08/02/2018

உபியில் ஒரு பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் அதிகரிப்பு, ஒரே ஊசியை பயன்படுத்தி வைத்தியம் பார்த்த டாக்டர் மீது வழக்கு பதிவு...


உபி மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் 566 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 21 பேருக்கு ஹெச்ஐவி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் 40 க்கும் மேற்பட்டவர்கள் ஹெச்ஐவி யால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விசாரனை நடத்தியதில் அந்த பகுதியில் உள்ள ஒரு மருத்தவர் குறைந்த கட்டணத்தில் ஒரே ஊசியை பலருக்கு போட்டு மருந்து மாத்திரை கொடுத்ததால் வந்ததாக கூறப்பட்டுள்ளது.

அவர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் போலி மருத்துவர் எனக் கூறப்படுகின்றது.

எனினும் மற்றவர்களுக்கு எப்படி ஹெச்ஐவி பரவியது என்பது ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.