20/07/2018

பென்னாகரம் மின்சார வாரியத்தில் அதிகமாக லஞ்சம் வாங்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு...


தர்மபுரி மாவட்டம்   பென்னாகரத்தில்  மின்வாரியத்தில்  ciஆக பணிபுரியும்  காசி பூந்தோட்ட மோட்டார்  சர்வீஸ்  வாங்கி தருவதாக  கூறி சத்தியநாத புரம் கிராமத்தில் வசிக்கும்  முருகன் என்பவரிடம்  ரூபாய் 40,000ஆயிரம்  பணத்தை பெற்றுக் கொண்டு   அலுவழகத்திற்கு தெரியாமல்   பூந்தோட்ட மோட்டார்    சர்வீஸ் வழங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அனுமதி இல்லாமல் சர்வீஸ் வழங்கியது  தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த  மோட்டார்  இணைப்பை துண்டித்து உள்ளனர். இதைக்கண்ட முருகன் நான் ci காசிக்கு 40 ஆயிரம் பணம் கொடுத்து சர்வீஸ் வாங்கியதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும்  இதுகுறித்து  பொதுமக்கள்   கூறுகையில் ci காசி என்பவர் பெரும்பாலையில் உள்ள மின்சார வாரியத்தில்  பணிபுரிந்தபோது அதிகமாக லஞ்சம்  வாங்கியதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் இவரை ஏரியூர் மின்சார வாரியத்திற்கு  பணிஇடமாற்றம் செய்யப்பட்டது.

மேலும்  இதே பிரச்சனை  காரணமாக பென்னாகரம்  மின்சார  வாரியத்திற்கு  மாற்றப்பட்டது.அங்கு முருகனை போன்ற  பல்வேறு  பொதுமக்களிடம்  மின்இணைப்பு வழங்குவதற்கு   அதிகமாக லஞ்சம் வாங்குவதாகவும் அதில் பாதி பணத்தை  உயர்அதிகாரிக்கு வழங்குவதாகவும்  தெரிவித்தனர். மேலும்  பாதிக்கப்பட்ட முருகன்  மேல் அதிகாரிகளிடம்  காசி மீது மனு அளித்துள்ளார். பிறகு  முருகனையும்   காசியையும் அழைத்து  சமரச பேச்சுவார்த்தை  உயர் அதிகாரிகள்  நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது விசாரணை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

பாஜக மோடிக்கு 1200 கோடி தேர்தல் நதி...


செய்யாதுரை வீடு, அலுவலகத்தில் தோண்டத்தோண்ட தங்கம்...


செய்யாதுரையின் வீடு அலுவலகங்களில் மூன்றாவது நாளாக ஐ.டி.ரெய்டு தொடர்கிறது.

இதுவரை . 180 கோடி ரொக்கப்பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செயப்பட்டதாக அதிகாரிகள்  கூறிய நிலையில், ரூ.605 கோடி ரொக்கப்பணம் மற்றும் 354 கிலோ தங்கம் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கைப்பற்றிய பணத்தின் மதிப்பை  குறைத்துக் காட்ட முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது...

பாஜக மோடியின் அடுத்த சதி திட்டம்...


நாய்களின் தற்கொலை முனை...


இதை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்துகொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு மேற்கொண்டு தொடருங்கள்.

ஒரு நாய் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடும் சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்துப் போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்துகொள்ளாது என்கிறீர்களா. எதையும் உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்து வரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு. அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு. வாருங்கள்.

ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கும், அதில் அமைந்திருக்கும் மேன்சனுக்கும், சுற்றியிருக்கும் அழகான தோட்டத்துக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1893ல் அந்த எஸ்டேட்டை வாங்கிய முதலாளியான லார்ட் ஓவர்டவுன், அதனை கிழக்கு, மேற்கு என பிரித்து விரிவுபடுத்தினார். இடைப்பட்ட பகுதியில் ஓர் அருவி விழுந்து நீரோடையாக ஓடியது. பாறைகளால் நிரம்பிய அந்தப் பகுதியில், நீரோடையைக் கடக்கும் விதமாக பாலம் ஒன்றையும் கட்டினார்.

கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர, தடிமனான கைப்பிடிச் சுவர். சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். பாலத்தைக் கடந்தால் அந்தப் பக்கம் மேன்சன். ஒரு நாய் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை பாலத்தின் கட்டைச் சுவர் மேலே வைத்துக்கொண்டு, கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களால் உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து, பாறைகளில் மோதி தற்கொலையும் செய்து கொள்ளலாம்.

அப்படித்தான் குதித்து விட்டது பென், அக்டோபர் 2005ல். நீண்ட மூக்கும் புசுபுசு முடியும் கொண்ட இணிடூடூடிஞு ரக பெண் நாய் அது. அந்த ஊருக்கு வந்திருந்த டோனா தன் கணவருடனும், இரண்டு வயது மகனுடனும் செல்ல நாய் பென்னுடனும் வாக்கிங் சென்றாள். அன்று சூரியன் முழுமுகம் காட்டிச் சிரித்தது.

ஓவர்டவுன் பாலத்துக்கு அருகில் வந்தார்கள். பென் துள்ளலோடு பாலத்தின் மீது ஓடியது. பாதி பாலத்தைத் தாண்டி வலதுபுறமுள்ள கடைசி இரு வளைவுகளுக்கு இடையே வந்த பென், சட்டென கைப்பிடிச் சுவர் தாண்டி கீழே குதித்துவிட்டது.

