்த ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இரு புறமும் சூலம் வரையப்பட்டுள்ளது. சூலம் என்பது சைவ வழிபாட்டை குறிக்கும் சின்னம்.

இந்த சின்னம் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு சடங்குகள் தொடர்பானவையாகும். மற்றொரு ஓவியம் மனிதனின் கை ஓவியம் ஆகும். செங்காவி குழம்பில் கையை பதித்து, அந்த கையை பாறைகளில் பதியவைத்தது போல் உள்ளது.

இது போன்ற ஓவியங்கள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன. 40 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஓவியங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்...

திருவாலங்காடு கோவில் தீ விபத்து , பொது சொத்தை கோவில் தக்கார் கொள்ளை அடிப்பதாக கூறி கோவில் நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்...


கோவில் தக்கார் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்!, இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது...

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம்...


கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார்.

சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.

அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

தமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அபி ஜெயரட்னம், கலப்பு ஊடக கலை மூலம் தமிழ் கதைகளை காப்பாற்றுவதற்கும், கதையளிப்பதற்கும் ஆர்வமாக உள்ளார்.

Jane மற்றும் Finch இன் அகதி குடும்பத்தில் வளர்ந்தவர் தனது தனிப்பட்ட போராட்டங்களுடன் அணுகக்கூடிய ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து வருகின்றார்.

கல்வி தரம் மற்றும் பொறுப்பு அலுவலக சபையில் நியமிக்கப்பட்ட அபி, டொரொண்டோ இளைஞர் சமபங்கு தொடர்பான அமைப்பின் ஆலோசனைகளில் பங்கேற்று வருகிறார்.

பல்வேறு சமூக அரங்குகளில் பேசுகையில், கல்வி மூல பாதை தொடர்பான அவரது வேலைகள் மூலம் வறுமையின் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறார், கல்வியை அணுக வேண்டியவர்களுக்கு உதவுகின்றார் மற்றும் இனவாதத்தின் எதிர்மறையான தாக்கங்களுக்கு ஏதிராக போராடி வருகின்றார்.

“Toronto is Failing Me” தொடரில், டொரொண்டோவில் அதிகரித்துவரும் வருமான இடைவெளியை அபி அம்பலப்படுத்தியதுடன், மாற்றத்தின் டொராண்டோவின் முதல் 30 தமிழ் பெண் முகவர்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

காவல்துறையே திருட சொல்லுகிறது.. சற்று வீடியோ பாருங்கள்...


திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்சத்தில் தீ விபத்து...


இயக்குனர் K.S.ரவிக்குமாரின் உதவி இயக்குனர் K.A.இளங்கோ பழனிச்சாமி இயக்கிய DISEASE குறும்படத்தை பாருங்க.. இயற்கையை பாதுகாப்போம்...


அதிமுக எம்எல்ஏ க்கள் தொலைப்பேசி எண்கள்...