21/03/2018

தமிழர் நடுவம் தலைவர் செல்வா பாண்டியர் மரணம்...


கண்ணீர் அஞ்சலி... மீண்டும் தமிழினம் ஒரு போராளியை இழந்தது...

உலக காடுகள் தினம்...


உலகில் பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.

பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.

காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.

நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்...

பாஜக பத்தாள்களுக்கு...


இந்து மதத்த காப்பாத்த எங்களுக்குத் தெரியும் நீங்க மூடிட்டு கெளம்புங்கடா...

ஆகாது - முடியாது - நடக்காது என்ற வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள்...


நீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் ·புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் "இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.

திடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். "ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்"

இப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் 'இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது" என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும் negative மனிதர்கள் இவர்கள்.

பல பேருடைய ஆகாது-முடியாது-நடக்காது அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலமாகவோ, ஆழ்ந்த அனுபவ மொழியாகவோ இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தங்கள் அறிவுக்கெட்டாதவைகளையும், தங்களால் சாதிக்க முடியாதவைகளையுமே இவர்கள் இப்படி சொல்லத் துவங்குகிறார்கள்.

எல்லா நல்ல காரியங்களும், சாதனைகளும், இவர்களைப் பொருட்படுத்தாமல் முயல்வதாலேயே நடக்கிறது. யாராவது இவர்களைப் பொருட்படுத்தி தயங்க ஆரம்பித்தால் அவர்கள் சாதனைகள் குறைப் பிரசவத்தில் உயிரிழக்கின்றன. எத்தனை அருமையான எண்ணங்கள், அருமையான திட்டங்கள் இப்படி மற்றவர்களது எதிர்மறை நோக்குகளாலும், பேச்சுகளாலும் விதையிலேயே கருகி விடுகின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பெரிய சரித்திரம் படைக்கும் விஷயங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன தினசரி வாழ்க்கை விஷயங்களில் கூட இந்த மனிதர்கள் மற்றவர்கள் வாழ்க்கையைத் தேக்கமடையச் செய்து விடுகிறார்கள். மற்றவர்களது திறமைகளை 'இது பெரிய விஷயமில்லை, இதனால் பெரிய பயன் இல்லை' என்றெல்லாம் சொல்லி முளையிலேயே கிள்ளி விடும் இவர்கள் சில சமயங்களில் தயாராக சில உதாரணங்களையும் வைத்திருப்பதுண்டு. "இப்படித் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்...."

தங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. அப்படி உறுதியாக இல்லாதவர்கள் போகின்ற பாதை சரியாக இருந்தாலும், தங்கள் பாதையில் சந்தேகம் கொண்டு பயணத்தை நிறுத்தியோ, மாற்றியோ தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.

எனவே இப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக விலகி இருங்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருப்பது மிக நல்லது. அவர்களுக்குப் புரிய வைக்கவோ, உங்கள் தரப்பு வாதங்களை தெளிவு படுத்தவோ முயலாதீர்கள். அது வீண். எதையும் திறந்த மனதோடு கேட்டு தீர்மானிப்பவர்களாக இது போன்ற மனிதர்கள் என்றும் இருப்பதில்லை. முன்பே தீர்மானித்து விட்டவர்களிடம் நீங்கள் விளக்க முயல்வது கவிழ்த்து மூடிய குடத்தில் தண்ணீர் நிரப்ப முயல்வதற்கு சமம். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தந்து விடாதீர்கள்.

இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான நோயாக எய்ட்ஸை சொல்வார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை முற்றிலும் அழித்து எல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல்களுக்கும் நம் உடலை எதிர்ப்பில்லாத இரையாக்குகின்றது இந்த நோய். இந்த அவநம்பிக்கையும் அதைப் போலவே கொடுமையானது. வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து எந்த சவாலையும் சந்திக்க முடியாத நிராயுதபாணியாக நம்மை ஆக்கி விடுகிறது இந்த அவநம்பிக்கை என்னும் நோய்.

கடைசியாக ஒரு வார்த்தை - இந்த ஆகாது-முடியாது-நடக்காது என்னும் அவநம்பிக்கை சொற்களை நீங்களும் மற்றவர்களிடம் எப்போதுமே கவனக் குறைவாக பயன்படுத்தாதீர்கள். அந்த நோயை இந்த சமுதாயத்தில் பரப்பும் சாதனமாக என்றுமே மாறி விடாதீர்கள்...

திராவிட ஆரிய இந்திய மாயைகளில் சிக்கி சீரழிந்து போன தமிழன் எப்படி மீள போகிறான்? எப்போது நாட்டை ஆளபோகிறான்?


யாரும் இங்கே புதிதாக தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்க வில்லை..  மூத்த தமிழ் அறிஞர்கள் செய்த அரும்பணிகளை மறந்து போனதால் நினைவூட்டுகிறோம்..

பன்னாட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகிபோன தமிழன் - தமிழ் தேசியத்தை அறிய தவறிவிட்டான்...

தாய் மொழி வழி கல்வியை மறந்து விட்டதால் இப்படி தாழ்வான நிலைக்கும் , சொந்த மண்ணில் வேலை
வாய்ப்பிற்கும் ஏங்கி தவிக்கிறான்..

ஈழத் தமிழர்களுக்காக இப்போது குரல் உயர்த்தி பேசும் தமிழக தமிழர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ பேசியதுண்டா?

அதைப்பற்றி நமக்கு என்ன கவலை . நாம்தான் சுயநல பதர்களாகிவிட்டோம். சாதியால் பிரிந்து கிடக்கின்றோம் .

கல்வி வேலைவாய்பு, பொருளாதாரம், கலை , நாகரிகம் , பண்பாடு, இன உணர்வு என எல்லாவற்றிலும் பிளவுபட்டு கிடக்கின்றோம்.

இந்த பிளவு நிலைத்திருக்க வேண்டும் என்பதில் திராவிடம் பேசுபவர்கள் ஒரே அணியாக செயல்படுகின்றனர்...

பல நூற்றாண்டு காலமாக இந்த மண்ணையும் மக்களின் உழைப்பையும் சுரண்டி பிழைக்கும் தெலுங்கர், மலையாளி, கன்னடர், மார்வாடி வடவர்களை நாம் ஏன் புறகணிக்க கூடாது ?

உண்மை கசக்கத்தான் செய்யும்...

முரண்பாடுகளை களைய வேண்டும் இன பற்று தான் நம்மை வாழ வைக்கும் ஆளவைக்கும்...

நீங்கள் ஒன்றும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக வேலை செய்ய போவதில்லை...


என்னுடைய பதிவுகள் அனைவரின் வாழ்வாதாரத்திற்கானது.. அந்த வாழ்வாதாரத்தில் நீங்களும் அடங்குவீர்கள்...

திராவிட கருப்பு சட்டைகள் பூரா சும்மா வாய் பேச்சு தான். திமுக செயல் சும்மா வெத்து வேட்டுங்க...


புதுக்கோட்டை அருகே RSS ஹிந்துத்துவா தீவிரவாதிகள்  பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்...

இதை ஒரு கேள்வினு பாஜக முட்டா பக்தாள் கேக்குறானுங்க..


அடேய் இது மத யாத்திரை அல்ல உன் அரசியல் யாத்திரை எதிர்க்க தான் செய்வோம்...

வகுப்பு பாடத்துடன் விவசாயம் கற்பிக்கும் கொத்தவாசல் அரசு நடுநிலைப்பள்ளி...


பள்ளி அருகாமையில் உள்ள இடத்தில் மாணவர்கள் கீரை, தக்காளி, வெங்காயம், பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய் போன்ற காய்கறிகள் இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்கின்றனர்.

அவ்வாறு விளையும் காய்கறிகளை தங்கள் மதிய சத்துணவிற்க்கு பயன்படுத்துகிறார்கள்...

இதோ.. ISO தர சுத்திகரிப்புடன் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலை...


நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு...


இதை நாம் முறையாகப் பின்பற்றினால் வைத்தியரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை...

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ச(ஜ)வ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்...

பணம் நிம்மதி தராது...


டைனோசர் பற்றி எப்படி அறிந்தனர்.?


அங்கோர் வாட் கோவில் கம்போடியாவில் சோழ அரசின் கட்டிட கலையை பிரதிபளிக்கும் சூரியவர்மனால் கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான அந்த கோவில் இன்று உலக நாடுகளை வியக்க வைக்கும் ஒன்றாக திகழ்கிறது.

அந்தகோவிலில் பல சிற்பங்கள் காணபடுகிறது அதில் மான் , கிளி , அன்னம் , குரங்கு , எருமை போன்ற விலங்கு மற்றும் பறவைகளின் சிறு சிலைகள் காணமுடியும் .

அதில் வியக்க தக்க ஒன்று என்னவெனில் டைனோசரஸ் வகையில் ஒன்றான ஸ்டாக்கோஸசரஸ் (Stegosaurus) இன் உருவம் பொறிக்க பட்டுள்ளது.

அதிசயம் என்னவெனில் முதன் முதலாக டைனோசர் 1842 ஆம் ஆண்டு சர். ரிச்சர்ட் ஓவென் என்பவரால் அறிமுகபடுத்தபட்டது.

அதுவரை மக்கள் மற்றும் அறிவியலாளர்கள் அதை பற்றி அறியாமல் தான் இருந்தனர்.

இப்படி இருக்க 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில் எப்படி அந்த சிலை பொறித்தனர் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருகிறது...

இன்னும் அரசுகளை நம்புகிறீர்களா..?


உலகின் முதல் ஆய்வாளன் தமிழன்...


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்...

கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்து பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால் 1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு).

