18/01/2019

உலகின் 2வது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டாரக சென்னை சிறுவன் தேர்வு...


நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்.

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும், 12 வயதே ஆன குகேஷ் நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், உலகிலேயே இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து, டெல்லியில் பேட்டியளித்த குகேஷ், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே தனது லட்சியம் என கூறினார்...

பாஜக வும் போட்டோஷாப் ஏமாற்று வேலைகளும்...


நான் ஒரு இனவெறியனாம்...


என்னால் அதை மறுக்க முடியவில்லை...

அழிவுக்குத் தள்ளப்படும் ஓர் இனத்தின் முடிவை...

அந்த இனத்திற்கான உரிமை மறுப்பை..

அந்த இனத்தின் உயிரிழப்பை..

தடுத்து நிறுத்தத் தேவை ஓர் இனவெறியன் தான் என்றால்..

நான் இனவெறியனாகவே இருந்து விட்டுப் போகிறேன்..

இன்றைய தமிழினத்தின் நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும் இனவெறியர்களை மேலும் மேலும் உருவாக்கவே செய்வேன்..

நான்கே வரியில் கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழரே...

நல்லவனாக இருக்கிறாயோ இல்லையோ.. வல்லவனாக இரு..

தமிழன் வாழவேண்டும் இல்லையேல்
எவனும் வாழக்கூடாது...

மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவோம் - ஓசி சோறு வீரமணி... வித்தியாசம் காண்க...


நம் விதியும் மாறக் கூடியது...


வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..

வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..

கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.

நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்கிறோம்...

எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது..

வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்..

பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.

நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..

நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.

நோய் வேண்டாம் என்று எண்ணுவதை விட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.

சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.

எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி தான்..

என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.

எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்..

எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்...

தமிழனின் பாரம்பரியம் டா...


சூரியன் - சந்திரன் தூய தமிழ்ச் சொற்கள்...


சூரியன் - சமஸ்கிருத சொல்..

கதிரவன், ஞாயிறு, பகலவன், ஆதவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், அருக்கன், பரிதி - தூய தமிழ்ச் சொற்கள்..

சந்திரன் - சமஸ்கிருத சொல்..

நிலா, மதி, திங்கள், அம்புலி, நிலவு - தூய தமிழ்ச் சொற்கள்...

நம் கணிதத்தின் அற்புதம்...


மாணவியுடன் காட்டிற்குள் உல்லாசமாக இருந்த காதலனை கொன்றுவிட்டு, மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்...


மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே பொறியியல் கல்லூரி மாணவன், தனது கல்லூரி காதலியுடன்  காட்டில் ஜாலியாக இருந்தபோது அந்த வழியாக வந்த 4 மர்ம ஆசாமிகள் மாணவனை படுகொலை செய்து விட்டு மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் சமயபுரம், லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம்  சிறுகனூர் அருகே திண்ணக்குளம் ஊரை சேர்ந்தவர் கண்ணன், விவசாயி. இவரது மகன் தமிழ்வாணன் (23), சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் கோவண்டாகுறிச்சியை சேர்ந்த  ராணி (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதாலும், ஒரு வகுப்பில் படித்து வந்ததாலும் தமிழ்வாணன், ராணி இடையே காதல் மலர்ந்தது.

நேற்று பொங்கல் விடுமுறை தினம் என்பதால் இருவரும் மாலையில் பைக்கில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை மலைமாதா கோயிலுக்கு சென்றனர். விடுமுறை தினம் என்பதால் மாதா கோயிலில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருவரும் இரவு 7.30 மணி வரை மாதா கோயிலில் இருந்து விட்டு பின்னர் பைக்கில் ஊர் திரும்பினர். 8 மணி அளவில் கண்ணாக்குடி- புஞ்சை சங்கேந்தி இடையே வனத்துறைக்கு சொந்தமான ரிசர்வ் பாரஸ்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் கிடையாது. எப்போதாவது பஸ்கள் வரும்.  மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது.

