02/09/2018

சேலம் அருகே நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 7 பேர் பலியான சோகம்...


சேலம் மாவட்டம் மாங்கம் என்ற பகுதியில், சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி சென்ற தனியார் பேருந்தும், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்ற சொகுசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பேருந்தை கடைசி நேரத்தில் திருப்பியது விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தக் கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாயினர். படுகாயம் அடைந்த
20 -க்கும் மேற்பட்டோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  இந்த விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது...

விலை போகும் மக்கள்...


உயிருக்கு போராடியவரின் முன் செல்பி, மருத்துவமனை ஊழியர்களின் அதிர்ச்சி செயல்...


முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும், முன்னணி நடிகருமான ஹரி கிருஷ்ணா நேற்று முந்தினம் கார் விபத்தில் படுகாயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஹரிகிருஷ்ணாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கொண்டிருந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சை அளிப்பதை செல்பி எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

இப்போது கூறு.? பணம் என்ற ஒன்றிற்காக யாரால், உன் தலைமுறை/வளங்கள் அழிக்கப்படுகிறது என்று...


தீபாவளி என்றால் என்ன?


புராணம் கூறுவது...

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்..

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை தமிழ் அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பிராமணன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பிராமணர்கள் வந்து பார்த்து, “கங்காசு நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்.. சிந்தியுங்கள்..

மாணவர்களே. உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்.

எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பிராமணர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.

தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.

அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே.. இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு?

எதையுமே நம்பாத சில பகுதறிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்..

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...

தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .

அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ?வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்.

'தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் , தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் ''
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் , தஸ்யுக்கள் , அசுரர்கள் , என்றும் கூறபட்டிருக்கின்றது.. ஆரியருக்கும் , ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் . இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் , மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் , உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் தமிழர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி..

இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே 18 யைக் கூட விழாவாக  கொண்டாடுவர்...

12 வழிச் சாலை...


பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் - வானியல் நுட்பம் (ASTRONOMY)...


பலரும் சொல்ல தயங்கும் கேள்வி புலவர் எவ்வாறு இதை அறிந்தனர் என்ற கேள்வியோடு உள்ளே நுழைவோம்?

நட்சத்திரம் என்பது அப்போது விண்மீன் என அழைக்கப்பட்டது. அதாவது வானில் சுயமாக ஒளிவிடக்கூடிய நட்சத்திரத்தை நாண் மீன் என்றும். சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வன கோள்மீன்கள் என்றனர்.

சூரியனின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பனவாகும். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் எனப்படும்.

மாக விசும்பின் வெண்டிங்கள் மூவைந்தாள் முறை முற்ற
-  (புறநானூறு – 100)

எட்டாம் நாள் பிறை நிலவு எண்ணுட்டிங்கள்
- (புறநானூறு-118)

உவவுத்தலை வந்த டிபருநாள் அமையத்து
இருசுடர் தம்முன் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு
- (புறநானூறு-65)

அதாவது திங்களாகிய கோள்மீன், ஒவ்வொரு நாளும் நிற்கும் நிலையே அன்றைய நாண்மீன் ஆதிக்கம். அது ஞாயிற்றோடு சேர்வதும், பிரிந்து எதிர்ப்பக்கம் சேர்வதும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும்.

சந்திரன் வளரும்போது பதினைந்து நாட்கள் அடைவது போலவே தேய்கையிலும் பதினைந்து நாட்கள் அடைகிறது.

முழுமதி நாளில் சூரியனும் திங்களும் எதிரெதிராக நிற்கும். திங்கள் தோன்றும் போது கதிர் மறையும். அதாவது பூமியில் முழுநிலவு தோன்றும்.

அதிதிநாள் கழை யாவணமேரி புனர்தங் கரும்பிவை புனர்
பூசமாகும் என்பது பிங்கலந்தைச் சூத்திரமாகும்
- (புறநானூறு- 229)

விண்மீன்கள், கோள்களின் நிறம், வடிவம் பற்றித் சங்ககாலத் தமிழர்கள் நன்கு தெரிந்திருந்தனர். வெண்மை நிறமுடையதை வெள்ளியென்றும், செந்நிறமுடையதைச் செவ்வாய் என்றும் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அனுடத்தை முடப்பனை என்றும் புனர்பூசத்தைக் கயம்(குளம்) என்றும், கூடலூர்கிழார் குறித்துள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல.
- (பட்டினபாலை-66,67)

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் என்று இலக்கியத்தோடு விஞ்ஞானத்தையும் கூறியுள்ளார்.

