08/11/2018

பாஜக மோடியால் பல சாமானியன் இறந்த தினம்...


1)15 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு.

2)15 கோடி தின தொழிலாளிகள் சம்பள பிரச்சனை, வேலையில்லாமையால் 2 மாதம் அவதிப்பட்டது.

3)1.5% ஜிடிபி இழப்பு அதாவது கிட்டத்தட்ட 2.5 லட்சம் கோடி இழப்பு.

4)100 அப்பாவி பொது மக்கள் உயிரிழப்பு.

5) கருப்பு பணம் ஒழிப்பா ? : 99.3% சதவீத பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பியது. இத்தனை காலம் பதுக்கிவைக்கப்பட்ட பணம் மீண்டும் வெள்ளையாக்கபட ஒரு வாய்ப்பாக அமைந்தது.

6) Digital India என்ற சப்பைக்கட்டு , முன் எப்போதும் இல்லாத அளவு பண சுழற்சி அதிகரித்துள்ளது. 18.5 லட்சம் கோடியாக சுழற்சியில் உள்ள பணம் அதிகரிப்பு . இது கிட்டத்தட்ட டீமானிடேஷன் முன்னை 37% அதிகம். அக்டோபர் 2016ல் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்ட பண அளவு 2.54 லட்சம் கோடி, ஆகஸ்ட் 2018 ல் அது 2.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபர்  தீபாவளி மாதம் என்பதால் அக்டோபர் 2018 அளவு இதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7) கள்ளப்பணம் என்ற கண் துடைப்பு. டிமானிடேஷனுக்கு முந்தைய மூன்று வருட கள்ளபணம் கண்டுபிடிப்பு வெறும் 63 கோடி. மக்களிடமிருந்து மொத்தமாக கொடுக்கப்பட்ட பணத்திலும் பெரிய அளவில் கள்ளப்பணம் சுழற்சியில் இருப்பதாக தெரியவில்லை. டிமானிடேஷன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கள்ளப்பணம் 11.23 கோடி மட்டுமே ! இதை விட பெரிய கொடுமை சிப் எல்லாம் இருப்பதாக பக்தாள் அளந்த புதிய 2000 தாள்களை போன்ற கள்ளப்பணம் உருவாக துவங்கிவிட்டதாக ஆர்பிஐ சொல்லியுள்ளது.

8) டேரக்ட் டேக்ஸ் - நேரடி வருமான வரி - இது மற்றொரு பொய் " NIPFP's Rathin Roy, a member of the PM's Economic Advisory Council, has put it, "the growth and buoyancy of direct tax revenue in the 2014-17 period is lower than in any sub-period this millennium."" அதாவது ஐடி ரிட்ரன் செய்தோர் எண்ணிக்கை கூடியிருந்தாலும் அது 2014-17 வருடங்களுக்கு முந்தைய பத்து வருட நேரடி வருமான வரி சதவீத வளர்ச்சி அளவை விட தற்போதைய வளர்ச்சி விகிதம் குறைவு தான்.

9) பொது மக்களின் வங்கிகளின் மீதான நம்பிக்கை இழப்பு - தன்னுடைய சொந்த பணம் வங்கியில் இருக்கும் தன்னால் அதை எப்போது வேண்டுமானாலும் உபயோகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டது. இன்று முன் எப்போதும் இல்லாத அளவு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு அளவிலாவது பணமாக அவசர தேவை என்று கையில் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியா முழுதும் இவ்வாறு ஒவ்வொரு கையில் பணம் வைக்க வங்கிக்கான பணம் முன் எப்போதும் இல்லாத அளவு குறைந்திருக்கிறது.

10) அருண் ஜெட்லி சொன்னது இது : டிமானிடேஷனால் மக்கள் பணமாக கையில் வைத்திருக்காமல் சேமிப்பாக அதிகரிப்பார்கள் ! நடந்தது என்ன ? ஆர்பிஐ வெப்சைட்டில் உள்ள "சேவிங்ஸ் பை அவுஸ்வோல்ட்" சராசரி 7.1% இது முந்தைய ஆண்டுகளை விட 50% குறைவு.

டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன் எனப்படும் இணைய பணபரிமாற்ற வர்த்தகம் அதிகரித்திருந்தாலும் இது பெரும்பாலும் நடுத்தர, உயர் வகுப்பு மக்களிடமிருந்தே வந்துள்ளது அவர்கள் புது பரிமாற்ற முறைகளை தொடர்ந்து வரவேற்பவர்களே. 80% மக்கள் தொகையின் ஒவ்வொரு பரிமாற்றமும் இன்றும் பணமாக தான் இருக்கிறது. அதை மாற்ற டிமானிடேஷன் வழியல்ல எளிதான, என்றும் பயன் தரக்கூடிய, கட்டணமற்ற பண பரிமாற்ற வழியே ஆகும். அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளதா ??? இல்லை ! நாட்டின் மிக பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ மட்டும் 42 லட்சம் வங்கி கணக்குகளை போதுமான பேலன்ஸ் இல்லை என்ற ஒற்றை காரணத்திற்காக ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை மூடியுள்ளது. பேலன்ஸ் வைத்து வங்கியின் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது எத்தனை பேரால் முடியும் ? அன்றாட வரவும் செலவும் சரியாக இருப்பது எத்தனை இடத்தில் தெரியுமா ? அது மட்டுமல்ல எவ்வளவு பணம் எடுக்கலாம், எத்தனை முறை இலவசமாக எடுக்கலாம் என்றெல்லாம் கணக்குகள் இருக்கையில் எல்லோருக்கும்/ எல்லா தருணத்திற்கும் வங்கி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

" Economics is the science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses "

பொருளாதார மேலாண்மை பற்றி புரிதலுக்கு இதை விட சிறந்த பதில் இருக்க முடியாது.