இந்த காட்டுப்பகுதியில் வந்ததும் தமிழ்வாணன் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு ராணியை அழைத்துக்கொண்டு காட்டின் உள்பகுதிக்கு சென்றார். இருவரும் அங்கு ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக 2 பைக்கில் 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பைக் அனாதையாக நிற்பதை அறிந்து அங்கு நின்று கவனித்தனர். அப்போது, சிறிது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து 4 பேரும் அங்கு சென்றனர். அப்போது, ஒரு காதல் ஜோடி ஜாலியாக இருந்ததை பார்த்த அந்த கும்பல், தமிழ்வாணனை சரமாரியாக தாக்கி  ராணியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, 4 பேருடனும் தமிழ்வாணன் போராடி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் தமிழ்வாணன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, ராணியை மாறி மாறி பலாத்காரம் செய்தனர். மாணவி கூச்சல் போட கூடாது என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து கட்டிவிட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் 4 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி கொடூரமாக பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்கள் சென்றதும் மிக சோர்வுடன் எழுந்து ராணி, வாயில் இருந்த துணியை எடுத்த தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து, சிறுகனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நள்ளிரவு 1 மணி அளவில் போலீசார் அங்கு வந்து ராணியிடம் விசாரணை நடத்தி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தமிழ்வாணன்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராணியை அதே பகுதியை சேர்ந்த இன்னொருவரும் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தான் தனது நண்பர்களுடன் வந்து இந்த கொலை, பலாத்காரத்தில் ஈடுபட்டாரா, அல்லது வழக்கமாக இந்த காட்டில் திரியும் வழிப்பறி கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் பற்றி அறிந்த எஸ்.பி. ஜியாஉல்ஹக் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 கொடூரன்களையும் தேடி வருகின்றனர்.

போராடிய தமிழ் வாணன்..

4 காமக்கொடூரன்களும் தமிழ்வாணனை தாக்கியபோது, அவரை விட்டு விடும்படி ராணி கெஞ்சி உள்ளார். ஆனால் அவர்கள் ஈவு இரக்கமின்றி கடுமையாக தாக்கினர். சுமார் 10 நிமிடங்கள் தமிழ்வாணன், 4 பேரையும் எதிர்த்து தாக்குதல் நடத்தி உள்ளார். அதன் பிறகே 4 பேரும் அவரை கீழே தள்ளி கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்து உள்ளனர்.

கற்பை காக்க ஓட்டம்..

தமிழ்வாணனை கொலை செய்ததை பார்த்த ராணி, இனி கொலைகாரர்கள் தன்னை விடமாட்டார்கள் என்பதை அறிந்து கற்பை காக்க காட்டுக்குள் ஓட்டம் பிடித்தார். ஆனால் 4 பேரும் விடாமல் துரத்தி பிடித்து மாறி மாறி கற்பை சூறையாடினர்.  அதன்பிறகு அவர்கள் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பி உள்ளனர்.

8 வருட காதல்..

கொலைசெய்யப்பட்ட தமிழ்வாணனும், ராணியும்  விரகாலூர் பள்ளியில் ஒன்றாக படித்தனர். கடந்த 8 வருடங்களாக அவர்களுக்குள் நட்பு இருந்தது. பின்னர் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தவர். பள்ளியில் ஏற்பட்ட நட்பு கல்லூரிக்கு வந்ததும் காதலானது. ராணியை மேலும் சில மாணவர்கள் விரும்பி உள்ளனர். ராணியும், தமிழ்வாணனும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இது இன்னும் பெற்றோருக்கு தெரியாத நிலையில் காதல் போட்டியில் இன்னொரு தரப்பு மாணவன் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகிறார்கள்.

கொள்ளையர்கள் நடமாடும் பகுதி..

கொலை, பலாத்காரம் நடந்த இடம் வனப்பகுதியாகும். பகலிலேயே இந்த காட்டுக்குள் தனியாக யாரும் செல்ல மாட்டார்கள். அந்த அளவு இந்த பகுதியில் வழிப்பறி பயம் உண்டு. ஆனால் தமிழ்வாணன் இரவு நேரத்தில் காதலியுடன் போய் உள்ளார். இதை அறிந்து அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும். அல்லது வழக்கமாக இந்த வனப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபடுகிறவர்கள், காதல் ஜோடி உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் காமம் தலைக்கேறிய நிலையில் இந்த கொலை, பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என பல கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் லால்குடி, சிறுகனூர், சமயபுரம், புஞ்சை சங்கேந்தி பகுதிகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்ததும் இன்று கல்லூரி மாணவ, மாணவிகள்  கண்ணீர் மல்க தமிழ்வாணன் வீட்டில் குவிந்த வண்ணம் இருந்தனர்...

தெலுங்கர்கள் தமிழகத்தில் தமிழராக வாழும் போது கிளிக்கியது... திருட்டு திராவிடம்...


தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி.. மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது...

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும்-பஞ்சமரும் ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்.. இந்த பாஷை சரிப்படாது..

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்...