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால் 50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல் 180 km/hr எனினும்.

இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது . 45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km) இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km ).

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினம் தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்...

பொது மக்கள் காவல்துறையிடம் புகார்...


இன்று கதிராமங்கலத்தில் பரபரப்பு கடலில் சாகர் மாலா.. நிலத்தில் பாரத் மாலா.. இனி மீனவனும், விவசாயியும் அகதியாவது நிச்சயம்...


பாரத்மாலா திட்டத்திற்க்காக நிலத்தை கையகப்படுத்த வந்த வடமாநில தொழிலாளர்களை சிறை பிடித்த ஊர் மக்கள்...

திருட்டு வந்தேறி திராவிடர்களே...


காவிரியில் காட்டிக்கொடுப்பு
கச்சத்தீவில் கழுத்தறுப்பு
பாலாற்றில் காட்டிக்கொடுப்பு
முல்லைப்பெரியாற்று உரிமை விட்டுக்கொடுப்பு...

தமிழத்தில்.. அணுஉலை, மீத்தேன், கெயில், நியூட்ரீனோ, சாகர்மாலா போன்ற அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி...

தமிழ்நாடு முழுக்க தெலுங்கருக்கு சிலைகள்..

கருணாநிதி கட்டிய சட்டமன்றத்திற்கு தெலுங்கன் ஓமந்தூரார் பெயர்..

சென்னையின் ஒவ்வொரு தெருவுக்கும் தெலுங்கன் பெயர் தெலுங்கர் சிலைகள்.

பூங்காக்கள் தோறும் தெலுங்கரின் பெயரில்.

தமிழ்நாட்டு இசையோ தெலுங்கில்..

பள்ளிகளிலோ தமிழே இல்லை.. ஆங்கிலம்..

சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்று மேடை தோறும் பேசினாலும் மாதத்திற்கொரு சாதிச்சண்டை..

ஆளுங்கட்சி தெலுங்கன் என்றால் எதிர்க்கட்சி கன்னடன்..

மீண்டும் ஆளுங்கட்சி கன்னடர் என்றால் எதிர்க்கட்சி தெலுங்கர்...

அவனை விட்டால் அதற்கடுத்து வருவதற்கு தயாராய் மற்றொரு தெலுங்கன்..

இங்கே தமிழர்கள் கட்சி தொடங்கினால் அது சாதிக்கட்சி..

வந்தேறிகள் தொடங்கினால் அது திராவிடக் கட்சி..

குடிமகன்களாக தமிழர்கள் ஆக்கப்பட்டுள்ள அவலம்..

கூலிகளாக தமிழர்கள்..
வந்தேறிகள் கையில் தொழில்;
வளம்; அதிகாரம்; ஊடகம்...

உணவகம் முதல் கக்கூஸ் ஏலம் எடுப்பது வரை வந்தேறிகள் கையில்..

இப்படி இந்த நூறு ஆண்டுகளில் உங்கள் திராவிடத்தால் நீங்கள் சாதித்தது என்ன?

உங்கள் திராவிடத்தின் கொள்கை பிராமண ஒழிப்பா? தமிழின ஒழிப்பா?

பாஜகவிற்கு மாமா வேலை பார்க்கும் அதிமுக அரசே...


சென்னை மாணத்தில் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் மற்றும் தமிழர் ஆகிய நான்கு இனத்தவரும் இருந்தபோதே 52.5 சதவீத மக்கள் தமிழர்கள்...


அப்படி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் பார்ப்பனரை (அல்லது பார்ப்பனீயத்தை) அழிக்கவே அவதாரம் எடுத்ததாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் உங்கள் தாய்க்கழகமான நீதிக்கட்சி 1920 இல் முதல்முதலாக தேர்தலில் போட்டியிட்டது தொடங்கி தான் அமைத்த 6 மந்திரி சபைகளிலும் "தெலுங்கரை மட்டுமே" முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது. அமைச்சரவைகளில் கூட தெலுங்கர்களையே அமைச்சர்களாக்கியது.

நடேசனார் போன்ற நீதிக்கட்சித் தமிழர்கள் தமிழருக்கு அதிகாரம் தரவில்லையே என்று குற்றம் சாட்டிய பிறகு ஒப்புக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கொடுத்தது. ஆனால் நடேசனார் என்ற தமிழர் நீதிக்கட்சியில் தமிழருக்கு அதிகாரம் கேட்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பிட்டி தியாகராயர் (இன்றைய தி.நகர் என்ற பெயருக்கு சொந்தக்காரர்) அடுத்து வந்த தேர்தலில் தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த நடேசனாருக்கே யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தார் இது வரலாறு.

இப்படிப்பட்ட தெலுங்கு வெறி பிடித்த நீதிக்கட்சிதான் தன்னை கன்னடர் என்று சொல்லிக்கொண்ட ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கைக்கு தலைமை தாங்குமாறு வருகிறது. அப்போது அந்தக் கட்சியில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஏன் நீதிக்கட்சியிலேயே தமிழராக பார்ப்பனிய எதிர்ப்பாளராக யாரும் இல்லையா? இருந்தார்கள். பி.டி.ராஜன் இருந்தார். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இருந்தார். பட்டிவீரன்பட்டி சவுந்தர்ராஜன் இருந்தார். மெத்தப் படித்தவர்களாக, நல்ல மேடைப்பேச்சாளர்களாக, சிறந்த அமைப்பாளர்களாக இருந்தார்கள்.

ஆனால் கட்சியிலேயே உறுப்பினராக இல்லாத, தன்னை கன்னடன் என்று சொல்லிக்கொண்ட தெலுங்கரான பெரியரிடம்தானே நீதிக்கட்சி ஒப்படைக்கப்பட்டது.

அதுவரை நீதிக்கட்சியோ ஈ.வே.ராமசாமி நாயக்கரோ திராவிடம்; திராவிட நாடு; தமிழ்நாடு; தமிழ்நாடு தமிழருக்கே என்பது பற்றியயல்லாம் அறிந்திருந்தது கூட இல்லை என்பதை அவருடைய மற்றும் நீதிக்கட்சியின் வரலாற்றின் மூலமாக அறிகிறோம்.

அதுமட்டுமல்ல 1937 ஆம் ஆண்டு தனித்தமிழியக்கத்தினர் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கோரிக்கையை ஓங்கி ஒலித்து இந்தியை எதிர்த்துப் பேராட்டம் நடத்தியது வரை "திராவிடம்" குறித்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிந்தித்ததே இல்லை. தமிழர்கள் எல்லாம் விழித்தெழுந்து தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறத்தொடங்கிய பிறகே திராவிடம் என்ற கருத்தை அரசியல் அரங்கில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ்நாடு தமிழருக்கே என முதலில் முழங்கியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லை என்பதை அறியலாம்.

நீதிக்கட்சியாக இருந்த வரை தமிழருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காத, கொடுக்க விரும்பாத அந்த இயக்கம் தன் கைக்கு வந்த பிறகு, அதன் பெயரை மாற்றும் அந்த விழாவிலாவது அதனை தமிழருக்கான இயக்கமாக மாற்றினாரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்? இல்லையே... அதற்கு அவர் கூறிய காரணம்.. நான் கன்னடியன், சிற்றரசு தெலுங்கர்... எனவே இதற்கு திராவிடர் கழகம் என்று பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழருக்கான ஒரு இயக்கமே இல்லாது ஒழித்தவர்தானே ஈ.வே.ராமசாமி நாயக்கர்...

அதன் பிறகு அந்த திராவிட வாதத்தை எங்களை ஏற்க வைக்க உங்களால் கூறப்பட்டது தானே பார்ப்பனன் வாதம்...

தமிழன் என்று நீங்கள் சொல்லிக்கொண்டால் உங்களுடன் பார்ப்பனன் சேர்ந்து விடுவான் என்று எங்களை எச்சரித்த "தமிழர் தலைவர்" ஈ.வே.ராமசாமி நாயக்கர்... "திராவிடன்" என்று நாங்கள் சொல்லிக்கொண்டால் எங்களுடன் தெலுங்கு கன்னட மலையாளிகள் சேர்ந்து விடுவார்கள் என்பதை அறியாதவரா?

அவரே தான் சொல்கிறாரே.. தமிழன் என்று சொன்னால் உங்களுடன் நான் இணைந்து கொள்ள முடியாது என்று....

