07/09/2020

ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவம்...



'ரோமன் கத்தோலிக்கம் உலகலாவிய மதம். இதை எந்தவொரு மொழியோ, கலாச்சாரமோ கட்டுப்படுத்தாது. ரோமன் கத்தோலிக்கர்கள் உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் அந்த பகுதி சார்ந்த கலாச்சாரம், உடை, விழாக்கள் என எதையும் பின்பற்றலாம். இதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவரவர் தாய்மொழியில் மட்டுமே இறைவனை வழிபட வேண்டும்' என 1865களில் வாட்டிகனில் கூடிய  இரண்டாம் வத்திக்கான் (வாட்டிகன்) சங்கம் முடிவெடுத்து அதையே செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.

இன்று கத்தோலிக்கத்தைஉலகின் மிகப்பெரிய மதமாக 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டு தொடர்ந்து வளர காரணமாக இருந்தது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முடிவு.

1865க்கு முன்புவரை உலகமெங்கும் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு மொழி லத்தின் மொழிதான். தமிழக தேவாலயங்களிலும் லத்தின் மொழியில்தான் வழிபாடுகள் நடந்தது.

வழிபாட்டு மொழி, கலாச்சாரம் அனைத்தும் அந்த பகுதி வட்டாரம் சார்ந்து பின்பற்றலாம் என சொன்னதும் தமிழ் வழிபாட்டு மொழியானது. அதோடு சேர்ந்து சாதியும் உள்ளே நுழைந்துக்கொண்டது.

இன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா. அங்கிருந்தே இதற்கான உதாரணத்தை காட்டுகிறேன்.

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்கு 40 நாட்கள் விரதமிருந்து பச்சை,கருப்பு,காவி உடைகளில் பாத யாத்திரதை செல்வார்கள். இதில் பெரும்பாலானோர் இந்து சமயத்தை சேர்ந்தோர். இதை கிறிஸ்தவர்களும் காப்பியடிக்கத் தொடங்கினர். இது இந்து மத பழக்கம் எனக்கூறி 18ம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.(அப்போது வேளாங்கண்ணி பாண்டிச்சேரி மறைமாவட்டத்தின்கீழ் இருந்தது)

தமிழக கிறிஸ்தவ வரலாற்றில் இந்த நிகழ்வு 'Querelle des rites Malabar' என குறிப்பிடப்படுகிறது. இந்த சர்ச்சை இந்தியாவில் கிறிஸ்தவர்கள் இருந்த பகுதிகளில் பரவியது. கடைசியில் போப்பாண்டவர் அதில் தலையிட்டு சமரசம் செய்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரவர் விருப்பப்படி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வழிபடட்டும் அதை யாரும் தடுக்க வேண்டாம் என்பதே போப்பின் பதிலாக இருந்தது.

(இது தொடர்பான மேலும் விபரங்கள் பாண்டிச்சேரி French institute வெளியிட்டிருக்கும் 'வேளாங்கண்ணி திருவிழா' என்ற பிரஜிட் செபஸ்தியா எழுதிய நூலில் காணலாம்)

இந்து கோவில்களுக்கு செல்பவர்கள் கோயில் குளத்தில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதன் அர்த்தம் தீய சக்திகளிலிருந்து விடுபடுவதும், உடலை சுத்தம் செய்வதும். இதையே வேளாங்கண்ணியில் செய்ய ஆரம்பித்தனர்.

பழைய வேளாங்கண்ணியில் குளத்தில் குளித்துவிட்டு கோயிலுக்கு வர ஆரம்பித்தார்கள். இதனை தடுக்க அப்போது அந்த குளத்தை சிமெண்ட் சிலாப் போட்டு மூடிவிட்டார்கள். ஆனாலும் மக்கள் மாறவில்லை. குளத்துக்கு பதில் கடலுக்கு போய் குளித்துவிட்டு கோவிலுக்கு வர ஆரம்பித்தார்கள் என அந்நூலில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர்.

ஓரளவிற்குமேல் மக்களை கட்டுப்படுத்த முடியாததால் மக்களுக்கு தகுந்ததுபோல மாற ஆரம்பித்தது வேளாங்கண்ணி.

இந்து கோயில்களில் திருவிழாவின் போது மண்டகப்படி செய்வதுபோல காலங்காலமாக வேளாங்கண்ணி திருவிழாவிலும் மண்டகப்படி கலாச்சாரம் உருவெடுத்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் நாள் கொடி ஏற்றப்பட்டு செப்டம்பர் 7ம் நாள் பெரிய தேர் பவனி கொண்டாடப்படும். அதன் விபரம் கீழே

ஆகஸ்ட் 29 - ஆர்ய நாட்டு செட்டியார்
ஆகஸ்ட் 30 - அகமுடையார், தேவர்
ஆகஸ்ட் 31 - பனைமர நாடார்
செப்டம்பர் 1 - தென்னைமர நாடார்
செப்டம்பர் 2 - கருங்கண்ணி திருச்சபை
செப்டம்பர் 3 - உடையார்
செப்டம்பர் 4 - ஆங்கிலோ - இன்டியன்ஸ்
செப்டம்பர் 5 - திருச்சி எஸ்.எம்.அந்தோணி குடும்பம்
செப்டம்பர் 6 -வேளாங்கண்ணி ஆர்ய நாட்டு செட்டி
செப்டம்பர் 7 - நாகை ஆர்ய நாட்டு செட்டியார்
செப்டம்பர் 8 , 9, 10 - மரிய ஜோசப் குடும்பம்,  ஆசாரி, தச்சர் சமூகம்

இதெல்லாம் உள்ளூர் வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் கலந்த ஒரு கூட்டு.

கிறிஸ்தவத்திற்கென தனியான கலாச்சாரமோ, மொழியோ இல்லாததால் இந்த மாற்றம் பெரிய அளவில் கிறிஸ்தவத்தை பாதிக்கவில்லை. அதே நேரத்தில் இந்துக்களுக்கு இதில் இயல்பான ஒரு ஈடுபாடு வந்தது. தங்களின் வழிபாட்டு முறையிலிருந்து பெரிதாக அந்நியமாக எதுவும் தென்படாததால் வேளாங்கண்ணி மாதாவை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

இதில் இன்னொன்று  கவனம் பெறுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகம் பெண் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதி. அந்த உணர்ச்சிதான் மதம் கடந்து வேளாங்கண்ணி மாதாவை நோக்கி வரச்செய்துள்ளது.

அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள்...

களப்பிரர் பிடுங்கிய பார்ப்பனர் நிலத்தில்....


களப்பிரர்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி மக்களுக்குக் கொடுத்ததாகவும்..

அதை பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்றபிறகு மீண்டும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததாகவும்..

வண்டி வண்டியாக கட்டுரை எழுதும் திராவிட கம்யூனிச வலைகளே..

பாண்டியன் கொடுத்த அந்த நிலத்தில் (வேள்விக்குடி) இடையர், நாவிதர் உட்பட அனைத்து மக்களும் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதையும்..

பார்ப்பனருக்கு அதில் ஏகபோக உரிமை எதுவும் இருந்ததில்லை என்பதையும்..

அதில் பொதுவான சுடுகாடும் மேய்ச்சல் நிலமும் இருந்தன என்பதையும் பரம ரகசியம் போல மூடிமறைப்பது ஏனோ?

இந்திய லடாக் பகுதியில் தனது ஏர் மிசைல் பேஸ் நிறுவும் சீனா... மக்கள் ஏமாற்றும் பாஜக மோடியும்.. வேசி ஊடகங்களும்...


உலகளவில் 2ம் பிடித்தார் பாஜக மோடி... கொரோனா வில்...


ஆல்பா தியானம் செய்வது எப்படி?



மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.

இடது, பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும் போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும் போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் செயல்படுகின்றது.

இதனை நினைவு மனம் Conscious Min, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Min என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.

ஆனால், இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டு மொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது.

நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது.

சுயமாக சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக, எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற, அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு போல செயல்படுகிறது.

இந்த Sub Concious mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன்.

இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிற போது தான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை..

1)ஆல்பா  2)பீட்டா 3)தீட்டா 4)டெல்டா
என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.

ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec),

பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்,

தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்,

டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.

பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State).

ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State).

டெல்டா என்பது சமாதி நிலை.

நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.

உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் (Concious Mind) செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும்.

நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும்.

கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப் போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால், உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்தை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப் படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும் போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.

நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும்.

ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும் போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி.

எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக அட்டாங் யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.

தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள்.

அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள் ) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.

ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணை கொண்டு எந்தப் பொருள் குறித்து, புதிய செய்திகள், உத்திகள் தேவையோ எந்தப் புதிய கண்டு பிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.

இந்த ஆல்பா நிலை தியானத்தின் போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.

மனித உடல் அழியக் கூடியது, ஆன்மா அழிவில்லாதது என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை.

எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது.

வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.

பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள்.

எடிசன் போன்ற அறிவியல் கண்டு பிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.

ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம், நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம்.

இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாகக் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிற போது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும்.

அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.

இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள்.

இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும் பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை.

நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப் போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.

இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம்.

பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை...

தமிழர் விரோதி திருட்டு திமுக வின் இரகசிய வேலைகள் - விழித்துக் கொள்ளுங்கள் தமிழினமே...


தமிழர் விரோத பாஜக - அதிமுக சாதனைகள்...


செம்பருத்தியின் மருத்துவக் குணம்...



செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான்.

இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.

உடல் உஷ்ணம் குறைய...

உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

வெட்டை நோய் குணமாக...

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

இருதயம் பலம் பெற...

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

பேன் தொல்லை ஒழிய...

சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு...

சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்...

கட்சில கூட்டம் கூட்டரவங்களுக்கும், ஜால்ரா அடிக்கறவங்களுக்கும் பதவி கொடுக்கறதுதானேப்பா, திமுகவோட வழக்கம்...


பாஜக டூபாக்கூர் மோடி கொள்ளை...


1971-ல் கடலுக்குள் இருந்து கிளம்பிய யூஎப்ஓக்கள்...



1952-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதியில் இருக்கும் நியூ ஜெர்சியில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பறக்கும் பொருள் (Unidentified flying object - UFO) ஒன்றின் தெளிவான புகைப்படம் சிக்கியது. 1940 மற்றும் 1950-களில் விசித்திரமான இந்த பறக்கும் பொருள்கள் - பறக்கும் சாசர் (Flying Saucer) அல்லது பறக்கும் டிஸ்க் (Fluying Disc) என்ற பொது பெயரில் உலா வந்தது. அவைகளை "அங்கு பார்த்தேன்", "இங்கு பார்த்தேன்" என்று கூறப்பட்டு வந்த நிலையில் தெளிவாக புகைப்படத்தில் சிக்கிய அடுத்த ஆண்டே, அதாவது 1953-ஆம் ஆண்டு அந்த விசித்திரமான பறக்கும் பொருளுக்கு யூஎப்ஓ (UFO) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டு பின் அவைகள் பூமி கிரகத்தை சேர்ந்த பொருள் அல்ல என்ற நம்பிக்கை பரவியது..

விண்ணில் தோன்றும் யூஎப்ஓக்கள் வழக்கத்திற்கு மாறாக 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலில் இருந்து கிளம்பின, மேலும் அவைகள் தெளிவான முறையில் புகைப்படங்களிலும் சிக்கின.

உலகை உலுக்கிய அந்த புகைப்படங்களை அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் ட்ரேபாங்க் எஸ்எஸ்என்-674 (USS Trepang SSN-674) பதிவு செய்தது.

வெளியான புகைப்படங்கள் அமெரிக்க கடற்படை படைகளுக்கும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு "நெருக்கமான சந்திப்பு" ஆர்க்டிக் பெருங்கடலின் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி படுத்துகின்றன.

இந்த புகைப்படங்கள் 'டாப் சீக்ரெட் மேகசின்' (Top Secret Magazine) என்னும் இதழின் பக்கங்களில் இருந்து ஸ்கேன் செய்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு ஏவுகணையை உருவம் கொண்ட அந்த மர்ம பொருள் ஆனது கடலுக்குள் இருந்து வெளியே வருவதை உணர்த்துகிறது

இது பறக்கும் பொருளா..?? கடலுக்குள் நுழைகிறதா அல்லது கடலுக்குள் இருந்து வெளியேறுகிறதா என்பதை பற்றிய ஆய்வு இதன் ஒரிஜினல் புகைப்படங்களை கொண்டு அமெரிக்க ராணுவ ஆய்வகத்தில் ஆராயப்பட்டுக் கொண்டு வருகிறதாம்.