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும், தெலுங்கர்கள் என்றும்...

தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...

- பாரதி தமிழ்: பக்.403...

பறவைகளின் வெப்பத்தை பரப்புவது...


வெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக்கொண்டு ஆவியாவதால் உடல் சூடாகாமல் பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களுக்கு வியர்வை ஒரு பாதுகாப்பு அமைப்பு. ஆனால், பறவைகளுக்கு வியர்ப்பதில்லை.

சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உடல்வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ள அவைகளின் அலகுகள் உதவுவதாக அவுசுத்திரேலியா, கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன்மூலம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்பாக உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளின் அலகுகள் ஆராயப்பட்டன.

வெப்பச்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளமாகவும், குளிர்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் குட்டையாகவும் காணப்படுகின்றன. பறவை அலகுகளின் அமைப்பு, தோற்றம் இவையெல்லாம்  உணவைப்பெறுவதற் காகவும், எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே என்கிற பழைமையான கருத்து இப்போது மெருகூட்டப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு ஒரு ‘வெப்பத்தை பரப்பு’வதற்காக அவற்றின் அலகுகள் செயல்படுகின்றன என்கிற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது.

214 பறவையினங்கள் அவை வாழும் அட்ச, தீர்க்க ரேகை கோடுகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டன. அவை வாழும் வெப்பதட்ப நிலைக்கேற்ப அலகுகளின் நீளம் அமைந்திருந்தது. குளிர்ச்சியான சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளம் குறைவாக இருந்தன.

சுருக்கமாகச் சொல்லப்போனால், பறவைகளின் அலகுகள் ஒரு வெப்பத்தை பரப்புவது போன்று செயல்படுவதும், வெப்பத்தை பரப்புவது (Radiator) தேவையில்லாத பறவைகளின் அலகுகள் நீளம் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது....

தமிழர்கள் புறங்கணிக்கப்படுவது சிறந்த உதாரணம்...


ஆபரேசன் தியேட்டருக்குள் நர்சுடன் டாக்டர் சல்லாபம்.. ஆஸ்பத்திரியில் நடந்த அசிங்கம்...


மத்திய பிரதேச மாநில் உஜ்ஜைனி மாவட்டத்தில்  சீனியர் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டருக்குள் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதிய உணவு  இடைவெளியில் டாக்டர் இப்படி மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு மருத்துவமனையின் சீனியராக இருந்து கொண்டு இப்படி இப்படி நடந்து கொண்டது சரியல்ல.

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அவர் மீது விசாரணை நடந்து வருகிறது...

நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார்.

இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது.

இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும்.  முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது.

ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்...

பாஜக வை வீழ்த்த காங்கிரஸ் திமுக கூட்டணியை வெல்ல வைப்போம் - உதயகுமாரன்...


காங்கிரசு கொண்டு வந்த கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பேன் என மீனவர்களை மக்களை, ஸ்டெர்லைட் போல தீவிர போராட்டமாக மாறாமல் அறப்போராட்டம் என காயடித்த உதயகுமாரன் என்ற முதலாளித்துவ ஏஜண்ட் மீண்டும் காங்கிரசு திமுக வுக்கு ஆதரவு தெரிவதில் வியப்பென்ன.

பன்னாட்டு முதலாளிகளின் ஏஜண்டுகள் சூழ் தமிழகம்...

கார்பரேட் என்றால் என்ன.?


திராவிடத்தின் பெயருக்கு பின்னால் ஒலிந்துக் கொண்டு தெலுங்கன் இதுவரை செய்த அட்டூழியங்களும் தமிழின அழிப்பும் போதும்...


தமிழருக்கான விடுதலையை தமிழரே பெற்றுக் கொள்வோம்..

வந்தேறிகள் எங்களுக்காக போராடுவதைப் போல நடிக்கத் தேவையில்லை..

ஈழத்தை நீங்கள் பெற்றுத் தருவதாக கூறி தமிழக மக்களையும் ஈழத்து தமிழர்களையும் ஏமாற்றியது போதும்..

உண்மையில் தமிழர்களுக்கு போராடுபவர்கள் முதலில் இங்கு அகதி முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யுங்கள். இங்குள்ள தமிழர் பிரச்சனையை போக்குங்கள்.

தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கும் வந்தேறிகளை அகற்றி தமிழ் சாதிகளை பதவியில் அமர வையுங்கள்.

தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழரின் நலனை பேணி தருகிறேன் என்று சொல்லி மனுவாதிகளிடம் (ஆரியனிடம்) இருந்து காத்து தருகிறேன், என சொல்லி தமிழ் மண்ணை அன்று முதல் இன்று வரை உறிஞ்சி பிழைக்கும் வந்தேறி கூட்டமே…

திராவிடம் தமிழில் இல்லாத திராவிடம் என்றாய். எலி இடம் இருந்து காப்பாற்றுகிறேன் என்று சொல்லி.. பசு தோல் போர்த்திய புலி போல தமிழரை ஏமாற்றிய எட்டப்பர்களே…

கேரளா மண்ணை மலையாளி ஆள்வான்…
கர்நாடக மண்ணை கன்னடன் ஆள்வான்…
ஆந்திராவை உங்க சண்டாள வம்ச தெலுங்கன் ஆள்வான்..

தமிழ் மண்ணை திராவிட வந்தேறி தெலுங்கன் கன்னடன் மலையாளி ஆள்வான்..

தமிழன் விரல் சூப்பி நிற்பான்…

இனி கனவு காணாதே…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள வழி வகை செய்வோம்...

தமிழ் தேசிய தலைவர் திரு. பிரபாகரன் வழி ஒற்றி வாழும் மானமிகு மறத்தமிழர் நாங்கள்…

மறவர்.. கள்ளர்.. மள்ளர்.. பரதவர் … நாடார்… வன்னியர்… கவுண்டர்.. இடையர்.. கோனார்… குறவர்.. மலை சாதி மக்கள் என தமிழரின் முகங்கள் அதிகம்…

உன்னை போல வந்தேரியரால் தமிழர் பிரிவு கண்டோம்…

சங்க காலத்திலும் தமிழ் ஈழத்திலும் சாதி இல்லை… இனி தமிழர்களாக ஓன்று கூடுவோம்…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள்வோம்… வெல்வோமடா...

சபரிமலையில் 2 பெண்களுக்கு அனுமதி மறுப்பு...


கேரளாவைச் சேர்ந்த 2 இளம் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க பக்தர்கள் மறுப்பு.

பக்தர்களின் தொடர் எதிர்ப்பால் 2 பேரும் தரிசனம் செய்யாமல் திரும்பினர்...

கன்னட தெலுங்கர் ஈ.வே.ரா எனும் பெரியார் என்ற பொய்யரை...


பெரியார் என்ற பொய்யரை, அவர் விதைத்த திராவிட கொள்கையை வீழ்த்துவோம். கன்னட ஈவே ரா நாயக்கரின் திராவிட சாதனையே தமிழரின் வேதனை...

இந்தியாவிலேயே சாதி ஒழிப்பு, பார்பன எதிர்ப்பு கடவுள் மறுப்பு என்று முற்போக்கு சிந்தனைகளுக்கு முன்னோடியாக உள்ள தமிழர்கள் கண்ணெதிரே தான் பல இலக்கத்தில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழீழத்தில் நடந்தேறியது.

போரில் மக்கள் கொல்லப்படும் முன்பும், கொல்லப்படும் போதும்,கொல்லப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்பும் மயிரிழை அளவிற்கு கூட இன்றளவும் தமிழர்களிடத்தில் எழுச்சி இல்லை..

இதற்கு காரணம் தமிழினத்திற்கு எதிராக ஈ வே ராமசாமி நாயக்கர் விதைத்த திராவிட கருத்துக்களும் அவர் வழி வந்த திராவிடர்களும், திராவிட அரசியல் செயல்பாடு களேயாகும்.

தனது தொடர் உழைப்பின் மூலம் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, பார்பனர்களை ஒழிப்பதாக கூறிய ஈ.வே.ரா இறுதியில் இவைகளை ஒழிக்க முடியாமல், தமிழர்களின் மொழி இனப்பற்றை முழுமையாக துடைதொழித்து விட்டார். அதனால் தமிழர்களின் உயிராக இருந்த தமிழினப் பற்று அழிந்து கடை கோடியில் இருந்த சாதிப் பற்று இன்று முதன்மையாகி தமிழினத்தை அழித்து வருகிறது..

தமிழ் மொழியை கற்காதே, தமிழனாய் எண்ணாதே, பழம் பெருமையை பேசாதே., தமிழனாய் வாழாதே என்ற ஈ வே ராமசாமி நாயக்கரின் பரப்புரைக்கு அடிமையான தமிழர்கள்.. அவரின் கொள்கையான ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, தமிழ் மொழியினப் பற்றை துறந்து மனிதனாக வாழ துவங்கியதன் விளைவு இன்று தாய்த் தமிழில் உரையாடுவவதையும், தமிழின சிக்கலுக்காக உரிமை குரல் எழுப்புவதையும் அதற்காக போராடுவதையும் மறந்து சாதித் தமிழனாக தன்னலம் மிகுந்த தமிழினமாக மாறியுள்ளனர்..

