01/06/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 15...


காலத்தால் அழிக்க முடியாத இறை காவியம் ஒன்று இப்பூமியில் விரைவில் அரங்கேற்றப்பட உள்ளது, இதனை தீர்க்க தரிசிகளின் தீர்க்க தரிசனங்கள் கடந்த 1000 வருடங்களாக இப்புவியில் தனது வெளிப்பாட்டினை வசனங்களாக வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சத்திய யுகத்தின் தீர்க்க தரிசனங்களும் பல்வேறு காலக் கட்டங்களில் இறைவன், மனிதர்கள் வாயிலாக இப்புவியில் நடக்கும் பல மாற்றங்கள், சம்பவங்கள், அரசியல் பிண்ணணிகள், புவியின் மாற்றங்கள், அழிவுச் சம்பவங்கள், இயற்கையின் மாற்றங்கள், வானிலை மாற்றங்கள், இறை அதிசயங்கள் போன்றவற்றை தீர்க்கதரிசனங்களாக வெளிப்படுத்தி வருகிறார்.


பொதுவாக மனிதர்கள் தன்னை சுற்றி நடக்கும் பல சம்பவங்கள் சூழ்நிலைக் காரணங்களை மட்டுமே உண்மை என நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை அன்று. அது அனைத்துமே இறைவன் மனிதகுலத்திற்கு தரும் ஒரு எச்சரிக்கை செய்தியே ஆகும். இதுவே இன்று சத்திய யுகத்தில் மனிதகுலம் அறிய வேண்டிய தீர்க்கதரிசனங்கள் ஆகும்.

இன்று சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 15-ம் தீர்க்க தரிசனம் ஆகும். இந்த 15-ம் தீர்க்க தரிசனம் பல குறிப்புகளை உள்ளடக்கிய இறை தீர்க்கதரிசனங்கள் ஆகும். இந்த 15-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் முதலாவதாக தெரிந்து கொள்ளும் தீர்க்க தரிசனம் எதுவென்றால் “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 13, 14, 15-ம் தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள பல்வேறு குறிப்புகள் நடைபெறும் காலக் கட்டமாக இக்காலக் கட்டம் இருக்கும் என 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


மன்னார் வளைகுடா புயல் தமிழகத்திற்கு பலத்த சேதங்களை உருவாக்கும் என்றும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் ஒருவனின் திருநாமம் உலகம் முழுவதும் அதிசயமாகப் பேசப்படும் காலம் இக்காலம் என்றும், அவனின் இருப்பிடமே இறைவன் இடம் பெறும் திருச்சபை என்றும், அதன் விபரங்களை தற்போது உலக மக்கள் மிகுந்த ஆவலுடன் தேடி வருகின்றனர் என்று 15-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை மெய்பட கூறுகிறது.


மக்களின் மனக்குறையை அறிந்து அதனை தீர்க்கும் மன்னவர் எவரும் இப்புவியில் இல்லையென்றும், இனிமேல் ஒருவன் வருவான் என்றால் அது சத்திய யுகத்தின் பிரஜாதிபதியாகவே இருப்பான் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட இங்கே எடுத்துக் கூறுகிறது.




சுண்ணாம்பு மலை ஒன்று பொது மக்களால் தற்போது அடையாளம் காணப்படும் என்றும், அந்த மலையில் தென்படும் குகையில், மனிதகுலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்த சான்றுகள் தற்போது கண்டறியப்படும் என்றும், 7 உலகத்தில் மனிதகுலம் வாழ்ந்ததற்க்கான சான்றுகள் அந்த குகையில் கண்டறியப்படும் என்றும் 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. “மெக்சிகோ“ கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலம் இக்காலம் என்றும், “சத்திய யுகம்“ எனும் நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு குறிப்புகளும் இனி காலதாமதமின்றி நடக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.




கடலூர், வேதாரண்யம், விசாகப்பட்டினம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி, கேரளா, பாம்பே கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதிகள் என 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கையை மீண்டும் பதிவு செய்கிறது.


