31/10/2021

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்...

 


சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும் ரத்த அழுத்தம் சீராகும்...

மீ Vs பக்கத்து வீடு...

வீட்டில் இருக்கும் போது நண்பனிடமிருந்து கால்...

நண்பன் : மச்சான் உனக்கு என்னடா சரக்கு வேணும்?

மீ : என்னடா சொல்ற 18-48 வயசு உள்ளவங்க கட்டாயம் ஊசி போடணுமா...?

நண்பன் : புரிஞ்சிடிச்சு 1848 சரக்கே வாங்கிடுறேன்..

பக்கத்து வீடு : ஏ இங்க பாருடி  தீபாவளிக்கு  ட்ரெஸ்  எடுக்க எவ்வளவு கெத்தா  போறாருனு...

கெத்தவா  நானே சரக்கு கிடைக்குமானு தெரியுமா கடுப்புல  போறேன் கெத்தமா  போங்கடி  குந்தானிகள... 🚶🚶

🤣🤣🤣

மாலை வணக்கம் மக்களே...

 


அப்படி என்ன புரட்சி செஞ்சாங்கனு சொல்லுடா வேசி ஊடகமே...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...



கொஞ்சம்
தள்ளி வைத்தால் கூட
நிறைய நெருங்கி வருகிறது
உன் மீதான காதல்..

நீ என்னை காதலித்தை விட
நீ என்னை காயப்படுத்தியது 
தான் அதிகம் என்று தெரிந்தும்...

சித்தராவது எப்படி - 40...


தெய்வீகம் ஊட்டப் பட்ட சுவாசம்...

நிஜத்தை நகல் ஆக்குவதும், நகலை நிஜமாக்குவதும், உண்மையை பொய் ஆக்குவதும் பொய்யை உண்மை ஆக்குவதும் ஆகிய செயல்களை மட்டுமே செய்கின்ற அமைப்புகள் இருக்கின்றன..

இந்த அமைப்பின் ஏமாந்த உறுப்பினர்கள் உலகில் நூற்றுக்கு தொன்னூற்று ஐந்து பேர் எனலாம்...

இன்று மனித வர்க்கம் ஏறக்குறைய முழுமைக்கும் நிலைகுழைந்து போய் சீரழிந்து போய் மன அளவில் மிகப் பெரிய பாதிப்புக்கு உண்டானது என்றால், அதற்கு இந்த அமைப்புகளே காரணம்..

நாளைய மிக பெரிய உலக சீரழிவுக்கு இன்றே இந்த அமைப்புகளால் வித்திடப் படுகிறது..

நிலைமை இப்படியே நீடித்தால் உலகம் நாளைய பெரும் சீரழிவிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது உறுதியாக தெரிகிறது...

இந்த நகலை நிஜமாக்கும் தந்திரத்தில் ஒரு மனிதன் தன்னையே தெய்வம் என பறை சாற்றி கொள்ளும் அளவிற்கு மிக கீழ் தரமாக போய் விட்டது.. இது ஒன்றே நிஜம் தொலைந்து போனதிற்கு சாட்சியாக உள்ளது...

சரி தொலைந்து போன அந்த நிஜம் தான் என்ன ? இந்த மனித தேகத்தில் எது ஒன்று நின்று விட்டால் சில வினாடிகள் கூட தாங்க முடியாமல் இந்த தேகம் வலு இழந்து சரிந்து விடுமோ, அந்த சத்தியத்தை மனிதன் நினைப்பது இல்லை..

வினாடிக்கு வினாடி, நொடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம் இந்த தேகத்தை காத்து கொண்டு இருக்கும் ஒன்று, நமது நாளைய பொழுதையும் வரும் எதிர் காலத்தையும் துளியும் காப்பாற்றாது என தவறாக நினைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த நிகழ் கால நிஜத்தை விட்டு நகலை தேடி அலையும் மனிதனின் பண்பை என்னவென்று சொல்லுவது ?

அந்த நிகழ் கால நிஜம் இதுதான் என்று சொல்லும் அந்த தருணமே, ப்பூ இவ்வளவு தானா என்று முக சுளிப்போர் எத்தனை பேர்?

அத்தனை பேர்களும் அந்த நிகழ் கால நிஜம் சில வினாடிகள் கிடைக்க வில்லை யென்றால், அவர்கள் படும் தேகத் துயரம் நன்றாக அறிந்து இருந்தும், துளியும் உணராது இருப்பது எதனால் ?

காரணம் முதலில் சொன்னது போல் அந்த அமைப்புகள் மனிதனை குழந்தை முதலே நன்றாக மூளை சலவை செய்து நிஜத்தை நகல் என்றும், நகலை நிஜம் என்றும் ஆழ் மனதில் பதிய வைத்தது தான் காரணம்..