டிமானிடேஷன் என்ற பெயரில் நடந்த மாபெரும் தவறு டிஜிட்டல் இந்தியாவிற்கான விடையல்ல, நேரடி வருமான அதிகரிப்பிற்கான வழியல்ல, கள்ளப்பணம் கண்டெடுக்க கொண்டு வரப்பட்ட திட்டமல்ல,

இதைப்பற்றிய சிறு புரிதல் இருந்தால் கூட சங்கிகள் 3000 கோடி , 4000 கோடி, 2000 கோடி விரயத்தில் அமைக்கப்படும் ராமர் (பிஜேபி உத்திர பிரதேசம்ங) , சிவாஜி (பிஜேபி மகாராஷ்டரா ) , பட்டேல் (பிஜேபி குஜராத்)  சிலைகளுக்கு காரணங்கள் பேச மாட்டார்கள்.

இவர்களுக்கு பொருளாதாரமும் புரிவதில்லை, சமூக முன்னேற்றத்திலும் அக்கறையில்லை.

ஒரு மாபெரும் தோல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களை அவதிக்குள்ளாக்கி அதை ஒப்புக்கொள்ளும் தைரியம் கூட இல்லாத அரசு இது. இந்த திட்டத்தின் மாஸ்டர் மைன்ட் குருமூர்த்தி இன்று அரசால் ஆர்பிஐயில் டேரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அரசின் அடுத்த அழிவு திட்டமாக ஆர்பிஐயை தன் சொல்லுக்கு கட்டுப்படுத்த முற்படுவதும், 3.6 லட்சம் கோடி ரூபாயை ஆர்பிஐ இருப்பியில் இருந்து அரசிற்கு மாற்றவும் அழுத்தம் தரப்படுகிறது. ஒரே நல்ல விடயம்  சென்ற முறை போல் இல்லாமல் மொத்த ஆர்பிஐயும் அரசின் முட்டாள்தனத்திற்கு அடி பணியாமல் எதிர்த்து நிற்பதே.

இன்று வந்த செய்தி : வேலையில்லா திண்டாட்டம் இரண்டு வருட அதிக அளவாக 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. வேலைதேடும் மக்கள் தொகை 3 கோடியாக அதிகரித்துள்ளது. வேலையில் உள்ள மக்கள் தொகை 40.7 கோடியில் இருந்து 39.7 கோடியாக குறைந்துள்ளது அதாவது வேலைவாய்ப்பு பெருகுவதற்கு பதிலாக 1 கோடி மக்கள் வேலை இழந்துள்ளார்கள்...

பாமக அன்புமணி ராமதாஸை காப்பி அடித்த நடிகர் விஜய்...


பாஜக மோடி மஸ்தான்கள்...


அரசிற்கும் ஆர்பிஐக்குமான பிரச்சனை மேலும் வலுத்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஆர்பிஐயின் கையிருப்பு கிட்டத்தட்ட 9.6 லட்சம் கோடி.  எதிர்பார்க்காத தேவை நிதி, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி கையிருப்பின் தற்போதைய மதிப்பு போன்ற அடிப்படையில் ஆர்பிஐயின் தற்போதைய கையிருப்பு இது.

ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்திடம் தங்கள் வருவாயில் இருந்து டிவிடன்ட் தருவது உண்டு. சென்ற வருடம் 50000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கு ஆர்பிஐ தந்தது.

தற்போதைய பிரச்சனை என்ன தெரியுமா ? கையிருப்பில் உள்ள 9.6 லட்சம் கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கான 3.6 லட்சம் கோடி ரூபாயை ஆர்பிஐ தன்னிடம் தர வேண்டும் என்று மோடி அரசாங்கம் வற்புறுத்துவதே.

ஆர்பிஐ இது முடியாது என்று சொல்கிறது. காரணம் ஆர்பிஐயின் மூலம் கிடைக்கும் டிவிடன்ட் மற்றும் இதர அரசாங்க வருவாயின் மூலமே நீங்கள் உங்கள் செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்படி அல்லாது இது போன்ற ரீவேல்யூஷன் நிதியை நீங்கள் வாங்குவது நிதி பராமரிப்பில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்தும் மேலும் அரசாங்க நிதி மேலாண்மை மீதான கேள்வியை எழுப்பும் என்று சொல்கிறது. அது போன்றே அர்ஜென்டினாவில் மத்திய வங்கி அரசாங்கத்திடம் தர மிக பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது அது போல் இந்தியாவில் நடக்க கூடாது என்று சொல்கிறது.

ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை என பல நிலைகளில் கிடைத்த வருவாய் மூலமாக மத்திய அரசை நடத்த தெரியாமல், பண ஏய்ப்பு செய்துவிட்டு நாடு விட்ட பலர் ஓட அமைதி காத்துவிட்டு நமது ஆர்பிஐ நிதி இருப்பிலும் கைவைக்க பார்க்கிறது மோடி அரசு.

அதன் தொடர்ச்சியே தற்போதைய மொத்த ஆர்பிஐ குழுவையும் பதவி விலக அழுத்தம் தருவது....

https://indianexpress.com/article/india/govt-wants-rs-3-6-lakh-crore-from-rbi-a-third-of-its-reserves-central-bank-says-no-5435504/

நகரமயமாக்கல் மோகத்துல ஊறிப்போன மக்கள் எதுக்கும் தடுப்பூசி கடை வைங்க நல்லா அடுத்தவன் குருதியைக் குடிச்சு வாழலாம்...


திமுக - காங்கிரஸ் - விசிக துரோகிகளை நினைவில் கொள் எம் தமிழினமே...


சர்கார் பட பேனரை கிழித்த வாலிபர் மர்ம மரணம்.. ரசிகர்களால் அடித்து கொலையா போலீசார் விசாரணை...


வேலூர் காவேரிபாக்கம் அருகே உள்ள ஈளச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னையில் கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான சர்கார் பட பேனர்கள் ஊரெங்கும் வைக்கப்பட்டிருந்தது.

அதுபோல மணிகண்டன் வீட்டின் முன்பும் வைக்கப்பட்டு இருந்தது. இதனை மணிகண்டன் கிழித்து எறிந்து விட்டதாக கூறப்படுகிறது.

 இது தொடர்பாக மணிகண்டனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் அடிதடி சண்டை நடந்துள்ளது. விஜய்  ரசிகர்கள் மணிகண்டனை தாக்கி  உள்ளனர்.

இதனால் மணிகண்டனை அவனது உறவினர்கள் வீட்டின் ஒரு அறைக்குள் அடைத்து வைத்தனர். சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தபோது மணிகண்டன் தூக்கி பிணமாக தொங்கினார்.

அவரே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மற்றவர்கள் அடித்து தூக்கில் தொங்க விட்டார்களா என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

சின்ன பசங்களிடம் வீரத்தை காட்டும் அளவுக்கு தரந்தாழ்ந்து போனது சட்டமும், காவல்துறையும்...


மணல் கொள்ளையில் ஈடுபட்ட வட்டாட்சியரை உங்கள் சட்டத்தால் தொட முடிந்ததா...

திராவிடன் யார்.?


1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை,  கன்னட ஈ.வெ.ரா திராவிடர் கழகம் என்று மாற்ற முயன்ற போது அதன் பெயரை "தமிழர் கழகம்" என்று மாற்றச்சொல்லி கி.ஆ.பெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முயன்றனர்.

ஆனால் ஈ.வ.ரா விடாப்படியாக மறுத்து
திராவிடர் கழகம் என்றே பெயர் மாற்றினார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தமிழர் கழகம் என்று சொன்னால் இங்கே உள்ள பார்ப்பனரும்..

நாங்களும் இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழ்தான் பேசி  வாழ்ந்து வருகிறோம்..

அதனால் நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள்.

(இதற்கு பெயர் என்ன வெறி)

ஆனால் திராவிடன் என்று சொன்னால் எந்த பார்ப்பனரும் நான் திராவிடன் என்று உள்ளே வரமாட்டார் என்று காரணம் சொன்னார்.

( அதாவது இங்கேயே பிறந்த வளர்ந்த தமிழ் பேசும் பார்ப்பான் உள்ளே வரக்கூடாது..  ஆனால் இங்கே பிறந்து வளர்ந்து பிறமொழி பேசும் தெலுங்கரோ , கன்னடரோ, மலையாளியோ ஆண்டால் பரவாயில்லை.. அவர்களிடம் தமிழன் அடிமையானாலும் பரவாயில்லை )

ஆனால் உண்மையில் திராவிடர் என்ற சொல் பார்ப்பனர் அல்லாதவரை குறிக்கும் சொல் அல்ல.

வட இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் ஐந்து நிலப்பகுதியில்  வாழும் பார்ப்பனர்களை  குறிக்கவே திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர்.

தென்னிந்தியாவில் வாழும் சில பார்ப்பனர்களின் குடும்ப பெயரிலேயே திராவிடன் என்று பெயர் வழங்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் விடம்  உங்கள் பெயரின் பின்னால் திராவிட் என்று வருகிறதே என்று கேட்டதற்கு நாங்கள். கும்பகோணத்தை சேர்ந்த பிரமாணர் குடும்பம் என்று பதிலளித்தார்.

சனாதான தர்மத்தை மறுபரிபாலனம் செய்த ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லகரி என்ற நூலில் திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிடுகிறார்.

ஆதிசங்கரர் கேரளாவில் பிறந்த பிராமணர்.

திராவிடம் என்ற பெயரை பயன்படுத்திய கால்டுவெல்லும் தான் திராவிடம் என்ற சொல்லை சம்ஸருத நூலான ஆரியர்களின் மனுஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.


