14/06/2020

விழித்துக்கொள் எம் தமிழினமே...


கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி போனது.. இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடந்தது தமிழ்நாட்டில் தான்.. இவை பெரும்பாலும் மத்திய அரசால் திணிக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தான்.. மண்ணில் இருந்து மலை வரைக்கும் போராடியே நாம் காப்பாற்ற வேண்டி இருக்கிறது..

இந்த போராட்டங்கள் அனைத்தும் எந்த கட்சியாலும் முன்னெடுக்கப்படாமல் மக்கள் தன்னெழுச்சியாக நடத்தியவை.. இவற்றால் அரசுகளுக்கு ஏற்படும் தலைக்குனிவையும், எதிர்ப்பையும் அகற்றுவதற்கு அல்லது மடைமாற்றுவதற்கு, பல உத்திகளை உளவுத்துறைகள் கையாள்கின்றன.

அதில் முக்கியமான ஒரு  உத்தி என்னவென்று பார்ப்போம்.. இந்த உத்தியை தான் உளவுத்துறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்..

அதாவது, ஓரளவு பிரபலமான "தேச விசுவாசக் கொள்கையுடையவர்களை" இனம் கண்டு, அதில் இளையோரைக் கவரும், ஒரு சிலரை தெரிவு செய்வது..

பின் அவர்ளை தொடர் கண்காணிப்பின் பின், நம்பகத்தன்மையை கணிப்பிட்டு, அவர்களுக்கேற்றாற் போல் அதில் சிலரை நேரடியாக தங்கள் தேவையைக் கூறி தங்களுடன் பயணிக்க வைப்பது..

அடுத்தது, இன்னும் சிலரை அவர்களுடன் எந்தவித நேரடித்தொடர்பும் இல்லாது அவர்களுக்கே தெரியாமல் கையாள்வது!

அது எப்படி ஒருவருடன் நேரடித் தொடர்பு இல்லாது கட்டுப்படுத்துவது?

ஆட்சியில் இருக்கும் அரசு, அரசியலில் பங்குபெறாத ஆனால் அதில் ஆர்வம் கொண்ட மிக நெருங்கிய நட்பை கொண்டிருக்கும்.. சில VIP க்களும் இருப்பார்கள்.(உதாரணத்திற்கு ரஜனி மோடிக்கு நெருக்கமானவர், அவர் சொல்வதை சிரமேற்கொண்டு இவர் செய்வார்)

இவர்களை போன்றவர்களை அரசியல் தலைமைகள், நண்பன் என்ற ரீதியில் அணுகி உதவி பெறுவர்.. இவர்களை நெறிப்படுத்தி, அதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கக் கூடிய நபர்களிடம் இந்த VIP க்கள் ஊடாக நட்பு உருவாக்கப்படும்!

இவர்களுக்கு அந்த VIPக்களின் நட்பென்பது கனவு போன்றது.. அவர்களின் சொற்களை வேத வாக்காக கொண்டு இவர்கள் செயல்படுவார்கள்..

இவர்களின் அடி மனதில், அவர்களின் கருத்துக்கள், மாற்றமெதுவும் இல்லாது உள்வாங்கப்படும்.. அந்தக்கருத்து, இவர்களை அறியாமல் இவர்களையே கட்டுப்படுத்தும்!

கடந்த காலங்களில் நடந்த கூடங்குளம் அணுவுலை மற்றும் காவிரி நதிநீர்ப் போராட்டங்களை நீர்த்துப்போக வைக்க இந்திய உளவுத்துறைகளின் கைகள் கடைசி எல்லைவரை நீண்டிருந்தன..

இந்தியம் என்பது, "பல துணிகளால் தைக்கப்பட்ட ஆடையே" ஆகும்..

மிக மெல்லிய தையல்களை உடைய இந்த ஆடை எப்போது கிழியுமென்ற ஆபத்திலேயே உள்ளது.. மிகப்பழமை வாய்ந்த பல மாநிலங்களின் கூட்டாட்சியில் இருக்கும் இந்திய ஒன்றியத்திற்கு, இப்போதைய பெரும் பிரச்சனை "தமிழ் தேசியமும், அதைப் பேசுபவர்களுமே"..

தமிழ்த்தேசியவாதிகளை கத்தியில் நடப்பது போல் மிகக் கவனமாக கையாள்கின்றது, ஹிந்திய உளவுத்துறை..