முக்கோண வடிவ யுஎப்ஒ ஒன்று பதிவானது அது கடலில் மூழ்குவதற்கு முன்னதாக பக்கவாட்டாக செல்வது போல பதிவாகியுள்ளது.

மற்றொரு யூஎப்ஓ ஆனது பாதிப்புக்கு உள்ளானது போலவும் அதில் இருந்து புகை வெளியேறுவது போலவும் பதிவாகியுள்ளது

இவை அனைத்துமே தாக்குதல் நீர்மூழ்கியின் அனலாக் கேமிராவின் (analog camera) மூலம் பதிவாக்கப்பட்டுள்ளது.

இது சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவலோ அல்லது பதிவாக்கபட்ட யூஏப்ஓ-க்களின் ஒரிஜினல் புகைப்படங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழ்நாட்டுல எதுக்கு இந்தி இருக்கனும்?


திராவிடம் - சிங்களம் இரண்டும் ஒன்றே...


ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்...



10  ம் பாவகத்தில்  நிற்கும் கிரகங்கள் விபரம்...
   
ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில் இந்த கிரகங்கள் இருந்தாலும் சொல்லப்பட்டுள்ள காரகத்துவ தொழில் அமையும் யார் வலிமையாக இருக்கிறார்களோ அது சம்பந்தமான தொழில் என யூகிக்கலாம்..

பத்தாம் அதிபதி 6,8,12ல் மறைந்திருந்தாலும் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் தொழில் அடிக்கடி சரிவையும் சிக்கலையும் சந்திக்கும்...

பத்தில் இருக்கும் கிரகம் பலமாக அமைந்து பத்தாம் அதிபதி வலிமை குறைந்திருந்தால் வலிமையாக இருக்கும் கிரகத்தின் தொழில் அமையும்.

சூரியன்  - அரசியல்வாதிகள்  , மந்திரிகள் , நீதிபதிகள் , அரசு ஊழியர் .

சந்திரன்  - நர்ஸ் ,  பணிப் பெண் , உணவு சார்ந்த துறை , மதியுகம்.

செவ்வாய் – படை வீரர்கள் , மருத்துவர் , நிலக்கிழார்  , வியாபாரி , இன்ஜினியர் , ஆயில்  காப்பிட்டூத் துறை.

புதன் – ஆசிரியர்  , கணக்காளார்கள் , தணிக்கைத் துறை , ஏஜெண்டுகள் , முதல்வர்கள் , ஜோதிட நிபுணர்.

குரு – பணம் புழங்கும் , நீதிபதி , ஜீவல்லரி , அறநிலையம் , மதம் , அறிவு  சார்ந்த  தொழில் , காப்பகம்.

சுக்கிரன் – இசை , கலைஞர்கள் , நறுமணப் பொருள்கள்  , துணி , ரத்தினம் , பெண்கள் சம்பந்தம் , ஒட்டல் ,  பத்திரிக்கை , மீடியா , வீட்டு உபயோக பொருள்.

சனீஸ்வரர்  - ஆலைகள் , லேபர் காற்றை  வைத்து  செய்தல்  , கமிஷன் , தரகர் , ஏற்றுமதி , இறக்குமதி ,   எந்திரம் , பூமி , அரசியல் தொடர்பு.

10  ம் வீட்டு  அதிபதி 12  பாவங்களில் நிற்கும்  பலன்...

1 . லக்னாதிபதி  10  ல் இருந்தால் தொழிலை இவர் தேடி செல்வார் . 10  ம் அதிபதி லக்னத்தில் இருந்தால்  தேடி வரும்.

2 . 2 ம் அதிபதி 10  ல் அமைந்தால்  வாக்கால்  ஜீவனம் அமையும் .
10  ம் அதிபதி  2  ல் அமைந்தால் குடும்பத் தொழில் அமையும்.

3 . 3  ம் அதிபதி  10  ல் இருந்தால்  கஷ்டபட்டு தொழில்  அமையும் .
10  ம் அதிபதி 3  ல் இருந்தால் தன் சொந்த முயற்சியால்  தொழில் அமையும்.

4 .  10  ம் அதிபதி 4  ல் இருந்தால்  பல தொழில்கள் அமையும் . 10  ம் அதிபதி  4  லிருந்தாலும்   வாகனத் தொழில் அமையும்.

5 . 5 ம் அதிபதி 10  ல் இருந்தால் ஆன்மீகத் தொழில் மற்றும் பெரிய  பதவிகளைப் பெறலாம்.

10   ம் அதிபதி 5 ல் அமைந்தால் அரசு உத்தியோகம் அமையும்.

6 . 6 ம் அதிபதி 10 ல் இருந்தால் அடிமை  உத்தியோகம் , செய்ய முடியும் .10  ம் அதிபதி  6 ல் இருந்தால்  அடிமை தொழில் அமையும்.

7  . 10  ம்  அதிபதி   8  ல் இருந்தால்  எந்த தொழிலும்  நிலையாக அமையாது .  10  ம் அதிபதி  9  ல் இருந்தால் தந்தை தொழில் அமையும்.

8 . 10  ம் அதிபதி 10  ல் இருந்தால் உன்னதமான தொழில்   அமையும் .

9 . 10  ம் அதிபதி  12  ல் இருந்தால்  பெரும்பாலும் இந்த  அமைப்பு  உள்ளவர்கள்  . வெளி நாட்டில்  வேலை  பார்ப்பவர்  ( அ ) வீட்டை விட்டு  வெகு தொலைவு  சென்று  வேலை  பார்ப்பவரகள்...

ஈஷா மையத்தை உடைத்து மூடி... கஞ்சா மற்றும் கொலை குற்றவாளியை சிறையில் தள்ள வேண்டும்...


பெங்களூரு போதைப் பொருள் விற்பனை வழக்கில் டெல்லி ஓட்டல் அதிபர், பாஜக நிர்வாகி உட்பட 15 பேர் கைது...



பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் நடிகை ராகினி திவேதியை தொடர்ந்து டெல்லி ஓட்டல் அதிபர், பாஜக நிர்வாகி உட்பட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவி மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த எச்.ஏ.சவுத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி கைது செய்தனர். இவர்கள்அளித்த தகவலின் பேரில் பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, தொழிலதிபர் ரவீந்திரன், ஓட்டல் அதிபர் முகமது அனூப் ஆகிய 3 பேரை ஆகஸ்ட் 27-ம் தேதி கைது செய்தனர்.

இந்த 3 பேருக்கு உடந்தையாக இருந்ததாக நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் ஷெட்டி, ஓட்டல் அதிபர்கள் பிரதீக் ஷெட்டி, கார்த்திக் ராஜ், ஆர்.டி.ஓ. ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோரை பெங்களூரு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:

நடிகை ராகினி திவேதி தனது நண்பர் ரவிசங்கர் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளார். போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு ராகினி திவேதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.

சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் ஷெட்டி கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் கன்னட திரையுலகினரை ஒருங்கிணைத்து இரவு விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அந்த விருந்தில் போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்ட 8 பேரின் செல்போன், மடிக்கணி னிகளை ஆராய்ந்ததில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வந்த விரேன் கன்னா என்பவரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் கைது செய்தனர். அவரது வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கின.

விரேன் கன்னாவை நேற்று பெங்களூரு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதேபோல பெங்களூருவில் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த 15 பேரை கைது செய்துள்ளோம்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2.13 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 35 செல்போன்கள், 17 மடிக்கணினிகள், 6 கார்கள், ரூ.36 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் 4 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கைதான ஓட்டல் அதிபர்கள் கார்த்திக் குமார், அபி போகி ஆகிய இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் பெங்களூருவில் தங்கி பயிலும் 6 வெளிநாட்டு மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்” என்றார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது, “பெங்களூருவில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கும்பல் கன்னட திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு என் தலைமையிலான மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததன் பின்னணியிலும் இக்கும்பல் இருந்தது” என்றார்...

ஆட்கள் கடத்தல் திருட்டு திமுக ஒழிக...


ஈர்ப்பு விதி - 1...



நீங்கள் அன்புணர்வின் கதிர்களை வெளிப் படுத்திக் கொண்டிருந்தால் மொத்தப் பிரபஞ்சமுமே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வது போலவும், அனைத்து மகிழ்க்கியான விஷயங்களையும் உங்களை நோக்கிச் செலுத்துவது போலவும், எல்லா நல்லவர் களையும் உங்களை நோக்கி நகர்த்துவது போலவும் தோன்றலாம். உண்மையும் அதுதான்.

உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள்.

உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.

நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும் போது, அன்பைத் தேடுகிறீர்கள். அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள்.

உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளையும் ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டிவிடும். 

உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம்பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.

நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும்.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும்.

அகக் காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள்.

நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.

ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள்.

ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி நிக வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.

அடுத்தநாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்...

இன்று தெருவில் திமிராக ஒட்டியவன் நாளை நமது வீட்டில் புகுந்து திணிக்க வெகு நேரம் ஆகிவிடாது...


ஒவ்வோரு மனிதர்களின் உடலிலும் ஒளிவட்டம் இருக்கும்...



அந்த ஒளிவட்டம் வெவ்வெறு நிறத்தில் இருக்கிறது.

ஞானிகள் – முனிவர்கள் – மகான்கள் தியானம் செய்து அந்த ஒளியை வலுப்படுத்தி சக்தியானவர்களாக மாறி விடுகிறார்கள்.

அதிகமாக மகான்களின் ஒளிவட்டம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்கிறது யோக சாஸ்திரம்.

அத்துடன் வெள்ளை நிறத்திற்கு மற்றவர்களை அடக்கியாலும் சக்தியும் உண்டு.  அதனால்தான் அரசியலில் இருப்பவர்கள் அதிகம் வெள்ளை நிறத்தை உபயோகிக்கிறார்கள்.

கால்குலஸ் என்னும் கணித வகையும், புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்து சொன்ன ஸர் ஐசக் நியூட்டன்தான் வெள்ளை ஒளிக்குள்
ஏழு வண்ணங்கள் இருக்கிறது என்று தன் ஆராய்ச்சியில் கண்டுபடித்து உலகத்திற்கு சொன்னார்.

இவர் விஞ்ஞானத்தில் அதிபுத்திசாலி என்றாலும் இவர் வாழ்வில் வேடிக்கையான சம்பவம் பல உண்டு.

ஒருநாள் ஐசக் நியூட்டன் தன் வீட்டின் கதவில் பெரிய ஓட்டையும் அதன் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போட்டார்.

இதை கண்ட நியூட்டனின் நண்பருக்கு ஒன்றும் புரியாமல், “எதற்காக பெரிய ஒட்டையின் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போடுகிறீர்கள்.?“ என்றார்.

அதற்கு நியூட்டன், “நான் பூனை வளர்க்கிறேன். அது ஒரு இடத்தில் உட்காராமல் வெளியே செல்வதும் வருவதுமாக இருக்கிறது. அந்த பூனைக்காக இருபத்தி நான்கு மணிநேரமும் கதவை திறந்து வைத்திருக்க முடியாது இல்லையா.? அதனால்தான் அது எந்த நேரமும் வெளியே சென்று வர, கதவில் ஒட்டைகள் போட்டேன்.“ என்றார்.

அதற்கு நண்பர், “அது சரி. அதற்கு ஏன் கதவில் இரண்டு ஓட்டை போட்டீர்கள்.?“ என்றார்.

அந்த பூனையுடன் ஒரு குட்டி பூனையும் இருக்கிறது. பெரிய ஓட்டையில் பெரிய பூனையும், சின்ன ஓட்டையில் குட்டி பூனையும் சென்று வருவதற்குதான்.? என்றார் நியூட்டன்.

உன் புத்திசாலிதனத்திற்கு ஒரு அளவில்லையா…? பெரிய ஓட்டையிலேயே இரண்டு பூனைகளும் போய் வருமே. என்றார் நண்பர்.

நியூட்டனை போல் அதிமேதாவியாக இருப்பவர்களும் சில நேரத்தில் மூலை மந்தமாக வேலை செய்யும். அதனால் தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள், யானைக்கும் அடிசறுக்கும். அதிகம் சிந்தித்தால் மூலை சூடாகி குழும்பி விடும். என்று.

