19/04/2017

டிடிவி. தினகரனைச் சந்தித்தப் பின் சசிகலா அணி எம்எல்ஏ வெற்றிவேல் பரபரப்பு பேட்டி...


முதலமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்பதே ஓ. பன்னீர் செல்வம் முன்வைக்கும் முக்கிய நிபந்தனை என்று வி.கே. சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதோடு, பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட முக்கியமான 6 துறைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை ஓ. பன்னீர் செல்வம் முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், அவர் வி.கே. சசிகலா அணியுடன் இணைவார் என்றும் வெற்றிவேல் தெரிவித்தார்.

இதுபோன்ற நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என்று தெரிவித்துள்ள வெற்றிவேல், வி.கே. சசிகலாதான் கட்சியின் பொதுச்  செயலாளர் என்றும், டிடிவி  தினகரன் தான் கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்றும் கூறியுள்ளார்.

ஓ. பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த  தம்பிதுரைக்கோ, ஜெயகுமாருக்கோ யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்றும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெற்றிவேலின் கருத்து புதிய திருப்பத்தை அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.