‘ஓ மை காட்!’ அலறோடு அவர்கள், பாலத்தின் கீழே பார்க்க, பாறைகளின் மேல் விழுந்து அலங்கோலமாகக் கிடந்தது பென். தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அதன் கால்கள் முறிந்திருந்தன. தாடை எலும்புகள், பின்பக்க எலும்புகள் என பல்வேறு முறிவுகள். வலியில் பென், கதறிக் கொண்டிருந்தது. ‘அதனைச் சாக அனுமதிப்பதே உத்தமம்’ என்றார் டாக்டர்.
பென் உயிரைவிட்டது. டோனாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கென்னத் என்பவர் வந்திருந்தார், அதுவும் தனது செல்ல நாயுடன்.

அது நீண்ட மூக்கும் தகதக முடியும் கொண்ட Golden Retriever ரகம். கென்னத்தும் தன் நாய் பற்றிய சம்பவத்தை அப்போது சொன்னார். ‘இவன்கூட இப்படித்தான். போன வருடம் ஒருநாள் அந்தப் பாலத்தின் மீதிருந்து குதித்துவிட்டான். நீங்கள் சொன்ன அதே இடத்தில்தான். நல்லவேளை. பாறைமேல் விழவில்லை. மிகவும் பாதுகாப்பாக ஒரு புதர்மேல் விழுந்திருந்தான். அடி பலமில்லை. ஓரிரு நாள்கள் பயந்ததுபோலஇருந்தான். எதுவும் சாப்பிடவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிட்டான். என்ன, நாங்கள் இப்போது இவனை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின்மீது செல்வதில்லை.’

கென்னத் சொல்லச் சொல்ல, டோனாவுக்கு அதிர்ச்சி. ‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?’

‘நீங்கள் மட்டுமல்ல, இந்நகரில் வசிக்கும் பலரும் தங்கள் செல்ல நாய்களை அங்கே பறிகொடுத்திருக்கிறார்கள். நாய்களோடு அங்கே செல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அதை நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.’ டோனா வாயடைத்துப் போனாள்.

சென்ற நூற்றாண்டிலிருந்து இன்றைய தேதி வரை நூற்றுக்கணக்கான நாய்கள், ஓவர்டவுன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக வலதுபக்கத்தில். கடைசி இரு அரைவட்ட வளைவுகளுக்கு இடையில். இன்ன வருடம், மாதம், தேதியில் இந்த ரக நாய் ஒன்று, முதல் முறையாகக் குதித்து இந்த அமங்கள காரியத்தை ஆரம்பித்து வைத்தது என்று பக்காவான புள்ளிவிவரத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. 1950-லிருந்து வருடத்துக்கு குறைந்தது டஜன் நாய்களாவது இவ்விடம் தற்கொலை செய்து கொள்கின்றன. ஒருமுறை குதித்து உயிர் பிழைத்த சில நாய்கள், உடல்நிலை சீராகிய பின், மீண்டும் இதே பாலத்துக்கு முன்பு அட்டெம்ப்ட் செய்த அதே இடத்துக்கு வந்து இன்னொரு முறை குதித்து ஆனந்தமாகத் தம் உயிரை விட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ஏன்? பாலத்தில் அப்படி என்னதான் மர்மம் இருக்கிறது? அதுவும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருக்கிறதா? அந்த சக்திதான் நாய்களைச் ‘செத்து செத்து விளையாடக்’ கூப்பிடுகிறதா?

சென்ற நூற்றாண்டின் மத்தியில் உலகத்தின் கவனம் இந்தப் பாலத்தின் மேல் குவிந்தது. நாய்நேசர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்தே தீர வேண்டுமென்பதில் ஆர்வமானார்கள். விதவிதமான ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.

நாய்கள் பாலத்தில் மேன்சனை நோக்கிச் செல்லும் வலதுபுறத்தில், கடைசி இரு வளைவுகளுக்கு இடையில் மட்டுமே குதிக்கின்றன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை. Labradors, Collies, Retrievers போன்ற நீண்ட மூக்குகள் கொண்ட நாய்கள் மட்டுமே குதிக்கின்றன. நாய்களை இழந்தவர்கள் சொன்ன தகவல்கள் மூலம் இப்படிப்பட்ட பொதுவான ஒற்றுமைகள் தெரிய வந்தன.

எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படுமே. ஒரு கதை பரவியது. 1994ல் கெவின் என்ற தீவிர கிறித்துவன் தனது ஆண் குழந்தையோடு, இந்தப் பாலத்துக்கு ஓடிவந்தான். கைப்பிடிச் சுவர் மேல் ஏறி நின்றபடி, ‘இந்தக் குழந்தை கிறித்துவத்துக்கு எதிரானது. பின்னாளில் கிறித்துவத்தையே அழித்துவிடும். வேண்டாம் இந்தக் குழந்தை…’ என்று குழந்தையைக் கீழே வீசிக் கொன்றான். பின் அவனும் அங்கிருந்து குதித்தான். அவனது தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.