ஒரு பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் பதட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பதை மறந்து, அந்த சிறு பிரச்சனையை பூதகரமாக்கி விடுவோம். பிறகு, இதை இப்படி கையாண்டு இருக்கலாமோ ? என்று சிந்திப்போம்.

இப்படிபட்டவர்கள் நவரத்தினங்களில் ஒன்றான முத்தை அணிந்தால் நல்ல புத்தி கூர்மையை அடைவார்கள். சிறந்த யோகத்தையும் பெறுவார்கள். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் முத்துக்கு உண்டு. சமுதாயத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தும் ரத்தினம் முத்து. செல்வத்தை பெருக்கும். பண பிரச்சனை தீர்க்கும். மற்றவர்களின் உதவியை சுலபமாக பெற வைக்கும் ஆற்றலும் முத்துக்கு இருக்கிறது.

முத்தை அணியும் முன் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி, உங்களுக்கு முத்து ரத்தினம் சாதகமாக இருக்குமா?  என்று ஆலோசனை பெற்ற பிறகு அணிந்தால் இன்னும் யோகம் ஏற்படும்.

ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதி இரண்டோ அல்லது தேதி – மாதம் – வருடம் கூட்டினால் இரண்டோ வந்தால் முத்தை அணியலாம்.

உதாரணத்திற்கு - 2 – 11 -29 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம். 8.4.1970 என்றால், 8 + 4 + 1 + 9 + 7 + 0 =  29 வருகிறது. இதில் 2 + 9 = 11 வரும்.  1+1=2 ஆக மொத்தம் 2.

இது உயிர் எண். இதன் ஆதிக்கம் சந்திரன். சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம்...

மருத்துவ கல்வி சான்றுகளை மீண்டும் மறுபதிவு செய்ய அறிவிப்பு...



"கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்காக செய்யப்படும் முறையற்ற செயல்" - என
மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு..

"வாழ் நாள் பதிவு கட்டணமும் செலுத்தி மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள நிலையில் மீண்டும் பணம் வசூலிப்பது ஏன் " ? என்றும் மருத்துவர்கள் கேள்வி

"கொரோனா காலத்தில் 58 வயதுக்கு மேல் தமிழகத்தில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்பதை கண்டறிய இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது" - என தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் தகவல்

தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவ கல்வி சான்றுகளை மீண்டும் மறுபதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான பதிவு பெற்ற மருத்துவர்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 ஆயிரத்தில் தொடங்கி 40 ஆயிரம் வரையிலான பதிவெண்ணை கொண்ட மூத்த மருத்துவர்கள் தங்கள் மருத்துவ கல்வி பதிவை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி நாளாக 31ந்தேதி அறிவிக்கப்பட்டது.

மூத்த மருத்துவர்கள் ஒவ்வொருவரும் 510 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்கள் கல்வி சான்றிதழ்களை மீண்டும் மருத்துவ கவுன்சிலில் புகைப்படத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 ந்தேதிக்கு பின்னர் 40 ஆயிரத்தில் தொடங்கி 60 ஆயிரம் வரையிலான பதிவெண்ணை கொண்ட மருத்துவர்கள் தங்கள் சான்றிதழ்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில்..! இந்த கொரோனா காலத்தில் 58 வயதுக்கு மேல் தமிழகத்தில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்பதை கண்டறிய இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த உத்தரவு , கொரோனா காலத்திலும் அஞ்சாமல் மக்கள் சேவையாற்றும் மூத்த மருத்துவர்களை அவமதிக்கும் செயல் என்றும் தனிப்பட்ட நபர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்காக செய்யப்படும் முறையற்ற செயல் என்று கொதிக்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது கொரோனா காலகட்டத்தில் இப்படிப்பட்ட உத்தரவு ஏன் ?என்றும், ஏற்கனவே மருத்துவர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ் கொடுத்து வாழ் நாள் பதிவு கட்டணமும் செலுத்தி மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள நிலையில் மீண்டும் பணம் வசூலிப்பது ஏன் ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் மருத்துவ பதிவு முறை தேசியமயமாக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் மீண்டும் பதிவு என்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும் ? என்றும் மூத்த மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே டிஜிட்டல் பெயர்பலகை எனக்கூறி மருத்துவர்களிடம் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ கவுன்சில் பணம் வசூலித்தும் அது செயல்பாட்டுக்கு வராதது குறிப்பிடதக்கது...

இந்தி தெரியாது மூடிட்டு போங்கடா...


எப்பொழுதோ அழிந்துவிட்ட டீனோசௌரஸை, 11ம் நூற்றாண்டுத் தமிழன் எப்படிக் கண்டிருக்க முடியும்?



கம்போடியா நாட்டில் அன்கோவார்ட்  (Ankor wat) என்னும் மிகப் பிரமாண்டமான சிவன் ஆலயம், ஒரு தமிழ் மன்னனால் கட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

இந்தக் கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..

எகிப்தில் உள்ள பிரமிட்டுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதேயளவு முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்பட வேண்டும்..

இந்தப் பழமையான கோவிலில் நம்பவே முடியாத ஒரு அதிசயமான நிகழ்வு நடந்திருக்கிறது..

அன்கோவாட்டே ஒரு அதிசயம். அதில் இன்னுமொரு அதிசயம்.

அன்கோவாட் கோவிலின் சுவரொன்றில் ஒரு டீனோசௌரஸின் (Dinosours) படம் செதுக்கப்பட்டிருக்கிறது.

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

டீனோசௌரியாக்கள் பூமியிலிருந்து அழிந்து போய் இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகின்றன.

அவற்றின் எலும்புக்கூட்டுச் சுவடுகளை (Fossils) நவீன மனிதர்களான நாம், 19ம் நூற்றாண்டில்தான் கண்டு பிடித்தோம்..

அந்த எலும்புக்கூடுகளின் சுவடுகளை வைத்து டீனோக்களின் வடிவங்கள் இப்படி இப்படி இருக்கலாமெனத் தெரிந்து கொண்டோம்..

ஆனால் 11ம் நூற்றாண்டிலேயே 'ஸ்டெகொசௌரஸ்' (Stegosaurus) என்ற டீனோவின் உருவத்தை அன்கோவார்ட் சிவன் ஆலயத்தில் செதுக்கியுள்ளார்கள்..

இது எப்படிச் சாத்தியமாகும்?

உண்மையில் நம்பவே முடியாத அதிசயம் இது..

