21/03/2018

சென்னை மாணத்தில் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் மற்றும் தமிழர் ஆகிய நான்கு இனத்தவரும் இருந்தபோதே 52.5 சதவீத மக்கள் தமிழர்கள்...


அப்படி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் பார்ப்பனரை (அல்லது பார்ப்பனீயத்தை) அழிக்கவே அவதாரம் எடுத்ததாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் உங்கள் தாய்க்கழகமான நீதிக்கட்சி 1920 இல் முதல்முதலாக தேர்தலில் போட்டியிட்டது தொடங்கி தான் அமைத்த 6 மந்திரி சபைகளிலும் "தெலுங்கரை மட்டுமே" முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது. அமைச்சரவைகளில் கூட தெலுங்கர்களையே அமைச்சர்களாக்கியது.

நடேசனார் போன்ற நீதிக்கட்சித் தமிழர்கள் தமிழருக்கு அதிகாரம் தரவில்லையே என்று குற்றம் சாட்டிய பிறகு ஒப்புக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கொடுத்தது. ஆனால் நடேசனார் என்ற தமிழர் நீதிக்கட்சியில் தமிழருக்கு அதிகாரம் கேட்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பிட்டி தியாகராயர் (இன்றைய தி.நகர் என்ற பெயருக்கு சொந்தக்காரர்) அடுத்து வந்த தேர்தலில் தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த நடேசனாருக்கே யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தார் இது வரலாறு.

இப்படிப்பட்ட தெலுங்கு வெறி பிடித்த நீதிக்கட்சிதான் தன்னை கன்னடர் என்று சொல்லிக்கொண்ட ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கைக்கு தலைமை தாங்குமாறு வருகிறது. அப்போது அந்தக் கட்சியில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஏன் நீதிக்கட்சியிலேயே தமிழராக பார்ப்பனிய எதிர்ப்பாளராக யாரும் இல்லையா? இருந்தார்கள். பி.டி.ராஜன் இருந்தார். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இருந்தார். பட்டிவீரன்பட்டி சவுந்தர்ராஜன் இருந்தார். மெத்தப் படித்தவர்களாக, நல்ல மேடைப்பேச்சாளர்களாக, சிறந்த அமைப்பாளர்களாக இருந்தார்கள்.

ஆனால் கட்சியிலேயே உறுப்பினராக இல்லாத, தன்னை கன்னடன் என்று சொல்லிக்கொண்ட தெலுங்கரான பெரியரிடம்தானே நீதிக்கட்சி ஒப்படைக்கப்பட்டது.

அதுவரை நீதிக்கட்சியோ ஈ.வே.ராமசாமி நாயக்கரோ திராவிடம்; திராவிட நாடு; தமிழ்நாடு; தமிழ்நாடு தமிழருக்கே என்பது பற்றியயல்லாம் அறிந்திருந்தது கூட இல்லை என்பதை அவருடைய மற்றும் நீதிக்கட்சியின் வரலாற்றின் மூலமாக அறிகிறோம்.

அதுமட்டுமல்ல 1937 ஆம் ஆண்டு தனித்தமிழியக்கத்தினர் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கோரிக்கையை ஓங்கி ஒலித்து இந்தியை எதிர்த்துப் பேராட்டம் நடத்தியது வரை "திராவிடம்" குறித்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிந்தித்ததே இல்லை. தமிழர்கள் எல்லாம் விழித்தெழுந்து தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறத்தொடங்கிய பிறகே திராவிடம் என்ற கருத்தை அரசியல் அரங்கில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ்நாடு தமிழருக்கே என முதலில் முழங்கியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லை என்பதை அறியலாம்.

நீதிக்கட்சியாக இருந்த வரை தமிழருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காத, கொடுக்க விரும்பாத அந்த இயக்கம் தன் கைக்கு வந்த பிறகு, அதன் பெயரை மாற்றும் அந்த விழாவிலாவது அதனை தமிழருக்கான இயக்கமாக மாற்றினாரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்? இல்லையே... அதற்கு அவர் கூறிய காரணம்.. நான் கன்னடியன், சிற்றரசு தெலுங்கர்... எனவே இதற்கு திராவிடர் கழகம் என்று பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழருக்கான ஒரு இயக்கமே இல்லாது ஒழித்தவர்தானே ஈ.வே.ராமசாமி நாயக்கர்...

அதன் பிறகு அந்த திராவிட வாதத்தை எங்களை ஏற்க வைக்க உங்களால் கூறப்பட்டது தானே பார்ப்பனன் வாதம்...

தமிழன் என்று நீங்கள் சொல்லிக்கொண்டால் உங்களுடன் பார்ப்பனன் சேர்ந்து விடுவான் என்று எங்களை எச்சரித்த "தமிழர் தலைவர்" ஈ.வே.ராமசாமி நாயக்கர்... "திராவிடன்" என்று நாங்கள் சொல்லிக்கொண்டால் எங்களுடன் தெலுங்கு கன்னட மலையாளிகள் சேர்ந்து விடுவார்கள் என்பதை அறியாதவரா?