இலங்கு கதிர்வெள்ளி தென்புலம் படரினும்.
- (புறநானூறு-35)

தென்திசை மருங்கில் வெள்ளியோடினும்.
- (புறநானூறு-117)

வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை.
- (புறநானூறு-388)

வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன. இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர்.

எல்லாம் சரி ஆனால் இவர்கள் எப்படி இதெல்லாம் கணித்தார்கள் என்ற கேள்வி வருகிறது அல்லவா?

சித்தர்கள் விண்ணை ஆராய தன் சூட்சம தேகத்தையும், இரசமணியையும்  மற்றும் ரசகுளிகையையும் பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்த ஒன்றே அவர்கள் பல கோள்களை இவ்வாறு கண்டனர்.

ஆனால் புலவர்கள் எப்படி கண்டிருப்பர் என்று கேட்டால் அவர்களுக்கு மூலிகை அறிவை கொண்டு இதை கண்டனர் என பதில் வருகிறது.

நந்தியாவட்டை பூவை ஒரு நாள் நீரில் ஊறவைத்து அந்த நீரை எடுத்து கண்களை நன்றாக கழுவி வில்வ இலையை அந்த நீரோடு சேர்த்து அரைத்து கண்கள் மேல் தடவி இரவு முழுவதும் குளிர விட்டு காலையில் எழுந்து கழுவி பின் கல்லில் வளரக்கூடிய கல்தாமரை என்ற செடியை கவனித்து அதன் மேல் உள்ளங்காலை வைத்து வானத்தை பார்க்க நட்சத்திரம் தெரியும்.

மேலும் இதோடு பொன்னாங்கண்ணி இலையை வாயில் இட்டு குதப்பி கடவாயில் வைத்து அந்தந்த கிரக ஓரையில் திசையறிந்து காண பொன் ஒளி வீசும் சூரியனும் நவகோள்களும் கண்ணுக்கு புலபடும்.

இவ்வாறு தான் புலவர் பெருமக்கள் வானியலை கண்டனர் என சில மூலிகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சிலர் இதில் சில மூலிகைகள் தேவையில்லை கல்தாமரை மட்டுமே போதும் என்கிறார்கள்.

ஆனால் இதன் உண்மை தன்மை பழந்தமிழர் அறிவர்.

மேலுள்ளவை அனைத்தும் தகவல் பகிர்வு இதன் உண்மை தன்மை ஆய்வு செய்து அறிய வேண்டியவை...

இயற்கை...


கற்பனை...


பிரபஞ்சம் நமக்கு பலவிதமான  பொக்கிசங்களைக் கொடுத்துள்ளது அதில் ஒரு மாபெரும் பொக்கிசம் தான் கற்பனை.

மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் கற்பனைகள் தான்.

நாம் எதை கற்பனை செய்கிறோமோ அதை நம்மால் நிச்சயமாக அடைந்துவிட முடியும்.

நாம் எப்படி கற்பனை செய்கிறோமோ அப்படியே அது நம்மை வந்தடையும்.

கற்பனை எந்த அளவிற்கு அழகாய் உள்ளதோ அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் அழகாய் மாறும்.

கற்பனையின் வேலையே புதிதாக ஒன்றை படைப்பது தான்.

கற்பனை தான் உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் வசீகரங்களின் முன்னோட்டம் என்றார்
-ஐன்ஸ்டின்.

உங்கள் வாழ்க்கை எப்படி வேண்டும் என்பதை கற்பனை செய்யுங்கள் அதன் படியே ஒவ்வொரு செயலையும் செய்து பாருங்கள்.

கற்பனையின் சக்தி அப்போது தான் புரியும்.

உடல் மற்றும் மனதளவில் யாரையும் காயப்படுத்தாத வண்ணம் உங்கள் கற்பனை இருந்தால் உங்கள் கற்பனை மட்டுமல்ல வாழ்க்கையும் நிச்சயமாக அழகாய், அர்ப்புதமாய் மாறும்...

நீட் வேண்டாம்...



சேலம் ரோகினி IAS ஐ திடீர் என்று கொண்டாடும் நோக்கம் என்ன ? யார் இந்த ரோகினி ?


ரோகினி ஐ.ஏ.எஸ் (சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டராக ரோஹினி ஆர்.பாஜிபாக்ரே) அறிவோம்..

புதிய அஇஅதிமுக மாவட்ட செயலாளர்..

சேரன்மாதேவி சப் கலெக்டராக 2011-2013 இல் இருந்த போது தாது மணல் கொள்ளையை எதிர்த்த மக்களை, வைகுண்டராசன் அடியாளாக இருந்து கூத்தன்குழி என்ற கிராமத்தினர் அனைவரையும் சுமார் 5000 மக்களை அகதியாக்க துணை நின்றவர்.