மழைக்காலம் தற்போது இது என்றாலும் “பேய்மழை“ என்று அழைக்கப்படுகின்ற மழைக்காலமாக இக்காலம் இருக்கும் என்றும், தமிழகத்திற்கு இந்த மழைக்காலம் மிக, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


ஊட்டி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும்,  அதிகமான நிலச்சரிவு நடக்கும் பகுதியாக இது இருக்கும் என்றும், அங்கு வாழும் மக்கள் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு இதுவென்று 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே தெரிவிக்கின்றது.


தெய்வீக சங்கல்பம் ஒன்று சமயபுரத்தில் நடைபெற உள்ளது என்றும், அத்திருத்தலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. இனி ஊர்கள் தோறும், வீடுகள் தோறும் “வேப்பிலை“ தோரணங்கள் தொங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


குற்றாலம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு நடக்கும் சில சம்பவங்கள் மக்களுக்கு பீதியை ஏற்படுத்த உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியை இங்கே பதிவு செய்கிறது.


வடமாநில கும்பல் ஒன்று சென்னையில் பல திடுக்கிடும் சம்பவங்களை நிகழ்த்தும் என்றும், இதனால் மக்கள் பீதியும், குழப்பமும் அடைவார்கள் என்றும், காவல்துறை விரைந்து செயல்பட்டு அக்கும்பலை பிடிக்கும் என்றும், அவர்களின் பிண்னணியில் உள்ள செய்திகள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டு பெரும் சேதங்கள் தவிர்க்கப்படும் என்று 15-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.


மன்னார் வளைகுடா புயல் பற்றி செய்திகளை அரசு மக்களிடையே சரியாக கொண்டு போய் சேர்க்காது என்றும், இதனால் பல விளைவுகள் தமிழகம் சந்திக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மீண்டும் ஒரு எச்சரிக்கையை இங்கே பதிவு செய்கிறது.


பாகிஸ்தானின் அத்துமீறல் செயலால் காஷ்மீரில் மீண்டும் ஒரு “கலவரம்“ வெடிக்க உள்ளதாகவும், இதனால் ஆளும் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்றும், அதன் எதிரொலியே காஷ்மீரில் திடீரென்று ஒரு “புரட்சி“ வெடிக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மீண்டும் காஷ்மீர் கலவரத்தை பற்றி ஒரு செய்தியை இங்கே பதிவு செய்கிறது.


முருகன் சந்நதியில் அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், அது நடைபெறும் நாள் அன்று தமிழகத்தில் உள்ள ஒருவன் அதனை நான்தான் நிகழ்த்தியதாகவும், தான் “முருகப்பெருமானின் அவதாரம்“ என்று பகீரங்கமாக அறிக்கை விடுவான் என்றும், அவனின் அறிக்கைக்கு பின்பு அவன் இருக்கும் அந்த “குடிலில்“ திடீரென்று பல “அசம்பாவிதங்கள்“ நடைபெறும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

இறைவனின் அவதாரங்கள் மனித வடிவில் என்ற கூற்றை இவனைப் போன்றவர்கள் தமிழகத்தில் பலர் பொய்யான பிரச்சாரங்களை இனி மக்கள் மத்தியில் வெளியிடுவார்கள் என்றும், அவர்கள் மீது இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் இனி நேரடியாக இறங்கிட உள்ளதாக 15-ம் தீர்க்க தரிசனங்கள் இங்கே மெய்பட கூறுகின்றன. அனைத்து மதத்திலும் உள்ள போலியான மனிதர்களை இனி மக்கள் அடையாளம் காணும் காலமாக இக்காலக் கட்டம் அமைய உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


திருச்செந்தூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், கடல் சார்ந்த சம்பவம் ஒன்று அங்கு உடனே நடக்க உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு தெரியப்படுத்துகிறது.

