03/07/2021

அரசியல் என்பது என்ன?

 




கொள்கை
நியாயம்
தர்மம்
ராஜதந்திரம்
சமயோசிதம்.. சேர்ந்ததே..

ஆனால்...

அரசியல் கொள்கை என்பது?
தேவையான போது தைத்து
கொள்ளும் சட்டை...

நியாயம் என்பது?
தேவையில்லாத போது
கிழித்துப் போடும் சட்டை..

தர்மம் என்பது?
பிரம்மாண்டமாய் கட்டப்படும்
தக்கை கோபுரம்..

ராஜதந்திரம் என்பது?
அதிகாரத்தில் இருப்பவரின்
அராஜகத்திற்கு மறுபெயர்...

சமயோசிதம் என்பது?
செய்த கொலையை
அடுத்தவன் மீது போடுவது...

இவை தான் அன்று முதல் இன்று வரை நடந்துக் கொண்டிருக்கும் திருட்டு அரசியல்...

சாமானிய மக்கள் விரோதி பாஜக மோடி கலாட்டா...

 


பாஜக எச். ராஜா வை காரி துப்பிய காரைக்குடி பாஜக தலைவர்...

 


ரெய்க்கி மருத்துவம்...


ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது..

எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.

ரெய்க்கி : சில சுவையான செய்திகள்..

திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.

ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர். கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர். இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.

ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.

ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசை தான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.

ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.

கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.

ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...

அப்ப ஜெயில்ல இருக்கும் போது ஷாப்பிங் போனதும் அதுக்கு தானா?

 


பாஜக சங்கிகளை காரி துப்பிய நடிகர் சூர்யா...

 


பிராணாயாமம்...

 


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது..

மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது..

இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன..

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றை கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்..

மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்..

இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது..

நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...

என்னை கொன்று விடு...

 




உனக்காக தினம் ஒவ்வொரு
மணி துளிகளும் காத்திருந்தேன்...

உன் அழைப்புகளுக்கும்
உன் குறுந்செய்திகளுக்கும்...

உன்னை காணும்
நாள் வந்தாலே...

இரவெல்லாம் உறங்காமல்
நிமிடங்களை நகர்த்திக்கொண்டே...

காலையில் உன்னிடம்
என்ன பேசலாமென்று...

ஒத்திகை பார்ப்பதிலே
மணித்துளிகளும் இரவும் கரையும்...

காதலெனும் இன்பத்தை
நீ தந்தாய்...

காதலெனும் தித்திப்பை
நான் கொடுத்தேன்...

அளவுக்கு அதிகமாக
தித்திப்பு திகட்டும் என்பார்கள்...

என் காதலும்
உனக்கு திகட்டிவிட்டதால்...

நீயும்
என்னை பிரிந்தாயோ...

உன்னையும் நீ கொடுத்த
வலிகளையும் மறந்து...

உறங்க நினைத்தேன்...

என்னை உறங்க விடுவதில்லை
உன் அழகிய நினைவுகள்...

இரவெல்லாம் என்
விழியோரம் ஈரம் கசிவதால்....

இறுதியாக ஒரு உதவி செய்
என்னை கொன்று விடு...

நொடிக்கு நொடி துடிதுடித்து 
வாழ விரும்பமில்லை எனக்கு...

காலை வணக்கம்...

 


பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...

 


பாஜக மோடியின் பெட்ரோல் கொள்ளை...

 


இதயத் துடிப்பை சீராக்கும் கிவி பழம்...

 


இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க கிவி பழம் பெரிதும் துணைபுரிகின்றது. மட்டுமின்றி இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது..

உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பிற்கு முன்னர் பல்வேறு வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவையாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கின்றது.

இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு இயற்கையாக உள்ளது.

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும் இந்த கிவி. கிவி பழத்தில் FOLATE என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது...

காதலியே உன் புது வாழ்கைக்கு வாழ்த்துக்கள்...



பறித்தால் 
சில நாட்கள்
கழித்து வாடிவிட...

நான் ரோஜா
மலர் இல்லையடி...

முகர்ந்தால் வாடி போகும்
அனிச்ச மலரடி என் இதயம்...

என்னை தூக்கி எரிய
உனக்கு எப்படி மனம் வந்தது...

எனக்கான புது வாழ்வை
அமைத்துக்கொள் என்கிறாய்...

கசங்கிய மலர் எப்போது
மீண்டும் சிரித்து இருக்கிறது...

கசங்கிய என் இதயம்
துடிப்பையும் நிறுத்தும்...

இறுதி துடிப்பும் உனக்காக
உன்னை நினைத்து மடியும்...

புத்தம் புது பூவே 
நீ புது மாலை சூடி கொண்டாய்..

புது வாழ்வு இனிதாக அமைய
என் மனமார்ந்த வாழ்த்துக்களடி...

பிராடுகளுக்கு ஒரு கட்சி என்றால் அது பாஜக தான்...

