09/07/2018

தாந்திரீகம் - சித்தர்கள் செயல் வஜ்ரோலி முத்திரை தேர்ந்த குரு மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்...


சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர்.

யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான்.

நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும். அத்திரட்சியே விந்து என்றும் இது 21 நாட்கள் வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர் சொல்கிறார்(திருமந்திரம் -1934).

மனித உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள். இந்த நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம். எனவேதான் இது அன்னத்தாலாகிய உடம்பாகிய அன்னமய கோசம் எனப்படுகிறது.

ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது. இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும், அதை கலையாகிய அறிவு விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்கு உடலைவிட்டு நீங்காது என்றும், உலக இல் வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே -(தி ம - 1936).

இவ்வாறு வீணே கழியும் விந்தின் பெருமையை உணராதவர்கள் அதை வீணாக்கி உடலையும் மனதையும் நாசம் செய்கின்றனர். ஒரு துளி விந்தில் 80 துளி வெண்ணீர் துளிகள் உள்ளன. ஒரு வெண்ணீர் துளி 80 துளி இரத்தத்தின் சாறு ஆகும். ஆக ஒரு துளி விந்து அழிந்தால் 6400 துளி இரத்தம் வீணாகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதனால் உடலும் தளரும் என்பதை யாரும் உணர்வதுமில்லை.

ஆனால் காமசக்தியான விந்து சக்தியையும், காம உணர்ச்சியையும், புணர வேண்டும் என்கிற ஆசையையும் மனிதன்ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது, அடக்கவும் கூடாது. அவ்வாறு அடக்கும் போது விளைவுகள் மோசமாகும். மனநோய் உருவாகலாம்.

சரி அதிகமாகப் புணர்ந்தாலோ உடல் நலம் கெடும். என்னதான் செய்யலாம் என்று சிந்தித்த சித்தர்கள் அதற்கென சில வழிமுறைகளைக் கண்டு பிடித்தனர்.

வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற சில யோகங்களே அவைகள்.
உலகியல் வாழ்வின்படி மணம் செய்து கொண்ட யோகியர் பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்குமே அல்லாது உள்ளம் சிவனிடத்து இருக்குமாகையால் விந்து கழியாது.

இதற்கு இருபாலினருக்கும் பயிற்சியும் ஒருங்கிணைந்த மனப் போக்கும் அவசியம். இதுவே நற்போகமென்றும், இதனால் விரைவில் குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள் என்று சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய யோகியர் மக்கட்பேறு வேண்டி விந்துவினை விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள்.

விந்துவினை மூலதாரத்தில் அனலால் செம்மையுறச் செய்து, அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்துக்கு வலது நாடி வழியாக ஏற்றி, அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம். இந்த வேளையில் மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது. திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும். இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம். இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும்.

ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம் தேவையாகும். பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக இதை கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் விந்து விரையமாகாமல் போகம் செய்து, அதையும் சிவயோகமாகச் செய்து இருவரும் மேன்மை அடைவர்.

வஜ்ரோலி முத்திரை தேர்ந்த குரு மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இதில் பயிற்சியாளர் முதலில் தண்ணீரை ஆண்குறி மூலமாக உள்ளிழுக்க பயிற்றுவிக்கப்படுவார்..

இதனால் என்ன பயன் என்றால் சம்போகம் செய்யும் போது விந்து வெளியேறினாலும், அடுத்த நொடியே மூச்சுப் பயிற்சியினாலும், வயிற்றுத் தசைகளைச் செயல் படுத்தியும் அடிவயிற்றில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, வெளியைறிய விந்துவை உள்ளே இழுத்து விடுவார்கள். எனவே மனதின் இச்சையையும் தீர்த்துக் கொண்டு, விந்துவையும் விரையமாகாமல் காத்து தேகத்தை வலுவாக்கிக் கொள்ளலாம். இது மிகவும் கடுமையான பயிற்சியாகும்.

விளையாட்டாக எதுவும் செய்தால் விபரீதமாகிவிடும். குரு அவசியம். இதில் தேர்ச்சி பெற்ற குருவெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் சரியில்லை. இதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களே அதிகம் காணப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

மாதம் இருமுறை சம்போகம் செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு.

