19/04/2017

நெடுவாசலுக்காக ரயிலில் பிரச்சாரம் செய்த மாணவிகளை சிறையில் போலிசார் நிர்வாணப்படுத்தி சித்தரவதை, கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்த பார்க்க சென்ற வக்கீல் - இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு...


தொடர்ந்து அவர்கள் 6 முறை நிர்வாணப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக வக்கீல் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்...


அய்யோ பல்டி அடிக்க நேரம் வந்துடிச்சே...


இந்தா நாசாவே சொல்லிட்டான்...


டிடிவி தினகரன் அறிவித்த எம்எல்ஏ கூட்டம் தலைமைகழகத்தில் நடக்காது - செங்கோட்டையன் அறிவிப்பு...


சட்டுபுட்டுன்னு அடுத்த வேலையை பாருங்கள்... சோலி கிடக்கு...



எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை...


அதிமுக கட்சியில் குடும்ப ஆதிக்கம் கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்...


உங்க பையன் என்ன பண்றார் சார்.. தென் சென்னை எம்பியாக இருக்கிறார்.. த்தா த்தூ...

மதுக்கடையை மூட வலியுறுத்தி 7 வயது சிறுவன் தன்னந்தனியாக போராட்டம்...


டெல்லி போலீசார் சென்னை வருகை...



டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் இன்று மாலை சென்னை வருகை.

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் விசாரணை...

தமிழ்நாடு முழுவதும் ஊழல்...


சிறு பிள்ளைகளை படிக்க வைக்கும் பள்ளியில் ஊழல்.

பள்ளி படிப்பில் ஊழல்.

படித்தவனுக்கு வேலையில் ஊழல்.

வேலை பார்பவனுக்கு ஊதியத்தில் ஊழல்.

ஊதியம் பற்றாக்குறையால்.. தான் வாழ பிறரை சாக செய்வது இந்த ஊழல் தான்.

தான் வாழ சட்டத்தை மீறச் செய்வதும் இந்த ஊழல் தான்.

தான் வாழ பிறரிடம் பிச்சை (லஞ்சம்) வாங்க செய்வதும் இந்த ஊழல் தான்...

இந்த அதிமுக அடிமைங்களுக்கு தேவை பதவி மட்டும் தான்... த்தூ...


சட்டமன்றத்திலேயே சசிகலாவின் புகழ்பாடிய மானங்கெட்ட ஜெயக்குமார் இன்று சசிகலா & தினகரனக கட்சியை விட்டு விலக்குகிறோம் என்கிறார்...


பேய்கள் பற்றிய பல உண்மைகள்...


மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர்.

பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர்.

எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா?

பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக் கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக் கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.

பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.

பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பிடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பிடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

பேய்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக் கொடுத்தும் இருக்கின்றனவாம்.

இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

பேய்கள் இடம் பெயரும் பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன...

பாஜக மோடி பின் வாசல் வழியா உள்ளே வந்துட்டான்...


சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழி பாடம் கட்டாயம் -  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்...

எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடித்து தமிழர் சாதனை...


எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்ஐவி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டு பிடித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி-ஐ அளிக்கும் மருந்தினை அஸ்கந்தா மற்றும் வல்லாரை மூலிகையில் இருந்து தயாரித்துள்ளார்.

2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவ கல்லூரி, சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகம், மும்பையில் உள்ள ரெலிகேர் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வினை மேற்கொண்டு தயாரித்துள்ள இந்த மூலிகை மருந்தினை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மூலிகை மருந்தினை மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால் நோய் ஆற்றல் அதிகரித்து எச்ஐவி, எச்பிவி கிருமிகள் அழிக்கப்படுகிறது.

மிக குறைந்த செலவில் இந்த மருந்தினை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் நீரிழிவு நோயிற்கு திரிபலா மற்றும் நன்னாரியினை கொண்டு மூலிகையினை தயாரித்துள்ளார்.

தொடர்ந்து 4 மாதங்கள் இதனை உட்கொண்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார்...

அதிமுகவில் இருந்து சசிகலா, டி.டி.வி. தினகரன் விலக்கப்பட்டதற்கு பின்னணியில் பாஜக உள்ளது - சீமான் குற்றச்சாட்டு...


அண்ணே உங்க கட்சி பேரு நாம் தமிழர் மறந்துட்டீங்க போல...

லன்டனையே பதற வைத்து விட்டது.. மோடியின் சர்ஜிக்கள் அட்டாக்...


வீர சூரன் எங்க மோடி.
உலகையே மிரள வைக்கும் வீரத் தலைவன் எங்க மோடி.
உலகின் முதல் தரம் வாய்ந்த ஸ்காட்லாந்து காவல்துறையே மோடியின் மிரட்டலான உத்தரவுக்கு பயந்து மல்லையாவை கைது செய்து விட்டது.

இந்தியாவின் நிரந்தர தலைவன் எங்க மோடி தான்.

இதுவெல்லாம் மல்லையா கைது செய்தி வந்த பிறகு ஊடக கமெண்ட்டுக்களிலும், மற்றும் முகநூலில் காவி பக்தாஸ்கள் தெறிக்க விட்ட வசனங்கள்.

ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் ஜாமினில் அவன் விடுதலை செய்யபட்டுள்ளான் என்ற செய்தி வந்தவுடன் ஒரு பக்தனையும் காணவில்லை.

எந்த மூளையில் பாரத் மாதாகி ஜே என்று கூவிக் கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை..

ஏண்டா ங்கொப்பன் மவனுங்களா மோடி சொன்னதால் கைது செய்யபட்டான் என்றால் இப்ப ஜாமினில் யார் சொன்னதன் அடிப்படையில் வெளியே விட்டார்கள்?

மோடியின் பார்வைக்கு வராமல் எப்படி இருந்திருக்கும் என்று நாக்கைப் புடுங்குவது போல் கேட்க வேண்டும்...

அம்மா ஆட்சி அம்மா ஆட்சி சொல்றீங்களேடா விவசாய கடனை எப்போ தள்ளுபடி செய்வீங்க..?


உரோம விருட்சம் மூலிகை...


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

டெல்லி மாநகராட்சியை காப்பாற்றுங்கள். பாஜகவுக்கு வாக்களியுங்கள். இப்போது மீட்க முடியவில்லை என்றால் எப்போதுமே முடியாது - பாஜக கிரண் பேடி...