ஆரியத்தையையும., மனுதர்மத்தையும் கடுமையாக எதிர்க்கும் அவையெல்லாம் பொய் புரட்டு கட்டுக்கதைகள் என்று சொல்லும் திராவிட அறிவு ஜீவிகள் தங்களது இயக்கத்திற்கு பெயரை அதே மனுஸ்மிருதியிருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரே ஒரு சங்கத்தமிழ் இலக்கியத்தில் கூட திராவிடம் என்ற சொல் பயன்படுத்தியதில்லை.

மனுஸ்மிருதி நம்மையெல்லாம் திராவிடன் என்று இழிவாக சொல்கிறது. அதையே நமது பெருமைக்குரிய அடையாளமாக மாற்றவே நாம் திராவிடம், திராவிடன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார் சுப.வீ..

அதே மனுஸ்மிருதி தான் நம்மையெல்லாம் சூத்திரன் என்கிறது. அதை தூக்கி போடுங்கள் என்று சொல்வதும் இதே திராவிட அறிவு ஜீவிகள் தான்.

இரண்டும்  ஒன்றுக்கொன்று முரண்.

மனுஸ்மிருதியில் அவன் கொடுத்த சூத்திரப்பட்டம் எவ்வுளவு இழிவானதோ..

அதை விட இழிவானது அவன் சொன்ன திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்தி இன்னும் தமிழர்கள் தங்களை தாங்களே திராவிடன் என்று சொல்லிக் கொள்வது..

ஆக திராவிடர் என்றால் அதில் பார்ப்பானர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி..

தமிழர்களுடைய உண்மையான இனப்பெயரை அழித்து நீ திராவிடன் என்று ஒரு பொய்யான மாயையை திணித்து தமிழர்களின் தொன் பெருமையை அழித்த ஒரு வரலாற்று மோசடியை செய்தவர் ஈ.வெ.ராமசாமி...

ஒருத்தன மரண பயத்துலயே அலைய விடுறதுதான் கொல்லுறதை விட பெரிய தண்டனை... புல்லட் புரூப் ஆடை...


நாஸ்கா கோடுகள் - Nazca Lines...


அறிவியலின் அதீத வளர்ச்சியினால் மனிதன் பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான். செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என கண்டறிய முயற்சி செய்கிறான். அப்படிப் பட்ட அறிவியல் வளர்ச்சியால் கூட ஒரு சில மர்மங்களுக்கு விடை காண இயலவில்லை.  அதில் ஒன்று தான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும் நாஸ்கா பாலைவனத்திலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவெளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான கோடுகள் அவை. சாதாரணமாக நிலத்தின் மீது நின்று பார்த்தால் இவைகள் நீண்ட ஒற்றையடி பாதைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் தெரியும். ஆனால் விமானத்தில் இருந்து பார்த்தால் இந்த கோடுகள் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் போலவும், குரங்கு, நாய், மனிதன், பறவை போன்ற உருவங்கள் போல காணப்படும்.

1920 ல் இந்த வழியாக விமானத்தில் பறந்து சென்ற சுற்றுலா பயணிகளால் எதேச்சையாக கவனிக்கப்பட்டு கண்டறியப்பட்டவை இவை . அதுவரை இவைகள் சிறிய சாலைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் பார்க்கப்பட்டு வந்தன.

இவை கி. மு. 600 முதல் கி. பி. 200 க்குள் வரையப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையானது என வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால் அன்றைய தொழில் நுட்பத்தில் இப்படிப்பட்ட சீரான நீண்ட, முறையான கோடுகளும் சித்திரங்களும் எவ்வாறு வரைய முடிந்தது என்பதுதான். அதனால் இந்த கோடுகளை பற்றி நிறைய கருத்துக்கள் நிலவுகின்றன.

இங்குள்ள நிலத்தில் கருப்பு நிற கற்கள் உள்ளன. 1998 ல் வந்த ஒரு வெள்ளத்தில் இந்த பகுதியின் தார் சாலைகள் பாதிக்கப்பட்டதாம். இருந்தும் ஆச்சர்யமாக இந்த கோடுகள் சிதையவில்லை. இதில் விமானம் ஓடுதளம் போன்ற ஒரு பட்டை 2 கி. மீ. நீளம் கொண்டது. இந்த பட்டை மிக சீராக நேரே செல்கிறது. இவ்வளவு தூரத்திற்கு இதை எப்படிதான் நிலத்தில் வரைந்தார்கள் என்று அதிசயிக்க வைக்கிறது.

இதைவிட ஆச்சர்யதக்க வகையில் மலைகளின் மீது பல கைகளை கொண்ட ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர் ஜானி இஸ்லா கருத்துப்படி இந்த கோடுகள் கி. மு. 500 இல் பரகாஸ்  (Paracas) சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு கி. மு. 50 இல் நாஸ்க்கா சமூகத்தினரால் மேம்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. டொர்பியோ மெஜ்ஜியா என்பவர்தான் இந்த கோடுகளைப் பற்றி 1927 இல் முதலில் ஆராய்ந்தார். அவர் இந்த கோடுகளை இன்கா சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் என்றார்.