யோக மார்க்கத்தில் மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து, விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர். கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக் கலை சிறக்கும்.
இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம் தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார். இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி உள்ள உணர்வுகளை ஒருங்கிணைத்து தெய்வநிலை அடைவர். உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும் மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும். இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும். போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர். இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு ஆதாரத்தில் நிறுத்தலாம். இந்த நிலையில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி இருவரும் கூடும் போது இந்திரிய சக்தி விரயமாகது என்பதோடு ஆன்மிக சக்தியான குண்டலினியும் கிளப்பிவிடப்படும். இருவரும் அதை ஒவ்வொரு ஆதாரமாக ஒருமித்த கருத்துடனும், முனைப்புடனும் மேலேற்றுவர். விந்துவும் நாதமும் அருளாகப் பொருந்தி உடன்கூடி சந்திர மண்டலத்தை எட்டுமாயின் ஆயிரம் இதழ் தாமரை பரவெளியிலிருந்து அமிழ்தம் வெள்ளம் போல் பெருகுமாம்...

இயற்கை வாழ்வியல்முறை - ஆண்மை அதிகரிக்க பண்டைய கால மன்னர்கள் சாப்பிட்ட நான்கு உணவுகள்..


நம் முன்னோர்களின் அறிவியல்...

இன்றைய கால கட்டத்தில் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு மூல காரணம் முப்பது வயது தாண்டுவதற்குள் இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுவது தான்.. இதுவே விறைப்பு தன்மை கோளாறுகள் ஏற்படுத்துகின்றன.

நமது நாட்டின் உணவு பழக்கவழக்கத்திலேயே இது போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்று பழைய கால குறிப்புகள் கூறுகின்றன . அனால் இதற்க்கு தீர்வாக அனைவரும் ஆங்கில மருத்துவதையே தேடி செல்கின்றனர்..

நம்மை ஆண்டு வந்த மன்னர்கள் அந்த காலத்தில் இது போன்ற விஷயங்களுக்கு தீர்வாக எந்த எந்த உணவு பொருட்களை உட்கொண்டனர் என்பதை கீழே காண்போம்..

குங்குமப்பூ: குங்குமப்பூ கருவளம் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுப் பொருள் ஆகும். இது நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்து கருவளத்தை தூண்டுகிறது

எப்படி எடுத்துக் கொள்ளலாம்...

இரவு படுக்க செல்லும் முன் குங்குமப் பூவை ஒரு சிட்டகை அளவு எடுத்து, இதமான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

புளியங்கொட்டை:  முக்கியமாக புளியங்கொட்டை விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை குறைபாடுகளை போக்கும் திறனுள்ளது…. பல நன்மைகள் இதில் உள்ளது.

எப்படி எடுத்துக்கொள்ளலாம்...

பாலில் புளியங்கொட்டை பவுடரை கலந்து இரண்டு முறை ஒரு நாளுக்கு குடித்து வர வேண்டும்

அஸ்வகந்தா: நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது அஸ்வகந்தா… மேலும் இது வலுவின்மையை சரி செய்யும்.. விந்தணு எண்ணிக்கைகளை கூட்டும்…

எப்படி எடுத்துக் கொள்ளலாம்...

இதமான நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் அஸ்வகந்தாவைகலந்து குடித்து வர வேண்டும்

நெல்லிக்காய்: சிறுநீர் கோளாறுகள், குறைந்த விந்தணு எண்ணக்கை ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் மிக சிறந்த மருந்து..

எப்படி எடுத்துக் கொள்ளலாம்..

இரண்டு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

முக்கியமான குறிப்பு :

இவை அனைத்துமே மூலிகை மற்றும் இயற்கை பொருட்கள் தான். ஆயினும், ஒருசில உடல் ஆரோக்கிய குறைபாடுகள் / நோய்கள் உள்ளவர்களுக்கு இது அலர்ஜியாக இருக்கலாம்.

இது ஒவ்வொரு தனி நபரின் ஆரோக்கியம் சார்ந்தும் வேறுபடும். எனவே, இதை பின்பற்றும் முன்னர் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது...

பாஜக மோடியின் கல்வி ஒழிப்பு திட்டங்கள்...


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ..

ப.சிதம்பரம் வீட்டில் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு.. போலீசில் புகார்...


