30/10/2017

கத்தாழையை பத்தி தெரிஞ்ச்சிக்கலாமா?


இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம்.

குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...


திருநெல்வேலியில், சிறை கைதிகளால் கட்டப்பட்ட, தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம், 175வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது...


திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை பிரிக்கும் தாமிரபரணி ஆற்றில், 200 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். காடுகள் வளமாக இருந்த காலம் அது. பாபநாசம், காரையார், சேர்வலாறு போன்ற அணைகளும் இல்லை. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை முழுவதும், தாமிரபரணியில் வெள்ளமாக பெருக்கெடுக்கும்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, சீவலப்பேரி பகுதி மக்கள், தாமிரபரணி ஆற்றை கடக்க, படகுகளை பயன்படுத்தி வந்தனர். ஆற்றங்கரையில் அமைந்த படகு துறையில், எப்போதும், ஆண்கள், பெண்கள், வியாபாரிகள் கூட்டம் மொய்க்கும். எல்லாருக்கும் படகு கிடைக்காது. இடம் கிடைத்தவர்கள் முதலில் அக்கரைக்கு போய், மற்றவர்கள் படகு திரும்பும் வரை காத்திருக்க வேண்டும்.

படகில் தட்டுமுட்டு சாமான்களோடு செல்பவர்களின் பொருட்கள் களவு போனதுடன், ஜாதி சண்டைகளும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. பிரிட்டிஷார் ஆட்சி நடந்த அக்காலத்தில், திருநெல்வேலி ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டில் இருந்த படகு துறையில், ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து, பொழுது போவது ஒரு யுகமாக நடந்து வந்தது.

ஒரு கட்டத்தில் படகு துறையில் நடந்த ஜாதி கலவரம், கொலையில் முடிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என, கருதிய கலெக்டர் தாம்சன், தனக்கு முன் இருந்த கலெக்டர் ஈடன், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது குறித்து, எழுதி வைத்த குறிப்பை படித்தார்.'திருநெல்வேலி- - பாளையங்கோட்டை நகரங்களை இணைக்க, தாமிரபரணி ஆற்றில், 800 அடி நீளத்தில் பாலம் கட்ட வேண்டும். இது அவசரமும், அவசியமும் கூட; இதன் மூலம் குழப்பமும், வன்முறையும் அகலும்.

'திருநெல்வேலி ஜில்லா, எல்லா நிலைகளிலும் வளம் கொழிக்கும்' என, ஈடன் எழுதியிருந்ததை படித்த கலெக்டர் தாம்சன், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், அப்போது கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தாராக பணிபுரிந்த, நெல்லையைச் சேர்ந்த சுலோச்சன முதலியாரும் கலந்து கொண்டார்.

பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்,
760 அடி நீளம், 21 அடி அகலம், 11 ஆர்ச்சுகளோடு பாலம் அமைப்பதற்கான வரைபடம் தயாரானது. ஆர்ச்சின் விட்டம், 60 அடியாக நிர்ணயிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆர்ச்சையும் தாங்குகின்ற இரட்டை தூண்கள், ரோமானிய அரண்மனை தூண்களை நினைவு படுத்தும் வகையில் அமைக்க முடிவானது. இதை கட்டி முடிக்க, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டது. கலெக்டர் தாம்சன், தன்னிடம் சிரஸ்தாராக இருந்த, செல்வந்தர் சுலோச்சன முதலியாரை அணுகினார்.

அக்காலத்திலேயே, கோடீஸ்வரராக இருந்த சுலோச்சன முதலியார், பாலம் கட்டுமானத்தின் முழு செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்தார். அதன்பின், பாலம் கட்டுமான பணிகள் துவங்கி, மளமளவென நடந்தன.

சிமெண்ட் இல்லாத காலத்தில், சுண்ணாம்புடன் பதனீர், கருப்பட்டி அரைத்து பாலம் கட்டப்பட்டது. பாலப் பணிகளில், சிறையில் இருந்த ஆயுள் கைதிகள், 100 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

பணிகள் முடிந்து, 1843ம் ஆண்டு, நவம்பர் மாதம், பாலம் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானை பவனி வர, சுலோச்சன முதலியார், நீதிபதி, கலெக்டர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் சென்றனர். பாலத்திற்கு, நிதியுதவி அளித்த சுலோச்சன முதலியார் பெயரே சூட்டப்பட்டது.

பாலம் கட்டப்பட்டு, 174 ஆண்டுகளை கடந்து, வரும் நவம்பரில், 175வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் பயணித்தாலும், இன்றும் கம்பீரம் குறையாமல், நெல்லையின் அடையாள சின்னமாக காட்சி அளிக்கிறது...

மாணிக்சந்த் குரூப் நிறுவனர் புற்றுநோயால் மரணம்...


மோடியின் GST வரியால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினி காந்தால் கூட ரூ 20000 வாடகை கொடுக்க முடியாவிடில்...


ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்?

தினம் தினம் உழைத்து பிழைக்கும் மக்கள் எலும்பை நொறுக்கும் GST. வரி வேண்டாம் குடி மக்களுக்கு...

இலுமினாட்டிகளின் இருப்பு...


இலுமினாட்டிகளின் தொடக்கம் மற்றும் தஜ்ஜாலின் பிறப்பு பற்றிய ஆதாரம் மற்றும் சாத்திய கூறுகளை முந்திய பதிவில் பார்த்தோம்., அதன் தொடர்சியாக, இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்யும் மத ரீதியான ஆதாரங்களையும் சாத்திய கூறுகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

யூதர்கள்:

திருக்குர்ஆன் அநேக இடங்களில் இலுமினாட்டிகளை பற்றி பேசியிருக்கிறது., பெரும்பான்மையானவர்கள் அந்த வசனங்கள் ஒட்டு மொத்த யூதர்களையும் குறிப்பதாக கருதுகின்றனர்., ஆனால் அந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை நுணுக்கங்களை சற்று கவனித்து பார்க்கும் போது அது ஒட்டு மொத்த யூதர்களையும் குறிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.,

அத்தியாயம் 2 வசனம் 97 மற்றும் 98 வானதூதர் ஜிப்ரீலை (தூயஆவி கேப்ரியல்) தங்களது எதிரி என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக அருளப்பட்டது., யார் அவர்கள்? எதற்காக அவர்கள் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள்? மோசேவிற்கு (pbuh) தூது செய்தியை கண்டு வந்தது இந்த இந்த ஜிப்ரீல் தானே? இயேசுவுக்கு (pbuh) உறுதுணையாக இருந்தது இந்த ஜிப்ரீல் தானே? அப்படியிருக்க ஒட்டுமொத்த யூதர்களும் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும்?