இவரது பார்ப்பன எதிர்ப்பு என்பது தெலுங்கர் ஆதரவுதான் என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

1925ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியும் சுயராஜ்யக் கட்சியும் போட்டியிட்டன. நீதிக்கட்சி தெலுங்கருக்கான கட்சி என்பதால் சிறிது சிறிதாக வலுவிழந்து வந்த காலகட்டம் அது. எனவே அதன் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டி இருந்ததால் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு நீதிக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான பனகல் அரசர் (இன்றைய பனகல் பூங்கா பெயருக்கு உரியவர்) ஈ.வே.ராமசாமி நாயக்கரிடம் கேட்டுக்கொள்கிறார். அதனை ஏற்று நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

ஆனால் 1928இல் அடுத்து வந்த வட ஆர்க்காடு இடைத்தேர்தல் ஒன்றில் நீதிக்கட்சி சார்பாக பத்மநாப முதலியாரும் சுயராஜ்யக் கட்சி சார்பாக வெங்கட்ரங்கம் நாயுடு என்ற தெலுங்கரும் போட்டியிட்ட போது, சில பத்திரிகைகள் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிடும் பத்மநாப முதலியாருக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிரச்சாரம் செய்யப் போவதாக எழுதிய போது அதை மறுத்து குடியரசு 7.2.1928 இல் வெளிவந்த கட்டுரையில் "இதுவரையிலும் இதற்காக ஒருவருக்கு அனுகூலமாகவோ, மற்றொருவருக்கு பிரதிகூலம் செய்யவோ, நாம் எண்ணவுமில்லை. அப்படி அனுகூலமாகவும், பிரதிகூலமாகவும் இவர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டியது இது சமயம் அவசியமுமில்லை என்பதே நமது முடிவு. அவசியமென்று கருதினால் கட்சியையோ சட்டத்தையோ பழியையோ கருதி பயந்து கொண்டிருக்கப் போவதுமில்லை. ஸ்ரீமான் நாயுடுவையும் (சுயராஜ்யக்கட்சி வேட்பாளர்) நமக்கு 6,7 வருட­ங்களாகத் தெரியும். அவர் எவ்வளவுதான் 'பிராமணர்களோடு கட்டிப்புரண்டு திரிந்தாலும்' அவருடைய அந்தரங்கமானது பிராமணரல்லாதார் வி­சயத்தில் அனுதாபமாகவேதானிருப்பதை அறிந்திருக்கிறோம். இவ்வறிவுக்கு மாறுதல் ஏற்படுகிற காலத்தில் நமது கடமை என்னவென்பது நமக்கே தெரியும். ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி (நீதிக்கட்சி வேட்பாளர்) நல்லவரென்றும், பரோபகார உழைப்பில் கொஞ்சகால ஈடுபட்டவரென்றும் கேள்விப்பட்டதே இல்லாமல் நேரில் பார்த்ததே இல்லை." (சுயராஜ்யக்கட்சி பார்ப்பனர்களின் கூடாரம் என்று அந்தக் கட்சியை தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்கக் கூடாது என்று தான் கூறியதை ஏற்கவில்லை என்பதால் காங்கிரசில் செயல்பாடு அற்று இருந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் நிலைப்பாடு என்பது. வேட்பாளர் தெலுங்கரா தமிழரா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறியலாம்.)

சுயராஜ்யக்கட்சியில் தெலுங்கு மொழி வேட்பாளர் என்றதும், அவர் பார்ப்பனரல்லாதார்க்கு ஆதரவானவர் என சான்றிதழ் அளித்து பெருமைப்படுத்தும் ஈ.வே.ராமசாமி நாயக்கர். அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தேவை இல்லை என்கிறார்.

இதே போன்றுதான் கருத்துக்களை மாநில எல்லைப் பிரிவினையின் போதும் வைக்கிறார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

அதாவது மலையாளிகள் தமிழ் மண்ணைப் பறிக்கும்போது மலையாளிகளுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்.

ஆந்திர கன்னடரிடம் தமிழ் மண் பறிபோகும் போது அவர்களுக்கே ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்.

ஆந்திரனும் கன்னடனும் ஒட்டுமொத்த நாட்டையுமா கொண்டுபோகப் போறான்... ஏதோ நமக்கும் நாலு ஊர் உட்டுட்டுப் போவான் அது நமக்கு போதும்" என்கிறார்.

இவர்கள் நம்மை திராவிடர் என்று வரையறுத்து நம்ப வைத்ததால்தானே தமிழரல்லாத யார் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் அவர்கள் திராவிடர்கள என்ற எண்ணத்தில் நம்பிக்கையில் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கிறது தமிழ்ச் சமூகம்...?

தமிழ்நாட்டை தெலுங்கனையும் கன்னடனையும் மலையாளியையும் ஆள வைத்ததைத் தவிர வேறு எந்த காரியத்தை திராவிடத்தால் செய்ய முடிந்திருக்கிறது? செய்திருக்கிறது?

இன்றைய காவிரி சிக்கல் தொடங்கி பாலாறு முல்லை பெரியாறு சிக்கல் வரை நாம் நமக்கு சொந்தமான எல்லைகளை இழந்ததுதானே காரணம்.

தமிழரல்லாதார் தமிழ்நாட்டை ஆண்டு வருவதால்தானே இன்றைய ஈழ துரோகம் முதல் கூடங்குளம் துரோகம் வரை நடந்தேறியிருக்கிறது?
இதை யாரும் மறுக்க முடியுமா?

கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தனக்கு அணு உலை வேண்டவே வேண்டாம் என்று விரட்டி அடிக்க முடிந்தது.. கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தன் நாட்டு மீனவனை சுட்டுக்கொன்ற இத்தாலிக்காரனை சிறை வைத்து வழக்குபோட முடிந்திருக்கிறது. சுட்டவன் சோனியாவுக்கு சொந்தக்காரன் என்பதால் மலையாளி விட்டுவிட்டானா? அல்லது இந்தியாவுக்கு பயந்து கொண்டு முல்லைப்பெரியாற்றில் முழுக்கொள்ளளவு நீரைத் தேக்க சம்மதித்துவிட்டானா? அவனும் இந்தியாவில்தானே இருக்கிறான்.

நம் தமிழ்நாட்டு அரசுகள் மட்டும் தொடர்ந்து தமிழருக்கு துரோகம் செய்யும் சூழ்ச்சி என்ன?

நமக்கு உரிமையான காவிரித் தண்ணீரை வைக்கோலைக் கொடுத்து பெற்றுக்கொள்கிறோம் என்று உடன்பாடு போட்டு வாங்கியவர்தானே மலையாளியான எம்.ஜி.ஆர்?

அதே மலையாளி எம்.ஜி.ஆர் முல்லைப் பெரியாறு உரிமையை கேரளாக்காரனுக்கு விட்டுக்கொடுத்தாரா இல்லையா?
அது எந்த பாசத்தில்?

பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பானைக் காட்டி ஆட்சி அதிகாரத்தில் குந்திக்கொண்ட தெலுங்கரும் மற்றவர்களும் எந்த பார்ப்பன ஆதிக்கத்தை இதுவரை ஒழித்திருக்கிறார்கள்?
தமிழரை ஒழித்ததை தவிர?

தான் பிறந்த மண் என்ற காரணத்தால் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுத்துவிட்டால் இந்தியாவிற்கு தன்னால் பிரதமராக முடியாது என்பதால், வலுக்கட்டாயமாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து தன் பதவி வெறியை தீர்த்துக்கொண்ட நேருவுக்கும் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் என்ன வித்தியாசம்?

இவர்களின் தலைமை மோகத்தால் இன்றைக்கு அழிந்து கொண்டிருப்பது காஷ்மீரும் தமிழ்நாடும் தானே..

வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திராவிடம் என்று சொல்லை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தமிழின் மேல் திணித்து எங்களையும் திராவிடர்கள் என்று நம்பவைத்து இன்றுவரை ஒரு தமிழன் கூட ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் நீங்கள் செய்திருக்கும் இந்தக் கழுத்தறுப்புக்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா?

உங்கள் பேச்சை நம்பி..
திராவிட வேடத்தை நம்பி..

மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழருக்கான மாநிலமாக சென்னை மாநிலம் அமைக்கப்பட்ட பிறகும் கன்னடராக; தெலுங்கராக; மலையாளிகளாக; நீங்கள் இருந்த போது கூட, உங்களை நம்பி, எங்கள் சூத்திரப் பட்டத்தை துடைத்தெறிவீர்கள் என்று கனவு கண்டு "எங்களுக்கு தலைமை தாங்க வக்கில்லை" என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதைக் கேட்டு ரசித்துக்கொண்டு உங்கள் தலைமைகளை நாங்கள் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டோம்.

சரி... வந்தேறிகளான நம்மையும் இந்த மடப்பயல்கள் நம்பி விட்டார்களே இனியாவது இவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்று உங்கள் திராவிடத் தலைவர்கள் எங்களுக்கான ஏதாவது ஒரு உரிமையை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா?

நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட அனுமதி மறுத்த அரசு . விஹெச்பி ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது ஏன் ? யாரை திருப்பிபடுத்த இந்த அனுமதி ? - டிடிவி தினகரன் விஹெச்பி ரத யாத்திரைக்கு கண்டனம்...


எல்லாவற்றிற்கும் வந்தேறிகள் தலைமை என்றால்... நாங்கள், தமிழர்கள் தமிழ்நாட்டில் எதற்கு புல் புடுங்கவா?


3 சதவீத பிராமணர்கள் ஆள்வது தமிழனுக்கு வெட்கக்கேடு என்று முழங்கிய "ஈ.வே.ராமசாமி நாயக்கரின்" வாரிசுகள் வளர்த்த கட்சிகளால் இன்று மொத்தமாக ஒரு 600 பேர்கூட தேறாத சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ஆளும் அளவிற்கு தமிழ்நாடு ஆக்கப்பட்டிருக்கிறதே....

இதுதான் உங்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தத்துவமா?

சிறுபான்மை கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அது துரோகம்; பச்சை துரோகத்தைதான் ஈனும் என்று உங்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர் முழங்கிய அடிப்படையிலேயே பார்த்தால் கூட...

இன்று தமிழ்நாட்டை எந்த பெரும்பான்மை ஆள்கிறது?

மள்ளரா?
மறையரா?
வன்னியரா?
நாடாரா?
முக்குலத்தோரா?
கொங்கு வேளாளரா?

இப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த பெரும்பான்மைச் சமூகங்களுமே ஆள முடியாத நிலையில் வைத்திருப்பதற்குத்தான் உங்கள் சாதி ஒழிப்புக் கொள்கையா சொல்லுங்கள்?

இதுவரை ஏமாந்த தமிழர்கள் நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். உங்கள் போலி பிராமண எதிர்ப்பால் திராவிடக் கூச்சலால் பார்ப்பனனின் ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

ஏனெனில் நீங்கள் நடத்துவது உண்மையான பிராமண எதிர்ப்பு அரசியல் அல்ல..