உடலை கொடுத்து உயிரை பறித்த கதையாக திராவிடக்கொள்கை என்ற நஞ்சுக் கருத்துக்களை விதைத்து, தமிழினப் பற்று என்ற உயிரை பறிப்பதற்காக தன் இறுதி காலம் வரை போராடிய ஈ வே ராமசாமி நாயக்கரை பெரியார் என்று கூறுவது தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இழுக்கல்லவா?

இந்தியாவில் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பார்ப்பனப் பற்று என அனைத்தும் கூடுதலாக ஏன் வெறியாக உள்ள மாநிலங்களில் எல்லாம் அந்த இனத்தை சார்ந்தவரே ஆள முடிகிறது.. அம் மக்களின் உரிமைக்காக ஒற்றுமையாக போராட முடிகிறதே எப்படி?

காரணம் அங்கு சாதி,மதத்தை விட இனப் பற்று மேலோங்கி இருப்பது தான்.

உலகில் எங்குமே இல்லாத வியக்கத்தக்க செயலாக இங்கு மட்டுமே 2 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட திராவிட இனம் 98 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அடிமையாக இறுத்தி ஆண்டு வருகிறது .

தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக ஈ வே ராமசாமி நாயக்கரையும் அவரின் திராவிட கொள்கைகளையும் முன்னிறுத்தி. அதன் மூலமாக தமிழர்களின் ஒரே தலைவராக பெரியாரை நிலை நிறுத்தி வருகிறார்கள். தமிழ் மொழியினப் பற்றை அழித்து தமிழிய சிந்தனைகளை வளர விடாமல் தடுத்து பாதுகாத்து வருகிறார்கள்.

“தமிழ்நாடு தமிழருக்கே” என்று சோமசுந்தர பாரதி முழங்கிய முழக்கத்தை, அடுத்த ஒரு திங்களில் தனதாக்கி கொண்ட ஈ வே ராமசாமி நாயக்கர், அந்த கருத்தை அதன் தாக்கத்தை மழுங்கடித்து, வெறும் பேச்சளவில் கொண்டு மீண்டும் தனது இறுதி மூச்சு உள்ளவரை திராவிட கொள்கைகளை பரப்புரை செய்து தனது திராவிட பற்றை காட்டுகிறார்.

இங்குள்ள திராவிட தலைமைகள் யாரை முதன்மை யான தலைவராக போற்றி கொண்டாடுகிறார்களோ , நிலை நிறுத்துகிறார்களோ அவர்களே தமிழர்களின் எதிரிகள் என்ற எளிமையான புரிந்துணர்வு இருந்தாலே நாம் வென்று விட முடியும். ஈ வே ரா இருக்க வேண்டிய இடத்தில திருவள்ளுவரை போற்ற வேண்டும்..

தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஈ வே ரா சிலைகளை அகற்றி அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் தமிழர்களுக்கான தலைவராக தேசியத் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்த வேண்டும்..

ஈ.வே.ரா விதைத்ததே திராவிடம். ஈ.வே.ரா வை அடித் தளமாக கொண்டே திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது..

திராவிடத்தின் உயிர் நாடியாக ஈ.வே.ரா வின் தமிழின எதிர்ப்பு கருத்துக்களையும், கொள்கைகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு அதனைப் புகழ் பாடி, தமிழர்களை முட்டாள்களாக திராவிட அரசியல் தலைமைகள் உருவகப் படுத்துகின்றனர்.

எனவே ஈ வே ரா என்ற அடித்தளத்தை வீழ்த்தாமல் திராவிட அரசியலை வீழ்த்த முடியாது. தமிழன் ஆட்சிக் கட்டிலில் ஏறவும் முடியாது..

தமிழின ஒற்றுமையை பற்றி பேசினால் சாதியை ஒழித்து விட்டு பிறகு பேசலாம் என்று ஈ வே ரா வின் கொள்கையை முன்னிருத்துகிறார்கள். இல்லாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள்.

சாதியை ஒழிப்பதற்கு 50 அல்லது 100 அல்லது 500 அல்லது 5௦௦௦ ஆண்டுகள் போதுமா என்றால் அதற்கு யாரிடமும் விடை இல்லை.

சாதி ஒழிப்பு என்ற முக மூடியுடன் தமிழர்களை பிரித்து திராவிடம் நம்மை ஆண்டு நம்மினத்தை அழித்து வருகிறது.

சாதிய மேலாண்மை, சாதிய ஏற்றத் தாழ்வு, சாதிய அடிமைத் தனத்தை ஒழித்தாலே நாளடைவில் சாதி தானாக மறைந்து விடும். படிப்படியாக செல்ல வேண்டிய இடத்தில் எடுத்தவுடன் சாதியை ஒழித்து விட்டு தான் தமிழர் ஒற்றுமையை பற்றி பேச வேண்டும். சாதியால் தான் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்பது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

அதுவே உண்மை என்றால் .சாதிய ஏற்றத தாழ்வு அதிகமாக உள்ள அண்டைய மாநிலங்கள், மற்றும் சாதி வெறி உள்ள வட இந்திய மாநிலங்கள் எல்லாம் இனப் அடிப்படையில் ஒன்று கூடி உரிமைகளுக்காக போராட முடிகிறதே எப்படி? .ஆக நமக்கு உடனடி இலக்கு இனப்பற்றே அன்றி சாதி ஒழிப்பு அல்ல..

ஈ வே ராமசாமி நாயக்கரின் (கொள்கை) தலை மீது அமர்ந்து கொண்டு தான் திராவிடம் நம்மை ஆளுமை செய்கிறது. ஈ வே ராமசாமி நாயக்கரின் கருத்துக்களை உயர்த்தி பிடித்தே தமிழர்களை திராவிடம் அடிமை படுத்தி வருகிறது..

திராவிடத்தை வீழ்த்த வேண்டுமானால் நாம் முதலில் பெரியாரை வீழ்த்த வேண்டும். தமிழினத்தின் தலைவராக தேசியத் தலைவரை முன்னிருத்த வேண்டும். அப்பொழுதே தமிழர் நாட்டை தமிழன் ஆட்சி செய்ய முடியும்.

இந்த தலைமுறைக்குள் மீட்டெடுக்க தவறினால் வரும் தலைமுறைகள்,  திராவிடர்களின் வட இந்தியர்களின் அடிமையாக வாழ நேரிடும்..

பெரியார் என்ற பொய்யரை வீழ்த்துவோம். திராவிடம் என்ற பொய்மையை விரட்டி அடிப்போம். தமிழினம் என்ற உண்மையை அரியணை ஏற்றுவோம்...

இங்கு உணர்தல் மட்டுமே மிகச்சிறந்த வழிகாட்டி...


ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணர்விலும்...

உணர்வுதான் உங்களின் உன்மையான தேடலின் விடை...

உணருங்கள் உங்களை கடந்து...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நாம் வசிக்கும் இந்த பூமி கிரகம்: பிரமிடுகள் என்ற ஒரு அற்புதமான கட்டமைப்புக்குள் பல ஆச்சிரியங்களை வைத்திருக்கிறது. ஆனால் அவற்றில் சில வரலாற்றில் முழுவதும் இன்னும் நிழலில் உள்ளன, நேரம் வரும் போது சரியான கைகள் படும் போதும், பல இரகசியங்களை வெளிப்படுத்த காத்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய பிரமிடுகள்   என்றவுடனே, அது அதிகாரப்பூர்வமான மூன்று எகிப்திய பிரமிடுகள் என்ற, பள்ளியில் கற்றுக் கொண்ட பலருக்கு சோலூலாவின் பிரமிட் ஒரு அர்த்தமற்ற பெயராக தான் தோன்றும். மெக்ஸிகோவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பியூபெலாவுக்கு வெளியே சோலூலா பெரிய பிரமிட் உள்ளது. மேசோமரிக்கன் கோஷ்டிகளுக்கும், கொலம்பியாவுக்கு முந்தைய காலத்திலும் உள்ள பிரதான  தெய்வங்களில் ஒன்றுக்கானது இந்த பிரமிட்.

பல மக்கள் அறியாத மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, சோலூலா பிரமிட், கிசாவின் பிரமிடை விட பெரியதாக உள்ளது. எகிப்தில் கிசாவின் பிரமிடு 2 மில்லியன் 500 ஆயிரம் கனமீட்டர் கொண்டது, ஆனால் சோலூலாவின் பிரமிட் 4 மில்லியன் 500 ஆயிரம் கனமீட்டர் கொண்டது, இதுவும் மனிதனால் கட்டப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பா? என்ற சந்தேகத்தை ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

சோலூலாவின் பெரிய பிரமிடு, ஒரு விண்கல் துண்டுப்பிரதியை, "ஜொலிக்கும் பனியில் சுற்றப்பட்டு பரலோகத்திலிருந்து விழுந்த ஜலப்பிரளயத்தின்" ஒரு வாழிடத்தை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆஸ்டெக் கலாச்சாரம் படி ஏழு பிரமிட் ஒன்றில் சோலூலா இருந்தார், மேலும் அவர் மத்திய அமெரிக்காவில் மிக மர்மமான பண்டைய நகரங்களில் தலைவனாக இருந்தார்.

பண்டைய ஆஸ்டெக் புராணம் நமக்கு சொல்கிறது; உலகின் பிற்பகுதியில் 4,800 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு முன்பு, அனாஹாக் நாட்டில் வசித்து வந்த அனைவருமே வெள்ளத்தில் மூழ்காமல் தடுக்க மீன்களாக மாறிவிட்டனர்; தண்ணீர் குறைந்தபோது, ​​'கட்டிடக் கலைஞர்' என்ற பெயரிடப்பட்ட ஜெல்வா என்றழைக்கப்படும் ராட்சதர்களில் ஒருவரான சோலூலாவும் இருந்தார்.

அங்கு தல்லோக்கின் நினைவாக தனக்கும், அவரது ஆறு சகோதரர்களுக்கும் தஞ்சம் புகட்டினார். அவர் ஒரு செயற்கை மலை போன்ற ஒரு பிரமிடு எழுப்பினார். கடவுளர்கள் கோபத்துடன், மேகங்கள் எழும்புவதற்கு மேல் இருந்த ஒரு கட்டிடத்தை பார்த்தார்கள். ஜெல்வாவின் தைரியமான முயற்சியில் எரிச்சலடைந்த அவர்கள் பிரமிடு மீது தாக்குதல் நடத்தினார்.
அதை தகர்த்தார்.

பின் பரலோகத்திற்குச் செல்ல விரும்பிய ஆஸ்டெக் மக்களுக்கு, ஒரு விசித்திரமான கிரகத்தின் உதவியோடு இந்த பிரமிடு மீண்டும் கட்டியெழுப்பபட்டது; சோலூலா பெரிய பிரமிடு Tlachihualtepetl ("செயற்கை மலை" யில் நஹூ) என்றும் அறியப்பட்டது, இது குவெட்ஸால்கோடல் என்ற பாம்பு கடவுளுக்கு (Reptiliens) அர்ப்பணிக்கப்பட்டது.

காலப்போக்கில், மெக்ஸிகோ முழுவதிலுமிருந்து வந்த யாத்ரீகர்களுக்கு சாலூலா ஒரு மெக்கா ஆனார், அவர் தலைமை பாம்பு கடவுளிடம் மரியாதை செலுத்துவதற்காக விண்ணுக்கு திரும்புகிறார். இது வாய்வழி கதைகளே தவிர, எந்த எழுதப்பட்ட ஆவணங்கள் இல்லை. இந்த பிரமிடுகள் கட்டுமான தவிர வேறெந்த சான்றுகளும் கிடையாது.

சோலூலாவின் பெரிய பிரமிட், டிலாச்சிஹெப்டெபெல்ல் எனவும் அறியப்பட்டவையாகும், இது ஏழு பிரமிடுகளின் மொத்த உருவமாக இருந்தது,  இப்போது நாம் காண்பது அடிவாரப் பகுதியை மட்டுமே! இந்த அடிவாரத்தின் படிப்படியான விரிவாக்கம், ஒரு பக்கத்தில் நானூறு ஐம்பது மீட்டர் வரையும், அறுபத்து ஆறு மீட்டர் உயரத்தை அடைந்தது.

சோலூலா இறுதியில் தன்னை மாயன்களை போன்று மர்மத்தில் மூடி மறைக்கிறது. பின்னர் ஸ்பானிய மொழியில் விழுந்தது. 1519-ல் ஸ்பெயினின் வெற்றியாளரான ஹெர்னான் கோர்டெஸ் மெக்ஸிகோவின் இரண்டாவது பெரிய நகரமான சோலூலாவில் வந்தார்.

அவர்களுக்கு முன்னால் டால்டெக்-சிஷீம்காஸைப் போலவே ஆஸ்டெக் சோழூலரின் பெரிய பிரமிடுகளை மீட்டெடுக்கவில்லை. இது மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்று அவர் நம்பவில்லை, ஆனால் இது ஒரு இயற்கை மலை என்று நம்பினர்.