 


௮ய்யோக்கிய பயலுங்க... திராவிட புருடா. கொத்தடிமை ௮சோக் தாக்கப்பட்டார் 😁

 


நியூட்டனின் 3ம் விதியும், தமிழரின் தலை விதியும்...

 




தமிழன் போராடவே மாட்டான்.
தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது.
தமிழனுக்கு உணர்ச்சியே கிடையாது.
தமிழனுக்காகப் போராடினால் நல்ல சாவுகூடக் கிடைக்காது.

என்றெல்லாம் வசைபாடுபவர்கள் கவனத்திற்கு..

எந்த ஒரு விடயத்திற்கும் ஒரு சரியான காரணம் உண்டு.

எளிதாகப் புரிய இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும்தானே,

எந்த ஒரு விசைக்கும் சமமான நேர்எதிர்விசை ஒன்று இருக்கும்

இதை விளங்க ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.

(என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையில் எடுக்கப்போவது தான்).

நாம் விசையை அழுத்தியதும் தோட்டாவிற்குள் இருக்கும் வெடிமருந்து தீப்பிடித்து வெடித்து தோட்டா முன்னே பாய்கிறது.

இதற்கு சமமான எதிர்விசை துப்பாக்கியையும் உங்கள் கையையும் பின்னோக்கித் தள்ளுகிறது.

இந்தவிதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

சரி; தமிழரைக் குறைகூறும் பலர் தமிழர் மற்ற எந்த இனத்தையும்விட வரலாற்றில் வலுவாகத் தடம்பதித்ததையும் தமிழரின் பெருமையையும் திறமையையும் ஒப்புக்கொள்கின்றனர்.

மற்ற மக்களிடம் இல்லாத ஒரு சிறப்பு தமிழரிடம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

என்றால் அதற்கு சமமான எதிர்விளைவு அவர்களிடம் இருக்கும்தானே?

அதுதான் தமிழரின் மந்தப்போக்கு.

மற்ற இனங்கள் சிறிய சீண்டலுக்கே எகிறி அடிக்கிறார்களே..

தமிழர்கள் ஏன் எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் அசமந்தமாக இருக்கிறார்கள்? என்று நன்கு யோசித்ததில் இந்தப்பதில் கிடைத்தது.

மற்றவர்கள் கைத்துப்பாக்கிக்கோ அல்லது தோள்துப்பாக்கிக்கோ ஒப்பானவர்கள் அவர்களை வெடிக்கவைப்பது எளிது. ஆற்றலும் குறைவு.

ஆனால், தமிழர்கள் பீரங்கிக்கு சமமானவர்கள்... வெடிக்கவைப்பது கடினம் ஆனால் வெடித்தால் கோட்டைகளே தகர்ந்து போகும்..

ஈழத்தில் புலிகள் வெறும் முப்பதாயிரம்பேர்.
அவர்கள் கட்டுப்பாட்டில் நேரடியாக உதவியவர்கள் வெறும் ஐநூறாயிரம் (5லட்சம்) தமிழர், தூரத்திலிருந்து ஆதரவளித்தவர்கள் வெறும் இருநூறாயிரம் தமிழர் மட்டுமே..

ஆனால், இவர்களை அழிக்க ஐம்பதாயிரம் சிங்களப்படையினர், மூன்று வல்லரசு நாடுகள் நேரடி உதவி, இருபத்தியைந்து நாடுகள் தூரத்திலிருந்து உதவி.

வெறும் இருபத்தி ஐநூறாயிரம் (25லட்சம்) தமிழருக்கே இவ்வளவு பேரா?

என்றால் நாம் இந்த உலகில் பத்துகோடித் தமிழர் இருக்கிறோமே..?

நாம் ஒன்றிணைந்தால்..
நினைக்கவே நடுங்கிறது இல்லையா...

நீயே எனக்கு சுமையாக...

 




தினம் விடியும்
ஒவ்வொரு நாளும்...

எதிர்காலத்தை
நோக்கி பயணிக்க...

என் மனது மட்டும் ஏனோ
உன்னை நோக்கியே பயணிக்கிறது...

வீசும் காற்றின் வேகம் மாறலாம்
வற்றாத நதியும் வற்றலாம்...

என்னில் இருக்கும்
உன் நினைவு மட்டும்...

இன்னும் ஏனோ
எனக்குள் கூடிக்கொண்டே...

என் தனிமையில்
நீதான் ஆளுகிறாய்...

உன் நினைவே வருகிறது
துணையாக தனிமையில்...

கடந்த காலம் மீண்டும்
கிடைக்க போவதில்லை எனக்கு...

கடந்த கால நினைவுகள்
மட்டும் சுகமாக சுமையாக எனக்கு...

குழந்தைகளை திருடி விற்பனையில் ஈடுபட்ட அறக்கட்டளைக்கு விருது கொடுத்துள்ள அதிமுக எடப்பாடி...

 


வரி கொள்ளையன் பாஜக மோடியின் கலாட்டா...