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான, நுங்கம்பாக்கத்தில், பெரிய வீடு ஒன்று இருக்கிறது. அவர் சென்னையில் இருக்கும் போது, இந்த வீட்டில் தங்குவது வழக்கு. இந்த வீட்டிற்கு பாதுகாப்பிற்கு காவலர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ரொக்கம், வைர, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் வீட்டினர் வெளியூர் சென்றிருந்த போது திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டில் திருடிய நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது...

நம்ப முடியாத உண்மைகள் - ஏய்ட்ஸ்...


LINK : http://www.antinews.in/dr-gallo-i-invented-aids-depopulate-humanity/

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

டெலிபோனை கண்டு பிடித்தவர் யார்.?


பார்ப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகளை சந்தித்துப் பேசியதற்காக சி.பி.எம் கட்சியைச்சேத்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்...


அடுத்து என்ன?

விவசாயி இருந்தால் தானே பிரச்சனை. பேசாம ஒட்டுமொத்தமா விவசாயத்தையே தடை செய்துடுங்க. பிரச்சனை முடிஞ்சுடும். குரங்கின்கை பூமாலையாய் பாழாகிறது தமிழ்நாடு...

பாஜகவும் மாமா சுப்பிரமணிசாமி கலாட்டாவும்...


எந்த சேனல், எந்த காரணத்திற்காக, எப்போது இருட்டடிப்பு செய்யப்பட்டது?


தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள் அரசு கேபிள் மூலம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், இந்தப் பிரச்சனை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் இந்து குழுமத்தின் பதிப்பாளரான என். ராம். Ram Narasimhan..

அரசு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் போது ஊடகங்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என்று குறிப்பிட்ட என். ராம், தமிழ்நாட்டில் சமீப காலங்களில் எப்போதெல்லாம் அரசுக் கேபிள் மூலம் சேனல்கள் இருட்டிப்புக்கு உள்ளாக்கப்பட்டன என்ற பட்டியலைச் சொன்னார்.

அந்தப் பட்டியல்...

1. ஜனவரி 23, 2017 - ஜல்லிக்கட்டு கலவரத்தில் காவல்துறை நடவடிக்கையை ஒளிபரப்பு செய்ததற்காக நியூஸ் 7, சன் நியூஸ் ஆகியவை சிறிது காலத்திற்கு அரசு கேபிளில் தெரியாமல் செய்யப்பட்டது.

2. ஜூன் 12, 2017 - டைம்ஸ் நவ் MLA's for Sale என்ற செய்தியை ஒளிபரப்புச் செய்ததற்காக சிறிது காலத்திற்கு அரசு கேபிளில் தெரியாமல் செய்யப்பட்டது.

3. செப்டம்பர் 2017 - ஜெயா நெட்வொர்க் அரசுக்கு எதிரான சில போராட்டங்களை செய்தியாக வெளியிட்டதால் இருட்டடிப்புக்குள்ளானது.

4. டிசம்பர் 8, 2016- சேகர் ரெட்டி டைரி குறித்த செய்தி வெளியிட்டதற்காக Times Now தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது.

5. டிசம்பர் 2017 - காவேரி நியூஸ் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தருணத்தில் டி.டி.வி. தினகரன் வெற்றிபெறுவார் என ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதற்காக நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால், டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இப்போது இந்தத் தொலைக்காட்சி நீதிமன்றம் சென்றிருக்கிறது.

6. மார்ச் 2, 2018 - ஊழல் குறித்த செய்திகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்பதற்காக தந்தி டிவி 48 மணி நேரத்திற்கு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டது. இப்போது அந்த நிர்வாகம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் ட்ராய்க்கும் புகார் செய்திருப்பதாகத் தெரிகிறது.

7. மார்ச் 2018 - ஜெயா பிளஸ் அரசு கேபிளில் தமிழகம் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து டிடிவி தினகரனின் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிறகு, மிக மோசமான தரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

8 மே 22, 2018 - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக நியூஸ் 18 தமிழ்நாடு, அரசு கேபிளில் இருந்து தூக்கப்பட்டது. 12 மணி நேரம் சேனல் ஒளிபரப்பாகவில்லை.