அந்தக் குழந்தைதான் இப்போது ஆவியாக ஓவர்டவுன் மேன்சனை, அந்தப் பாலத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும், அந்த ஆவி நாய்களின் கண்களுக்குத் தெரிய அவை மிரண்டு போய் பாலத்திலிருந்து குதிப்பதாகவும் ஊருக்குள் செய்தி பரப்பப்பட்டது. அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் இல்லாததாலும், 1994க்கு முன்பும் நாய்கள் அங்கிருந்து குதித்திருக்கின்றன என்பதாலும் அந்த வதந்தி செத்துப் போனது.

ஆதி ஐரோப்பியர்களின் ஓர் இனமான செல்ட் மக்களின் நம்பிக்கைப்படி, ஓவர்டவுன் எஸ்டேட்டில் அந்தப் பாலம் அமைந்துள்ள இடமானது மிகவும் உணர்வுபூர்வமானது. அந்த இடத்தில்தான் உலகத்தின் சொர்க்கமும் நரகமும் சந்திக்கின்றன. இது பழம் பெருச்சாளிகள் சிலர் மார்தட்டி முன் வைத்த கருத்து. இருக்கட்டுமே. அந்த உணர்வுபூர்வமான புள்ளியில் நாய்கள் மட்டும் சாக வேண்டும்? பன்றிகள், குதிரைகள், மாடுகள், மனித ஜென்மங்கள்கூட அப்பாலத்தைக் கடக்கின்றன. அவை ஏன் குதிப்பதில்லை என்ற கேள்வி எழுந்ததும், பெருச்சாளிகள் பேச மறுத்துவிட்டன.

இருந்தாலும் ஏதோ அமானுஷ்ய சக்தி, அந்தப் பாலத்தில் இருக்கிறது. அதுவே நாய்களைத் தூண்டி விடுகிறது அல்லது மிரளச் செய்கிறது என்ற கருத்து புஷ்டியாகிக் கொண்டே போனது. வெயில் நாள்களில் மனநல நிபுணர்கள் நாய்களோடு பாலத்தில் நடந்து பார்த்தார்கள். அந்தக் குறிப்பிட்ட இடம் வந்ததும் நாய்கள் மிரளுவதை, குதிக்க நினைப்பதை உணர்ந்தார்கள்.

மனநல மருத்துவரான டேவிட் சான்ஸும் தனது பத்தொன்பது வயது கிழட்டு நாய் ஹென்றிக்ஸை வைத்து சோதனை செய்தார். ‘நான் அதைப் பிடிக்கவில்லை. அது சுதந்தரமாக ஆனந்தமாக பாலத்தின் மேல் நடந்துபோனது. வலதுபுறத்தின் அந்த இடம் வந்ததும் ஒருமாதிரி ஆகிவிட்டது. கட்டைச் சுவரின் மேல் கால்களால் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. வயதான காரணத்தினால் அதனால் எம்பிக் குதிக்க முடியவில்லை.’

சான்ஸ், அந்த இடத்தில் தன் நாய் ஏதையோ கண்டு, அல்லது கேட்டு, அல்லது ஏதோ வாசனையால் ஈர்க்கப்பட்டதால் அப்படிச் செய்துள்ளது. அது எதனால் என்று தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்றார். பின் டேவிட் செக்ஸ்டன் என்ற விலங்கியல் சிறப்பு நிபுணர் அந்த ஆராய்ச்சியில் இறங்கினார்.

நாய்களைப் பயமுறுத்தும் விதமாக தோற்றத்தைக் கொண்ட எந்தப் பொருளும் அங்கில்லை. நாய்களை மிரளச் செய்யும் விதமான ஒலிகளும் அங்கே கேட்பதில்லை. எனவே ஏதோ வாசனைதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். பாலத்தின் கீழ் எலிகள் நிறைய இருந்தன, கூடவே மிங்க் என்ற பிராணிகளும். (மிங்க் – குளிர் பிரதேசங்களில் வாழும் பாலூட்டி விலங்கு. அதன் ரோமத்துக்காக (Fur) வேட்டையாடப்படுவது.) எலிகளைவிட, மிங்குகளின் மணம் நாய்களைத் தூண்டி இழுப்பவையே.

இதனைக் கண்டறிந்த டேவிட், பத்து வேறு வேறு நாய்களை பாலத்தில் நடக்க விட்டு ஆராய்ச்சி செய்தார். அவற்றில் ஏழு நாய்கள் மிங்குகளினால் ஈர்க்கப்பட்டன. ‘மிங்குகளை வேட்டையாடுவதற்காக நாய்கள் பாலத்திலிருந்து குதிக்கின்றன. இதுவே மர்மத்துக்கான விடை’ என்றார் டேவிட்.

விஷயம் தீர்ந்துவிடவில்லை. மிங்குகள் சென்ற நூற்றாண்டில் பாதியில்தான் பிரிட்டனுக்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. பின்பே அவை பல்கிப் பெருகின. ஸ்காட்லாந்தில் பல பாலங்களுக்கு அடியில் மிங்குகள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. இருந்தும் ஏன் இந்தப் பாலத்திலிருந்து மட்டும் நாய்கள், மிங்குகளுக்காக, அதுவும் வலதுபுறத்திலிருந்து மட்டும் குதிக்க வேண்டும்?

நாய்களை அழைத்து வருபவர்கள் மன அழுத்தத்தில், தற்கொலை எண்ணத்துடன் இருந்தால் அந்த உள்ளுணர்வு நாய்களுக்கும் பரவும் என்றொரு மேலோட்டமான கருத்தும் உண்டு. ஆனால் நாய் ஓனர்கள் எல்லோருக்குமே அப்படிப்பட்ட எண்ணம் இருக்க வாய்ப்பில்லையே. தவிர, தானே வந்து தனியே செத்துப் போகும் நாய்களை என்ன சொல்ல?

இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்…’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்துக்குச் சென்று…

அருவறுக்கத்தக்க ஜந்துக்களின் வேலை தான் இவ்வாறு இருக்கும்...


திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை... அசர வைத்த கேரள எம்.எல்.ஏ...


கேரளத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பத்திரிகை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

தானூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர் வி. அப்துல் ரஹிமான். இவரது மகள் ரிஸ்வானாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்துக்கு வராதவர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்த எம்எல்ஏ முடிவு செய்தார். மலப்புரத்தில் வரும் 22-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். 100 சதவீதம் அதற்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழைப்பிதழ் அனுப்ப முடிவு செய்தார்.

அதன்படி கையால் தயாரிக்கப்பட்ட பேப்பரில் பூக்கள் மற்றும் மூலிகை விதைகள் தூவிய அழைப்பிதழை தயார் செய்தார். அந்த பேப்பர் முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்படக் கூடியது. குப்பைக்கு செல்லும் கார்டுகள் இதுகுறித்து எம்எல்ஏ அப்துல் ரஹிமான் கூறுகையில் திருமண அழைப்பிதழ்களை அன்பு பொங்க கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முடிந்தவுடன் அந்த அழைப்பிதழை குப்பையில் வீசி விடுகின்றனர். ஐடியா இதை தடுப்பதற்காகவே பெங்களூரில் உள்ள எனது நண்பருடன் ஆலோசனை செய்தபோது இந்த ஐடியாவை கொடுத்தார். இதை கேட்டவுடன் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அந்த அழைப்பிதழில் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மேரிகோல்டு பூ ஆகியவை கோட் செய்யப்பட்டுள்ளது. முளைவிடும் இந்த கார்டில் உள்ள விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு அதில் இருக்கும். அந்த கார்டில் லேசாக மணல் இருக்கும் அதில் தண்ணீர் தெளித்தால் முளை விட தொடங்கும். தூக்கி எறியமாட்டார்கள் பின்னர் அதை தொட்டியிலோ அல்லது தோட்டத்திலோ வைத்துக் கொள்ளலாம். இந்த அழைப்பிதழை யாரும் குப்பையில் போட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தாங்கள் பயன்படுத்தா விட்டாலும் வேறு யாருக்காவது கொடுப்பர் என்றார்...

இயற்கை வனங்களை காப்பாற்ற வேண்டும்...


விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி வரும் வழியில் இருக்கும் இந்த இடம் அரசாங்க பேருந்துகள் வந்து செல்லும் உணவகம்..


தரம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பவர்கள்.. நடுத்தர மக்களின் பணத்திற்கு சிறிதும் தரமில்லாத உணவு பொருட்கள், தேனீர், தண்ணிர் விற்கும் இவர்களை அரசாங்க அதிகாரிகள் தர பரிசோதனை செய்ய வேண்டும்..

கண்டக்டர் கிட்ட குடுக்கற சார்ட்ல ஹோட்டல் முத்திரை குத்தி குடுக்கரானுக... டிப்போ அதிகாரிகள் ஒரு வண்டிக்கு ஐம்பது ரூபாய் என்று வசூலிக்கிறார்களாம். டிரைவர் கண்டிப்பாக அந்த ஹோட்டல்ல வண்டிய நிறுத்தணுமாம். இல்லைனா சஸ்பெண்ட் செய்து விடுவார்களாம்.

டிரைவர் கண்டக்டர் இருவரும் அங்கே கையெழுத்து போட்டு விட்டு தான் சாப்பிடணுமாம். ஒரு சில டிரைவர்கள் அந்த இடத்தில் வண்டிய நிறுத்திய உடனே பாத்ரூம் போறவங்க போய்ட்டு வந்திருங்க என்று கூறுவார்கள்

அதன் அர்த்தம் அந்த இடம் ஒண்ணுக்கு போக மட்டுமே லாயக்கு என்பதற்காம்...

தமிழீழத்தில் சமூக விரோதிகளை களையடுத்த முறை...


இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை...


இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை, இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்...

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,

எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது...

சேலம் 8 வழி சாலையும் உண்மையும்...


டேனியல் எனும் தமிழன்...


தமிழ் போர் புரியும் என்று 90 ஆண்டுகள் முன்பே அறிவித்த தமிழன்.

தமிழ் இந்திய ஆட்சிமொழி ஆக திரு.காயிதே மில்லத் வாக்கெடுப்பு நடத்தியது பலரும் அறிந்ததே.

அதற்கு முப்பதாண்டுகள் முன்பே தமிழுக்கு ஆட்சியதிகாரம் தரவில்லை என்றால் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் டேனியல் என்ற தமிழர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமூலம் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த, திரு. பால்.வி. டேனியல்..

27.01.1923 அன்று ஆற்றிய உரையின் முதல் ஐந்து வரிகள்,

ராஜபாஷையாக இருந்த தமிழ் நசுக்கப்பட்டு அடுப்பண்டையில் ஒளிவிடம் தேட வேண்டியதாயிற்று.