எப்பொழுதோ அழிந்துவிட்ட டீனோசௌரஸை, 11ம் நூற்றாண்டுத் தமிழன் எப்படிக் கண்டிருக்க முடியும்?

அதன் எலும்புச் சுவடுகளைக் கண்டிருந்தாலும், எப்படி அதன் வடிவத்தைக் கணித்திருக்க முடியும்?

கொஞ்சம் யோசியுங்க மக்களே...

இதற்கு "நானும் ஒரு விவசாயி" என்று சொல்லும் தமிழர் விரோதி எடப்பாடி பதில் என்ன?


திராவிடன் என்கிறவன் யார்?


தமிழனை வீழ்த்தியது ஆரியன் என்னும் திருட்டு திராவிடனே (வடுகர்கள்)...


மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை.

அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்..

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா?

எந்த ஆரிய பார்ப்ன் தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்.

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.

நாயக்கர் ஆட்சியின் கேடுகள் :

உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு, சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.

இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.

அதுவரை இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.

தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.

தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.

அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.

தமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை..

ஒவ்வொரு பாளையத்திலும் "இனி தமிழன் எழ கூடாது" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர்.

தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.

மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.

'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.

Example: http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html

பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது.

இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.

இதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:

தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர், தெலுங்கர், மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.

தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின் (கன்னடர், தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது..

மேலும் ஆரியன் என்பவன் சமஸ்கிருதம் மொழி உடையவன் உண்மையெனில்.. தமிழில் இருந்து பிரிந்து சமஸ்கிருதம் கலப்பில் உருவான தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மொழிக்காரர்கள் தானே ஆரியன்..

ஆரியனும் திராவிடனும் ஒன்று இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...

பாஜக சங்கிகள் நிலைமை...


அடேய் வடக்கன்ஸ் 🤣😂😅


பெரியார் என்கிற கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டோருக்காக போராடினாரா?



தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்...

துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்..

வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்..

அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்..

இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது .

இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது..

தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் என்கிற ராமசாமி நாயக்கர்  அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை.

இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை.

இதில் இருந்து பெரியார் என்கிற கன்னட ராமசாமி நாயக்கன்  தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்...

இவனுங்க எதுக்கு குறுக்க மறுக்க ஓடுறானுங்க..? 🤣


திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் சாதனை...


கீரை+மரக்கறி+உப்பு - ஆரோக்கியக் குறிப்புகள்...



உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :

உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவே தான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

தூதுவளை :

செவிமந்தம், செவி அழற்சி, காசம், உடல் நமைச்சல், மதரோகம், திரிகோஷம், உட்குத்தல், விந்து தானாகப் பிரிதல், இருமல், மூச்சுத்திணறல், கோழைகட்டுதல் ஆகியவற்றை வேரோடு கிள்ளி எறிந்து விடும். வெற்றியையே அள்ளித்தரும் அற்புதத் தமிழ்மூலிகை. அகத்தியரும் வள்ளலாரும் இதை ‘கபநாசினி’ என்று போற்றினர்.

பொன்னாங்கண்ணி:

விழியைப் பற்றிய வாதகாசம், பார்வையில் தடுமாற்றம், பக்கவாதம், மூலச்சூடு, ரோகம், பிலிகம் சொறிசிரங்கு, தேமல் போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்திடும். நோய்கள் கண்டால் இக்கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் பஞ்சாய்ப் பறந்து போகும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து தேக உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்கும்.

புளியாரை:

பித்தம்_மயக்கம்_தலைச்சுற்றல் மூலவாயு_வயிற்றுப்போக்கு பேதிவாந்தி இவற்றை நமது உடலைத்தீண்ட விடாது எதிர்த்து நிற்கும் ஓர் அற்புதக்கீரை. ரத்தத்தைச் சுத்தி செய்து கொடுக்கும் வல்லமை நிறையவே உண்டு. எனவே சித்தர் பெருமக்கள் ‘காயசித்தி’ ‘பித்தமார்த்தினி’ எனப் பாராட்டினார்கள்.

முருங்கைகீரை:

உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

பசளி:

சிறுநீர்க் கோளாறுகள், மூத்திரக்கடுப்பு, வாந்தி, மூத்திரக்காய்கள் கோளாறு இவற்றைக் களையவல்ல அற்புத மருத்துவ சஞ்சீவி. கால்சியம், பாஸ்பரஸ். சோடியம் குளோரின் வைட்டமின் ஏ.பி.சி.; புரதம் வெஜிடபிள் ஹீமோகுளோபின் அமீன் ஆசிட் போன்ற கணக்கற்ற ஊட்டச்சத்துக்களை ஒருசேர உள்வாங்கிக் கொண்ட கீரைகளில் அரசன். மொத்தத்தில் இது ஒரு தங்க பஸ்பம். முறையாக உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் ‘சிறுநீரகக் கோளாறு’ உங்களைச் சீண்டிப் பார்க்கவே அச்சப்பட்டு வெளியே நின்று தன்னைத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். இது சத்தியம்.

காய்கறிகளைவிட கீரைகளில் பசுமைச்சத்து இருப்பதால் பல்வேறு நன்மைகள் வந்தடைகின்றன. இதில் உள்ள தாதுப் பொருள்கள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. இதனால் நமது உடலில் சேரும் கழிவுப் பொருள்களை வெளியேற்றிட ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.

காய்கறிகள்:

அவரை, முருங்கை, தூதுவளங்காய், அத்திக்காய், முள்ளிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, பேயன், வாழைத்தண்டு, கொத்தவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளைப் பூசணிக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி, தக்காளி வெள்ளரிக்காய் போன்ற காய்களை மூடிய பாத்திரத்தில் மிதமாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. மேற்கண்ட காய்கறிகள் சிலவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளில்தான் நார்ப்பொருள்கள் அதிகமாக உள்ளன. வெள்ளரிக்காய் கோடைக் காலத்திற்கு உகந்தது. நமது வயிற்றில் உண்டாகின்ற புளிப்புத் தன்மையைக் கட்டுப்படுத்தும் சக்தியை வெள்ளரி தனக்குள்ளே சேமித்து வைத்திருக்கிறது.

