08/11/2018

சர்கார் பட பேனரை கிழித்த வாலிபர் மர்ம மரணம்.. ரசிகர்களால் அடித்து கொலையா போலீசார் விசாரணை...


வேலூர் காவேரிபாக்கம் அருகே உள்ள ஈளச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னையில் கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான சர்கார் பட பேனர்கள் ஊரெங்கும் வைக்கப்பட்டிருந்தது.

அதுபோல மணிகண்டன் வீட்டின் முன்பும் வைக்கப்பட்டு இருந்தது. இதனை மணிகண்டன் கிழித்து எறிந்து விட்டதாக கூறப்படுகிறது.

 இது தொடர்பாக மணிகண்டனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் அடிதடி சண்டை நடந்துள்ளது. விஜய்  ரசிகர்கள் மணிகண்டனை தாக்கி  உள்ளனர்.

இதனால் மணிகண்டனை அவனது உறவினர்கள் வீட்டின் ஒரு அறைக்குள் அடைத்து வைத்தனர். சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தபோது மணிகண்டன் தூக்கி பிணமாக தொங்கினார்.

அவரே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மற்றவர்கள் அடித்து தூக்கில் தொங்க விட்டார்களா என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.