அப்படி உண்மையில் நீங்கள், உங்கள் திராவிட அரசியல், எங்களுக்காக உழைத்திருந்தால், இந்த நூறு ஆண்டுகளில் உண்மையாகவே சாதியை ஒழித்திருப்பீர்கள்..

பிராமணியத்தை அடித்து நொறுக்கி இருப்பீர்கள்..

உண்மையான மண்ணின் மைந்தர்களை ஆள வைத்திருப்பீர்கள்..

ஆனால் நூறு ஆண்டாக இவை எதையுமே செய்யாத நீங்கள்...

உங்களால் பாதிக்கபட்டு; ஆட்சி உரிமையை இழந்து.. இங்கே படையயடுத்து வந்தவர்களிடமும் பிழைக்க வந்தவர்களிடமும் இன்னமும் இட ஒதுக்கீட்டு பிச்சை போடுங்கள் என்று மண்ணின் மைந்தர்கள் நாங்கள் கெஞ்சி கூத்தாடி.. எங்கள் ஈழ உறவுகள் துடிக்கத் துடிக்க எங்கள் கண்ணெதிரேயே கொல்லப்பட்டபோது கையறு நிலையில் கதறி... எங்கள் மண்ணை; எங்கள் வளங்களை; மணலை; தண்ணீரை; கண்ட பொறுக்கிகளும் கூறு போட்டு விற்கும்போது கலங்கி துடித்து... வேண்டாம் திராவிடர்களே எங்களை விட்டுவிடுங்கள்..

நீங்கள் கூறிய இந்த ஆரிய அடிமைத்தனத்திடமிருந்து எங்களை மீட்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை நாங்கள் உணரத் தொடங்கி விட்டோம்...

எங்களுக்கான விடுதலையை நாங்களே முன்னெடுத்துக் கொள்கிறோம் என முன் வரும் போது..

மறுபடியும் அதே பழைய பிராமணப் பூச்சாண்டியை எங்களிடம் காட்டி, "திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று தொடைதட்டிக் கிளம்பியிருக்கும் வீரதீரசூரப்புலிகள் எங்கே" என்று எங்களை நோக்கியே நீங்கள் உங்கள் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினால், மறுபடியும் நீங்களே எங்களுக்கான நிரந்தரங்கள் என்று அடங்கிப்போய்.. அய்யோ பிராமணர்களை ஒழிக்க வந்த பரமாத்மாக்களே என்று கைகட்டி வாய்பொத்தி திராவிடம் வாழ்க.. என்று மீண்டும் எங்கள் அடிமைத்தனத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்வோம் என்று நினைத்தீர்களா? இல்லை.

பிராமணன்  உட்பட எந்த ஆரிய திராவிட வந்தேறிக்கும் இங்கு ஆட்சி உரிமை இல்லை. இது எங்கள் நாடு தமிழ்நாடு..

தெலுங்கனுக்கு ஆட்சி வேண்டுமென்றால் ஆந்திரா ஓடு....

என்று எங்களுக்கான உரிமைகளை நாங்களே கையில் எடுத்துக் கொள்வோம்..

தமிழனுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை என்று உங்கள் தலைவர் கன்னட ஈ.வே.ராமசாமி நாயக்கர் சொன்னதை பொய்யாக்கி... நாங்களே ஆளப்பிறந்தவர்கள்.. எங்கள் நாட்டில் வேறெவனுக்கும் உரிமை இல்லை..

ஆயிரம் உண்டிங்கு சாதி இங்கு அன்னியர் நீங்கள் புகல் என்ன நீதி என்று பாரதி வழியில்.. கணைகளை தொடுத்து நிமிர்வோம் எழுவோம்...

இந்த பூதத்தை இனி எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது..

ஏனெனில் நாங்கள் வெறும் தமிழ் அறிஞர்கள் இல்லை..
தமிழ்நாட்டின் தவப்புதல்வர்கள்...

சசிகலா கணவர் மரணத்தை தொடர்ந்து சசிகலாவிற்கு 15 நாள் பரோல்...


சூரியனும் உணவும்...


பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.

இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது நாசா.

கடந்த ஒரு வருடமாக Hina Manek என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு நாசாவே ஆட்டம் கண்டது. எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.

Sun Gazing அல்லது Sun Eating என்பதை பற்றிய பயிற்சிகள் இதோ.

காலணி ஏதும் அணியாமல் நேராக நின்று கொண்டு சூரியனை பார்க்க வேண்டும்.

சூரிய உதயத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவோ அல்லது சூரிய மறைவிற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவோ தான் இதனை செய்ய வேண்டும்.

உங்களுக்கு வசதியான ஏதேனும் ஒருவேளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது காலையோ அல்லது மாலையோ.

முதல் நாள் பயிற்சியில் வெறும் 10 வினாடிகள் மட்டுமே சூரியனை பார்க்க வேண்டும். அடுத்தநாள் கூடுதலாக 10 வினாடிகள் ஆக 20 வினாடிகள். மூன்றாம் நாள் 30 வினாடிகள்.

இப்படி பத்து பத்து வினாடிகளை மட்டுமே தினமும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இது மிகவும் முக்கியமானது.

இவ்வாறு தொடர மூன்று மாதங்களில் 15 நிமிடங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சூரிய கதிர்களால் மறைந்து போயிருப்பதை காண்பீர்கள்.

இப்படியே ஆறு மாதம் தொடர 30 நிமிடங்கள் தொடக்க கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் உடலில் இருந்த அனைத்து நோய்களும் காணாமல் போயிருக்கும்.

இப்படியே ஒன்பது மாதம் தொடர 45 நிமிடங்கள் பயிற்சியாக கணக்கு வரும். அப்போது உங்கள் உடல் ஓர் உச்சக்கட்ட ஆற்றலை பெற்றிருக்கும், இனி உங்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படாது.

இந்த பயிற்சியை செய்யத் தொடங்கிய நாள்முதல் தினமும் 45 நிமிடங்கள் வெறும் காலில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதீத சக்திகளை பெற்றுத் தரும்.

இனி நீங்கள் எதையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை.

If your mind accepts, Your body adapts...

60000 ஆண்டுகளாக மானுட தொடர்பின்றி வாழும் அந்தமான் Sentinel பழங்குடிகள்...


திராவிடத்துக்கு திராவிட போர்வையில் ஆதிக்கம் செய்யும் தெலுங்கு இனத்துக்கு தமிழனை காட்டி கொடுத்து தமிழனை விற்று பிழைத்து கொண்டு திராவிட ஆதரவில் இருந்து கொண்டு திராவிட பிரசாரம் செய்யும் தமிழ் இனத்தில் பிறந்த தமிழ் கூட்டங்கள் பார்வைக்கு...


கருணாநிதி ஒரு தெலுங்கர். தி.மு.க.விலிருந்து விலகியபோது, எம்.ஜி.ஆரும் இதைச் சொன்னார். அவர் தெலுங்கர் என்பதால்தான் தி.மு.க.வில் தெலுங்கு பேசும் ஏழு பேர் அமைச்சர்களாக இருக்காங்க. தமிழர் என்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தென்னிந்தியர்களைக் குறிக்கும் திராவிடன் என்ற வார்த்தையை தமிழனுக்கும் சூட்டிவிட்டார்கள்’’ என்று பரபரப்பு குண்டுகளை வீசியிருக்கிறார், குடும்பப்பட இயக்குநர் வி.சேகர்.

சென்னையில் பத்திரிகையொன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வி.சேகர், ‘‘தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்னு தயாரிப்பாளர் சங்கத்தில் நான் சொன்னபோது, அங்கிருந்த சிலர் கேலியா சிரிச்சாங்க. கொஞ்சம் கவனிச்சப்பதான் புரிஞ்சது, சிரிச்சவங்க யாருமே தமிழர்களே இல்லன்னு. தயாரிப்பாளர் சங்கத்தோட உயர் பொறுப்புகளில் எப்பவுமே தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் தான் இருக்கிறாங்க. இதுதான் தமிழ்த்திரையுலகின் பரிதாபநிலை.

ஒரு காலத்தில இந்தியா முழுக்க இருந்தவங்கதான் தமிழர்கள். தென்னிந்தியாவில் இருந்த ஒரு பிரிவினரை மட்டும்தான் திராவிடர்னு சொல்லு வாங்க. தமிழனும் திராவிடம்தான்னு பொய் சொல்லிட்டாங்க. பெரியார் சொன்னதுக்காக தமிழன், திராவிடன் ஆகமாட்டான். என் தாத்தாவுக்கு குடுமி இருந் துச்சுங்கறதால நானும் குடுமி வைச்சுக்க முடியாது’’ என்றவர், அடுத்ததாக பேசியதுதான் எல்லோரையும் கூர்ந்து கவனிக்க வைத்தது.

‘‘ஐதராபாத் போயிருந்த போது ஒரு தெலுங்கன், ‘எங்க ஆளுதான் உங்க தமிழ்நாட்டின் முதல்வர்’னு சொன்னான். நானும் புரியாம, ‘இதுக்கு முன்னாடி இருந் தவங்கதான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவங்க. இப்போ இருக்கற கலைஞர் தமிழர்தானே’ன்னு சொன்னேன். அதுக்கு அவன் சிரிச்சிட்டே, ‘யாரு சொன்னா கருணாநிதி தமிழர்னு? அவரு தெலுங்கர்’னு அடிச்சு சொன்னான்.