தமிழ்த்தேசியவாதிகளை, வெளிப் பார்வைக்கு "கண்டும் காணாமலும் விடுதல்" முறையை கையாண்டு, மறைமுகமாக இவர்களுக்கு எதிரான பரப்புரைகளை மிக கட்சிதமாக செய்கின்றன.. அதற்கு இந்திய ஊடகங்களும் துணை போகின்றன, அல்லது பணிய வைக்கப்படுகின்றன..

தமிழ்த்தேசியம் மக்களிடத்தில் போய் சென்று விடாதபடி, அதற்கு எதிரான கருத்துக்களை விதைத்து, தமிழ் தேசிய கருத்தியல் பேசுபவர்களின்  உளவுரணை சிதைத்து, அதிலிருந்து அவர்களை அகற்றும் உத்தியே இதுவாகும். இதைத் தான் அரசுகள் இப்போது கையாளுகின்றன..

இந்த "தமிழ்த் தேசிய" முறியடிப்பு புலனாய்வுக்கு, உண்மையான தேச அபிமானிகளும், பலியாகிவிடுவதுதான், இவர்களது வெற்றி..

சல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோர் மாபெரும் போராட்டத்தை நடத்தி வென்று காட்டினோம்..

இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் தடை செய்து, தமிழ் இளையோர் என்ற அடையாளமே முன் நின்றது.. அதுவரை எல்லாம் சரியாகவே நகர்ந்தது.!

பின்னர் மெதுமெதுவாக உள்நுழைந்த தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட நடிகர்களின் கைகளில் மாணவர்கள் அறியாமலே தமிழர் போராட்டம் கைமாறிச்சென்றது..

அப்போது இந்த நடிகர்களுக்கு ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்தார்கள்.. மக்கள் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக "இவர்கள் தான்" இந்த எழுச்சியின் நாயகர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயன்றார்கள் அல்லது கிட்டதட்ட உருவாக்கி விட்டார்கள்..

இவர்கள் யாரென்று பார்த்தால் தமிழனென்று வெளியில் கூறி இந்திய தேசியத்தின்/திராவிடத்தின் செல்லப் பிள்ளைகளாக வலம் வருபவர்கள்.. இவர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசியம்/தமிழர் அடையாளம் மறைக்கப்பட்டு, இந்தியம்/திராவிடம் திணிக்கப்பட்டது..

தமிழர் இன்னும் சினிமா
கதாநாயகர்களை, நிசக்கதாநாயகர்கள் என்று நம்பும் மாயை அல்லது உளவியல் நோயிலிருந்து மீளவில்லையோ! என்ற எண்ணத்தை தான் இது தோற்றுவிக்கிறது..

மெரீனாவில் ஆரம்பித்த தமிழர் எழுச்சியும், "தமிழ்த்தேசிய சித்தாந்தத்துக்கான" தொடக்கமும் ஹிந்திய தேசியத்துக்கு ரசிக்கக் கூடியதாக நிச்சயம் இருந்திருக்காது..

அதன் பின்னர் நடிகர்; தன்னார்வலர்; போராளிகள் என்ற போர்வையில் தமிழின விரோத சக்திகளை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.. அவர்களில் சிலர் களத்துக்கு வராமலேயே ஒதுங்கி விட்டனர்..

இதற்கு முக்கிய காரணம் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அரசியல் ரீதியாக தேர்ச்சியானவர்களாக மாறி அவர்களை வரும் முன்பே அப்புறப்படுத்தியதே காரணம்.. ஆனால் நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத நபர்களை அவர்கள் களத்தில் இறக்கக் கூடும்..

அவர்கள் ஒரே நேரத்தில் ஹிந்தியத்தையும் சாடுவார்கள்; திராவிடத்தையும் சாடுவார்கள்.. அதாவது நாணயத்தின் இரண்டு பக்கத்தையும் திராவிடம் ஹிந்தியத்துக்கு ஒதுக்கிவிட்டு தமிழ்த்தேசியத்தை இரட்டடிப்பு செய்வதற்கான உத்தியே இது.. 

சிலர் உலகத்தாயம் கூட பேசுவார்கள்; ஆனால் மறந்தும் தமிழர்களை ஒருங்கிணைப்பது குறித்து இவர்கள் பேச்சோ செயல்பாடோ இருக்காது.. தமிழரிடையேயான முரண்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊதி பெரிதாக்க இவர்கள் தவற மாட்டார்கள்..