9, ஜூன் 2018 - புதிய தலைமுறை 124வது இடத்திலிருந்து 499வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோயம்புத்தூரில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

10. ம.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான மதிமுகம் டிவி அரசுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பியதற்காக 450வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

11. அரசை தொடர்ந்து விமர்சித்துவருவதால் சத்தியம் டிவி சேனல் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

12. டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களை ஒளிபரப்பியதற்காக சன் டிவி முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இந்தத் தருணத்தில் என். ராமின் இந்தப் பேட்டி நிச்சயம் கவனிக்கத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-44740060

- Muralidharan Kasi Viswanathan

அதிமுக வும் - டிடிவி தினகரன் கூட்டும்...


விவசாயிகளின் கோரிக்கை...


எட்டு வழி சாலைக்கு நிலம் கொடுக்க  விவசாயிகள்  நாங்கள் தயார்.

அதற்க்கு பதில் அரசியல்வாதிகள் கையில் இருக்கும் விவசாய நிலங்கள், கல்லூரிகள் ,தங்கும் விடுதிகள். வணிக வளாகங்கள் எங்களுக்கு தரவும்.

விசாயிகளுக்கு அரசு தர வேண்டிய பணத்தை அவர்களிடமே கொடுத்து விடலாம். எட்டு வழி சாலையும் அவர்களே வைத்து கொள்ளலாம்.

விவசாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


பொய் வழக்கு கைது சிறை அச்சுறுத்தல் மூலம் மட்டுமே அதிகாரத்தை தக்க வைத்துள்ள தமிழக ஆட்சியாளர்கள்...


கவிக்கோ மன்ற உரிமையாளர்களை மிரட்டி இனி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆதரவான நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என நெருக்கடி தந்திருக்கிறது காவல் துறை. இல்லையெனில் அரங்கத்திற்கு Seal வைக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியின் முன்பும் கடும் அழுத்தம் தந்திருந்தது காவல் துறை.

இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள்.

பல்வேரு கருத்துகளை பகிர இடம் கொடுத்த கவிக்கோ மன்றத்தினுடன் உறுதுனையாக நிற்ப்போம்...

பாஜக - அதிமுகவும் தமிழகம் அழிப்பும்...




தமிழ் இயக்குனரும் என்னை சீரழித்தார்.. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்....


தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் தெலுங்கு நடிகர்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்தார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி அரை நிர்வாண போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது தெலுங்கு திரையுலகினரை அடுத்து தமிழ் இயக்குனர் ஒருவரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்தார் என்று கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,

தமிழ் இயக்குனரும் என்னுடன் படுக்கையை பகிர்ந்தார். அவரது பெயரை விரைவில் வெளியிடுவேன். தமிழ் திரையுலகில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். எனவே விரைவில் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறேன். தமிழ் சினிமாவுக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணிக்க தயராக உள்ளேன் என்றார்...

தமிழக காவலர்களால் கிழித்தெரியப்பட்ட தமிழ் பலகை....


மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம்- ஆய்வறிக்கை...


உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது.

அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும். பிறந்த ஒவ்வொரு உயிரிணங்களும் இறந்து  போவதற்கு காரணம் வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான். யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் தற்போது அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர். நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது.

ELLP என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள். நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேயும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ELLP புரதங்கள் தான். இதனால் இவற்றுக்கு `போக்குவரத்து வழித்தட புரதங்கள்' என்று மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த புரதங்களே. உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும்.

ஆனால், வேதியியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும்போது அவற்றுக்கு மாற்றாக, புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNAவை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்ட்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும்.

ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்ட்டின் ஹெட்சர்.

இத்தகைய விசேஷ பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.

மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNAவை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதி நிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன.

இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒருமுறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது...

உலகப் போரும் உண்மையும்...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் ராமசாமி தொண்டர்களுக்கு...


மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர, கர்னாடக, மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே.

பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷயம் அல்ல. இனி பார்க்க போவது தான் விஷயம்.

மொழி வாரி மாநிலம் பிரிந்து போனதற்கு முன்பு இருந்த அதே சாதி பட்டியலை தான் இன்று வரை நாம் இட ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த உண்மையை எந்த திராவிட அயோக்கியனாவது உங்களுக்கு சொல்லி இருக்காங்களா...?

தமிழர் அல்லாத சாதிகள் அந்த சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறான் திருட்டு திராவடர்கள்.