வாழையடி வாழையென அந்த பதிவுகள் இன்று சந்ததிகள் வழியாகவும் பலமாக நீடித்துக் கொண்டும் இருக்கிறது... இனி மேல் மனிதனுக்கு நிஜத்தை உணரும் சந்தர்ப்பங்களே இல்லாதது போல் தெரிகிறது...

அந்த நிகழ் நேர நிஜம் நமது சுவாசம் என்பதை மறக்கக் கூடாது.. ஒவ்வொரு சுவாசத்தை நாம் உணரும் போது அதில் உண்மையான தெய்வ நிலை இருப்பதை உணரலாம்..

எது நம்மை இந்த வினாடியில் வாழ வைக்கின்றதோ நிலை நிறுத்தி வைக்கின்றதோ அதில் ஒன்றில் மட்டுமே நிகழ் கால தெய்வம் உள்ளதை உணர வில்லையென்றால் நாம் எல்லாம் இழந்தவர்கள் ஆகிறோம்.. அதனால் முடிவில் எல்லாம் இழந்து மரணத்தை தழுவுவதே நிஜம் ஆகிறது..

தோன்றா நிலையிலே அனைத்து உயிர்களையும் காக்கின்ற நிஜம் அதாவது உண்மை இருக்கின்றது.. அதுவே அனைத்து உயிர்களையும் காப்பதால், அது தோன்றா நிலையில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம்...

இந்த உண்மையை புத்தி உள்ள எவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.. அப்படி அந்த தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் அல்லது காட்டும், அந்த சுவாசம் ஒன்றே தெய்வ நிலைக்கான ஒரே ஒரு நிஜம்..

திகைப்பூட்டும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அந்த கணமே நாம் தெய்வீக நிலை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்..

அந்த சுவாசத்தில் சூரிய கலையில் முழுமையாக தோன்றாநிலை கிடைக்கின்ற போது, கிடைத்தது தொடர்கின்ற போது, தெய்வீக நிலை முழுமையாக நமக்கு கிடைக்கின்றது..

எல்லாம் செயல் கூட்டி வைக்கும் அந்த நிகழ் கால தெய்வீகத்தோடு இருக்காமல் நகலை பிடித்துக் கொள்வது, எந்த விதத்தில் சரியானது என்ற நம் தமிழ் சித்தர்களின் கூக்குரல் மனித வர்க்கத்தின் காதில் ஒலித்து உணரும் போது மட்டுமே மனித குலம் காப்பாற்றப் படும்...

அந்த நிகழ் நேர நிஜத்தை பிடித்து நாம் நிறை நிலை சித்தனாக முயலுவோமாக...

வந்தேறி பாஜக கூட்டாளி வந்தேறி திமுக வின் பித்தலாட்டங்கள்...

 


தமிழக திமுக அரசு RSS கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பது மறுக்க முடியாது...

 


நான் தான் அந்த புத்திசாலி 😁

 


சித்தராவது எப்படி - 39...

 


மனதின் தோல்விகளே அககுருவின் எழுச்சி...

எல்லாம் நான் தான் என ஆணவ இறுமாப்பில் இருக்கும் மனம், தன் சிறு வட்டத்தை விட்டு வெளி வராமல், தன் சிற்றறிவிலேயே காலம் தள்ளி பேரறிவினை பெற முடியாமல், வளர்ச்சி அடையாமல் போய் விடுகிறது...

என்றோ ஒரு நாள் தன் வட்டத்தை விட்டு எட்டி பார்க்கையில், மற்றவர்களீன் ஆன்மா வளர்ச்சியை கண்டு திகைத்து இருந்தாலும், தனக்கு தானே சமாதானங்களை தேடி அலைகின்றது..

மிக பெரிய உண்மை என்னவென்றால், தான் ஏற்படுத்திய குறுகிய வட்டத்திற்கு சமாதானங்களை தேடி அலைவது தான் மனதினுடைய பெரும் பாலான வேலையாக உள்ளது..

இந்த மனதை தோற்கடிக்க எந்த சக்தியாலும் முடியாது போல் இருந்தாலும், அண்ட பேரறிவு திக்கு அற்ற நிலைக்கு நம்மை தள்ளி விட வில்லை...

இந்த ஆணவ மனத்தின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி முறைபடுத்த நமக்குள்ளே வைத்த ஒரு உறவு தான் இந்த சுவாசம்..

இது பிராண வாயுவை உள் வாங்க செய்யும் ஒரு ஏற்பாடு மட்டும் அல்ல.. அதற்கு மேலே பல பல காரணங்களை உள் அடங்கிய ஓர் உன்னத உறவு..

தேகத்தை ஓங்க செய்வதின் மூலம் வினாடிக்கு வினாடி தேகம் சீர் குழைந்து போகாமல் காக்கிறது.. அதற்கு மேலே ஞான மார்க்கத்திற்கென்றே செயல் பட கூடிய நிலையில் உள்ளது.. அதை மனிதன் அறியாது இருப்பது அஞ்ஞானமாக உள்ளது....