காரத்தன்மையால் உடலில் உண்டாகின்ற, புளிப்புத் தன்மையால் உண்டாகின்ற அசுத்தப் பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த உயிர் அணுக்களை உற்பத்தி செய்கின்ற உந்து சக்தி உள்ளது. ரத்த உயிரணுக்களின் சேர்க்கையில் மிக அதிகமாகஉள்ள உப்புப்பொருளான பொட்டாசியம் குளோரைடு பொட்டாசியம் பாஸ்பேட் அதிகமாக உள்ள ஓர் அற்புதமான காய் வெள்ளரிக்காய்.

நாம் உட்கொள்ளும் Methionine புரதம் உடலில் Homocy Stein என்ற நஞ்சாக மாறுகின்றது. இந்த விஷப் பொருள் உடலின் இருதயத்துடிப்பையும் இருதயத்தையும் பெரிதும் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த ஹோமோசிஸ்டின் என்ற நச்சுப் பொருளை வெளியேற்றும் சக்திவைட்டமின் ‘‘பி6’’_ல் உள்ளது என அறிவியல் அறிவித்துள்ளது. இத்தகைய சக்தி அதிகமாக உள்ள பேயன் வாழைப்பழம், ரஸ்தாளிப்பழம் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, பேரீச்சை இவற்றை உண்பது உத்தமம்.

மாங்காய், கொய்யா, பலாப்பழம் இவற்றை வெகுவாகக் குறைத்துக் கொள்வது நல்லது. பால், பலா, மாம்பழம், மீன், கோழி இவை ஒன்றுக்கொன்று எதிர்மறை சக்திகளை உருவாக்கும் முரண்பாடுகள் கொண்டவை. பேதி வாந்தி சிலநேரங்களில் உயிருக்குக் கூட கேடு வந்து சேரலாம். இவற்றை ஒன்றோடு ஒன்று சேர உதவிடாதீர்கள். எச்சரிக்கைமிக தேவை.

கேரட், பீட்ரூட், டர்னிப், நூக்கல், உருளைக்கிழங்கு இவற்றைச் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு தவிர்ப்பது நல்லது.

சுண்டக்கடலை, தட்டப்பயிறு, மொச்சைப் பயிறு, இவற்றைச் சிறிதளவாக வாரத்திற்கு ஒருமுறை பகல் பொழுதில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை.

நிலக்கடலை, முந்திரி, பாதம், பிஸ்தா பருப்பு, சாரப்பருப்பு வகைகளில் கொழுப்புச்சத்து விஞ்சி இருப்பதால் தனியாகச் சாப்பிடக்கூடாது. மாதத்திற்கு இருமுறை ஏதாவது உணவோடு கலந்து சிறிய அளவே உண்ணவேண்டும்.

முளைகட்டின துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, ஜீரகம், வெந்தயம், இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.

பசுவின் தயிர், மோர், நெய் சேர்த்துக் கொள்வதில் தண்ணீர் கலந்த மோர் சிறப்பானது.

கடையிலே விற்கப்படுகின்ற ஊறுகாய்வகைகளை ஒதுக்குங்கள் வீட்டிலேயே காரம் எண்ணெய் அதிகம் சேர்க்காது, உப்பு மிகமிகக் குறைவாகச் சேர்த்து தயாரித்துக் கொள்வது உத்தமம். எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு, நெல்லிக்காய், மாஇஞ்சி, பச்சைமிளகு மாவல்லிக்கிழங்கு (நன்னாரி), இவை உங்களது ஊறுகாய்களுக்கு மூலப் பொருளாக இருத்தல் அவசியம்.

உப்பு:

நாம் சாப்பிடுகின்ற எல்லா உணவு வகைகளிலேயும் ‘உப்பு’ வஞ்சனை இல்லாமல் நமக்கு சுவையைக் கூட்டிக்கொடுத்து மறைமுகமாக ‘நஞ்சினை’ உடலுக்குள் கூட்டி வருகிறதை நாம் மறந்து விடக்கூடாது. ‘உப்பே தப்பு’ என்பார்கள் தமிழ் மூலிகை மருத்துவர்கள். உப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது கடல் உப்பே. உப்பில் சோடியம் குளோரைடு வெகுவாக உள்ளது. உங்கள் உடலில் ஏதாவது ரத்தக்காயம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் உப்பை வைத்துப்பாருங்கள். தாங்க முடியாத எரிச்சல் இருக்கும். அந்த அளவிற்கு வீரிய சக்தி கொடுக்க வல்லது உப்பு. இந்த மாற்றமே நமது குடலிலேயும் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்ற போது ஏற்படுகின்றது.

ஆனால், இந்த உபாதையை நம்மால் உணர இயல முடியவில்லை. காரணம், நமது நாக்கின் ருசியே அந்த எரிச்சலை அரண் போட்டு உணரவிடாது தடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன். நீங்கள் சாப்பிடுகின்ற 1 கிராம் உப்பின் எரிச்சலைப் போக்க 70 கிராம் தண்ணீர் குடித்தால் தான் உப்பின் நஞ்சுத் தன்மையைப் போக்க இயலும் என மேலை நாட்டு மருத்துவக் குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் உடலின் எடை கூடுகிறது. உப்பே இல்லாது உணவை உட்கொள்ளப் பழக்கிக் கொள்வது நல்லது. துவக்கத்திலே உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் உங்கள் உடலின் பகுதிகளில் சிறுநீரகத்தில் தான் உப்பு தேக்கமாகிறது. அதை நாம் குடிக்கின்ற தண்ணீராலேயே அன்றாடம் வெளியேற்றுகின்றோம். உடலில் உப்புச்சத்துக் குறையக் குறைய உங்களது எடையும் சீராகவே இருக்கும்.

கடற்கரைச் சாலைகளில் உள்ள வானுயர்ந்த கற்கோட்டைகள் எல்லாமே அரித்து அரித்து உதிர்வதைப் பார்க்கின்றோம். கற்கோட்டைகளையே அரித்து விடுகின்ற உப்பு உங்களது உடலை விட்டு வைக்குமா? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மில் பலர் உப்பில்லா உணவு நமது நினைவாற்றலைக் குறைக்கும் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். இது தவறு. உப்பு உங்களது சிறுநீரகத்தை இயங்காது தடுத்து விடுவதோடு, மூளை வளர்ச்சியையும் பெரிதும் பாதிப்படையச் செய்து விடுகிறது.

