21/03/2018

எல்லாவற்றிற்கும் வந்தேறிகள் தலைமை என்றால்... நாங்கள், தமிழர்கள் தமிழ்நாட்டில் எதற்கு புல் புடுங்கவா?


3 சதவீத பிராமணர்கள் ஆள்வது தமிழனுக்கு வெட்கக்கேடு என்று முழங்கிய "ஈ.வே.ராமசாமி நாயக்கரின்" வாரிசுகள் வளர்த்த கட்சிகளால் இன்று மொத்தமாக ஒரு 600 பேர்கூட தேறாத சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ஆளும் அளவிற்கு தமிழ்நாடு ஆக்கப்பட்டிருக்கிறதே....

இதுதான் உங்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தத்துவமா?

சிறுபான்மை கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அது துரோகம்; பச்சை துரோகத்தைதான் ஈனும் என்று உங்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர் முழங்கிய அடிப்படையிலேயே பார்த்தால் கூட...

இன்று தமிழ்நாட்டை எந்த பெரும்பான்மை ஆள்கிறது?

மள்ளரா?
மறையரா?
வன்னியரா?
நாடாரா?
முக்குலத்தோரா?
கொங்கு வேளாளரா?

இப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த பெரும்பான்மைச் சமூகங்களுமே ஆள முடியாத நிலையில் வைத்திருப்பதற்குத்தான் உங்கள் சாதி ஒழிப்புக் கொள்கையா சொல்லுங்கள்?

இதுவரை ஏமாந்த தமிழர்கள் நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். உங்கள் போலி பிராமண எதிர்ப்பால் திராவிடக் கூச்சலால் பார்ப்பனனின் ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

ஏனெனில் நீங்கள் நடத்துவது உண்மையான பிராமண எதிர்ப்பு அரசியல் அல்ல..

அப்படி உண்மையில் நீங்கள், உங்கள் திராவிட அரசியல், எங்களுக்காக உழைத்திருந்தால், இந்த நூறு ஆண்டுகளில் உண்மையாகவே சாதியை ஒழித்திருப்பீர்கள்..

பிராமணியத்தை அடித்து நொறுக்கி இருப்பீர்கள்..

உண்மையான மண்ணின் மைந்தர்களை ஆள வைத்திருப்பீர்கள்..

ஆனால் நூறு ஆண்டாக இவை எதையுமே செய்யாத நீங்கள்...

உங்களால் பாதிக்கபட்டு; ஆட்சி உரிமையை இழந்து.. இங்கே படையயடுத்து வந்தவர்களிடமும் பிழைக்க வந்தவர்களிடமும் இன்னமும் இட ஒதுக்கீட்டு பிச்சை போடுங்கள் என்று மண்ணின் மைந்தர்கள் நாங்கள் கெஞ்சி கூத்தாடி.. எங்கள் ஈழ உறவுகள் துடிக்கத் துடிக்க எங்கள் கண்ணெதிரேயே கொல்லப்பட்டபோது கையறு நிலையில் கதறி... எங்கள் மண்ணை; எங்கள் வளங்களை; மணலை; தண்ணீரை; கண்ட பொறுக்கிகளும் கூறு போட்டு விற்கும்போது கலங்கி துடித்து... வேண்டாம் திராவிடர்களே எங்களை விட்டுவிடுங்கள்..

நீங்கள் கூறிய இந்த ஆரிய அடிமைத்தனத்திடமிருந்து எங்களை மீட்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை நாங்கள் உணரத் தொடங்கி விட்டோம்...

எங்களுக்கான விடுதலையை நாங்களே முன்னெடுத்துக் கொள்கிறோம் என முன் வரும் போது..

மறுபடியும் அதே பழைய பிராமணப் பூச்சாண்டியை எங்களிடம் காட்டி, "திராவிடத்தாலேயே அழிந்தோம் என்று தொடைதட்டிக் கிளம்பியிருக்கும் வீரதீரசூரப்புலிகள் எங்கே" என்று எங்களை நோக்கியே நீங்கள் உங்கள் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினால், மறுபடியும் நீங்களே எங்களுக்கான நிரந்தரங்கள் என்று அடங்கிப்போய்.. அய்யோ பிராமணர்களை ஒழிக்க வந்த பரமாத்மாக்களே என்று கைகட்டி வாய்பொத்தி திராவிடம் வாழ்க.. என்று மீண்டும் எங்கள் அடிமைத்தனத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்வோம் என்று நினைத்தீர்களா? இல்லை.

பிராமணன்  உட்பட எந்த ஆரிய திராவிட வந்தேறிக்கும் இங்கு ஆட்சி உரிமை இல்லை. இது எங்கள் நாடு தமிழ்நாடு..

தெலுங்கனுக்கு ஆட்சி வேண்டுமென்றால் ஆந்திரா ஓடு....

என்று எங்களுக்கான உரிமைகளை நாங்களே கையில் எடுத்துக் கொள்வோம்..

தமிழனுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை என்று உங்கள் தலைவர் கன்னட ஈ.வே.ராமசாமி நாயக்கர் சொன்னதை பொய்யாக்கி... நாங்களே ஆளப்பிறந்தவர்கள்.. எங்கள் நாட்டில் வேறெவனுக்கும் உரிமை இல்லை..

ஆயிரம் உண்டிங்கு சாதி இங்கு அன்னியர் நீங்கள் புகல் என்ன நீதி என்று பாரதி வழியில்.. கணைகளை தொடுத்து நிமிர்வோம் எழுவோம்...

இந்த பூதத்தை இனி எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது..

ஏனெனில் நாங்கள் வெறும் தமிழ் அறிஞர்கள் இல்லை..
தமிழ்நாட்டின் தவப்புதல்வர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.