அத்தியாயம் 2 வசனம் 96ல் ஆயிரம் வருடம் வாழ்நாள் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் ஒரு கூட்டத்தை பற்றி இறைவன் அறிவிக்கிறான்., இன்றும் சரி, பேரரசர் முஹம்மதின் (pbuh) காலத்தில் வாழ்ந்த (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத) யூதர்களும் சரி, அனைவருமே ஆயிரம் வருடம் வாழ வேண்டும் என்ற பேராசையோடு தான் இருந்தார்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது., அவ்வாறிருக்க இந்த வசனம் ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கத்தான் செய்கிறது என்பது ஏற்புடையதல்ல., இந்த வசனத்தின் துவக்கத்தில், "பூமியில் உள்ள மற்ற மனிதர்களை விடவும், (குறிப்பாக) இணை கற்பித்தோரை விடவும் வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது., இதில் வரும் இணை கற்பித்தோர்கள் என்ற வார்த்தை யூத இணை வைப்பாளர்களையும் சேர்த்தே குறிக்க போதுமானது எனும் பொது அதை விடவும் அதிகம் வாழ ஆசைப்படும் அந்த "அவர்கள்" யார்?

அத்தியாயம் 2 வசனம் 100ல் வரும் "அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா?" என்ற வாசகத்தில் முதலில் வரும் "அவர்கள்" என்ற வார்த்தை ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும், எனில் "அவர்களில் ஒரு பகுதியினர்" என்ற வார்த்தை யாரைக் குறிக்கும்?

அத்தியாயம் 2 வசனம் 101ல் வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் இறைவனின் வேதத்தைத் தமது முதுகுகளுக்குப் பின்னால் வீசி எறிந்ததாக சொல்லப்படுகிறது., வேதம் குடுக்கப்பட்டவர்கள் என்பது ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும்., (தவ்ராத், ஜபூர், இன்ஜீல் ஆகியவை யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள்) எனில் அதில் ஒரு பிரிவினர் என்ற வார்த்தை யாரை குறிக்க கையாளப்பட்டுள்ளது?

இலுமினாட்டிகள்:

இலுமினாட்டிகளுக்கு தான் ஜிப்ரீல் எதிரி., ஜிப்ரீலை எதிரி என்று சொல்லும் அவர்கள் அதற்க்கு சொல்லும் காரணம் அவர் பூமிக்கு வரும் பொழுதெல்லாம் போரையும், சிரமத்தையும் கொண்டு வருகிறார் என்பது தான்., இவர்கள் இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்த போது அந்த சதியை முறியடிக்க இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்டவர் இந்த ஜிப்ரீல்., இது போன்று இலுமினாட்டிகள் சதி செய்யும் போதெல்லாம் அதை முறியடிக்க இறைவனால் அனுப்பப்படுபவர் இந்த ஜிப்ரீல்., எனவே தான் இவர்கள் ஜிப்ரீலை தங்கள் எதிரி என்கின்றனர்.,

ஆயிரம் வருடங்கள் வாழ வேண்டும் என்பது இலுமினாட்டிகளின் கனவு, அவர்கள் தங்களின் ஆயுளை நீடித்துக் கொள்வதற்கான ஆய்வுகளை செய்து வருகின்றனர் என்பதை பல இலுமினாட்டி ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்., இலுமினாட்டிகளே இறைவனின் வேதத்தை அது உண்மை என்று தெரிந்திருந்தும் தங்களது முதுகிற்கு பின்னால் தூக்கி எறிந்தனர்., மேலும் அவர்களே ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவற்றை முறிக்கின்றனர்., பேரரசர் சாலமன் (pbuh) போன்றவர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளின் மீது இவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையே இவர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம். [2:90].

அத்தியாயம் 2 வசனம் 102 "ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்" என்று ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்., யார் இவர்கள்? எதை பின்பற்றினார்கள்? என்ற கேள்விகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது இலுமினாடிகளின் இருப்பை உறுதி செய்யும் ஆதாரம்., இந்த "இவர்கள்" தான் இலுமினாட்டிகள் அதாவது ஃபிரீமேசன்கள்., இவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தது, லூசிஃபர் என்ற ஜின் (இப்லீஸ் அல்ல) இவர்களிடம் கொண்டுவந்து கொடுத்த சூனிய குறிப்புகள்., இவர்கள் பேரரசர் சாலமனும் (pbuh) தங்களை சேர்ந்தவரே என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர், அதை மறுக்கும் விதமாகவே அத்தியாயம் 2 வசனம் 102ல் ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை, ஷைத்தான்களே5 (ஏகஇறைவனை) மறுத்தனர். என்ற வாக்கியம் அருளப்பட்டது.,

அத்தியாயம் 2 வசனம் 91ல் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று இவர்கள் சொல்வது தவ்ராத்தையோ, ஜபூரையோ அல்ல., அதை இந்த வசனத்தின் இறுதியில் இறைவனே உறுதி செய்கிறான்., இவர்கள் அவற்றை பின்பற்றியிருந்தால் அதற்கு பிறகு வந்த இறைத்தூதர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள்., இவர்கள் பின்பற்றியது லூசிஃபரிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்டதை தான்.,

திருக்குர்ஆன் 2:75, 2:100, 4:81, 3:69, 3:23, 3:78 மற்றும் 4:113 இந்த வசங்கள் எல்லாம் யூதர்களில் ஒரு சாராரான இலுமினாட்டிகளை பற்றி பேசும் வசனங்கள்., இவர்களே பேரரசர் முஹம்மதை(pbuh) அவரின் நபித்துவத்திற்கு முன்பே கொன்றுவிட வேண்டும் என்று சதி செய்துக் கொண்டிருந்தவர்கள்., இவர்கள் தான் இலுமினாட்டிகள்.,

இலுமினாட்டிகளின் நோக்கம்:

மனிதர்களை அடிமைப்படுத்தி பூமி முழுவதையும் ஒரு தலைமைக்கு கீழ் கொண்டு வந்து நிலையான ஆட்சியை ஏற்படுத்துவது., பிறகு தங்களது கடவுள் லூசிஃபருக்காக இறைவனோடு போர் செய்து அதில் வெற்றி பெற்று தங்களது கடவுளான லூசிஃபரை இந்த பிரபஞ்சத்தின் இறைவனாக ஆக்குவது., இதுவே இவர்களின் நோக்கம் மற்றும் இலக்கு.,

அத்தியாயம் 72 வசனம் 1 முதல் 15 வரை பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்களின் படி, மனிதர்கள் பாதுகாப்பு தேடியதால் ஏற்பட்ட கர்வத்தால் தன்னிலை இழந்த ,மூடனான ஒரு ஜின், இறைவனுக்கு பலகீனம் இருப்பதாகவும், பூமியில் வைத்து  அவனை வெல்ல முடியும் என்று சொல்லிக் கொண்டு திரிந்தான்., அவன் தான் லூசிஃபர்., பேரரசர் சாலமானால் (pbuh) சிறைபிடிக்கப்பட்ட ஒரு ஜின் தான் இலுமினாட்டிக்ளுக்கு சூனிய மந்திர குறிப்புகளை கொடுத்தான்., அத்தியாயம் 38 வசனம் 37 மற்றும் 38ன் படி இறைவன் பேரரசர் சாலமனுக்கு (pbuh) ஜின்களில் கட்டிடம் கட்டுவோர்களையும், விலங்கிடப்பட்ட சில ஜின்களையும் வசப்படுத்திக் கொடுத்தான்., லூசிஃபரின் முன்னோர்கள் கட்டிடக்கலை வல்லுனர்களாகவும் (பிரமீடை காட்டியது அவர்கள் தான்) பேராற்றல் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது., இதுவே லூசிஃபர் கர்வம் கொள்ள காரணம்.,[72:6] அந்த கர்வம் அவனால் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் இறைவனாக இருந்து ஆளுமை செய்ய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கி வலு சேர்த்தது., தஜ்ஜாலை கொண்டு மனிதர்களை அடிமைபடுத்தி அதன் மூலம் பூமியில் வைத்து இறைவனை வெல்ல முடியும் என்பதும் ஒரு வேளை தோற்றுவிட்டால் தப்பி ஓடிவிடலாம் என்பதும் தான் இவர்களின் திட்டம்.,[72:12].