இந்த மென்டல் கிட்ட யாராவது சொல்லுங்கப்பா... கடந்த பதினைந்து வருடங்களாக, டெல்லி மாநகராட்சியை ஆட்சி செய்வது பாஜக..

இதெல்லாம் எப்படி ஐபிஎஸ் ஆபிஸர் தெரியல.. பிட் அடிச்சி பாஸ் பண்ணி இருக்கும்...

வெயில் நேரத்தில் தன்னை சுமக்கும் மாட்டிற்கு நிழல் கொடுக்கும் தொழிலாளி...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 25...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளக்கூடிய குறிப்புகள் நிறைய உள்ளன. அந்த குறிப்புகள் யாவும் இன்றைய 25-ம் தீர்க்க தரிசனத்தில் இடம்பெறக் கூடியவைகள் ஆகும்.

25-ம் தீர்க்க தரிசனம் நமது உலகங்கள் என பல உலகங்கள் நமக்கு உள்ளது என்றும், மனிதன் பூமியில் வாழ்வதற்கு முன் நட்சத்திர மண்டலத்தில் வாழ்ந்தவன் என்றும், அங்கு அவனுக்கு பூத உடல் என்ற அமைப்பு இல்லை என்றும், ஒளி உடலான ஆவி உடலோடு வாழ்ந்து வந்தான் என்றும், அதன் பின்னரே பூமியில் அவனுக்கென்ற ஒரு உடல் தோற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும், அந்த உடலுக்குள் வாழும் அவனின்         ஒளிஉடலே (ஆத்மா) இன்றைய மனிதனின் முன்னோடி என்று 25-ம் தீர்க்க தரிசனம் அபூர்வமான ஒரு குறிப்பை வெளிப்படுத்துகின்றது.


இன்றைய விஞ்ஞானமும், மருத்துவ உலகமும் விடைகாண முடியாத ஒன்று, அதாவது மனிதஉடலுக்குள் உள்ள உயிர் மரணத்திற்கு பின் எங்கே செல்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரம் இல்லையென்றும் ஆனால் மரணத்திற்கு பின் மனிதனின் உயிர், ஆழ்மனச்சக்தி, ஆத்மா இவை மூன்றும் வேறு ஒரு உலகமான நட்சத்திர மண்டலத்திற்கு செல்கிறது என்றும்,

இதுவே இந்துமத கலாச்சாரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறவி நட்சத்திரம் உண்டு என 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை தருகின்றது.

25-ம் தீர்க்க தரிசனக் குறிப்பின்படி இவ்வுலகம் மனித உயிர்களால் நிரப்பப்பட்டு உள்ளது என்றும், அந்த உயிரை தாங்கி உள்ள மனித உடலானது இப்பூமியில் வாழ தகுதி அற்ற ஒரு சூழல் ஏற்படும் நிலையே யுகமாற்றம் என்றும், அச்சமயத்தில் தான் மனிதகுலத்தை காக்க இறைவனே பூமிக்கு வரும் அரிய நிகழ்வு ஒன்று நடக்கும் என்றும், அத்தகைய அரிய அற்புதமான ஒரு நிகழ்வு தற்சமயம் நடைபெற போவதாகவும், அவர் வரும் இந்த யுகமே சத்திய யுகம் என்றும் சத்திய யுகமே மனித குலத்தை காப்பாற்றிட போகிறது என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


ஆகவே யுக மாற்றமான சத்திய யுகத்தின் வருகை நிகழ்வதற்கு முன்பாக உலகின் பல்வேறு பகுதியில் பல அழிவுகளும், பூமியின் மாறுதல்களும் (இயற்கை அழிவுகள்), மரண நிகழ்வின் காட்சிகளும் தொடர்ந்து ஏற்படும் என்றும், அச்சமயத்தில் அவைகள் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த நேரத்தில் அவர்கள் கடவுளிடம் முறையிடும் பல சம்பவங்கள் நிகழும் என்றும், அது மதத்தையும், கடவுளின் நிலைகளையும் தாண்டி பொதுவானதாக இருக்கும் என்றும், அச்சமயத்தில்தான் இந்த பூமியில் இறைவன் அவதாரம் கொள்வார் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

25-ம் தீர்க்க தரிசனம் நிகழும் சமயத்திற்கு முன்பாக இந்திய தேசத்தை நோக்கி உலக மக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்றும், அச்சமயத்தில் இந்தியா தனது வல்லரசுக்கான நிலையில் பயணத்தை மேற்கொண்டிருக்கும் என்றும், இது 2017-லிருந்து துவங்கி 2020க்குள் நிகழும் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தருகின்றது.


மக்களின் மனதில் இறைவன் பற்றிய சிந்தனை இக்காலகட்டத்தில் (2016 முதல் 2018க்குள்) மிக, மிக அதிகமாக காணப்படும் என்றும் அச்சமயத்தில் சீன தேசத்து புத்த மடாலயத்தில் ஒரு செய்திக் குறிப்பை அறிவிப்பார்கள் என்றும், அதனைக் கண்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே வியப்படையும் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மிக முக்கிய குறிப்பு ஒன்றை தெரிவிக்கின்றது.

இந்திய - சீன நட்புறவு என்பது இக்கால கட்டத்தில் மிக, மிக சிறப்பாக இருக்கும் என்றும், போகியாங்க் என்று அழைக்கப்பட்ட போதி தருமர் (டாமோ) இந்திய சித்தர்களில் தலையாய சித்தரான போகரும் ஒருவரே என்ற உண்மை தெரியவரும் என்றும், இவரின் கலைப்பயணம் இந்தியாவில் மீண்டும் துவங்கும் என்றும் 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அரிய தகவலை தருகிறது.


போகரின் மாற்று பெயரே போகியாங்க் என்றும், அவரே மற்றொரு பிறவியில் டாமோ என்ற பெயரில் போதி தருமராக சீனாவில் இருந்தார் என்பதை அறியும் இந்திய தேசத்து மக்கள் மிகுந்த பெருமை கொள்வார்கள் என்று 25-ம் தீர்க்க தரிசனம் இங்கு நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.

இந்தியாவில் வேர் ஊன்றிய ஒரு கலையே இன்று Shaolin என்ற கலையாக உள்ளது என்றும், அதனை தோற்றுவித்த போதிதருமர் அந்த புத்த மடாலயத்தில் ஒரு இரகசிய அறையை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்றும், அது சீன அதிர்ஷட எண்ணாக கருதப்படும் 8-ம் எண் அறையின் அடிப்பகுதியில் உள்ளது என்றும், அதனை புத்த துறவிகள் கண்டறிந்து இந்திய கலையின் மகிமைகளையும், போதி தருமரின் உண்மையையும் அறிவிப்பார்கள் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

ரூ 5 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை யாரிடமிருந்தும் வாங்கக் கூடாது - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு...