53 வாரம் மட்டுமே சட்டப்படி சப்-கலெக்டராக இருக்க வேண்டியவர் சட்டவிரோதமாக. 100 வாரத்திற்கு மேல் இருந்தவர்.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்தில் தண்டணை வராமல் தடுக்க ஜெகஜால புரோக்கர் வேலைககள் பல செய்த சங்கர் பிதாரியின் மருமகள்.

எஸ்.பி என்ற. பேரை வைத்துக்கொண்டு பல்வேறு சமூக விரோதிகளின் (தாதுமணல்- கிரானைட்) கூட்டாளியாகயாகவும், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், சகாயம் இ.ஆ.ப. அவர்கள் கிரானைட் முறைகேட்டில் நரபலி ஆய்வை செய்ய விடாமல் தடுத்து அவரை சுடுகாட்டில் படுக்க வைத்தும், நெல்லை-மதுரை மாவட்டத்தில் எஸ்.பி யாக. இருந்த. விஜேந்திர பிகாரியின் மனைவி தான் ரோகினி ஐ.ஏ.எஸ்...

கூத்தாடிகளை வெளுத்து வாங்கும் முகநூலில் இளைஞர்கள்...


இதுபோன்ற கருத்துக்களை பார்க்கும் போது ரெம்ப பெருமையா இருக்கு...

இனி சினிமாத்துறையில் இருந்து எவனும் அரசியலுக்கு வரக்கூடாது...

சேலம் 8வழிச் சாலை உண்மைகள்...


சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அதன் சாதக-பாதகங்களை உரிய துறைசார்ந்த நிபுணர்கள் உதவியுடன் பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், இந்த திட்டம் குறித்து அரசுத் தரப்பில் அளிக்கப்படும் தகவல்கள் குறையுடையதாக இருப்பதும், இத்திட்டம் பெரும்பாலான மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிராக இருப்பதையும் கண்டறிந்தோம். எனவே இந்த திட்டத்தை எதிர்த்து ஒரு சட்டப்போராட்டத்தை துவக்கத் திட்டமிடப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பொதுப்பயன்பாட்டுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) என்று இந்த சட்டத்திற்கு பெயரிடப்பட்டது. பொதுப்பயன்பாட்டுக்கு தங்கள் நிலத்தை கொடுக்கும் மக்களுக்கான உரிமைகளை, மறுவாழ்வை ஓரளவுக்கு உத்தரவாதம் செய்யும் இந்த சட்டத்தில் சில விதிவிலக்குகள் அதன் பிரிவு 105இல் கொடுக்கப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை சட்டம், இந்திய அணுசக்தி சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்களின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்படும்போது மேற்கூறிய நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டத்தின் கூறுகள் பொருந்தாது என்பதே அந்த விதிவிலக்கு.

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் கீழேயே தொடங்கப்பட்டது. எனவே இந்த திட்டத்திற்கான நிலத்தை அளிப்பவர்களுக்கு, “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம்” வழங்கும் பாதுகாப்புகள் கிடைக்காது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்தோம்.

எனவே, “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம், 2013” சட்டத்தின் பிரிவு 105ஐ செல்லாதென அறிவித்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பொறியாளர் கோ. சுந்தர்ராஜன் பெயரில் வழக்கு (W.P. No. 15889/2018) பதிவு செய்யப்பட்டது.

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான். இந்த வழக்கு மனுவின் நகலும், இத்திட்டம் குறித்து எங்களிடம் இருந்த ஆவணங்களும் அதைக் கேட்ட அனைத்து நண்பர்களுக்கும் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் திரு. சத்தீஷ் பெயரில் ஒரு வழக்கு (W.P. No. 16961/2018)  பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. அன்புமணி பெயரிலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் காவல்துறை அத்துமீறுவதை குறிப்பிட்டு மூத்த வழக்குரைஞர் பொ. ரத்தினம் அவர்களும் ஒரு வழக்கை அவரது பெயரிலேயே பதிவு செய்தார். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்படலாம்.

இந்த அனைத்து வழக்குகளும் நேற்று (21.08.2018) மதியம் 2.15 மணி அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தபடி பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்திருந்த வழக்கைமட்டும் தனியாகப் பிரித்து நேற்று விரிவாக விவாதிப்பது என்றும், மற்ற வழக்குகளை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பது என்றும் நீதிபதிகள் தீர்மானித்தனர்.