அறிவியலாளர் மைக்கல் கேயே கூற்றுப்படி அன்றைய சமூகத்தினரால் இவைகள் தங்கள் மூதாதையருடன் தொடர்புபடுத்தும் பாதைகள் எனவும், தங்கள் விளை நிலத்திற்கு நீர் கொடுக்கும் பாதைகள் எனவும் நம்பப்பட்டதாம். மாரியா ரிச்சே எனும் கணிதவியலாளர் இக் கோடுகள் வானவியல் நாட்காட்டி என்கிறார். இந்த பட்டைகள் முக்கிய​ நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இடத்தை குறிக்கின்றது என்கிறார். ஒரு சிலர் இந்த கோடுகள் வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்பட்டவை என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவை வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள வரையப் பட்டதாக கூறுகின்றனர். இருப்பினும் இவை உருவாக்கப் பட்டதற்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை...

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...


ஜலதோஷம், மூக்கடைப்பா....? இதோ பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்...


உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோஷம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது.

இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லையா... கவலையே வேண்டாம். மிக மிக உடனடியாக ஜலதோஷத்தை குணப்படுத்தும் மருந்துகள் இதோ, உங்களுக்காக...

முதலில் ஜலதோஷம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது,

தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.

ஜலதோஷம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோஷம் வரப்போகிறது என்பதை கண்டு பிடிக்கலாம்.

இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு...

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாகத் தெரியப்படுத்துகிறோம்.

மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பையும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் மருந்து கிடைக்கும்.

மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்..

பூசிய பிறகு நன்றாக உறக்கம் வரும்..  உறங்கி எழுந்த பிறகு பாருங்கள் உங்களுக்கு ஜலதோஷம் சளி பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும்..

இந்த மருந்தை இரவு படுக்கப் போகும் முன்னும்  பூசிவிட்டு படுக்கலாம், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்க விளைவுகளும் இல்லை...

அந்த கருத்து கணிப்பு வெளியிட்ட பாஜக சொம்புகளை யாராவது பார்த்திங்களா.?


மூட்டு வலி போக்கும் கல்தாமரை...


முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி.

அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. பிறந்தது முதல் அங்குமிங்கும் பலவாறு சுழன்று அசைந்துக் கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு போதிய பயிற்சி தராவிட்டாலும் பரவாயில்லை... உடல் எடை கூடாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புகளும் ஒவ்வொரு விதமாக அசைந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அசையும் எலும்புகளானது இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் மேலும், கீழும், முன்னும், பின்னும், அங்குமிங்கும் என சதா அசைந்து கொண்டும், சுற்றிக் கொண்டுமிருக்கும் நம்முடைய கழுத்து, தோள், இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளை வாழ்நாள் முழுவதும் சீராக இயங்க வைக்கின்றன. ஆனால் உடல் எடை மற்றும் வயது அதிகரிக்கும் பொழுது எலும்பு, எலும்பை பிடித்திருக்கும் தசைநார் மற்றும் பந்தங்கள் பலகீனமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி உயவுத்தன்மையை இழந்து, தங்கள் செயல்பாட்டையும் இழக்கின்றன. இந்நிலையில் எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிடில் எலும்பு சந்திகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், இறுக்கம், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன.

போதிய நடைப்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் பருமன், கொழுப்புச்சத்து, ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுக்கொண்டிருத்தல், வைட்டமின்கள் நிறைந்த கீரை, காய்கறிகளை தவிர்த்தல், இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு, மூட்டு இணைப்புகளில் கிருமித்தொற்று, பிற மருந்துகளின் ஒவ்வாமை, முதுமை, பரம்பரை போன்ற பல காரணங்களால் ஆர்த்ரைட்டிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் முதிய வயதினரே கீல்வாயுவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைவுகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. சமவெளிப்பகுதிகளில் வசிப்பவர்களை விட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூட்டுவலிக்கு அதிகம் ஆளாகின்றனர். மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.

Smilax zeylanica என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும். தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம். இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றடமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களில் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்...

திருட்டு திராவிடத்தை மக்கள் விரட்டி அடிக்க தொடங்கி விட்டார்கள்...


யார் மடையர்கள்?...


ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் மடை...

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. .

வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வு செய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகி விடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்து விடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்து விடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச் செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச் சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.

வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?

இனி யாரையாவது மடையா என்று திட்டம் முன் யோசிக்க வேண்டியது தான்.....

பாஜக மோடியை செருப்பால் அடிப்பதைப் போல் விமர்சித்த பிரிட்டன் எம்.பி...


நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்து விடும்...

வாக்கு இயந்திரம் சரியானது என்று நம்ப வைக்க... பாஜக கர்நாடகத்தில் தோல்வி...


தீபாவளி நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 330 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்...


கடந்த ஆண்டு ரூ 260 கோடிக்கு மது விற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ 70 கோடி அதிகம்...

அனைத்தும் ஆக்கிரமிப்பு...


அதிகாரிகளின் அலச்சியத்தால் நடந்த விபரீதம். காசு வாங்கிக் கொண்டு பட்டா கொடுத்தால் இப்படித் தான் ஆகும்...

நீதித்துறை என்பது சாமானிய மக்களை ஏமாற்றத் தான்...


இரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து...


தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.

அறிகுறிகள்...

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 லிட்டர்

கிராம்பு - 60 கிராம்

பட்டை - 4 துண்டுகள்

தயாரிக்கும் முறை:

நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

எப்போது பருக வேண்டும்?

இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்...

ஸ்டெர்லைட்க்கு மக்கள் கொடுக்கும் செருப்படி...


பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்

பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்களின் திருமணத்தை எதிர்த்து திராவிட நாடு பத்திரிக்கையில் [03.07.1949] தெலுங்கர் அண்ணாத்துரை வரைந்த கட்டுரை இது...


சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.

பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும். திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம். அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.
பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.

பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார். அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார். தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது. ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை. இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்..

ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது.

இதோ பாரய்யா, சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம் என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு! என்று பரிகாசம் பேசுகிறார்களே.

ஊருக்குத்தானய்யா உபதேசம்! என்று இடித்துரைக்கிறார்களே.

எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை. என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது..

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப்படுகிறோம் தனிமையிலே! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே! இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்! கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது! புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது. அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!! இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும். நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்! பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.
சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி. என். அண்ணாதுரை
திராவிட நாடு : 3-7-49...

சர்கார் படத்திற்கு ஆப்பு வைத்த தமிழ் ராக்கர்ஸ்...


எல்லாமே அதிர்வு தான்...


நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.

இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.

கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது.

காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.

மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது.

வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.

மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.

அணுக்களின் விலக்குவிசைதான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு  வகையான அதிர்வுகள்தான்.

நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின்  கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும் போது உணர்வுகள் சுகமாகவும்.

அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.

இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்று விக்கிறது.

வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி  புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.

பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.

ஆக நம் உணர்வுகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி,

எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.

நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்ற பிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதைவிடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.

ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்து விட்டோம் என்று நம்பி அடைந்த பிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.

அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...

காந்தியும் பகத்சிங்கும் - மறைக்கப்பட்ட உண்மைகள்...


காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்...

ஆனால்...

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக் கொள்ளவில்லை.. இதையே காந்தியும் விரும்பினார்.

சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் .

அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர்.அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன்  சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இந்தியம் அப்போது இழந்தது...

காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும்  எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால்  காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள்.

இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொண்டார் .

அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்து விடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.

ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரை கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள்..

அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு.

ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட  வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக  தூக்கிலிட்டனர்.

பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும்
ஒரு மடங்கு வேகம் காட்டினர்..

லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார் படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை..

அதனால் காவலர்கள் அழைத்த போது, ''நான் இங்கே ஒரு போராளியுடன்  உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார்.

வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம்  தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை.

ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததால், நான் ஒரு  போராளியுடன் உரையாடிக் கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ''இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார்.

இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்...

வறுமையில் உலகில் 33சதவீத மக்கள் இந்தியர்கள்...


வறுமை என்பது உணவு, நீர், உறையுள், கழிவுநீக்க ஏற்பாடுகள், நலம், கல்வி, தகவல் போன்ற அடிப்படைத் தேவைகளை நிலையாக அணுக முடியாத கையறுநிலையைக் குறிக்கிறது. ஒருவர் நாளுக்கு அ$ 1.25 கீழ் வாழ்ந்தால் அது தீவிர வறுமை என்று உலக வங்கி வரையறை செய்கிறது.

தற்போதைய நவீன யுகத்தில் வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால் வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச் சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது. உலக வங்கி குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத திறனற்ற நிலை தான் வறுமை என்கிறது. இந்தியாவில் வறுமை என்பது இன்று நேற்று உருவானதல்ல. சங்க காலந்தொட்டு இவ்வறுமை நம் சமூகத்தைத் தொடர்ந்து துரத்தி வருகிறது. தமிழ்ப் புலவர்கள் பலர் வானம்பாடிகளாகத் திகழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வளமானதாக இல்லை. வறுமையைத் தொலைக்க வள்ளல்களைத் தேடி அலைந்த புலவர்கள் ஏராளம். அறம் பாடிய அவ்வையார் கூட கொடிது கொடிது வறுமை கொடிது என உரக்கச் சொன்னார்.

உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.150-க்கும் கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.75-க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே தான் உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும் அதில் பாதிப் பேர் தெற்காசியாவிலும் கால்வாசிப் பேர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தாலும் இந்தியாவின் தலையெழுத்தே வறுமைதான். உலக வங்கி அறிக்கைப் படி இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவின் வறுமைக்கு சாதியமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் மற்றும் லஞ்சம், சுயநல அரசியல் என எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் 80 சதவீத ஏழைகள் கிராமங்களில் வாழும் நம் நாட்டில் வறுமை உயர்வதற்கான சில அடிப்படைக் காரணங்களான பாரம்பரியத் தொழிலான விவசாயம் அழியும் சூழ்நிலை. புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளைக் கணிசமான அளவில் உருவாக்க இயலாமை. வளர்ச்சியின் பயன்கள் உண்மைப் பயனாளிகளைச் சென்றடையாமை. அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான உழைப்பில் பற்றாக்குறை. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு, வருமான ஏற்றத்தாழ்வுகள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்கும் வறுமை நிலை வேறு. பேராசையால் உண்டாகும் வறுமை என்பது வேறு. இந்தியா இந்த இரண்டிலும் சிக்கித் தவிக்கிறது. ஆகவே தான் ஆப்பிரிக்காவில் உள்ள 26 வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சுமார் 42 கோடியே 10 லட்சம் பேர் இம்மாநிலங்களில் வறுமை நிலையில் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது.