இறைவனின் இறுதிசபையை பற்றி மக்கள் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள் என்றும், இறைவனின் “முத்திரை“ பதிந்த அந்த திருச்சபை தமிழகத்தில் தற்போது இயங்கி வருகிறது என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


ஆதிசக்தி யின் அவதாரக் கொள்கையே சத்திய யுகம் ஆகும். அந்த சத்திய யுகத்தின் போர்க் காலக் கொள்கையின்படி இப்பூமியின் மீது தற்போது நீயாயத் தீர்ப்புகள் இறங்கிட உள்ளது என்றும், அதில் முக்கியமாக தமிழகத்தில் தற்போது அது நிகழும் காலமாக உள்ளது என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இந்திய அரசியல் அமைப்பில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என மக்கள் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதனால் பல அரசியல் சாசனங்கள் மாற்றி வரையறுக்கப்பட உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


உளவியல் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு ஒரு யோகா அமைப்பு தனது “ஹீலிங் முறையில்“ சிகிச்சை அளிக்கும் என்றும், இது உலக மக்களிடையே அமோக வரவேற்பை பெற உள்ளதாகவும், இது உடனே நடக்க உள்ள ஒரு நிகழ்வு என்றும், இதன் பின்னரே “மருந்து“ என்ற ஒன்றை தவிர மாற்றுவடிவம் என்று இவ்வுலகில் பல அதிசயங்கள் உண்டு என்பதே மக்கள் சமுதாயம் நம்பத் துவங்குவார்கள் என்று 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை மெய்பட இங்கே எடுத்துக் கூறுகிறது.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற 8-ம் தீர்க்கதரிசனத்தில் உள்ள பல குறிப்புகள் நடக்கும் காலமாக இக்காலம் உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் இங்கே தெரிவிக்கின்றது.

ஆன்மீகம் சார்ந்த ஒருவரின் இறப்பு, அதனை தொடர்ந்து சினிமா பிரபலங்களில் ஒருவரின் இறப்பு, அரசியல் பிரமுகர் ஒருவரின் இறப்பு என பல நிகழ்வுகள் நடக்கும் காலக்கட்டம் இதுவாகும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


கர்நாடகாவில் மீண்டும் அரசியல் சார்ந்த குழப்பங்கள் அங்கு உருவாகும் என்றும், இதனால் அங்கு பல கலவரங்கள் ஏற்பட உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


வானத்தில் இனி பல அதிசயங்களை மக்கள் காண்பார்கள் என்றும், அது இறைவனின் வருகைக்கான “சமிக்கைகள்“ என்று 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

இறைவனின் வருகையை எதிர்நோக்கி நாம் விழிப்புடன் காத்திருப்போமாக.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

மதங்களும்.. கடவுள்களும்...





மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை..

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப் படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

தற்சார்பிலிருந்து பிரித்து செல்லும் டிஜிட்டல் வணிகம்...












மயங்கி கிடக்கும் மனிதன்...



அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து முடித்த பிறகு இறைவன் மனிதனை படைத்தான் தனது கடேசி படைப்பு மனிதன் என்பதனால் அவனை சிருஷ்டிப்பதில் மட்டும் அவன் தனிக்கவனம் செலுத்தினான் அதனால் தான் மனிதர்கள் அனைவரும் ஏறக்குறைய இறைவனை போலவே இருக்கிறார்கள்.

கடவுளிடம் இருக்கும் ஒரே ஒரு சக்தி மட்டுமே மனிதனிடம் இல்லை மனிதன் நீரில் மிதக்க படகினை கண்டான் வானில் பறக்க விமானம் கண்டான் பூமியை அகழ்ந்து பார்க்க சுரங்கம் கண்டான் அன்னை பூமியில் சாதித்தது போதுமென்று வானமண்டலத்தை அளக்க துவங்கினான் சந்திரனில் மிதித்து செவ்வாயை எட்டிபிடித்திருக்கும் மனிதன் இதுவரை பெறாத ஒரே சக்தி புதிய உயிர்களை படைப்பது மட்டுமே படைக்கும் தொழிலை மட்டும் மனிதன் கண்டறிந்து விட்டால் அவனும் இறைவனும் ஒன்றாகி விடுவார்கள் இது நடக்குமா? நடக்க முடியுமா? என்ற வாதங்கள் தொன்றுதொட்டு வருகின்றன அவைகள் நமக்கு வேண்டாம். நாம் அறிந்து கொள்வது மனிதனாகிய நாம் சாதாரண பிறவிகள் இல்லை சற்றேற குறைய இறைவனுக்கு நிகரான பிறவிகள் என்பதை உணர வேண்டும்.