இதன் அடிப்படையில் அனைத்து வழக்குகளின் நிலையை பதிவு செய்து ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். இந்த உத்தரவின் 16வது பத்தியில், “இத்திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலத்திலிருந்து அதன் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்படக்கூடாது” என்று உத்தரவிட்டனர். அப்போது மத்திய அரசின் துணைத்தலைமை வழக்கறிஞர் குறுக்கிட்டு, “இத்திட்டத்திற்கு தடை விதிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இல்லை. நில உரிமையாளர்களை சட்டவிரோதமாக அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்ற தடைவிதிக்கிறோம்” என்று தெளிவு படுத்தினர். இந்த உத்தரவு எந்த ஒரு வழக்கிற்காகவும் தனியாக பிறப்பிக்கப்படவில்லை. பொதுவான ஒரு உத்தரவாகவே பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்த வழக்கின் விரிவான விசாரணை தொடங்கியது. மூத்த வழக்கறிஞர் மு. இராதாகிருஷ்ணன் தமது விரிவான வாதத்தை தொடங்கினார். கடந்த 2013ம் ஆண்டில் கொண்டுவந்த “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013)” சுய முரண்பாடுகளைக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒரு குடிமகனுக்கு உரிமையான நிலத்தை கையகப்படுத்தும் நிலத்தை எந்த திட்டத்திற்கு பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வது அரசாங்கம். இந்நிலையில் அரசாங்கம் முடிவு செய்யும் ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என்பதும், வேறு சில திட்டங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்பதும் அரசியல் சட்டக்கூறு 14 வலியுறுத்தும் சமத்துவ உரிமைக்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த புதிய சட்டத்தின்கீழ் ஒரு திட்டம் பொதுப்பயன்பாட்டுக்காகத்தான் தீட்டப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் அத்திட்டம் அமையும் இடத்தின் கிராமசபை உள்ளிட்ட அமைப்புகளின் கருத்துகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக பல கிராமசபைகள் தீர்மானம் இயற்றி இருந்தாலும் அவை புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

நிலத்தின் உரிமையாளர்களின் நலன்கள் மட்டும் அல்லாமல், அந்த நிலத்தை சார்ந்து வாழும் மக்கள், அந்த நிலத்தில் வாழும் தாவரங்கள், கால்நடைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான சமூகத் தாக்க மதிப்பீடு (Social Impact Assessment) செய்யப்படவில்லை என்பதை நினைவூட்டினார்.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில், புதிய திட்டங்களுக்காக நிலத்தை கொடுக்கும் மக்கள் அப்புதிய திட்டத்தின் பங்குதாரர்களாக அறிவிக்கப்பட்டு அத்திட்டத்தின் லாபத்தில் நிலத்தைக் கொடுக்கும் மக்களுக்கும் லாபத்தின் பங்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தில் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள்  உறுதி செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

மேற்கூறப்பட்ட காரணங்களால் “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013)” இன் பிரிவு 105-ஐ செல்லாதென அறிவித்து அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மு. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இதையடுத்து மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தமது இறுதி வாத்த்தை சில மணித்துளிகள் எடுத்துரைத்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகளின் விசாரணை வரும் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும்...

பாஜக மோடியின் மோசடி...


அகாரம் உகாரம்...


பகரக்கேள் புலத்தியனே தேகம் சித்தி
பராபரமுள் ளுரவாய் வாயுவாச்சு
நிகரில்லை ரெண்டுமென்றாய் நிலைத்தாலே
முத்தி நினைவாக மவுனத்தின் வீடு கேளு
புகலவே அகாரமதை கீழே தாக்கி
புரிந்துநின்றால் உகாரமதை மேலே சேர்த்து
உதரக்கேள் மகாரத்தின டுவே நின்று
உற்றுப்பார் பூரணத்தின் ஒளிகாண்பாயே

பூரணத்தின் மகிமையை உணர புலத்தியனே முதலில் உடலை தயார் படுத்த வேண்டும். அடுத்து உடலுக்குள்ளே உள்ள வாசியை நிறுத்தி இரண்டுக்கும் ஒன்றாக கலந்தால் முக்தி கிடைக்கும், அகாரத்தை கிழே செலுத்தி உகாரத்தை மேலே செலுத்தி மகாரத்தின் நடுவே நிற்க வேண்டும். அவ்வாறு செய்து உற்று பார்த்தால் பூரணத்தின் ஒளியை காணலாம்...

காணப்பா சக்திசிவம் ஒன்ற தாகக்
கலந்திருப்பார் ஒருவருமே காணார் காணார்
தேன்போல யருவியங்கே பாயும் வீடு
திருவான சுழிமுனையில்தி றமாய் நின்றால்
தான்போல தானுள்ளே தானே தோணும்
தனதாக முமங்கே தானே தோணும்
வீணப்பா வலைந்து கெட்டுத் திரியவேணாம்...
                                                                                - அகத்தியர் பரிபூரணம் 400

பொருள்: சக்தி சிவம் இரண்டும் ஒன்றாய் கலந்து இருக்கும். ஒருவரும் கண்டிருக்க மாட்டார்கள். தேன் போல அருவி அங்கே பாயும். சுழுமுனையில் திறமாக நின்றால் தன்னைத்தானே உள்ளே காணலாம்.  முகம் உள்ளே தோன்றும்.வீணாக மற்றவைக்கெல்லாம் அலைந்து திரிய வேண்டாம் ...