இன்று சுமார் ஐந்து பேரில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இது 2010 இல் 1.2 பில்லியன் மக்கள் ஆகும். இந்தியாவில் சுமார் 33% பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். 69% பேர் அ$ 2 கீழேயே வாழ்கின்றார்கள்.

தனிமனிதன் தொடங்கி அரசாங்கம் வரை எல்லாருமே சுயநலத்தால் ஆட்டிப்படைக்கப்படும்போது வறுமை வறுத்தெடுப்பதில் ஆச்சரியமே இல்லை! உதாரணத்திற்கு, வளமான நாடுகளின் அரசாங்கங்கள் உலகத்திலுள்ள வறுமையைப் போக்க அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், தங்களுக்கு வாக்களித்திருப்பவர்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றன. எனவே, பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளில் பயிர்களை விற்க ஏழை நாட்டு விவசாயிகளைத் தடை செய்கின்றன. அப்போதுதான், தங்கள் நாட்டு விவசாயிகளால் வியாபாரம் செய்ய முடியும் என நினைக்கின்றன. அதோடு, தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு ஏராளமாக மானியம் வழங்குகின்றன; இதனால், ஏழை நாட்டு விவசாயிகளுடைய பயிர்களைவிட இவர்களுடைய பயிர்கள் சீக்கிரமாக விற்பனை ஆகின்றன.

இன்றைய சூழ்நிலையில் வறியவர்களின் மூளைச் செயற்பாடுகளை பெரும்பாலும் பணக்கஷ்டங்கள் பற்றிய கவலைகளும் அழுத்தங்களும் ஆக்கிரமித்து விடுகின்றன. புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு மூளைச் செயற்பாடுகளில் கொஞ்சம்தான் வாய்ப்பு கிடைக்கிறது.

அவர்கள் மீண்டும் மீண்டும் வறுமையை நோக்கி தள்ளப்படுகிறார்கள். ஏழைகளை ஏழைகளாகவே வைத்துக்கொள்ள இந்த உலக கட்டமைப்பு வழிவகுக்கறது.

வறுமைக்குக் காரணம் : சுயநலமே உருவாக இருக்கும் மனிதர்களே. ஆம், மக்களும் சரி அரசாங்கமும் சரி, தங்கள் நலனிலேயே குறியாய் இருக்கிறார்கள். 

வறுமை இல்லா தமிழகம் உருவாகுமானால் அதுவே உண்மையான மக்களாட்சி. எனவே வறுமை ஒழித்து வளம் பெருக்கிட சூளுரைப்போம்.

தமிழர் ஆய்வுக் கூடம்...

ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்...


பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்திற்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன’ என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.

அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.

இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.

துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் “என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?” என்று கேட்கிறான். நம் ஆள் “இல்லையே நன்றாகத் தானே இருக்கிறேன்” என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் “என்ன உடம்பு சரியில்லையா?” என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.

நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். ”நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது” என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். “நான் பலவீனமானவன்”, ”என்னால் இது முடியாது”, “எனக்கு ஆரோக்கியம் சரியில்லை” என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப் பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.

என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். “எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்”. அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.

இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். “ஏன்?” என்று கேட்ட போது ”அது தவறு” என்ற பதில் வந்தது.

நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.

இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.

ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.

பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ”இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். ”என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” அவர்கள் கூறினார்கள். “ஆமாம் பிரபு” இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். “உங்கள் நம்பிக்கையின் படியே உங்களுக்கு ஆகக் கடவதாக!”. அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)”. (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.

இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்.....

கள்ளக்காதலியால் நடுத்தெருவுக்கு வந்த ஆட்டோ டிரைவர்...


குலசேகரம் மணலிவிளையை சேர்ந்தவர் ரெஜி (41). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷைனி (31). தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். திக்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண், ரெஜியின் ஆட்டோவை அடிக்கடி வாடகைக்கு அழைப்பது வழக்கம். இதனால் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க ரெஜியின் கள்ளக்காதலிக்கு ஒரு போலீஸ்காரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியுடன் ஹோம் கார்ட்டில் சேர்ந்தார் அந்த பெண். அதன் பிறகு ரெஜியிடம் பணம் கறப்பதிலேயே குறியாக இருந்தார். போதாத குறைக்கு மனைவியை அடித்து பிடித்து வாங்கிய பணத்தையும் ஆசை நாயகிக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார். ஒரு கட்டத்தில் மனைவியின் தையல் மிஷினையும் விற்று பணம் கொடுத்தார். அப்போதுதான் திக்குறிச்சியில் கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது ஷைனிக்கு தெரியவந்தது. இதனால் ஷைனி 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார். இதன்பின்னர் நாகர்கோவிலில் வீடு எடுத்து கள்ளக்காதலர்கள் தங்கினர். இதன்பிறகு கள்ளக்காதலியின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாததால் அவர்கள் இடையே பிரச்னை வெடித்து. இந்த நிலையில் ரெஜியின் கள்ளக்காதலிக்கு வேறு பலருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை கைவிட்டார். இதனால் ரெஜி வருமானம் இல்லாமல் அவதிப்பட்டார். வாடகை வாகனங்களை ஒட்டி வந்தார்.