ஆங்கில மருத்துவம் இந்த வகையில் நம்மைக் குழம்புகிறது. சில நேரங்களில் உப்பு தேவை என வாதிடுகிறது. இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் சுவடு தெரிந்துவிட்டால் உப்பை நிறுத்துங்கள் என சிவப்புவிளக்கை கையிலே தூக்கிப் பிடிக்கிறது. ஒரு கையிலே பச்சை விளக்கையும் மற்றோர் கையில் சிவப்புக் கொடியையும் பிடித்து நம்மை குழப்புகிறது.

உப்பின் அறிவியல் பெயர் சோடியம் குளோரைடு. மனித உடல் வளர்ச்சிக்கு இரும்பு பொட்டாஷ், கந்தகம், கால்சியம் தேவைதான் உப்பை மனிதனால் ஜீரணிக்க இயலாது. உப்பை உண்பதால் மனிதனது சிறுநீரகம், கல்லீரல், இதயம், இரத்தக் குழாய்கள், மூளை வெகுவாக பாதிக்கப்படுகின்றன என அமெரிக்க மருத்துவர் பால் பேக்கர் தெரிவிக்கின்றார்.

உப்பு சாப்பிடுவதால் நரம்புகளில் எரிச்சலை உண்டாக்குகிறது. நமது உடலில் உள்ள கால்சியத்தைத் திருடி பற்களையும் எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்துவிடுகிறது. நமது குடலில் உள்ள லேசான சவ்வுகளை அரித்து குடற்புண் பிராங்கைடிஸ் போன்ற நோய்களை மிகச் சுலபமாக பதியவைக்கிறது இந்தப் பொல்லாத உப்பு. எனவே இன்றிலிருந்து உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முற்றிலும் அகற்ற முயற்சி செய்யுங்கள்.

சரி உப்பு வேண்டாம். நமது உடலுக்கு உப்புச் சத்து வேண்டாமா? என்று நீங்கள் இதழ் மூடி முணுமுணுப்பது தெரிகிறது. உப்புச் சத்துக்கள் உள்ள இயற்கை உணவுகளை உண்பதில் தவறில்லை.

நமக்காகவே நமது சித்தர்களும் மேலைநாட்டு மருத்துவமும் வாய் மொழிந்தவை இதோ...

மூளைக்கீரை, வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, காரட், சௌசௌ, வெண்பூசணி, வெங்காயக்கீரை, முட்டைக்கோஸ் நூல்கோல் வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, ஆப்பிள், திராட்சை, வெங்காயம், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைத்து விடுகிறது.

உங்கள் நலத்திற்குத் தேவையான உப்பு சத்து இயற்கை உணவிலேயே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சுகமான வாழ்வுக்கே நீங்கள் சொந்தக்காரர் ஆவீர்கள்...

சமூக விரோதிகள் கூடாரம் திருட்டு திமுக...


முதலில் சீரியல்களை தடை செய்ய வேண்டும்...


திருட்டு திராவிடம்...



முகமதியரின் காட்டுத்தனத்திற்கு அஞ்சி பெண் பிள்ளைகளோடு ஓடிவந்த கும்பல் யார் என்று கொஞ்சம் கைத்தூக்குங்கள் ஒறவுகளே?

ஜக்கமா என்ற பெண்ணின் தலைமையில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக தென் திசை வழியாக தமிழகத்தில் உள்நுழைந்த கூட்டம் யாரென்று கொஞ்சம் கையத்தூக்குங்க ஒறவுகளே?

பாதுகாப்புகாக அஞ்சி வந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த அறம் சார்ந்த தமிழினத்தை வஞ்சித்தது யாரென்று கையத்தூக்குங்க ஒறவுகளே?

தில்லுமுல்லு தகிடுதத்தம் பண்ணி தமிழரின் பட்டங்களை தன்வயப்படுத்தி அடைக்கலம் கொடுத்த தமிழ் மண்ணை அபகரித்தும்,

வாழ்வளித்த வள்ளலான தமிழினத்தை துரோகித்து ஒற்றுமையுடன் இருந்தவர்களை சிதறடித்து உண்டுக்கொழுக்கும் கூட்டமே கொஞ்சம் கையத்தூக்கி அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் ஒறவுகளே?

வரலாறு உம்மை மன்னிக்காது...

மறுபிறப்பு...



தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட
திருக்குறளில் அறத்துப்பாலில் நிலையாமை பற்றி குறிப்பிடும் போது...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு என்று.

இறப்பை உறங்குவது போலும் என்றும்.

பிறப்பை உறங்கி எழுவது போலும் என்கிறார்.

அப்படிப் பார்க்க போனால் நாம் ஒவ்வொருவரும் தினம் காலையில் புதுப்பிறவி எடுப்பதாகத் தானே
பொருள்.

ஆனால் வாழும்போதே மரணத்தின் வாயிலைத் தொட்டு திரும்புவதை என்னவென்று சொல்வது ?

அதை மறுபிறவி என்று சொல்லலாமா?

எனது இந்த வாழ்நாள் பயணத்தின் போது, இதுவரை பல முறை மரணத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அதுகூட மறுபிறப்பு போன்றது தான் என்பது என் கருத்து...

பாஜக டூபாகூர் உபி யோகி பரிதாபங்கள்...


இதுவரை, மதுரை பக்கம் மட்டும் போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருந்த அஞ்சாநெஞ்சன் பாய்ஸ், இப்போ கோயம்புத்தூருலயும் ஒட்ட ஆரம்பிச்சிட்டாங்க. வரவர திமுக ஸ்டாலின் பொழப்பு ரொம்ப மோசமாயிடுச்சே….


கொரோனா லாக்டவுன் வேண்டாம்.. கட்டாய தடுப்பு மருந்து வேண்டாம்...



அரசு கொரோனா சோதனைகளை நிறுத்த வேண்டும்..

ஊடகங்கள் கொரோனா பற்றி செய்திகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்..

கொரோனா ஊரடங்கு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட வேண்டும்..

மாஸ்க் வேண்டாம்..

சமூக இடைவெளி வேண்டாம்..

எங்கள் உரிமைகளை பறிக்காதே..

முக்கியமாக குழந்தைகளை சுதந்திரமாக நடமாட விடு.."

என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்..

https://www.irishpost.com/news/anti-lockdown-and-anti-mask-protests-taking-place-in-dublin-191370

வெந்தயத்தின் மருத்துவக் குணம்...



வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...