பங்குனி உத்திரம் தோன்றிய வரலாறு...


பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.

குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார்.

இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்றார்.

மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். தலைவனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாட, முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிர வுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித் தான்.

முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத் தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்...

கோடை வெயிலின் காரணமாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏப் 21 முதல் கட்டாயம் விடுமுறை அளிக்கப்படும், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - அமைச்சர் செங்கோட்டையன்...


போராட்டங்களை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க வேண்டும் - டி.ஜி.பி அறிவுரை...


ஆட்டோக்களை கொளுத்தியா, இல்ல பொம்பளைங்க கன்னத்துல அறைஞ்சாங்க டிஜிபி ஐயா...

சிங்களவனிடமிருந்து மீனவனை காக்க துப்பில்ல...


பேரம் பேசி மாம வேலைக்கு பயன்படுத்த படுகிறது உலக வல்லரசு என தம்பட்ட மடிக்கும் இந்தியாவின் ஐ என் எஸ் போர்கப்பல். கார் த்த் த்த் து து தூ...

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிடல் உரிமை வழங்கியது மத்திய அரசு...


தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிடல் உரிமை வழங்கியுள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், இந்தியாவிலேயே ஒரு அரசு கேபிள் நிறுவனம் டிஜிடல் உரிமம் பெற்றது இதுவே முதல் முறை...

எண்ணமின் அலைகளின் பயணம்...


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 25...


வியக்க வைக்கும் ஒன்பது வகை வெளிப்பாடுகள்...

நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம்.

ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம்.

ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.

அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது.

உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை...

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்க ரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.

5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி. உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.


8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.
ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

சரி. இந்த ஆழ்மன சக்திகள் எப்படி, எப்போது சாத்தியமாகின்றன என்பதைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....

தமிழர்களைப் பற்றி சிந்திக்காமல், எப்பொழுதும் தன் கட்சியைப் பற்றியே சிந்திக்கும் சுயநல அரசியல்வாதிகள் தமிழ்நாட்டிற்கு தேவைதானா?


இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்.. தனியார் பள்ளிகள் முழுமையாக பின்பற்றுமா?


மத்திய அரசின் திட்டமான ஏழை மாணவரகளுக்கு அவர்கள் விரும்பும் பள்ளியில் பயிலும், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி சட்டம்: மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 6 முதல் 14 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த கல்வி சட்டத்தை கொண்டு வந்தது.

இதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

மேலும், எல்கேஜி போன்ற தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் ஃபெயில் ஆக்கக் கூடாது. அவர்களை அடிக்கவோ, மன ரீதியாக துன்புறுத்தவோ கூடாது போன்ற  பல்வேறு விதிமுறைகள் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

படிப்பு செலவு: அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு செய்யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகை நிர்ணயிக்கப்படும்.

இந்த நிதியை பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். உரியதொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வரும்போது, வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தினால் மாணவர் சேர்க்கையை நிராகரிக்கக் கூடாது. பிறப்பு சான்றிதழ் கொண்டுவராத பட்சத்தில் குழந்தை பிறந்த மருத்துவமனையில் கொடுத்த ஆவணத்தையோ, அங்கன்வாடியில் வழங்கப்பட்ட ஆவணத்தையோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவும் இல்லாவிட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளிக்கும் உறுதி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பள்ளிகள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கும் போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என உறுதிமொழி பெறப்படுகிறது. இந்த உறுதிமொழியை மீறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், கல்வி கற்க உரிமை உள்ளது.

ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியாக மற்றும் மறைமுகமாக (சீருடைகள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள்: நாட்டிலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம், மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளர்களிடம் புகார் அளிக்கலாம்.

பள்ளிகள் சேர்க்க மறுப்பு: இச்சட்டத்தின் படி ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் (6 வயது முதல் 14 வயது வரை) படித்தால் அதில் 25 மாணவர்கள் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பயில வேண்டும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் இச்சட்டத்தை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளை சரிகட்டிக் கொண்டு, இந்த நடைமுறையை பின்பற்ற மறுக்கின்றனர்.

எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் எந்தெந்த வகுப்பில் எத்தனை மாணவர்கள் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை பள்ளி தொடங்கிய ஒரு மாதம் வரை பதாகையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அப்போது தான் இந்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சிலர் கூறியதாவது:
இச்சட்டம் மகத்தான திட்டமாகும். இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உகந்ததாகும். ஆனால் பள்ளி நிர்வாகத்துக்கு ஏற்புடையதல்ல. தற்போதுள்ள சூழலில் கடுமையான போட்டிகளுக்கிடையில் பள்ளிகளை நடத்துவது மிகவும் சிரமம் வாய்ந்தது.

அதில் 25 சதவீத மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் நாங்கள் சேர்ப்பது எங்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாகும். அதையும் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை அமல்படுத்தினால், ஆசிரியர் நியமனத்தில் இருந்து அனைத்து நடைமுறைக்கும் இத்திட்டத்தில் பள்ளிக்கு பல்வேறு விதிமுறைகள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு மாணவரின் கல்வி தொகையை பெற ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒரு மாணவருக்கான ஆவணங்களை 6 நகல் எடுத்து அனுப்ப வேண்டும். அதே போல் அந்த தொகை கல்வி ஆண்டின் இறுதியில் தான் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

சில நேரங்களில் இரண்டு ஆண்டுகள் சேர்த்து கூட வழங்கப்படுகிறது. மேலும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

எனவே பள்ளி நிர்வாகத்தினருடன் மத்திய அரசு கலந்தாலோசித்து, சில விதிகளை தளர்த்தினால் மட்டுமே இத்திட்டத்தில் பள்ளி நிர்வாகத்தினர் ஆர்வமுடன் மாணவர்களை சேர்க்க முடியும் என்றனர்...

டிடிவி. தினகரன் வீட்டுக்கு 6 MLAக்கள் வருகை...


மொத்த ஆதரவு கணக்கு 11 தற்போது வரை...

திராவிடமும் புளுகு மூட்டையும்...


மணியம்மையாரின் புளுகும் மூட நம்பிக்கையும்...