நான் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் வசனங்கள் இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்ய போதுமானவையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்., இறைவன் நாடினால் இதைவிடவும் அதிகமான ஆதாரங்கள் கூடிய விரைவில் கிடைக்கும்.,

தொடரும்...

தகவல் - musthafays....

அதிமுக ஓபிஎஸ் - இபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு...


தேவர் குருபூஜை விழாவுக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எல்லாம் தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து வருகின்றனர்...

திருவிசநல்லூரில் சூரிய ஒளிக் கடிகாரம்...


14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்...

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன.

அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.

இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது...

பாஜக வையும் மோடியையும் அமெரிக்க கார்டூனிஸ்ட் காரி துப்பியது...


ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...


மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.

அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.

பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம்.

இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

அரசியல் உண்மைகள்...


வேலூர் - விரிஞ்சிபுரம் - தமிழனின் காலம் காட்டும் கல்...


வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...

அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்...

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில்.

கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்...

மருத்துவ மாஃபியா உண்மை முகத்தை தோலுரித்து காட்ட வேண்டும் என்பதே எமது நோக்கங்களில் ஒன்று...


தமிழ்நாட்டை ஏன் தமிழனே ஆள வேண்டும்...


ஓர் உணர்வுள்ள தமிழன் தமிழ்நாட்டை ஆளாததால் உலக அதிசயங்களில் இடம் பெறாமலும் மராத்திய வந்தேரி அரங்காவலராகவும் உள்ள தமிழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில்..

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ?
கோயில் எப்படி கட்டப்பட்டது ? என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்…

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு :

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு :

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதது...

கேன்சரை குணப்படுத்தும் கஞ்சா...


அளவோடு எடுத்தால் நலம்.. அளவுக்கு மீறினால்  நஞ்சு.. இதை மறைக்கும் மருத்துவ மாஃபியாக்கள்...

உயர் இரத்த அழுத்தம் குறைய...


பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்..

லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்ததுள்ளது..

பீட் ரூட் சாறு...

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன.

இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்...

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது...

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது...

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.

இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.

எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்...

நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார் நிபுணர்.

இது பக்கவிளைவுகள் அற்ற மருந்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சித்த வைத்தியக் குறிப்புகள்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லியை மென்று தின்றுவிட்டு, பின்னர் தண்ணீர் குடித்து வரவேண்டும்..

இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்கள் சுத்தமடையும். இரத்த அழுத்த நோய் படிப்படியாக குறையவரும். இவ்வாறு சித்த மருத்துவ நூலில் கூறப்பட்டு உள்ளது.

இது அனுபவ ரீதியாக சிலருக்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. பக்க விளைவுகள் ஏதுமற்ற இந்த முறையையும் பயன்படுத்திப் பாருங்கள்..

மேலும், வெள்ளைப் பூண்டை அதிகமாக உணவுடன் சேர்த்துக்கொள்வதாலும் உயர் இரத்த அழுத்தம் குறைந்து, மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படும் என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரியப்படுத்தி உள்ளது...

திராவிட வட்டிக்கடை திக வீரமணியின் வண்டவாளங்கள்...


திராவிட கபோதிகளும், அந்த கபோதிகளின் இயக்கங்களும் (தமிழ்) பொது மக்களிடம் நன்கொடை, கட்சி நிதி, மேடை ஏறி புரட்சி செய்ய 'புரட்சி ஃபீஸ்' என்ற பெயர்களில் எல்லாம் பணம் பறித்து, அதை தங்கள் சொந்த கணக்கில் வங்கிகளில் சேர்த்து, கோடிகள் பல ஆயிரம் குவிந்ததும், வாரீசாக பதினெட்டு வயது பருவ அழகிகளை மணந்தோ, மனைவியாக்கியோ, துணைவியாக்கியோ, இணைவியாக்கியோ சென்ற வரலாற்றின் தொடர்ச்சி இது..

ஈவெ ராமசாமி தமது காலத்தில் இப்படியாக வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் அசையும் வண்ணமும், அசையா வண்ணமும் தமிழ்நாடு முழுதும் பரவிக் கிடப்பதை அறிவோம்.

ஈவெராவுக்கு பின்னர் சொப்பன சுந்தரியின் கார் மற்றும் சொப்பன சுந்தரி சகிதம் 'மணியம்மையாக' வீரமணியை அடைந்தது. பாவம், ஈவெ ராம்சாமி 'அந்த டைவர்சன்' எடுக்காமலேயே நேரடியாக வீரமணியிடம் ஒப்படைத்து இருக்கலாம்.

இப்படியாக பேக்கரி டீலிங் மூலம் தன்னை அடைந்த சொத்தை  வீரமணி முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்தது நினைவில் இருக்கலாம்.

முறைகேடாக தம்மை வந்து அடைந்த சொத்தை எப்படியெல்லாம் அனுபவிக்கிறார் வீரமணி என்பதை இங்கே ஆதாரத்துடன் காணலாம்.

வீரமணி 'குடும்ப குத்து விளக்கு' என்கிற பெயரில் ஒரு கந்து வட்டிக்கடையும், 'திராவிடன்' என்கிற பெயரில் ஒரு பைனான்சும், வேறு ஒரு திராவிடன் என்கிற பெயரில் சீட்டு நிறுவனமும் நடத்துகிறார். இவை 'பெரியார் திடலிலேயே' இயங்குகின்றன.

ஆனால் இவை பெரியார் அறக்கட்டளை போன்ற எந்த பொது ட்ரஸ்ட்டையும் சார்ந்தது அல்ல. இவை அனைத்தும் வீரமணி என்கிற தனி நபருக்கு சொந்தமானது.

மேலும் வீரமணி பெயரில் 'சூர்யா ட்ரேடிங்' எனும் பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அடையாரில் இயங்குகிறது.

வீரமணியின் குடும்பத்தார் பெயரில் மட்டும் ஆறு, ஏழு நிறுவனங்கள் இயங்குகின்றன.

இதன் பங்குதாரர்களாக மைலாப்பூர் ஸ்ரீ ராமன் ஐயர் துவங்கி, வடநாட்டு சேட்டுகளும், மிட்டல்களும் இருக்கிறார்கள்.