மனிதனை விட நரி தந்திரமானது மனிதனை விட புலியும் சிங்கமும் வீரம் பொருந்தியது அப்பாவி மான் கூட மனிதனை விட அதிவேகமாக ஓட கூடியது. யானையின் பலத்தின் முன்னே மனிதன் ஒரு சிறு துரும்பு இப்படி பலம் பொருந்திய மனிதனை விட பல தகுதிகள் வாய்ந்த விலங்குகள் எதுவுமே மனிதனை அடிமைபடுத்திவிட முடியாது. காரணம் அவைகள் எவற்றிடமும் இல்லாத அறிவு பலம் மனிதனிடம் மட்டும் தான் உள்ளது. இந்த அறிவை வைத்து மனிதன் தன்னை விடவும் பல மடங்கு சக்தி மிகுந்த எதை வேண்டுமென்றாலும் அடக்கி விடுவான் அடிமையாக்கி விடுவான். அப்படி பட்ட அறிய படைப்பான மனிதன் எப்படி இருக்கிறான்? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

காட்டு விலங்குகள் ஒருபருவ காலம் மழை பொய்த்து விட்டாலும் குடிக்க தண்ணீர் இல்லாமலும் உண்ண ஆகாரம் இல்லாமலும் போய்விட்டாலும் வருத்தபடுவது இல்லை மரணம் கண்ணுக்கெதிரே தெரிந்தாலும் கூட அவைகள் அஞ்சுவது இல்லை ஆனால் மனிதன் அப்படி அல்ல பத்து வருடம் பஞ்சம் ஏற்பட்டாலும் காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை சேகரித்து கொள்ள அவனால் முடியும். கொடிய நோய் வந்தாலும் ஆக்ரோஷமான இயற்க்கை சீற்றம் வந்தாலும் தனது அறிவை வைத்து முடிந்த வரையில் தப்பித்து கொள்ள இயலும் ஆனாலும் மனிதன் விலங்குகளை போல மகிழ்ச்சியாக இல்லை அது ஏன்?

ஒரு சமயம் ஏசுநாதர் தனது சீடர்களை நோக்கி வானத்து பறவைகளை பாருங்கள் அவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை ஆனாலும் அவைகள் மகிழ்வோடு பறக்கின்றன என்று சொன்னார். இதன் அர்த்தம் என்ன? தனது வாழ்நாளை நாளைக்கும் நடத்தி செல்ல எதாவது வேண்டுமே என்று சேமித்து வைக்காத பறவைகள் கூட ஆனந்தமாக பறக்கின்றன. ஆனால் எல்லாம் இருந்தும் அற்ப மனிதனே நீ ஏன் துன்பம் என்ற இருண்ட காட்டில் கிடந்தது தவிக்கிறாய் என்பது தான். மனிதன் மனிதனாக படைக்க பட்டதனுடைய மூலகாரணமே அவன் துன்பம் இல்லாதவனாக இன்ப மயமானவனாக இருக்க வேண்டும் என்பதே ஆனால் மனிதன் தன்னிடமுள்ள மிதமிஞ்சிய அறிவால் சந்தோசத்தை தொலைத்து விட்டு மூலையில் கிடந்தது அழுகிறான்.

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் எதை எதிர் பார்க்கிறான்? தனது படைப்பின் நோக்கமான தனது பிறவியின் இயல்பான இன்பத்தையே எதிர்பார்க்கிறான் ஆனால் பாவம் அவனுக்கு எப்போதும் அழிவில்லாத ஆனந்தத்தை தருவது எது நீர் குமிழி போல நிரந்தரம் இல்லாதது அழிந்து போகும் ஆனந்தம் எது என்று தெரியவில்லை ஒருவன் நினைக்கிறான் மலையளவு பணத்தை பெற்றால் தனக்கு இன்பம் கிட்டுமென்று வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து நிறைய பணத்தை சம்பாதித்து குவித்து வைத்து விட்டு பார்க்கிறான் ஆகா இவ்வளவு பணத்தை சம்பாதித்து விட்டேனா? என்று ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓட துள்ளி குதிக்கிறான்.