இதன்பிறகு கள்ளக்காதலிக்கு அடிக்கடி போன் செய்தபோது அவர் எடுத்து பேசுவது இல்லையாம்.கடந்த 27ம் தேதி இரவு மீண்டும் வாட்ச்மேன் ஒருவரது போனை வாங்கி பேசியபோது இருவரும் போனில் கடும் வாக்கு வாதம் செய்து இருக்கின்றனர். பின்னர் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் கள்ளக்காதலி தலைமையில் ஆட்டோ, பைக்கில் 5 பேர் சம்பவ இடத்துக்கு சென்று இருக்கின்றனர். அங்கிருந்த ரெஜியை அவர்கள் சரமாரி அடித்து உதைத்ததில் ரெஜியின் 2 கைகளும் முறிந்தன. பலத்த காயம் அடைந்த ரெஜி, குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் ரெஜியின் கள்ளக்காதலி ஹோர் கார்டு பணியில் இருப்பதாலும், போலீஸ்காரரின் தொடர்பு இருப்பதாலும் புகாரை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

வீடு முழுவதும் ஆபாச சிடி..

ரெஜி தனது வீடு முழுவதும் ஆபாச பட சிடியை வாங்கி வைத்துள்ளார். இப்படி நாமும் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருக்க வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி வற்புறுத்துவாள். தற்போது அவரிடம் தொடர்பை விட்டுவிட்டேன். மீண்டும் மனைவி, பிள்ளைகளை தேடி செல்வேன் என்று ரெஜி கூறினார்....

இங்கிலாந்தில் வேற்றுக்கிரகவாசிகள்...


நடன கலைஞர் குடும்பத்துக்கு சத்தம் இல்லாமல் உதவிய அஜித்..! குவியும் பாராட்டு...


நடிகர் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படப்பிடிப்பின் போது நடன கலைஞரான சரவணன்  என்பவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து அவரது உடலை  சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இதனை அடுத்து நடன கலைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன அஜித், தன்னுடைய சார்பில் ரூ 8 லட்சம் நிதி உதவி வழங்கினார்...

தி மிராக்கிள் ஆஃப் தி ஸ்னோ...


இத்தாலியில் உள்ள புளோரன்ஸ், நகரத்தில், சர்ச் ஆஃப் சாண்டா மரியா மாகியோர் என்ற தேவாலயத்தில் "மிராக்கிள் ஆஃப் தி ஸ்னோ" என அழைக்கப்படுகிற, "அதிசய வெண்பனி" என்ற தலைப்பில், 1435 முதல் 1440 வரையான ஓவியம் இது.

பரலோகத்தில் உள்ள தேவதையுடன்
(ஒருவேளை புனித மேரி மேக்டலீனாக இருக்கலாம்) இயேசுவை இணைத்து, அவர்களை சூழ்ந்த வண்ணம் பல பறக்கும் தட்டுகள் உள்ளது போன்று காட்சிபடுத்தப்பட்ட ஓவியம் இது.

ஓவியத்தில் இடைக்கால மக்கள் கூட்டம் கீழே பார்க்கிறார்கள். தலைப்பில் குறிப்பிடப்பட்ட பனியை பிரதிநிதித்துவப்படுத்தும் "இருகுவி வில்லை வடிவ" மேகங்களின் வழக்கமான வடிவங்கள் மக்களின் தலைகளுக்கு மேல் உள்ளன. ஆனால் இந்த மேகங்கள் உண்மையில் பனியை சித்தரிக்கின்றனவா?

உண்மையில், இந்த வடிவங்கள் பல பறக்கும் தட்டுகள் வடிவங்களைப் போலவே ஒத்திருக்கிறது. "இருகுவி வில்லை வடிவ" மேகங்கள் போன்று பல மேகங்கள் ஓரே நேரத்தில் தோன்றுவது சாத்தியமில்லை. உண்மையில் இயேசு மற்றும் வேற்றுலக இனங்களுக்கு இடையே ஒரு இணைப்பு இருப்பதை வெளிப்படுத்தவதாகவே இந்த ஓவியம் உள்ளது.

அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனின் "டா வின்சி கோட்"போன்ற மறுமலர்ச்சிக்கான படைப்பில், இயேசு மற்றும் மேரி மேக்டலீன் வாரிசுகளின் இரத்தப்பழியில், ஒரு இரகசிய குழு இறங்கியதை பற்றி கூறிப்பிட்டு இருந்தார்.

இந்த ஓவியத்தில் உண்மையிலேயே மேரி மெக்டலீன் இருந்தால், இந்த வேற்றுகிரக குழுவிற்கும்,
(Priory of Sion, சிங்கத்தின் வெற்றி)
என அறியப்படும் இரகசிய குழுவிற்கும் இடையேயான தொடர்பை கூட இந்த ஓவியம் மூலமாக சுட்டிக்காட்டி இருக்கலாம்...