பிரபஞ்ச ஆற்றலாலும், அறிவாலும் ஒவ்வொரு உயிரிலும் இந்த சுவாசம் செயல் படுகின்ற விதம் மிகவும் வியப்புக்கு உரியது..

அதை ஞானத்திற்கு என்று பயன்படுத்தியவர்கள் நமது போற்றுதற்கு உரிய சித்தர் பெரு மக்கள்...

வாசி யோகம் என்ற தலைப்பில் முறை படுத்திய யோகப் பயிற்சிகள், அதன் உண்மை தன்மையை அறிந்தவர்களுக்கு பிரமிப்பு ஊட்டக் கூடியது...

பதஞ்சலி போன்ற வட இந்திய யோகிகளின் முறை வேறு.. அது சிறப்பானது தான்..

ஆனால் அதனிலும் மிக சிறப்பான தமிழ் வாசி யோகம் அறியாத ஆரிய மக்கள் தங்கள் செல்வாக்கை பயன் படுத்தி தாங்கள் அறிந்த பதஞ்சலி யோகத்தை முன்னிலை படுத்தி விட்டார்கள்.. அதனால் தமிழ் வாசியோகம் காணாமல் போய் விட்டது..

புத்தர்களின் சீடர்களிலே மிகவும் பலம் வாய்ந்த போதி தர்மாவை சீனாவுக்கு புத்தர் அனுப்பி வைத்தது புத்தரின் ஒரு அரசியல் கபடமே..

தமிழ் வாசி யோகத்தை கற்றுக் கொடுக்க புத்தருக்கு மனம் இல்லை.. அது தான் வழக்கமாக கற்று கொடுத்த பயிற்சிக்கு முற்றிலும் வேறு பாடாக இருந்ததாலும் மிகவும் வலுவாக இருந்ததாலும், போதி இந்தியாவில் இருந்தால் சில பிரச்சனைகள் எழக்கூடும் என்ற நோக்கில் போதி தர்மாவை பிரச்சனைகள் நிறைந்த சீனாவுக்கு அனுப்பி விட்டார்..

இதையும் உணர்ந்த போதி சீனாவில் தன் பணியை வெற்றி கரமாக முடித்து விட்டு, நாடு திரும்பாமலேயே இமயமலையில் அடங்கி விட்டார்...

சுவாச ஒழுங்கு என்பது மனதால் இயலாத காரியம்.. ஒழுங்கற்ற தன்மை உடைய மனம் அந்த சுவாச ஒழுங்கில் இணைய முடியாது..

அதனால் ஞானம் என்ற ஆசை வார்த்தைக் காட்டி மனதை ஈர்த்து, சுவாச ஒழுங்கிலே ஈடு படுத்துகின்ற போது மனம் அதனோடு போராடி போராடி தோற்றுப் போகின்ற ஒவ்வொரு நேரத்திலும் மனம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பணிந்து போகிறது.. மனதினுடைய பணிவிலே அக குருவாகிய விழிப்பு நிலை எழத்தொடங்குகிறது...

அதனால் தான் சமயங்களில் அதாவது மதத்தில் பணிவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது..

ஒரு இரகசியம் என்னவென்றால், மனம் தனக்கு தானே பணிவை ஒரு நாளும் ஏற்படுத்தி கொள்ள முடியாத நிலையில் உள்ளது..

அதற்கு அதனுடைய குறுகிய ஆணவ வட்டம் மிக பெரிய தடையாக உள்ளது...

மனதை தோற்று போக செய்யக்கூடிய ஒரு காரியத்தை மனதிற்கு ஒப்படைக்கும் போது, மனம் அதை செய்ய முடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது.. பணிவு கொள்கிறது.. மென்மை அடைகிறது.. அது மிக மென்மை அடைகின்ற போதுதான் அதனிலும் சற்று வன்மையான ஆனால் மென்மையான விழிப்பு நிலை எழ முடிகிறது.. இது தான் மிக பெரிய இரகசியம்..

சரி சுவாச ஒழுங்கு ஒன்று தான் மனதை பணிவு கொள்ள செய்யுமா? வேறு ஒரு யோக முறையே இல்லையா? என கேட்கலாம்..

பல காரணங்களில் ஒரு முக்கியமான காரணம் இதுவும் ஒன்று..

அது சதா காலமும் வெளியிலேயே உலாவி பழக்கப் பட்ட மனம் சுவாசத்தில் ஈடு படும் போது, உள் நோக்கி பாயும் சுவாசக் காற்றால் மனமும் உள் நோக்கி பாய வேண்டியதிருப்பதால், பழக்கமில்லாத அந்த இடத்தில் எதுவும் தோன்றாது இருப்பதால், பற்றிக் கொள்ள எதுவும் இல்லாததால், மனம் அங்கே இருப்பு கொள்ள முடியாமல், மொத்தத்தில் சுவாசத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிகவும் முயற்சி செய்கிறது..