சர்வதேச சிலை கடத்தல் உண்மைகள்...


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசு செய்ய வேண்டிவை...


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு செய்ய வேண்டியது பற்றி போராடும் மக்கள், பல்வேறு அரசியல், சமூக இயக்கங்கள், பூவுலகின் நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம், இன்றைய நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அந்த கோரிக்கையின் நியாயத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய வழி, அமைச்சரவையை கூட்டி, "தமிழகத்தில் இனிமேல் தாமிர உருக்காலைகள் செயல்பட அனுமதி கிடையாது" என்பதை கொள்கை முடிவாக அறிவித்து  சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றவேண்டும்.

-பூவுலகின் நண்பர்கள்

கார்ப்பரேட் பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்போம்...


வருமானவரி தாக்கல் செய்ய செப்-15 வரை கலாக்கெடு நீட்டிப்பு...


2017 - 2018 நிதி ஆண்டிக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். எனினும் கேரளாவின் வெள்ள பாதிப்பு காரணமாக கேரள மக்கள் தங்கள் வரிகளை தாக்கல் செய்ய வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக Central Board of Direct Taxes (CBDT) அறிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Due to disruption caused by severe floods in Kerala, CBDT hereby further extends the due date for furnishing Income Tax Returns from 31st Aug,2018 to 15th Sept,2018 for all Income Tax assessees in the State of Kerala,who were liable to file their Income Tax Returns by 31.08.2018.

— Income Tax India (@IncomeTaxIndia) August 28, 2018.

இந்நிலையில் தற்போது கேரள மக்களின் நிலை கருதி அவர்களது வரியினை செலுத்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வருமான வரித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக வருமான வரி செலுத்த இறுதிநாளாக இருந்து ஜூலை 31-ல் இருந்து ஆகஸ்ட் 31-ஆக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் தவறினால்...

மொத்த ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக 5,000 ரூபாயும் , மார்ச் 31 வரை 10,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்...

பாஜக மோடியின் சுரண்டல் இந்தியா...


இறைவன் திருவடி கண்மணியே...


மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த 
அணியே அணியும் அணிக் கழகே  அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே..

அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி  பாடல் இது. ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்..

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர்.

அப்படியல்ல.  மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின்  ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள். இதுவே ஞானப்பொருள்.

இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு. அபிராமி  பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணியிலுள்ள ஒளி தான் மருந்து என்றார்.

இதையே வள்ளலாரும் நல்ல மருந்து  இம்மருந்து சுகம் நல்கும்  வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார்.

அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார்.

இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார்.

ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான். நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள். நன்றை த் தான் சொன்னார்கள்...

கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றவர் நாந் தொழுந் தெய்வமே..

தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்தாயுமான சுவாமிகள்.

காளத்தியான்  அவன் என் கண்ணில் உள்ளான் காண்' என்  திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்...

அடுத்த தலைமுறையை காப்பாற்றவாது தற்சார்பை மீட்டெடுப்போம்...


விஏஓக்கு லஞ்சம் தர பிச்சை எடுத்த மாணவன்.. கிராம அதிகாரியை காரிதுப்பும் பொதுமக்கள்...


விழுப்புரம் மாவட்டம் மா.குன்னத்தூரை சேர்ந்த ஏழை மாணவனின் தந்தை இறந்து விட்டார். அரசின் ஈமச்சடங்கிற்கு அரசு சார்பில் தரப்படும் 12,500 ரூபாயை பெற அந்த மாணவன் விஏஓ கொளஞ்சியிடம் சென்று விண்ணப்பம் அளித்தார்.

ஆனால் அந்த பணத்தை தர அதிகாரி 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் என்னிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை என்ற கூறி உள்ளார். ஆனால் அதிகாரி லஞ்சம் கொடுத்தால்தான் பணம் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

இதனால் அந்த மாணவன் விஏஓக்கு லஞ்சம் தர பிச்சை போடுங்க என்று பேனர் அச்சடித்து பிச்சை எடுத்தார். இதனால் பதறி போன விஏஓ அந்த மாணவனை கூப்பிட்டு பணத்தை கொடுத்துள்ளார்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மோர்ஸ் கோர்டு என்றால் என்ன..?