சில கம்பெனிகள் வீரமணியின் மனைவி மோகனா பெயரிலும், சில வீரமணியின் மருமகள் சுதா குமாரி பெயரிலும், சில வீரமணியின் மகன் அன்புராஜ் பெயரிலும் இயங்குகின்றன.

வீரமணியின் மகன் அன்புராஜின் பெயரில் மட்டும் நான்கு நிறுவனங்கள் பதிவாகி இருக்கின்றன, அவற்றில் மூன்று பெரியார் திடலில் இயங்குகிறது.

இவர்களுடைய நிறுவனங்களில் இயக்குனர் கம் பங்குதாரர்களாக இருக்கும் பிராமண, வடுக மற்றும் பனியாக்கள் பெயர்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள எண்ணற்ற பிற சகோதர (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிலெல்லாம் வீரமணிக்கும் பங்கு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

வீரமணியின் நேரடி பார்ட்னர்களில் பலர் 'பிள்ளைவாள்', வீர சைவ 'பண்டாரம்', அகர்வால் பனியாக்களான 'மிட்டல்' போன்ற சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களில் தாங்கி நிற்கிறார்கள்.

மேலும் இந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) தொடர்புடைய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பிற நிறுவனங்கள் 2007 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில் தான் மத்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் பதிவாகி இருக்கின்றன.

இந்த காலத்தில் தான் ஈழம் வீழ்ந்தது என்பதும், ஈழம் வீழ்ந்த பின்னரும் திமுக-காங் கூட்டணிக்கு வீரமணி ஒட்டு சேகரித்ததையும் இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்.

வீரமணி குடும்பத்தாரின் பல நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் ராஜரத்தினம் சங்கரலிங்கம் பார்ப்பனிய நிறுவனமான ஸ்ரீராம் குருப்பிலும் முக்கியமான இயக்குனர்-பங்குதாரராக இருக்கிறார்.

இந்த ராஜரத்தினம் சங்கரலிங்கத்தின் பெயரில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (ஸ்ரீராம் குருப், விஷ்வபிரியா இந்தியா, மெப்கோ இண்டஸ்ட்ரீஸ், விஷ்வப்ப்ரியா பைனான்ஸ்  மற்றும் வீரமணி குடும்பத்தின் டிபிஐ மற்றும் விப்ஜியார் போன்ற) பதிவாகி இயங்குகின்றன.

இதே போல சந்தேகத்துக்குரிய மற்ற இயக்குனர்கள் கம் பங்குதாரர்கள் அனந்தகிருஷ்ணன், சிவஷங்கர், வெங்கடபதி போன்றோர். இவர்கள் ஒவ்வொருத்தரின் பெயரிலும் ஐந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.

வெளிப்படையாக (வெள்ளையாக) இயங்கும் வீரமணியின் நிறுவனங்களின் லட்சணம் இப்படியென்றால் கருப்பில் இயங்கும் வீரமணி குடும்பத்தாரின் நிறுவனங்கள் குறித்து ஊகிக்க தேவையில்லை.

இவை மட்டும் அல்லாது ஏழை பாழைகளின் வயிற்றில் அடிக்கும் சுயநிதி கல்லூரிகள், பெரியார் கெமிகல்ஸ், பெரியார் பிளாசா, பெரியார் பால் பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்வி பயிலகம், பெரியார் மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம் என்று ஏழைகளிடம் பண மோசடி செய்யும் எண்ணற்ற தொழில்கள்.

குடும்ப குத்து விளக்கு, மாங்கல்யம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயர்களில் எல்லாம் கந்துவட்டி கடை நடத்தும் வீரமணிக்கும் முற்போக்குக்கும், பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இதை ஒத்த மற்றும் இதற்கும் மேலான விமர்சனங்களை அன்று வீரமணி மீது  சுமத்தி விட்டு, ஈவெகி  சம்பத் சாலையை விட்டு வெளியேறிய 'மற்ற மணிகள்' இன்று தமிழின எழுச்சி கண்டு, மிரண்டு, பதறி, பெரியார் திடல் நோக்கி பின்னங்கால் பிடரியில் அடிக்க பாய்ந்து செல்வது வேடிக்கை.

கீழே வரும் வாசகம் ஒரு முறை கி. வீரமணி, சன் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது ''ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடிகள் இருப்பது பற்றி யாருக்கும் மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக் கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. பொதுப்பணிகள் செய்கிறோம்...

ஆன்மாவின் வேலை...


ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.

உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.

மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.

தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை..

ஆன்மாவின் வேலை என்ன ?

முதலில் ஆன்மா என்னவென்று அறிந்தால் தான் அது என்ன வேலையை செய்யும் என்று உணர முடியும்.

பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் அமைந்திருக்கும் ஆன்மா, பிறப்பெடுக்காத, பிறப்பெடுக்க இருக்கும் இன்னும் பல கோடி கோடி ஜீவன்களுக்கும் துணையாகி நிற்கின்றது.

நாம் படித்து, கேட்டு அறிந்த அனைத்து மகரிஷிகளும், ஞானிகளும், முனிவர்களும், புத்தர் முதல் சித்தர்கள் வரை ஆன்மாவை அழிவற்றது என்றும், ஆன்மாவே இறைசொரூபம் என்றும், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஆன்மவடிவே என்றெல்லாம் கண்டுணர்ந்து சொல்லி இருக்கின்றார்கள்.

இவ்வாறான ஆன்மாவின் பணி என்ன ?

ஆன்மா எல்லா உயிர்களையும் இயக்குகின்றதா ?

பேசும் சக்தி பெற்ற மனித உயிர்களை அதுதான் வழி நடத்துகிறதா ?

அதுதான் ஆறாம் அறிவா ?

ஆன்மா என்பது தான் உயிரா ?

அது மனிதரை ஆள்கின்றதா ?

என்பது போன்ற கேள்விகள் நம்முள் அடுக்கடுக்காக எழுகின்றதல்லவா..

உண்மையில் ஆன்மா என்பது, மனிதனை ஆள்வதோ, இயக்குவதோ, வழிகாட்டியோ, மனிதனின் ஆறாம் அறிவோ இல்லை.

அப்படியென்றால் பின் என்ன ?

மனிதர்களை இயக்குவது மனிதனின் மனம், ஆன்மா மனிதரை இயக்குவதாக இருந்தால் மனிதரிடம் தவறுகளோ, தோல்வியோ என்றுமே காண முடியாது.

மனிதரை வழி நடத்துவது அவனுடைய எண்ணங்களும், அவனின் கேள்வி ஞானமும் தான்.

மனிதன் ஆன்மாவின் வழிகாட்டுதலில் பயணித்தால் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பு எந்நாளும் மனிதருக்கு ஏற்பட்டிருக்காது.

மனிதனின் ஆறாம் அறிவாக ஆன்மா இருக்க எள்முனையளவும் வாய்ப்பில்லை.

காரணம், உலகின் எல்லா உயிருக்குள்ளும் ஆன்மா இருகின்றது. ஆனால், பலவிதமான மிருக, பறவை இனங்களின் இனப்பெருக்க உறவுகள் மனிதனின் வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது.