இக்கடைசி உறைவிடத்தினின்றும் தள்ளப்படுமாயின் அது தன் நியாயமான அவகாசத்துக்காக எதிர்த்து நின்று அல்ஸ்றர் போர் புரியும்.

Ulster என்பது வட அயர்லாந்தைக் குறிக்கும்.

அயர்லாந்து மக்கள் மொழி உணர்வால் கிளர்ந்தெழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

இது ஐரிஷ்-தேசியம் எனப்படும்.

1919ல் அமைதிப் போராட்டமாக ஆரம்பித்து.

1921ல் ராணுவ மோதலாக உருவெடுத்தது.

இந்த போராட்டம் அயர்லாந்து பிரிட்டிஷ் பேரரசுக்கு உள்ளேயே மாநில உரிமை கிடைக்கப்பெற்றதால் தற்காலிகமாக நின்றது.

அயர்லாந்தின் வடகிழக்கில் சிறுபகுதி (1/6) விடுதலையை ஆதரிக்காமல் இங்கிலாந்துடன் இணைவதை விரும்பியது.

பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்த தனது சொந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியின் மீது போர்தொடுத்தனர் அயர்லாந்து நாட்டின் மற்ற பகுதியினர் (5/6).

இந்த போரானது 1921 முதல் 1923 வரை நடந்தது. வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இதைத்தான் டேனியல் 1923ல் உதாரணமாகக் கூறியுள்ளார்.

அதாவது கேரளாவின் தமிழ்பகுதிகளில் தமிழ் நசுக்கப்படுவதை கேரளத்தமிழர்கள் சகித்துக்கொண்டிருந்தால், தமிழகம் கேரளத்தமிழர் மீதே போர் தொடுக்கும் என்பதைத்தான் அவர் கூறியுள்ளதாக அறிய முடிகிறது.

அயர்லாந்தினரின் 'நாம் ஐரியர்' இயக்கத்தைப் பார்த்து தான் 'நாம் தமிழர்' சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டது.

அல்ஸ்றர் பகுதியை மீட்க முடியாவிட்டாலும் இங்கிலாந்திடமிருந்து பிரிந்து அயர்லாந்து தனிநாடானது.

அதன்பிறகு மிகக்குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

மருத்துவ கவுன்சில் உண்மைகள்...


இலுமினாட்டி இரகசியகம்...


தஜ்ஜால்... இவனுக்கு என்ன பெரிய முக்கியத்துவம்? ஏன் இவனைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும்? என்ற கேள்விகள் சிலருக்கு எதார்த்தமாக ஏற்படுவது தான்...

1.உங்களையும் எங்களையும் இந்த நவீன தஜ்ஜலிஸத்தை தெரிந்து தெளிவாக விளங்கி நம்மையும், நம் குடும்பத்தையும் அதிலிருந்து காப்பாற்ற பாக்கியம் அளித்த வல்ல இறைவனை புகழ்கிறோம்.

சில சிரமங்களுக்கு மத்தியில் நமக்கு கிடைத்த இந்த அளப்பெரிய தகவல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.
                       
2:  அமெரிக்க டாலரில் பொறிக்கப்பட்டுள்ள ஒற்றைக் கண்ணுடன் கூடிய பிரமிடுகள் எதைக் குறிக்கின்றன?

3: தங்களின் வரவு செலவு திட்டங்களுக்குக் கூட உலக வங்கியில் கடன் வாங்கும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் எதிரும் புதிருமாக நிற்பதற்கு யார் காரணம்?

4: அமெரிக்க வங்கிகளில் தீடீர் சரிவு ஏன் ஏற்பட்டது? எங்கேயோ இருந்த ஒபாமா என்பவர் அமெரிக்க அதிபராக குறுகிய காலத்தில் எப்படி ஆக முடிந்தது என்றெல்லாம் மனதிற்க்குள் கேள்விகள்?

ஆய்விற்காக மேற்கண்ட விஷயங்களோடு ஹார்ப் தொழில்நுட்பம், அந்நிய கிரக மனிதர்கள் சாத்தியமா,?                 

பூமி வெப்பமடைதலின் மர்மம் என்ன?

போன்ற விஷயங்களை பற்றி நாமும் தேடிக்கொண்டிருந்தோம்.

முஸ்லிம்கள் ஆட்சிபுரியும் அரபு தீபகற்பத்திலும்கூட தஜ்ஜாலை வரவேற்கும் முகமாக யூதர்கள் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கும் பல சூழ்ச்சிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

குறிப்பாக ஃபிர்அவ்ன் எவ்வாறு தஜ்ஜாலை வரவேற்று பிரமிடுகளுக்குள் சில அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தானோ அதை அப்படியே நகல் எடுத்ததைபோல துபை மாநகரின் அல்-வாஃபி மால் கட்டப்பட்டுள்ளதை அறிந்து உண்மையிலேயே வேதனையுற்றோம். 

1.  சைத்தானியத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய உலகம் அமைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் மேற்கத்திய தலைவர்கள் யார் யார்? அவர்களோடு கைகோர்த்துள்ள முஸ்லிம் பெயர்தாங்கி தலைவர்கள் யார்? அதன் பின்னனி என்ன?

2.  இன்றைய நவீன ஃபிர்அவ்ன்கள் மற்றும் தஜ்ஜாலை வரவேற்கும் முகமாக எப்படியெல்லாம் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்கள்.?