விவேகம் படதில் அஜித் தனது மனைவி உடன் மோர்ஸ் கோடில் பேசுவதும்,
கிளைமாக்ஸ் இல் அவர் மனைவி கண் அசைவுகள் மூலம் மோர்ஸ் கோட் செய்து வில்லனின் இருப்பிடத்தை ஹீரோவுக்கு காட்டி கொடுப்பதும் பார்த்து இருப்பீர்கள்.

அந்த மோர்ஸ் கோட் என்றால் என்ன அதெப்படி கண் அசைவில் எல்லாம் பேச முடியும் . என்பதை இப்போது பார்க்கலாம்.

(பெண்கள் கண் அசைவில் பேசுவதில் வல்லவர்கள். ஆனால் நாம் பார்க்க இருப்பது அதை பற்றி அல்ல ).

Samual f.b morse என்பவரின் பெயரால் அழைக்க படுவது தான் இந்த மோர்ஸ்.

அவர் தான் தந்தியின் தந்தை அதாவது கண்டு பிடிப்பாளர்.

தந்தியில் டக டக என தட்டுவதை பார்த்து இருப்பீர்கள். அது ஏனோ தானோ என்று தட்ட படுவது அல்ல. அதில் ஒரு ஒழுங்கு உண்டு. அது ஒரு பாஷை... தந்தி பாஷை.

கணிணிக்கென்று ஒரு பாஷை உண்டு அல்லவா 0 மற்றும் 1 என்று..

அதை போல தந்திக்கு ஒரு மொழி உண்டு அது புள்ளி அல்லது கோடு என்ற மொழி.


உதாரணமாக மோர்ஸ் கோட் படி A என்றால் ஒரு புள்ளி ஒரு கோடு...

அப்போ AA என்பதை எப்படி எழுதுவீங்க ? புள்ளி கோடு, புள்ளி கோடு.. சரி தானே..

B என்றால் அதன் பாஷையில் ஒரு கோடு அதை தொடர்ந்து மூணு புள்ளி.

(கோடு .புள்ளி .புள்ளி .புள்ளி)

இப்ப AB என்று எழுத வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்...

( ✴ ______   ______✴ ✴ ✴)இப்படி வரும் சரியா ?

இதில் டிட் டாட் டேஸ் என்பார்கள். டிட் என்றால் கோடு டாட் என்றால் புள்ளி டேஸ் என்பது இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி.

ஒரு கோடு என்பது 3 புள்ளிகள் சேர்ந்த அளவில் இருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு புள்ளி அளவுள்ள டேஸ் அதாவது இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும். மற்றும் இரண்டு வார்த்தைகள் 7 புள்ளி அளவு கொண்ட இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும்.

இந்த புள்ளி கோடுகள் வெறும் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அல்ல நம்பர்களையும் குறிக்க பயன்படுகிறது.

மோர்ஸில் உள்ள மிக சிறிய எழுத்து என்பது E . (வெறும் ஒரு புள்ளி தான் மோர்ஸ் பாஷையில் E).

சரி எதற்கு இந்த புள்ளி கோடு... இதனால் என்ன வசதி ?

இப்போ ஒரு அறையில் நீங்கள் அடைக்க பட்டு இருக்கிறீர்கள் அடுத்த அறைக்கு உங்களால தொடர்பு கொள்ள முடியாது ஆனால் சுவரில் தட்டினால் அல்லது கீறினால் அடுத்த பக்கம் கேட்கும் என்றால் . சுவருக்கு இருபுறமும் உள்ளவர்கள் மோர்ஸ் கோட் தெரிந்தவர்கள் எனில் சுவரில் தட்டுவதை புள்ளி எனவும் கீறுவதை கோடு எனவும் கொண்டு தகவலை பரிமாற முடியும்.

(கோட் பற்றி தெரியாதவர்களுக்கு சுவரில் மாறி மாறி ஏதோ தட்டுவதும் கீறுவதும் போல தெரியும் ).

சரி இப்போ இதை கவனியுங்கள் ..நீங்கள் உயரமான ஒரு கட்டிடத்தில் பெரும் வெள்ளம் அல்லது புயலில் சிக்கி இருக்கிறீர்கள். தூரத்தில் மீட்பு படை கண்ணுக்கு தெரிகிறது ஆனால் கூப்பிடும் எல்லை தாண்டி இருக்கிறார்கள். சைகை செய்யலாம் என்றால் நீங்கள் சிக்கி இருப்பது கும் இருட்டில். என்ன செய்வீர்கள் ?

இப்போது உங்களிடம் டார்ச் இருந்தால் போதும் நீங்கள் தகவலை பரிமாறலாம்.

