29/10/2021

என் காதலும்... காதலியும்...

 



நீ விலகிச் சென்றாலும் 
உன் நினைவுகள் என்றும் 
என்னைவிட்டு விலகாதடி...

காலம் கடந்து சென்றாலும் 
நம்  காதலை என்றும் 
மறவாமல் இருப்பேனடி...

கொட்டும் மழை நின்ற பிறகு 
குடை பிடிக்கும் 
காளானென்று நினைத்தாயோ...

வீசும் புயல் காற்றுக்கும் 
விழாமல் வேரூன்றி நிற்கும் 
ஆலமரமடி என் காதல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.