3.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த மனிதர்களின் அறிவையும் கட்டுப்படுத்தும் மீடியாவின் விஷமத்தனம் எப்படியெல்லாம் நடைபெறுகிறது.?

4.  சைத்தானின் நேரடி ஏஜென்டுகளான பாப்இசைகள் மற்றும் பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு ஆட்டிப்படைக்கும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்களின்; பின்னனி என்ன? போன்ற பல தகவல்கள் பொதிந்துள்ளன.           

யூதர்களுடன் இலுமுனாட்டிகள் கைக்கோர்த்து, இறைவனால் சிறை பட்டு இருக்கும் தஜ்ஜால் யூதர்கள் மூலம் வெளி வருவான்  என்பது மட்டும் உண்மை.

இது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாம் கூறிக்கொள்வது, தமிழ் மொழியில் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் இதேபோல் பகிற்வோம். காத்திருப்போம் முடிவிற்க்காக...

விவசாயம்...


கொண்டாட்டமாக மாற்றுங்கள்...


உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும்...

மேலும், உண்மையான கொண்டாட்டம் நாள்காட்டியைப் பொறுத்து அமைவதில்லை.

அதாவது அக்டோபர் முதல் தேதியில் நீங்கள் கொண்டாடுவீர்கள் என அமையாது. இது விசித்திரமானது...

வருடம் முழுவதும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள்,  அக்டோபர் முதலாம் நாள் நீங்கள் சட்டென துயரத்திலிருந்து விடுபட்டு நடனமாடுவீர்கள்.

அன்று உங்கள் துயரம் போலியானதாக இருக்க வேண்டும் அல்லது நவம்பர் முதல் தேதி போலியானதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.

மேலும், நவம்பர் முதல் தேதி கடந்து சென்ற பின்னர், நீங்கள் உங்கள் கருங்குழிக்குத் திரும்ப செல்கிறீர்கள்;

ஒவ்வொருவரும் தமது துயரத்திற்குள், ஒவ்வொருவரும் தமது கவலைக்குள் செல்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக அமைய வேண்டும். முழு வருடமும் ஒரு தீபங்களின் திருநாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களால் வளரமுடியும்,
மலரமுடியும்.

சிறிய விஷயங்களை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

பாஜக மோடியால் மறைக்கப்பட போகும் செய்தி...


திராவிட வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்...


1920 பெருங்காமநல்லூர் படுகொலை
ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை..

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை..

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை..

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை..

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை..

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை..

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை..

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை..

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை..

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை..

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை..

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை..

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்
18பெண்கள் வல்லுறவு..

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை..

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு..

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை..

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை..

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை..

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் அனைத்து சாதியிலும் உண்டு...

விவசாயம் தான் நம் உண்மையான பொ௫ளாதாரம்...


கான்ட்ராக்டர் செய்யாதுரை வீட்டில் 36 மணி நேரம் நடந்த வருமான வரி சோதனை நிறைவு! சிக்கிய தங்கம், பணம்...


ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்ட வருமான வரி சோதனை 36 மணி நேரத்திற்கு பின் முடிவரிக்கு வந்துள்ளது. இதன் மூலம் கைப்பற்றப்பட்ட பணம், நகைதான் இந்திய வரலாற்றில் வருமான வரி சோதனை மூலம் அதிகம் கைப்பற்றப்பட்ட சொத்து ஆகும்.

ரெய்டு.. ரெய்டு.. ரெய்டு கடந்த ஜனவரியில் இருந்து இந்த ஜூலை வரை தமிழகத்தில் அதிக உச்சரிக்கப்பட்ட வார்த்தை இதுதான். தமிழக எடப்பாடி- ஓபிஎஸ் டீம் அரசுக்கு எதிராக இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டு தற்போது எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடமே நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்டி நிறுவன ரெய்டு மூலம் அரசுக்கு நெருக்கமான புள்ளிகள் குறிவைக்கப்பட்டார்கள். சத்துணவு துறை போய் தற்போது அருப்புக்கோட்டை வருமான வரி சோதனை மூலம், நெடுஞ்சாலை துறை மீது குறி மாற்றப்பட்டுள்ளது.

யார் இவர்கள் அருப்புக்கோட்டை அருகே இருக்கும் கீழ்முடி மன்னார் என்று சிறிய கிராமத்தை சேர்ந்தவர்தான் செய்யாதுரை. ஐவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமானப்பணி ஒன்றை நடத்தி வருகிறார்கள். பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த நிறுவனம்தான் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிறது.

என்னதான் பிரச்சனை இந்த நிலையில் இந்த நிறுவனம் கட்டுமான துறை மட்டுமில்லாமல் நூற்பு ஆலை, கல்குவாரி, உள்ளிட்ட இதர சில அரசு ஒப்பந்தகளையும் பெற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த சில வருடமாக மோசடி செய்து பணம் பெறுவதாகவும், சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்றும், புகார் புகார் மேல் புகார் வந்திருக்கிறது.