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய புளுகுகளையும் வரலாற்றுப் பிழைகளையும், முரண்பாடுகளையும் நாம் பார்த்தோம். இனி அவருடைய வாரிசு மணியம்மையாரின் புளுகுகளையும் மணியம்மையினுடைய மூடநம்பிக்கையையும் ஆராயலாம்.

மணியம்மை கூறுகிறார்:

1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்து கொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்து கொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். (விடுதலை 6-1-1976)..

அம்பேத்கர் முஸ்லீம் மதத்தில் சேரப்போவதாகச் சொன்னார் என்று சொல்கிறாரே மணியம்மை - இது உண்மையா?

ஒரு பொழுதும் உண்மையாக இருக்க முடியாது. ஏனென்றால் அம்பேத்கர் மதமாற்ற அறைகூவல் விட்டவுடனேயே ஹைதராபாத் நிஜாம், முஸ்லீமாக மாறினால் ஒரு கோடி ரூபாயும், ஒரு கல்லூரியும் தருவதாக வாக்களித்த போது அம்பேத்கர் அதைப் புறக்கணித்தார். அம்பேத்கர் முஸ்லீம் மதத்தை கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

அம்பேத்கர் கூறுகிறார்:

நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை. (நூல் :- Ambedkar – A Critical study).

முஸ்லீமாக மாறினால் நாடே சீரழிந்து இருக்கும் என்று சொன்ன அம்பேத்கரா முஸ்லீம் மதத்தில் மாறப்போவதாக சொன்னார்? அம்பேத்கர் அப்படி சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு மற்றொரு ஆதாரம்...

அ. மார்க்ஸ் என்பவர், பெரியார் என்ற நூலில் கூறுகிறார்:

அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவிய போது நீங்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியலாக இருக்கும் என (பெரியார்) அவருக்கு அறிவுரைத்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதை அம்பேத்கர் கூறியது என்று சொல்வது தான் பகுத்தறிவா?

அ.மார்க்ஸ் சொல்வது பொய்யாக இருக்கும் என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் ஆரம்பித்திலிருந்தே ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியானதாகும்,’ என்று பல தடவை கூறியிருக்கிறார்.

இதையும் நம்பாதவர்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே பதில் சொல்கிறார்..

நான் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்த போது அவர் என்னிடத்தில் ஒரு பாரத்தை நீட்டி, போடு கையெழுத்தை நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். நான் சம்மதிக்கவில்லை. (விடுதலை 16-2-1959).

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்றிலிருந்து, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாற வேண்டும் என்று சொன்னாரே தவிர இஸ்லாமுக்கு அல்ல என்பது தெளிவாகும்.

மணியம்மையின் இந்தப் புளுகை எதில் சேர்ப்பது? இதுதான் ஒரு தலைவிக்கு அழகா?

இதைக்கூட விட்டு விடுவோம். இவர்கள் எதை மூடநம்பிக்கை என்று சொல்லி வந்தார்களோ, அதையே இவர்கள் நம்பினதுதான் வேடிக்கை.

மணியம்மை கூறுகிறார்:

என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும் என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து விடுகிறேன். உடனே அய்யாவின், அந்தப் புன்னதை முகம் என் கண்முன்தோன்றி, பைத்தியக்காரி இவ்வளவு தானா நீ. இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்துச் சொல்லி வந்த கருத்துகளை உன்னிடத்திலே காண முடியவில்லையே.

நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைபிடிப்பவளாய் இருக்கப் போகிறாயோ. சாதாரணப் பெண்கள் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே. என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்க வேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப் படுத்தி வைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், மற்றவர்களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்து கொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே என்று சொல்வது போல் தோற்றம் அளிக்கும்.

உடனே நான் இல்லை-இல்லை-மன்னித்து விடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல, என்றுமே நடக்கமாட்டேன் என்று மனதால் நினைத்துக் கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக் கொண்டு என் உள்ளத்தை இரும்பைப் போல் கடினமாக ஆக்கிவிடுவேன் அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும். (விடுதலை 4-1-1974).

பகுத்தறிவுவாதியான மணியம்மை கூறுகின்ற இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இந்துமதப் புராணங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. அசரிரீ என்ற பெயரில் ஒரு குரல் கேட்கும். அந்த அசரிரீக் குரல், எச்சரிக்கைக் குரலாகவும், அறிவுரைக் குரலாகவும் அல்லது பாராட்டுக் குரலாகவும் இருக்கும். இப்படி அசரிரீ கேட்கும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையும் கூட.

ஆனால் இதில் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை அல்லது கருத்து என்ன?

அசரிரீக் குரல் தானாகவே கேட்காது. அதுவும் மனிதன் யாருமே இல்லாமல், எந்தவிதக் கருவியும் இல்லாமல் மனிதனைப் போல் பேசுவது என்பது பகுத்தறிவுக்கு முரணானது. இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இப்படி பிரச்சாரம் செய்து வந்த பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை என்ன கூறுகிறார்?

தான் சோர்ந்து இருக்கும் சில சமயங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தனக்கு ஆறுதல் கூறுவதுபோல் தோற்றம் அளிக்கும் என்கிறார் மணியம்மை. இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி தோற்றம் அளிப்பார்? அப்படியே தோற்றம் அளித்தாலும் பேசுகின்ற மாதிரி குரலுடன் தோற்றமளிக்க முடியுமா? ஒருவர் இறந்தாலும் கூட அவரை நினைக்கும் போது அவருடைய தோற்றம் நம் மனதில் எழும் என்று சொல்லலாம். அது வெறும் எண்ணமே தவிர உண்மை அல்ல என்றும் சொல்லலாம். அப்படியென்றால் உண்மையில்லாத இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், தோற்றத்திற்கு அல்லது எண்ணத்திற்கு எதற்காக மன்னித்து விடுங்கள் என்று சொல்ல வேண்டும்? மன்னித்து விடுங்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன்னித்து விடுமா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் ஆறுதல் சொல்லியவுடன்தான் மணியம்மைக்கு மனதில் அமைதியும், நிறைவும் பெறும் என்பதுதான் பகுத்தறிவா? எவ்வளவோ ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோழர்கள் மன அமைதியும் நிறைவும் இல்லாமல் திராவிடர்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்தார்கள். அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றி மன அமைதியைக் கொடுத்திருக்கலாமே- ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றவில்லை? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன அமைதியை கொடுத்து விட முடியுமா?