ஆன்மா என்பது உயிரல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஏனெனில் உயிர் என்பது இந்த உடலோடு சம்பந்தப்பட்டது, ஆனால் ஆன்மா நம் பிறப்போடு தொடர்புடையது.

நமது எந்த பாபமும் புண்ணியமும் ஆன்மாவை பாதிப்பதில்லை, ஆனால் உயிர் சம்பந்தமான இந்த உடலையும் மனதையும் மிகவும் பாதிக்கச் செய்கிறது.

அப்படியானால் என்ன தான் இந்த ஆன்மா என்பது ?

ஆன்மா இந்நிலையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.

நமது ஒவ்வொரு அசைவையும் முழுமையாக கவனித்து, நமது சொல்லோ, செயலோ, கவனமோ, சிந்தையோ தடம் மாறும் போது உள்ளிருந்து மிக பலவீனமான குரலில் நம்மை எச்சரிக்குமே ஒரு முனகல் குரல், ஞாபகம் இருக்கிறதா ? அது நமது ஆன்மாவின் குரல்தான்.

மிரட்டும் தொனியில் இல்லாமல் கெஞ்சலிலும் கீழே மிக மெல்லியதாக நம்மை வேண்டாம் என்று தடுக்குமே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான்.

சாதிக்க பிறந்தவன் நீ ஆனால் இப்படி உன்னை நீயே அழித்துக் கொள்கின்றாயே என்று எங்கோ தொலைவிலிருந்து யாரோ சொல்வதாக ஒரு குரல் நம் காதில் ஒலிக்குமே அது நமது ஆன்மாவின் குரல் தான்.

வெற்றியின் வித்தான நீ, தோல்வியின் மொத்த சொத்தாகி போகின்றாயே என ஈனஸ்வரத்தில் ஒரு ஓசை கேட்கின்றதே, நமது மனதின் உள்ளே, அந்த ஒலியின் உரிமையாளன் நமது ஆன்மா தான்.

நாம் தவறிழைக்க துணிந்திடும் ஒவ்வொரு சமயமும் கொஞ்சமும் சலிப்பின்றி வேண்டாம் வேண்டாமென்று நம்மை காலில் விழாத குறையாக நம்மை காப்பாற்ற கதறுகின்றதே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல் தான்.

ஆன்மீக வாசல் திறந்திருக்க, அபாய வாசலை நோக்கி பயணிக்கின்றாயே என்று நல்ல பாதையை நமக்கு காட்டி, நமது கையை பிடித்து நல்வழி செல்ல அழைக்கின்றதே அந்தக்குரல் நமது ஆன்மாவின் அன்பு குரல் தான்.

இப்பிறப்பில் ஆன்ம உயிர்ப்பு இல்லாத போது வரும் பிறப்பிலாவது நாம் இறையுணர்வில் ஆழ்ந்திட நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நம்மோடு ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் உற்ற துணை யார் தெரியுமா ? நமது ஆன்மா தான்.

ஆன்மீக நெறியில் ஆழ்ந்து போகும் அன்பர்களுக்கு அவர்கள் யார் என்று உணர்த்தி, முற்பிறப்பில் யாராக இருந்து இறந்தோம், இப்பிறப்பில் எதற்காக பிறந்து வளர்ந்தோம் என உணர்த்துகின்றதே ஒரு தெய்வீக ஒளி அது நமது ஆன்மாவின் ஒளி தான்.

தவ , யோக , த்யான , நியம நிஷ்டையில் மூழ்கி திளைக்கையில் , உள்ளிருந்து ஆனந்த பேரலையாக எழுந்து , உடல் முழுவதும் பரவி , மனமும் , உடலும் காணாமல் போய் , காயமே இது பொய்யடா என மெய்ப்பித்து, இறைவா , இறைவா என்ன இந்த இன்பநிலை, மானிட பிறப்பில் இப்படியும் அதிசயமா , எனக்கா , இது நானா , என்னாலும் இது சாத்தியமா என ஆனந்த பித்தனாக்கி நம்மை நமக்கு அடையாளம் காட்டப்பட உதவுகிறதே அதன் உள்ளார்ந்த வித்து நமது ஆன்மா தான்.

அடையாளம் காட்டப்பட்ட மனிதன் தன்னுணர்வை அடைந்து இனியும் தாமதிக்காமல் இறைவழியில் நடந்து இறைவனின் பதம் நாட வேண்டும் என எண்ணி துதித்து , மனமுருகி , மெய்யொன்றி அதன் வழி செல்ல முற்படும் போது ஒரு புத்தம் புது பூவை கையிலெடுப்பது போல் நம்மை எடுத்து இறைவழியில் நாம் செல்லுவதற்கு இறுதிவரை உடன் வரும் துணை யார் தெரியுமா ? நமது ஆன்மா தான்.

இப்போது தெரிகிறதா ?ஆன்மாவின் வேலையென்ன என்று..

உங்கள் ஆன்மா சொல்வதை கேளுங்கள், அன்பு வழி செல்லுங்கள். பேரானந்த அலையில் ஆடுங்கள், பேரின்ப அற்புதங்களை கண்டு உணருங்கள். வாழுங்கள் வளமோடு வாழும் நாளெல்லாம். முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே..

ஈசன் என்பதன் பொருள் தெரியுமா?

ஈசன் என்ற சொல்லுக்கு அரசன், ஆள்பவன், இறைவன், மூத்தவன், கடவுள், குரு, தலைவன் என பல பொருள்கள் உண்டு.

உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார்.

அவருடைய இடப் பாகத்தில் இடம் பெற்றிருக்கும் தேவிக்கு ஈஸ்வரி ,ஈசானி, ஈசி என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

சிவனுக்குரிய நட்சத்திரமான திருவாதிரையை ஈசன் நாள் என்பர்.

அவர் விரும்பி அணியும் கொன்றை மாலைக்கு ஈசன் தார் என்று பெயர்.

சிவன் உறைந்திருக்கும் கைலாயமலை ஈசான மேரு எனப்படும்.

தன்னை நம்பி வந்தவருக்கு, அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகை குணமும் கொண்டவர் என்பதால், இவரை ஈசன் என்பர்...

தமிழர் அரசு முறையை சிதைத்த பாளையப்பட்டு முறை...


16ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சேர, சோழ, பாண்டியர்களாகவும், சிற்றரசர்களாகவும் வாழ்ந்த தமிழர் அரசுகள் தங்களுக்குள்ளே போரிட்டு வந்த போதும் அயலக எதிரிகளை மாலிக்காபூர் படையெடுப்பு வரை வலுவாக எதிர்த்து மீண்டு வந்திருக்கின்றனர்.

அதன் பின்பு அமைந்த வடுகர்களின் ஆதிக்கத்தின் போது மட்டும் மீளவே முடியாமல் எப்படிச் சிதறுன்டு போயினர்? 

தெலுங்கு நாயக்கர்களின் 'சீரிய சிந்தனையில்' விளைந்த பாளையக்காரர்கள் முறை எதற்காக ஏற்படுத்தப் பட்டது?