அப்புறம் விசாரிச்சாத்தான் புரியுது. தி.மு.க.வில இருந்து எம்.ஜி.ஆர். பிரிஞ்சபோது, அவரைப் பார்த்து ‘மலையாளி’ன்னு கலைஞர் திட்டினாரு. உடனே அதுக்கு எம்.ஜி.ஆர், ‘ஆமா நான் மலையாளிதான். ஒத்துக்கறேன். ஆனா தமிழ்நாடும், கேரளாவும் ஒரு காலத்தில ஒண்ணா இருந்துச்சு. ஆனா, நீங்க தெலுங்கர். ஆந் திரா என்னைக்கும் தமிழ்நாட்டோட சேர்ந்து இருந்தது கிடையாது’ன்னு பதிலடி கொடுத்தாரு. இப்பத்தான் புரியுது எம்.ஜி.ஆர். சொன்னது சரிதான்.

உள்ளே இருந்திட்டே கருணாநிதி நெறைய வேலை பாக்கறாரு. அதனாலதான், தெலுங்கைத் தாய் மொழியா பேசற ஏழு பேர் தமிழ்நாட்டில அமைச்சர்களா இருக்காங்க.

கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் தமிழ் பேசற யாராவது எம்.எல்.ஏ.வாகக் கூட இருக்க முடியாதே!’’ என்று சேகர் சொன்னதும், கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘‘டெல்லியிலயும் தெலுங்குக்காரர் நடிகர் நெப்போலியன்தான் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சரா இருக்காரு’’ என்று எடுத்துக் கொடுத்தார்.

அடுத்து பேசிய பெ.மணியரசன், வி.சேகர் பேசிய பேச்சுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ‘‘ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்துக்கு தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி விடுமுறை அறிவிச்சாரு. கேரள எல்லையில இருக்கிற தமிழர்கள் பொங்கல் விடுமுறை கேட்டு அங்கே உண்ணாநிலை இருந்தபோது, அம்மாநில காவலர்களால் தாக்கப்பட்டாங்க. ஆனால், மலையாளிகளின் வாக்குகளைக் குறி வைச்சு ஓணம் பண்டிகைக்கு கோவை மாவட்டத் துக்கு அரசு விடுமுறை அறிவிச்சவர், கருணாநிதி.

இப்போ, ஓணம் பண்டிகைக்கு சென்னையிலும் அரசு விடுமுறைன்னு அறிவிச்சிட்டாரு. தமிழர் நலனைக் குழி தோண்டிப் புதைப்பதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள வித்தியாசம் வேட்டிக்கும், சேலைக்கும் உள்ள வித்தியாசம் தான்’’ என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது...

மரம் வளர்ப்போம்...


தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை.. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை விட்டார்களா?


தமிழா விழித்து கொள்.....

திராவிடர்கள் என்றால் தெலுங்கர், கன்னடர், மலையாளி.. அவர்கள் தான் தமிழ் இனத்தினை சூறையாடி கொண்டு இருகின்றார்கள்..

தமிழ் நாட்டில் திராவிட போர்வையில் உள்ள தெலுங்கர் கன்னடர் மலையாளி
தமிழன் தமிழ் என்று சொல்லி... தமிழ் இனத்துடன் கூட இருந்து குழி பறிப்பது தான்.... தமிழ் நாட்டில் திராவிட சாதனைகள்...

மலையாளிகளின் ஓணத்துக்கு...
தமிழ் நாட்டில் விடுமுறை... கேரளாவில் பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா?

தமிழர் தாய் மண்ணில்.. இந்த தெலுங்கர் மலையாளி கன்னட இனத்தவர்கள் அவர்கள் பாண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை யாரால் கொண்டு வர பட்டது...

திராவிட கட்சிகள்.. திராவிடம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள்...

திராவிட பெயரில் மறைந்து இருக்கும் தெலுங்கு கன்னடர் மலையாளி இனத்தவரால் இந்த விடுமுறை கொண்டு வரப்பட்டது...

தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கும் தெலுங்கர் கன்னடர் மலையாளிகளுக்கு அவர்கள் பாண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை யாரால் கொண்டு வாரபட்டது...

திராவிட கட்சிகள்... திராவிடம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள்.. திராவிட பெயரில் மறைந்து இருக்கும் தெலுங்கு கன்னடர் மலையாளி இனத்தவரால் இந்த விடுமுறை கொண்டு வரப்பட்டது...

அன்று வந்தாரை வாழவும்.. ஆளவும் வைத்தோம்....

இன்று தமிழன் உரிமைகள்.. தமிழர் உடைமைகள்... திராவிடர்களால் சூறையாட பட்டுக்கொண்டு இருக்கிறது...

தமிழா இனி...

வந்தாரை வாழ வைப்போம்
என்பதினை மாற்றி..
வந்தோரை விரட்டி அடிப்போம்....

அப்போது தான்...

தமிழர் இருப்பு உறுதி செய்யப்படும்...
இல்லையென்றால் தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே... அகதிகளாக தான் திரியவேண்டும்...

முதல் படம் கொத்தமல்லி, 2 வது பார்த்தீனியம் எனும் விஷச்செடி, நாம் வாங்கும் கொத்தமல்லி கொத்தில் கலந்து வருது. இதை நீக்கி பயன்படுத்துக...


அதிகமாக ( நாட்கள்) உபயோகபடுத்தினால். இனம் புரியாத தோல் வியாதி, ஆஸதுமா, மூட்டி வலி, கிட்னி பிரச்சனைகள் வரும்...

தமிழ் தேசியவாதம் ஒரு இனவெறி - திருட்டு திராவிடர்கள்...


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ...

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ...

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ...

அது போலவே...

தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே...

மற்ற எல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம்..

தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

சரியா திருட்டு திராவிடர்களே...

பாஜக விற்கு மாமா வேலை செய்யும் அதிமுக அரசே...


திருக்குறள் காட்டும் ஒழுக்கம்...


திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்றுள்ள கருவூலம் திருக்குறள். அது, தமிழர்களின் வழிகாட்டி நூல்.

திருக்குறளுக்குப் பல அறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர்.

மாணவர்களுக்காகத் திருக்குறளை எளிமையாக விளக்கி எழுதிய அறிஞர்களுள் முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் (கி.ஆ.பெ) அவர்களுள் ஒருவர் ஆவார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறளில் உள்ள ‘உயிரினும்’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு அற்புதமான முறையில் விளக்கம் தருகின்றார் கி.ஆ.பெ. அவர்கள்

விழுப்பம் என்பதற்குக் குணம், நலன், புகழ், பெருமை, உயர்வு என்ற பல பொருள் உண்டு எனத் தெளிவாகக் கூறுகின்றார். இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றது உயிர். ஆதலால், ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்ப வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறி இருப்பது போற்றத்தக்கது என்கிறார் கி.ஆ.பெ அவர்கள்.

‘உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை’ என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கின்றார். உண்மையில் உயிரைவிட மேலான ஒன்று உள்ளது. அஃது ஒழுக்கம் மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இதைத்தான் ‘உயிரினும்’ எனும் ஒற்றைச் சொல் தெரிவிக்கின்றது என கி.ஆ.பெ விளக்கம் தருகின்றார்.

உயிருடைய எவரும் உயர்ந்தவராக்க் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின், உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதைத்தான் திருக்குறளின் ‘உயிரினும்’ என்ற சொல், சொல்லாமல் சொல்வதாக மேலும் அவர் விளக்குகிறார்.

மானம் இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டால் அந்த நிலையிலும் ‘மானத்தை இழவாதே’ மாறாக, உயிரை இழந்து விடு’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் உயிரினும் என்ற சொல்லில் ஆணித்தரமாக உணர்த்துகின்றார்.

ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது புலம்பும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கே அந்நிலை ஏற்படுகின்றது. ஆனால், அவன் ஒழுக்கத்தை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை பிறருக்கு ஏற்படுவதில்லை. அந்நிலை அவனுக்கே ஏற்படும் என்ற சிறந்த கருத்தையும் வள்ளுவர் ‘உயிரினும்’ என்ற அருஞ்சொல்லில் புதைத்துள்ளார் என்று கி.ஆ.பெ விசுவநாதம் அழகுபடக் கூறுகின்றார்...

பாஜக பினாமி அதிமுக அரசுக்கு ஆதரவாகவும்.. மக்களுக்கு எதிராகவும். செயல்பட்ட.. செயல்படும்.. காவல்துறைக்கு அந்த அரசே அடித்த ஆப்பு...


திராவிட அரசர் காலத்தில் பிராமணருக்கு தேவதாசிகள் இலவசம்...


விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் முதன்முறையாக, நால்வருணக் கோட்பாட்டின்படி ஆட்சி செய்தது.

விஜயநகரப் பேரரசின் சமூக அமைப்பைப் பற்றி வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது, ‘சமுதாயத்தில் உயர்குடி மக்களாகக் கருதப்பட்டவர்கள் பிராமணர்களாவர். இரண்டாவதாகச் சத்ரியர். மூன்றாவதாக வைசியர்கள், இறுதியாகச் சூத்திரர்கள்’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி / பக் – 98/முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007).

தமிழ் அரசர் ஆண்ட காலத்து வரலாற்றில் பிராமணருக்கான முக்கியத்துவம் குறித்து பூதக் கண்ணாடி வைத்துத் தேடும் ’முற்போக்கு’க் கோட்பாட்டாளர்கள், வெகு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இந்த சீரழிவுகளைப் பற்றி வாயே திறப்பதில்லை.

மரபு வழியாகவே எச்சாதியினரும் பூசை செய்யலாம் என்ற நிலையிலிருந்த பழனிக் கோயிலில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்யக்கூடாது எனத் தடுத்தவர் ’திராவிடர்’ திருமலை நாயக்கர்.