இந்தத் தோற்றமே நம்மால்தான் ஏற்படுகிறது என்று சொல்வார்களானால் அதற்காக மன்னிப்பு எதற்கு? தோற்றமே நம்மால் தான் ஏற்படுகிறது என்கின்ற போது அதற்காக ஈ.வே. ராமசாமி நாயக்கரால் தான் மன அமைதி பெறுகிறது என்று சொல்வது எதற்காக?

இதுதான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்று சொல்வது.. அதாவது பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை...

அதிமுக இரண்டு அணிகளும்...


சித்தராவது எப்படி - 25...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஒன்று...

சுவாச ஒழுங்கு பயிற்சி செய்யும் அன்பர்கள் தங்கள் தேகம் பெற்றுக் கொண்ட ஆற்றலை சூட்சம தேக பயிற்சியின் மூலம் சேர்த்து வைக்கும் பயிற்சியை கற்று தரப் பட்டது..

ஆனால் மோன நிலையில் அதை மறந்து போகும் தருவாயில் அதிகமாக கிடைக்கப் பெற்ற ஆற்றல் சூட்சம தேகத்தின் மிக முக்கியமான பகுதிகளின் வழியாக ஓட துவங்கும்..

அப்படி ஓட துவங்கும் அந்த ஆற்றல் ஒரு முறையில்லாமல் அதன் பயணப்பாதையில் எங்கோ ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கி எங்கே முடிவது எங்கே துவங்குவது என்று தடுமாறி கொண்டு இருக்கும்..

ஆகவே சூட்சம தேகத்தில் ஓடும் பாதையை, அதற்கு அடையாளம் காண்பித்து முறையான ஒரு ஓட்டத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்...

இப்படி முறையான ஓட்டத்தின் மூலம் ஆற்றல் செல்லும் போது அது தேகத்தில் மையம் கொண்டுள்ள பஞ்ச பூத நிலைகளை, செம்மைப் படுத்தி முடிவாக பிரபஞ்ச ஆற்றலோடு கலக்க உதவி செய்யும்...

அப்படி ஒரு முறையான பாதையை அடையாளம் காணவே சில பகுதிகளை வெளியிட வேண்டிய அவசியம் ஆகிறது...

முதலில் அடையாளம் காட்டி சற்று பயிற்சி செய்தால் சுவாச ஒழுங்கு மூலம் பெறப்படும் ஆற்றல் அதன் வழியாக பாயத் தொடங்கும்..

அதன் வழியாக பாயும் போது என்னென்ன மாற்றங்கள் நம் பஞ்ச பூத நிலைகளில் ஏற்படும் என்பதையும் காணலாம்..

எச்சரிக்கை : சுவாச ஒழுங்கிலே பயின்று பக்குவப் படாதவர்களுக்கு இது பயன் படாது.. அதில் அதிகப் படியான ஆற்றலை பெறாதவர்களுக்கும் பயன் படாது..

பெற்ற ஆற்றலால் உடம்பில் முக்கியமாக தலையில் சில ஊரல்கள் உணர்வுகள் தோன்றியவர்களுக்கு மிகவும் பயன்படும்...

ஆறு ஆதார மையங்களில் முறையான முறையில் பயணப் படும் இந்த ஆற்றல் பத்து பயணப் பாதைகளை தேர்ந்தெடுத்து அதில் முறையாகப் பயணப் பட்டால் மட்டுமே மேன்மை அடைய முடியும்..

அந்த பத்துப் பயணப் பாதைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்..

முதல் மையமான மூல ஆதாரம் என்பது ஜல மல துவாரங்களுக்கு இடையில் உள்ளது..

இரண்டாவது மையம் தலையின் பின் பகுதியில் புருவ மத்திக்கு நேரே பிடரி என்ற இடத்தில் உள்ளது...

முதலில் இந்த இரண்டுக்குமான பயணப் பாதையை பயிற்சியின் மூலம் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்..

உள்நகைத்தல் என்ற பயிற்சியை சில வகுப்புகளில் கற்று தரப் பட்டது.. அதில் ஜீவ சக்தி மூல ஆதாரத்திலிருந்து தலைக்கு பயணப் படுவதை பெரும்பாலோர் உணர்ந்தனர்..

இப்பொழுது அந்த பயணம் மூல ஆதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகர்ந்து பிடரியை தொட வேண்டும்..

சுவாச ஒழுங்கில் சூரிய கலையாகிய வெளி மூச்சில் பிடரியிலிருந்து மூலாதாரத்தை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்...

சந்திர கலையாகிய உள்வாங்கும் மூச்சில் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்..

இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது.. இது சுவாசத்திற்கு மிகவும் இயல்பானது.. மாற்றி செய்தால் பெரும் சிக்கல் ஆகி விடும்..

இது பத்து பயணப் பாதைகளில் முதல் பயணப் பாதை.. இதில் பூர்த்தி செய்த பின்பு தான் இரண்டாவது பயணப் பதையில் கால் எடுத்து வைக்க முடியும்...

இந்த மூலாதாரம், பிடரி என்பது என்ன வென்று பார்ப்போம்...

சுவாசம் சூரிய கலையில் தோன்றா நிலையில் இருக்கும் போது இந்த மூலாதார மையம் தான் பிரபஞ்ச ஆற்றலோடு இசைந்து இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெறுகிறது.. வேறு எந்த ஆதாரத்திற்கும் அந்த சக்தி கிடையாது..

புருவ மத்திக்கு அறவே கிடையாது.. புருவ மத்தியில் மூலாதார தொடர்பை துண்டித்து அளவிற்கு அதிகமான நேரம் பயிலும் பொழுது தேகத்தில் அதிக சோர்வு உண்டாகிறது..

சில குருமார்களின் பயிற்சிகளில் இந்த சோர்வு நிலைதான் உருவாகிறது.. இதனால் தேகம் மிக விரைவாக பழுது அடைகிறது..

உடலில் சூடு என்பது தேகத்தில் ஆற்றலின் குறைபாடே என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்...

முறையற்ற பயிற்சியில் சூடு சம்பந்தப் பட்ட வியாதிகளீல் அவதி படுவது எதனால் என்றால் பயிற்சியில் சுவாசத்தின் மூலமாக தோன்றா நிலை ஏற்படாமல் அதனால் நமது மூலதார மையம் அதனோடு இசைந்து பிரபஞ்ச ஆற்றலை ஒழுங்காக பெற முடியாமல் போவதால் தான்..

இந்த சாதாரண அதிமுக்கிய இரகசியத்தை ஒரு போதும் மறக்காமல் இருந்து பயின்றால் மட்டுமே அதிகப் படியான ஆற்றல் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகரும்..