மனம் வெளியே பாய்ந்து தன் ஒழுங்கின்மையை சுவாசத்திலும் பாதிப்பு அடைய செய்கிறது..

இந்த காரணத்தில் தான் மனம் சுவாசத்தை ஒழுங்கிலே இருக்க செய்ய முடிவதில்லை..

நாம் சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாததற்கு காரணம் மனதின் வெளியில் உள்ள ஒழுங்கற்ற ஈடுபாடு தான்..

மனதின் குறுக்கீடுகள் மட்டும் இல்லையென்றால் ஒரு சுவாசம் இயல்பாகவே நான்கு வினாடிகள் ஒழுங்கில் இருக்கும்..

இதையே மாற்றி செய்யும் போது அதாவது சுவாச ஒழுங்கில் இருக்கும் போது மனம் ஒழுங்காகிறது...

நம்மில் அக குரு இரண்டு வழிகளில் பலப்படுகிறார்..

ஒன்று சுவாச ஒழுங்கில் நாம் இருக்க முயலும் போது மனம் ஒழுங்கு தன்மை பெற்று மென்மை அடைந்து அக குரு எழ வகை செய்கிறது..

இரண்டாவது மனம் சுவாச ஒழுங்கில் இல்லாத சமயம் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆணவத்தை இழந்து மென்மை அடைகின்ற போது அககுரு எழ வகை கிடைக்கிறது...

சரி இப்போது அககுரு பலப்படுவதால் என்ன நேர்ந்து விடப் போகிறது என்ற கேள்வியை மட்டும் கேட்டு விடாதீர்கள்..

நமது மர்ம யோக நெறியில் மிகவும் ஈடு பாடு உள்ளவர்களின் மன நிலை பாதிக்கப் படலாம்...

அககுருவால் அனைத்தும் செயல் கூடும் என்பது தெள்ளத் தெளிவான உண்மை ஆகும்..

சித்தர் பெருமக்கள் அககுருவை அடைந்து பின் அககுருவாய் தன்னை மாற்றி, அன்பின் மூலம் வியப்பு ஊட்டும் செயல்களை செய்யக் கூடியவர்களே...

நாமும் அககுருவின் மூலமும், அககுருவாய் ஆகியும் நிறை நிலை சித்தனாக மாற முயலுவோமாக...

தீபாவளி கலாட்டா...

 


கணவன்; என்னடி ஆச்சு  நம்ம வீட்டுக்கு முன்னாடி இவ்வளவு கூட்டமா இருக்குது...

மனைவி; நான் செஞ்ச  முறுக்கு சாப்பிட்டுட்டு என் மாமியார் என் கூட பேசவே இல்ல ன்னு சொன்னேன்  எனக்கும் செஞ்சு தாங்கன்னு நிக்கிறாங்க...

திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...

 


கடத்தல் மன்னன் அதானி...

 


திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...

 


30/10/2021

குழந்தைத் திருமணம் என்பது தெலுங்கின திராவிடர் கொள்கையே...

 


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணின் வயதையும், இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

பெண்களுக்கு முக்கிய குறிப்பு...

 


பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்...

டாக்டர்: என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு?

பெண்: என் கணவர் டெய்லி என்ன அடிக்கிறார் டாக்டர்....

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்...

இனிமே உன் கணவன் வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ.... தூங்குற வரை...

முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும்...

வாய்குள்ளே வச்சிறு....

அடுத்த வாரம் என்னை வந்து பார்..

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்....

பெண்: நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்..

டாக்டர்: GOOD நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது...

உங்க 'வாய்' தாம்மா எல்லாத்துக்கும் காரணம்...

அதுக்குதான் இந்த ஐடியா என்றார்...

🤣🤣🤣

காவல்துறை கலாட்டா 😁

 


நீ தான் மனுசன் யா 😁

 


320 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை.. திமுக ஆட்சி யில் 510 ரூபாய் வரை விற்கப்படுகிறது...

 


Facebook இல்ல Meta (mental) புக்காம்...

 


பழங்களின் மருத்துவ குணங்கள்...

 


மாம்பழம் - மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம் - சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி - வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி - அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம் - விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

எதிரி உங்களுக்கு தந்த பரிசு...

 


சாராய வியாபார அரசு கலாட்டா...

 


METAVERSE... META...

 


எல்லோருக்கும் ஓரளவிற்கு புரிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் என்னெல்லாம் செய்யப்போகிறது என்று...

இதை யாம் என்றோ முன்னறிவித்தோம் இவர்களின் திட்டத்தை பற்றி முன்னறிவித்தோம்..

இந்த புதிய ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது ஒரு முன்னோட்டம் மட்டுமே என்பதை மீண்டும் ஞாயபக படுத்துகிறோம்.. 