இதற்கான செப்பேட்டுச் சான்று,

`பிராமணர் அல்லாத பண்டாரங்கள் பழனி கோயிலில் பூசை செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் புதிதாகப் பிராமணர்களை நியமித்து அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிட்டு இராமப்பய்யன் செப்பேடு வழங்கியுள்ளார். புலிப்பாணி பாத்திர மரபில் வந்த பண்டாரங்களுக்கும் சிவப்பிராமணர்களுக்கும் எந்த எந்த வேலை என்பதை இராமப்பய்யன் வரையறுத்துள்ளார். திருமலை நாயக்கர் செப்பேடு என்பதில் ஐயமில்லை. செப்பேட்டில் திருமலையின் பெயரும் உள்ளது. தற்போது பழனிக் கோயிலில் இச்செப்பேடு உள்ளது.’ (தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2/ ச.கிருக்ஷ்ணமூர்த்தி/மெய்யப்பன் தமிழாய்வகம் 2002/ பக் – 81)

தமிழர்கள் மரபுவழியாகவே, தம் கோயில்களில் தமிழர்களைத்தான் பூசாரிகளாகக் கொண்டிருந்தனர், தமிழில்தான் வழிபாடு செய்துவந்தனர். இந்த முறையை மாற்றியது திராவிடர் ஆட்சிதான். விஜயநகர, நாயக்கர் அரசுகளின் ஆட்சி மொழி, தெலுங்கு, வழிபாட்டு மொழி, சமஸ்கிருதம். தமிழ் புறந்தள்ளப்பட்டது. இதற்கான மிக முக்கியச் சான்றுதான், பழனி கோயிலில் பிராமணர்தான் பூசை செய்ய வேண்டும் என்ற திருமலை நாயக்கரின் ஆணை.

’திராவிட’ அரசர்கள் பிராமணருக்கு இந்தளவு முக்கியத்துவம் அளித்தமைக்கு அடிப்படைக் காரணம், ‘திராவிடர்’ என்பது தென்னிந்திய பிராமணரின் தொகுப்புப் பெயர் என்பதே ஆகும். விஜயநகரப் பேரரசு, நாயக்கர் அரசு ஆகியவற்றின் அரசர்கள் பிறப்பால், முழு சத்ரியர்கள் அல்லர். பிராமணக் கலப்பாளர்கள். இதற்கான பல சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம்.

’திராவிடர் என்போர் தென்னாட்டு பிராமணரே’ என்ற கருத்துக்கான சான்றுகள் இவை. இவைபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வரலாற்றுப் பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

’திராவிடர்’ என்றால்தான் ’பிராமணர் வரமாட்டார்’ என்று கூறுவது, வரலாற்றை அறியாமல் முன் வைக்கும் கருத்து அல்லது அறிந்தே ஏதோ உள் நோக்கில் வெளிப்படுத்தும் கருத்து.

தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசரும் நாயக்கரும் சீரழித்ததில், தமிழரின் மதிப்பீடுகள் பெருமிதங்கள் வாழ்வியல் நெறிகள் அனைத்தும் நிலைகுலைந்தன. தமிழரின் சமூக அமைப்பு முறையே தலைகீழ் மாற்றத்தைக் கண்டது. தமிழ்க் குலங்கள், சாதிகளாக மாறி தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கின. இவ்வாறான ஏற்றத் தாழ்வை சாதிய அடுக்கை பிராமணர்கள்/ திராவிடர்கள் திட்டமிட்டு உருவாக்கினர்.

ஆங்கிலேயர் வருகையின்போது தமிழகம் இருந்த நிலையைப் பார்க்கலாம்.

புக்கானன் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் ஆய்வு செய்த ஊர்களில் எந்தச் சாதியினர் நிலவுடைமையாளராக இருந்தனர் என்பதைப் பட்டியலிடுகிறார். கொங்குப் பகுதித் தரவுகளில் சில கீழே தரப்படுகின்றன.

1. ’கடம்பூர் – விளைநிலங்களை வைதிகப் பிராமணரே பயிரிடுகின்றனர். அவர்களுக்கு வரி குறைவு. ஊரில் உள்ள மற்ற வீடுகளையும் தமதாக்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு வீடு இலவசம். உணவு இலவசம். தேவதாசிகள் இலவசம்.

2. கரூர் – பெரும்பகுதி நிலம் பிராமணருக்கு சொந்தம்.

3. நல்லராயன்பாளையம் – பிராமணரே இங்கு நஞ்சை பூமிக்குச் சொந்தக்காரர்.அது அவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்.

4. கிராமத்துக் கால்வாய் 200 காணி நிலத்திற்குப் பாய்கிறது (265 ஏக்கர்). இங்குள்ள நஞ்சை யாவும் பிராமணருக்கே சொந்தம். மீதி நிலம் யாவும் பொட்டல்.இதுவும் நான்கு பிராமணருக்கே சொந்தம்

5. பெருந்துறை – இவ்வூரில் பிராமணருக்கும் முகமதியருக்கும் இனாம் நிலங்கள் உள்ளன. முகமதியர் சில கடமைகளைச் செய்ய வேண்டும். பிராமணருக்கு அது இல்லை.’

(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும் 1792-1858/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் – 9)

இது ஒரு சிறிய சான்று அவ்வளவே. தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பிராமணர் நிலவுடைமையாளராக இருந்தனர். அவர்கள் தமிழ்க் குலங்களை அடிமைகள் போல் நடத்தினர். இந்தக் காலத்தில்தான், திராவிட/ தென்னிந்திய பிராமணர் ஆட்சிக்காலத்தில்தான் தீண்டாமை உருவெடுத்தது.

நிலம், சாதி ஆதிக்கத் தனியாருக்கு முழு உடைமை ஆகிய பிறகு, பிற குலத்தவருக்குப் பிழைப்புக்கு வேறு வழியில்லை என்றான பிறகு, சாதியக் கொடுமைகள் உருவாகத்தான் செய்யும். இத்தகைய நிலவுடைமை, தமிழர் அரசாண்ட எந்தக் காலத்திலும் நிலவவில்லை.

ஆங்கிலேயர் வந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு கணக்கு இது.

கொங்கு மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியின் ஜமீன்கள்/ பாளையங்கள் எந்தெந்த சாதியினரிடம் இருந்தன என்பதைப் பட்டியலிடுகிறது.

பாளையங்கள் – 17
ஜமீன்கள் – 6
பட்டக்காரர் – 6
மற்றவர் – 9
மொத்தம் – 38
இவற்றில்,
நாயக்கர் உரிமை – 20
கவுண்டர் காணி -12
மற்றவர் – 6
(மேலது நூல்)

பாளையங்கள், ஜமீன்கள்தான் சுரண்டலின்கொடூர வடிவங்கள். இம்முறையை முதலில் அறிமுகம் செய்தவர் விசுவநாத நாயக்கர் எனக் கடந்த பதிவில் கண்டோம். பிராமணரை மட்டுமே தனது உயர் அதிகாரிகளாக வைத்திருந்து, அதை நியாயப்படுத்தி – அர்த்த சாத்திர நெறிப்படி அரசாண்ட கிருக்ஷ்ணதேவராயரின் அதிகாரி இவர் எனது குறிப்பிடத்தக்கது.

இந்த விசுவநாத நாயக்கர் வகுத்துகொடுத்த பாளையக்காரப் பாதையில், அவருக்குப் பின்னர் வந்த நாயக்க மான்னர்கள் பீடு நடைபோட்டனர்.

தொல் தமிழ்க் குலங்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை, பிராமணர் - வைசியர் – சத்ரியர் - சில தமிழ் வேளாளக் குலத்தவர் -ஆகிய பிரிவினருக்கு வழங்கினர் நாயக்க மன்னர்கள். இதன் விளைவுகளே மேற்கண்ட பாளையப்பட்டுப் பட்டியல்.

இவற்றில் பெரும்பான்மையை நாயக்கர் எடுத்துகொள்ள, தமிழ்க் குலங்களில் ஒன்றான கவுண்டர்களும் பிற தமிழ்க் குலத்தவர் சிலரும் இப்பாளைய முறையில் ஈடுபட்டுச் சொந்த மக்களையே சுரண்டினர். இதுதான், சாதி வடிவத்தின் ஊற்றுக் கண் ஆகும்.

திராவிட / பிராமணருக்கு சேவகம் செய்த, பாதுகாப்பளித்த பல தமிழ்க் குலங்களை அப் பிராமணர், ஆதிக்கச் சாதிகளாக்கினர். அதாவது, அச் சாதிகள் தம்மோடு மோதாமல் அவற்றுக்குள்ளேயே மோதிக் கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டனர். இதற்காகவே, அவர்கள் தமிழ்க் குலத்தினர் சிலரையும் நிலவுடைமைச் சுரண்டல்காரர்களாக வளர்த்துவிட்டனர் எனலாம்.

மேலும் தென்னிந்திய பிராமணரான திராவிட ஆட்சியாளருக்கு, தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் தமக்கெதிராகத் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அடுத்த நாட்டில் சுரண்டும் எந்தப் பிரிவுக்கும் உள்ள அச்சமே இது. இந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும், இவ்வாறு செய்தனர் எனலாம்.

இந்தத் திராவிடக் கொள்ளை நடத்தப்பட்டபோது, தமிழர்களின் பெரும்பகுதி மக்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தைகளில் விளக்க இயலாதவை. அதுவரை, அறிவார்ந்த குலமாக இருந்த பறையர், பள்ளர், வள்ளுவர், பாணர், கணியர், அம்பட்டர், சானார் உள்ளிட்டவை கடுமையாக ஒடுக்கப்பட்டன.

உண்மையில், இந்தக் குலங்கள் அனைத்துமே சாதிகளாக மாற்றப்பட்டது, ’திராவிட’ ஆட்சியில் தான்...

எமக்கு பிடித்த வரிகள்...