இந்த பிடரி என்பது நினைவகம்.. நான் யார் என்ற கேள்விக்கான பதிலை பல ஜென்மங்களின் அனுபவங்கள் வழியே ஊடுருவி பாய்ந்து பாய்ந்து அந்த பதிலுக்க்கான விளக்கங்களை விரித்துக் கொண்டே போகும்..

இந்த பிடரியை அடையாத ஆற்றல் இருந்தால் இரமணர் சொன்னது போல் நான் யார் என்ற கேள்விக்கான பதிலை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அறிந்து கொள்ள முடியாது...

பிடரி என்ற மையத்தை ஆற்றல் பூரணமாக அடையும் போது அந்த பதிலும் பூரணமாக கிடைக்கப் பெற்று பலம் வாய்ந்த இருப்பு தன்மையால் நாம் யார் என்ற கேள்விக்கான பதிலும் பூரணமாக கிடைக்கும்...

இந்த முதல் பயணப் பாதையில் இடைப்பட்ட சக்கரங்களை ஒன்று சேர செம்மை படுத்தப் படுவதால் தேகமும் முழுமையாக நலம் பெறுகிறது..

அந்த சக்கரங்களில் நாம் அதிகம் நாட்டம் கொள்ள தேவை இல்லை...

எந்த பயிற்சியாக இருந்தாலும் அது சுவாச ஒழுங்கின் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும்.. இல்லையேல் எதுவும் பலனற்று போய் விடும்...

சித்தர் நிலை நோக்கி பயணிப்போமாக...

அதிமுகவை வழிநடத்த குழு அமைக்கப்படும்...


அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு டி.ஜெயகுமார் அறிவிப்பு...

பாஜகவுக்கு அல்வா கொடுத்த எம் ஜி ஆர் ரசிகர்கள்...


தமிழகத்தை தனது  வேட்டைக்காடாக்க முயற்சித்தார்கள். எம் ஜி ஆர் ரசிகர்களாக அதிமுகவில் இணைந்து, இன்று அதிமுகவின் முக்கிய தலைவர்களாக இடம் பெற்றிருக்கும் பணிவு பன்னீரும், இடைக்கால முதலமைச்சர் எடப்பாடியும் இணைந்து இப்போது நடத்தி வரும் நாடகம் கண்டு பாஜகவும், மோடியும் நிச்சயம் திகைப்பின் உச்சத்தில் இருப்பார்கள்.

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அட்மிட்டான பின் அ தி மு க வின் ஒன்றரை கோடி உறுப்பினர்களை பதட்டத்தில் வைத்திருந்தது டெல்லி.

ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீருக்கும் - மன்னார்குடி குடும்பத்துக்கும் ஏற்பட்ட பதவிப் போட்டியில் தனிக்குடித்தனம் வந்த பன்னீர் மோடியை நம்பினார்.

இருவரையும் மோதவிட்டு மொத்த தமிழ் நாட்டையும் தன்வசப்படுத்த காய் நகர்த்தியது டெல்லி.

அதிகார ருசி அனுபவித்த ஓபிஎஸ் - எடப்பாடி..

அதிகார ருசி அனுபவித்த பன்னீரும் - எடப்பாடியும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளவில்லை. மன்னார்குடி குடும்பத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்ற அவ்வப்போது அதிரடி நாடகங்களை அரங்கேற்றினர்.

இவர்களது செயல்பாட்டால் சசிகலா அன் கோவால்தான் அதிமுக பிளவுபட்டது, இரட்டை இலை முடக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் வலிமையான பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் அனைவரும் புனிதர்கள், சசிகலா அண்ட் கோதான் எல்லா ஊழலுக்கும் காரணம் என்ற பிம்பத்தை எடப்பாடியும் - பன்னீரும் உருவாக்கினார்கள்.

உளவியல் யுத்தம் - சசிகலா குரூப்பை கட்சி ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுக இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற இயலும் என பன்னீர் எதிர்ப்பாளர்களை நம்ப வைக்கும் உளவியல் யுத்தம் வேலை செய்திருக்கிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம், குடி தண்ணீர் பிரச்சினைகளுக்காக வாய் திறக்காத பன்னீர், அ தி மு க இணைய பேச்சு வார்த்தைக்கு தயார் என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

எதிர்பார்க்காத பாஜக - இப்படி ஒரு திகில் திருப்பத்தை பாரதிய ஜனதா எதிர்பார்க்கவில்லை. எடப்பாடி தரப்பு பேச்சு வார்த்தைக்கு குழு அமைத்து அறிவித்துவிட்டது.

இரு தரப்பும் பதவியையும், அதன் மூலம் சம்பாதித்த சொத்துக்களையும் இழக்க விரும்பவில்லை. அதைக்காக்கும் வியூகத்தை போர்க்கப்பலில் வைத்து வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லதொரு திரைக்கதை.. ஆனால் ஒன்று... இவர்கள் இணைவதால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையப் போவதில்லை. நடப்பவைகளை எல்லாம் கூர்ந்து கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் பன்னீரும் எடப்பாடியும் இணைந்து எழுதிய திரைக்கதை இது.

உலகம் சுற்றும் மூத்த வாலிபன் மோடி எதிர்பார்க்காத ஒன்று இது என்கிறார்கள்...

அனைவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்...


அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு டி.ஜெயகுமார் அறிவிப்பு...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 24...


பெவர்லி ரூபிக்கின் ஆராய்ச்சிகள்...

டாக்டர் ஓல்கா வோரால் பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம். என்று கூறிய முடிவுக்கே பெவர்லி ரூபிக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் வந்தார்.

உயிர்வாழும் அனைத்திலும் மின்காந்த அலைகளை ஒத்த சக்தி சூழ்ந்து இருப்பதை அவரால் அறிய முடிந்தது.

உயிர்களை சூழ்ந்துள்ள மின்காந்த வெளிச்சக்தியில் சிறிது கூடினாலும் அது மிகப் பெரிய பலன்களைத் தருவதாக உள்ளது.

Salamander என்ற ஒரு உடும்பு வகைப் பல்லி தன் முழுக் காலை இழந்தாலும் குறுகிய காலத்தில் அதைத் திரும்ப வளர்த்துக் கொள்ள முடிகிறது.

ஆனால் அதையே ஒரு தவளையால் இழந்த காலை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை.

அதற்குக் காரணம் அந்த இரண்டு விலங்கு வகைகளின் உடல்களைச் சூழ்ந்துள்ள மின்காந்த வெளியில் உள்ள சில மில்லிவால்ட் சக்தி வித்தியாசம் தான் என்பதையும் பெவர்லி ரூபிக் 2000 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் ஆராய்ச்சி முடிவுகளில் கூறினார்.

