08/11/2018

தி மிராக்கிள் ஆஃப் தி ஸ்னோ...


இத்தாலியில் உள்ள புளோரன்ஸ், நகரத்தில், சர்ச் ஆஃப் சாண்டா மரியா மாகியோர் என்ற தேவாலயத்தில் "மிராக்கிள் ஆஃப் தி ஸ்னோ" என அழைக்கப்படுகிற, "அதிசய வெண்பனி" என்ற தலைப்பில், 1435 முதல் 1440 வரையான ஓவியம் இது.

பரலோகத்தில் உள்ள தேவதையுடன்
(ஒருவேளை புனித மேரி மேக்டலீனாக இருக்கலாம்) இயேசுவை இணைத்து, அவர்களை சூழ்ந்த வண்ணம் பல பறக்கும் தட்டுகள் உள்ளது போன்று காட்சிபடுத்தப்பட்ட ஓவியம் இது.

ஓவியத்தில் இடைக்கால மக்கள் கூட்டம் கீழே பார்க்கிறார்கள். தலைப்பில் குறிப்பிடப்பட்ட பனியை பிரதிநிதித்துவப்படுத்தும் "இருகுவி வில்லை வடிவ" மேகங்களின் வழக்கமான வடிவங்கள் மக்களின் தலைகளுக்கு மேல் உள்ளன. ஆனால் இந்த மேகங்கள் உண்மையில் பனியை சித்தரிக்கின்றனவா?

உண்மையில், இந்த வடிவங்கள் பல பறக்கும் தட்டுகள் வடிவங்களைப் போலவே ஒத்திருக்கிறது. "இருகுவி வில்லை வடிவ" மேகங்கள் போன்று பல மேகங்கள் ஓரே நேரத்தில் தோன்றுவது சாத்தியமில்லை. உண்மையில் இயேசு மற்றும் வேற்றுலக இனங்களுக்கு இடையே ஒரு இணைப்பு இருப்பதை வெளிப்படுத்தவதாகவே இந்த ஓவியம் உள்ளது.

அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனின் "டா வின்சி கோட்"போன்ற மறுமலர்ச்சிக்கான படைப்பில், இயேசு மற்றும் மேரி மேக்டலீன் வாரிசுகளின் இரத்தப்பழியில், ஒரு இரகசிய குழு இறங்கியதை பற்றி கூறிப்பிட்டு இருந்தார்.

இந்த ஓவியத்தில் உண்மையிலேயே மேரி மெக்டலீன் இருந்தால், இந்த வேற்றுகிரக குழுவிற்கும்,
(Priory of Sion, சிங்கத்தின் வெற்றி)
என அறியப்படும் இரகசிய குழுவிற்கும் இடையேயான தொடர்பை கூட இந்த ஓவியம் மூலமாக சுட்டிக்காட்டி இருக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.