அவரே தான் சொல்கிறாரே.. தமிழன் என்று சொன்னால் உங்களுடன் நான் இணைந்து கொள்ள முடியாது என்று....

இவரது பார்ப்பன எதிர்ப்பு என்பது தெலுங்கர் ஆதரவுதான் என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

1925ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியும் சுயராஜ்யக் கட்சியும் போட்டியிட்டன. நீதிக்கட்சி தெலுங்கருக்கான கட்சி என்பதால் சிறிது சிறிதாக வலுவிழந்து வந்த காலகட்டம் அது. எனவே அதன் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டி இருந்ததால் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு நீதிக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான பனகல் அரசர் (இன்றைய பனகல் பூங்கா பெயருக்கு உரியவர்) ஈ.வே.ராமசாமி நாயக்கரிடம் கேட்டுக்கொள்கிறார். அதனை ஏற்று நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

ஆனால் 1928இல் அடுத்து வந்த வட ஆர்க்காடு இடைத்தேர்தல் ஒன்றில் நீதிக்கட்சி சார்பாக பத்மநாப முதலியாரும் சுயராஜ்யக் கட்சி சார்பாக வெங்கட்ரங்கம் நாயுடு என்ற தெலுங்கரும் போட்டியிட்ட போது, சில பத்திரிகைகள் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிடும் பத்மநாப முதலியாருக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிரச்சாரம் செய்யப் போவதாக எழுதிய போது அதை மறுத்து குடியரசு 7.2.1928 இல் வெளிவந்த கட்டுரையில் "இதுவரையிலும் இதற்காக ஒருவருக்கு அனுகூலமாகவோ, மற்றொருவருக்கு பிரதிகூலம் செய்யவோ, நாம் எண்ணவுமில்லை. அப்படி அனுகூலமாகவும், பிரதிகூலமாகவும் இவர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டியது இது சமயம் அவசியமுமில்லை என்பதே நமது முடிவு. அவசியமென்று கருதினால் கட்சியையோ சட்டத்தையோ பழியையோ கருதி பயந்து கொண்டிருக்கப் போவதுமில்லை. ஸ்ரீமான் நாயுடுவையும் (சுயராஜ்யக்கட்சி வேட்பாளர்) நமக்கு 6,7 வருட­ங்களாகத் தெரியும். அவர் எவ்வளவுதான் 'பிராமணர்களோடு கட்டிப்புரண்டு திரிந்தாலும்' அவருடைய அந்தரங்கமானது பிராமணரல்லாதார் வி­சயத்தில் அனுதாபமாகவேதானிருப்பதை அறிந்திருக்கிறோம். இவ்வறிவுக்கு மாறுதல் ஏற்படுகிற காலத்தில் நமது கடமை என்னவென்பது நமக்கே தெரியும். ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி (நீதிக்கட்சி வேட்பாளர்) நல்லவரென்றும், பரோபகார உழைப்பில் கொஞ்சகால ஈடுபட்டவரென்றும் கேள்விப்பட்டதே இல்லாமல் நேரில் பார்த்ததே இல்லை." (சுயராஜ்யக்கட்சி பார்ப்பனர்களின் கூடாரம் என்று அந்தக் கட்சியை தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்கக் கூடாது என்று தான் கூறியதை ஏற்கவில்லை என்பதால் காங்கிரசில் செயல்பாடு அற்று இருந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் நிலைப்பாடு என்பது. வேட்பாளர் தெலுங்கரா தமிழரா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறியலாம்.)

சுயராஜ்யக்கட்சியில் தெலுங்கு மொழி வேட்பாளர் என்றதும், அவர் பார்ப்பனரல்லாதார்க்கு ஆதரவானவர் என சான்றிதழ் அளித்து பெருமைப்படுத்தும் ஈ.வே.ராமசாமி நாயக்கர். அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தேவை இல்லை என்கிறார்.

இதே போன்றுதான் கருத்துக்களை மாநில எல்லைப் பிரிவினையின் போதும் வைக்கிறார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

அதாவது மலையாளிகள் தமிழ் மண்ணைப் பறிக்கும்போது மலையாளிகளுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்.

ஆந்திர கன்னடரிடம் தமிழ் மண் பறிபோகும் போது அவர்களுக்கே ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்.

ஆந்திரனும் கன்னடனும் ஒட்டுமொத்த நாட்டையுமா கொண்டுபோகப் போறான்... ஏதோ நமக்கும் நாலு ஊர் உட்டுட்டுப் போவான் அது நமக்கு போதும்" என்கிறார்.