அதனடிப்படையிலேயே தற்போது வருமான வரி சோதனை நடந்துள்ளது. எவ்வளவு நேற்று அதிகாலை ஆரம்பித்த இந்த சோதனை இப்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது. 1000க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரையின் பூர்வீக வீடு தொடங்கி மொத்தம் 30 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனைக்கு ஆப்ரேஷன் பார்க்கிங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பணம் எவ்வளவு இந்த சோதனையில் வெறும் இரண்டு நாட்களில் ரூ.160 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதேபோல் வெவ்வேறு இடங்களில் இருந்து 100 கிலோவிற்கும் அதிகமான புது தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது . 300க்கும் அதிகமான சொத்து பத்திரமும், 250 பென் டிரைவுகளும், 56க்கும் அதிகமான ஹார்ட் டிஸ்க்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மிக பெரியது இந்திய வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய வருமான வரி சோதனை ஆகும்.

சசிகலா குடும்பங்களுக்கு சொந்தமான இடங்களில் மொத்தம் 200க்கும் அதிகமான பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. கணக்குப்படி அதுதான் பெரிய சோதனை என்றாலும், இதுவரை எந்த இடத்திலும் இவ்வளவு அதிக பணம் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் முறைப்படி இதுதான் பெரிய சோதனை என்கிறார்கள்...

கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்...


உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்.. ஓர் நெகிழ்சி சம்பவம்...


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான்.

இதையடுத்து, அருண்பாண்டியனை சக மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பணி மருத்துவர், நாடித்துடிப்பு மிகக்குறைவாக உள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லவேண்டும் எனக்கூறி 108 ஆம்புலன்சையும் வரவைத்து பிராணவாயு சிலிண்டர் உதவியுடன் அனுப்பிவைத்துள்ளனர். ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் மாணவனின் மூச்சுத் திணறலை குறைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்க 15 நிமிடத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நிறுத்தினார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். தொடர்ந்து மாணவனை கூட வந்த சக மாணவர்களுடன் ஆம்புலன்ஸ் நர்ஸ் வேகமாக சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் முதல்கட்ட சோதனை செய்து நாடித்துடிப்பு ரொம்ப குறைந்துவிட்டது. பிராணவாயுவை எடுத்தால் எதுவும் நடக்கலாம் என்று சொல்லிவிட சக மாணவர்கள் கதறினார்கள்.

கூலி வேலைக்குச் சென்ற அருண்பாண்டியனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். அப்போது, மருத்துவமைனையில் இருந்து வெளியில் கொண்டு போறதா இருந்தாலும் கொண்டு போங்க என்று மருத்துவமனையில் சிலர் சொல்ல கதறிய பெற்றோர் வீட்டின் அருகே இருக்கும் கொஞ்ச நிலத்தை விற்க அவசரமாக பக்கத்து இடத்துக்காரரை பணத்துடன் அழைத்தும் விட்டனர். அதே நேரத்தில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அங்கிருந்த பணி மருத்துவர் உங்கள் பள்ளி மாணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்று தகவல் சொல்ல காயத்திற்கு மருந்து கட்டுவதை மறந்து இரு ஆசிரியர்களும் தஞ்சை நோக்கி சென்றார்கள். அங்கு மாணவன் அருண்பாண்டியன் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்த போது மூச்சுக்காக பிராணவாயு வைத்து, கண்கள் மேல் நோக்கி, எந்த அசைவும் இல்லாத நிலையில் இருந்துள்ளான்.. அருகில் நின்ற மருத்துவர்கள் சிலிண்டரை நிறுத்தினால் உயிர் நின்றுவிடும் நிலையில் உள்ளது என்று சொல்ல.. கண் கலங்கிய ஆசிரியர்கள் மாணவன் காதருகே சென்று முதலில் மணிகண்டன்.. தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.

அதைப் பார்த்த பிறகு மறுபடியும் இரு ஆசிரியர்களும் மாணவனிடம் அடுத்தடுத்து பேசப் பேச மாணவன் கண் விழித்தான் கை, கால்களை அசைத்தான்.. உனக்கு ஒன்றும் இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி பேச பேச 7 நிமிடங்களில் சுய நினைவு பெற்றவனாக, சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க.. எங்களை தெரியுதா என்று ஆசிரியர்கள் கேட்க.. மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான். இதை எல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஆனந்தமடைந்து 10 சதவீதம் கூட உயிர் இல்லாமல் இருந்தான் இப்ப பிழைச்சுக்கிட்டான் என்று கூறினார்கள்.

அதுவரை கதறிக் கொண்டிருந்த பெற்றோரும் கண்ணீரை நிறுத்திவிட்டு ஆசிரியர்களின் கைகளை பற்றிக் கொண்டனர். எனக்கு ஒன்றும் இல்ல சார் நல்லா இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க சார் என்று சொன்ன பிறகு.. சார் ஒன்னுக்கு போகனும் என்று சொல்ல அருகிலேயே சிறுநீர் கழிக்க வைத்தனர். கை செலவுக்கு கூட பணமின்றி வந்த பெற்றோரிடம் அவசர தேவைக்காக சிறு தொகையை கொடுத்துவிட்டு ஆனந்த கண்ணீரோடு ஆசிரியர்கள் வெளியே வர தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தகவல் அறிந்து வந்து மாணவனை பார்த்தார்.

அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமிசத்தியமூர்த்தி மாணவனின் நிலை பற்றி அடுத்தடுத்து போனில் கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஆசிரியர்கள் வெளியே வரும் வரை மாணவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும் மாணவனுக்காக காத்திருந்தனர்.
 நாங்கள் ஏற்றிய பிறகு உயிரை காக்க வேண்டும் என்று தான் போராடுறோம் அதே போல கொண்டு வந்துட்டோம். ஆனாலும் மருத்துவ சிகிச்சையைவிட ஆசான்களின் குரல் சிகிச்சை தான் மாணவனை காப்பாற்றி இருக்கிறது என்றனர்.