MATER_EYE ஏ.ஐ தொழிநுட்பம் தான் இதன் உச்ச கட்டம்.. 

அது தான் வி.ஆர் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு உங்களுடன் ஊடுருவ இருக்கிறது..

அதைப்பற்றிய அறிவிப்புகள் செய்திகளில் நீங்கள் கண்டிருப்பீர்கள்..

மீண்டும் சொல்வது தான் யாம் என்றுமே எச்சரிக்க தவறியதில்லை..

மனிதர்களை எச்சரிப்பதே எமது கடமை..

கீழே இருக்கும் கண் எதை உணர்த்துகிறதோ அதுவே மனித இன எதிரி.. 

இந்த கண் எதன் வெளிப்பாடு என்று சிந்தியுங்கள்...

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்...

 


தமிழர்கள் இந்தியர்கள் இல்லை...

 


சித்தராவது எப்படி - 38...

 


இழந்ததில் இருக்கின்றது இரகசியம் அனைத்தும்...

மனிதன் வாழ்வில் புதிய புதிய இலட்சியங்களை தேடி தேடி போய்க் கொண்டு இருக்கும் அதே வேளையில், தன்னை அறியாமல் தான் இழந்து கொண்டே இருக்கும் ஒன்றை விழிப்பு நிலையில் உணருவதே இல்லை..

தேடியவற்றில் சில அற்பங்கள் கிடைத்தாலும் பல அற்புதங்கள் தன் கையை விட்டு போய் இருப்பதை உணருவதில்லை..

பல அற்புதங்களை எல்லாம் அற்பங்களாக ஆக்குவதும், பல அற்பங்களை எல்லாம் அற்புதங்களாக ஆக்குவதும் தன் மனதின் வேலை என்பதை தன் விழிப்பு நிலையிலே அறியாமல் மனிதன் இருக்கிறான்..

தான் தேடிய அற்பங்களுக்கு பல பல சமாதானங்களை வடிவமைத்து, தானும் ஏமாந்தது மட்டும் அல்லாமல், மற்றவர்களையும் ஏமாற்றி பாவ சுமைகளை பெருக்கிக் கொண்டே போகிறான்..

எத்தனையோ மகான்கள் என கருதப் பட்டவர்கள் எல்லோரும் அற்புதங்களை எல்லாம் அற்பமாக்கி, அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கி விட்டு போய் விட்டார்கள்.. இது தான் இதுவரை சத்தியமாக உலகில் நடந்தது..

அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கிய சித்தர்கள் மகான்களை எல்லாம் பின் வந்தவர்கள் போற்றி போற்றி புகழ்ந்ததின் மூலம், அந்த அற்பங்களே முன் நிலையில் நிறுத்தப் பட்டு அற்புதங்கள் பின்னால் தள்ளப் பட்டு யாரும் சீண்டுவார் இன்றி கிடக்கின்றது..

இழந்து விட்ட அற்புதங்களில் கிடக்கின்ற இரகசியங்களையும் எவரும் சீண்டுவார் இன்றி இருக்கின்றன..

ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும் உன்னத பயிற்சிகளையும் நோயற்ற நிலையை தக்க வைக்கும் பயிற்சிகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப் பட்டு, நோயை குணமாக்கும் பயிற்சிகளே முன் நிலையில் உள்ளன..

அப்படி நோயை குணமாக்கும் பயிற்சிகள் பின்னால் அந்த நோய் மீண்டும் வராமல் இருக்க எந்த உத்திரவாதமும் கொடுப்பதில்லை...

முடிவில் நோயால் இறந்து போகும் மனிதனை விதி என்ற சட்டத்தில் நிறுத்தி, சமாதானப் படுத்தி விடுகிறார்கள்..

இப்பொழுது பிரச்சனையே, இழந்து போன, அந்த அற்பமாக்கப்பட்ட அற்புதத்தின் இரகசியத்திற்கு அற்புதத்தை சேர்பதுதான்.. இல்லையேல் மனித குலம் மீள்வதற்கு வழியே இல்லை..

இந்த நிலையில் அற்பத்திற்கு அற்புதம் சேர்த்த புற குருமார்கள் கொள்கையில் சிக்குண்ட மனிதகுலத்தை உணர வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல..

கருத்து போதையிலும் பகட்டிலும் சிக்கி இருப்போரை கரம் தூக்கி கரை ஏற்றுவது அவ்வளவு எளிது அல்ல.. ஆனாலும் போராட்டம் தொடர வேண்டியதிருக்கின்றது..

அந்த போராட்டம் அன்பின் அடிப்படை வைத்தே அமைக்கப் பட்டு உள்ளதால், அந்த அன்பினை பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது..

அன்பு என்பது அறிவு ஆற்றலின் வடிவே.. அதில் ஆற்றலும் அதை பயன் படுத்தக் கூடிய அறிவும், கலந்து இருந்தால் தான் அன்பு என்பது உருவாகும்..