மனிதர்களின் மின்காந்தவெளி குறித்து பல ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மனிதனைச் சுற்றியும் மின்காந்தவெளி உள்ளதென்றும் SQUID என்ற கருவிகள் மூலம் அவற்றை அளக்க முடிகிறதென்றும் முன்பே ஜான் சிம்மர்மன் (John Zimmerman) போன்ற அறிஞர்களின் ஆராய்ச்சியில் வெளியாகி இருந்தது.

மனித உடலிலேயே மிக அதிக மின்காந்த அலைகளை வெளிப்படுத்தும் உறுப்பாக இதயத்தைக் கண்டு பிடித்திருந்தார்கள்.

அடுத்ததாக அதிகாலையில் விழித்தவுடன் கண்களும் மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகிறதாம். அதிசயமாக மனித மூளை தான் மிகக் குறைந்த மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகின்றன என்கின்றன ஆராய்ச்சிகள்.

அதை விட தசைகள் கூட தங்கள் செயல்பாடுகளின் போது அதிக மின்காந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஜான் சிம்மர்மன் SQUID கருவியை உபயோகித்து மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்தும் சக்திபடைத்தவர்களின் கைகளில் இருந்து அச்சமயத்தில் 7 முதல் 8 ஹெர்ட்ஸ் மின்காந்த சக்தி வெளிப்படுவதாகக் குறித்துள்ளார்.

எல்மர் க்ரீன் என்ற ஆராய்ச்சியாளர் சக்திகள் படைத்த குணப்படுத்தும் நபர்களை செம்பாலான தகடுகள் பதிந்த ஆராய்ச்சி அறைகளில் இருத்தி செய்த ஆராய்ச்சிகளில் சில சமயங்களில் நூறு வால்ட்ஸ் வரை சக்திகள் வெளிப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அது போல டான் விண்டர் (Dan Winter) என்ற ஆராய்ச்சியாளர் மரங்களின் கீழ் அமர்ந்து செய்யும் தியானங்களின் போது வெளிப்படும் சக்திகள் குறித்து பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

இது போன்ற பலருடைய ஆராய்ச்சிகளையும் பற்றிக் கூறும் அவர் ஃபாரடே கூண்டுகள் extra low frequency (ELF) என்று கூறப்படும் ஒரு நொடிக்கு 300க்கும் குறைவான அலைகளை வெளிப்படுத்துவனவாக உள்ள சக்திகளைத் தடை செய்வதில்லை என்றும் ஆழ்மனசக்திகளின் ஃபாரடே கூண்டு ஆராய்ச்சிகளின் போது அப்படிப்பட்ட அலைகள் தான் வெளிப்பட்டு அதிசயங்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்றும் கருதுவதாகக் கூறினார்.

அந்த அளவு குறைந்த அலைவரிசை சக்திகள் உண்மையிலேயே சக்திவாய்ந்தனவாக இருப்பதாக அவர் கருதினார்.

இரண்டு புத்தகங்களையும், சுமார் அறுபது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ள பெவர்லி ரூபிக் பல அறிவியல் கருத்தரங்கங்களிலும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் ஆராய்ச்சிகள் குறித்து பேசியிருக்கிறார்..

அமெரிக்காவின் பிரபல டெலிவிஷன் நிகழ்ச்சியான Good Morning America (ABC-TV) யில் டிசம்பர் 2000ல் அவர் ஆழ்மன ஆராய்ச்சிகள் பற்றிப் பேசிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

ஆழ்மன சக்திகளின் பிரம்மாண்டம் தன்னை பெரும் வியப்பில் ஆழ்த்துவதாகக் கூறும் பெவர்லி ரூபிக் இந்த ஆராய்ச்சிகளில் இருக்கும் சிக்கல்களையும் ஒத்துக் கொள்கிறார்.

இந்த ஆராய்ச்சிகள் வியப்பில் ஆழ்த்துகிற முடிவுகளைத் தெரிவித்தாலும் இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஒன்று போலவே இருப்பதில்லை என்கிறார் அவர்.

விஞ்ஞானம் எத்த்னை முறை ஒரு ஆராய்ச்சி செய்தாலும் அது ஒரே மாதிரியான முடிவைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கையில் இந்த ஆராய்ச்சிகள் அது போன்ற ஒரே முடிவைத் தருவதில்லை என்பதுவே யதார்த்தமான உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார்.

ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் சக்தி வாய்ந்த மனிதர்களின் மனநிலை, தயார்நிலை போன்றவை அடிக்கடி மாறுவதால் இந்த ஆராய்ச்சிகளில் ஒரே விளைவைத் தரத் தவறுகிறது என்று கருத இடமிருக்கிறது என்கிறார் அவர்.

இன்றும் எத்தனையோ ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆராய்ச்சிகள் குறித்து ஓரளவு விளக்கமாகவே பார்த்து விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

இனி ஆழ்மன சக்தியின் வகைகளையும், அந்த சக்திகளால் அற்புதங்கள் எப்படி சாத்தியமாகின்றன என்பதையும், அந்த ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதையும் விளக்கமாகக் காண்போமா?

மேலும் பயணிப்போம்.....

சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டு ஆட்சி நடத்தப்படும்...


அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் டி.ஜெயகுமார் அறிவிப்பு...

எல்லா மாற்றத்திற்கும் காரணம் ஐடி ரெய்டில் கிடைத்த அமைச்சர்கள் பட்டியல் தான்...


திபெத்தின் வான் சவ அடக்கம் (Tibetan Sky Burial)...


உங்களில் யாருக்காவது பறக்கும் ஆசை இருந்தால் (வாழும் போது அல்ல) முதலில் திபெத்து நாட்டுக்கு செல்லுங்கள்...

ஆம், திபெத்து நாட்டில் ஒவ்வொருவரும் இறந்த பின், பிணங்களை நிலங்களில் புதைப்பதற்கு பதிலாக, மலை உச்சிக்கு (பறந்து சென்று) அனுப்பி வைக்கிறார்கள்.

அப்படிச் செய்வதால், கழுகளுக்கு இரையாகிறது மனித உடல்.

அது மட்டுமல்லாமல், சமயங்களில் பிணங்களினுள்ளே பாலையும், மாவையும் கலந்து வைத்து அனுப்புவார்களாம்.

