22/07/2021
எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : வேளாண்மைத்துறை...
வேளாண்மைத்துறை...
1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம்-காரையாறு-மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட வேண்டும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.
2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்பட வேண்டும்.
3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.
4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.
5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வர வேண்டும்.
6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.
7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்பட வேண்டும்.
உதாரணமாக,
தஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர்,
நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள்,
கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.
8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.
9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்பட வேண்டும்.
10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்க வேண்டும்.
அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட இருக்க வேண்டும்...
நினைவுகள் ஒன்றே போதுமடி...
உன் புது வாழ்கை பயணத்தில்
என் நினைவுகள் மறந்து விடும்...
உன்னை பற்றிய உன் நினைவுகளோ
என் வாழ்கையில் என்றும் மாறாது....
உன்னோடு நான் பழகிய நாட்களை
நான் என்றும் நினைத்து பார்க்க மறந்ததில்லை...
உன் நினைவுகளை என் இதயத்தில்
ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறேன்...
தென்றலோடு என் சுவாசகாற்று
கலந்திருக்கும் வரை..
உன் நினைவுகள் என்னுள்
வாழ்ந்து கொண்டே இருக்கும்...
இன்றைய என் கலாய்ப்பு 😁
மெடிக்கல் கார அண்ணே..
ஒரு 25 தூக்க மாத்திரை கொடுங்க..
கடவுள் என்ன பத்தி என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்காருன்னு தெரியல?
நேராவே போய் கேட்டுட்டு வந்துடுறேன்..
மெடிக்கல் அண்ணே : 😳 நீ போய்டுவ.. போலீஸ்காரன் என்னையும் உனக்கு துணையா அனுப்பி வச்சுடுவான் 😳
மீ : பரவாயில்ல நீயும் வந்துடுணே கடவுள அடிச்சு ஓட வுட்டு நாம கடவுளாகிடுவோம் 😁
Positive energy - Negative energy...
எந்த இடத்திலும் ஆற்றல்
உருவாக வேண்டுமெனில்..
நேர்மறை +
எதிர்மறை -
இருந்தால் தான் நடக்கும்...
எதிர்மறை என்ற சொல்லுக்கு தீமை என்ற பொருள் இல்லை...
உலகம் முழுக்க வெளிச்சம் என நீங்கள் சொல்லுவது இருளை வைத்து தான் அளவிடபடுகிறது.
அப்படியெனில் அடிப்படை எது வெளிச்சமா? இருளா ?
அதாவது ஒன்றை அளவிட வேண்டுமெனில் அதை வேறு ஒன்றுடன் ஒப்பிட வேண்டும்.
நீங்கள் வெளிச்சம் என அளவிடுவது பிரபஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கும் இருளுடன்.
இருள் தனக்குள் மாபெரும் ரகசியங்களை வைத்துள்ளது. நீங்கள் ஆச்சரியபடும் விடயங்கள் அனைத்துமே இருளின் தன்மை.
வெளிச்சம் உங்களை உண்மையை உணரவிடாது.
உயிர்களின் இருப்பும் இருள் தான்...
வெளிச்சத்தின் நாகரீக வாரிசுகளை விட பல்லாயிரம் ஆண்டுகாலமாக இருளில் வாழ்ந்துவரும் பழங்குடிகளின் வாரிசுகளுக்கு அதை நன்கு உபயோகப்படுத்த தெரியும்...
என் மனதில் நின்ற காதலியே...
உன்னை நேசித்த நாள் முதல்
என் நெஞ்சம் என்னிடமில்லை....
நீயோ உன் நெஞ்சில் இருந்த
என்னை அகற்றி விட்டு
வேறொருவனை சுமக்க
தொடங்கிவிட்டாய்....
என் நெஞ்சை திருப்பி
அனுப்பிவிடு ....
முடிந்தால் நானும் மறந்து
விடுகிறேன்...
என் மரணதிற்குள்ளாவது....
சாமியார் Vs மீ...
சென்னை கோயிலுக்கு இன்று ஒரு சாமியார் வந்திருந்தார்.
பல்வேறு விஷயங்களைப் பேசி அவர்களிடமிருந்து நமக்கு ஆபத்து வரும்போது எப்படி தப்பிப்பது என்பதை சொன்னார்.
யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடு.
நாய் துரத்தினால் ஓடாதே.. திரும்பி முறைத்து பார்..
பாம்பு துரத்தினால் நேராய் ஓடு..
புலி துரத்தினால் மரத்தின் மேல் ஏறு..
சிங்கம் துரத்தினால் பிணம் போல் நடி..
இப்படி எது துரத்தினாலும் தப்பிக்க சொல்லித்தந்தவர்...
மனைவி துரத்தினால் என்ன சாமி செய்வது என்று கேட்டேன்.
வெகு நேரம் யோசித்துவிட்டு சொன்னார்..
அப்படி துரத்தப்பட்டு தப்பி வந்தவன்தாம்பா நான்... 😁
மீ : இந்த எழவுக்கு தான்யா நான் கல்யாணமே பண்ணாம தனியா நிம்மதியா இருக்கேன்... 😁😁😁
எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : மதம்...
மதம்:
1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்பட வேண்டும்..
2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்..
மெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமைய வேண்டும்..
3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்க வேண்டும்..
4. இதைப் பின் பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்பட வேண்டும்.
குறிப்பு : (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)...
என் மரண தேவதையை தேடி...
உறவுகள் எதிர்த்தாலும்
உண்மை காதல் வாழும் என்றாய்...
உன் உறவுகள் எதிர்க்க
என்னை உதரிவிட்டு சென்று விட்டாயேடி...
என்னோடு நீ இல்லா உலகில்
வாழ ஆசை இல்லை...
எனக்காக ஒருவள் எப்போதும்
காத்துகொண்டு இருக்கிறாள்...
நான் செல்கிறேன்....
என் மரண தேவதையை தேடி...
எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : பாதுகாப்பு...
பாதுகாப்பு:
1. காவல் துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறையாக மாற்றப்பட வேண்டும்.
குற்றங்களை விட குற்றங்களுக்கான சூழல், வாய்ப்புகள் களையப்பட வேண்டும்.
2. ரௌடிகள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்து அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
3. வன்முறையான செயலில் தொடர்ந்து செயல்படும் நபர்களின் உடலில் சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
4. மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் ஒரு வருடம் இந்தப் பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
5. அனைத்து வாகனங்களும் செய்மதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும்.
ஒழுங்கு மீறி செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், உடனுக்குடன் கண்காணிக்கப்பட வேண்டும்.
தண்டனைத்தொகை அவர்களின் கணிணி முகவரிக்கு, அல்லது செல்லிட பேசிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மீறுவோரின் உரிமம் பறிக்கப்பட வேண்டும்...
நண்பன் Vs மீ
நண்பன் : மச்சி போன் வாங்கிருக்கேன்டா..
மீ : சூப்பர் மச்சான் என்ன mobile...
நண்பன் : மச்சி திருச்சி போன் மச்சி Rs.7000..
மீ : என்ன திருச்சி போனா திருச்சியில வாங்கினியா...
நண்பன் : இல்லை மச்சி on line la வாங்கினேன்டா...
மீ : அப்புறம் ஏன் திருச்சி போன் சொன்னடா...
நண்பன் : அதான் மச்சி திருச்சி download பன்னுவோமே அதான் மச்சான்...
மீ : அட உன் english la தீ வைக்க
அது திருச்சி இல்லடா 3G...