அறிவு இல்லாமல், ஆற்றல் ஒன்றை மட்டும் பெருக்கிக் கொண்டு போகிறவர்கள், முடிவில் அந்த ஆற்றலை இழந்தே ஆகவேண்டும்..

முடிவில் காதற்ற ஊசியும் வாராது காணா கடை வழிக்கே என்ற நிலைதான்..

அறிவு இருந்தால் அந்த ஊசியையும் காணா கடை வழிக்கு கொண்டு செல்லலாம்..

ஆற்றல் மிகுந்த மகான்கள், குருமார்கள், அறிவு அற்ற தன்மையால், எல்லாம் இழந்த நிலையை எவரும் கவனிப்பது இல்லை..

அடைந்ததை வைத்து பெருமைப் படும் சீடர்கள் அவர் இழந்ததை நினைத்துப் பார்ப்பதே இல்லை..

ஒரு குரு காதற்ற ஊசி ஒன்றை காணா கடை வழிக்கு எடுத்துச் செல்ல முடியுமானால் அதுவே மிகப் பெரிய வெற்றி..

ஆனால் எரிக்கப் படவேண்டிய உடலில் இருந்து சத்தான சூட்சம தேகத்தை பிரித்து, காது அறுந்த ஊசியை கூட சம்பாதிக்க விரும்பாமல், நித்திய தேகமான காரண தேகமாகிய சூட்சம தேகத்தில் வாழும் சித்தர்கள் மிகவும் அறிவு உள்ளவர்களே...

பிராடு பாஜக மோடியின் பெட்ரோல் கொள்ளை...

 


சீனாவிற்கு கடனாளி (அடிமை) ஆகும் இந்தியா...

 


முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்...

 


உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.

பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.

முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்' களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு...

மாமா ஊடகம்...

 


நீதியை நிதி கொடுத்து வாங்கிய சாருக்கான்...

 


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம், வாழ்க வளமுடன்...

சாமானிய மக்களின் முதல் விரோதி பாஜக மோடி...

 


பிராடு பய கடவுள் 😂

 


கரிக்காட்டுக்குப்பம் பேய் கிராமம்...

 


29/10/2021

உலகம் துரோகத்தால் உருவாவை...

 




இந்த உலகில் உன்னை அழிக்க
இன்னொருவருக்கு நீயே
கொடுக்கும் ஆயுதம் அன்பு..

இந்த உலகில் உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்வது இன்னொருவர்
மீது வைக்கும் நம்பிக்கை..

ஒரு பொய்யின் ஆழமே..
சிலரின் மேல் கொண்ட
நம்பிக்கையை அழிக்க
காரணம் ஆகின்றது..

பாம்பு தன் தோலை எத்தனை
தடவை உரித்தாலும் அது
எப்போதுமே பாம்பு தான்..

சில மனிதர்களை உங்கள்
வாழ்க்கையில் அனுமதிக்கும்
முன் இதை நினைவில் கொள்ளுங்கள்..

வாழ்க்கையில் அடிபட்ட
பின்பு தான் சிலரின் உண்மையான
முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..

மன்னித்து விடுங்கள் உங்களை
ஏமாற்றியவர்களை ஆனால்
மறந்தும் கூட நம்பி விடாதீர்கள்
மறுபடியும் அவர்களை..
 
ஏமாற்றியவர்களுக்கு
நன்றி சொல்..

அவர்கள் ஏமாற்றத்தை 
சொல்லி தரவில்லை..

இனி ஏமாறாமல் இருக்க
அனுபவத்தை கற்று தந்து
இருக்கிறார்கள்..

எத்தனை முறை நீ
ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும்
அடுத்தவரை ஏமாற்ற
கற்றுக்கொள்ளாதே அவரவர்
பலன் அவரவர் அனுபவிப்பர்..

நேர்மைக்கு என்றுமே மரணமில்லை.
கவலையை விடு...

தூரோகிகள் யார் தெரியுமா..?

துரோகத்தை செய்து விட்டு..
அந்த குற்ற உணர்வு சற்றும்
இல்லாமல் திரிபவர்கள் தான்..
மிகச் சிறந்த துரோகிகள்..

அவர்கள் மரணத்திற்குள் 
அதற்கான பலனை
அனுபவித்தே தீர வேண்டும்...

துரோகத்தால் பலர் வீழ்ந்ததாய்
வரலாறுண்டு.. ஆனால்..
துரோகித்தவர் ஒருவர் கூட
நல்லா வாழ்ந்ததாய் எந்த
சரித்திரமும் இல்லை..

வாழ்விற்கும் மரணத்திற்குமான
இடைவெளியை நிரப்ப
சில அன்பானவர்களும்..
பல அன்பற்றவர்களும்..
சில துரோகிகளும்..
பல எதிரிகளும்..
தேவைப்படுகிறார்கள்..