ஈர்க்கும் என்பது விதி...


இந்த உலகில் மனிதன் தனது அறிவை கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களைஎல்லாம் கண்டு பிடித்து விட்டான்.

ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ, தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ, முடியவில்லை.

உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன.. நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன.. நாடு மக்களை கொல்கிறது.. ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள்.. ஏழை மேலும், ஏழை ஆகிகொன்டே இருகிறார்கள்.. வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன..

இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா.. இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன ?

நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது, ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும்..

இதே போல் எலோரும் தம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவருக்கும் எல்லாம் கிடைத்து விடும்.

இந்த தொடர் இந்தியாவை மாற்றுவதற்காக எழுதபடுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவை பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான்..

பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு இலக்கு இருக்கும்.

உதாரனமாக ஒருவர் I.A.S பரிட்ஷை எழுத்து பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்து கொள்வோம், எவ்வளவு பேர் அதை செய்கிறார்கள், ஏன் செய்ய முடியவில்லை ?

மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள் ?

மொத்தத்தில் இந்த தொடர் தங்களது ஆளுமை திறனை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும்.

இங்கே அடிக்கடி பிரபஞ்சம் என்ற வார்த்தை உபயோகபடுத்த படும்.

பிரபஞ்சம் என்றால் நீங்கள் இயற்கை என்று வைத்து கொள்ளலாம், அல்லது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று வைத்து கொள்ளுங்கள், அல்லது மஹா சக்தி என்று வைத்து கொள்ளுங்கள்..

உங்களுக்கு தெரியுமா ?

உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை, உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள்.

அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள், நமக்கு அது தெரியவில்லை ?

அது என்ன வென்று இனி வரும் தொடர்களில் நாம் பார்க்க போகிறோம்..

ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி..

அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும்...

சிந்தனைகளை தேடி அதோடு ஒன்றிணைந்து பயணியுங்கள்.. தலைமையை பின்பற்றி இல்லை...


பாஜக வின் தலைமை அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சின் தேசப்பற்று...


இந்தியாவை இங்கிலாந்து ஆட்சி செய்த நேரம் இங்கிலாந்து மகாராணி இந்தியாவிற்கு வந்தபோது மகாராணிக்கு எதிராக தேசபக்தி விற்பனையாளர்கள் RSS கடுமையான போராட்டம் நடத்திய போது எடுத்தபடம்...

ஆனால் என்பது ஆபத்தானது...


ஆனால் என்ற சொல் அதற்கு முன்னால் சொல்லப்பட்டதை எல்லாம் அர்த்தம் இல்லாததாக்கி விடுகிறது.

உதாரணத்திற்கு நாம் அன்றாடம் சொல்லக் கூடிய சில..

நான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஆனால் இப்படி அதிகாலையில் குளிராக இருப்பதால்.... (இன்று உடற்பயிற்சி செய்யப் போவதில்லை என்று பொருள் காண்க).

கோபப்படுவது நல்லதில்லை தான். ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் கோபப்படாமல் இருப்பதெப்படி? (கோபப்படுவது நல்லதில்லை என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லப்பட்டு இருக்கிறது).

செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் நேரமே கிடைக்கிறதில்லை. (அதனால் நான் ஒன்றுமே செய்வதில்லை).

இதில் எல்லாம் ஆனால் என்று சொல்வதற்கு முன்னால் சொன்ன அத்தனை நல்ல விஷயங்களும் நடைமுறைக்கு வராத வெறும் வெற்று வார்த்தைகளாகி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிற உண்மை.

சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் உடற்பயிற்சி செய்திருப்பேன், எல்லோரும் ஒழுங்காக நடந்து கொண்டால் கோபமே பட மாட்டேன், நாளுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் எதையும் செய்து முடிப்பேன் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய்கள்.

நம் சோம்பேறித்தனத்தையும், கட்டுப்பாடற்ற மனதையும் மறைக்கும் ஆயுதம் தான் இந்த ஆனால்..

இந்த ஆனால் நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள உதவலாம். ஏமாற்றிக் கொள்ள உதவலாம்.

ஆனால் இந்த 'ஆனால்' நம்மை என்றும் பின் தங்கியே இருக்க வைக்கும். சாதிக்காத சப்பைக்கட்டு மனிதர்களாகவே நம்மை இருத்தி விடும்.

நீங்கள் சொல்லத் துவங்கும் 'ஆனாலி'ல் வலுவான காரணங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால் எல்லாமே சாதகமாக இருக்கும் போது சாதிப்பதில் சிறப்பென்ன இருக்கிறது?

தடைகளையும் சாதகமில்லாத சூழ்நிலைகளையும் மீறி மன உறுதியுடன் சாதிப்பதில் அல்லவா மகத்துவம் இருக்கிறது.

எனவே "ஆனால்" என்ற சொல்லை உபயோகப்படுத்தும் போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருங்கள். அந்த சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துங்கள்.

சொல்லும் போது உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை நம்ப வைக்க முயல இந்த 'ஆனால்'ஐப் பயன்படுத்தி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்...

விவசாயிகளுடன் போராட்ட களத்தில் தனது 23 வது ஆண்டின் திருமண நாளை கொண்டாடிய தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் - விஜி சுபாஷ்...


இயக்குனர் வ.கவுதமன், விவசாய சங்கத் தலைவர் நாராயணசுவாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்...

நடராஜனின் இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினருடன் ஆலோசித்து, நாளை அறிவிக்கப்படும் - டிடிவி தினகரன்...


தமிழ் நாட்டினை சூறையாடும் திராவிடர்களின்... நவீன முறையில் திருவிளையாடல்...


பிரிக்க முடியாதது என்னவோ?-கழகமும் குடும்பமும்.

பிரிக்க கூடியாது ?-கழகமும் டி வி யும்.

சேர்ந்தே இருபது ?-கழகமும் கலக்கமும்.

சேராது இருபது ?-கலகமும் கைதும்.

கேட்க கூடாதது?-மாநில அரசில் பங்கு.

பார்க்க கூடாதது ?-கருத்து கணிப்பு.

பார்த்து ரசிப்பது ?-பாராட்டு விழாக்கள்.

ஆட்சிக்கு வேண்டியது ?-கூட்டணி நாடகம்.

நாடகம் என்பது ?-  சுயநலத் தமிழர்களின் கட்சி  கூட்டணி.

போட்டிக்கு ?-ராமதாஸ்.

புலம்பலுக்கு ?.காங்கிரஸ்.

ஜல்ராவுக்கு?- வீரமணி.

மாநில பதவிக்கு ?-ஸ்டாலின்.

மத்திய பதவிக்கு? - கனிமொழி.

அதிகாரத்துக்கு ?.அழகிரி.

பேராசைக்கு ?.தயாநிதி.

சிறை செல்வதற்கு? - தமிழர்கள்...

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு...


கி.பி ஏழாம் நூற்றாண்டில் வடக்கே ஆர்ய வர்த்தம் நிலைப்பெற்ற அதே காலக் கட்டத்தில் தெற்கிலேயும் சைவ வைணவ சமயங்களின் வாயிலாக ஆரிய வேள்வி நெறிகள் வளரத் தொடங்கின.

சமணம் மற்றும் புத்த சமயங்களை தனித்து எதிர்க்க திராணி இல்லாது வலுவிழந்திருந்த வேத நெறிக் கருத்துக்கள், சைவம் மற்றும் வைணவ சமயங்களின் வளர்ச்சியோடு இலைமறைக் காயாய் மீண்டும் வளர ஆரம்பித்தன. சைவ வைணவக் கருத்துக்களுடன் வேள்வி நெறிக் கருத்துக்கள் இணைக்கப்பட்டன. இணைத்தே பரப்பவும் பட்டன. வேத நெறிக் கருத்துக்கள் இருந்தமையால் வடக்கேயும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் தோன்றிய இலக்கியங்கள் சமசுகிருதத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வடக்கேயும் பரப்பப் படுகின்றன.

வெகு விரைவில் சைவ வைணவக் கொள்கைகள் வேறு... ஆரிய
வேள்விக் கொள்கைகள் வேறு என்ற நிலை மறைந்து இரண்டுக் கொள்கைகளும் ஒன்றே என்ற நிலை தோன்றலாயிற்று.இந்நிலையில் தமிழர்கள் பின் தள்ளப்படுகின்றனர்... ஆரியர்கள் செல்வாக்கினைப் பெற ஆரம்பிக்கின்றனர்.

"மேன்மையான நிலைக்கு வந்தாயிற்று...நல்லது!!! ஆனால் இந்த நிலை நிரந்தரமல்ல. இப்பொழுதே சில கேள்விகள் நம்முடைய கொள்கைகளைப் பற்றி எழுகின்றன. எனவே நம் நிலை எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறலாம்... ஆனால் மாறக் கூடாது. நாம் உயர்ந்தவர்கள். உயர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி..!" என்று ஆரியர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த வழி அவர்களின் கண்ணுக்குப் புலனாகின்றது.

'பிறவி சுழற்சிக் கொள்கை - செய்யும் செயலினைப் பொறுத்தே பிறவிகள்' என்ற புத்த சமணத் தத்துவமே அந்த வழி.

என்ன புத்த சமணத் தத்துவமா?... அச்சமயங்கள் தான் தங்கள் செல்வாக்கினை இழந்து விட்டனவே... பின் எவ்வாறு அவற்றின் கொள்கைகள் இவர்களுக்கு உதவி இருக்க கூடும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்பக் கூடும்.