இவர்கள் நம்மை திராவிடர் என்று வரையறுத்து நம்ப வைத்ததால்தானே தமிழரல்லாத யார் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் அவர்கள் திராவிடர்கள என்ற எண்ணத்தில் நம்பிக்கையில் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கிறது தமிழ்ச் சமூகம்...?

தமிழ்நாட்டை தெலுங்கனையும் கன்னடனையும் மலையாளியையும் ஆள வைத்ததைத் தவிர வேறு எந்த காரியத்தை திராவிடத்தால் செய்ய முடிந்திருக்கிறது? செய்திருக்கிறது?

இன்றைய காவிரி சிக்கல் தொடங்கி பாலாறு முல்லை பெரியாறு சிக்கல் வரை நாம் நமக்கு சொந்தமான எல்லைகளை இழந்ததுதானே காரணம்.

தமிழரல்லாதார் தமிழ்நாட்டை ஆண்டு வருவதால்தானே இன்றைய ஈழ துரோகம் முதல் கூடங்குளம் துரோகம் வரை நடந்தேறியிருக்கிறது?
இதை யாரும் மறுக்க முடியுமா?

கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தனக்கு அணு உலை வேண்டவே வேண்டாம் என்று விரட்டி அடிக்க முடிந்தது.. கேரளத்தை மலையாளி ஆள்வதால்தான் தன் நாட்டு மீனவனை சுட்டுக்கொன்ற இத்தாலிக்காரனை சிறை வைத்து வழக்குபோட முடிந்திருக்கிறது. சுட்டவன் சோனியாவுக்கு சொந்தக்காரன் என்பதால் மலையாளி விட்டுவிட்டானா? அல்லது இந்தியாவுக்கு பயந்து கொண்டு முல்லைப்பெரியாற்றில் முழுக்கொள்ளளவு நீரைத் தேக்க சம்மதித்துவிட்டானா? அவனும் இந்தியாவில்தானே இருக்கிறான்.

நம் தமிழ்நாட்டு அரசுகள் மட்டும் தொடர்ந்து தமிழருக்கு துரோகம் செய்யும் சூழ்ச்சி என்ன?

நமக்கு உரிமையான காவிரித் தண்ணீரை வைக்கோலைக் கொடுத்து பெற்றுக்கொள்கிறோம் என்று உடன்பாடு போட்டு வாங்கியவர்தானே மலையாளியான எம்.ஜி.ஆர்?

அதே மலையாளி எம்.ஜி.ஆர் முல்லைப் பெரியாறு உரிமையை கேரளாக்காரனுக்கு விட்டுக்கொடுத்தாரா இல்லையா?
அது எந்த பாசத்தில்?

பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பானைக் காட்டி ஆட்சி அதிகாரத்தில் குந்திக்கொண்ட தெலுங்கரும் மற்றவர்களும் எந்த பார்ப்பன ஆதிக்கத்தை இதுவரை ஒழித்திருக்கிறார்கள்?
தமிழரை ஒழித்ததை தவிர?

தான் பிறந்த மண் என்ற காரணத்தால் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுத்துவிட்டால் இந்தியாவிற்கு தன்னால் பிரதமராக முடியாது என்பதால், வலுக்கட்டாயமாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து தன் பதவி வெறியை தீர்த்துக்கொண்ட நேருவுக்கும் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் என்ன வித்தியாசம்?

இவர்களின் தலைமை மோகத்தால் இன்றைக்கு அழிந்து கொண்டிருப்பது காஷ்மீரும் தமிழ்நாடும் தானே..

வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திராவிடம் என்று சொல்லை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தமிழின் மேல் திணித்து எங்களையும் திராவிடர்கள் என்று நம்பவைத்து இன்றுவரை ஒரு தமிழன் கூட ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் நீங்கள் செய்திருக்கும் இந்தக் கழுத்தறுப்புக்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா?

உங்கள் பேச்சை நம்பி..
திராவிட வேடத்தை நம்பி..

மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழருக்கான மாநிலமாக சென்னை மாநிலம் அமைக்கப்பட்ட பிறகும் கன்னடராக; தெலுங்கராக; மலையாளிகளாக; நீங்கள் இருந்த போது கூட, உங்களை நம்பி, எங்கள் சூத்திரப் பட்டத்தை துடைத்தெறிவீர்கள் என்று கனவு கண்டு "எங்களுக்கு தலைமை தாங்க வக்கில்லை" என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதைக் கேட்டு ரசித்துக்கொண்டு உங்கள் தலைமைகளை நாங்கள் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டோம்.

சரி... வந்தேறிகளான நம்மையும் இந்த மடப்பயல்கள் நம்பி விட்டார்களே இனியாவது இவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்று உங்கள் திராவிடத் தலைவர்கள் எங்களுக்கான ஏதாவது ஒரு உரிமையை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.