விசயநகர வடுக அரசின் 'குமாரகம் பண நாயக்கன்' காலத்தில் சுல்தான்களை விரட்டும் சாக்கில் தமிழகம் மீதான படையெடுப்பு  வேட்டை நாய்கள் துணையுடன் துவங்கியது.

(பார்ப்பானை விரட்டும் சாக்கில் சமீபம் வரை தமிழனை ஆண்டு கொண்டிருக்கும் அவர்களின் திருட்டுத் திராவிட வாரிசுகளைப் போல்) 

மதுரை துவங்கி தமிழகத்தின் பேரரசுகளும், சிற்றரசுகளும் வடுகத்தின் வாள்முனையிலும், வஞ்சக முனையிலும் வீழ்ந்தன.

வீழ்த்த முடியாதவை பொட்டுக்கட்டி ஸ்பெசல் 'சொர்க்க வாசல்' ஆயுதத்தால் வீழ்த்ப்பட்டன..

கிருஷ்ணதேவராயன் காலத்தில் 'நாகமநாயக்கன்' கைப்பற்றப்பட்ட பாண்டிய நாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டான்..

கிருஷ்ணதேவராயனுக்கு அல்வா கொடுத்து   தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்த நாகமநாயக்கனை அவனது மகன் 'விஸ்வநாத நாயக்கனை' கொண்டே வீழ்த்தினர்.

தமிழகத்தைப் பாளையங்களாகப் பிரித்து சின்னாபின்னப் படுத்திய புண்ணியவான் இந்த விஸ்வநாத நாயக்கனே..

பாண்டியநாடு மட்டும், பாஞ்சாலங்குறிச்சி துவங்கி  காமநாயக்கனூர் வரை 72 பாளையங்களாகப் பிரிக்கப் பட்டன. 

பாளையத்துச் ஜமீன்களாக தெலுங்கர்களும், தெலுங்கர்கள் ஆதிக்கம் செய்ய இயலா இடங்களில் தமிழ்த் தலையாட்டிப் பொம்மைகளும் நியமிக்கப் பட்டன..

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன்  கெட்டிப் பொம்முலு நாயக்கரும் அவ்வழி வந்த தெலுங்கு குலக்கொழுந்தே...

பிரிக்கப்பட்ட பாளையங்களில் பாளையக்காரர் எனவும், ஜமீன்தார் எனவும் அழைக்கப் பட்டவர்கள் வைத்ததே சட்டம்.

நீட்டிய இடத்தில் வரி வசூல். பாளையத்துக்கு உட்பட்ட குடிகள் அனைத்தும் அடிமைகள்.

முக்கியமாக எந்தப் பெண்கள் வயதுக்கு வந்தாலும் முதலில் பாளையத்துக்கு தகவல் தெரிவித்தாக வேண்டும்.

இவ்வளவு வசதியை அள்ளிக் கொடுத்த விஜயநகரப் பேரரசை என்ன மானாவுக்குப் பாஸூ ரிஸ்க் எடுத்து சண்டைப் போடனும்?

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க...


1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக...

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு... துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?


துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான்.

பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது.

இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டு பிடித்தது தான் பறை.

அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.

அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வினைக் கொடுக்குமாம்.

யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்...

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்...


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க...


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே.. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா...

அதன் விளக்கம் பின்வருமாறு...

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)

3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)

10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

11.மாறாத வார்த்தை (வாய்மை)

12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்...

இந்திய கப்பல் படை தமிழர்களை தாக்கவே தமிழனின் வரிப் பணத்தில் உண்டு வாழ்கிறது...


இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதில், ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் கப்பல் கடலில் மூழ்கியது கடலில் தத்தளித்த 5 மீனவர்களும் கரைக்கு திரும்பினர்...

தமிழன் கண்டு பிடிப்பான திருகை...


நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு...

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது..

திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு...

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்..

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்..

சமாச்சாரம் இது... இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்...

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்...

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்..

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்...

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

தமிழக அரசும்.. அதிகாரிகளும்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 45...


மரணத்திற்குப் பின் என்ன?

ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியை க் குறிப்பிட்டு இருந்தோம். அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன.

ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது. இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான். இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?

மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......

அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது......

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

மேலும் பயணிப்போம்....

பாகற்காயின் மருத்துவ குணங்கள்...


உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்...

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை  நோய் உள்ளவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவுடன் சேர்த்து  உண்டு வந்தால், கணையம் சீராகி இன்சுலின் சுரப்பு  நாளடைவில் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. 

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்...

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார் கம்பனி கும்பல்களின் திராவிட பகுத்தறிவு யாதெனினில்...


கருணாநிதி ராமானுஜரை புரட்சியாளர் என்று சொல்லி தொடர் எழுதலாம்..

அவர் மகன் சாய்பாபா படத்தை தன் அலுவலக மேசையில் வைக்கலாம்..

அவர் குடும்பத்தினர் கோயில் கோயிலாக போய் பூசை செய்யலாம்..

கலைஞர் டிவியில் தீபாவளி திருநாள் கொண்டாடலாம்..

அதெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.. கேள்விக்கு உட்படுத்தக்கூடாது..

ஆனால் தமிழன் எது செய்தாலும் அதை மூடநம்பிகை என்று சொல்லனும் கேலி செய்யனும் கேள்விக்கு உட்படுத்தனும்..

அப்போ தான் நாமும் கன்னட ஈ.வே. ராமசாமி போல் தமிழனை ஏமாற்றி பிழைப்பை நடத்த முடியும்...

எவனை ஒழிக்கிறோமோ இல்லையோ இவனுங்கள ஒழிச்சே ஆகணும்... தடம் தெரியாம அழிக்கனும்...

ஆம் நான் இனவாதி தான்...


நான் ஏன் இனவாதியானேன்?
ஏன் எனக்கு திராவிடம் முதல் எதிரி?

தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கன், கன்னடன், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் கோவனத்துண்டு தமிழகத்தின் நிலமும், வணிகமும், அரசியலும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசும் ஜரிகை தலைப்பாகை வந்தேறிகளின் வசமானது எப்படி?

ஆரியர் அடிமைப்படுத்திய வரலாற்றைப் பேசும் திராவிடப் பொரச்சியவாதிகளின் நொள்ளைக் கண்களில் 14ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஆண்டு அடிமைப் படுத்திய நாயக்கர்கள் வரலாறு தென்படுவதில்லையே எப்படி?

ராசராசன்களைத் தோண்டியெடுத்து போஸ்ட்மார்டம் செய்து வர்ணாசிரமவாதி என ஆய்வறிக்கை வழங்கும் திராவிட பகுத்தறிவுப் பொங்கப் பானைகள், கர்நாடகத்துக் கடம்ப பேரரசன் மயூரவர்மன் அரசவையில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்டதே மனுதர்ம சட்டம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மட்டும் முன்வாசலிலும் பின்வாசலிலும் வாழைப்பழத்தைத் தினித்துக் கொண்டு பம்முகின்றனரே எப்படி?

முகமதியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி வந்தேறிய வடுக இனப்பெண்கள் மேனாமினுக்கி சிலுக்கு உடை தரித்திருக்க, எம்குலப் பெண்கள் ரவிக்கையின்றி தண்ணீர்குடம் சுமக்கப் பணிக்கப்பட்டது எப்படி?

சிலுக்கு உடை மினுக்கிகளின் சொர்கபுரி வாசலுக்குள் எம்மன்னர்களின் சிற்றரசுகள் சமாதியானது எப்படி?

வேட்டைநாய்களுடன் பிழைக்க வந்த வெண்ணைகள் பாளையக்காரனாவும், நிலவுடைமை சமீன்தாராகவும் ஆனதெப்படி?

ஆட்டுத்தலைக்கும், கம்பங்கதிருக்கும், கள்ளுமொந்தைக்கும் ஆதித்தமிழரின் அடிமடி எழுதி வாங்கப்பட்டது எப்படி?

வள்ளலாரும், வைகுண்டரும், இரட்டைமலையாரும் மறைக்கப்பட்டு வடுக இனவெறி பொரச்சியாளர்கள் மட்டும் பெரியார்களாக கட்டமைத்துக் காட்டப்பட்டது எப்படி?

நட்சத்திரங்களையும், காலத்தையும், கோள்களையும், வான்வெளியையும் கணித்து பிரபஞ்சத்தின் அசைவையே ஒற்றை ஓலைக்குள் சுருக்கி எழுதிய எம் சித்தர்களின் அறிவியலும், முன்னோரை வழிபட்ட எம் தமிழ்க்குடியின் மெய்யியலும் குருட்டு பகுத்தறிவாளர்களின் வறட்டு வாதங்களால் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டது எப்படி?

தமிழர்கள் மட்டும் பலியான இந்தியெதிர்ப்புப் போரின் பலன்களை எல்லாம் திராவிடர் மட்டும் அறுவடை செய்தது எப்படி?

பள்ளனும், பறையனும், தேவனும், வன்னியனும், நாடாரும், கோனாரும் வெட்டிக்கொண்டு சாக நாயக்கனும், ரெட்டியும், மார்வாடியும் தமிழ்நிலத்தில் உல்லாச கானம் பாடி உவகையடைவது எப்படி?

தமிழ்ப்பூசாரிகள் உண்டக்கட்டிக்கும், உருண்டைச் சோத்துக்கும் மணியடித்துக் கொண்டிருக்க தமிழகத்திலுள்ள பெரும்பாலான வருமானம் கொழிக்கும் கோயில்கள் தெலுங்குப் பிராமணர்கள் வசமானது எப்படி?

இசைக்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த தமிழிசை தெலுங்கிசையாகத் திரிந்து, எங்கள் காதுகளில் பால்டாய்ல் ஊற்றுகிறதே எப்படி?

உலகிற்கே பொதுமறை வகுத்தளித்த எம்பாட்டன்கள் கோலோட்சிய இலக்கிய உலகில், பிறப்புறுப்புகளை வெட்டவெளிச்சாமாக விளிக்கும் சரோஜாதேவி வகையறா வேற்றின இலக்கியவாதிகளே புற்றீசலாகக் கிளம்புவது எப்படி?

தமிழகத்தின் பலம்பொருந்திய திரைஊடகத்தை வந்தேறிகளின் கவர்ச்சிப் பொறியாக்கி தமிழகத்தை ஆளும் வடுகர்களையே பன்றியிட்ட குட்டிகளாய் பிதுக்கித் தள்ளுகிறதே எப்படி?

ஊராட்சி உறுப்பினராவதற்கே தமிழன் ததிங்கினத்தோம் தாளமிட்டுக் கொண்டிருக்க தமிழகத்தின் ஆட்சி அதிகார குடுமி மட்டும் வடுகர்களிடம் சிக்கி சீவி சிங்காரித்து சிரித்து நிற்கிறதே எப்படி?

எல்லாவற்றுக்கும் மேலாக, போர்தொடுத்த இந்தியத்திற்கு காட்டியும் கூட்டியும் கொடுத்த திராவிட ஆட்சியாளர்களின் கயமைத்தனத்தை தாங்கமுடியா ஆத்திரத்தில் வெந்து தனிந்த ஈழத்துச் சாம்பல் மேட்டில் நான் தமிழின வெறியனானேன்..

கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா....


கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்..

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்...

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய மரபணுக்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு..

என்ன தான் கணவனின் மரபணு குழந்தைக்குள் இருந்தாலும் அது சமீபத்திய மேம்படுத்தவே இந்த ஏற்பாடு.

மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்...

இப்பொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?

தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்...


வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.

இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?

மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள் ஒரு நீண்ட நெடிய விளக்கத்தைக் கொடுக்கத் தொடங்குவார்கள்.

அதாவது அண்ட சராசரம், பிரபஞ்சம், அண்டவெளி, யோகி, சித்தன், குண்டலினி, விண்வெளி என்றெலாம் சுத்தி வளைத்து கடைசியில் லிங்கம் என்றால் சிவனின் மொத்த உருவம் என்று கொண்டு வந்து முடிப்பார்கள்.

கடைசிவரை சிவன்/சிவம் என்றால் என்னவென்றே சொல்லமாட்டார்கள்.

பாபா ராம்தேவ், ஆசாரம் பாபு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் என அனைவரும் இந்த ரகம் தான்.

சங்கராச்சாரி முதல் நித்யானந்தா வரை இதே கதை தான்.

சிவன்/சிவம் என்றாலே என்னவென்று விளங்கிக் கொள்ள முடியாத முண்டங்கள் சிவலிங்கம் என்றால் என்ன என்று எப்படி விளக்குவார்கள்?

இவர்களைப் பொறுத்தவரை தமிழ் மெய்யியல் என்றால் தமிழ் மந்திரங்கள் மூலம் ஒரு கல்லைக் கும்பிடுவது. அவ்வளவே.

ஏண்டா.. மெய் என்றால் உடல் என்று தானே பொருள். அப்போ மெய்யியல் என்றால் உடலியல் என்று தானே பொருள்படும்?

உடலின் இயக்கத்தை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ்வியலை நெரிப்படுத்திக் கொள்வது தானே மெய்யியலைக் கடைபிடிப்பது என்று பொருள்?

அதை விடுத்து வேறு ஏதோ விளக்கம் கொடுக்கிறீர்களே, நீங்கள் எல்லாம் யார்? தெரிந்து தான் பேசுகிறீர்களா? இல்லை தெரியாமல் உளருகிறீர்களா?

தெரியாமல் உளறினால் மன்னிக்கலாம். ஆனால் தெரிந்தே மறைத்தால் நீங்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்கு அடிபணித்து தானே செயல்படுகிறீர்கள் என்று பொருள்?

இந்த லட்சணத்தில் புத்தகம் வேறு வெளியிட்டு காசு பார்க்கிறார்கள் பரதேசிகள்.

நானும் பலபேரிடம் சென்று சிவலிங்கம் என்றால் அது மேல்தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறி தான் என்று ஆதாரத்தோடு நிரூபித்தேன்.