எவன் ஊட்டு சலுகையை எவண்டா அனுபவிக்கிறது...?

இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் எவனாவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தரானா...?

மாநிலம் பிரிச்ச உடனே அவன் அவன் அவனுக்கு புரோஜனமா சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு மாத்திகிட்டானே....?

ஏண்டா திராவிட சொம்புகளா, நீங்க ஏன் இன்னும் மாத்தாம இருக்குகீங்க...?

கேட்டா, 'அவன் நம்ம ஆளு தான், கொடுத்தா என்னன்னு கேப்பீங்க. இதை பக்கத்து மாநிலத்தில் கேட்டு தமிழனுக்கு வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா...?

ஆனா தமிழன் மட்டும் பெருந்தன்மையா இருக்கணும்...? பரவா இல்லை. இருந்தாலும் உங்க கேள்விக்கு பதில் சொல்றோம்..

இப்படி அயோக்கிய தனமான இட ஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் திராவிட ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்ததால் வந்த வினைகளின் ஒரு சில உதாரணங்கள் இவை.

ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை..

MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?

முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலைமையும் இது தான்.

BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?

தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது?

இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.

ஏம்பா திராவிட சிகாமனிகளா, இப்படி என் தமிழ் சாதிக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பரிச்சிகிட்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே..... எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...?

சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது.

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான்.

அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கை தூக்கி விட்டாங்க' என்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.

தமிழா உனக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் செய்து தமிழகத்தை விட்டு உன்னை வெளியேற்றி வெளி நாட்டில் அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த திராவிடம்...

சேலம் 8 வழிச்சாலை உண்மைகள்...


உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை...


ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.

பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது.

இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய...

எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

இளமையை தக்க வைக்க...

எலுமிச்சை அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...

எலுமிச்சையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்தவிதமான நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

கொழுப்பை குறைக்க...

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

குமட்டலை போக்க...

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

வாத நோயை சரிசெய்ய...

எலுமிச்சையில் நீர்ப்பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.

புற்றுநோயை தடுக்க...

அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதேப் போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

தலைவலியை போக்க...

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நாடாப்புழுக்களை அழிக்க...

குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

உணவை செரிப்பதற்கு...

அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகிவிடும்.

உடலை சுத்தப்படுத்த...

தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பற்களை ஆரோக்கியமாக வைக்க...

எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காயங்களை குணப்படுத்த...

உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

முகப்பருவை போக்க...

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கு...

எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

பிறப்புறுப்பை சுத்தமாக்க...

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதா? அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருக்கும்.

கண் பிரச்சனையை போக்க...

எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உணவில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்யலாம்

சிறுநீரகக் கற்களை கரைக்க...

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜூஸை அவ்வப்போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும்...

தமிழீழம்... பாடம்... கருத்தியல்...


தமிழீழம்.. பாடம்.. கருத்தியல்...


இங்கு பலபேர் கூறுகிறார்கள், தற்போதையை நிலையில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்பதை தவிர்க்க முடியாது எனவும், அது இல்லாமல் வாழ்க்கை இல்லை எனவும்..

ஆனால் நீங்கள் கூறும் “முடியாது, சாத்தியம் இல்லை” என அனைத்தையும் உலகில் ஒரு மண் முடியும் என்றும், சாத்தியம் என்றும் சாதித்து காட்டியது..

அதுதான் தமிழீழம்...

உலக வல்லாதிக்கத்தை அனைத்து வழிகளிலும் எதிர்த்து நின்றது மட்டுமில்லாமல் அதற்கான அனைத்து மாற்று வழிகளையும் உருவாக்கியது...

சேலம் எட்டுவழிச்சாலை...


வளர்ச்சி உனக்கு -  வாய்க்கரிசி எனக்கு..

அழுதால் சமூக விரோதி
ஆதரவு கொடுத்தால் தீவிரவாதி.

பொய் வழக்கு, சிறைக்கு அஞ்சாதே.

போலீசு அடக்குமுறைக்கு எதிராக
ஒன்றிணைவோம்.. போராடுவோம்.

மக்கள் அதிகாரம்...

தலைவன் சரியா இருந்தா தானே தொண்டன் சரியா இருப்பான்...