ஏனென்றால் அதை உண்ணும் கழுகுகள், ஒரு துண்டு கூட மீதம் வைக்காமல் முழுமையும் உண்டு அவ்விடத்தை சுத்தமாக விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக...

http://www.youtube.com/watch?v=b6hSK8CluxQ

மத்திய அரசு தன்னோட முழு பலத்தையும் மாநில அரசை பயமுறுத்த மட்டுமே பயண்படுத்தும்...


ஆனால் நடவடிக்கை என்று பாத்தால் சேகர் ரெட்டி ஜாமீன்னில் சுத்துவான்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 24...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இடம்பெறும் தீர்க்க தரிசனங்களின் செயல் முறைகள் வேகம் கொள்ளக் கூடிய அளவில் அதன் உண்மைத் தன்மைகள் திகழ உள்ளதாக இறைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மனித வரலாற்றில் எத்தனையோ காவியங்கள் இருந்தாலும், இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவை இறைவனின் திருவிளையாடல்களும், அவரின் பல்வேறு அற்புதங்களும் ஆகும்.

அந்த வகையில் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் மாற்றக்கூடிய ஒரு         யுகமாற்றம் பூமியில் நிகழ உள்ளதாக இன்றைய 24-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

அற்புதம் ஒன்று இந்த பூமியில் நிகழ உள்ளதாகவும் பரம்பொருளான அந்த பரமாத்மா இந்த பூமியில் அவதாரம் எடுக்கும் திருநாள் வந்துவிட்டதாக 24-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

இந்திய தேசத்தில் மட்டுமே நடக்ககூடிய அந்த மகா அதிசயம் பிரபஞ்சம் முழுவதும் தனது ஆளுமையை செலுத்தக்கூடிய அளவில் இருக்கும் என 24-ம் தீர்க்க தரிசனம் மேலும் பல விபரங்களைத் தருகிறது.


இறைவன் அவதரிக்கும் நமது இந்தியப்பூமி என்ன தவம் செய்ததோ என்று ஞானிகளும், யோகிகளும், மகான்களும், மக்களும் வியந்து நிற்கும் இச்சமயத்தில் அந்த இறைவனின் அவதாரம் வெகு நேர்த்தியாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்று 24-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

தீர்க்க தரிசனம் மேலும் பல விளக்கங்களை தருகிறது. இந்த உலகத்தில் பெரும்பான்மையான இறை அவதாரக்கோட்பாடுகள் இந்திய மண்ணில் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றும், இது இறைவன் விரும்பி ஏற்கும் இடம் என்றும்,

உலக வரலாற்றில் இது போன்ற அதிக அவதாரப்புராணங்கள் வேறு எங்கும் நிகழ்ந்ததாக உலக வரலாற்றில் எவ்வித குறிப்புகளும் இல்லை என 24-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கங்களை தருகிறது.

உலகில் தனக்கென ஒரு இடத்தை விருப்பமாக தேர்வு செய்யும் இறைவன் அதற்கான காரண, காரியங்களை முன் வைத்துள்ளார் என்றும் 24-ம் தீர்க்க தரிசனம் பல குறிப்புகளை தருகிறது.

உலக வரலாற்றில் புண்ணிய இடமாக கருதுவது இந்தியதேசம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும்,


இந்த புண்ணிய ஷேத்திரத்தில்தான் பல ரிஷிகளும், பல முனிவர்களும், பல சித்தர்களும், பல அவதார புருஷர்களும், கடவுளின் திருவிளையாடல்களும் நிகழ்ந்து உள்ளது என்றும்,

அதனால் இறைவனின் வருகை என்பது இந்திய தேசமே என்பது எப்பொழுதே எடுக்கப்பட்ட முடிவு என்று 24-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

கடவுளின் வருகை என்பது யுக மாற்றத்தின் முக்கிய நிகழ்வு என்றும்,

அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பார் என்பதற்கு நிதர்சனமாக விடை இல்லை என்றும்,

அவர் மானிட வடிவத்தினுள் வாழும் கடவுளாகவே வருகை தருவார் என்றும்,

இதனை உலக மக்கள் அறிய வேண்டிய உண்மை என்றும் 24-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது.

இயேசுவின் வருகையும் உலகில் நடக்கும் பல அதிசயங்கள்கூட இறைவனின் வருகை கட்டாயம் என்பதற்கான அரிச்சுவடிகளாக அமையுமே என்று 24-ம் தீர்க்க தரிசனம் குறிப்பிடுகின்றது.

ஏழை, பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன், அரசன், ஆண்டி, யோகி, ஞானி, மகான், பேதை என்ற எவ்வித வேறுபாடுகளும் அவருக்கு இல்லை என்றும்,

மதத்துக்குள் மறைந்து வாழும் நிலை அவருக்கு இல்லை என்றும் எல்லாவித மார்க்கங்களும் அவரையே சரணாகதி அடையும் என்றும் 24-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கத்தை தருகிறது.


கற்கால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை அனைவருக்கும் கடவுள் ஒருவரே. அவர் தனது உருவ அமைப்பையும், வழிகாட்டுதல் முறைகளையும் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்திக் கொண்டவரே தவிர, அவர் வெவ்வேறான கடவுளின் அம்சம் கொண்டவர் என சொல்லிவிட முடியாது என்றும்,

தண்ணீரை வெவ்வேறு பாத்திரத்தில் நிரப்பும் போது அந்த பாத்திரத்தில் உள்ள நீர் என்று எப்படி பெயரிட்டு சொல்கிறமோ அது போன்று அனைத்து உருவங்களிலும், மதத்திலும் உள்ள எவரோ அவரே உண்மையான கடவுள் என்றும்,

இவ்வுலகில் போலியான கடவுள் என்று இதுவரை இல்லை என்று 24-ம் தீர்க்க தரிசனம் ஒரு மிகப்பெரிய விளக்கத்தை இங்கு தருகிறது.

துன்பத்தை விலக்கிட கடவுள் வருவார் என்பதைவிட நம்மை காப்பாற்ற கடவுள் வருவார் என நினைப்பதே இந்த நேரத்தில் சிறந்த கோட்பாடு என்றும்,

அகிலம் முழுவதும் ஆளும் திறன் இறைவன் ஒருவருக்கே உண்டு என்றும்,

இறைவனை அங்கீகரிப்பது, நிராகரிப்பது என்ற செயல்கள் மனிதகுலத்தில் காணப்பட்டாலும், மனித குலத்தை என்றுமே கடவுள் நிராகரிப்பதில்லை என 24-ம் தீர்க்க தரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...