அதாவது டார்ச்சை அணைத்து அணைத்து போட்டால் அது புள்ளி...

சில வினாடி நீட்டாக எரிய விட்டால் அது
கோடு என்று கணக்கு வைத்து கொண்டு மோர்ஸ் கோடு மூலம் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கலாம் .
உலகம் எங்கும் "உயிர் ஆபத்தில் உள்ளது "என்பதை குறிக்க பயன் படுத்த படும் வார்த்தை... "S. O. S ."
இதன் முழு அர்த்தம் "SAVE OUR SOLE "..

நம்ம மோர்ஸ் கோடில் sos என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும் என்று முயற்சி செய்து பாரதால் "புள்ளி புள்ளி புள்ளி.. கோடு கோடு கோடு புள்ளி புள்ளி புள்ளி " என்று வரும்.
(✴✴✴ ____   ____   _____ ✴✴✴ ).

டார்ச்சை வைத்து இதை சொல்ல முயன்றால் மூன்று முறை குறுகிய இடைவெளியிலும் அதை தொடர்ந்து கொஞ்சம் அதிகம் இடைவெளியில் மூன்று முறையும் டார்ச்சை அணைத்து அணைத்து போட வேண்டும்.

உங்கள் கையில் ஏதாவது இசை இருந்தால்.. டிக் டிக் டிக்... டீக் டீக் டீக்... டிக் டிக் டிக் என்று ஒலிக்க வேண்டும்.

விமாணிகளுக்கு... ராணுவத்தில்... மீட்பு படையில்.... பல உயிர் ஆபத்தில்... அவசரத்தில் என்று பல இடங்களில் மோர்ஸ் பயன் படுகிறது.

விவேகம் படத்தில் காஜல் செய்தது என்ன என்று இப்போ புரிந்திருக்கும்.
அதாவது கண்ணை சிமிட்டினால் புள்ளி தொடர்ந்து மூடினால் கோடு.

இனி எங்காவது பெண்கள் கண்களை சிமிட்டி சிக்னல் கொடுத்தால் புரிந்து கொள்வீர்கள் தானே....

பாஜக அடிமை அதிமுகவும் வடசென்னை அழிப்பு திட்டமும்...


பாஜக அடிமை அதிமுகவும் வடசென்னை அழிப்பு திட்டமும்...


விரும்புவது தான் நடக்கும் - WORLD IS A MIRROR...


நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியே தான் அவர்களும் நம்மை நடத்துவார்கள்.

இது கதையல்ல…

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம்.. அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்தி பெரிதும் பேசப்பட்டது...

ஜூலியோ டயஸ் நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

ஒரு சுரங்கபாதையை கடக்கும் போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, “உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்” என்று மிரட்டுகிறான்.

திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன் ஏஜ் வயது.

அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவனிடம் தனது பர்ஸை ஒப்படைக்கிறார் இவர். அவன் தப்பியோட முயற்சிக்கும் தருணம், அவனை கூப்பிடுகிறார்.

“தம்பி… ஒரு நிமிஷம்… நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியை காட்டி எல்லார்கிட்டேயும் பணம் பறிக்கிறதா இருந்தா இந்த கோட் உனக்கு தேவைப்படும். இதை போட்டுக்க. ஏன்னா… வெளியிலே ரொம்ப குளிரா இருக்கு!” கூறியவாறே தனது கோட்டை கழட்டுகிறார்.

திருடனுக்கு ஒரு கணம் குழப்பம். இவரை வித்தியாசமாக பார்த்தான்.

“நீங்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?”

இவர் ஒரு படி மேலே போய் … “நீ பசியுடன் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உனக்கு ஒ.கே. என்றால் நாம் இருவரும் பக்கத்தில் ஏதாவது கடையில் டின்னர் சாப்பிடலாம்” என்றார்.

அவன் இன்னும் அவரை நம்பாமாலே பார்த்தான்.

“இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ ரிஸ்க் எடுத்து உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன். உனக்கு விருப்பம் இருந்தால் டின்னருக்கு வா…”

திருடனுக்கு மேலும் குழப்பம். அவர் வேறு ஏதாவது கத்தியோ ஆயுதமோ மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரை சோதனையிட்டான். அப்படி எதுவும் இல்லை.

அருகில் சாலையோரம் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறார்கள்.

மேனேஜர் முதல் வெயிட்டர் வரை அனைவரும் வந்து இவருக்கு விஷ் செய்கிறார்கள்.

“என்ன இது உங்களுக்கு இப்படி ராஜ மரியாதை தருகிறார்கள்? நீங்கள் தான் ஒருவேளை இந்த இடத்திற்கு சொந்தக்காரரோ?”