அந்த குதிப்பும் கும்மாளமும் ஒரே ஒரு நொடி மட்டுமே நீடிக்கிறது அடுத்த கணமே இந்த பணத்ததை யாரவது நம்மிடமிருந்து பிடுங்கி விடுவார்களோ என்று பயப்படுகிறான் அதனால் துக்கம் பணத்தை பாதுகாக்க ஆள் அம்பு படை வேண்டும் அவைகளை தருவது அதிகாரமிக்க பதவியே என்று முடிவு செய்து பதவியை நோக்கி நடக்கிறான் அதையும் பெற்று விட்டால் தன்னை போன்று பதவி ஆசை உடையவர்கள் அதை பிடுங்கி விடுவார்களோ என்று உறக்கம் வராமல் தவிக்கிறான் அதனாலும் துக்கம். பணம் பதவி இரண்டும் இருக்கிறது கூடவே பொறமை குணம் கொண்ட எதிரிகளும் கூடி விட்டார்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க தனது சொந்த பந்தங்களை அருகில் வைத்து கொள்ள வேண்டுமென்று அவர்களை நாடுகிறான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வித விதமான ஆசைகள் அவைகளை நிறைவேற்ற முடியாமல் மீண்டும் துடிக்கிறான் அதனாலும் துக்கம்.

பட்டம், பதவி, பணம், சொந்தபந்தம், அந்தஸ்து இப்படி எல்லாமே நிரந்தரம் இல்லாதது ஆனால் மனிதன் இவைகள் தான் நிரந்தரம் என்று நினைக்கிறான். அதற்கு காரணம் என்ன? கண்ணால் காண்பது இன்பம், காதுகளால் கேட்பது இன்பம், நுகர்வது இன்பம், சுவைப்பது இன்பம், பரிசம் செய்து பார்ப்பது இன்பமென்று புலனுக்கு கட்டு படுகின்ற வஸ்துக்கள் மட்டுமே நிஜமென்று நினைக்கிறான். இதனால் தான் ஆனந்தமாக இருக்க வேண்டிய மனிதனின் வாழ்வு துக்கமாக இருக்கிறது. நிரந்தரம் என்பது கண்களுக்கு தெரிவது மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ள பொருள்களும் நிரந்தரம் தான். அன்பு, கருணை, நிறைவு, திருப்தி, சாந்தி இவைகள் எதுவுமே கைகளால் தொட்டு பார்க்க கூடியது அல்ல ஆனால் நமது உணர்வுகளால் அவைகளை நுகர முடியும்.

நம் முன்னால் ஒருவன் நடந்து வருகிறான் அவன் கைகளில் எதுவோ இருக்கிறது அது இன்னவென்று நமக்கு தெரியாது அவன் அருகில் வரட்டும் வந்த பிறகு அது என்னவென்று பார்ப்போம் என்று காத்திருக்கிறோம் அவனும் வருகிறான் வந்தவன் நம்மை கண்டவுடன் தன் கைகளில் இருப்பதை மறைத்து கொள்கிறான் அவன் தூரத்தில் வந்த போதும் அருகில் வந்த போதும் அவனிடம் இருப்பது என்னவென்று நமக்கு தெரியாமலே போகிறது இதனால் அதை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது ஆவல் விரிந்து விரிந்து கடேசியில் துக்கமாக மாறி விடுகிறது. இதை போலவே நிரந்தரமாக நமக்கு சந்தோசம் தருவது எது என்று தேடி தேடி அடையாளம் தெரியாமலே அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். நம்மில் பெருவாரியானவர்கள் இதை போலவே வாழ்நாளை கழித்து விடுகிறோம்.