இரவு 9 மணிக்கு பிராணவாயு வேண்டாம் என்று அகற்றச் சொன்ன மாணவன் தனக்கு பசிக்கிறது என்று டீ வாங்கி வரச்சொல்லி குடித்திருக்கிறான். 10.30 மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அவன் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றும் சிகிச்சை தொடங்கியுள்ளது. பணி மருத்துவர்களும் ஆசிரியர்களை பாராட்டினார்கள். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படக் காட்சியை போல தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இரு ஆசிரியர்கள் செய்துள்ளனர் என அனைவரும் பரவலாக ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஆசிரியர் மணிண்டன்.. மாணவனுக்கு உடல்நலமில்லை என்பது மருத்துவமனைக்கு சென்ற போது தான் தெரியும். சுயநினைவின்றி அசைவற்று கிடந்தான். மருத்துவர்கள் சிலிண்டர் உதவியில் உயிர் இருப்பதாக சொன்னார்கள். ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து மனதை படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூர்ச்சையாகி கிடந்த மாணவன் காதில் பேச பேச அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு அசைவு தெரிந்தது.

அதைப் பார்த்து அடுத்தடுத்து அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச பேச கண் விழித்தான் நினைவோடு எங்களை அழைத்தான். இப்ப நல்லா இருக்கிறான். அதைப் பார்த்த மருத்துவர் மாணவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார். ஆனாலும் தாய் தந்தைக்கு பிறகு ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் மாணவனின் மனதை படித்தோம் உயிரை பெற்றோம். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்கேன் எடுக்க அவனே நடந்து போய் இருக்கிறான் என்றார் ஆனந்த கண்ணீரோடு.....

வாழ்த்துக்கள் ஆசிரியர்களே...

பாஜக அடிமை அதிமுக சாதனை...


இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியை கொடுத்தால் மொத்த தமிழ் நாட்டுக்கும் கண்டிப்பா சங்குதான்...

எதற்குடா விசாரணை வைக்கிறீங்க...


பாதிக்கப்பட்ட தங்கை கண்முன்னே நீதிக்காக காத்திருக்கிறாள்,

இவங்க விசாரணையை ஒத்தி வைக்கிறாங்கே..

யாரை காப்பாத்த இப்படி பண்றீங்க...

தவறு என்று தெரிந்தவுடன் அடுத்த கணமே தீர்ப்பு சொல்றது தாண்டா சனநாயக நாடு..

இதுவரை பெண்களின் மீதான நடந்த கொடுமைகளுக்கு ஏதாவது ஒன்றுக்கு உங்க சனநாயகம் உடனடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறதா..?

பாதிக்கப்பட்ட பெண் பல ரணங்களின் வலியோடு சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறாள்,

ஆனால் இன்னும் நீங்க அதை விசாரிக்கணும்னு சொல்றீங்க..

என்னங்கட உங்க இந்திய சனநாயகம்..?

பெருமைக்கு தான் பேசுறது இது பாரத தாய் நாடு என்று,

ஆனால் இதுவரை அந்த தாய்க்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு உங்களால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால்,

உங்க சனநாயகத்தை தீயிட்டு கொளுத்துங்கள்...

தூத்துக்குடியில் விமான படைதளம்...


இது தான் நமது தமிழீழ மண்ணின் தீர்ப்பு...


மரண தண்டனை நம் இந்திய நாட்டில் உடனடியாக சாத்தியமில்லை, இது சனநாயக நாடு என்பவர்களுக்கு..

அடேய் 150 ஆண்டுகளாக தான் நாம் இந்தியர்கள்,

70 ஆண்டுகளாக தான் இது சனநாயக நாடு, 

நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள்,

இயற்கை, காலநிலை மாற்றத்தால் தமிழீழம் நம்மிடம் இருந்து நிலம் ரீதியாக பிரிந்து சென்றதே தவிர,

உணர்வு ரீதியாக நாம் ஒரு தாய் பிள்ளைகள்..

தவறு செய்தால் உடனடி தீர்ப்பும், தண்டனையும் தான் நமது மரபு...

இலங்கை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை...


48 நாடுகள் அழியும் அபாயம்...


புவி வெப்பமயமாதலால் 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக உருவெடுத்து கடல் நீரில் சேர்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதே நிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சாமளிப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக தற்போது ஐநாவில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று குறித்த நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது. இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுபிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

48 நாடுகள் கூட்டமைப்பில், Afghanistan, Haïti, Philippines, Bangladesh, Honduras, Rwanda, Barbados, Kenya, Saint Lucia, Bhutan, Senegal, Burkina Faso, Madagascar,South Sudan,Cambodia,Malawi, Sri Lanka,Comoros, Maldives, Sudan, Costa Rica, Marshall Islandsza, Tanzania, Democratic Republic of the CongoMongolia, Timor-Leste, Dominican Republic, Morocco, Tunisia, Ethiopia, Nepal, Tuvalu Fiji, Niger, hanuatu, Ghana, Palau, Vietnam, Grenada, Papua New Guinea, Yemen, Guatemala உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன...