18/01/2019

உலகின் 2வது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டாரக சென்னை சிறுவன் தேர்வு...


நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்.

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும், 12 வயதே ஆன குகேஷ் நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், உலகிலேயே இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து, டெல்லியில் பேட்டியளித்த குகேஷ், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே தனது லட்சியம் என கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.