உண்மைதான்... புத்தமும் சமணமும் தங்களின் செல்வாக்கினை இழந்து தான் இருந்தன. ஆனால் அவற்றின் மறுப்பிறவிக் கொள்கை மட்டும் மக்களிடம் அதன் செல்வாக்கினை இழக்காது நின்று இருந்தது. கடவுள் இல்லை என்ற நிலை கடந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலை வந்தும் மக்கள் மறு பிறவிகளில் நம்பிக்கையினை கொண்டு தான் இருந்தனர்.

அந்த நம்பிக்கை தான் ஆரியர்களுக்கு அவர்கள் தேடிய வழியாய் அமைந்தது. அவ்வழியினை அமைத்துத் தந்தவர் தாம் ஆதி சங்கரர்.

"நாம் உயர்ந்தவர்கள்... ஆனால் எதனால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்றுக் கேட்டால் என்ன சொல்வது... அறிவு, பண்பு, வீரம் மற்றும் பொருள் போன்றக் காரணிகளால் நாம் உயர்ந்தவர் என்றுக் கூறினால் அவற்றில் நம்மைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருக்கின்றனர்... அப்பொழுது அவர்களும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்... நம்முடைய மேன்மை அப்பொழுது கேள்விக்குறி ஆக்கப்படும்... ஆனால் நம்முடைய மேன்மை கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.அதற்கு மேன்மை நம் பிறப்பில் இருக்க வேண்டும். நான் பிறப்பால் உயர்ந்தவன்... நீ உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றால் என் இனத்தில் பிறந்து இருக்க வேண்டும்...இல்லையெனில் மன்னித்துக் கொள் நீ என்னை விடத் தாழ்ந்தவன் தான்...! ஆம்.. இது தான் சரி... நம் மேன்மையை யாரும் கேள்விக் கேட்காதிருக்க இது தான் சரியான வழி" என்றவாறே 'பிறவிச் சுழற்சிக் கொள்கையினை' தங்களின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார். மாற்றிக் கொள்ள ஆரம்பித்தக் காலாம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு.

"நீ முற்பிறவியில் செய்த செயலின் காரணமாகத் தான் இப்பிறவி. சென்றப் பிறவியில் பல நன்மைகள் செய்து இருந்தால் பிராமணனாகப் பிறப்பாய்... இல்லையெனில் செய்த பாவத்திற்கேற்ப பிறப்பாய்... சத்திரியனாய்... அல்லது வைசியனாய்... அல்லது சூத்திரனாய். இதுவே இறைவனின் நியதி" என்பதே அந்தக் கருத்து. மக்களை பிறப்பிலேயே பிரிக்கும் இந்தக் கருத்து அப்போதைய அரசியல் சூழ்நிலைகளால் நசுக்கப்படாது வளர்க்கப்படுகின்றது. இறைவன் பெயரினைச் சொல்லி மக்கள் தாழ்த்தப்படுகின்றனர். மக்கள் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தோன்றிய சைவ வைணவத் தத்துவங்கள் ஆரியர்களால் திசை மாற்றப்படுகின்றன.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாக நிலை நிறுத்திக் கொள்ள நல்லதொருக் காலக்கட்டமும் அமைகின்றது. அது வரை இருந்த பல விடயங்களுக்கு அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன.

ஆரியர்களின் சட்ட நூலாக இருந்த மனு தர்மம், மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய சாசுத்திரமாக மாற்றப் படுகின்றது. பிராமணர்கள் என்ற சொல்லுக்கு அர்த்தமும் மாற்றப்பட்டு ஒரு புது பிரிவு உருவாக்கப்படுகின்றது.

சிவனைக் வணங்குபவர் - சைவர்.
பெருமாளை வணங்குபவர் - வைணவர். என்ற இந்த இரு மக்கள் பிரிவுகளுக்குள் புதிதாய், 'பிராமணன்' என்ற சொல்லுக்கு அர்த்தம் மாற்றப்பட்டு ஒரு புதிய பிரிவு உருவாகின்றது.
பிராமணன் - நான் பிரமன்.. அதாவது 'நான் கடவுள் (அகம் பிரமாச்மி)' என்றப் பொருள் கொண்ட பிரிவே அது.

இந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப புராணக் கதைகளும் மாற்றப்படுகின்றன. இவை அனைத்தினையும் செய்தவர் ஆதி சங்கரர். இந்தக் கொள்கையினை பரப்ப அவர் ஆரம்பித்த மடங்கள் தான் இன்றைய சங்கர மடங்கள்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆரியர்களுக்கு உதவிய தமிழர்கள் சற்சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்களே இன்றைய உயர்சாதியினர்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாது ஆரியர்களை எதிர்த்த தமிழர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இன்றைய தாழ்த்தப்பட்டோர் இவர்கள் தாம்.

மற்ற தமிழர்கள் எல்லாம் சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்கள் தான் இன்றைய பிற்படுத்தப்பட்டோர்.

மலைக்கு தப்பி ஓடியவர்கள் மலைவாழ் சாதியினராயினர்.

இந்த நிலையில் ஒரு கேள்வி எழலாம்... 'இவர்கள் இவ்வளவு மாற்றங்கள் செய்து இருக்கின்றார்களே... இதனைக் கண்டித்து தமிழகத்தில் ஒருக் கேள்விக் கூட எழவில்லையா' என்று நீங்கள் கேட்கலாம்.

கேள்விகள் எழத்தான் செய்தன... மாற்றுக் கருத்துக்களும் வரத் தான் செய்தன. அந்த கேள்விகளை எழுப்பியவர்களுள் முக்கியமானவர்கள் நம் சித்தர்கள். அதனாலையே அவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் கூறினர். ஆனால் தமிழகத்தில் அன்று சமசுகிருதம் ஆட்சி மொழியாக இருந்தமையால் (பல்லவர் ஆட்சி காலம்) தமிழ் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. மேலும் அரசியல் செல்வாக்கினால் இந்தக் கருத்துக்கள் மக்களிடையே சென்றடையாது மறைக்கப்பட்டன. சில நூல்கள் அழிக்கப்பட்டன... சில கருத்துக்கள் மாற்றப்பட்டன. இப்படிப்பட்ட காரணிகளால் பல கருத்துக்கள் மக்களிடையே சேராது மறைக்கப்பட்டன.

ஒரு வேளை பல்லவர்களின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்திருக்கும் என்றால் அந்தக் கருத்துக்கள் இன்று நமக்கு கிட்டாமலே போயிருக்கக் கூடும். ஆனால் தமிழகத்தின் பொற்காலமும் வருகின்றது சோழனின் வாயிலாக... இராசஇராச சோழனின் வாயிலாக!!!

தமிழின் அனைத்து இலக்கியங்களும் சமசுகிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமசுகிருதம் வளர்க்கப்பட்டுக் கொண்டு இருந்தக் காலக் கட்டத்தில், இராச இராச சோழனால் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு தமிழ் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது. கோவில்களில் தமிழர்கள் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். தமிழிலேயே இறைவனை வணங்குகின்றனர். தமிழ் பாடல்களே இசைக்கப் படுகின்றன. சித்தர் பாடல்கள் தொகுக்கப்படுகின்றன. சைவ வைணவ இலக்கியங்கள் முழுவதுமாக இயன்ற வரை தொகுக்கப்படுகின்றன. ஆரியர்களின் செல்வாக்கு தமிழகத்தில் குறைய ஆரம்பிக்கின்றது. தமிழ் மேன்மை அடைய ஆரம்பிக்கின்றது.

ஆனால் முழுமையான மேன்மை தமிழ் அடையவில்லை.ஏனெனில் சைவ வைணவ இலக்கியங்களைத் தொகுக்கும் பணியில் ஆரியர்களும் இருந்தனர.

பன்னிரு திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி ஒரு ஆரியர். எனவே தான் சம்பந்தரைப் பற்றி ஆறு பிரபந்தங்கள் பாடிய அவர் அப்பரைப் பற்றி ஒன்றே ஒன்றினை மட்டும் பாடி உள்ளார்.

அதேப் போல் 63 நாயன்மார்களைப் பற்றி பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் நூலில் பெறும் பகுதியை வேள்வி நெறிக் கருத்துக்களை வளர்த்த சம்பந்தருக்கே ஒதுக்கி உள்ளார்.

இது போன்ற செயல்களால் தமிழ் என்ன தான் வளர முயற்சித்தாலும் அதனுடன் இணைந்து இலைமறைக்காயாக வேள்வி நெறிக் கொள்கையும் ஆரியமும் வளர்ந்து கொண்டே வந்தன. முழுமையான வெற்றி கிட்டவில்லை என்றாலும் சோழனின் இந்த முயற்சிகள் காரணமாகத் தான் இன்று தமிழ் இன்னும் தனித் தன்மையுடன் இருக்கின்றது. இல்லையெனில் என்றோ சமசுகிருதத்தில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்ற கருத்தினை மறுப்பதற்கு நமக்கு விடயமே கிட்டாது போயிருக்க கூடும். ஆரியத்தினை எதிர்த்து உண்மையான நெறிகளைக் கூறிய சித்தர்களின் பாடல்களும் கிட்டாமலே போயிருக்க கூடும்.

என்ன ஆரியர்களை சித்தர்கள் எதிர்த்தார்களா?... வேள்வி நெறிகளையும் அவர்கள் எதிர்த்தார்களா என்று கேள்விக் கேட்கின்றீர்களா... அப்படி என்றால் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்றையும் சிவவாக்கியரின் பாடல் ஒன்றையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அடுத்தப் பதிவில் அவற்றினை பார்ப்போம்... அதனுடனே குகை இடிக்கலகம், கோவிலில் சமசுகிருத அர்ச்சனை போன்றவற்றினைப் பற்றியும் பார்ப்போம்...