“இல்லை.. இல்லை… நான் அடிக்கடி இங்கு சாப்பிடுவது வழக்கம்… எனவே எனக்கு அனைவரும் நல்ல அறிமுகம்”

“வெயிட்டரிடம் கூட பண்போடு நடந்து கொள்கிறீர்களே…?”

“நாம் எல்லோரிடமும் பண்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று உனக்கு பள்ளியில் சொல்லித் தரவில்லையா?”

“தந்தார்கள். ஆனால்… அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று நினைத்தேன்”

சாப்பிட்டு முடிக்கும்போது, அவனிடம், “என்னிடம் கொடுக்க பணம் இல்லை. பர்ஸ் தான் உன்னிடம் இருக்கிறதே. பர்சை திருப்பித் தந்தால் சாப்பிட்டதற்கு பணத்தை செலுத்திவிடுகிறேன். உன்னையும் கண்ணியமாக நடத்துவேன்” என்றார்.

நியாயமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு திருடன் பர்ஸுடன் ஓட்டம் பிடித்திருக்கவேண்டும். ஆனால் அவன் ஓடவில்லை. மாறாக அந்த பர்ஸை அவரிடமே திருப்பித் தந்தான்.

அடுத்து இவர் என்ன செய்தார் தெரியுமா? “உனக்கு ஒ.கே. என்றால் இந்த கத்தியை நான் வாங்க விரும்புறேன்” என்று கூறி இருவர் சாப்பிட்டதற்கும் பணத்தை தந்ததோடல்லாமல் அந்த கத்தியை திருடனிடம் ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டார்.

ஒரு திருடனை மாற்றியது போலவும் ஆச்சு. தன்னையும் காத்துக்கொண்டு தன் பொருளையும் காப்பாற்றிக் கொண்டது போலவும் ஆச்சு.

வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். “மகனே… டயம் கேட்டா நீ வாட்ச்சையே கழட்டிக் கொடுக்குற ஆள்… நீ இப்படி நடந்துகிட்டதலயும் அவன் பதிலுக்கு அப்படி நடந்துகிட்டதலயும் எந்த ஆச்சரியமும் இல்லை” என்றார்.

குறிப்பு :

ஜூலியோ டயஸுக்கு சாத்தியப்பட்ட இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா……..? படும். படும்..

* எதையும் பாஸிட்டிவ்வாக பார்ப்பவர்களுக்கு.

* எந்த சூழலிலும் இன்சொல்லே பேசுபவர்களுக்கு.

* இடியே விழுந்தாலும் நிலைகுலையாத மனப்பக்குவம் இருப்பவர்களுக்கு..

* தன்னைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசிப்பவர்களுக்கு..

நம்பிக்கையும் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். இந்த பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்… அட நீங்கள் விரும்புவது தான் நடக்கும்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


வேற்றுகிரக வாசிகளும் உண்மைகளும்...


வேற்றுக்கிரவாசிகள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டுகள் 'UFO' வந்து சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக நமது காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த உதாரணம் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது...

ஜப்பான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அருகிலுள்ள தீவுகளில் ராணுவத் தளவாடங்களைக் குவித்ததுடன், அப்பகுதியில் விமானத் தளத்தையும் அமைத்தது.

அப்பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள், அமெரிக்க போர்வீரர்களை வானத்திலிருந்து கடவுள்கள் பறந்து வருவதாக நினைத்தார்கள். போர் வீரர்களும் தாங்கள் கொண்டு
சென்ற உணவு வகைகளை அவர்களுக்குக் கொடுக்க, ஆதிவாசிகள் உண்மையிலேயே இவர்களைக் கடவுளாக நினைக்கத் தொடங்கி விட்டார்கள். போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடுதிரும்பினர். ஆனால் விமானதளங்கள், பழுதுபட்ட விமான உதிரிப் பாகங்களை அப்படியே விட்டுச்சென்றனர்.

அமெரிக்கர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பது ஆதிவாசிகளுக்குக் கடைசிவரை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமட்டும்தான். "ஏதோ ஒரு நோக்கத்திற்காக, வானத்திலிருந்து கடவுள்கள் வந்தார்கள். பிறகு சென்று விட்டார்கள்" என எண்ணினார்கள். பின்னர் அந்த ஆதிவாசிகள், ராணுவ உடையில் வந்த வீரர்கள் மற்றும் விமானங்களைப் பார்த்து, அதை அப்படியே மாதிரி வடிவங்களாக உருவாக்கி வழிபடத் தொடங்கினார்கள்.

இதைப்போலத்தான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் வானத்திலிருந்து வந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிகால மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் மறுக்கமுடியாத கருத்தாக உள்ளது...