இந்த உலகில் பல பேர் தோல்விக்கு
காரணம்.. அவர்களின்
நம்பிக்கைக்கு உரியவர்களால்
முதுகில் குத்தப்பட்டதே காரணம்..

நான் தோல்வியை
வெறுப்பவன் இல்லை..
துரோகத்தை வெறுப்பவன்..

எவ்வளவு நம்பிக்கை வைத்தாலும்
துரோகம் முளைக்காத இடங்கள்
இரண்டு தான்.. 

ஒன்று தாயின் மடி..
இரண்டு இறைவன் அடி..


ஆனால்.. இந்த கலியுகத்தில்
தாயும் துரோகத்தையே செய்கிறாள்..

யாரையும் நம்பி வாழாதே...

தன் தேவைக்காக மட்டுமே
உறவு வைத்துக் கொள்ளும்
உலகம் இது..

தேவைகள் முடிந்ததும்
கண்டிப்பாக தூக்கி
எறியப்படுவாய்...

பெரியாரும் திருட்டு திராவிடமும்...

 


சுயமரியாதை.. தன்மானம்.. பகுத்தறிவு என்பதன் பெயரால் தமிழகத்தில் இதுகால் வரை சாதித்தது என்ன..?

சாதி ஒழிக்கப்பட்டதா..?

சாதிச் சான்றிதழ்கள் வழங்குதலை அரசு தடுத்ததா..?

சட்டத்தின் முன் சகலரும் சமன் என்பதை அரசு நடைமுறைப்படுத்தியதா..?

மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வுநிலையைப் போக்கி எல்லோருக்கும் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததா..?

எல்லோருக்கும் கல்வி அறிவூட்டல் செய்ததா..?

அறிவியல் கல்வியை வழங்கியதா..?

மொழி சீர்திருந்தகளை செய்து தமிழை அடுத்த நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தயார் செய்ததா..?

இல்ல ஆங்கிலத்தைப் படித்தால் போதும் என்றிருக்கிறதா..?

ஜப்பானியர்களும் சீனர்களும் ரஷ்சியர்கள் சொந்த மொழியில் தானே அறிவியலை கற்கின்றனர். ஏன் தமிழை அந்த நிலைக்கு முன்னகர்த்த முயற்சிக்கவில்லை..?

ஆங்கிலம் தான் அறிவியல் என்ற மாயை ஏன் வளர்க்கப்பட வேண்டும்.

ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு படிப்பது என்பது வேறு.. ஆங்கில நூல்கள் சொல்லும் அறிவியல் என்பதைப் பெறுவது வேறு..

தாய் மொழியை இகழ்வதும்.. அதன் இருப்பைக் கேலி செய்வதும் மிக மோசமான இனவிரோதச் செயற்பாடு...

ராகுல்காந்தி வெத்து சோறு.. உண்மை தான்...

 


மீ Vs நண்பன்...


அண்ணே நீங்க ஏன் வெறும் காமெடியா போஸ்ட் பண்றீங்க.. இந்த கவிதைலாம் வராதோ.... 🤔

எல்லா ஈர வெங்காயமும் எனக்கு தெரியும்டா..

நாளை பின்ன நாலு புள்ளைங்க கவிதையில மயங்கி..

கட்டுனா உங்களதான் கட்டுவேன்னு கண்ண கசக்கிட்டு வந்து நின்னுட்டா.

அப்புறம் அவளுங்க புருசனுங்கல்லாம் அருவாள தூக்கிட்டு என் வீட்டு வாசல்ல நின்றுவானுங்க..

இப்போ தெரிஞ்சுகிட்டியா அண்ணன் ஏன் கவிதைய அவாய்ட் பண்றேனு...

🤣🤣🤣

பிராடு பாஜக மோடியின் நிலக்கரி ஊழல்கள்...

 


கோல் இந்தியா நிறுவனம் டாட்டா வுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகளிலிருந்து வாங்குகிறது இல்லையா?  

அந்த ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்ட்ராக்ட் பணியை அம்பானியும், டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.

அதாகப்பட்டது டாட்டா, அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியையே, இருவரிடமிருந்துமே  ஒரு டன் ரூபாய் 25 ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு  நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500-க்குக் கொடுக்கிறார்கள். 

ஏழு வருசத்துல இந்தியப் பெரு முதலாளிகளோட சொத்து 26% உயர காரணமாக மோடி அல்லும் பகலும் உழைக்கிறார்...

குழந்தைகளை குறி வைக்கும்.. கொரோனா மருத்துவ மாஃபியா..

 


விரைவில் கொரோனா நாடகம் பகுதி 3 தொடக்கம்...

 


தெலுங்கன் பெரியாரும் திருட்டு திராவிடமும்...