பலபேருடைய வாழ்க்கையானது எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு சாம்பலை போல இருந்த அடையாளமே இல்லாமல் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. இதனால் அவர்களின் பிறந்த பலனை அவர்களால் அறியமுடியமலே போய்விடுகிறது. எவனொருவன் தான் எதற்க்காக பிறந்தோம் என்பதை தெள்ள தெளிவாக தெரிந்து கொள்கிறானோ அவனே சாதனையாளனகவும் இருக்கிறான் சரித்திர ஏடுகளில் மறையாமல் நிரந்தரமாக இடம்பிடித்து விடுகிறான். உண்மையில் நாம் அனைவருமே சாதிக்க பிறந்தவர்கள் அதற்காக தான் இறைவன் நம்மை படைத்திருக்கிறான். ஆனால் நாம் அதை தெரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறோம். நாம் யார்? நாம் பெற வேண்டியது என்ன? நிரந்தரமான நித்தியமான மகிழ்ச்சி என்பது எது என்று இன்றுமுதல் ஆராய துவங்குவோம்.

சற்று முயற்சி செய்தாலே பல ரகசிய கதவுகளை கடவுள் நமக்காக திறந்து விடுவான். வாருங்கள் அந்த வாசல் வழியாக சென்று நம் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...

பாஜக விடம் பணம் வாங்கிய தினமலர்...


இன்னொரு ராமானுஐம்.. நியூட்டன் அழைப்பு விடுத்த தமிழன்...


சிவசங்கர நாராயணப் பிள்ளை என்பது தான் அவர் பெயர்.

1901 ஏப்ரல் 5 இல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார்.

எஸ்.எஸ். பிள்ளை சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து 4ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றார்.

பேராசிரியர் அனந்தராவ் என்பவர் கீழ், பிள்ளை ஆராய்ச்சி செய்தாராம். பிறகு 1929 இல் அண்ணாமலைப் பல்கலையில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார்.

அப்போதுதான் எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

இதில் சிறப்பம்சம் என்ன என்றால், இந்தியாவிலேயே முதல் முதலாகக் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமை எஸ்.எஸ். பிள்ளைக்கு உண்டு.

ஒருமுறை அமெரிக்கக் கணிதமேதை டாக்டர் டிக்ஸன், இவரைக் காண கல்கத்தா பல் கலைக்கு வந்தபோது, அவர் தாம் தங்கியிருந்த ஹோட்டலில்
நண்பர்களுக்கு மேலைநாட்டு பாணியில் விருந்தளித்தார்.

1936 பிப் 10 இல் எஸ்.எஸ்.பிள்ளை தமது கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து "டாக்டர் பிள்ளை தியரி ஆஃப் நம்பர்ஸ்' - ஒரு கோட்பாடு, கணிதவியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தது.

வாரிங்க்ஸ் ப்ராப்ளத்திற்கு விடைகண்ட கையோடு சுமார் 400 ஆண்டுகளாகக் கணித உலகை மிரட்டிக் கொண்டிருந்த "ஃபூரியர் சீரிஸ்' என்ற தொடருக்கான புதிரையும் விடுவித்துப் பெருமை பெற்றார்.

இதைத் தொடர்ந்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் டாக்டர் ஓபன்ஹைமரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட பிள்ளைக்கு அழைப்பு விடுத்தனர்.

சான்பிரான்ஸிஸ்கோவில்
நடைபெறவிருந்த உலகக்கணித மாநாட்டுக்குத் தலைமையேற்கவும், பிரின்ஸ்டன் பல்கலையில் ஜன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை 1950ஆகஸ்டில் அமெரிக்கா புறப்பட்டார்.

30.8.1950 இல் ஸ்டார் ஆஃப் மேரிலேண்ட் விமானத்தில் இந்தியாவின் புகழையும் தன்னுடைய எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளோடு பறந்தார்.

கெய்ரோவில் எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி சகாரா பாலைவனத்தில் எரிந்து சாம்பலாகி விழுந்தது.

சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் பங்கு கொண்ட கணிதமேதைகள் சிவசங்கரன் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர்.

உலகின் தலைசிறந்த கணித மேதைகளைப் பற்றி இ.டி.பெல் எழுதிய ''மென் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ்" நூலில் இந்தியாவின் சார்பில் இராமானுஜனும் சிவசங்கரன் பிள்ளையும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும்
தமிழர்களே என்பது நமக்குப் பெருமை தரத்தக்கது...

சார்மாலா திட்டம் தொடக்கம்...


இனி தினமலர் செய்தித்தாள் வாங்க வேண்டுமா..? என்பதை யோசித்து கொள்ளுங்கள்...