இது போன்ற டெஸ்ட் ட்யூப் தலைமைகளை கண்டறிய வழிமுறை உண்டு.. பிராந்திய ரீதியாக பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை பிரிந்தே கையாளுவார்கள்.. தமது இன, குடி அடையாளத்தை ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.. காட்டாறு வெள்ளத்தில் தன்னை மீறி பூர்வக்குடி தமிழர் ஒருவர் தலையெடுக்க வாய்ப்பளிக்கவே மாட்டார்கள்..

ஊழல் மறுபெயர் பாஜக...



இந்தியாவில் வரலாறு காணாத ஊழல்கள் செய்துள்ள பாஜக...

விவசாயம் பற்றிய தகவல்...



20 வகையான விதைகள் ...

🍁 4 தானியங்கள்:

சோளம்
கம்பு
திணை
சாமை, கேழ்வரகு

🍁 4 பருப்பு:

பாசி பயிர்
உளுந்து
தட்ட பயிர்
கொள்ளு
துவரை, அவரை, மொச்சை

🍁 4 எண்ணெய் வித்து:

ஆமணக்கு
நில கடலை
எள்ளு
சூரிய காந்தி

🍁 4 வாசனை பொருட்கள்:

கடுகு
வெந்தயம்
மல்லி
சோம்பு

🍁 4 உர செடி:

பச்ச பூண்டு
அகத்தி
செனப்பு
நரி பயிர்
பனி பயிர்

இந்த 20 வகையான விதைகளை ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வீதம் கலந்து அவைகளில் பொடி வகைகளை மண் மற்றும் குப்பைகளுடன் சேர்த்து கொள்ளவும். நடுத்தர விதைகளை தனியாகவும், பெரிய விதைகளை தனியாகவும் பிரித்து கொண்டு 3 சுற்றுகளாக விதைத்தால் ஓவ்வொன்றும் முளைத்து வளரும். பாதி செடிகள் 60 நாட்களில் பூ வைக்கும். அந்த தருணத்தில் இச்செடிளை மடித்து திரும்ப அப்படியே மண்ணுக்கு உரம் ஆக்க உழுதல் வேண்டும். அவ்வாறு செய்த செடிகளை 10 நாட்கள் அப்படியே விட்டால் அவை மக்கி அந்நிலத்தை விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாற்றுகிறது.

 🍁 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்..

8 வழிச் சாலையை தடைச்செய்...


உண்மையை ஆராய்ந்து தேடு...



அதுவே உன்னை சந்தோஷமாக வாழ வைக்கும்...

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை மறுபடியும் இயங்கத் தொடங்கிவிட்டது…



பிரபாகரன் இறப்பா..?
பொட்டு அம்மான் எங்கே..?

புலனாய்வு மட்டத்தில் கசியும் தகவல்...

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரையும் தமிழ் அமைப்புகள் தேட ஆரம்பித்து விட்டன...

இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லாம சமீபத்தில் புலம்பியிருந்தது நினைவிருக்கலாம். அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ.

சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையை இங்கே தருகிறோம்.

சமீபத்தில் நாம் வைகோவைச் சந்தித்த போது அவர் கூறிய சில தகவல்களும், இந்த கட்டுரையில் உள்ள சில செய்திகளும் ஒத்துப்போவதை உணர முடிந்தது. வைகோவிடம் நாம் பேசியது பற்றி தனியாகத் தருகிறோம். இனி ஜூவி கட்டுரை…

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!” – இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல… இண்டர்போல் போலீஸ்!

 விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள்.

இதற்கிடையில்,

”பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை… தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்… கைது வாரன்ட்: சென்னை, இந்தியா…” என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட… ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.

இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ”கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடி யாமல் போய்விட்டது.

பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை!” என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம்.

”ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு ‘குருவி’ என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது.

இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார்.

அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது. அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரது பெயர் ‘குருவி’! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு ‘குருவி’ என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை என்பதை இண்டர்போல் போலிஸ் ஏற்கெனவே புரிந்து கொண்டு விட்டது.

இதனால் தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது. இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!” எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

”புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். ஆனால்… அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது! புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெயரில் ஒழிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள்.

போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன.

சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது.

அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது. பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்து விட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம்.

புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான்.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், ‘சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!’ என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும்” என்றார்கள்.

இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்… அதில், ”நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகி விட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்” என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

”போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா?

பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்குவந்து போவார்” என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா.?

 என்று இவர்களிடம் கேட்டால்…

எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்…

இயக்கத்துக்கு புதிய தலைமை வர வேண்டிய அவசியமில்லை...

என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்...

- கதிர் ஈழம்