உலகின் மிகப்பெரிய பிரமிடு, மிகப்பெரிய மலைக்கு பின்னால் மறைந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கே பிரமிடு உச்சத்தில், ஸ்பானிய லேடி ஆஃப் ரெடிடீஸ் தேவாலயம் நிறுவப்படுகிறது.

இந்த மிகப்பெரிய அமைப்பின் உட்பகுதியை ஆராய்வதற்காக அகழ்வாய்வுகள் 1966 முதல் 1974 வரை மிகுவல் மெஸ்மாச்சர் தலைமையில் நடத்தப்பட்டன. எனினும், ஆய்வு இரண்டு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது: ஆராய்ச்சிகள் முழு பிரமிடு சரிவு ஏற்படுத்தும் சாத்தியம், மற்றும் INAH மூலம் பாதுகாக்கப்படுகிறது இது மேலே கட்டப்பட்ட தேவாலயத்தின் அடித்தளங்களை சேதப்படுத்தும் ஆபத்து காரணமாக...

இரண்டு அடிகளில் உலகத்திற்கே அனைத்தையும் கூறியவன் எங்கள் திருவள்ளுவர்...


இந்த பெருமை எங்களுக்கு மட்டுமே உண்டு..

அனைத்து குறள்களையும் நான் படிக்கவில்லை ஆனால் என் வாழ்வில் அனைத்து காலகட்டத்திலும் இவரின் திருக்குறள் பயனளித்தது...

தமிழர்கள் அனைவரும் இந்தி கற்பதனால் வரும் ஆபத்துக்கள்...


1. தமிழ் பெயர்கள் அனைத்தும் இந்தி பெயர்களாக மாற்றப்படும்.. இது ஏற்கனவே நடந்தேறி வருகிறது.

2. தமிழ் பெயர் பலகைகள் முற்றிலும் மறைந்து ஹிந்தி மொழியிலும் பெயர் பலகைகள் காணப்படும்.

3. ஹிந்தியர்கள் சுதந்திரமாக தமிழகத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் பயணித்து வியாபாரம் செய்வார்கள்.

4. ஹிந்தி வழிக் குடும்பங்கள் சாரை சாரையாக தமிழ்நாட்டில் குடியேறுவார்கள். அதனால் ஹிந்தி வழி பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கும்.

5. ஹிந்திய அரசியல் தொகுதிகள் தமிழ் நாட்டில் உருவாகி ஹிந்திய அரசியல் வாதிகள் ஆங்கங்கே வெற்றி பெற்று ஆட்சியும் செய்வார்கள்.

6. அனைவருக்கும் ஹிந்தி எழுத படிக்க தெரியும் என்ற நிலையில் , அனைத்து வியாபாரம் , அலுவலக ஆவணகளும் ஹிந்தி மொழியில் பதியப்படும்.

7. தமிழ் சினிமாத் துறை நலிவடையும். ஹிந்தி சினிமாக்கள் இனி பட்டி தொட்டியெல்லாம் திரையிடப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டும்.

8. வணிக வளாகங்கள், சுற்றுலாத் தளங்கள், வழிபாட்டுத் தளங்கள் ஹிந்தியை தான் முதலில் பயன்படுத்தும். கர்நாடகாவில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

9. அரசு அறிவிப்புகள் ஹிந்தி மொழியிலும் வெளிவரும், இது ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு எளிமையாகிவிடும்.

10. பெயரளவில் மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப் படும். எழுதாத சட்டமாக எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் இருப்பது போல் இனி எங்கும் ஹிந்தி எதிலும் ஹிந்தி என்கிற நிலைமை தமிழ்நாட்டில் நிச்சயம் உருவாகும்.

இத்தகைய சூழ்நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும், ஹிந்தி மக்கள் இந்தியாவில் எங்கும் சிரமமின்றி வாழ வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோளை கொண்டு தான் இந்திய அரசு பிற மாநிலங்களில் ஹிந்தியை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது.

இந்த இழிநிலை வரக் கூடாது என்பதற்காக தான் தமிழர்கள் நாங்கள் போராடுகிறோம்.

ஆகவே தமிழர்கள் அனைவரும் இந்த சூழ்ச்சியை கருத்தில் கொண்டு உங்கள் தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து , ஹிந்தி திணிப்பை முடிந்த வரை எதிர்க்க போராடுங்கள். இல்லை என்றால் உங்கள் கண்முன்னே உங்கள் தாய் மொழி சீரழிந்து போவதை நீங்கள் உறுதியாக காண்பீர்கள்...