 


20 நூற்றாண்டு நாத்திகர்களில் ஈ.வெ.ராமசாமி மட்டுமே ஒரு மொழியை மட்டுமே காட்டுமிராண்டி மொழி, பகுத்தறிவுக்கு ஓவ்வாத மொழி தமிழ் என்று குற்றம் சாட்டிய ஒரே மாபெரும் நாத்திகர்..

ஆனால் அவர் தாய் மொழி தெலுங்கா அல்லது கன்னடமா என்று அவருக்கே தெரியாது..

வேறு எந்த உலக நாத்திகரும் மொழி தான் நாத்திகத்திற்கு தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியது இல்லை..

இவர் குற்றம் சாட்டக் காரணம் தமிழர்களை தனது இனத்தவரே காலகாலத்திற்கும் அடக்கி ஆள வேண்டும் என்ற குறுகிய தன் இனநல வெறியே காரணம்...

என் காதலும்... காதலியும்...

 



நீ விலகிச் சென்றாலும் 
உன் நினைவுகள் என்றும் 
என்னைவிட்டு விலகாதடி...

காலம் கடந்து சென்றாலும் 
நம்  காதலை என்றும் 
மறவாமல் இருப்பேனடி...

கொட்டும் மழை நின்ற பிறகு 
குடை பிடிக்கும் 
காளானென்று நினைத்தாயோ...

வீசும் புயல் காற்றுக்கும் 
விழாமல் வேரூன்றி நிற்கும் 
ஆலமரமடி என் காதல்...

சிங்கிள்ஸாக சந்தோஷமாக வாழ்வோம்...

 


பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு...

 


பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே...

இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)..

சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு..

1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி].

2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி].

3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி].

4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்).

5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி].

இவர்கள் போக...

தென்கலை வைணவர் (நம்பி).

நயினார் [திருவாரூர்].

திருசுதந்திரர் [திருச்செந்தூர்].

சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்].

குருக்கள் (ஐயர்) [மதுரை].

சோழியர் (ஐயர், ஐயங்கார்).

முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்].

ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே..

பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்...

பிரகச்சரணம் (ஐயர்).

வாத்திமா (ஐயர்).

அஷ்டசகஸ்ரம் (ஐயர்).

கேசியர்.

வடகலை வைணவர்.

மத்தியானப் பறையர்.

பட்டஸ்ய.

வடமா (ஐயர்).

வடமா தீட்சிதர்.

நம்பூதிரி.

இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன..

அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.

(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.. உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும். சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)

ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.

மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே..

அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால்.. நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.

ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.

ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.

தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.

தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர். 35% மட்டுமே பார்ப்பனர்.

(இது ஆரம்பகட்ட ஆய்வு தான்.

பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும் வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.

ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)...

இதனால் தான் பெரியார் தெலுங்கர் கன்னடர் மலையாளியான பிராமணர்களை எதிர்காமல்... பார்ப்பனர்களான தமிழர்களை எதிர்த்தார்...

பார்ப்பான் என்று சொல்.. மறந்தும் பிராமணன் என்று சொல்லாதே என்று தமிழின பகைவன் பெரியார் எனும் தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சொன்னார்...

தீபாவளி கலாட்டா...

 


மனைவி : இந்தாங்க காபி. கூடவே க்ரோஸின்.

கணவன் : எதுக்கு க்ரோஸின். எனக்கு ஜுரம் இல்லயே?

மனைவி : அப்போ இந்தாங்க டைஜீன்.

கணவன் : எனக்கு வயிறு நல்லாத் தானே இருக்கு.

மனைவி : அப்படின்னா அனாஸின் சாப்பிடுங்க.

கணவன் : தலைவலி கூட இல்லயே?

மனைவி : ப்ரூபன் மாத்திரை போட்டுக் கோங்க.

கணவன் : ஏம்மா?, கை கால் வலி எதுவும் இல்லயே... நல்லா தானே இருக்கேன்?

அப்போ கிளம்புங்க... தீபாவளி ஷாப்பிங் போகணும்...

கணவன்: 😳😳😳?

காதல் எனும் காமம்...

 




காதல் நெடுஞ்சாலையில்
ஆசையோடு பயணித்த
இரு இதழ்கள்..

தனது 
கட்டுப்பாடுகளை இழந்து
நேருக்கு நேர்
சரமாரியாக மோதி
விபத்துக்குள்ளாயின...

சம்பவ இடத்தில்
இரு இதழ்கள்
ஒன்றோடு ஒன்று
பின்னிப் பிணைந்து கிடப்பதை
பார்த்த மனம்...

காயம்பட்ட 
இரு இதழ்களை காப்பாற்றி
காமம் எனும்
அவரச ஊர்தியில் ஏற்றி
கையசைத்து விட்டு சென்றது...

😁😁😁

இந்திய தரகர் பாஜக மோடி கலாட்டா...

 


பிராடு பாஜக கலாட்டா...