Cobrapost-ல் இருப்பதை முழுமையாக தமிழாக்கம் செய்தால் பதிவுகள் பெரிதாக இருக்கும்..

அதனால் முக்கியமானவைகளை மட்டும் நாங்கள் பதிவிடுகிறோம்,

ஆனால் அந்த முக்கியமானவைகள் தான் வலுவான அடிப்படை..

Cobrapost - முழுவதும் தமிழாக்கம் உவன் YouTube வலைத்தளத்தில் கூடிய விரைவில் வரும்...

திடீர் சாகர்மாலா சந்திப்பு...


வானம் என்றால் என்ன ? வானம் என்று எதை அழைக்கிறோம்? அதன் உருவ அமைப்பு என்ன?


வானம் என்பது தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்று யாரவது கூறினால், அவர் இலக்கியவாதியாக, பேச்சாளராக அல்லது பக்கா பிராடாக இருக்கலாம், நீங்கள் பூமியில் இருந்து மேல் நோக்கி பறந்து வானத்தை தொட்டுவிடலாம் என்று நினைத்தால் பறந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

முடிவே கிடையாது,, என்னை பொறுத்தவரையில் அதை வானம் என்று அழைப்பதே தவறு,, அதை 'இடைவெளி' (Space) என்று தான் அழைக்க வேண்டும்,வானவில் பார்த்திருப்பீர்கள்,மழை காலத்தில் மட்டுமே வானவில் தெரியுமென்று முட்டாள்தனமாக இருந்து விட வேண்டாம்.

தினமும் காலை பல் விளக்கி விட்டு வாய் கொப்பளிக்கும் போது (பல் விளக்குபவர்கள் மட்டும் ) சூரிய ஒளியில் நின்று கொஞ்சம் ஆற்றல் கொடுத்து உங்கள் வாயில் இருக்கும் நீர்த்துளிகள் மிக மிகச்சிறிதான துளிகளாக மாற்றி வெளியே அனுப்பி பாருங்கள், உங்கள் கண் முன்னர் வானவில் வந்து போகும்.

ஒளி என்பது அனைத்து வண்ணங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு, ஒரு தொகுப்பாக கூட்டமைப்பாக வரும் வெள்ளை ஒளியை சிதறடிக்க வேண்டும், அப்படி சிதறடித்தால் தான் அதில் ஒளிந்திருக்கும் வண்ணங்கள் வெளிப்படும். 

ஒரே ஒரு நீர்த்துளி என்பது மிக மிகச்சிறிய அளவில் உள்ள ஒரு பொருள், மிக மிகச்சிறிய ஒரு பொருளால் தான் மிகச்சிறிய அலை நீளங்கள் உள்ள ஒளியில் உள்ள வண்ணங்களை சிதறடிக்க முடியும் இப்போது வானவில்லில் இருக்கும் நீல ஒளியை மட்டுமே பார்க்கிறீர்கள் அது தான் வானம்.

நீங்கள் பார்ப்பது, வெள்ளை ஒளியின் சிதறடிக்கப்பட்ட ஒரு அலை நீளத்தை தான்,காரணம் நமது அட்மொசு(ஸ்)பியரில் நீல நிறத்தை மட்டும் சிதறடிக்கும் அளவிற்கு தூசுக்கள் நிறைந்து இருக்கின்றன.

அதனால் தான் பகலில் நாம் பூமியில் இருந்து மேல் நோக்கி பார்க்கும் போது நீல நிறம் தெரிகிறது.

இரவில் சூரிய ஒளி இல்லாததால், எல்லையற்ற 'இடைவெளி' (Space) அப்படியே தெரிகிறது...

தமிழகத்தில் விசக்கிருமிகளை ஜெயலலிதா அடக்கி வைத்திருத்தார் - மராட்டியன் ரஜினி...


உண்மை தான்.. இதோ ஜெயலலிதா அடக்கி வைத்திருந்த விசக்கிருமிகள்...

டெலிபதி (TELEPATHY)..


டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது..

இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..

இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..

டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.

ஆனால் இது இன்று வரை அதிகார்பபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...