ஆனால் என் இளம் வயதைக் காரணம் காட்டி “சித்தர் மரபைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது தம்பி” என்று தட்டிக்கழித்தால் என்ன அர்த்தம்?

நீங்கள் ஏதோ செயல்பாட்டோடுதான் இயங்குகிறீர்கள் என்றுதானே அர்த்தம்?

தமிழ்ச் சமயத்தை அழித்தொழிக்க எதிரிகள் முதலில் எடுத்த ஆயுதம் சிலை வழிபாட்டை ஆதரித்த பௌத்த மதம் ஆகும்.. அடுத்து ஜைனம்.. குத்துயிரும் குலையுயிருமாக இருந்த தமிழ்ச் சமயத்தை அடுத்து வந்த சைவமும் வைணவமும் தமிழில் பாட்டுபாடியே கொன்றன. அதற்குப் பெயர் பக்தி இயக்கமாம்.. கொலைகாரப் பாவிகளே..

ஆனால் எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், பண்டைய தமிழ்ச் சமயமானது இன்று குல தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய சேவல்/கிடாய் வெட்டு மட்டும் முடி இறக்குதல் ஆகியவை மூலம் இன்று நம் குடும்பங்களில் உயிர்த்தெழுந்தது.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள் இந்து மதம் என்று ஒன்றை செயற்கையாய் உருவாக்கி, ராமன், கிருஷ்ணன், நேற்று முளைத்த சாய் பாபா போன்ற சிலைகளை நம் வீட்டுக்குள் இன்று வலியத் திணித்து வருகிறார்கள்.

அதிமுக அம்மையாரின் கடந்த ஆட்சியில் சேவல்/கிடாய் வெட்டுக்கு போடப்பட தடையை நினைவு கூறவும்.

சரி, இதற்கும் சிவ லிங்கத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?

தொடர்பு இருக்கு, அதாவது “சிவம்” என்றால் நாம் வைக்கும் படையல் என்று தான் பொருள்.. முதன் முதலில் சேவல்/கிடாயை வெட்டி படையல் வைத்தனர். அப்படையலில் இரத்தமும், சதையும் சிவப்பாகத்தனே இருக்கும். அதனால் தான் அப்படையலுக்கு சிவம் என்று பெயர்.

இந்த உண்மையை மறைக்கத்தான் நாயன்மார்கள் பாடிப் பாடியே சைவம் என்ற ஒன்றை வளர்த்தார்கள்.

சிவலிங்கம் என்றால் மேல் தோல் நீக்கப் பட்ட ஆண்குறி என்று தான் பொருள்.
சிவ + ஆள் + அங்கம் = சிவாளங்கம் => சிவாலிங்கம் => சிவலிங்கம்.

அதாவது சேவல்/கிடாய் வெட்டுக்கு ஒரு படி மேலே போய், பாலை நில ஆண்கள் தங்கள் ஆண்குறிகளின் மேல்தோலையே அறுத்துக் கொண்டு அதைப் படையலாக (சிவமாக) கொற்றவைக்கு வைத்தனர்.

இவ்வாறு மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.

பலி கொடுத்து அதைப் படையல் வைப்பதற்குப் பெயர் தான் சிவவழிபாடு.

இதை நாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு புத்தகத்தில் எழுதிவைத்துக் கடத்தவில்லை. ஆனால் ஒரு கல்லில் சிவலிங்கத்தைச் செதுக்கி வைத்து அடுத்த தலைமுறை ஆண்களுக்கு கொற்றவை வழிபாட்டின் நுட்பத்தைக் கடத்தி வந்தோம்.

இது மட்டும் அல்ல, நுட்பத்தைக் கடத்த சூலத்தையும் நாம் குல தெய்வக் கோவில்களில் நட்டு வைத்தோம்.

இவை எல்லாம் எதற்கு என்றால் ஆண்கள் சிவவழிபாட்டை விட்டுவிடக் கூடாது என்பதால் அதை நினைவுப் படுத்திக் கொண்டே இருப்பதற்காகத் தானே தவிர கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்வதற்கு அல்ல.

இன்று சிவவழிபாட்டை விடாமல் செய்பவர்கள் உலகத்தில் இருவர் மட்டுமே.

ஒருவன் தமிழன், மற்றொருவன் இசுலாமியன்.

இந்த உண்மையைச் சொன்னால் சில லேகிய வியாபாரிகள் நம்மை இசுலாமியக் கைக்கூலி என்கின்றனர்.

இசுரேலிய யூதர்களும் சுன்னத் செய்கிறார்களே? அப்போ அவர்கள் சிவவழிபாடு செய்யவில்லையா? என்றால் இல்லை என்று தான் நான் சொல்வேன்.

இதைப் பற்றியும் சூலம் பற்றியும் விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இந்த சிவலிங்க நுட்பத்தை எவன் எவன் எல்லாம் பூசி முழுகி மறைக்கப் பார்க்கிறானோ, அவர்கள் அனைவரும் வியாபார நோக்கம் கொண்டவர்கள்.

சாமியார் வேடம் போட்டு ஏமாற்றும் லேகிய வியாபாரிகள். அவ்வளவே..

 - சிவகுமார் அவர்களின் பதிவிலிருந்து..

கீழே சில பழமையான சிவலிங்க உருவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள்:

1 - Sri Parasurameswara Temple, Gudimallam, Andhra Pradesh. Second Century B.C.

2 - Vishnupad Temple, Gaya, Bihar.

3 - Ek Mukha Lingam, Aghapura, Bharatpur, Rajasthan. First Century A.D.

4 - Aradhanarishwara Temple, Indabettu, Dakshina Kannada, Karnataka. Second Century B.C...

உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்......


படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு.

இதை நம் ஊரில் 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க.

சில இடங்களில தூக்கு, தூக்கு கோல்ன்னும் சொல்லுவாங்க..

 வெள்ளைக்கோல்வரை என்கின்ற
சுத்தமான, அழகான தமிழ் சொல் தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு.

அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க..

அதனால தான் இந்த பேரு.

அந்த கோடுங்க தான் எடைகளுக்கான குறியீடு. பொதுவா தாரசுன்னா இரண்டு தட்டு இருக்குறது வழக்கம்.

ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க.

ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு.

ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது.

அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான்.

கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம்.

கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல.

இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும்.

ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'மேடை சமநிலை' (Platform Balance) ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான்.

நாம அபிவிருத்தி பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது?

திருவள்ளுவர் சொன்ன "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான்.

இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது.

தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும்.

அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். எனவே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க.

இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு.

இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினைச்சி பார்க்கையில் நம்மால் ஆ....ன்னு வாய பிளக்கதான் முடியுது.

நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்போ, எங்கே அறுந்து போச்சுங்கிற கேள்விக்கு தான் பதில் இல்லாமல் நாம் மற்றவர்கள் முன்னால நின்றுக்கிட்டு இருக்கிறோம்...

அக்டோபர் 30 - சுதந்திரப்போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தினம் இன்று.. (1908) - வணங்குகிறோம்...