இன்று பெரியாரியவியாதிகள் ஏன் தமிழர் எழுச்சியை நீர்த்துப் போகச் செய்ய பெரும்பாடுபடுகிறார்கள். ஏன் தமிழ் தேசியத்தை பொது எதிரியாக பார்க்கிறார்கள் என்றால் ஈவெரா கற்றுத்தந்ததே தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலை மட்டும் தான்.

தமிழர் என்ற ஒரு இனமே அறிவோடு மானத்தோடு வாழ காரணமே ஈவெரா தான் என்பார்கள்.

சரி அந்த கருமத்தையும் படித்துத் தெரிந்து கொள்வோம் என்று பார்த்தால்

இவர்கள் கம்பு சுத்துவதைப் போல ஈவெரா உண்மையில் சாதியை ஒழித்தாரா என்றால் அதுவும் இல்லை

ஊதிய உயர்வு கேட்டு நியாயமாக போராடிய தொழிலாளர்களை  தன் சொந்த சாதிக்காரர் எரித்துக் கொன்றார் என்பதால் கொல்லப்பட்டதை ஆதரித்த சுய சாதி வெறியர் தான் இந்த ஈ.வே.ரா..

தமிழர்களை ஏமாற்றும் பாஜக - அதிமுக...


மாணவர்கள், பிரின்சிபல், ஆசிரியர்கள் உட்பட 18 பேரால் சூறையாடப்பட்ட சிறுமி...


பீகார் மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை உடன் படிக்கும் மாணவன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளான்.

அவ்வீடியோ உடன் படிக்கும் மாணவர்களுக்கும் பரவவே, அவர்களும் வீடியோவை வெளியில் விட்டு விடுவோம் என மிரட்டி அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். இவ்விவகாரம் அச்சிறுமி படிக்கும் பள்ளியின் பிரின்சிபல் கவனத்திற்கும் சென்றது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரின்சிபலோ, உடன் பணியாற்றும் இரு ஆசிரியர்களுடன் சேர்ந்து அச்சிறுமியை சீரழித்துள்ளனர்.

போலீசில் இது பற்றி சிறுமியின் தந்தை புகார் அளித்தும் புகாரை போலீசார் ஏற்கவில்லை.

மொத்தம் 18 பேர் இச்சிறுமியை சீரழித்துள்ளனர்...

விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வ இதழ்...


மன வளம்...


மனதை கட்டுப்படுத்த நினைப்பது தவறு. மனதை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. நாம் வெற்றி பெற மனதை ஒரு புள்ளியில் குவிக்கலாம். சூரிய ஒளி பரவிக் கிடப்பதை விட ஒரு குழியாடியில் (லென்சு) குவிக்கும் பொழுது வெளிப்படும் சக்தியைப் போல. நாம் எதில் வெற்றிபெற நினைக்கிறோமோ அந்தப் புள்ளியில் மனதைக் குவித்தால் நம் சக்தியும் பல மடங்கு அதிகமாகும் நமக்கும் வெற்றி நிச்சயம்.

நல்ல எண்ணங்களை விதை...

ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.

அதில் தாழ்வு எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், பலவீனமான எண்ணங்கள், முரட்டு எண்ணங்கள், அன்பு, தெய்வீகம் என பல உயர்ந்தும், அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.

மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.

இதைத்தான் நம் முன்னோர்கள் விதைப்பதே விளையும் என்றார்கள்.

நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.

உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.

தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.

நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.

எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.

நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து, மட மாளிகை, புது மாடலான வண்டி வாகனங்கள், பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி, பயிரிடுகிறார்கள்.

எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து, போட்டி, பொறாமை, புறம் பேசுதல், பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல், உண்மையாக உழைத்தல், எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.

இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும், உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.

எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?

ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே.

மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.

ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால், அது நல்லதோ, கேட்டதோ அது நடந்தே தீரும்.

ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,

நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய் என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள்.

உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.

மன வலிமை வளர்த்தால் மனம் வளம் பெறும்...

Hcl முதலாளி பல்கலைக்கழகம் துவங்க அரசு பெரும் பாடுபடுகிறது....


கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை...


திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்..

இரண்டு மாதம் கழித்து,சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்..

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய் தானே?

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசி வீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்ற முடிகிறதே?

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்...